#💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ காதல் என்ன செய்யும்..?
அன்பு செய்யும்
அனைத்திலும்
அதீதம் காட்டும்
இரக்கம் கொள்ளும்
இறுக்கம் செய்யும்
காமம் கொள்ளும்
கரைந்து கொல்லும்
கவிதை செய்யும்
எல்லா பார்வைகளையும் தவிர்த்து
தான் நேசித்த ஒரு முகத்தையே
தவமாய் பார்த்திருக்கும்
அழகு கடந்து
அழகு செய்யும்
கண்ணியம் காக்கும்
ஒழுக்கம் கொள்ளும்
நம்பும்
நம்பிக்கையை காப்பாற்ற போராடும்
இறுகப்பற்றிய கையில்
வலிக்காது இதம்தந்து
அழைத்து வரும்
கடந்த எல்லாவற்றையும் விட
புதிதாய் ஏதோ படைக்கும்
கூட்டத்தில் தனித்திருக்க வைக்கும்
தனிமையில் புன்னகை பூக்கும்
நம்பிக்கை தரும்
பிடித்தம் தரும்
அழகு செய்யும்
செதுக்கும்
ரசிக்கும்
ரசிக்க வைக்கும்
அழும்
மன்றாடும்
குழந்தையாய் சுருண்டுறங்கும்
தலை கோதி உறங்க வைக்கும்
சிறகு தந்து பறக்க வைக்கும்
பிறகு
என்றாவது அத்தனையும் பறித்து
உயிர்கொன்று
இறந்துவிடும்
பிரிவெனும் பெயரோடு
உயிர்வலிதந்து..