
CMO Tamilnadu
@cmotamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
#📺வைரல் தகவல்🤩
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் திருவுருவச் சிலை சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, திருவுருவச் சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
#📺வைரல் தகவல்🤩
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 18 கோடி ரூபாய்க்கான காசோலையை சுசீந்திரம் - கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்கள் இணை ஆணையர் / செயல் அலுவலர் திருமதி அ. ஜான்சிராணி, தக்கார் / இணை ஆணையர் திருமதி ப.கவிதா பிரியதர்ஷினி ஆகியோரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் வழங்கினார்.
#📺வைரல் தகவல்🤩
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 10 கோடி ரூபாய்க்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட திருக்கோயில்களின் தக்கார்/உதவி ஆணையர் திருமதி ர.ரஞ்சிதா மற்றும் செயல் அலுவலர் திரு. எஸ்.அருண் பாண்டியன் ஆகியோரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் வழங்கினார்
#📺வைரல் தகவல்🤩
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் 8 கோடி ரூபாய்க்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் திரு. சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் திருமதி கோ.கவிதா ஆகியோரிடம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் வழங்கினார்.
#📺வைரல் தகவல்🤩
பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் 89.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட அதிநவீன பால்பண்ணை, சென்னை, அம்பத்தூரில் 11.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகிய முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
#📺வைரல் தகவல்🤩
சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை (Mega Handicrafts Exhibition-cum-Conference) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்து, கைவினைத் தொழிலுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
#📺வைரல் தகவல்🤩
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 2378.30 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 635.30 கோடி ரூபாய் செலவில் 22 முடிவுற்ற பணிகளையும், நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 237.04 கோடி ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 பணிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
#📺வைரல் தகவல்🤩
சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை (Mega Handicrafts Exhibition-cum-Conference) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்து, கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
#📺வைரல் தகவல்🤩
சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
#📺வைரல் தகவல்🤩












