இட்லி தினத்தில்.....
ஒரு விரைவான tasty சட்னி...
பெரும்பாலான ரயில் பயணங்களில் கொடுக்கப்படுவது #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🤔 *சிந்தனை துளிகள்* 🤔
பேசலையா???
*கெஞ்சாதீங்க!*
மதிக்கலையா???
*விட்டு விலகிருங்க!*
புரிஞ்சுக்கலையா???
*அமைதியாயிருங்க!*
தப்பு பண்ணுனா
*கத்துக்கோங்க!*
என்ன வந்தாலும்,
*சமாளிங்க!*
நேரத்துக்கு
*சாப்பிடுங்க!*
நேரத்துக்கு
*தூங்குங்க!*
🍁🪻🍁🪻🍁🪻🍁🪻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
_*Motivation*_
*_அனுபவம் இருந்தா போதுமா? ஒரு 'Master Leader'ஆக வேண்டாமா? மேஜிக் ஃபார்முலா இதோ!_*
* 🌹🌹🌹தெளிவான எதிர்பார்ப்புகளை உங்கள் ஊழியர்களிடம் தெரிவிக்கும் போது அவர்கள் குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்பதையும் தாங்கள் வெற்றியாளர்கள் (Leadership skills) என்ற உணர்வை அனுபவிப்பதை நீங்கள் சாத்தியமாக்குகிறீர்கள்.
வெற்றி பெறுவதற்கான 5 காரணிகள்
எல்லைக் கோட்டைக் தாண்டிச் சென்று வேலையில் வெற்றியாளராக உணர்வதற்கு ஒரு ஊழியருக்கு 5 விஷயங்கள் தேவைப்படுகின்றன.
1. தெளிவான இலக்குகள் மற்றும் நோக்கங்கள்.
இவற்றைப்பற்றி முன் கூட்டியே பேசப்பட்டு இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட எல்லோரும் அவற்றை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.
2. தெளிவான அளவீடுகள் மற்றும் தரங்கள்
தன்னுடைய வெற்றி அளவிடப்படும் என்பதை அந்த ஊழியர் அப்போது அறிந்து கொள்வார்.
3. தெளிவான காலக்கெடுக்கள்
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை எப்போது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அந்த ஊழியருக்கு தான் தெரியும்.
4.வெற்றி அனுபவங்கள்
இந்த ஊழியர் தனக்கான வேலைக்கான காலக்கெடுவுக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற தரத்திற்கு ஏற்ப வேலையை முடிக்க வேண்டும்.
5. அங்கீகாரம் மற்றும் வெகுமதிகள்
ஒரு வேலையை ஒருவர் வெற்றிகரமாக முடிக்கும் போது அவருடைய மேலதிகாரி அதை அங்கீகரிக்க வேண்டும். முடிந்தபோது வெகுமதியும் அளிக்கப்பட வேண்டும்.
உங்களால் பார்க்க முடியாத இலக்கை உங்களால் குறிவைத்துத் தாக்க முடியாது என்ற கூற்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இலக்குகளும், நோக்கங்களும் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனவோ, அவற்றை அடைவது எளிதாக இருக்கும். தாங்கள் வெற்றியாளர்கள் என்ற உணர்வு எவ்வளவு அதிகமாக ஏற்படுகிறதோ, அவர்களுடைய சுய மதிப்பு அதிகரிக்கிறது.
பல மேலாளர்கள் நேரம் பற்றாக்குறை காரணமாக வேலையைப் பற்றி ஊழியர்களிடம் எந்த விவரமும் பேசாமல் வேலையை ஒப்படைக்கும் தவற்றை செய்கின்றனர். அது நிறைவேற்றப்படாமல் இருக்கும் போதோ அல்லது மோசமாக செய்துமுடிக்கப்பட்ட போதோ அந்த ஊழியர் தகுதியற்றவர் என்று பழி சுமத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட வேலை சிறப்பாகச் செயல்படும் போது அது எத்தகைய விளைவுகளைக் கொடுக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
மேலும், கண்காணிப்பது என்பது வேலை பார்ப்பவரின் சுய மதிப்பை வெகுவாக அதிகரிக்கும். எந்தெந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் அவை சிறப்பாக முடிக்கப்பட்டால் எத்தகைய விளைவுகளைப் பெற்றுத்தரும். அவற்றுக்கான காலக்கெடுகள் என்ன ஆகியவற்றை உங்கள் கீழ் பணியாற்றுகின்ற ஒவ்வொருவரும் துல்லியமாக அறித்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது உங்களின் மிக முக்கியப் பொறுப்புகளில் ஒன்று.
எதிர்பார்ப்புகளை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும். வேலையை உங்கள் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும். இதை நீங்கள் அவருக்குத் தெளிவாக விவரிக்காமல் விட்டால், நீங்கள் வேலை செய்வதில் உள்ள அவரின் மகிழ்ச்சியை பறித்துவிடுவீர்கள். இதைச் செய்யாமல் இருப்பதால்தான் வேலை குறித்து அதிருப்தி ஏற்பட காரணமாகிறது.நீங்கள் ஒருவரிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு முற்றிலும் மறந்துவிடுவதற்கு பதிலாக, அந்த வேலை எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஒரு முறையான கால அட்டவணையை நீங்கள் அமைத்துக் கொள்ளும் போது அந்த வேலை எவ்வளவு முக்கியமானது என்பதை ஊழியர் புரிந்து கொள்வர்.
அடுத்த முறை நீங்கள் ஒரு வேலையை ஒருவரிடம் ஒப்படைக்கும் போது என்ன செய்யப்படவேண்டும், எந்த தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் போன்ற விவரங்களை கலந்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கி நீங்கள் கொடுக்கின்ற இலக்குகள், நோக்கங்களுக்கு அவர் உடன்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பிறகு அவரின் சொந்த வார்த்தைகளில் நீங்கள் கூறிய விவரங்கள் பற்றிக் கேளுங்கள். இதன்மூலம் அவர் எவ்வளவு தெளிவாக உங்கள் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டுள்ளார் என்பதை இது உறுதி செய்யும். ஒரு மேலாளர் என்ற முறையில் மிக கவனமாக யோசித்து மேற்கூறிய படிசெயல்பட வேலையில் வெற்றி என்பது உறுதியாகும்.
🌹🌹🌹 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
_*Motivation*_
*_வாழ்க்கை ஒரு போராட்டமா? பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சந்திக்காததா? படிங்க பாஸ்..._*
_சாதிப்பதற்கான மனத்திடம் இருந்தால் சாதனை என்பது எட்டாக்கனி அல்ல_
* 🌹🌹🌹தனது தந்தைக்கு, தான் பதினைந்தாவது குழந்தையா அல்லது பதினாறாவது குழந்தையா என்று கூடத் தெரியாத அளவுக்குப் படிப்பறிவு இல்லாத சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்!
மெழுகுவர்த்தி உற்பத்தி செய்து விற்பனை செய்த இவரது தந்தையால் ஃப்ராங்க்ளினை ஒரே ஒரு வருடம்தான் பள்ளிக்கூடம் அனுப்ப முடிந்தது. பிறகு பன்னிரெண்டு வயதைத் தாண்டும் முன்னரே தனது அண்ணனின் அச்சகத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார்.
அச்சகம் என்பதால் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அச்சடிப்பதற்காக வந்த கையெழுத்துப் பிரதிகள் அனைத்தையும் ஃப்ராங்க்ளின் படிப்பார். அவருக்குப் படிப்பதில் ஆர்வம் இருந்ததால் தனக்குக் கூலியாகக் கிடைத்த பணத்தையெல்லாம்கூட புத்தகங்கள் வாங்குவதற்கே பயன்படுத்தினார். ஃப்ராங்க்ளின் ஓரளவுக்கு வளர்ந்ததும் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு, தான் வேலை செய்த அச்சகத்தையே விலைக்கு வாங்கினார்.
பிறகு சொந்தமாகப் பத்திரிகை ஆரம்பித்தார். பத்திரிகை அமோகமாக விற்பனையாக, ஃப்ராங்க்ளின் அமெரிக்காவின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்தார். காகிதப் பணம், தீயணைப்பு, இன்ஸ்யூரன்ஸ், கார்ப்பரேட், மருத்துவமனை, வீதிகளைச் சுத்தமாகப் பராமரிப்பது என்று கால் பதித்த ஃப்ராங்க்ளின் பல துறைகளிலும், அமெரிக்காவுக்கு அத்தனை துறைகளிலும் வழிகாட்டியாக இருந்தார். இன்று பெரும்புகழோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இவர் நிறுவியதுதான்.
சுதந்திரம் அடைந்த பின்னர் அமெரிக்கா முதன்முதலில் இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டது. அதில் ஒன்று தனது முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டளைக் கௌரவப்படுத்த, இரண்டாவது பெஞ்சமின் ஃப்ராங்க்ளிளை நினைவுகூற!
வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னம்பிக்கை நிறைந்தவருக்கே வெற்றி கிடைக்கிறது என்பதற்கு பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுடைய வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம்.
தன்னம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அதை நாம் வளர்த்துக்கொள்வது கிடையாது.
தன்னம் பிக்கையை வளர்த்துக் கொண்டவர்கள் சாதிக்கிறார்கள். வரலாறு படைக்கிறார்கள். தன் பெயரை உலகம் புகழும் பெருமையைத் தேடிக் கொடுத்துவிட்டு மரணிக்கிறார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதவர்கள் புலம்பிப் புலம்பியே தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.
இதுவரை சாதித்தவர்கள் யாருக்கும் 'ஏழு அறிவு' இருந்ததென்று கூற முடியாது. சாதித்தவர்களும் நம்மைப் போல ஆறறிவு படைத்தவர்கள் தான்.
வாழ்க்கையில் எந்த இடத்தில் தட்டினால் எப்படி வெற்றி பெறலாம் என்பதை தெரிந்து கொண்டவர்கள் அவர்கள். அதற்காக பல கசப்பான அனுபவங்களை கூட அவர்கள் சந்தித்து இருப்பார்கள்.
ஆகவே, சாதிப்பதற்கான மனத்திடம் இருந்தால் சாதனை என்பது எட்டாக்கனி அல்ல.
🌹🌹🌹 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
_*Motivation*_
*_உத்வேகம் அளிக்கும் டானிக்: காலம் கடந்தும் புதியனவாகவே இருக்கும் சீன ஞானியின் போதனைகள்..._*
_கன்பியூசியஸின் போதனைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை என்றாலும், அவை இன்றும் புதியனவாகவே இருக்கின்றன_
* 🌹🌹🌹உலகத்தையே தனது சிந்தனைகளால் மாற்றியமைத்த சீன ஞானி கன்பியூசியஸ், வெறும் தத்துவவாதி மட்டுமல்ல; ஒழுக்கமான வாழ்விற்கும், சிறந்த நிர்வாகத்திற்கும் வழிகாட்டியவர். “கல்வியும், ஒழுக்கமுமே ஒரு மனிதனை முழுமையாக்கும்” என்பது இவரது அடிப்படைப் போதனை. அவர் வழங்கிய வாழ்வியல் நெறிகளையும், அவை இன்றைய காலத்திற்கு எவ்வாறு பொருந்துகின்றன என்பதையும் இங்கு காண்போம்.
வாழ்க்கை மற்றும் வளர்ச்சி:
விடாமுயற்சி: “நீங்கள் எவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எங்கும் நின்றுவிடாமல் பயணிப்பதே முக்கியம்.”
மேன்மை: “உன்னை விடச் சிறந்த ஒருவனைச் சந்தித்தால், அவனைப் போல மாற முயற்சி செய். உன்னை விடத் தாழ்ந்த ஒருவனைச் சந்தித்தால், உனக்குள் இருக்கும் குறைகளை ஆராய்ந்து பார்.”
தவறுகள்: “தவறு செய்வது தவறு அல்ல, செய்த தவறைத் திருத்திக் கொள்ளாமல் இருப்பதே மிகப்பெரிய தவறு.”
அறிவு மற்றும் கல்வி:
உண்மையான அறிவு: “உனக்குத் தெரிந்ததைத் தெரியும் என்றும், தெரியாததைத் தெரியாது என்றும் ஒப்புக்கொள்வதே உண்மையான அறிவு".
கற்றலும் சிந்தித்தலும்: “சிந்திக்காமல் கற்பது வீண்; கற்காமல் சிந்திப்பது ஆபத்தானது"
நன்னெறி மற்றும் பழக்கவழக்கம்:
தன்னடக்கம்: “மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.”
நிதானம்: “கோபம் வரும்போது அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்.”
நட்பு: “உன்னை விடச் சிறந்த பண்புகள் இல்லாதவர்களுடன் ஒருபோதும் நட்பு வைத்துக்கொள்ளாதே.”
வெற்றி மற்றும் இலக்குகள்:
இலக்கை நோக்கி: “உங்களால் இலக்குகளை அடைய முடியாவிட்டால், இலக்குகளை மாற்றாதீர்கள்; அவற்றை அடைவதற்கான உங்கள் செயல்பாடுகளை (Action) மட்டும் மாற்றுங்கள்.”
முயற்சி: “வெற்றி என்பது உங்கள் தயாரிப்பைப் பொறுத்தது. முறையான தயாரிப்பு இல்லாமல் தோல்வி நிச்சயம்.”
வலிமை: “எப்பொழுதும் விழாமல் இருப்பது நமது பெருமையல்ல; ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழுவதே உண்மையான பெருமை.”
சுய ஒழுக்கம் (Self-Discipline):
தன்னை ஆளுதல்: “தன்னைத் தானே அடக்கி ஆளத் தெரிந்தவனே உண்மையான வீரன்.”
நேர்மை: “நேர்மையான மனிதன் எதைச் செய்தாலும் அது தர்மத்தின் வழியிலேயே இருக்கும்.”
அதிர்ஷ்டம்: “அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பும், கடின உழைப்பும் சந்திக்கும் ஒரு புள்ளியாகும்"
சமூகம் மற்றும் மனித உறவுகள்:
உதவி: “உங்களுக்கு உதவி தேவைப்படும்போது மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ, அப்படியே மற்றவர்களுக்குத் தேவைப்படும்போதும் நீங்கள் உதவியாக இருங்கள்.”
பெரியோர்கள்: “மூத்தவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவன், வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்வான்.”
அமைதி: “உனது வீட்டில் அமைதி நிலவ வேண்டுமென்றால், முதலில் உனது இதயத்தில் அமைதியை ஏற்படுத்திக்கொள்.”
“ஒரு வேலையைச் செய்வதற்கு முன் உனது கோடாலியைத் தீட்டிக்கொள். அது வேலையை எளிதாக்கும்.”
“ஒரு மனிதன் தன் கடந்த காலத்தை விரும்பிப் படித்து, அதிலிருந்து புதியனவற்றைக் கற்றுக்கொண்டால், அவன் மற்றவர்களுக்கு ஆசிரியராகத் தகுதியுடையவன் ஆகிறான்.”
கன்பியூசியஸின் போதனைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை என்றாலும், அவை இன்றும் புதியனவாகவே இருக்கின்றன. மனிதன் தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதன் மூலமே ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அவரது சிந்தனைகளை வெறும் வாசிப்போடு நிறுத்தாமல், வாழ்வில் ஒரு சிறு பகுதியாவது கடைப்பிடிப்பதே அந்த மாமேதைக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.
🌹🌹🌹 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
எதுக்கு வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள்,ஆனால் ஒருவரின் அன்பு வேண்டும் என்பதற்காக அழுது வடியாதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் கெஞ்சிக் கொண்டிருங்கள், ஆனால் ஒருவரின் ப்ரியத்துக்காக கெஞ்சிக் கொண்டிருக்காதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் ஏங்கி உயிரை விடுங்கள்,ஆனால் ஒருவரின் காதலுக்கு ஏங்கிச் சாவாதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் தனிமையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்,ஆனால் ஒருவரின் அன்பின் நிராகரிப்பற்காக தனிமையில் வாடாதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் மண்டியிடுங்கள்,ஆனால் ஒருவரின் உதாசீனத்துக்கு அடிபணிந்து மண்டியிடாதீர்கள்.
எதற்கு வேண்டுமானாலும் அதிலேயே வெந்து சாம்பாலாகுங்கள்,ஆனால் இந்த நேசத்திற்காக அதிலியே இருந்து வேகாதீர்கள் வெளியேறி விடுங்கள்.
இந்த அத்தனை வேதனைகளும்,
இந்த அத்தனைத் துயரங்களும்
அன்பிற்காக மட்டுமே நடக்கும்.
அந்த ஒரு தூய நரகத்தின் ராட்சஸனுக்காக மட்டுமே நிகழும்.
வேறு எதற்கும் இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டோம்.
வேறு எதற்கும் இவ்வளவு அழுதிருக்க மாட்டோம்.
வேறு எதற்கும் இவ்வளவு வலியை ருசித்திருக்க மாட்டோம்.
எல்லாம் அந்தப் பாழாய்ப் போன ஒற்றை அன்பிற்காகத் தான் இவ்வளவும்.. #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
*வாழ்க்கை...*
_*இவ்வளவு கனமாக இருக்குமென்று தெரியாது.*_
_*இவ்வளவு லேசாக இருக்குமென்று தெரியாது.*_
_*இவ்வளவு எளிதாக,*_
_*இவ்வளவு சிக்கலாக,*_
_*இவ்வளவு இருட்டாக,*_
_*இவ்வளவு வெளிச்சமாக,*_
_*இவ்வளவு காற்றோட்டமாக,*_
_*இவ்வளவு புழுக்கமாக,*_
_*இருக்குமென்று தெரியாது*_
_*காலை வணக்கம் 🙏🏻💐💞*_
_*இந்த நாள் இனிதாகட்டும் 🍫*_
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
அனுபவம் தத்துவம்
விட்டால்
பூமியைக் கூட
சுற்றி வந்து விடுவேன்..
ஆனால்
உன் தொப்புள் அழகில்
இடுப்பை சுற்றி வருவது
கடினம் தான்..
அழகால் கிறங்க வைக்குதடி..
கொஞ்சநாள் நல்லா பேசுவாங்க
அப்புறம் கடமைக்கு பேசுவாங்க
அப்புறம் பேசனுமேன்னு பேசுவாங்க
அப்புறம் கண்டுக்கமாட்டங்க
இதுக்கு எதுக்கு நீங்க கஷ்டப்பட்டு என்கிட்ட பேசனும் 😢
இதுக்கு ஆரம்பத்திலேயே பேசாமலே இருந்துக்கோங்க😏😏😏
எந்த நிலையில்லும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிட்டாது. அதிகமான கவலைகள் தான் உங்களைச் சேரும். ஏனெனில் உங்களது கடமைகளை நீங்கள் தட்டிக் கழிக்க பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து உங்கள் அமைதியை குலைத்து விடும். அதனால் உங்களால் முடிந்த மட்டும் பொறுப்புகளைத் திறமையுடன் நிறைவேற்றப் பாருங்கள்..
🌹
🦋சொல்ல🌺
🌺முடியாத🦋
🦋வரிகள்🌺
🌺சொல்லில்🦋
🦋முடியுராத🌺
🌺கவிதை🦋
🦋அவளை🌺
🌺வாசிக்க🦋
🦋தான்🌺
🌺நான்🦋
🦋தவிப்பில்🌺
🌺அவளே🦋
🦋 புதிரான🌺
🌺வாக்கியமான🦋
🦋மலரோ❣️
குறள்:915
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்
இவ்வுலகில் மொழிகள்,
பல இருந்தாலும்.!
சில சமயங்களில்
நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த மொழிகள்
பயன்படுவதில்லை..
தேவைப்படும் இடத்தில், மௌனத்தை கடைபிடிப்பதே சிறந்தது.!.
மௌனத்திற்கு சம்மதம், சம்மதமில்லை எனும் அர்த்தம் இருந்தாலும்.!
மௌனம்தான்
பெரும்பாலும் எவரையும் புண்படுத்தாது.!
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
*எட்டு மாதங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் அதிசயக் கோயில்!*🌹
வடஇந்தியாவில் உள்ள மலைப்பாங்கான அழகிய ஊர் என்று எடுத்துக்கொண்டால், அதில் முதலில் இருப்பது ஹிமாச்சல பிரதேசம். இது பனி மூடிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளுக்கு மட்டுமல்லாது, பல கோயில்களுக்கும் பெயர் பெற்றது. சிந்த்பூர்ணி, திரிலோகிநாத், மாதா ஜ்வாலா ஜி, பீமாகாளி, நயனா தேவி போன்ற பல கோயில்கள் இங்கு உள்ளன. ஆனால், வருடத்தில் 4 மாதங்கள் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் அளித்து, மீதமுள்ள 8 மாதங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் ஒரு கோயிலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு கோயிலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்தியாவில் பல மர்மமான மற்றும் தனித்துவமான பல இடங்கள் உள்ளன. அவை வளமான வரலாற்றைக் கொண்டுள்ளன. ஹிமாச்சலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பாது கி லடி (Bathu ki ladi) கோயில்கள் அத்தகைய மர்மமான இடமாகும். பாது கோயில் பஞ்சாப்பின் ஜலந்தரிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மஹாராணா பிரதாப் சாகர் ஏரியில் உள்ள பாங் அணையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் ஒரு தீவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயில் வளாகத்தில் உள்ள பிரதான கோயிலைத் தவிர, எட்டு சிறிய கோயில்களும் இங்கு உள்ளன. அவை தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரு மலையில் உள்ள கற்களை போல காட்சி அளிக்கிறது. எனவே, இந்தக் கோயில் பாதுவின் சரம் (ஜபமாலை) என்று அழைக்கப்படுகிறது.
பகிர்வுஸ்ரீராமஜயம்
இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், இந்த ஆலயம் வருடத்தில் எட்டு மாதங்கள் ஜூலை முதல் பிப்ரவரி வரை தண்ணீருக்கு அடியில் மூழ்கி இருக்கும். அதன் பின்னர், மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்கு இடையில் மட்டுமே இக்கோயிலை தரிசிக்க முடியும். பாங் அணை ஏரியின் நீர் மட்டம் உயரும்போது, மீண்டும் இந்தக் கோயில் நீருக்கடியில் ஒரு பகுதியாக மாறுகிறது. இப்படிப் பல மாதங்கள் நீருக்குள் மூழ்கியிருந்தாலும் கோயிலின் அமைப்பில் பெரிய சேதம் எதுவும் ஏற்படுவதில்லை.
அதற்கு இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ள சக்தி வாய்ந்த பாது என்ற கல்தான் காரணம் என்று உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்தக் கோயிலுக்குள் கற்களில் செதுக்கப்பட்ட காளி தேவி மற்றும் விநாயகரின் உருவங்களை நீங்கள் காணலாம். கோயிலுக்குள் மகாவிஷ்ணுவின் சிலை அவரது ஆதிசேஷ நாகத்தின் மீது படுத்திருக்கும்படி இருப்பதைக் காணலாம். மழைக் காலத்தில் நீரில் மூழ்கிய இந்த கோயிலின் கோபுரத்தை மட்டுமே பார்க்க முடியும்.
இந்தப் பகுதியை ஆண்ட சில உள்ளூர் அரசர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ஆனால், ஒருசிலர் இதை புராணக் கதாபாத்திரங்களான பாண்டவர்களுடன் இணைக்கின்றனர். பாண்டவர்கள் வனவாசத்தின்போது 'சொர்க்கத்திற்கான ஏணி'யை இங்கு கட்ட முயன்றதாக நம்பப்படுகிறது. இருப்பினும், ஒரே இரவில் இந்த படிக்கட்டுகளை அவர்கள் கட்ட வேண்டியிருந்ததால், அதை உருவாக்குவதில் வெற்றி பெற முடியவில்லை. இந்தக் கோயிலில் சொர்க்கத்திற்கு செல்லும் 40 படிக்கட்டுகள் என்று சொல்லப்படும் அமைப்பு இன்றும் உள்ளன.
மக்கள் படகு மூலம் இக்கோயிலை அடையலாம் மற்றும் கோயிலைச் சுற்றி 'ரென்சார்' (Rensar) என்று அழைக்கப்படும் ஒரு தீவு போன்ற அமைப்பு உள்ளது. அங்கு நீங்கள் வனத்துறையின் விருந்தினர் மாளிகையையும் காணலாம். அருகிலுள்ள விமான நிலையம் தரம்சாலாவில் உள்ள காகல் விமான நிலையம் ஆகும். அங்கிருந்து காங்க்ராவிலிருந்து, ஜவாலி அல்லது தமேதா கிராமம் வரை ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.🌹 #கடவுள் #அன்பே கடவுள்
*இராவணனும் மண்டோதரியும் முதன்முதலில் சந்தித்த இடம் எது தெரியுமா?*
தெற்காசிய கண்டத்தில் உள்ள அனைவருமே இலங்காதிபதி இராவணனை பற்றி நன்கு அறிவர். இராமாயணத்தில் இராமர் புகழ் எந்தளவிற்கு உள்ளதோ, அதே அளவில் இராவணனுக்கும் மதிப்பு உள்ளது. இராவணன் தீயவனாக இருந்தாலும் அவனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தன. ராவணன் மிகச் சிறந்த சிவ பக்தன், இசையில் மிகப்பெரிய கலைஞன், அறிவிற்கும் வலிமைக்கும் பெயர் பெற்றவன். ராமாயணத்தில், மற்ற பெண்களை விட ராவணனின் மனைவி மண்டோதரி பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது. ராவணனின் மனைவி மண்டோதரி பக்தியுள்ள பெண்.
மண்டோதரி அசுர மன்னன் மாயாசுரன் மற்றும் ஹேமாவின் மகள். திருமணத்திற்குப் பிறகும் தங்கள் கன்னித்தன்மை ஒருபோதும் மாறாது என்று வரம் பெற்ற பஞ்ச கன்னியர்களில் இவரும் ஒருவர். மண்டோதரி ராமாயணத்தில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்துள்ளார். ராவணன் மனைவி மண்டோதரி பலமுறை ராவணனுக்கு அறிவுரை கூறி, சிறை வைக்கப்பட்ட சீதையை திருப்பி அனுப்பி விடுமாறு கூறினாள்.
ராமர் இலங்கைக்கு படையெடுத்து வரும்போது , அவருடன் சமாதானமாக போகுமாறு ராவணனுக்கு அறிவுறுத்தினாள். மண்டோதரி கற்பில் சிறந்தவள், ஹனுமான் முதன்முதலில் இலங்கைக்கு சென்றபோது, முதலில் மண்டோதரியை கண்டு 'இவர்தான் சீதையோ' என்று எண்ணினார். அதன் பிறகு தான் ராமரின் மனைவியான சீதை நிச்சயம் இவ்வளவு வசதி மிகுந்த அரண்மனையில் தங்க மாட்டாள் என்ற முடிவுக்கு வந்தார்.
ராவணன் மற்றும் மண்டோதரி நல்ல தம்பதிகளாக இருந்தனர். இவர்கள் முதலில் சந்தித்தது ஒரு கோயிலில் தான். இராவணனும் மண்டோதரியும் சந்தித்த கோயிலில் சிவபெருமானை வழிபடும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. மண்டோதரி சிவபெருமானின் தீவிர பக்தையாக இருந்தாள். தனக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று மீரட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோவிலில் சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளார்.
பகிர்வுஸ்ரீராமஜயம்
இந்த கோயிலில் தான் ராவணனும் மண்டோதரியும் முதல் முறையாக சந்தித்தனர். இந்தக் கோயிலில், மண்டோதரி கடுமையாக தவமிருந்தார். மண்டோதரியின் தவத்தை கண்டு மெச்சிய சிவ பெருமான் அவளுக்கு வரம் தருவதாக உறுதியளித்தார். அப்போது மண்டோதரி சிவபெருமானிடம் தனது கணவர் சகல சாஸ்திரங்களில் தேர்ந்தவராகவும், உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று வரம் கேட்டாள். அந்த வரத்தின் விளைவால் மண்டோதரிக்கு ராவணன் கணவனாக அமைந்தான். மண்டோதரியும் இராவணனும் முதன்முதலாக இந்த கோவிலில் சந்தித்துக் கொண்டனர் என்று புராண கதைகள் கூறுகின்றன.
இந்த கோயில் பிற்காலத்தில் மராத்தியர்களால் புதுப்பிக்கப்பட்டது. எனவே கோயிலின் விமானமும் நுழைவாயிலும் மராட்டிய பாணியில் கட்டப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்த இடத்தில் ஏராளமான வில்வ (பில்வ) மரங்கள் காணப்பட்டதால் இக்கோவில் ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பில்வேஷ்வர் நாத் கோயில் சிவன் மற்றும் மாதா கௌரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. இங்குள்ள சிவபெருமானை முழு பக்தியுடன் வணங்கி, 40 நாட்கள் தீபம் ஏற்றி வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஆவணி மாதத்தில், ஜலாபிஷேகத்திற்காக இங்கு ஏராளமான பக்தர்கள் கூடி இறைவனை வழிபடுகிறார்கள்.🌹 #அன்பே கடவுள் #கடவுள்









![🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - *வாழ்க்கை வ்வளவு கனமாக இருக்குமென்று தரியாது வ்வளவுலேசாக இருக்குமென்று தரியாது வ்வளவு எளிதாக வ்வளவு சிக்கலாக 9]|61616!61 ருட்டாக வெளிச்சமாக இவ்வளவு வ்வளவு காற்றோட்டமாக புழுக்கமாக வ்வளவு ருக்குமென்று தெரியாது _ *காலைவணக் கம் இனிதாகட்டும் *இந்த நாள் *வாழ்க்கை வ்வளவு கனமாக இருக்குமென்று தரியாது வ்வளவுலேசாக இருக்குமென்று தரியாது வ்வளவு எளிதாக வ்வளவு சிக்கலாக 9]|61616!61 ருட்டாக வெளிச்சமாக இவ்வளவு வ்வளவு காற்றோட்டமாக புழுக்கமாக வ்வளவு ருக்குமென்று தெரியாது _ *காலைவணக் கம் இனிதாகட்டும் *இந்த நாள் - ShareChat 🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - *வாழ்க்கை வ்வளவு கனமாக இருக்குமென்று தரியாது வ்வளவுலேசாக இருக்குமென்று தரியாது வ்வளவு எளிதாக வ்வளவு சிக்கலாக 9]|61616!61 ருட்டாக வெளிச்சமாக இவ்வளவு வ்வளவு காற்றோட்டமாக புழுக்கமாக வ்வளவு ருக்குமென்று தெரியாது _ *காலைவணக் கம் இனிதாகட்டும் *இந்த நாள் *வாழ்க்கை வ்வளவு கனமாக இருக்குமென்று தரியாது வ்வளவுலேசாக இருக்குமென்று தரியாது வ்வளவு எளிதாக வ்வளவு சிக்கலாக 9]|61616!61 ருட்டாக வெளிச்சமாக இவ்வளவு வ்வளவு காற்றோட்டமாக புழுக்கமாக வ்வளவு ருக்குமென்று தெரியாது _ *காலைவணக் கம் இனிதாகட்டும் *இந்த நாள் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_214390_16cbcb5b_1775093212866_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=866_sc.jpg)


