#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம் வேலூர் யோகா சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வேலூரை அடுத்த அடுக்கம் பாறை வேங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி யில் நடைபெற்றது இதில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 350 ககும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் போட்டியை டாக்டர் ராஜசேகர் புரொபஸர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் டாக்டர் சங்கீதா மற்றும் குடியாத்தம் தாலுகா சதுரங்க கழகபொருளாளர் மாலதி ஆகியோர் துவக்கி வைத்தனர் 9,11,13,16, வயது ஆண்கள், பெண்கள் மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டி நடைபெற்றது 9 வயது ஆண்கள் பிரிவில் அர்ஸித் பெண்கள் பிரிவில் குமுதினி ராமானுஜ் 11 வயது ஆண்கள் பிரிவில் வர்னீஸ்புனித்ராஜா பெண்கள் பிரிவில் ஆராதனா 13 ஆண்கள் பிரிவில் ஹரீஸ் பெண்கள் பிரிவில் ரூபிகா 16 வயது ஆண்கள் பிரிவில் தனிக் ஷ் பெண்கள் பிரிவில் லெஸியா புனித் ராஜா மற்றும் ஓபன் பிரிவில் ஹரிஹரன், சாய்குமார் முதலிடத்தை பிடித்தனர் மாலையில் பரிசளிப்பு விழாவில் திரு,முத்துபாண்டி உதவி கலெக்டர் (DISTRICT INPECTION CELL OFFICER) திரு, செந்தில் குமார்
விளையாட்டுத்துறை இயக்குனர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள் பரிசாக 100 கோப்பைகள் 100 மெடல்கள் மற்றும் ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது போட்டியின் தலைமை நடுவராக கார்த்திகேயன் நடுவர்களாக கோபி, சீனிவாசன், சுரேஷ், ஜெய் சூர்யா புனித்ராஜா ,கண்ணன்ஜஸ்வர்யா,மாலதி ஆகியோர் இருந்தனர் போட்டிக்கான ஏற்பாடு களை யோகா சதுரங்க கழகத்தின் செயலாளர் மற்றும் அணைக்கட்டு தாலுகா சதுரங்க கழகத்தின் துணை தலைவர் ஆனந்த ஜோதி செய்து இருந்தார்.
#தற்போது செய்தி #செய்திகள்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி இளவரசி ரகோத்தமன் பிரவீன் குமார் மாவட்ட மற்றும் நீதிபதிகள் வாஞ்சிநாதன் ராஜ்குமார் பாபு,சுரேஷ் பாபு நிஷா வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.ப. ஆகாஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஒட்டன்சத்திரத்தில்
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தொழிலாளர் அணி சார்பில்
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா
ஒட்டன்சத்திரம் ஜூன்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் போக்குவரத்துத்துறை தொழிலாளர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான ச.ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் அரசு போக்குவரத்து பணி மனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தவெக திண்டுக்கல் மண்டல அமைப்பாளர் கே.குமரேசன் முன்னிலையில், தவெக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்திக்ராஜன் தலைமையில் தொழிற்சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் நகர கழக செயலாளர் எம்.குருஅருண், ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.சுறாசுரேஷ், தவெக பழனி என்.பாலன், தவெக ஒன்றிய, நகர நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தவெக கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல் காந்தி எம்.பி பிறந்த நாள் விழா
தூத்துக்குடி ஜூன் 23
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அறிவுறுத்தலின்படி ஸ்ரீவைகுண்டம் எஸ்டிஏ பள்ளியில் ராகுல் காந்தி எம்.பி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் வட்டாரத் தலைவர் நல்லகண்ணு தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது..
நிகழ்ச்சியில் மாவட்ட மகிளா காங்.தலைவி மாரியம்மாள், துணை தலைவி மங்களம், வெள்ளூர் கிராம கமிட்டி தலைவர் மகேஷ், ஸ்ரீவை. 1வது வார்டு தலைவர் நிலமுடையான், மாவட்ட ஐ.டி. பிரிவு தலைவர் ஜேம்ஸ்,.மாவட்ட பொதுசெயலாளர் சொரிமுத்து, சுங்கு நாதபுரம் கிராம கமிட்டி தலைவர் சங்கர், மகிளா காங்.நிர்வாகிகள் பிரேமா, சுசீலா, சாரதா,பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், வேலூர் நீதிமன்றம் வளாகத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் வருங்கால பாரதப் பிரதமருமான திரு. ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் அணி சார்பில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு மாநில வழக்கறிஞர் அணி இணை தலைவர் திரு. வி.ஆர். கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் திரு. இராணிப்பேட்டை தீனா என்கின்ற தினகரன் அவர்கள் முன்னிலை வகித்தார். நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் திரு.வெங்கடேசன், திரு. ராமமூர்த்தி, திரு. செந்தில்குமார், திரு. ராஜா, திரு. பிச்சாண்டி மற்றும் பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சிறப்பாளர்களாக முன்னாள் வேலூர் யூனியன் சேர்மன் திரு. சி.கே. தேவேந்திரன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி. பி சந்திர பிரகாஷ் மற்றும் குணா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
இடையகோட்டை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
ஓட்டன் சத்திரம், ஜூன். 23
திண்டுக்கல்
மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி இடையகோட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இடையகோட்டை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்குதல் நிகழ்ச்சி இடையகோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த அன்னதானம் நிகழ்விற்கு ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய கழகத்தின் செயலாளர் தினேஷ் குமார் அவர்கள் தலைமை தாங்கி பிறந்தநாள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்விற்கு முன்னிலையாக கில்லி என்ற (ராஜா கோபால், மற்றும் கோபி, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர.மேலும் தமிழக வெற்றி கழகத்தினுடைய நிர்வாகிகள் வல்லரசு, கனகராஜ், பொம்மு ராஜ், தினேஷ், நிதீஷ், மதன், கவியரசு, பாபு, கோபி, தமிழ் கதிரவன் போன்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இந்த மாபெரும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புத்ததுடன் பொதுமக்களுக்கு சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் 32 வது வார்டு சார்பாக மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுதுகோல், பென்சில் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் சிறப்பாக அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் ஜனனி சதீஷ்குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சி ஆனது வட்டச் செயலாளர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் வேலூர் மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட பகுதி செயலாளர் எஸ்.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை வட்டச் செயலாளர் வி.பிரபாகரன் செய்திருந்தார்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களிலும் 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம்
( ஜமாபந்தி) 2026 மூன்றாவது நாளாக நடைபெறுவதை தொடர்ந்து அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்/ வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. பி. எஸ். லீலா அலக்ஸ், வருவாய்த் துறையின் சார்பில்1 பயனாளிக்கு இணையவழி பட்டா நகலினை வழங்கினார்.இந்நிகழ்வின் போது தனித்துணை ஆற்றிய(சமூக பாதுகாப்பு திட்டம்) சி.மாறன் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணன்,உதவி ஆணையர்( கலால்)பாஸ்கரன்(பொ),துணை ஆட்சியர்( பயிற்சி).கணேஷ்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, வட்டாட்சியர் சுகுமாரன், உட்பட பலர் உடன் இருந்தனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
சேலம் மாவட்டம், சேலம் மாநகராட்சி திருமணிமுத்தாறு செல்லும் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க. இளம் பகவத், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு. லலித் ஆதித்ய நீலம், உதவிய ஆட்சியர் ( பயிற்சி) செல்வி இது என்னது ஜி.பி. நந்தன, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.













