அய்யோ அவரை அடைத்தப் புரையதிலே
கையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்கு
சான்றோ ருக்காகத் தர்மக் குருநாதன்
மீன்று முழியாமல் முகமலர்ந்து அங்கிருந்தார்
ஏழை களுக்காக ஈரொன்றொரு நாளாய்
மீளாச் சிலுவையிலே முள்ளா லடிகள்பட்டு
மரித்துப் பிறந்ததுபோல் மாயக் குருநாதன்
இதுவுகத்துக் கிப்புரையி லிருந்து அழுந்தவென்று
இருந்தாரே மாயவனார் ஏழைகளுக் காஇரங்கி
கருந்தார் மார்பன் கருத்தில் மிக அடக்கி
எல்லா மடக்கி யிருக்கும் அந்தநாளையிலே
பொல்லாக் கலியன் புறப்பட்டான் மேற்க்கெனவே
இப்பே யனையு மிங்கேகொடு வாருமென்று
அப்போது சொல்லி யவனடந்தான் மேற்க்கெனவே
உடனே சிவாயி உற்றநா ராயணரை
திடமாகக் கூட்டிச் சிணமே நடக்கலுற்றான்
-அகிலம்📖🙏🏻🪷
#🙏ஓம் நமோ நாராயண🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #அய்யா #அகிலத்திரட்டு அம்மானை