#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் சூரனூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக முன்னோடி நிர்வாகி திருவாரூர் செந்தில் பாண்டியன் அவர்களது தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அனைவருக்கும் சால்வை அனிவித்து கட்சிகள் தீவிரமாக செயல்பட அறிவுறுத்தினார் மேலும் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்களது பிறந்த நாளில் 52 இடங்களில் திருவாரூர் ஒன்றியத்தில் கொடி ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை சூரனூர் பொறியாளர் கணேஷ் செய்திருந்தார். அருகில் மாவட்ட நகர நிர்வாகிகள் உள்ளன.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி. எஸ். லீலா அலக்ஸ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 16 நபர்களுக்கு ரூ.3,95,000/- மதிப்பில் தீருதவி தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இந் நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பூ. காஞ்சனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன் உட்பட பல உடனிருந்தனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31-2026 தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண்ஸ்ருதி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாநகர நகர் நல அலுவலர் கௌரிசங்கர் உட்பட பலர் உள்ளனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கா.பொற்கொடி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று. கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆகியோர் அனைத்து அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர். உடன் இயக்குநர், மீன்வளத்துறை விஜயகார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மற்றும் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) திருமதி. ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் உட்பட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் துவக்கி வைத்தார். உடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினாய்குமார் மீனா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சுஜிதா உட்பட பலர் உள்ளார்கள்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் தலைமையில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார் பட்டி நாராயணன், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தார்கள்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 4-ம் ஆண்டு தேர்த்திருவிழா:
வேலூர் அடுத்த இரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் உள்ளது. இதன் 4-ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா கடந்த 22-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான வைகாசி விசாக திருத்தேர் 30-ம் தேதி காலையாகசாலை பூஜை முடிந்து வசந்தகால மண்டபத்தில் உத்சவமூர்த்தி (பாலமுருகன் வள்ளிதெய்வானையுடன்) தங்க கவச அலங்காரத்துடன் திருத்தேர் மலையை சுற்றிவளம் வந்தது. ஏரளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். நிலைக்கு வந்தபின் பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் லப்பை கிருஷ்ணாபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா மூன்றாம் ஆண்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் , அம்மன் பூங்கரகம் திருவீதி உள்ள நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிரசு ஏற்றுதல் நடைபெற்றது. மேலும் அதி நூதன வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நாதஸ்வரம் மேளம், நையாண்டி மேளம், கோலாட்டம், புலியாட்டம், கேரளா செண்டை மேளம் வாணவேடிக்கை, போன்றவை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து அம்மன் சிரசு நிறுத்துதல், கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் போன்றவை நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நாட்டாமைஅப்பு மந்திரி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பட்டினை ஊர் நாட்டாமை, மேட்டுக்குடி, ஸ்ரீ கெங்கையம்மன் விழா குழுவினர்கள், கிராம பொதுமக்கள், இளைஞர்கள், என நிகழ்ச்சி ஏற்பட்டின செய்து இருந்தனர்.













