
CMO Tamilnadu
@cmotamilnadu
Office of the Chief Minister of TamilNadu.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026" தொடக்க விழாவில், தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட 22,794.78 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 65,937 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
#📺வைரல் தகவல்🤩
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026" தொடங்கி வைத்து, பூம்புகார், சிதம்பரம் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் 40.25 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 3 திட்டப் பணிகளை திறந்து வைத்து, திருக்கடையூரில் ஓட்டல் தமிழ்நாடு அமைக்கும் பணி மற்றும் தரங்கம்பாடியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் என 8 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
#📺வைரல் தகவல்🤩
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026" தொடக்க விழாவில், சுற்றுலா புத்தாக்க ஹேக்கத்தான் (Tourism Innovation Hackathon) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் தலா ரூ. 1 இலட்சம் ரொக்கப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.
#📺வைரல் தகவல்🤩
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026" தொடக்க விழாவில், பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
#📺வைரல் தகவல்🤩
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 2119.07 கோடி செலவில் 8 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2452 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்ட மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்தார்.
#📺வைரல் தகவல்🤩
செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரி 30 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்தார்.
#📺வைரல் தகவல்🤩
சென்னையில் நடைபெற்ற, ஆர்.ஐஸ்வர்யா, இ.ஆ.ப., - பி.வான்யா IRAS ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார்.
#📺வைரல் தகவல்🤩
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.மாணிக்கம் அவர்களை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
#📺வைரல் தகவல்🤩
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற "லியோனி ஆகிய நான்" 50ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.
#📺வைரல் தகவல்🤩
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில், கேரளா உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி நிஷா பானு அவர்களின் மகன் திரு. தயானந்த் கெவின் ராய் - டாக்டர் சரண்யா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
#📺வைரல் தகவல்🤩












