ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
ShareChat
click to see wallet page
@ashimran
ashimran
ஆஷ் இம்ரான் (👰என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்#)
@ashimran
(உங்க குட்டி❤️ இதயத்ல எனக்கும் கொஞ்சம் இடம் தாங்க)
ஒரு பெண்ணிற்குள் இருக்கும் வலி 🔥 மூச்சடக்கி முத்தமிட்டு மார்பை கசக்கி எச்சில் பட்டு ஊடல் பிடியில் தொப்புள் தொட்டு உசுப்பும் கடியில் முனகல் இட்டு யோனி நுழைத்து இன்பம் கொண்டு கசியும் திரவம் பிசிறியடித்து நீட்டி நிமிர்ந்து அயர்ந்து உறங்கினால் முடிந்து போகும் ஆணின் மோகம் ஆனால்.. உன் உணர்வு கடியில் உதடு வலித்து முரட்டு பிடியில் மார்பு வலித்து உருட்டும் அசைவில் வயிறு வலித்து சொருகும் அதிர்வில் கருப்பை வலித்து சுமக்கும் கனத்தில் உடல் வலித்து உணரும் வலியை வெளியே சொல்லாமல் வேண்டும் நேரமெல்லாம் உடல்பசிக்கு விருந்தாகி புணரும் சலுகையாக பிள்ளை வலியும் பெறுக்கிறாளே அவளுக்காக என்ன செய்ய இயலும் உன்னால்.. வேறொன்றும் செய்யாதே பெண்ணும் உயிரென்று மதி.. உயிர் கொண்டு நேசி...... உள்ளார்ந்து யாசி... பெண்மையை கையாளும் மென்மை உனக்கே புரிந்துவிடும் பெண் என்பவள் பூவானவள் அதை கசக்கி எறிந்து விடாதே அதை நுகர்ந்துவிட்டு அரவணைத்துக்கொள் தேவதையாக இருப்பாள் அவள் உன் மனதில்!!! #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #👭பெண்களின் நட்பு #💑கணவன் மனைவி காதல்💞 #💑திருமண ஜோடிகள் #💪மோட்டிவேஷன் வீடியோ🎥
💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 - காலம் கடந்து போகும் கனவுகள் விலகிப்போகும் வலிகள் விழியில் நிறைந்தே போகும் .   காலம் கடந்து போகும் கனவுகள் விலகிப்போகும் வலிகள் விழியில் நிறைந்தே போகும் . - ShareChat
இப்போதும் எப்போதும் நான் பெருமையாய் சொல்லிக் கொள்ள எனக்கு ஒரு தோழலி இருக்கிறாள். யார் என்னை விலகி போனாலும் - அவள் என்னை விட்டு இருக்கவே மாட்டாள் வராதே போதும் நீ போ என நான் சொன்னாலும் - எனது பேச்சை கேட்க்காமல் மீறி வந்து விடுவாள். அவளுக்கும் எனக்குமான உறவு தொடர்பு எவ்வளவு காலம் என்று கூட எனக்கு நினைவில் இல்லை... அவளைப் போல் எனக்கு ஆறுதல் சொல்லவும் எவராலும் முடியாது. என்னோடே அவள் நிறைய பழகி கொண்டதால் அவளை பிரிந்திருக்க நானும் விரும்புவதில்லை.. முன்னறிவிப்பு இன்றி சொல்லாமல் கொள்ளாமல் அவ்வப்போது வந்து நிற்ப்பாள் நான் எல்லாம் சொல்லி அழுவதும் அவனிடம் மட்டுமே அவன் பெயரை சொல்லவே எனக்கு கண்ணீர் வருகிறது - . #தனிமையின்_காதலன்_ஆஷ்இப்போதும் எப்போதும் நான் பெருமையாய் சொல்லிக் கொள்ள எனக்கு ஒரு தோழலி இருக்கிறாள். யார் என்னை விலகி போனாலும் - அவள் என்னை விட்டு இருக்கவே மாட்டாள் வராதே போதும் நீ போ என நான் சொன்னாலும் - எனது பேச்சை கேட்க்காமல் மீறி வந்து விடுவாள். அவளுக்கும் எனக்குமான உறவு தொடர்பு எவ்வளவு காலம் என்று கூட எனக்கு நினைவில் இல்லை... அவளைப் போல் எனக்கு ஆறுதல் சொல்லவும் எவராலும் முடியாது. என்னோடே அவள் நிறைய பழகி கொண்டதால் அவளை பிரிந்திருக்க நானும் விரும்புவதில்லை.. முன்னறிவிப்பு இன்றி சொல்லாமல் கொள்ளாமல் அவ்வப்போது வந்து நிற்ப்பாள் நான் எல்லாம் சொல்லி அழுவதும் அவனிடம் மட்டுமே அவன் பெயரை சொல்லவே எனக்கு கண்ணீர் வருகிறது - . #💑என் முதல் காதல்😊 #💞Feel My Love💖 #😘மாமா பாப்பா லவ்👧 #💝இதயத்தின் துடிப்பு நீ #🥰அனிமேட்டட் காதல் ஸ்டேட்டஸ்
💑என் முதல் காதல்😊 - She PHASAMMA MEMEZ Ungala oruponnu kudava love pannala Mel Love panra alavuku nalam avlo worth illainga She PHASAMMA MEMEZ Ungala oruponnu kudava love pannala Mel Love panra alavuku nalam avlo worth illainga - ShareChat
ஆண்மகனின் போர் காலம் காலை அலுவலகம் செல்கையில்: எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. இரவு 2 மணி: கணவன் : ஒரு வேலை உண்டாயிருந்தா என்ன பண்றது? மனைவி : பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. விடியற்காலை 5 மணி: கணவன் : போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 5:10 மணி: மனைவி : இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க. கணவன் : (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். மனைவி : பாத்துக்காம இருந்து தான் பாரேன். 😀 2 ஆம் மாதம்: மனைவி : Doctor checkup க்கு appointment போட்டியா? எனக்கு பயங்கரமா தலை சுத்துது. எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது. இடுப்பெல்லாம் வலிக்குது. கணவன் : நீ rest எடு. நான் பாத்துக்கிறேன். 3 ஆம் மாதம்: மனைவி : மருத்துவமனைக்கு கூட வருவ தானே? அந்த கோழியை தின்னுட்டு என் பக்கத்துல வராத. நாத்தம் தாங்கல. அந்த folic acid மாத்திரை எல்லாம் என் பக்கம் நீட்டாதே. வாந்தி வருது. நீ முன்ன பின்ன வாந்தி எடுத்திருக்கியா? கணவன் : இல்ல. நான் வாந்தி எடுக்காமலேயே 28 வயசு வரைக்கும் வளந்துட்டேன். எப்படி இருக்கும் சொல்லு? மனைவி : கர்ப்பம் ஆகி வாந்தி எடுத்திருக்கியா ? அப்டியே அடிவயிறுல இருந்து வலிக்குது. 😞 கணவன் : சரி. படுத்துக்கோ. ஒன்னும் சாப்பிட வேண்டாம். மனைவி : அப்போ நா பட்டினியா இருந்தா பரவால்ல. நீ மட்டும் கோழி சாப்பிடுவ. 4 ஆம் மாதம்: இரவு 3 மணி: மனைவி : எனக்கு பசிக்குது. பிரட் எடுத்துட்டு வரியா? கணவன் : (தூக்க கலக்கத்தில்) போறேன். வருகையில்: Bread, Jam, Nutella, பழங்கள் , தண்ணீர் , பழச்சாறு . அவள்: 😮 5 ஆம் மாதம்: மனைவி : கால் எல்லாம் எப்படி வலிக்குது தெரியுமா? கைல, கால்ல எல்லாம் நீர் போடுது. மோதிரம் கூட போட முடில. கணவன் : பாப்பா வளருது. அந்த எடைய தூக்க முடியாம தான் கால் வலிக்குது. நான் அமுத்தி விடறேன். மனைவி : என்ன இப்படி அமுக்கற? நீ அமுக்கவே வேண்டாம். வலிக்குது. எங்க நல்லா அமுக்குனா, இவ சும்மா சும்மா நம்மள அமுக்க சொல்லிடுவாளோனு தானே, வேணும்னு இப்படி வலிக்கிற மாதிரி அமுக்குற? 6 ஆம் மாதம்: மனைவி : முக்கி முனகி எந்திரிக்க முனைகையில் கணவன் : என்னாச்சு? வலிக்குதா? விடிஞ்சிருச்சா? ambulance கூப்பிடவா? தண்ணி வேணுமா? கொஞ்சம் பொறுத்துக்கோ. மனைவி : யோவ், எதுக்கு இவ்ளோ சத்தம்? chu chu போகணும், எந்திரிக்க முடில. கணவன் : இப்போ தானே போன? அதுக்குள்ளயா? நான் வேணும்னா Adult Diaper வாங்கி தரவா? இப்படி 10 தடவை எந்திரிக்க வேண்டாம். மனைவி : (முறைத்தபடி) மூடிட்டு தூங்கிடு. இல்ல சாவடிச்சுடுவேன். 7 ஆம் மாதம்: கணவன் : பக்கத்தில் அமர்ந்து பார்க்கிறார். மனைவி : எதுக்கு என்ன பாக்குற? எதுக்கு சும்மா பாக்குற? வேற எங்கயாவது பாரு. நான் தான் கிடைச்சேனா பாக்க? கணவன் : பாத்தது ஒரு குத்தமா? அதுக்கு ஏன் அழற? மனைவி : நான் அப்படி தான் அழுவேன். நீ ஏன் என்ன பாக்குற? நா அழுதா உனக்கு என்ன? இந்த வீட்ல அழ கூட உரிமை இல்லையா? நான் எங்க வீட்டுக்கு போறேன். எனக்கு எங்க அம்மா வேணும். கணவன் : சரி. நான் போறேன். உன்ன பாக்கல. மனைவி : ஆமா. நான் தான் இப்போ குண்டாயிட்டேன். அசிங்கமா இருக்கேன். எப்படி என்ன எல்லாம் பாக்க தோணும். நீ மட்டும் நல்லா ஒல்லியா இருக்க . போ போ. என்ன பாக்காத. 8 ஆம் மாதம்: நடுஇரவில்: மனைவி : ஏன் தூங்குற? கணவன் : இப்போ நான் தூங்கிறது பிடிக்கலையா? இல்ல உனக்கு தூக்கம் வரலையா? மனைவி : ரெண்டுமே இல்ல. நீ ஏன் குப்புற படுத்து தூங்குற? நான் மட்டும் அப்படி தூங்க முடில. நீயும் தூங்காத. என் புள்ள மட்டும் இல்ல.உன் புள்ள கூட தான். கணவன் : சரி. நான் திரும்பியே படுத்துகிறேன். 9 ஆம் மாதம்: மனைவி : ரொம்ப வலிக்கும் தானே? எப்படி தாங்கிப்பேனோ? ரொம்ப பயமா இருக்கு. கணவன் : பயப்படாத. நான் பக்கத்துலயே இருப்பேன். நான் பாத்துக்கிறேன். மனைவி : நீ பக்கத்துலயே இருப்ப. ஆனா உனக்கு வலிக்குமா? எனக்கு தான வலிக்கும். என் வலிய நீ வாங்கிப்பியா? இல்லேல. அப்போ பேசாத. வலில இருக்கும் போது, "push, push" னு கூவுனா, கொரவளைய கடிச்சு வெச்சுடுவேன். கணவன் : சரி மா, நான் எதும் சொல்ல மாட்டேன். மனைவி : ஒரு பாப்பா நான் பெத்துக்கிறேன். அடுத்தது, நீ தான் பெத்துக்கணும். என்னால முடியாது. கணவன் : கண்டிப்பா நானே பெத்துக்கிறேன். இந்த பாப்பா மட்டும் நீ பெத்துக்கோ. 10 ஆம் மாதம்: மனைவி : என்னங்க, வலிக்குது. தாங்க முடில. ஏதாவது ஊசி போட்டு என்ன கொன்னுடுங்க. இதுக்கு மேல முடியாது. கணவன் : கவலைப்படாத மா. நான் பக்கத்துலயே இருக்கேன். எங்கயும் போகல. கொஞ்சம் நேரம் தான். கூடவே இருந்து, முதல் மாதத்திலுருந்து , பத்தாம் மாதம் வரை, நாம் செய்யும் அலப்பறைகளை பொறுத்து, நமக்கு வேண்டியவற்றினை செய்து , நம்மிடம் திட்டும் வாங்கி, ஏன் திட்டுகிறாள், அழுகிறாள் என தெரியாமல் பேந்த பேந்த என முழித்து , அதற்கும் நம்மிடம் வாங்கி கட்டிக்கொண்டு , எந்த நேரத்தில் வலி வருமோ என நாம் எண்ணுவதைக் காட்டிலும், எப்போதும் பாதி தூக்கத்தில் இருந்து, இயற்க்கை அழைப்புக்கு அழைத்துச் செல்வதிலிருந்து சகலமும் செய்து, " கொசு கடித்தாலே கூவுவாள், பேறுகாலத்தை எப்படி தாங்கி கொள்வாளோ " என பயந்து, வலி வந்தவுடன் , தாயும் சேயும் பத்திரமாக இருக்க வேண்டுமே எனப் பிரார்த்தித்து, எங்கே பயத்தை முகத்தில் காண்பித்தால் அவளும் பயந்து விடுவாளோ என மனதிற்குள்ளே வைத்து, வெளியே சிறு புன்னகையுடன், அவளுக்கு தைரியம் சொல்லி, தாயுடன் சேர்ந்து , மனதளவில் இரண்டு மடங்காய் சோர்ந்து, கடைசியில் குழந்தை பிறந்தவுடன் , தன் இரு உயிர்களையும் முத்தமிட்டு, கண்களினோரம் கண்ணீருடன், வெளியே வந்து, உறவினர்களுக்கு நா தழுதழுக்க செய்தியை சொல்லுமிடத்தில் இருக்கிறது "ஆண்களின் போர் காலம்" . பெண்கள் தரும் இன்னல்களை முகஞ்சுளிக்காமல் பொறுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் ஒரு தாய் தான். பெண்கள் போர் காலம் என்னமோ பத்து மாதம் தான். ஆனால் ஆண்களுக்கு வாழ்நாளெல்லாம். பெண்களுக்கு வயிற்றில். ஆண்களுக்கு மனதில். பெண்களுக்கு சேய். ஆணகளுக்கு தாயும் சேயும். இந்த தருணத்தில் காத்திருக்கும் ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் எனது இந்த பதிவு சமர்ப்பணம்.. ஒரு பொண்ணோட கஷ்டம் என்னானு இதுல தெரியும் கஷ்டம் மட்டும் இல்ல இந்த நேரத்தில தான் உண்மையான சந்தோஷமும் ஆனா சில நாய்ங்க இந்த சந்தோஷத்த பெண்களுக்கு கிடைக்க விடாம அவங்க வாழ்க்கைய நாசம் பண்ணிடுறான்ங்க " பெண்களின் கற்பு ஒன்றும் பென்சிலால் வரையப்படவில்லை ஆண்கள் வந்து அழித்துவிட்டு செல்ல " உண்மையான ஆண்மகனா இருந்தா ஒரு பொண்ணோட மனச தொட நினைக்கனும் உடம்ப இல்ல அப்படி நினைக்குறவன் உண்மையான ஆண்மகனே இல்ல... என்னை ஆரியமலே. என் மனைவி செய்யும் சில இம்சைகள் ரசிக்கும் #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💑என் முதல் காதல்😊 #💑திருமண ஜோடிகள் #💝இதயத்தின் துடிப்பு நீ
💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 - உரீமைபை தந்து வீடீ்டு அன்பை வளிப்பருத்த அட்ீபான் రడ ஒவ்வொரு தருண "[9) Ooo அன்பை எதிரீ பார்ப்பவள r uo' 9|0@0` 9ف உரீமைபை தந்து வீடீ்டு அன்பை வளிப்பருத்த அட்ீபான் రడ ஒவ்வொரு தருண "[9) Ooo அன்பை எதிரீ பார்ப்பவள r uo' 9|0@0` 9ف - ShareChat
பட்டாம் பூச்சிகள் போல சிறகுகள் கிடையாது ஆனால், நீ பறக்கிறாய் மூங்கில் காடுகள் போல இதழ்கள் கிடையாது ஆனால், நீ பாடுகிறாய் முயல்கள் போல துள்ள கால்கள் கிடையாது ஆனால், நீ பாய்கிறாய் பிளேபாய் பூக்கள் போல மீசைகள் கிடையாது ஆனால், நீ ரசிக்கிறாய் தளிர்களின் மார்புகளில் துளித்துளி தமிழால் ஹைக்கூ எழுதுகிறாய் பாம்புக்குட்டிகள் போல குட்டிக் குட்டி படகாய் நீ ஓவியம் வரைகிறாய் மொட்டை மாடி மேலே குளிர் கூட குளிர் காய ஒரு கோப்பை பூமியில் தூவானம் தூவத் தூவ பூ மீதா முள் மீதா கூறு எதற்கிந்த தற்கொலை ஏதேதோ கதைகள் பேச எங்கெங்கோ போனாய் குடை என்ற கத்தியால் குத்து வாங்கி செத்தாய் வானவில் எட்டிப்பாக்க நிலம் கூட நிழல் சாய மயில் தோகை விரிக்க நிறம் கூட கரு சுமக்க கல் மீதா நதி மீதா கூறு எதற்கிந்த தற்கொலை யார் யாரோ பிராத்திக்க என்றாவது நீ வருவாய் நிலா என்ற ராதையால் பல மாதம் கைதாவாய் இனி பல லட்சம் வினா நீ யாரென்று கூறுவாய் இந்நாள் எந்நாள் என்று ஒரு நாள் கூறும் மழை #🤔புதிய சிந்தனைகள் #💖love feel🌹 #💖நீயே என் சந்தோசம்🥰 #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰
🤔புதிய சிந்தனைகள் - ShareChat
பெண் நறுமணத்துடன் வெளியேறுதல், இஸ்லாம் கூறும் எச்சரிக்கை ! பெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து சென்றால் நிச்சயமாக அவள் விபச்சாரியாவாள். (அறிவிப்பவர்: பூமூஸா(ரலி) நூல்: அஹமத்) வாகன ஓட்டுனர், நடத்துனர், கடைக்காரர், பள்ளிக் கூடங்களின் வாயில் காவலர்கள் ஆகியோரின் விஷயத்தில் சில பெண்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை மார்க்கம் கடுமையாக எச்சரிக்கிறது. நறுமணம் பூசிய பெண் வெளியே செல்ல நினைத்தால் அது பள்ளிவாயிலுக்கு தொழச் செல்வதானாலும் சரியே கடமையான குளிப்புபோல் குளித்து அவ்வாசனையைப் போக்கி விட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும். நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசி, பள்ளிக்கு வந்தால் அவளிடம் நறுமணம் வீசினால் கடமையான குளிப்பு போன்று குளிக்கும் வரை அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்) திருமணங்களிலும் பெண்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளப்புறப்படும் பெண்கள் நறுமணங்களும் சந்தனப் புகையும் இட்டுக் கொண்டுதான் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். மனதை ஈர்க்கும் நறுமணங்களை பூசிக் கொண்டு கடை வீதிகளிலும், வாகனங்களிலும், ஆண், பெண் இருபாலரும் கலக்கும் இடங்களிலும் உலாவருகின்றனர். அல்லாஹ்தான் இப்பெண்களுக்கு நேர்வழி காட்டவேண்டும்! வெளி இடத்திற்கு செல்லும் பெண்கள் நிறம் வெளிப்படையாக தெரியக் கூடிய, அதே சமயம் அதிக மணமற்ற நறுமணங்களை மட்டுமே பயன்படுத்த பெண்களுக்கு மார்க்கம் அனுமதிக்கிறது. எனவே அன்பான சகோதரிகளே நீங்கள் தொழ போகும் முஹல்லா, அல்லது உறவினர் வீட்டிற்கு, பூ மற்றும் வாசனை திரவியங்களை பூசவேண்டாம். யா அல்லாஹ்! எங்களை நீ தண்டித்து விடாதே! மடத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் செய்யும் பாவத்தின் காரணமாக நற்பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் நீ உனது தண்டணையால் பிடித்துவிடாதே! எங்கள் அனைவருக்கும் உனது நேரான பாதையைக் காட்டுவாயாக ஆமீன் ரப்பல் ஆலமீன். என்னவளின்_ #👉வாழ்க்கை பாடங்கள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👩அக்கா-தங்கை #🙏நமது கலாச்சாரம் தனிமையின்_ காதலன் _ஆஷ்#
👉வாழ்க்கை பாடங்கள் - பெண் நறுமணத்துடன வெளியேறுதல் , இஸ்லாம் கூறும் எச்சரிக்கை பெண் நறுமணத்துடன வெளியேறுதல் , இஸ்லாம் கூறும் எச்சரிக்கை - ShareChat
#இப்படியும்_ஒர்_பொண்டாட்டி! அன்று விடுமுறை நாள் என்பதால் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு பகல் சாப்பட்டிற்கு சென்று இருந்தேன், #👉வாழ்க்கை பாடங்கள் #💪மோட்டிவேஷன் வீடியோ🎥 #🤔புதிய சிந்தனைகள் #💖நீயே என் சந்தோசம்🥰 அவர்களின் சமையல் அறையில் தான் உணவு உண்ணும் மேசையும் இருந்தது , உள்ளே சென்று சாப்பிட அமர்ந்த போது , சமையல் அறையில் உள்ள கப்பட்களில் இரண்டு இடங்களில் "#பிஸ்மில்லாஹிர்_ரஹ்மானிர்_ரஹீம்_நான்_எனது #கனவனுக்காகவும்_பிள்ளைகளுக்காயும்_சமைக்கிறேன்" என்ற ஒரு வாசகம் காணப்பட்டது, இதைப் பார்த்து என் நண்பனிடம், " என்ன இது?" எனக் கேட்க அவன் சொன்ன பதில் , "இது என் மனைவியின் வேலை , எனக்கும் எம் பிள்ளைகளினதும் பசியை ஆற்ற தான் சமைப்பதை ஒரு #இபாதாத் ஆக நினைத்து செய்கிறாள்." "அதே போல் உண்ணும் உணவினைக் கொண்டு வரக் கூடிய எந்த நோய்களும் எமக்கு வந்து விடக் கூடாது எனும் பிரார்த்தனையுடன் #பிஸ்மில் சொல்லி தான் தினமும் சமைக்க ஆரம்பிப்பாள்," " இந்த வாசகத்தினை இப்படி ஒட்டி வைத்தால் அவளுக்கு துஆ செய்வது மறக்காது என்றும் வீடு வரும் உறவினர்கள் நண்பர்கள் இது என்ன என்று நிச்சயம் கேட்பார்கள் அவர்களுக்கும் இதனை சொல்லிக் கொடுக்கலாம் எனும் நோக்கில் ஒட்டி வைத்து உள்ளாள்" / "அவளின் ஆசைப் படி இன்று உனக்கும் சொல்லியாச்சு" என்று நண்பன் சொல்லி முடித்தான். வீட்டில் சமைக்க கஷ்ட்டம், ஹோம் டிலிவரி எடுத்து சாப்பிட்டால் தான் மரியாதை, ரெஸ்ட்டரண்ட் இல் சாப்பிட்டால் தான் சாப்பாடு செமிக்கும், என்று இருக்கும் அம்மனிகளுக்கு மத்தியில் இப்படியும் சில கண்மணிகள் இருப்பதைக் கண்டு வியந்தவனாக.. இறைவா! என் வாழ்க்கையிளும் இதனைப் போல் பரக்கத் செய்து விடுவாயாக! இந்த சகோதரிக்கும் இவள் குடும்பதிற்கும் பரக்கத் செய்திடுவாயாக! என்று எனக்குள் துஆ செய்து கொண்டேன். என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்# #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰
👉வாழ்க்கை பாடங்கள் - இப்படியும் ஒரு பொண்டாட்டி இப்படியும் ஒரு பொண்டாட்டி - ShareChat
இப்பல்லாம் ஏன் தெரியுமா காதல் நிறைய break up ஆகுது ....👇 முன்னாடி எல்லாம் காலம் கடந்து காதலிக்க ஆசைப்பட்டாங்க.. ஆனா இப்ப இருக்க காதல் காமம் வரைக்கும் காதலிக்கணும் நினைக்கிறாங்க.. முன்னாடி உள்ள காதல் அவன்(ள்) நல்ல character ah பாப்பாங்க... இப்ப இருக்க காதல் அவன்(ள்) நல்ல கட்டையா இருக்க பாக்குறாங்க... முன்னாடி உள்ள காதல் உடம்பால சேர்ந்த காதல் குறைவு மனசால சேர்ந்த காதல் அதிகம்... இப்ப இருக்க காதல் உடம்பால சேர்ந்த காதல் அதிகம் மனசால சேர்ந்த காதல் குறைவு... முன்னாடி உள்ள காதல் break up ஆச்சுன்னா அவங்க வாயில வர முதல் வார்த்தை 👉அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் சந்தோஷமா இருக்கட்டும்னு வரும்... இப்ப இருக்க காதல் break up ஆச்சுன்னா அவங்க வாயில வர முதல் வார்த்தை 👉நான் எல்லாம் முடிச்சுட்டேன் இனி அவ எப்படி போனா எனக்கு என்ன வரும்... காதல் உண்மையா தான் இருக்கு இப்ப வரைக்கும் காதலிக்கிறவங்களும் காதலிக்கும் போது உண்மையா தான் இருக்கிறாங்க ஆனா அந்த காதல் அதிகமாகும் போது பின்னாடியே சந்தேகம் வருது அதுக்கு பின்னாடி சண்டை கோபம் ஈகோ இது எல்லாமே வரும் கடைசில நீ யாரோ நான் யாரோ பிரிந்து போறாங்க... சந்தேகம் வந்தா தான் காதல் சொல்றாங்க சந்தேகம் வந்தா எப்படி காதல் ஆகும்....? சந்தேகம் என்பது நம்பிக்கை இல்லை என்றால் வரும் நம்பிக்கை இல்லை என்றால் காதலே வராது அப்புறம் எப்படி அது உண்மையான காதல் ஆகும்...? இப்ப இருக்க காதல் லவ் சொன்ன ஒரு வாரத்திலேயே உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் பாக்கணும் இப்ப இருக்க காதல் அப்புறம் ஒரு மாசத்துல பிரேக் இதுதான் உண்மை... காதல் அழகான பொக்கிஷம் அது கொஞ்சம் கொஞ்சமா ரசிக்கணும் அது ரொம்ப நாட்கள் எடுத்துக்கணும் அப்போ ரொம்ப நாள் போகும்போது அந்த காதல்ல சண்டை ஈகோ பொறாமை சந்தேகம் இது எதுவுமே இல்லாம தூய்மையான காதலாக வரும் அதுதான் உண்மையான காதல்...❤️💖 சந்தேகம் சண்டை ஈகோ இதெல்லாம் வராது பெயர் காதலே கிடையாது அந்த காதல் நிலைக்காது அப்படி காதலிச்சு எத்தனை பேர் கல்யாணம் பண்ணி இருக்காங்க.....? #ஆஷ்_இம்ரான் ,,,,🦅 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #😢Sad Feelings💔 #💖love feel🌹 #💖நீயே என் சந்தோசம்🥰
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - ஸம ம ஸம ம - ShareChat
வெளிநாட்டில் இருக்கும் தன் கணவருக்கு மனைவி எழுதிய கடிதம். .......... #என்_வெளிநாட்டு_காதல்_கணவனே....! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடினாய்..! என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டினாய்.! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல.இரவில் மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடினாய்....! பள்ளிக்கு செல்ல மறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனை போல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுத்தாய்.....! இவை போன்ற எல்லா சொர்கத்தையும் மூன்றே மாதம் தந்துவிட்டு... எனை தீயில் தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...! என் வெளிநாட்டு கணவா!ٌ கணவா... - எல்லாமே கனவா.......? கணவனோடு மூன்று மாதம்,கனவுகளோடு எத்தனை மாதம்? 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...! 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....! 4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...! 2 வருடமொருமுறை கணவன் ...! நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ இது வரமா ..? சாபமா..? கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா? திரும்பி வந்துவிடு என் வெளிநாட்டு கணவா...! வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்…..! விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...தேவை அறிந்து... சேவை புரிந்து...உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு.....! வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில் பட்டினி... இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்....! மூன்று மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு, உல்லாச பயணம்..! பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா! தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா? எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ? இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா? விரைவுத்தபாலில் காசோலை வரும்,காதல் வருமா..? நீங்கள் அனுப்பும் பணத்தை தரும் வங்கி ! பாசம் தருமா..? நீ இழுத்து சென்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்....,அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை? உன் வெளிநாட்டு தேடுதலில்,தொலைந்து போனது - நம் வாழ்க்கையல்லவா..? விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த பாஸ்போர்ட் நமக்கு வேண்டாம்,கிழித்துவிடு! நீ தொலைபேசியில் கொடுத்த அனைத்து முத்தத்ததையும் ஒன்றாக சேர்த்து வைத்து இருக்கிறேன்......... என்றாவது ஒரு நாள் அதையெல்லாம் உனக்கு நேரில் தரவேண்டும் என்ற ஏக்கத்தோடு........!! கனவுகளோடும்,அதைவிட ஒவ்வொரு வினாடியும் உன் நினைவுகளோடும்...!! #என்றும்உன்னவள் ❤❤❤❤❤❤என்னவளின் தனிமையின் காதலன் ஆஷ்# #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😎சிங்கிள்ஸ் Attitude🤙 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
ஆண் பெண் இருவரும்.. தங்களைப் பற்றி தாங்களே அறியாத சில உண்மைகள்.. 1.ஒரு ஆணுக்கு அவன் உணரும் உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்க தெரியாது. ஒருவரின் முகத் தோற்றத்தை கொண்டும் அவர்களின் மனதை புரிந்து கொள்ளவும் தெரியாது. 2. ஒரு ஆணின் #மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனால்தான் அவனுக்கு பெண்ணின் கவர்ச்சிகளை பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கிறது. 3. பெரும்பாலும் #அழகான பெண்களை ஆண்கள் விரும்புவதற்கு இதுவே (அவன் மூளையே) முதல் காரணம். பெண்ணின் மூளை அப்படி அல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்கின்ற ஒன்று இல்லை. (மன்னிக்கவும் குறைவு) அவர்களுக்கு ஒரு ஆணின் பேச்சு மூலமாகத்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. அதனால் பேசிக் கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது.(கூடலின் போதும்)! அதாவது தொணதொணப்பு இல்லாத கொஞ்சல்கள். 4. வீட்டில் #பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேளையில் கவனம் செலுத்துவதில் குறைந்து விடும். வீட்டு பிரச்சினையிலேயே நிலை குத்தி போய் நிற்பார்கள். ஆனாள் ஆண்கள்-வேலையில் ஈடுபடுகிறபோது அவர்களின் மனம் பாச நேச உணர்வுகளில் ஈடுபடாது. 5. பெண்கள் உரையாடும் பொழுது நீங்கள் கவனித்திருப்பீர்கள் அவர்கள் மறைமுக மொழிகளை அதிகமாக பயன்படுத்துவார்கள்.(ஜாடையாக பேசுவது) ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. அதை நேரடியாக பேசி ஒரு வழி பண்ணி விடுவார்கள். 6. பெண்களின் முகத்திற்கு நேராக ஆண்கள் பொய் பேசினால் அதை சுலபமாய் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அதைப்போல பெண்கள் பொய் பேசுகிறபோது ஒரு ஆடவணாள்அதை கண்டுபிடிக்க முடியாது. அதற்குக் காரணம்.. பெண்கள் பேசும் போது 70% மொழி,+20% உடல் மொழி, 10% வாய் மொழியை பயன்படுத்துவார்கள் (ஸ்டைல்+தோரணை=ஆக்டிவிட்டீஸ்) ஆண்களின் மூளையால் அதுபோல் செயல்பட முடியாது. 7. ஆண் பெண் இவர்களின் சிந்தனைகளில்கூட வேறுபாடுகள் வித்தியாசமாக இருக்கும். இருவருக்கும் அங்க அடையாளங்கள் சிலவற்றைத் தவிர, இனபெருக்க செயல்பாடுகளில் வேறுபாடுகள் இல்லை. ஒரு பிரச்சனையின் அணுகு முறைகளில், புத்திசாலித்தனங்களில், வேறுபாடுகள்உண்டு. ஏனெனில் அப்போது இருவரும் மூளையில் வேறு வேறு பகுதிகளை கையாளுகிறார்கள். 8. ஆணுக்கு தன்னுடைய பொருட்களை ஒழுங்காக வைத்துக் கொள்ள தெரியாது. பல சமயங்களில் தன்னுடைய பொருட்களை தொலைத்து விட்டு வீடு முழுமைக்கும் தேடுவார்கள். 9. பெண்ணால் வண்ணங்களை மிகத் துல்லியமாக ஒரே சமயத்தில் பிரித்துப் பார்க்க முடியும். அதனால்தான் ஆடைகளை தேர்வு செய்யும் போது ஒரு பெண் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். ஆண்களுக்கு பொதுவான வண்ணங்கள் மட்டுமே தெரியும். 10. ஒரு ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லையே என்று ஒரு பெண் புலம்புவது சகஜம். அதே சமயத்தில் ஒரு பெண் தன் பாலியல் தேவைகளை புரிந்து கொள்வது இல்லையே என்று ஒரு ஆண் நொந்து கொள்வதும் சகஜம். இருவருமே.. ஒருவரின் பலவீனங்களை தனக்கு பலமாகவும் ஒருவரின் பலத்தை தனது பலவீனமாகவும்-கருதிக் கொள்வார்கள். ஆக ஆண் பெண் இருவருக்கும் ஒத்து போகிற விஷயங்கள் 10 என்றால்.. வேறுபாடு விஷயங்கள் 90 இருக்கிறது. இது அவர்களுக்கே தெரியாது… நன்றி. என்னவளின்_தனிமையின்_காதலன்_ஆஷ்# #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
ஒரு பெண் தன் கணவனிடம் விளையாட்டாய் கூட சொல்லக்கூடாத வார்த்தைகள்... *நீயெல்லாம் ஆம்பளையே இல்ல, இதுகூட உன்னால் எனக்காக செய்ய முடியல... (இந்த வார்த்தை மனைவி உங்களிடத்தில் மேலும் வெறுப்பையே அதிகரிக்க செய்யும், இந்த வார்த்தையின் மூலம் உங்கள் கணவர் உங்களுக்காகவே சில தவறான குறுக்கு வழியில் காசு பணம் சம்பாதிக்க நீங்களே முதற் காரணமாகிவிடுவீர்கள்) *நான் வேறொருத்தனை உன்னை விட நிறைய பணம் காசு இருக்கிறவனை பார்த்து கல்யாணம் பண்ணிருக்கலாம், உன்னை கட்டி வச்சு ஒரு சுகத்தை கூட நான் அனுபவிக்கல... (இந்த வார்த்தை நன்றி கெட்ட... நிஜமாவே என் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை போலிருக்கு, அதனாலதான் இப்படியெல்லாம் பேசுகிறாளோ நான் என்ன அந்த அளவுக்கு கேவலமானவனா என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, உங்களிடத்தில் (மனைவியிடத்தில்) இருக்கும் பாசத்தையும்/காதலையும்/ஆசைகளையும், (காமத்தையும்) குறைத்துவிடும்) *ஊர் உலகத்தில் பாரு, அவனவன் அவன் பொண்டாட்டியை அப்படி தாங்குறான், பக்கத்து வீட்டுக்காரன், எதிர்வீட்டுக்காரன், இவ்வளவு ஏன்? என் அக்கா/தங்கச்சி புருஷன்களை பார்த்து கொஞ்சம் திருந்தலாம்ல, இப்படி ஒப்பிட்டு பேசுவது, (இனி இவ கூட என்ன வாழ்ந்து கிழிக்க போறோம் என்ற சலிப்புதான் கணவனுக்குள் அதிகமாக உருவெடுக்கும், அதோடு கள்ளகாதல், வயது வித்தியாசம் இன்றி வேறொரு பெண்ணோடு ஈர்ப்பு... சுருக்கமாக சொன்னால் மனைவியிடத்தில் கிடைக்காத அன்பும்/மரியாதையும்/அரவணைப்பும்/ வேறொரு பெண்ணிடத்தில் கிடைக்கிறது என்றால் *****) *குழந்தைகளிடம்... அப்படியே அவங்க அப்பன மாதிரி இருக்கு பாரு... ஏன் உன் அப்பன் மாதிரி செய்ற, ஏன் உன் அப்பன் மாதிரி என் உசுர வாங்குற, ஏன் உன் அப்பன் மாதிரி ஆளுமையில் அழியுற, உன் அப்பன்ட வாங்கி கேளு, உன் அப்பன்ட போய் சொல்லு, (என்று பெற்ற பிள்ளைகளிடம் தன் கணவனை பற்றி சாடையாக பேசி இழிவுபடுத்துவது பிள்ளைகளின் எதிர்காலத்தில் தந்தையை மதிக்காமல் தகப்பனார் மீது பயமின்றி பாசமின்றி போவதற்கு அவர்களின் தாயே அதற்கு முதற் காரணமாகிவிடுகிறார்கள், மேலும் என் பிள்ளை என்ன மாதிரிதான் இருக்கும் நீ எனக்குதானே இந்த பிள்ளைகளை பெற்றாய் இல்ல...??? என்ற... வேற மாதிரியான அநாகரிய வார்த்தைகளை கணவனிடத்தில் இருந்து தானாகவே பேச வைத்துவிடும்,) *வீட்டுக்கு வீடு வாசபடிதான்... (கோவத்தில் வார்த்தைகளை கவனத்துடன் யோசிச்சு பேசுக, உங்களுக்கு சாதாரணமான வார்த்தைபோல தெரிவது உங்கள் கணவன் (அல்லது) மனைவிக்கு அது வாழ்நாள் கொடிய விஷத்தை விட வலி தரக்கூடியதாக இருக்கலாம்) சண்டை இல்லாத புருஷன் பொண்டாட்டி இவுலகில் இல்லவே இல்ல... சண்டையே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் அது புருஷன் பொண்டாட்டி வாழ்கையே இல்லை 💁🏻‍♂️ என்னவளின் _ #💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 தனிமையின் _காதலன்_ ஆஷ்#
💑பெஸ்ட் ஜோடி ஸ்டேட்டஸ்🥰 - ShareChat