
செ.சாா்லஸ் செபஸ்டின்
@charlesrani2390
♥அன்பு சகலத்தையும் வெவல்லும் ஆற்றல்உடையது♥
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் சிந்தனை.".( 13.02.2026)
..............................
*''அவமானம் ஒரு மூலதனம்..''*
..........................
‘அவமானங்களே ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும்’. அவமானம் என்பது ஒரு மனிதனுக்கு தூண்டுகோல் தான்.
மனிதனின் மனம் அவமானங்களைக் கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும்.
அதுவே முயற்சியில் வேகத்தைக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்.
ஒருவனது அவமானங்கள் தான் அவனைக் கடினமாக உழைக்க வைக்கிறது.
ஒருவனது அவமானங்கள் தான் கடுமையாய் முன்னேற வேண்டும் என்கின்ற வெறியைத் தூண்டுகிறது.
ஒருவனது அவமானம் தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்து விட முடியாது.
செட்டிநாட்டில் இருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன்.
அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
“படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்து இருக்கிறார் கண்ணதாசன்.
அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில் தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்க விட்டது…
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன் நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்து விட்டது” என்றாராம்.
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்ககேற்றியிருக்கிறார்.
*ஆம்.,நண்பர்களே..*
அவமானங்கள் தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது
“உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பழி வாங்கிட அல்ல... தப்பித் தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்கு செய்து விடக் கூடாது.....
(ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி.)💐💐💐💐💐
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை உங்கள் கையில்.*_
_*அடுத்தவர்கள் மனதையும்*_ _*புரிந்து கொள்ளப் பாருங்கள்,*_ _*நாம் நினைப்பது மட்டுமே சரியென நினைத்துச்*_
_*செயல் படாதீர்கள்.*_
_நாம் பேசும் வார்த்தைகள் பிறரின் வாழ்க்கைக்கு வழிகளாக அமையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்._
_அவைகள் ஒருபோதும் வலிகளாக மாறக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்._
_*வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும், நன்றாக அதைப் புரிந்துகொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.*_
_கடல் பெரியது தான் ஆனால் சந்தோஷங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான். ஆகையால் காணுவதைக் காட்டிலும் கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடலாம்._
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் ஆறு தத்துவங்கள் :-_*
_1) முதலில் நம்பு - பிறகு_ *_ஆண்டவனிடம் வேண்டு!_*
_2) முதலில் பேசுவதை கேள் -_ _பிறகு_ *_பேசு!_*
_3) முதலில் சம்பாதி - பிறகு_ *_செலவு செய்!_*
_4) முதலில் யோசி - பிறகு *எழுது!*_
_5) முடியாது என்று விடுவதற்கு முன்- *முயற்சி செய்!*_
_6) இறப்பதற்கு முன் - *வாழ்க்கையை வாழ்ந்து பார்!*_
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை இழந்து எதையும் அடைய வேண்டும் என்று அவசியமில்லை...*_
_*எந்த இடத்தில் நம்மை வைக்கிறார்களோ அதே இடத்தில் அவர்களையும் நாம் வைத்து விடவேண்டும்.*_
_*உறவுகள்*_ _*முக்கியம் தான்*_
_*அதை விட சுயமரியாதை மிக முக்கியமாகும்.*_
_சிலவற்றைத் தெரிந்து கொண்டால் தெளிவாக இருப்போம்..*_
_பலவற்றைத் தெரியாமல் இருந்தால் நிம்மதியாக இருப்போம்,_
_*போனதெல்லாம் போகட்டும்*_
_*என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றிய பிறகே.*_
_நீங்களும் கொஞ்ச நாள் உங்களுக்கு பிடித்த மாதிரி வாழ்வதற்கு ஆசைப்படுகிறீர்கள் என்கிற அறிகுறி உங்கள் மனதிற்கு தெரிய வருகிறது.._
_*நான் என்பது*_
_*பல சமயங்களில்*_
_*தலைக்கனம்.*_
_*சில சமயங்களில்*_
_*தன்னம்பிக்கை..*_
_நாம் காணும் அனைத்து கனவுகளும்_
_மெய் ஆகும் அந்தக் கனவை நம்பிக்கையுடன் பின்தொடர்ந்தால்..__
_*தெரியாத*_ _*விஷயங்களை பேசாதீர்கள்!*_
_*புரியாததை*_ _*புரிந்து கொண்ட மாதிரி நடிக்காதீர்கள்!*_
_*தற்பெருமையை*_ _*தானாக ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!*_
_*எதிலும்*_ _*முந்திக்கொண்டு செல்லாதீர்கள்!*_
_*தெரியாததை*_ _*கேட்க* *தயங்காதீர்கள்!*_
_பாராட்டு_
_மற்றும்_ _ஊக்கமளிக்கும்_ _வார்த்தைகளுக்கு_
_பைசா செலவில்லை!_
_எனினும் அதன் மதிப்பு_
_பொன்னைக் காட்டிலும் உயர்ந்தது!_
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை பயனில்லை...*_ _*நேரத்தில் புறப்படுங்கள்...!*_
_எல்லோரையும் நேசிப்பது சிரமம்..._ _ஆனால் பழகிக்கொள்ளுங்கள்...!_
_*நல்லவர்களோடு நட்பாக இருங்கள்...*_ _*நீங்களும் நல்லவர்களாவீர்கள்...!*_
_காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை...!_
_*இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.*_
_யார் சொல்வது சரி? என்பதை விட, எது சரி? என்பதே முக்கியம்...!_
_*பலமுறை சிந்தியுங்கள்... ஒரு முறை முடிவெடுங்கள்...!*_
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை இறந்து விட்டார்
அடக்கம் செய்யணும்
சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!
மெல்ல எட்டிப் பார்த்தேன்
மூச்சு இல்லை – ஆனால்
இப்போதுதான் இறந்திருந்தார்
என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!
இருபது வருடங்கள்
முன்னாடி – அவர் மனைவி
இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!!
என்று யாரும் கேட்காத
நேரத்தில் – அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!
பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று
காதுபட மருமகள் பேசியபோது
அவர் இறந்திருந்தார் அப்போதும்
யாருமே கவனிக்க வில்லை...!!
தாய்க்குப் பின் தாரம்
தாரத்துக்குப் பின் ..
வீட்டின் ஓரம் ...!!!
என்று வாழ்ந்த போது – அவர்
இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை ..!!!
காசு இங்கே
மரத்திலேயா காய்க்குது - என்று
மகன் அமிலவார்த்தையை
வீசிய போது..!!!
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!
என்னங்க...!!!
ரொம்ப தூரத்திலே இருக்குற
முதியோர் இல்லத்திலே விட்டு
தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!
என்று காதிலே விழுந்த போதும்
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!
உனக்கென்னப்பா...!!!
பொண்டாட்டி தொல்லை இல்லை
என்று வாழ்த்துவது போல
கிண்டலடிக்கப் பட்ட போது
அவர் இறந்திருந்தார்..!!!
அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .
இப்போதுதான்
இறந்தாராம் என்கிறார்கள்..!!!
எப்படி நான் நம்புவது..???
நீங்கள் செல்லும் வழியில்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்...
ஒரு வினாடியாவது நின்று
பேசி விட்டுச் செல்லுங்கள்..!!!
இல்லையேல்...!!!!
உங்கள் அருகிலேயே
இறந்து கொண்டிருப்பார்கள்
புரிந்து கொள்ளுங்கள் ..
வாழ்க்கை என்பது
வாழ்வது மட்டுமல்ல..!!!
வாழ வைப்பதும்தான் ..!!!!
😥😥😥😭😭😭😭😭😭
*பலர் இறந்து விடுகிறார்கள்.*
*புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.*
😊😊😊
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் யார் தோற்கடித்தது என்று பார்த்தேன்,*
*வேறு யாரும் இல்லை, என் கோபம்தான் என்னை தோற்கடித்தது.*
*ஹிட்லர்*
*💐இனிய காலை வணக்கம்🙏*
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை இறந்து விட்டார்
அடக்கம் செய்யணும்
சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!
மெல்ல எட்டிப் பார்த்தேன்
மூச்சு இல்லை – ஆனால்
இப்போதுதான் இறந்திருந்தார்
என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!
இருபது வருடங்கள்
முன்னாடி – அவர் மனைவி
இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!!
என்று யாரும் கேட்காத
நேரத்தில் – அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!
பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று
காதுபட மருமகள் பேசியபோது
அவர் இறந்திருந்தார் அப்போதும்
யாருமே கவனிக்க வில்லை...!!
தாய்க்குப் பின் தாரம்
தாரத்துக்குப் பின் ..
வீட்டின் ஓரம் ...!!!
என்று வாழ்ந்த போது – அவர்
இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை ..!!!
காசு இங்கே
மரத்திலேயா காய்க்குது - என்று
மகன் அமிலவார்த்தையை
வீசிய போது..!!!
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!
என்னங்க...!!!
ரொம்ப தூரத்திலே இருக்குற
முதியோர் இல்லத்திலே விட்டு
தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!
என்று காதிலே விழுந்த போதும்
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!
உனக்கென்னப்பா...!!!
பொண்டாட்டி தொல்லை இல்லை
என்று வாழ்த்துவது போல
கிண்டலடிக்கப் பட்ட போது
அவர் இறந்திருந்தார்..!!!
அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .
இப்போதுதான்
இறந்தாராம் என்கிறார்கள்..!!!
எப்படி நான் நம்புவது..???
நீங்கள் செல்லும் வழியில்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்...
ஒரு வினாடியாவது நின்று
பேசி விட்டுச் செல்லுங்கள்..!!!
இல்லையேல்...!!!!
உங்கள் அருகிலேயே
இறந்து கொண்டிருப்பார்கள்
புரிந்து கொள்ளுங்கள் ..
வாழ்க்கை என்பது
வாழ்வது மட்டுமல்ல..!!!
வாழ வைப்பதும்தான் ..!!!!
😥😥😥😭😭😭😭😭😭
*பலர் இறந்து விடுகிறார்கள்.*
*புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது.*
😊😊😊
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை.*_
_*யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.*_
_*~ BRUCE LEE ~*_
_*காலை வணக்கம்🙏🏻💐💞*_
_*இந்த நாள் இனிதாகட்டும்🍫*_
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை *சிந்தனை துளிகள்* 🤔
உணவுடன் பக்தி சங்கமித்தால்,
*பிரசாதம்!*
பட்டினியுடன் பக்தி சேர்ந்தால்,
*விரதம்!*
நீருடன் பக்தி கலந்தால்,
*தீர்த்தம்!*
பயணத்துடன் பக்தி இணைந்தால்,
*ஆன்மீக யாத்திரை!*
இசையுடன் பக்தி இணைந்தால்,
*கீர்த்தனை!*
இல்லத்தில் பக்தி இருந்தால்,
*கோயில்!*
செயலில் பக்தி இணைந்தால்,
*இறைத்தொண்டு!*
வேலையில் பக்தி கலந்தால்,
*கர்மா!*
மனிதனின் பக்தி இணைந்தால்,
*மகான்!*
🍁🪻🍁🪻🍁🪻🍁🪻












