#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 காலை ஜெபம்*
"கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர்".
(திருப்பாடல் 45: 10-11. 13-16)
மக்கள் பணிந்து தொழுதிடும் இறைவனே! உம்மை போற்றுகின்றோம்.
வருங்காலத் தலைமுறையினருக்கும் இறைவனே! உம்மை போற்றுகின்றோம்.
எங்களுக்கு புத்துயிர் அளிக்கும் இறைவனே! உம்மை போற்றிப் புகழ்கின்றோம்.
இறைவா! இந்த காலை வேளையில் உம்மை நோக்கி செபிப்பது, உம்மை போற்றுவது, உம்மை துதிப்பது மனதிற்கு நிறைவையும், மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகிறது அப்பா. நன்றி இறைவா!
ஏனெனில், தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவரே! நீர் அண்மையில் இருக்கின்றீர்.
விண்ணகத்தில் இறையாட்சியை சுவீகரித்துக் கொள்ள இருக்கும் ஏழைகளுக்கு, மண்ணகத்தில் வாழும் காலத்திலேயே தகுந்த உதவிகளை நான் செய்ய, நல்ல வாய்ப்பினைத் தந்தருளும். அவ்வாறே விண்ணகத்தில் நிறைவினைக் காண, பட்டினியில் இருப்போரை நான் மண்ணகத்தில் இனம் கண்டு, அவர்களது பசியினைப் போக்க அருள் புரிவீராக.
இறைவா! இந்த புதிய நாளை உமது பெயரால் துவக்குகின்றேன். நீரே எம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவீராக.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணகத்தில் இருக்கிற...(1)
அருள் நிறைந்த...(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)
*ஆமென்.*
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்
#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 இரவு ஜெபம்*
சர்வ வல்லமையுள்ள கடவுளே! ஒளிமிக்க உம்முடைய ஆசீர்வாதங்களை, எங்கள் மீது பிரகாசிக்கச் செய்தருளும்! மகா அற்புதமான கடவுளே, அனைத்தையும் படைத்தவரே, உமது வல்லமைமிக்க கரங்களின் நிழலில் எங்களைப் பாதுகாத்தருளும். நீரே உலகை ஆளும் நீதியின் தேவன்! நீரே அமைதியின் இளவரசர்! நீரே கருணையின் சிகரமான கடவுள்! தந்தையே, எங்களுடைய அன்றாடப் பிரச்சனைகள், கவலைகள், கஷ்டங்கள் அனைத்தையும் நீர் அறிந்துள்ளீர். எனவே, எங்களுடைய இந்த கனமான கவலைகள் அனைத்தையும், நாங்கள் உம்மிடம் சமர்ப்பிக்கின்றோம். எங்கள் வாழ்வின் சூழ்நிலைகளை, நாங்கள் உமது காலடியில் அர்ப்பணிக்கின்றோம், உமது அன்பு, எங்கள் வாழ்க்கையில் எதையும் மாற்றும் வல்லமை பெற்றது என்பதற்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் இந்த புதிய நாளின் அமைதியையும், புதுப்பிக்கப்பட்ட பலத்தையும், எங்கள் நம்பிக்கையையும், உம்மிடத்தில் ஒப்படைக்கின்றோம்!
அன்புள்ள ஆண்டவரே! நாங்கள் உறங்குவதற்காக படுக்கும்போது, எங்கள் உடலின் பதற்றத்தைத் தணித்தருளும்; எங்கள் மனதின் அமைதியின்மையை அமைதிப்படுத்தும்; கவலையடையச் செய்யும் எண்ணங்களைத் தவிர்க்கச் செய்யும். நாங்கள் நன்கு ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். நாங்கள் உறங்கும்போது உமது ஆவியானவர் எங்கள் மனதுடனும், இருதயத்துடனும் பேசட்டும். ஆகவே, நாங்கள் காலையில் எழுந்திருக்கும்போது, இரவு நேரத்தில் நாங்கள் பெற்ற, எங்கள் வழிகளுக்கு வெளிச்சம்; எங்கள் பணிகளுக்கு வலிமை; எங்கள் கவலைகளுக்கு அமைதி; மற்றும், எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு, ஆகியவற்றினை உணர்வோமாக. இன்றிரவு எங்களுக்கு நல்ல அமைதியான உறக்கத்தை ஆசீர்வதியும். அதுவே நாளை, நாங்கள் வாழ்வதற்கான எங்கள் சக்தியும், வலிமையாக மாறுவதாக! ஆமென்! †
எங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் தூய திருநாமத்திலும், அவருடைய மகா பரிசுத்த அன்னை, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பரிந்துரைகள் மூலமும், தாழ்மையுடன் செபிக்கிறோம், ஆமென்! †
இனிய இரவு வணக்கம்! 🌹
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக! †
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்









