#🤔 புதிர்கள் #🤔 Unknown Facts #📺அரசியல் 360🔴 #👍தமிழ்நாட்டின் TOP MLA யார்❓
கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள். கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்துத் தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும், “ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்” என்றார்.
சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள். ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும் அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு சாமியாரிடம் கொடுத்தாள்.
அப்பொழுது அந்த சாமியார், 'ஒரு மாதமாக நீ அந்த முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட் ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால் போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச் சுற்றி வருவான். இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம் வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்' என்றார்.
அவள் புரிந்துக் கொண்டு சாமியாருக்கு நன்றி சொன்னாள்.
திருமணத்துக்குப் பின்பு கணவர்கள் மிகவும் பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில் அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில் பிரின்சிபால், ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம் பயங்கரமானவர்களாக நினைத்துப் பயந்தது தப்பு. இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்குப் பின்பு தான் தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள்.
கதையின் நீதி :-
கணவனை அதிகம் நேசியுங்கள்...
அ"ன்பானவன் எதற்கும்
ஆ"சைப் படாதவன், துன்பத்திலும்
இ"ன்பம் தருபவன், மனதில்
ஈ" கோ இல்லாதவன் எப்போதும்,
உ"ண்மையானவன் என்றும்,
ஊ" ரில் வாழ்ந்தாலும்
எ" ப்போதும் யாரையும்
ஏ" மாற்றத் தெரியாதவன்,
ஐ" ஸ்வர்யம் இவன் கூடவே வரும்,
ஒ" வ்வொரு உறவையும் மதிப்பவன்,
ஓ" டிச் சென்று உதவி செய்பவன்,
ஔ" வையார் போல் தன்னுடைய ஆசைகளைத் துறந்து பிறருக்காக வாழ்பவன் தான் ஒவ்வொரு ஆண்களும்...
எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி வரையிலும் உங்கள் கூடவே வரும் ஒரே உறவு கணவன் மட்டும் தான்... இருபாலருக்கும் பொதுவானது இந்த கதை #💑என் முதல் காதல்😊 #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #💑கணவன் - மனைவி #💪ஊக்குவிக்கும் கதைகள் #🙏நமது கலாச்சாரம்
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று....ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்....
காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.
செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
என்ன ஆயிற்று எனக்கு?
நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது
என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.
அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.
அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......
என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.
ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.
அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?
நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?
என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.
ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.
"ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.
"கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!
திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..
என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......
இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.
ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!
பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். #💑கணவன் - மனைவி #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍 #💖நீயே என் சந்தோசம்🥰 #👩❤️👨Long Distance Relationship #💑என் முதல் காதல்😊
குடை பிடித்து செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு
குடுகுடென நடந்து வரும் குழந்தைகளே கேளீர்!
மழைக்காலம் வழி வழுக்கும் மிகக் கவனம் மக்காள்
வழியருகே வெள்ளமுண்டு விலகிவரல் வேண்டும்
வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாடல் வேண்டாம்!
வீண் சண்டையால் வழுக்கி விழுந்தெழும்ப வேண்டாம்.
கண்மணிகாள் நீர்சிரங்கு காலில் வரும் கவனம்
கண்ணுறக்கம் இல்லாமல் கதறியழ வேண்டும்
அம்மா அப்பா சொற்கேட்டு நல்லாசிரியற்கடங்கி
ஒழுக்கமுடன் பள்ளியிலே படித்துவரல் வேண்டும்! #👶குழந்தைகள் உலகம் #😇அழகிய குழந்தைகள் #💪ஊக்குவிக்கும் கதைகள் #🌧️மழைக்கால மீம்ஸ்😆
#📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம் #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #🙋♂ நாம் தமிழர் கட்சி
கண் கலங்க வைத்த பதிவு...💔
எனக்கு 77 வயது... மனைவியை இழந்து பத்து வருடங்களாகிறது.அன்பின் நீரூற்றை மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்
இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம். இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்.
இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல. இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு எண்ணிக்கொண்டு இருக்கிறேன் கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக.
போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள்வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது.
முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி
உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது,
இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டுவெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டுஇருக்கிறேன்.
கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால் எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,
துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும்
என்னுடைய துணிகளை தனியாகத்தான்
போடவேண்டும் என்று சொல்லி அவர்களின் ஆடையோடு கூட ஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள்.
கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட எதுவும் சொல்வதில்லை, மருமகளும் சொல்ல விடுவதில்லை.
இன்னும் நான்கு நாட்கள்தானே என்று
ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு வீட்டுக்கு ஓடும்
குழந்தையைப்போல் கடைசி மருமகளின் வீட்டு போக என்னுடைய உடைகளை நானேஆர்வமாக துவைத்து கொண்டிருக்கிறேன்.
கடைசி மகன் மற்றவர்களை போல் கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை,
வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும்
இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கிறது.
நான் ஊருக்கு போகும் போதல்லாம் மறுமகள் தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டேண்டு வருவாள்.
அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு
போவதில் அப்படி என்ன ஆனந்தமோ எனக்கு தெரியாது.
என்னென்ன நடந்தது என்று அவள் கேட்டுக் கொண்டே போக நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும் சொல்லாமல் நல்லதை மட்டுமே சொல்லிக்கொண்டு போவேன்.
அவள் கெட்டிக்காரி என்பதால் போகும் வழியில் எனக்கு பிடித்த ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து வேடிக்கை பார்க்கும்போது கண்டு பிடித்து விடுவாள்.
வீட்டுக்கு போனதும் கட்டைபையை ஆராய்ச்சி செய்து மருந்து மாத்திரைகளாவது சரியாக
வாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று
தேடிப்பார்த்து திட்டுவாள்.
அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டை நான் வாங்கி வந்திருப்பதை பார்த்து சிரித்து விடுவாள்.
இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத் தரவில்லை என்று மீனாட்சியிடம் சண்டை போடக்கூட அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால் போய் சேர்ந்துவிட்டதில் நிறைய
வருத்தம் எனக்கு..
நான்கு நாட்கள் கழித்து பஸ்ஸில் போய் இறங்கினேன்.எப்போதும் போல் எனக்கு முன்வந்து காத்திருந்தாள்.
ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள்,
ஸ்கூட்டரில் பத்திரமாக உட்காரவைத்துக் கொண்டாள்,
உங்களை ஷேவிங் பண்ண கூட கூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா அவங்களுக்கு? அவ்ளோ பெரிய ஆளுங்களா ஆயிட்டாங்களா எனும்போதே அதெல்லாம் இல்லம்மா ரெண்டு பேரும்....
என்று ஆரம்பிக்கும்போதே இப்படியே பேசி பேசி அவங்களை காப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா. பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு போவதற்குள் சவரக்கடைக்கு தான்அழைத்து சென்றாள்.
கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள்,
பெயிலான மார்க்சீட்டை காட்டும் குழந்தையை போல் தயங்கி தயங்கிஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை காட்டினேன்.
கோபத்தை வெளிக்காட்டாமல் கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள். இதுக்கு தான் உங்களை அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது புரியுதாப்பா.. என்று முறைத்தாள்
என்னிடம் பதிலில்லை.
ஊர் உலகத்துல யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை கஷ்டப்படுத்தி அனுப்புறது.
இதே வேலையா போச்சி எல்லாருக்கும்
என்று முணுமுணுத்துக்கொண்டே
கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள்,
துணியெல்லாம் சுத்தமா துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க பொய் சொல்லாம சொல்லுங்க என்று டீச்சரை போல் முறைக்க
என்ன செய்வது என்று தெரியாமல் பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன்,
அவளும் சிரித்துவிட்டாள்.
எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி பையை நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றாள்.
ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது
லேசா மயக்கமா இருக்கு சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன்.
கொஞ்சதூரம் தான்பா போயிடலாம் பத்திரமா சாஞ்சிகோங்க என்று சொல்ல மெதுவாக சாய்ந்துகொண்டேன்.
உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை, நான் பெறாத மகளின் மீது சாய்ந்து கொள்ள ஆசையாக இருந்தது, அதனால் தான் பொய்சொல்லி சாய்ந்துகொண்டேன்.
இன்னும் ஒரு மாதத்திற்கு அவளின் செல்ல திட்டுகளுக்கு நடுவில் காணாமல் போகும் என் முதுமையின் ஊமைக்காயங்கள்✍🏼by Dharma ❤ #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #🤗குடும்ப பாசம் #🙏நமது கலாச்சாரம் #💑கணவன் - மனைவி #👨👩👧👦என் குடும்பம்: என் உலகம்😍











