#✝பைபிள் வசனங்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய #பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.*
நெகேமியா 9:25
*👉 மனிதனை உயர்த்துவது தேவனுடைய தயவுதான்!*
தயவு என்பது சம்பாதிக்க முடியாதது, தேவ அருளால் பெறப்படுவது.
🪇*தேவனுடைய தயவு என்றால் என்ன*⁉️
📖 எபிரேய வார்த்தை => *“Chen”*
பொருள்: அருள், ஈர்ப்பு, பரிசு, இரக்கம்,
காருண்யம்,
மற்றவரை உயர்த்த விரும்பும் மனம்...
கர்த்தரை நெருங்கி அறிந்தவர்களுக்கே, அவர் எவ்வளவு *மிகுந்த தயவுள்ளவர்* என்பதை உணர முடியும்.
தேவனை வெளிப்புறமாக அறிந்தவர்களுக்கும், அவரோடு நெருங்கி நடந்தவர்களுக்குமே அவர் கிருபையின் ஆழம் புரியும்.
🪇 *தயவு => தேவனுடைய மகிமையின் வாசல்*
மோசே,
“கர்த்தாவே, உமது மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்று கேட்டான்.
ஆனால் தேவன் மகிமையை காண்பிப்பதற்கு முன்பாக
தமது தயவை முதலில் காட்டினார்.
“என்னுடைய *தயையை எல்லாம்* உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணுவேன்”
(யாத். 33:19)
ஏன் என்றால்,
அந்த தயவு இல்லாவிட்டால்,
பரிசுத்தமான தேவ மகிமையை மனிதன் தாங்க முடியாது.
தேவன் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவர் (1 தீமோ. 6:16).
👉 ஆகவே, தேவனை அறியும் பாதையின் வாசல்
தயவுதான்!
🪇 *தயவு பெற்றவர்கள்*
ஏனோக்கு 👉🏻 தேவனோடு நடக்க தயவு
✓நோவா 👉🏻 கர்த்தரோடு சஞ்சரிக்க தயவு
✓ஆபிரகாம் 👉🏻 தேவனுடைய நண்பன் ஆக தயவு
✓ யாக்கோபு 👉🏻 இரண்டு பரிவாரம் பெற தயவு
✓எஸ்தர் 👉🏻 ராஜாத்தியாக உயர்த்தப்பட தயவு
✓இஸ்ரயேல் ஜனம் 👉🏻 உழைக்காத நன்மைகளை அனுபவிக்க தயவு
இவர்கள் எல்லோரும்,
பூரணமானவர்கள் அல்ல;
ஆனால் தயவு பெற்றவர்கள்!
✓ நோவா 👉🏻தேவனுடைய கண்களில் தயவு கண்டார் (ஆதியாகமம் 6:8).
✓தானியேல்👉🏻 தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார் (தானி 1:9).
✓ யோசேப்பு👉🏻எகிப்தில் போத்திபாரின் வீட்டிலும், சிறையிலும் தேவனுடைய தயவு அவரோடிருந்தது.
✓தாவீது 👉🏻 தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான் (அப் 7:46).
✓ரூத் 👉🏻போவாஸ் என்பவரின் வயலில் தயவு பெற்றாள் (ரூத் 2:10).
✓மரியாள் 👉🏻 தேவனிடத்தில் தயவு/ கிருபை பெற்றவள் என்று தூதனாலால் கூறப்பட்டது (லூக்கா 1:30).
👉 இது எல்லாம் தகுதியால் அல்ல; தயவினால்!
🪇 *இயேசுவில் வெளிப்பட்ட தயவு*
“அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார்”
(அப். 10:38)
கர்த்தர் இயேசு,
பாவிகளிடம்,
நிராகரிக்கப்பட்டவர்களிடம், வியாதியஸ்தர்களிடம் தம்முடைய தயவை மறுக்கவில்லை.
அவர் பார்வையில் ...
தகுதி இல்லை என்றாலும், தயவு இருக்கிறது!
🪇 *ஆவியின் கனிகளில் ஒரு கனி – தயவு*
“நன்மை செய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை”
(நீதி. 19:22)
🪇 *நாம் எப்படி வாழ வேண்டும்⁉️*
“கர்த்தர் உங்களுக்கு தயவு பாராட்டினதுபோல, நீங்களும் *ஒருவருக்கொருவர் தயவாயும்,*
மனஉருக்கமாயும் இருந்து,
மன்னியுங்கள்”
(எபே. 4:32)
நன்மை செய்ய வாய்ப்பு வந்தால்,
அதை தவறவிடாதீர்கள்.
ஏனெனில், நீங்கள் மற்றவர்களுக்கு காட்டும் தயவில்தான்,
தேவனுடைய தயவு உலகிற்கு வெளிப்படும்!
🌿
“தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே,
நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்”
(எபே. 1:6)
👉 தயவு என்பது...
மனித முயற்சியின் பலன் அல்ல
தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு
🪇 *தயவு தேவனால் ஏற்படுத்தப்படுகிறது*
📖 நீதிமொழிகள் 3:4
....அதினால் தேவனுடைய பார்வையிலும்அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் *தயையும் நற்புத்தியும்* பெறுவாய்.
📖 தானியேல் 1:9
“தேவன் தானியேலுக்கு தலைவனுடைய கண்களில் *தயவும் இரக்கமும்* கிடைக்க கிருபை செய்தார்.”
👉 மனிதரின் இதயத்தைத் திருப்புபவர் தேவனே!
🪇 *தயவு [காருண்யம்]* எனும் பாதுகாப்பு கேடகம்
📖 சங்கீதம் 5:12
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.
👉 தயவு நம்மை சூழ்ந்திருக்கும் பாதுகாப்பு.
🪇 *தயவு அடிமைத்தனத்திலிருந்து உயர்த்தும்*
📖 ஆதி 39:21
யோசேப்பு
சிறைத் தலைவனின் கண்களில் தயவு.
📖 ஆதி 41 அரண்மனை உயர்வு.
👉 ஒரே நாளில், தயவு மனிதனை உயர்த்துகிறது.
🪇 *தயவு தலைமுறைகளை ஆசீர்வதிக்கும்*
📖 நோவா – ஆதி 6:8
நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
👉 அவன் குடும்பம் முழுவதும் காப்பாற்றப்பட்டது
🪇 *தயவு சபையில் வெளிப்படும்*
📖 அப் 2:47
தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் *தயவு பெற்றிருந்தார்கள்.* இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார்.
👉 தேவ தயவு இருக்கும் இடத்தில் வளர்ச்சி உண்டாகும்.
🪇 *தயவு நம்மை உயர்த்தும்*
📖 சங்கீதம் 89:17
உம்முடைய *தயவினால்* எங்கள் கொம்பு உயரும்.
*ஜெபம்*
“கர்த்தாவே,
உமது மகா பெரிய தயவு என் வாழ்க்கையை சூழட்டும்.
என்னை உயர்த்தி, பாதுகாத்து,
என் தலைமுறைகளையும் ஆசீர்வதியுங்கள்.
ஆமென்.”
🌼 *நினைவுச் சொல்லு:*
*நீ இருப்பது உன் பலத்தால் அல்ல – தேவனுடைய தயவினால்!*
*லில்லி ராஜ்* ✍🏻











