எதுக்கு வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள்,ஆனால் ஒருவரின் அன்பு வேண்டும் என்பதற்காக அழுது வடியாதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் கெஞ்சிக் கொண்டிருங்கள், ஆனால் ஒருவரின் ப்ரியத்துக்காக கெஞ்சிக் கொண்டிருக்காதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் ஏங்கி உயிரை விடுங்கள்,ஆனால் ஒருவரின் காதலுக்கு ஏங்கிச் சாவாதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் தனிமையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்,ஆனால் ஒருவரின் அன்பின் நிராகரிப்பற்காக தனிமையில் வாடாதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் மண்டியிடுங்கள்,ஆனால் ஒருவரின் உதாசீனத்துக்கு அடிபணிந்து மண்டியிடாதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் அதிலேயே வெந்து சாம்பாலாகுங்கள்,ஆனால் இந்த நேசத்திற்காக அதிலியே இருந்து வேகாதீர்கள் வெளியேறி விடுங்கள்.
இந்த அத்தனை வேதனைகளும்,
இந்த அத்தனைத் துயரங்களும்
அன்பிற்காக மட்டுமே நடக்கும்.
அந்த ஒரு தூய நரகத்தின் ராட்சஸனுக்காக மட்டுமே நிகழும்.
வேறு எதற்கும் இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டோம்.
வேறு எதற்கும் இவ்வளவு அழுதிருக்க மாட்டோம்.
வேறு எதற்கும் இவ்வளவு வலியை ருசித்திருக்க மாட்டோம்.
எல்லாம் அந்தப் பாழாய்ப் போன ஒற்றை அன்பிற்காகத் தான் இவ்வளவும்.. #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
*வாழ்க்கை...*
_*இவ்வளவு கனமாக இருக்குமென்று தெரியாது.*_
_*இவ்வளவு லேசாக இருக்குமென்று தெரியாது.*_
_*இவ்வளவு எளிதாக,*_
_*இவ்வளவு சிக்கலாக,*_
_*இவ்வளவு இருட்டாக,*_
_*இவ்வளவு வெளிச்சமாக,*_
_*இவ்வளவு காற்றோட்டமாக,*_
_*இவ்வளவு புழுக்கமாக,*_
_*இருக்குமென்று தெரியாது*_
_*காலை வணக்கம் 🙏🏻💐💞*_
_*இந்த நாள் இனிதாகட்டும் 🍫*_
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
அனுபவம் தத்துவம்
விட்டால்
பூமியைக் கூட
சுற்றி வந்து விடுவேன்..
ஆனால்
உன் தொப்புள் அழகில்
இடுப்பை சுற்றி வருவது
கடினம் தான்..
அழகால் கிறங்க வைக்குதடி..
கொஞ்சநாள் நல்லா பேசுவாங்க
அப்புறம் கடமைக்கு பேசுவாங்க
அப்புறம் பேசனுமேன்னு பேசுவாங்க
அப்புறம் கண்டுக்கமாட்டங்க
இதுக்கு எதுக்கு நீங்க கஷ்டப்பட்டு என்கிட்ட பேசனும் 😢
இதுக்கு ஆரம்பத்திலேயே பேசாமலே இருந்துக்கோங்க😏😏😏
எந்த நிலையில்லும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிட்டாது. அதிகமான கவலைகள் தான் உங்களைச் சேரும். ஏனெனில் உங்களது கடமைகளை நீங்கள் தட்டிக் கழிக்க பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து உங்கள் அமைதியை குலைத்து விடும். அதனால் உங்களால் முடிந்த மட்டும் பொறுப்புகளைத் திறமையுடன் நிறைவேற்றப் பாருங்கள்..
🌹
🦋சொல்ல🌺
🌺முடியாத🦋
🦋வரிகள்🌺
🌺சொல்லில்🦋
🦋முடியுராத🌺
🌺கவிதை🦋
🦋அவளை🌺
🌺வாசிக்க🦋
🦋தான்🌺
🌺நான்🦋
🦋தவிப்பில்🌺
🌺அவளே🦋
🦋 புதிரான🌺
🌺வாக்கியமான🦋
🦋மலரோ❣️
குறள்:915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்
இவ்வுலகில் மொழிகள்,
பல இருந்தாலும்.!
சில சமயங்களில்
நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மொழிகள்
பயன்படுவதில்லை..
தேவைப்படும் இடத்தில், மௌனத்தை கடைபிடிப்பதே சிறந்தது.!.
மௌனத்திற்கு சம்மதம், சம்மதமில்லை எனும் அர்த்தம் இருந்தாலும்.!
மௌனம்தான்
பெரும்பாலும் எவரையும் புண்படுத்தாது.!
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
*எட்டு மாதங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயக் கோயில்!*🌹
வடஇந்தியாவில் உள்ள மலைப்பாங்கான அழகிய ஊர் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலில் இருப்பது ஹிமாச்சல பிரதேசம். இது பனி மூடிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்கு மட்டுமல்லாது, பல கோயில்களுக்கும் பெயர் பெற்றது. சிந்த்பூர்ணி, திரிலோகிநாத், மாதா ஜ்வாலா ஜி, பீமாகாளி, நயனா தேவி போன்ற பல கோயில்கள் இங்கு உள்ளன. ஆனால், வருடத்தில் 4 மாதங்கள் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, மீதமுள்ள 8 மாதங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் ஒரு கோயிலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு கோயிலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்தியாவில் பல மர்மமான மற்றும் தனித்துவமான பல இடங்கள் உள்ளன. அவை வளமான வரலாற்றைக் கொண்டுள்ளன. ஹிமாச்சலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பாது கி லடி (Bathu ki ladi) கோயில்கள் அத்தகைய மர்மமான இடமாகும். பாது கோயில் பஞ்சாப்பின் ஜலந்தரிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மஹாராணா பிரதாப் சாகர் ஏரியில் உள்ள பாங் அணையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஒரு தீவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயில் வளாகத்தில் உள்ள பிரதான கோயிலைத் தவிர, எட்டு சிறிய கோயில்களும் இங்கு உள்ளன. அவை தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரு மலையில் உள்ள கற்களை போல காட்சி அளிக்கிறது. எனவே, இந்தக் கோயில் பாதுவின் சரம் (ஜபமாலை) என்று அழைக்கப்படுகிறது.
பகிர்வுஸ்ரீராமஜயம்
இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், இந்த ஆலயம் வருடத்தில் எட்டு மாதங்கள் ஜூலை முதல் பிப்ரவரி வரை தண்ணீருக்கு அடியில் மூழ்கி இருக்கும். அதன் பின்னர், மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்கு இடையில் மட்டுமே இக்கோயிலை தரிசிக்க முடியும். பாங் அணை ஏரியின் நீர் மட்டம் உயரும்போது, மீண்டும் இந்தக் கோயில் நீருக்கடியில் ஒரு பகுதியாக மாறுகிறது. இப்படிப் பல மாதங்கள் நீருக்குள் மூழ்கியிருந்தாலும் கோயிலின் அமைப்பில் பெரிய சேதம் எதுவும் ஏற்படுவதில்லை.
அதற்கு இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ள சக்தி வாய்ந்த பாது என்ற கல்தான் காரணம் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்தக் கோயிலுக்குள் கற்களில் செதுக்கப்பட்ட காளி தேவி மற்றும் விநாயகரின் உருவங்களை நீங்கள் காணலாம். கோயிலுக்குள் மகாவிஷ்ணுவின் சிலை அவரது ஆதிசேஷ நாகத்தின் மீது படுத்திருக்கும்படி இருப்பதைக் காணலாம். மழைக் காலத்தில் நீரில் மூழ்கிய இந்த கோயிலின் கோபுரத்தை மட்டுமே பார்க்க முடியும்.
இந்தப் பகுதியை ஆண்ட சில உள்ளூர் அரசர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஆனால், ஒருசிலர் இதை புராணக் கதாபாத்திரங்களான பாண்டவர்களுடன் இணைக்கின்றனர். பாண்டவர்கள் வனவாசத்தின்போது 'சொர்க்கத்திற்கான ஏணி'யை இங்கு கட்ட முயன்றதாக நம்பப்படுகிறது. இருப்பினும், ஒரே இரவில் இந்த படிக்கட்டுகளை அவர்கள் கட்ட வேண்டியிருந்ததால், அதை உருவாக்குவதில் வெற்றி பெற முடியவில்லை. இந்தக் கோயிலில் சொர்க்கத்திற்கு செல்லும் 40 படிக்கட்டுகள் என்று சொல்லப்படும் அமைப்பு இன்றும் உள்ளன.
மக்கள் படகு மூலம் இக்கோயிலை அடையலாம் மற்றும் கோயிலைச் சுற்றி 'ரென்சார்' (Rensar) என்று அழைக்கப்படும் ஒரு தீவு போன்ற அமைப்பு உள்ளது. அங்கு நீங்கள் வனத்துறையின் விருந்தினர் மாளிகையையும் காணலாம். அருகிலுள்ள விமான நிலையம் தரம்சாலாவில் உள்ள காகல் விமான நிலையம் ஆகும். அங்கிருந்து காங்க்ராவிலிருந்து, ஜவாலி அல்லது தமேதா கிராமம் வரை ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.🌹 #கடவுள் #அன்பே கடவுள்
*இராவணனும் மண்டோதரியும் முதன்முதலில் சந்தித்த இடம் எது தெரியுமா?*
தெற்காசிய கண்டத்தில் உள்ள அனைவருமே இலங்காதிபதி இராவணனை பற்றி நன்கு அறிவர். இராமாயணத்தில் இராமர் புகழ் எந்தளவிற்கு உள்ளதோ, அதே அளவில் இராவணனுக்கும் மதிப்பு உள்ளது. இராவணன் தீயவனாக இருந்தாலும் அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன், இசையில் மிகப்பெரிய கலைஞன், அறிவிற்கும் வலிமைக்கும் பெயர் பெற்றவன். ராமாயணத்தில், மற்ற பெண்களை விட ராவணனின் மனைவி மண்டோதரி பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராவணனின் மனைவி மண்டோதரி பக்தியுள்ள பெண்.
மண்டோதரி அசுர மன்னன் மாயாசுரன் மற்றும் ஹேமாவின் மகள். திருமணத்திற்குப் பிறகும் தங்கள் கன்னித்தன்மை ஒருபோதும் மாறாது என்று வரம் பெற்ற பஞ்ச கன்னியர்களில் இவரும் ஒருவர். மண்டோதரி ராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்துள்ளார். ராவணன் மனைவி மண்டோதரி பலமுறை ராவணனுக்கு அறிவுரை கூறி, சிறை வைக்கப்பட்ட சீதையை திருப்பி அனுப்பி விடுமாறு கூறினாள்.
ராமர் இலங்கைக்கு படையெடுத்து வரும்போது , அவருடன் சமாதானமாக போகுமாறு ராவணனுக்கு அறிவுறுத்தினாள். மண்டோதரி கற்பில் சிறந்தவள், ஹனுமான் முதன்முதலில் இலங்கைக்கு சென்றபோது, முதலில் மண்டோதரியை கண்டு 'இவர்தான் சீதையோ' என்று எண்ணினார். அதன் பிறகு தான் ராமரின் மனைவியான சீதை நிச்சயம் இவ்வளவு வசதி மிகுந்த அரண்மனையில் தங்க மாட்டாள் என்ற முடிவுக்கு வந்தார்.
ராவணன் மற்றும் மண்டோதரி நல்ல தம்பதிகளாக இருந்தனர். இவர்கள் முதலில் சந்தித்தது ஒரு கோயிலில் தான். இராவணனும் மண்டோதரியும் சந்தித்த கோயிலில் சிவபெருமானை வழிபடும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. மண்டோதரி சிவபெருமானின் தீவிர பக்தையாக இருந்தாள். தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று மீரட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோவிலில் சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளார்.
பகிர்வுஸ்ரீராமஜயம்
இந்த கோயிலில் தான் ராவணனும் மண்டோதரியும் முதல் முறையாக சந்தித்தனர். இந்தக் கோயிலில், மண்டோதரி கடுமையாக தவமிருந்தார். மண்டோதரியின் தவத்தை கண்டு மெச்சிய சிவ பெருமான் அவளுக்கு வரம் தருவதாக உறுதியளித்தார். அப்போது மண்டோதரி சிவபெருமானிடம் தனது கணவர் சகல சாஸ்திரங்களில் தேர்ந்தவராகவும், உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டாள். அந்த வரத்தின் விளைவால் மண்டோதரிக்கு ராவணன் கணவனாக அமைந்தான். மண்டோதரியும் இராவணனும் முதன்முதலாக இந்த கோவிலில் சந்தித்துக் கொண்டனர் என்று புராண கதைகள் கூறுகின்றன.
இந்த கோயில் பிற்காலத்தில் மராத்தியர்களால் புதுப்பிக்கப்பட்டது. எனவே கோயிலின் விமானமும் நுழைவாயிலும் மராட்டிய பாணியில் கட்டப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்த இடத்தில் ஏராளமான வில்வ (பில்வ) மரங்கள் காணப்பட்டதால் இக்கோவில் ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோயில் சிவன் மற்றும் மாதா கௌரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. இங்குள்ள சிவபெருமானை முழு பக்தியுடன் வணங்கி, 40 நாட்கள் தீபம் ஏற்றி வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஆவணி மாதத்தில், ஜலாபிஷேகத்திற்காக இங்கு ஏராளமான பக்தர்கள் கூடி இறைவனை வழிபடுகிறார்கள்.🌹 #அன்பே கடவுள் #கடவுள்
*தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா* ...!?
இந்த விஷயத்தைப் பற்றி *சிவபெருமானுக்கும் சித்தர் பெருமானுக்கும் நடந்த உரையாடல்கள்* பற்றி
தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
😟😯😟😯😟
ஒரு பழமொழி வாயிலாக இதனை அறிவோம்.
அதாவது....
*இறைக்கிற ஊற்றே சுரக்கும்* (அல்லது 'இறைத்த கிணறு சுரக்கும்') என்ற பழமொழியின் பொருள்: ஒரு கிணற்றிலிருந்து நீரை அள்ள அள்ள (இறைக்க இறைக்க) புதிய நீர் ஊற்று சுரந்து கொண்டே இருக்கும்.
*விளக்கம்* அல்லது
*பொருள்* :
செல்வத்தை அல்லது அறிவைப் பிறருக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தால் ( அதாவது தானம் செய்தால் ), அது குறையாமல் மேலும் மேலும் பெருகும்.
*இதில் அன்னதானமும் அடங்கும்.*
*பயன்பாடு* : கஞ்சத்தனம் செய்யாமல் கல்வி, செல்வம் மற்றும் நற்பண்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த இது பயன்படுத்தப்படுகிறது.
"இறைக்க ஊறும் மணற்கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம்" - அள்ள அள்ள மணற்கேணியில் நீர் சுரப்பது போல, கொடுக்கக் கொடுக்க செல்வம் சேரும் என்பதாகும்.
இனி மேற்கொண்டு படிப்போம்.....
👁️👁️👁️👁️👁️
இறைக்கும் கேணி தான் சுரக்கும்.
ஒரு விவசாயி கடுமையான பஞ்சத்தில், சோற்றுக்கு வழி இல்லாமல் தனது நிலம் தரிசாக கிடப்பதை பார்த்து கண் கலங்கினான்... அப்போது அவன் கண் முன்னே ஒரு சித்தர் பாத யாத்திரை செல்வதை கண்டு வேகமாக அவரிடம் ஓடியவன் அந்த சித்தரின் விழுந்து கும்பிட்டு தாங்கள் எனக்கொரு உதவி வேண்டும் என்றான்.
"கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லையப்பா" என்று சித்தர் கூற...
சாமி நான் கேட்கும் உதவி... இப்போது நான் கடுமையான பஞ்சத்தில் இருக்கிறேன், எனது மனைவி மக்கள் எல்லாம் பசியால் தினம் அழும் சத்தம் என் சரீரமே கூசுகிறது.
"சரிப்பா அதற்கு நான் என்ன செய்ய முடியும்!"
எனக்காக நீங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.
"என்ன? பிரார்த்தனை!"
அதாவது என் ஆயுள் முழுவதும் எனக்கு எவ்வளவு உணவு கிடைக்குமோ அத்தனையும் இப்போதே கொடுக்கும் படி நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும். "
அட! அப்படி நான் பிரார்த்தனை செய்தால் உனது ஆயுள் சீக்கிரமாக முடிந்துவிடுமே!"
பரவாயில்லை குருவே! என் மனைவி மக்கள் வயிறார உணவு உண்டாலே போதும் என்றான்.
அவன் கேட்ட வரத்தால் அதிர்ந்துபோன அந்த சித்தர் சரி உன் விருப்பமே... என்று கூறி அப்படியே அவன் நிலத்தில் அமர்ந்து ஈசனிடம் அவனுக்காக பூஜித்து பிரார்த்தனை செய்கிறார்,
சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த சித்தர் வீட்டிற்கு சென்று பார் உனக்கொரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்றார்.
உடனே காற்றை விட வேகமாக வீட்டிற்கு வந்தவன் அவன் குடிசையில் "அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், என்று பார்க்கும் இடமெல்லாம் உணவு பொருட்களாக நிரம்பி வழிந்தது.
அவன் மனைவி மக்கள் முகத்தில் புன்னகையும் ஆச்சரியமும் ஒன்றாய் வர... பார்த்தீர்களா அதிசயத்தை ஈசன் கண் திறந்துவிட்டார். எடுக்க எடுக்க உணவு வந்துகொண்டே இருக்கிறதே. பசி அடங்கும் வரை ஆனந்தமாய் உண்டனர்,
மாதங்கள் பல செல்ல...
மீண்டும் அதே வழியாக சித்தர் திரும்ப... "இந்த இடத்தில் ஒரு விவசாயிற்கு பிரார்த்தனை செய்தேனே! அவன் பேராசையில் இறந்துவிட்டானா! அல்லது... என்று... அக்கம் பக்கம் பார்க்கிறார்.. அப்போது அந்த விவசாயி குடிசையிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக உணவு பொருட்களை எடுத்து செல்வதை கண்டு என்ன இது விந்தை! அவன் விதி இன்னுமா முடியவில்லை! கிடைத்த உணவை இவன் தர்மம் அல்லவா செய்கிறான்! ஒன்றும் புரியவில்லையே.,, என யோசித்தவர் உடனே ஈசனிடம் மறுபடியும் பூஜித்து பிரார்த்தனை செய்து இதற்கான விளக்கத்தை கேட்க, ஈசன் சொல்கிறார்...
"சித்தரே நீங்கள் என் நேசமிகு மனிதர், நீங்கள் கேட்ட பிரார்த்தனையை நான் நிறைவேற்றி அந்த விவசாயிற்கு அவனுடைய ஆயுள் வரைக்கும்... உணவை தந்தேன், ஆனால் அவனோ அதை வைத்துக்கொண்டு என்ன செய்தான் தெரியுமா!
"தன்னை போல் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு அவனுக்கு கிடைத்த உணவு பொருட்களை தர்மம் செய்துவருகிறான், அவர்களின் வாழ்த்துதான் அவனை இன்னமும் வாழ வைக்கிறது, அவன் நிறுத்தும் வரை என்னாலும் நிறுத்த இயலாது" என்றார்.
❤️ "இறைக்கும் கேணிதான் சுரக்கும்.... ❤️
❤️கொடுக்கும் கைதான் மணக்கும்."❤️
❤️ தானத்தில் சிறந்த தானம் "அன்னதானம்"....!❤️
🙏👏🏼🙏👏🏼🙏 #கடவுள் #அன்பே கடவுள்
*தேனி மாவட்டம் மேகமலை வழிவிடும் முருகன், காவல் காக்கும் கௌமாரி அம்மன்* ....
தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தூரத்துக்கு தேயிலைத் தோட்டங்கள். மேகமலை செல்ல சின்னமனூரிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி இருக்கிறது. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்களுக்குக் கொஞ்சம் கடினம்தான். வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் கார் ஓட்டிப் பழக்கம் இல்லாதவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஜீப் போன்ற வாகனங்கள் பயணிக்க உதவும்.
இப்படிப்பட்ட கடினமான மலைப்பயணத்தில் நாம் முதலில் தரிசிப்பதே, ‘வழிவிடும் முருகன்’ திருக்கோயிலைத்தான். இவரை தரிசித்துச் சென்றால் மலைப்பாதையில் வரும் ஆபத்துகளைப் போக்கிப் பயணத்தைப் பாதுகாப்பாக ஆக்குவார் என்பது நம்பிக்கை.
😟😯😟😯😟
கோடைகாலத்துக்குச் சுற்றுலாவும் செல்ல வேண்டும்... அதேவேளையில் இறை தரிசனமும் செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். அதில் இருந்து விலகி கொஞ்சம் இயற்கையோடு சுத்தமான காற்றை சுவாசிப்பதோடு மலை கிராம மக்களின் தெய்வங்களை தரிசிப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அப்படி ஒரு தலம் தான் மேகமலை.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது, மேகமலை. சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதி எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் மலை என்பதால் ‘மேகமலை’ என்றானது.
முற்காலத்தில் மலைமேலே உள்ள டீ எஸ்டேட்களுக்கு அடிவார கிராமங்களிலிருந்து மக்கள் சென்று வருவார்கள். ஆங்கிலேயர்களின் காலத்தில், மலையில் பாதை அமைக்கும் போது ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பணியைச் செய்யமுடியாமல் தொடர்ந்து தடைப்படவே அந்தப் பாறை தெய்வ சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து அதை வணங்கத் தொடங்கினர் மக்கள். 1983-ம் வருடம், சித்திரா பௌர்ணமியன்று இந்த இடத்தில் முருகன் சிலையுடன் சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து, முருகனுக்கு, ‘வழிவிடும் முருகன்’ என்ற பெயரும் வைத்து வழிபடத் தொடங்கினார்கள் ஊர் மக்கள்.
கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள்.
இங்கே ஒரு வித்தியாசமான வேண்டுதல் உண்டு. ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பது ஐதிகம்.
வழிவிடும் முருகன் கோயிலின் அருகே, மலைக்கு மேல் போகிற வாகனங்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று வேண்டிக்கொண்டு, பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள்.
*ஒரு த்ரில்லிங்கான பயணம்*
மேகமலை முருகன் கோயிலை அடையப் பல கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை வழியாகப் பயணிக்க வேண்டும். போகப் போக 20 அடிகளாகக் குறுகிவிடுகிறது பாதை. பேருந்து மெள்ள மெள்ள ஊர்ந்துதான் செல்லவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டும்தான் செல்ல முடியும். சாலையை ஒட்டி காணப்படும் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளும் வனத்தின் அழகும் நம்மை ஆச்சரியப்படவைப்பதுடன், சற்றே அச்சம் கொள்ளவும் வைக்கின்றன. ஆனால், வழிவிடும் முருகப்பெருமானின் கருணையால், இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார்கள் ஊர் மக்கள்.
சுமார் ஒரு மணி நேர மலைப் பாதைப் பயணத்துக்குப் பிறகு மேகமலையின் தொடக்கத்திலேயே நம்மை வரவேற்கிறது அருள்மிகு கௌமாரியம்மன் கோயில். இங்குள்ள கௌமாரி என்பவள் அம்பிகையின் அம்சமாகத் தோன்றிய சப்தகன்னியரில் ஒருத்தி. முருகனின் சக்தி என்று போற்றப்படுபவள்.
ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலையைச் சரி செய்து தேயிலைத் தோட்டம் அமைக்க, தேனியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்களை இந்த மலைக்கு அழைத்து வந்தார்கள். தங்கள் சொந்தபந்தங்களை, ஊரை, சாதிசனத்தை விட்டு விட்டு இந்தக் குளிரிலும், காட்டு விலங்குகளுக்கு மத்தியிலும் வாழ்ந்த அந்த மக்கள், தாங்கள் சாமி கும்பிட ஒரு கோயில் வேண்டும் எனக் கேட்டார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஆங்கிலேய அதிகாரியான டைமண்ட் என்பவர், மக்களின் தெய்வமான கௌமாரி அம்மனுக்கு இந்தக் கோயிலைக் கட்டிக்கொடுத்தார். அன்றுமுதல் இன்றுவரை மக்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை கௌமாரி. இங்குள்ள மக்கள் சாதி பார்ப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால் போதும், நேராக இந்தக் கோயிலுக்கு வந்து தாலி கட்டி எளிமையாகக் கல்யாணத்தை முடித்துக்கொள்வார்கள்.
சித்திரையில் திருவிழா களைகட்டும். அப்போது, மேகமலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கே கூடிவிடுவார்கள். இந்த மக்களுக்கு நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் துணையாக இருப்பவள் இந்தக் கௌமாரிதான்.
கௌமாரியம்மனை வழிபட்டுவிட்டு, தொடர்ந்து மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு போன்ற பகுதிகளுக்கும் சென்று இயற்கையெழிலைக் கண்குளிரக் காணலாம்.
சின்னமனூரிலிருந்து சில சிற்றூர்களைக் கடந்து சென்றால், தென்பழநி வனப்பகுதி செக்போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம், சுற்றுலா செல்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான், வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.
வாய்ப்பிருப்பவர்கள் மேகமலை சென்று வழிவிடும் முருகனையும் காத்தருளும் கௌமாரியையும் தரிசனம் செய்வதோடு இயற்கை எழிலையும் கண்டு ரசித்து வாருங்கள். இந்தக் கோடையில் மனமும் உடலும் குளுமையாகும்.
தெரிந்து கொள்வோம்....
🙏🙏🙏🙏🙏
#அன்பே கடவுள் #கடவுள் #வரலாற்றில் இன்று
*கிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதி*
இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள், தாமிரபரணிக்கு ஒரு விசேஷம் உண்டு. தன் இரு கரைகளிலும் ஏராளமான சிவ, விஷ்ணு தலங்களைக்கொண்டிருக்கும் திருநதி இது.
கங்கையைப் போல், காவிரியைப்போல் சமயப் பெருமை படைத்த நதியே தாமிரபரணியாகும். இதனை தட்சிண கங்கை என்று சொல்வதும் உண்டு.
தாமிரபரணி கரையோரத்தில் ஒன்பது சிவன்கோயில்கள் உண்டு. அதை “நவ கயிலாயம்“ என்பார்கள். நவகயிலாயத்துக்கு இணையாக ஒன்பது திருப்பதிகள் உண்டு. இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள்.
*நவதிருப்பதிகளில் முதலாவது ஸ்ரீவைகுண்டம்* இங்குள்ள மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன், உற்சவர் கள்ளப்பெருமாள், தாயார் முறையே வைகுந்த வல்லி, பூதேவி என்று சொல்லப்படுவார். ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம்.
*இரண்டாவது வரகுணமங்கை* வீற்றிருந்த கோலத்தில் விஜயாசனப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். வரகுணவல்லி என்பது தாயாரின் பெயர். வரகுணமங்கை தாயார் உபயநாச்சியார். இந்தத் தலம் பரிகார தலமாகும்.
⬆️⬇️⬆️⬇️⬆️
*மூன்றாவது திருப்புளியங்குடி* புஜங்க சயனத்தில் மூலவர் காய்சேன வேந்தன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மலா்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார் இவர் தேவியர். இது புதனுக்குரிய பரிகார தலமாகும்.
*நான்கு, ஐந்தாவது தலங்கள் திருத்தொலைவில்லி மங்கலம்* இதனை “இரட்டைத் திருப்பதி“ என்பார்கள். இரண்டு பெருமாள் கோயில்கள் உண்டு. சீனுவாசன் (தேவபிரான்). அரவிந்தரோசனன் (செந்தாமரைக் கண்ணன்) ஆகிய இருவரும் முறையே நின்ற வீற்றிருந்த கோலங்களில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றனர். இது ராகு-கேது பரிகாரத் தலமாகும்.
*ஆறாவது திருக்குளத்தை எனப்படும் பெருங்குளமாகும்* இங்குள்ள சீனிவாசன் மற்றும் அரவிந்தரோசனன் நின்ற கோலத்திழல் சேவை சாதிக்கிறார்கள். அலமேலுமங்கையார், குழந்தை வல்லி என்பன தாயார் திருநாமங்கள். இது சனி பரிகார தலம்.
⬆️⬇️⬆️⬇️⬆️
*ஏழாவது திருக்கோளூர்* இங்கு வைத்தமானிதி பெருமாள் கோயிலில் வைத்திநிதி பெருமாள், நிஷேபவித்தன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் குமுதவல்லி, கோளூர்வல்லி எனப்படுவர். இது செவ்வாய்க்குரியபரிகார தலமாகும்.
*எட்டாவது தென்திருப்பேரை எனப்படும் இத்தலம் திருப்பொறை எனப்படுகிறது* மகரநெடுங்குடைகாதன் மற்றும் நிகரில் முகில்வண்ணன் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் முறையே குழக்காதவல்லி, திருப்பேறை நாச்சியார் எனப்படுவர். இது சுக்கிரன் பரிகார தலமாகும்.
*ஒன்பதாவது திருத்தலம் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியாகும்* இது நம்மாழ்வார் அவதாரத் தலம். ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்துநின்றபிரான் என்றெல்லாம் போற்றப்படும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்பன தேவியின் திருநாமங்கள். இது குரு பரிகாரத் தலமாகும்.
இந்த ஒன்பது ஆலயங்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது “நவகருட சேவை“ என்பது விசேஷமாகச் சொல்லப்படும்.
திருநாங்கூர் கருட சேவையைப் போல மிக விசேஷமானது நவகருட சேவையாகும். நவகருட சேவையை தரிசிக்க கிரகதோஷங்கள் அனைத்தும் விலகுதல் உறுதி என்பது அடியவர்கள் அனுபவித்ததில் உணர்ந்த நம்பிக்கைகளில் ஒன்றாகும்.
🙏🙏🙏🙏🙏 #கடவுள் #கடவுள் #அன்பே கடவுள்
*📖✍️
`🌍 உலக வரலாற்றில் ஏப்ரல் 2 – முக்கிய நிகழ்வுகள்`
1. 1513 – ஜுவான் பொன்ஸ் டி லியோன் (Juan Ponce de León) புளோரிடாவை கண்டுபிடித்தார்
ஸ்பெயின் ஆய்வாளர் பொன்ஸ் டி லியோன், வட அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியை கண்டறிந்தார். இது ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேற வழி வகுத்தது.
2. 1792 – அமெரிக்க நாணய அமைப்பு உருவாக்கம்
United States Coinage Act மூலம் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நாணயமாக டாலர் (Dollar) அறிமுகமானது.
3. 1800 – லுட்விக் வான் பீத்தோவன் (Beethoven) முதல் Symphony வெளியீடு
புகழ்பெற்ற ஜெர்மன் இசையமைப்பாளர் பீத்தோவன் தனது Symphony No.1 ஐ வெளியிட்டார்.
4. 1845 – ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen) முதல் கதை வெளியீடு
புகழ்பெற்ற டேனிஷ் எழுத்தாளர் Andersen தனது முதல் கதைகளை வெளியிட்டார்.
5. 1872 – சாமுவேல் மோர்ஸ் (Samuel Morse) மறைவு
மோர்ஸ் கோடு (Morse Code) கண்டுபிடித்தவர் மறைந்தார். தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கு இது முக்கிய பங்கு வகித்தது.
6. 1917 – அமெரிக்கா முதல் உலகப்போரில் சேர தீர்மானம்
President Woodrow Wilson, ஜெர்மனிக்கு எதிராக போரில் சேர காங்கிரசிடம் கோரிக்கை வைத்தார்.
7. 1932 – சார்ல்ஸ் ஆகஸ்டஸ் லிண்ட்பர்க் சம்பவம்
பிரபல விமானி Charles Lindbergh அவர்களின் குழந்தை கடத்தப்பட்டது. இது அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
8. 1956 – “As the World Turns” தொடர் தொடக்கம்
உலகின் நீண்டநாள் ஓடிய தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான இந்த அமெரிக்க soap opera தொடங்கியது
9. 1982 – ஃபாக்லாந்து போர் தொடக்கம்
அர்ஜென்டினா, பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த Falkland தீவுகளை கைப்பற்றியது. இதனால் UK vs Argentina போர் தொடங்கியது.
10. 2005 – போப் ஜான் பால் II மறைவு
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முக்கிய தலைவரான Pope John Paul II மறைந்தார். உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
11. 2011 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்
United Nations, ஏப்ரல் 2-ஐ World Autism Awareness Day ஆக அறிவித்தது. சமூக விழிப்புணர்வை உயர்த்த இது முக்கிய நாள்.
12. 2014 – மரண தண்டனைக்கு எதிரான சர்வதேச நாள் (Awareness movements வளர்ச்சி)
மனித உரிமை அமைப்புகள் இந்த நாளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியது.
13. 2020 – COVID-19 உலகளாவிய தாக்கம் அதிகரிப்பு
ஏப்ரல் 2க்கு அருகில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிக அதிகரித்து, பல நாடுகள் lockdown அறிவித்திருந்தன.
`🇮🇳 இந்திய வரலாற்றில் ஏப்ரல் 2 – முக்கிய நிகழ்வுகள்`
1. 1877 – சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் தொடக்கம் (பின்னணி நிகழ்வு)
இந்த காலகட்டத்தில் விவேகானந்தர் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து, சமூகவியல் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை பரப்பத் தொடங்கினார்.
2. 1902 – கல்வி மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் வளர்ச்சி
இந்த காலத்தில் இந்தியாவில் பல கல்வி இயக்கங்கள் உருவாகி, பெண்கள் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தம் வலுவடைந்தது.
3. 1917 – இந்திய சுதந்திர இயக்கத்தில் புதிய கட்டம்
மகாத்மா காந்தி இந்தியாவில் சத்தியாகிரக இயக்கத்தை விரிவுபடுத்தத் தொடங்கிய காலகட்டம் (Champaran இயக்கத்திற்கு முன்னோட்டம்).
4. 1930 – உப்பு சத்தியாகிரகத்தின் தாக்கம் அதிகரிப்பு
மார்ச் 12-ல் தொடங்கிய டாண்டி பயணத்தின் தாக்கம் ஏப்ரல் தொடக்கத்தில் நாடு முழுவதும் பரவியது. ஏப்ரல் 2க்குள் பல இடங்களில் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் இணைந்தனர்.
5. 1942 – குவிட் இந்தியா இயக்கத்திற்கான தயாரிப்புகள்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் அதிகரித்து, ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் Quit India Movement-க்கு முன்பட்ட சூழல் உருவானது.
6. 1950கள் – இந்தியாவில் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி ஆரம்பம்
சுதந்திரத்திற்குப் பிறகு, ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் இந்தியா தொழில் மற்றும் வேளாண்மை வளர்ச்சியில் முன்னேற ஆரம்பித்தது.
7. 1970கள் – பசுமைப் புரட்சி (Green Revolution) தாக்கம்
இந்த காலத்தில் இந்தியாவின் விவசாய உற்பத்தி அதிகரித்து, உணவு தன்னிறைவு நோக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
8. 1991 – பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முன்பட்ட சூழல்
1990களின் ஆரம்பத்தில் இந்தியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. இதுவே பின்னர் 1991 Economic Reforms-க்கு வழிவகுத்தது.
9. 2000கள் – தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி
இந்தியாவில் IT துறை வேகமாக வளர்ந்து, உலகளாவிய அளவில் இந்தியா முக்கிய மையமாக மாறியது.
10. 2011 – உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் (இந்தியாவிலும் கடைபிடிப்பு)
ஐ.நா அறிவித்த இந்த நாள் இந்தியாவிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் கடைபிடிக்கப்படுகிறது.
11. 2015 – டிஜிட்டல் இந்தியா மற்றும் சமூக முன்னேற்ற திட்டங்கள்
இந்த காலகட்டத்தில் Digital India போன்ற திட்டங்கள் மக்கள் வாழ்க்கையை மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டன.
12. 2020 – COVID-19 Lockdown (இந்தியாவில் தீவிர நிலை)
ஏப்ரல் 2, 2020 அன்று நாடு முழுவதும் lockdown நடைமுறையில் இருந்தது. மக்கள் வீட்டிலேயே இருந்து நோய் பரவலைத் தடுக்க முயற்சி செய்தனர்.
*🇮🇳 ஏப்ரல் 2 – இந்திய பிறப்புகள்*
1. அஜய் தேவ்கன் (Ajay Devgn) – 1969
பிரபல பாலிவுட் நடிகர். “Singham”, “Drishyam” போன்ற திரைப்படங்களால் தேசிய விருதுகள் பெற்றவர்.
2. கபில் சர்மா (Kapil Sharma) – 1981
இந்தியாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். “The Kapil Sharma Show” மூலம் புகழ்பெற்றவர்.
3. பத்மா சுப்பிரமணியம் – 1943
புகழ்பெற்ற பாரதநாட்டிய நடனக் கலைஞர், ஆராய்ச்சியாளர். இந்திய கலாச்சாரத்தை உலகளவில் பரப்பியவர்.
4. மகேஷ் பாட்ட் (Mahesh Bhatt) – 1948
இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். பல சமூக கருத்துக்களைக் கொண்ட படங்களை உருவாக்கியவர்.
5. அனிதா ஹசனந்தானி – 1981
இந்திய தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை. பல பிரபல தொடர்களில் நடித்துள்ளார்.
6. பிரசாந்த் (Actor Prashanth) – 1973
தமிழ் திரைப்பட நடிகர். 1990களில் முன்னணி ஹீரோவாக விளங்கியவர்.
7. சுசிலா நாயர் – 1914
மகாத்மா காந்தியின் நெருங்கிய துணைவர் மற்றும் சுகாதார அமைச்சர். சமூக சேவையில் முக்கிய பங்கு.
8. ரமேஷ் குமார் (Sports Personality) – 1980கள்
இந்திய விளையாட்டு துறையில் பங்களிப்பு செய்தவர்
9. மனோஜ் மிஸ்ரா – அரசியல் தலைவர்
இந்திய அரசியலில் செயல்பட்டவர்.
*⚰️ ஏப்ரல் 2 – இந்திய இறப்புகள்*
1. கமலா நேஹ்ரு – 1936
ஜவஹர்லால் நேஹ்ருவின் மனைவி. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்.
2. ராஜ்குமார் (Dr. Rajkumar) – 2006
கன்னட சினிமாவின் மிகப்பெரிய நடிகர். இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம்.
📖✍️ #இந்திய வரலாற்றில் இன்று #வரலாற்றில் உண்மை தெரிந்துகொள்வோமா #வரலாற்றில் இன்று
💫💕💫 *இதமாகட்டும் இரவுகள்* 💫💕💫 #இரவு வணக்கம் #இரவு வணக்கம்





![🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - *வாழ்க்கை வ்வளவு கனமாக இருக்குமென்று தரியாது வ்வளவுலேசாக இருக்குமென்று தரியாது வ்வளவு எளிதாக வ்வளவு சிக்கலாக 9]|61616!61 ருட்டாக வெளிச்சமாக இவ்வளவு வ்வளவு காற்றோட்டமாக புழுக்கமாக வ்வளவு ருக்குமென்று தெரியாது _ *காலைவணக் கம் இனிதாகட்டும் *இந்த நாள் *வாழ்க்கை வ்வளவு கனமாக இருக்குமென்று தரியாது வ்வளவுலேசாக இருக்குமென்று தரியாது வ்வளவு எளிதாக வ்வளவு சிக்கலாக 9]|61616!61 ருட்டாக வெளிச்சமாக இவ்வளவு வ்வளவு காற்றோட்டமாக புழுக்கமாக வ்வளவு ருக்குமென்று தெரியாது _ *காலைவணக் கம் இனிதாகட்டும் *இந்த நாள் - ShareChat 🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - *வாழ்க்கை வ்வளவு கனமாக இருக்குமென்று தரியாது வ்வளவுலேசாக இருக்குமென்று தரியாது வ்வளவு எளிதாக வ்வளவு சிக்கலாக 9]|61616!61 ருட்டாக வெளிச்சமாக இவ்வளவு வ்வளவு காற்றோட்டமாக புழுக்கமாக வ்வளவு ருக்குமென்று தெரியாது _ *காலைவணக் கம் இனிதாகட்டும் *இந்த நாள் *வாழ்க்கை வ்வளவு கனமாக இருக்குமென்று தரியாது வ்வளவுலேசாக இருக்குமென்று தரியாது வ்வளவு எளிதாக வ்வளவு சிக்கலாக 9]|61616!61 ருட்டாக வெளிச்சமாக இவ்வளவு வ்வளவு காற்றோட்டமாக புழுக்கமாக வ்வளவு ருக்குமென்று தெரியாது _ *காலைவணக் கம் இனிதாகட்டும் *இந்த நாள் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_214390_16cbcb5b_1775093212866_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=866_sc.jpg)






