
செ.சாா்லஸ் செபஸ்டின்
@charlesrani2390
♥அன்பு சகலத்தையும் வெவல்லும் ஆற்றல்உடையது♥
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் போது வாழ்க்கையை ரசிக்க முடியும். ஆனால் அழும் போது தான் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும்.*_
_வாழ்க்கை வாழ்வதற்குத் தான், அழுது வடிப்பதற்கு அல்ல. அத்தகைய வாழ்க்கையை சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வதும்._
_*சிக்கல்கள் நேர்ந்தவுடன் அதற்கேற்ப தீர்வுகளை ஆராய்வதும் சில வேளைகளில் நமக்கு பல அனுபவங்களைக் கற்றுத் தரும்.*_
_நீ கடக்காமப் போனாலும் அந்தப் பிரச்சினை வரத்தான் போகுது. ஒரே இடத்துலே நின்னு அழுது புரண்டாலும் வந்து தொலையத் தான் போகுது._
_*ஆம் எந்த சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. இதுக்கெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம, ஆனது ஆகட்டும் பார்த்துக்கலாம் ஒரு கை ன்னு சிங்கம் போல வீர நடை போட்டால் வெற்றி நிச்சயம்.*_
🙏இன்றைய சிந்தனை🙏
🌷14.03.2026🌷
🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞
நீ ஒருவனை ஏமாற்றினால், உன்னை
ஒருவன் ஏமாற்றக் காத்துக் கொண்டு
இருப்பான்,
மறந்து விடாதே....
வாழ்க்கையில் உண்மையாக இரு...!!!
அதனால் தோல்விகள்
வரலாம்.
ஆனால் நீ சோர்ந்து விடாதே..!!!
உண்மையின் அச்சாணியில் தான்
இந்த உலகம்
சுழல்கிறது என்பதை
இந்த உலகம் ஒரு நாள்
புரிந்துக் கொள்ளட்டும்.!
மனிதா, காலம் முழுவதும் கோடிட்ட இடமாக காலியாகவே இருந்து விடாதே...!
உனது உழைப்பின்
வரிகளைப் பலர் கீழே கோடிட்டுக் காட்டுவது போல் வாழ்ந்திடு...!!!
மற்றவர் மனதில் நாம் எங்கு இருக்கிறோம்
என்று அறியாமல்
பிறருக்கு அறிவுரை கூறி அவமானப்படாதே....
வாழ்க வளமுடன்.
🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞🛞 #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் காலை ஜெபம்*
"ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்".
(திருப்பாடல் 30: 1,3. 4-5. 10-12b)
எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய திருநாமம் பரிசுத்தம் என போற்றுகின்றேன். என்னை முழுமையாக உமது பாதத்தில் அர்ப்பணிக்கின்றேன். கடந்த இரவு முழுவதும் என்னை பாதுகாத்த, உமது மேலான ஆசீருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஆண்டவரே, இந்த காலை வேளையில் உம்மைப் புகழ்வேன்; ஏனெனில், என்னை கைதூக்கிவிட்டீர். இறைவா! என் மகிழ்ச்சியையும், துயரங்களையும் என்னிடமுள்ள அனைத்தையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். உம்மிடமே நிலையான அமைதியும், ஆறுதலும் எமக்கு உள்ளன.
அன்று கப்பர்நாகுமில், அரச அலுவலர் மகனுக்கு நீர் செய்த அரும் அடையாளத்தைப் போல, நோயுற்ற எண்ணற்ற குழந்தைகளைத் தொட்டு, அவர்களைக் குணமாக்கிட உம்மை இரந்து வேண்டுகிறேன்.
இறைவா! இந்த நாள் முழுவதும் உம்முடைய மகிமையை காணும்படியாக செய்வீராக. உம்மோடு உமக்காக வாழவும், என் வாழ்விலும், தாழ்விலும் உம்மை மட்டுமே அன்பு செய்யவும் அருள் புரியும்.
இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.
*ஆமென்.*
விண்ணுலகில் இருக்கிற ... (1)
அருள் நிறைந்த... (3)
பிதாவுக்கும், சுதனுக்கும்..(1)
*ஆமென்.*
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் சிந்தனை*
*மேன்மை அடையத் தாழ்ச்சியே வழி!*
முன்பொரு காலத்தில் ஒரு மன்னர் இருந்தார். அவர் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கி வந்து, அந்நாட்டில் இருந்த ஒரு துறவியோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இது குறித்து அவர் உள்ளுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார்.
ஒருநாள் அவர் துறவியிடம், “சுவாமி! ஆணவம் என்று சொல்கிறார்களே! அப்படியென்றால் என்ன?” என்று ஒன்றும் தெரியாதவர் போன்று கேட்டார். அதற்குத் துறவி அவரிடம், “இது முட்டாள்தனமான கேள்வி” என்றதும், மன்னர் தன் வாளை உருவி, “நான் கேட்டது முட்டாள்தனமான கேள்வியா? என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்று துறவியைத் தாக்க முயன்றார்.
அப்போது துறவி அவரிடம், “இதற்குப் பெயர்தான் ஆவணம். ஏனெனில் தாழ்ச்சியோடு இருப்பவர் எத்தகைய சூழ்நிலையிலும் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டார். அவர் தன்னுடைய நிலையில் மிக உறுதியாக இருப்பார்” என்றார். இதைக் கேட்டு மன்னர் தன் தவற்றை நினைத்து வருந்தினார்.
ஆம், சிலர் தாழ்ச்சியோடு இருப்பதாக நடிப்பார்கள். உண்மையான தாழ்ச்சியோடு இருப்பவர்கள் ஒருபோதும் தங்கள் நிலையிலிருந்து மாறமாட்டார்கள். இன்றைய இறைவார்த்தை எது உண்மையான தாழ்ச்சி, தாழ்ச்சியோடு இருப்பவர்களுக்குக் கடவுள் எத்தகைய கைம்மாறு அளிக்கின்றார் என்பன பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
‘பசுத்தோல் போர்த்திய புலி’ போல் சிலர் தங்கள் ஆணவத்தை உள்ளுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு, அதைத் தாழ்ச்சி என்ற போர்வையில் வெளியே காட்டுவார்கள். இதற்குப் பெரிய உதாராணமாக வருபவர்தான் நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய பரிசேயரும் வரிதண்டுவோரும் உவமையில் வரும் பரிசேயர்.
இந்தப் பரிசேயர் கடவுளிடம் வேண்டுகிறேன் என்ற பெயரில் வரிதண்டுபவர் மீதான தனது வெறுப்பை உமிழ்ந்து, தன்னைப் பற்றித் தம்பட்டம் அடிக்கின்றார். இவ்வாறு அவர் தனது ஆணவத்தை வெளிப்படுத்துகின்றார். இதற்கு முற்றிலும் மாறாக, வரிதண்டுபவர் தனது தவற்றை உணர்ந்து, வானத்தை அண்ணார்ந்து பார்க்கத் துணியாமல், கடவுளின் இரக்கத்தை இறைஞ்சுகின்றார். இதனால் அவர் கடவுளுக்கு உகந்தவராகின்றார்.
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகிறேன்“ என்ற வரியோடு முடிகின்றது. இயேசு சொல்லும் உவமையில் வரும் பரிசேயர் கடவுளை அறிந்திருக்க வில்லை. அதனால்தான் அவர் ஆணவத்தோடு கடவுளிடம் வேண்டுகின்றார். வரிதண்டுவோர் கடவுளை அறிந்திருந்தார். அதனால்தான் அவர் முன் தாழ்ச்சியோடு நடந்து கொண்டார். நாம் கடவுளுக்கு முன்பு நம்மையே தாழ்த்தி, அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவோம்.
*சிந்தனைக்கு:*
இறுமாப்பு ஒருவரை இடறிவிழச் செய்யும். தாழ்ச்சி ஒருவரை உயர்த்தும்
கடவுள் விண்ணகத்தை அடுத்து தாழ்ச்சி நிறைந்தவரின் உள்ளத்தில்தான் குடிகொண்டிருக்கின்றார்.
கடவுளுக்கு முன்பு நான் ஒன்றுமில்லை என்பதை உணர்வதே தாழ்ச்சி
*இறைவாக்கு:*
‘மேன்மை அடையத் தாழ்மையே வழி’ (நீமொ 18:12) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் கடவுளுக்கு முன்பாக நம்மையே தாழ்த்தி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை மலர்கள்🇮🇳_*
*𝟭𝟰, 𝐒𝐚𝐭𝐮𝐫𝐝𝐚𝐲 𝐌𝐚𝐫. 𝟮𝟬𝟮𝟲*
*★❀━━━━🄲🅁🄺━━━━❀★*
*🔹🔸இன்றைய சிந்தனை*
*🏛️🔹🔸🌹✍️🌹🔸🔹🏛️*
*🧿’நகைச்சுவை உணர்வு..!*
*🏵️❀••┈┈•C®️K•┈┈••❀🏵️*
. *🌹✍️*
*♻️உலக வாழ் உயிரினங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு...*
*♻️இன்றைய சூழலில் நகைச்சுவை உணர்வு அனைவருக்கும் அவசியமானதும் கூட. நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை...*
*♻️நகைச்சுவை என்பது அடுத்தவரைக் காயப்படுத்தும் அளவுக்கு பகிடி செய்வது என்பது சிலருடைய வழக்கம்... அதை விட்டு விடுங்கள்...(பகிடி-கிண்டல்)*
*♻️நகைச்சுவை உணர்வு இருக்கும் மனிதர்கள் தங்களைச் சுற்றி மிக எளிதில் நண்பர் படையை உருவாக்கி விடுவார்கள். அவர்கள் மிக எளிதில் மற்றவர்களோடு பழகவும் செய்வார்கள்...*
*♻️தலைமைப் பண்பின் மிக முக்கியமான செயலாக இந்த நகைச்சுவை உணர்வைக் குறிப்பிடுகிறார்கள். காரணம்!, நகைச்சுவை உணர்வுடைய தலைவர்கள் நல்ல கடுமையான முடிவுகளைக் கூட எளிமையாய் மக்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் சொல்வார்கள் என்பது தான்...*
*♻️மனிதனுக்குப் பல நேரங்களில் மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க, ஒருவருக்கொருவர் நெருக்கமாகப் பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு, மனமகிழ்ச்சி எனப் பலவிதமான பயன்பாட்டில் திகழ்கிறது இந்தச் சிரிப்பு ஒன்று தான்...*
*♻️இன்றைய காலகட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ்நிலையும், மன உளைச்சலும் இதற்குக் காரணம் கூறலாம்...*
*♻️நம்மில் சிலர்- பெரிய பதவியிலுள்ளவர்கள் ‘சிரித்துப் பேசக் கூடாது’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறுக்கமாகவே இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாற வேண்டும்...*
*♻️நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், துன்பங்களில் இருந்து விடுபட, சிரிப்பு ஒன்று தான் வழி...*
*♻️உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள். அதுதான் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றும்...*
*😎ஆம் நண்பர்களே...!*
*🏵️உள்ளத்தில் நகைச்சுவை உணர்வைக் கொண்டிருங்கள். நம் வாழ்நாளில் எவ்வளவு காலம் சிரிக்கின்றோமோ, அவ்வளவு காலம் கூடுதலாக வாழ்கின்றோம்...!*
*⚽சிரிப்பு இல்லாத வாழ்க்கை வெறும் செயற்கையான வாழ்க்கையாகி விடும். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம் விட்டு அடிக்கடி சிரிப்பது மிக அவசியமாகிறது...!!*
*🏵️சிரிப்பெனும் மருந்தை நாளும் அருந்துங்கள், மனம் விட்டு சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது, வளமடைகிறது. அதனால்!, நம்மால் இயன்ற வரை சிரித்து வாழ்ந்து, நமது ஆயுள்காலத்தை அதிகரிப்போம்...!!!*
*🏵️▬▬▬C®️K▬▬▬🏵️*
*𝟭𝟰 | 𝟬𝟯 | 𝟮𝟬𝟮𝟲*
. *🌹✍️*
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் *🌺🌺 "இன்றைய* *சிந்தனை" 14.03.2026)* ---------------------- *"அறிவு தான் வளர்ச்சிக்கு."* .…..............................
அறிவு தான் வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். எதையும் சிறப்பாக செய்வதற்கு மன ஈடுபாடு மட்டுமே போதாது.. அறிவுத் திறனும் தேவை. அத்தகைய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தொடர்ந்து தேடலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
அறிவு வளம் பெருகப் பெருக நம் சிந்தனையில் தெளிவும், செயலில் உறுதியும் உண்டாகும்.. தத்துவஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட போது ஒரு நாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையை சேர்ந்த பரிசோதனை அதிகாரிகள் அவரிடம்,
" விலை மதிப்பு மிக்க பொருட்கள் இருந்தால் வெளியே எடுத்துக் காட்டுங்கள் என்று அதட்டிக் கேட்க.. அதற்கு அவர் கோபப்படாமல் மிகவும் சாந்தமாக " என்னிடம் இருக்கும் விலை மதிப்பு மிக்க பொருள் அறிவு ஒன்று தான். அதைத் தவிர வேறு எதுவும் என்னிடம் கிடையாது.. அதை உங்களுக்கு என்னால் தர முடியாது. மற்றும் உங்களால் என்னிடம் இருந்து அதை பறிமுதல் செய்யவும் முடியாது என்றார்..
ஆம்..அறிவு வளம் உங்களுக்குத் தெளிவையும், துணிவையும் நிச்சயம் பெற்றுத் தரும்..
*ஆம்..நண்பர்களே..* எதையும் சீர்தூக்கிப் பார்த்து உணரத்தக்க அறிவே உண்மையான அறிவு.எனவே, நாம் கற்றுக் கொண்ட அறிவை ஒவ்வொரு வாய்ப்புகளிலும் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயலுவோம்..
(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி....................)💐💐💐💐💐💐💐..
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் என்பது ஒரு சிக்கல் அல்ல, ஆனால் நம்பிக்கையின் மலர்
பிரச்சனைகள் மற்றும் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. வெவ்வேறு வயதுடையவர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புதிதாகப் பிறந்த குழந்தை தாயின் தொடுதலை இழந்தால் பாதுகாப்பற்றதாக உணரும். பள்ளியில் சேர்க்கப்பட்ட ஒரு குழந்தை ஒவ்வொரு புதிய வார்த்தையையும் கற்றுக்கொள்ள வேண்டிய பிரச்சனையாக நினைக்கிறது. இதனால், மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் பிரச்சினைகள் உள்ளன. நமது புத்திசாலித்தனம், விடாமுயற்சி மற்றும் தைரியத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நமது சில பிரச்சனைகளைத் தீர்க்க முடியும், அதே நேரத்தில் சில சிக்கலான பிரச்சனைகள் நம்மை சோதிக்கும். நமது சாதாரண மற்றும் வரையறுக்கப்பட்ட புத்திசாலித்தனத்தைக் கொண்டு சவாலான பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சித்தால், அவை தீர்க்கப்படாமல் போகலாம். ஆனால் கடவுள் தனது எல்லையற்ற புத்திசாலித்தனத்தில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வும் ஒவ்வொரு துக்கத்திற்கும் ஆறுதலும் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்வது போதுமானது. ஒவ்வொரு வேலையிலும் கடவுளை நினைத்துக்கொண்டு, 'சாயி! நீங்கள் என்னை இந்த வேலையைச் செய்ய வைக்கிறீர்கள்' என்று சொன்னால் போதும். இந்த எளிய மற்றும் இதயப்பூர்வமான பிரார்த்தனையின் பலன் மிகவும் சிறப்பாக இருக்கும். நாம் தவறவிட்டதாக நினைத்த ரயில் நம்மை அழைத்துச் செல்ல தாமதமாக வரும். தேர்வுத் தாளில் எந்த கடினமான கேள்வியும் இருக்காது. நமது சின்னச் சின்ன சந்தேகங்களை நாம் தெளிவுபடுத்திக் கொண்டு, எந்தப் பாடத்தைப் படிக்க வேண்டும் அல்லது எந்த வேலையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அமைதியாக அறிவுறுத்தப்படுகிறோம். உண்மையில், பிரச்சனைகளின் வலையை உருவாக்குபவர் பாபாதான், நம் மனதை கவலையடையச் செய்கிறார். நாம் பாபாவிடம் திரும்பும்போது, அவர் நம்மை கஷ்டங்களிலிருந்து மீட்டு மகிழ்விக்கிறார். பாபாவின் ஒவ்வொரு அற்புதமும் அவர் நம்மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பின் வெளிப்பாடாகும்.
🄱
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை - 989*
💥💥💥💥💥💥💥💥
பால்: பொருட்பால் அதிகாரம்: சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.
*பொருள் :*
சால்பாகிய கடலுக்கு கரையானவர், அழிவு காலம் உண்டானாலும் ஒழுக்கம் தவறார்.
*பழமொழி :*
Known is a drop unknown is an ocean
கற்றது கைமண் அளவு கல்லாதது கடலளவு
*பொன்மொழி :*
பெரிதாக யோசி, சிறிதாக தொடங்கு, ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது. ஆனால் நிச்சயம் உயரலாம்.
*பொது அறிவு :*
1. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் எது?
விடை: வைரம்.
2. கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு எது?
விடை: கார்பன் டை ஆக்சைடு
*English words & meanings :*
Engineer - பொறியாளர்
Farmer - விவசாயி
*அறிவியல் களஞ்சியம்*
*சேவல் கூவுவது ஏன்*
அதிகாலை நேரத்தை குறிப்பிடும் விதமாக தான், சேவல் கூவுகிறது என்பது தவறானது.
சேவலின் உடலில் இயல்பாக இருக்கும் 'உயிர்க் கடிகாரம்' தான், புறச்சூழல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கூவச் செய்கிறது. அதற்கு பகல், இரவு என்ற நேரமில்லை.
இரவு முழுவதும் வெளிச்சத்தில் வைத்திருந்தாலும், அதற்குரிய நேரத்தில் அது கூவுகிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தன் எல்லையை குறிப்பிட, இனப்பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக சேவல் கூவுகிறது. சேவல் கூவும் ஒலி அளவு 100 -140 டெசிபல் இருக்கலாம் என ஆய்வு தெரிவிக்கிறது.
💥💥💥💥💥💥💥💥
By Covai women ICT_போதிமரம்
#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் சிறுகதை*
ஆசிரியர் *முல்லை முத்தையா*
பகிர்வு அ. கந்தன்
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*இளவரசனின் தியாக உள்ளம்*
ஒரு நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அரசன், திடீரென்று இறந்து விட்டான். அந்த அதிர்ச்சியில் ராணியும் இறந்து போனாள். அரசனின் ஒரே வாரிசான இளவரசனுக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.
தாய் தந்தையரை இழந்த துக்கம் இளவரசனை துயரத்தில் ஆழ்த்தியது. அரச குருவிடம் சென்று, “குருவே! துக்கம் எதனால் ஏற்படுகிறது? துக்கம் உண்டாகாமல் வாழ வழி என்ன?” என்று கேட்டான் இளவரசன்.
“இளவரசே! வழி வழியாக வருவது பாசம்! பாசத்தின் விளைவு துக்கம்; பாசத்தை நீக்கி விட்டால், துக்கம் உண்டாகாது” என்றார் அரச குரு. “பாசத்தை நீக்குவது எவ்வாறு?” என்று கேட்டான் இளவரசன்.
“வீடு, மனைவி, மக்கள், சுற்றம், செல்வம், ஆடை, ஆபரணம் போன்ற அனைத்தும் பாசமே! ஒன்றைத் தொடர்ந்து ஒன்று இழுத்துக் கொண்டே செல்லும்” என்றார் அரச குரு.
அவர் சொன்னது இளவரசனின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.
உடனே இளவரசன் அரண்மனைக்குச் சென்று, அரச உடைகளையும், ஆபரணங்களையும் களைந்து விட்டான். நான்கு முழ வேட்டி ஒன்றை உடுத்தியபடி, அரண்மனையை விட்டு வெளியேறினான்.
அரண்மனையில் உள்ளவர்களும், நகர மக்களும் இளவரசனின் துறவுக் கோலத்தைக் கண்டு வருந்தினர். சிலர் வியப்புற்றனர்.
கையில் ஒரு பாத்திரத்தை ஏந்தியபடி, கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தான் இளவரசன், எந்த வீட்டின் முன்னேயும் நின்று பிச்சைகேட்பதில்லை, எவரேனும் வந்து பிச்சை இட்டால், ஏற்பான்.
தான் உண்டது போக, எஞ்சியதை காகங்களுக்கும் நாய்களுக்கும் போட்டு விடுவான்.
இரவு வேளையில் மரத்தடியிலோ, வீட்டுத் திண்ணையிலோ படுத்து உறங்குவான். காலையில் எழுந்து புறப்பட்டு விடுவான்.
இப்படியாக, ஒரு ஊரில் அவன் போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு வணிகனின் மனைவி அவனைக் கண்டு, உண்வு அருந்த அவனை வீட்டுக்குள் வருமாறு அழைத்தாள். “எந்த வீட்டிற்குள்ளும் நுழைவது இல்லை” என்று சைகையால் காட்டி விட்டு, அவன் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவனுடைய அழகான தோற்றத்திலும், தாமரை மலர் போன்ற கண்களிலும் மனதைப் பறி கொடுத்தாள் வணிகனின் மனைவி. அவள் உள்ளத்தைக் கட்டுப்படுத்த இயலாமல்,
அவன் பின்னே ஓடி, “இத்தகைய பேரழகு பொருந்திய நீ பிச்சை எடுப்பானேன்? எந்தப் பெண்தான் உன் தாமரைக் கண்களைக் கண்டு மயங்காமல் இருக்க முடியும்?” என்று மருகினாள்.
அவள் கூறியதைக் கேட்டதும், “தாயே! இந்தக் கண்கள் தானே உன்னை மயங்கச் செய்தன? இதோ பார்!” என்று கூறி, உடனே ஒரு கண்ணை தன் விரலால் தோண்டி எடுத்து, அவளிடம் காட்டி, “இப்போது நன்றாகப் பார்! இந்தச் சதை துண்டா உன்னை மயக்கிற்று?” என்று கேட்டான் துறவியான இளவரசன்.
வணிகனின் மனைவி, அழகு மயக்கத்திலிருந்து விடுபட்டு, “நீங்கள் ஒரு கண்ணை இழப்பதற்குப் பாவி நான் அல்லவா காரணமானேன்” என்று கதறி, அவன் காலில் விழுந்தாள்.
“தாயே! நீ எனக்குத் தீமை எதுவும் செய்யவில்லை. என் கண்ணைக் கெடுக்கவில்லை. மாறாக, எனக்குப் பொறுமையைப் போதித்து விட்டாய்” என்று கூறி துறவுக் கோலம் பூண்டிருந்த இளவரசன் புறப்பட்டான்.
துறவுக் கோலம் கொள்வதற்கு, மனவலிமை, உள்ளத் தூய்மை மிக அவசியமானதாகும்.
*முற்றும்*
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை நேர சிந்தனை*
(14.03.26)
*புரிவது போல் வாழ்க்கை!*
ஒரு தாவோ கதை!
பழங்கால சீனாவில் இருந்த ஒரு தாவோ ஞானியிடம் பலரும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருவார்கள். அவர் அதிகம் பேச மாட்டார்.
பிரச்சினைகளுக்கு அவர் சொல்லும் தீர்வு ஒரு சில சொற்களாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சொற்களில் எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அருமையான பதில் இருக்கும்.
ஒரு நாள் அவரைத் தேடி இரண்டு இளைஞர்கள் வேறு வேறு பகுதிகளில் இருந்து வந்தார்கள்.
அவருக்காகக் காத்திருக்கும் போது அவர்கள் பேசிக் கொண்ட போது இருவருடைய பிரச்சினையும் ஒன்று தான் என்பதைக் கண்டு கொண்டார்கள்.
இருவருக்கும் அப்போது அவர்கள் செய்து கொண்டிருந்த வேலை பிடிக்கவில்லை. அவர்களை அவர்களுடைய மேலதிகாரிகள் நடத்தும் விதம் பிடிக்கவில்லை.
தினமும் மன உளைச்சல் மற்றும் நிம்மதியில்லாத சூழ்நிலை. இதிலிருந்து விடுபடத் தான் அந்த ஞானியிடம் ஆலோசனை கேட்க அவர்கள் வந்திருந்தனர்.
ஞானி அவர்களைச் சந்தித்த போது இருவரும் ஒருசேரத் தங்கள் பிரச்சினையைச் சொன்னார்கள். கேட்டு விட்டு கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் இருந்து விட்டு அவர் சொன்னார். “எல்லாம் ஒரு பானை சோற்றிற்காக!”
அவ்வளவு தான் பதில். தாவோயிசத்தில் பெரிய விளக்கங்கள் கிடையாது. ஒரு விஷயம் சுட்டிக் காண்பிக்கப்படும். அவ்வளவு தான். அவர்கள் இருவரும் அவரை வணங்கி விட்டு வெளியே வந்தார்கள்.
‘எல்லாம் ஒரு பானை சோற்றிற்காக’ என்ற பதிலை ஆழமாக யோசித்த போது எல்லாமே ஒரு ஜாண் வயிற்றுக்காக என்றும் வேலையே வயிற்றுப் பிழைப்புக்காக என்றும் இருவருக்கும் புரிந்தது.
“உயிர் வாழத் தேவையான சம்பாத்தியத்தைத் தருவது தான் வேலை, அதை விட அதிக முக்கியத்துவம் அதற்குத் தர வேண்டாம் என்று அவர் சொல்கிறார்” என்று சொன்னான் ஒரு இளைஞன்.
மற்றவனுக்கும் அது உண்மை என்றே தோன்றியது. “ஆமாம். அதை விட அதிகமாக வேலையில் இருந்து எதிர்பார்க்க ஒன்றும் இல்லை என்றே அவர் சுட்டிக் காட்டுகிறார்” என்று அவனும் சொன்னான்.
இருவரும் பிரிந்து சென்றார்கள்.
முதலாம் இளைஞன் வேலையை அந்த அளவுக்கு சீரியஸாக நினைக்க ஒன்றும் இல்லை என்று ஞானி உணர்த்துவதாகப் புரிந்து கொண்டான். உயிர் வாழ வேலை செய்தாக வேண்டும்.
அது தவிர்க்க முடியாதது என்கிற போது சலித்துக் கொண்டும், அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டும் மனவருத்தம் அடைவதில் அர்த்தமில்லை என்று எண்ணிய அவன் அந்த வேலையிலேயே தொடர்ந்து நீடித்தாலும் மனப்பக்குவத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தான்.
சின்னச் சின்ன குறைகளை பெரிது படுத்தாமல் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொண்டு வேலை செய்தான். அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் நாளடைவில் அவனுக்கு வேலை செய்யும் இடத்தில் ஓரு தனி மரியாதையை ஏற்படுத்தியது.
அவன் வேலையில் நேர்த்தியும், மேன்மையும் தெரிய ஆரம்பித்தது. உத்தியோக உயர்வுகள் விரைவாகக் கிடைக்க ஆரம்பிக்க சீக்கிரத்திலேயே மேல் நிலைக்கு வந்து விட்டான்.
இரண்டாம் இளைஞன் வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக பிடிக்காத வேலையில் நீடிப்பது தான் பிரச்சினை என்று அந்த ஞானி குறிப்பிடுவதாக நினைத்தான்.
உயிர் வாழ சம்பாத்தியத்திற்கு எத்தனையோ வழிகள் இருக்கும் போது மரியாதையோ, நிம்மதியோ இல்லாத இடத்தில் தொடர்ந்து கஷ்டப்படுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது என்று நினைத்தவனாக வேலையை விட்டு விட்டு சொந்தமாக வியாபாரம் ஒன்றைச் செய்ய ஆரம்பித்தான்.
சுதந்திரமாக, யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் வியாபாரம் செய்வதில் மகிழ்ச்சி இருந்தது. உற்சாகமாகவும், புத்திசாலித்தனமாகவும் அவன் உழைத்ததில் அவன் வியாபாரம் நல்ல அபிவிருத்தி அடைய ஆரம்பித்தது. அவனும் சீக்கிரத்திலேயே செல்வந்தனாகி விட்டான்.
இருவரும் சில காலம் கழித்து சந்திக்க நேர்ந்தது. இருவருமே வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டிருந்த போதும் அந்த ஞானி சொன்ன ஒரே உபதேசம் வேறு வேறு விதமாகத் தங்கள் வாழ்க்கையை மாற்றி விட்டதை எண்ணி ஆச்சரியப்பட்டார்கள்.
இருவர் வாழ்க்கையில் யார் வாழ்க்கை அந்த ஞானி சொன்ன அர்த்தத்தில் அமைந்திருக்கிறது என்று அறிய ஆசைப்பட்டு இருவரும் அந்த ஞானியை மறுபடியும் சந்தித்தார்கள்.
“ஐயா நீங்கள் அன்று எங்களுக்கு உபதேசித்ததின் உண்மையான அர்த்தம் என்ன என்று இன்று எங்களுக்குக் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் உபதேசித்ததின் உண்மைப் பொருளைத் தயவு செய்து தெளிவுபடுத்துங்களேன்”
ஞானி சிறிது நேரம் மௌனம் சாதித்து விட்டு சொன்னார். “புரிந்து கொள்வதில் தான் எல்லா வித்தியாசங்களும்!”
உண்மையில் இது தான் ஒரே வழி, இது தான் ஒரே தீர்வு என்று எதையும் ஆணித்தரமாகச் சொல்வது சரியல்ல. ஒரே பிரச்சினைக்கு பல தரப்பட்ட தீர்வுகள் இருக்கலாம். இருக்க முடியும்.
அந்த வழிகளில் தங்களுக்கு அதிகமாகப் பொருந்துகிற ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயணிக்கும் மனிதன் கண்டிப்பாக தன் லட்சியத்தை சிரமமில்லாமல் அடைகிறான்.
மேலே சொன்ன உதாரணத்தில் தன் மனநிலையை மாற்றிக் கொண்டு அதே வேலையில் முதலாமவன் நீடித்ததும் சரியே.
அதே போல தன் மனநிலைக்கு ஒத்துக் கொள்ளாத வேலையை விட்டு விட்டு தன் மனநிலைக்கு ஏற்ற வியாபாரத்தில் இரண்டாமவன் ஈடுபட்டதும் சரியே. இரண்டும் அவர்களை வெற்றிக்கே அழைத்துச் சென்றன.
மனமும், செயலும் ஒன்றுக்கொன்று எதிராக இயங்காமல், ஒத்துப் போகும் போது பிரச்சினை முடிந்து தீர்வு ஆரம்பிக்கிறது.
வேறு வேறு விதங்களில் இருவரும் மனம்-செயல் இரண்டும் முரணாக இயங்காமல் பார்த்துக் கொண்டதால் தான் அவர்களால் வெற்றி அடைய முடிந்தது.
அந்த நல்லிணக்கம் மனதுக்கும், ஈடுபடுகின்ற தொழிலுக்கும் இடையே இருக்காத வரை எந்த மாற்றமும் நிம்மதியையோ, வெற்றியையோ தராது.
இரண்டாவதாக அவர் சொன்னது போல ஒவ்வொருவர் வாழ்க்கையையும் வித்தியாசப்படுத்துவது அவரவர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் விதங்களே. புரிந்து கொள்ளும் விதம் சிறிது மாறினாலும் வாழ்க்கையில் அது பெரிய மாறுதலுக்கு வழி வகுக்கிறது.
எதையும் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம். ஏனென்றால் ஒன்றைப் புரிந்து கொண்டதன் படியே அதை அணுகுகிறோம்.
ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடிவதும், மேலும் சிக்கலாக்குவதும் அதைப் புரிந்து கொள்ளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது.
முன்னதாகவே ஒரு முடிவெடுத்து விட்டு குறுகிய பார்வையில் எதையும் பார்ப்பவன் தவறாகவே புரிந்து கொள்கிறான். தவறாகவே எதையும் ஆக்கியும் விடுகிறான்.
அப்படிப்பட்டவன் தானாக துளியும் மாறாமல் நின்று தன் விருப்பப்படி அனைத்தையும் மாற்ற முனைகிறான். அனைத்துடனும் பிணக்கம் கொள்கிறான்.
காலச் சூழலை எதிர்க்கும் அவன் பின்னுக்குத் தள்ளப்படுவதோடு அல்லாமல் நிம்மதியும் இன்றி தவிக்கிறான்.
சரியாகப் புரிந்து கொள்ளும் விதமோ சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு அமைதியாக திறந்த மனதுடன் உள்ளதை உள்ளபடி பார்க்க முடிவதில் தான் ஆரம்பிக்கிறது.
அப்படிப் பார்க்க முடிபவன் தேவைப்படும் போது சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை.
உலகத்தோடு அவன் யுத்தம் செய்வதில்லை. அதனுடன் சேர்ந்து கூட்டாக இயங்குகிறான். அனைத்தையும் துணையாக்கிக் கொண்டு அழகாக வாழ்ந்து முன்னேறுகிறான்.
வாழ்க்கையை ஒரு பிரச்சினையாகப் புரிந்து கொண்டு வாழ்கிறவன் அப்படியே தன் அனுபவங்களைக் காண்கிறான். சந்திக்கின்ற மனிதர்கள், சூழ்நிலைகள், எல்லாமே பிரச்சினைகளாக உருவெடுக்க, அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை துக்கமயமாகவே அமைந்து விடுகிறது.
வாழ்க்கையில் எல்லாமே ஏதோ ஒன்றை சொல்லித் தருகின்றது என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை அணுகுபவன் ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு பாடத்தைப் படித்துக் கொண்டு அதைக் கச்சிதமாக சந்திக்கும் விதத்தில் தன்னை பலப்படுத்திக் கொள்கிறான்.
ஒவ்வொரு பிரச்சினையும் அவனை உயர்த்தும் படிக்கட்டாக அமைந்து அவன் புரிந்து கொண்ட விதமாகவே வாழ்க்கை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக அமைந்து அவனை உயர்த்தி விடுகிறது.
எனவே புரிந்து கொள்ளும் விதத்திலேயே வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.!
நன்றி - என்.கணேசன்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்ய்
வாழ்க 🙌 வளமுடன்🎋🌴
*அன்பே🔥சிவம்*🌴🎋
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋












![🤔புதிய சிந்தனைகள் - Sharechat drops @ எலல் 0000 MMoaung] dog haoe @ &000/ Sharechat drops @ எலல் 0000 MMoaung] dog haoe @ &000/ - ShareChat 🤔புதிய சிந்தனைகள் - Sharechat drops @ எலல் 0000 MMoaung] dog haoe @ &000/ Sharechat drops @ எலல் 0000 MMoaung] dog haoe @ &000/ - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_15812_21fcd395_1773451008233_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=233_sc.jpg)