நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர் பகுதி ஊராட்சி ஒன்றியங்களுகுட்பட்ட 214 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்ட பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து தஞ்சை மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன் MLA அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், ஒன்றிய கழக செயலாளர்கள் கல்லணை செல்லக்கண்ணு, தோ.அருளானந்தசாமி, சு.முருகானந்தம், மு.அசோக்குமார், கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.#DMKThanjavur ##dmkthanjavur