#✝பைபிள் வசனங்கள் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
#✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை
#✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்*
"யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்".
(திருப்பாடல் 33: 2-3. 10-11. 18-19)
எங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவரே! எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும், தேவையானதெல்லாம் எங்களுக்குத் தருபவரே!
விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவரே! உம்மை இந்தக் காலை வேளையில் போற்றுகிறேன், துதிக்கிறேன், ஆராதிக்கிறேன், உமக்கு நன்றி கூறுகின்றேன்.
தாழ்ந்தோரை உயர் நிலைக்கு உயர்த்துபவரே! அன்று காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, யாரை மிதியானியரிடம் விலைக்கு விற்றார்களோ, அவரையே பஞ்சக் காலத்தில் யாக்கோபின் புதல்வர்கள் அணுகிச் செல்லுமாறு செய்தீர். அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை, பார்வோன் மன்னனுக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தி, “யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்” என்று, பார்வோன் வாயால் சொல்ல வைத்தீர். புறக்கணித்த கல்லை, மூலைக்கல்லாக மாற்றிய ஆண்டவரே உமக்கு நன்றி.
*"நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்"* என்று கூறிய எங்கள் இயேசுவே! அன்று மிகச் சாதாரண மக்களை சீடர்களாகத் தேர்ந்துகொண்டு, அவர்களுக்கு அதிகாரம் அளித்து, பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும் செய்தீர். நீர், முன்குறித்து வைத்தோரை அழைத்தீர். நீர் அழைத்தோரை, உமக்கு ஏற்புடையவராக்கினீர். உமக்கு நன்றி இறைவா!
இந்த சமூகத்தில், சாதாரண மனிதர்களாகிய எங்களை அழைத்து, உமது அருளாலும், ஆற்றலாலும், எங்களை வல்லமை மிக்கவர்களாக மாற்றியருளும். உமது இறைத்திருவுளத்தை நிறைவேற்றும், சிறந்த கருவிகளாக எங்களை மாற்றியருளும்.
*ஆமென்.*
விண்ணகத்தில் இருக்கிற...(1)
அருள் நிறைந்த...(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை நேர ஜெபம்*
எங்கள் அன்பின் பரலோக பிதாவே!
உம்மை போற்றுகிறேன். ஆராதிக்கிறேன். நன்றி செலுத்துகிறேன். இன்று முழுவதும் என்னோடு இருந்து, என்னைக் காத்து நடத்தியமைக்காக நன்றி!
எம்மேல் இரக்கம் வைத்து, எல்லாத் தீமைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றியருளும். உலகெங்கும் பரவிவரும் பல நோய்க்கிருமியின் தாக்கத்திலிருந்து எங்களைக் காத்தருள உம்மையே வேண்டுகிறோம். "ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந் துள்ளது. அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றவர். ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்".
கடவுளே!
என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். ஏனெனில், நீரே என் புகலிடம். என்னுடைய மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் கண்ணீரைக் கண்டும் மௌனமாய் இராதேயும்; என் புகழ்ச்சிக்குரிய இறைவா, மௌனமாய் இராதேயும். நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள். என் களைப்பை நீக்கி, எனக்குச் சக்தி அளிக்க இந்த இரவைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்!
இந்த இரவில் என்னைத் தீய கனவுகள் மற்றும் அனைத்து சோதனைகளிலிருந்தும் விடுவித்தருளும். எனக்கு நல்ல தூக்கத்தைத் தந்து, என்னை ஆசீர்வதித்தருளும். என் நல்ல காவல் தூதரே! என் பக்கபலமாக இருந்து என்னைப் பாதுகாத்தருளும்!
வல்லமையும், விடுதலையும் தருகின்ற எங்கள் அன்புத் தந்தையே!
இந்த அற்புதமான நாளிலே, உம்மை ஏறெடுத்து நோக்குகின்றோம்!
நீர் எங்களுக்கு இந்த கடினமான நாட்களிலே நோய்களிலிருந்து விடுதலை கொடுத்து, பாதுகாத்து கொண்டிருக்கின்றீர். அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அன்புத் தந்தையே! விடுதலை பயண நூலில் மோசே, *ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.* (வி.ப.15:2) என்று பாடியதுபோல, நாங்களும் மகிழ்ச்சியோடு இந்தப்பாடலை பாடி,
நீர் எங்களுக்கு விடுதலையாகவும், ஆற்றலாகவும், நாங்கள் மகிழ்ச்சியோடு பாடுகின்ற பாடலாகவும், இருந்து ஆசீர்வதிக்கின்றீர்.
நன்றி தந்தையே!
இதோ இந்த இரவு பொழுதிலே நாங்கள் உறக்கத்திற்கு செல்கின்றபொழுது, உம்முடைய ஆற்றல், உம்முடைய விடுதலை, உம்முடைய பாடல், எங்களோடு தங்கட்டும் தந்தையே!
எதிர்பார்க்காத எல்லா காரியங்களும், நீர் எங்களுக்கு வாய்க்கப் பன்னுவதற்காக, நன்றி செலுத்துகின்றோம் ஆண்டவரே,
*ஆமென்! †*
*👑வெளியீடு👑*
*✝️கத்தோலிக்கன்📖*
*🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
#✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕






![✝பிரார்த்தனை - காலை வணக்கம் நிறைவானது வரும்போது குறைவானது Ulliiultlllli. ஏாிந்ஏயர் 13: 10 ஆமென் ] 1(15 காலை வணக்கம் நிறைவானது வரும்போது குறைவானது Ulliiultlllli. ஏாிந்ஏயர் 13: 10 ஆமென் ] 1(15 - ShareChat ✝பிரார்த்தனை - காலை வணக்கம் நிறைவானது வரும்போது குறைவானது Ulliiultlllli. ஏாிந்ஏயர் 13: 10 ஆமென் ] 1(15 காலை வணக்கம் நிறைவானது வரும்போது குறைவானது Ulliiultlllli. ஏாிந்ஏயர் 13: 10 ஆமென் ] 1(15 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_587776_305ded3f_1770833585605_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=605_sc.jpg)