Makkal Mugam
ShareChat
click to see wallet page
@epaper
epaper
Makkal Mugam
@epaper
Daily Updates
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா வேலங்காட்டில் ஏரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ் மாதம் சித்திரை முப்பதாம் தேதி புஷ்பரத தேர்த்திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது, அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பொற்கொடி அம்மன் தேரில் அலங்கரிக்கப்பட்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள நான்கு கிராமங்களில் வீதி உலா வந்து இறுதியில் வேலங்காட்டு ஏரியில் உள்ள கோவிலுக்கு தேரானது வந்தடையும் இதனைக் காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்கள் செல்லும் பாதைகளில் நீர் மோர் பந்தல், அன்னதானம், நடைபெற்றது, அதன் ஒரு பகுதியாக தார்வழியில் பாட்டாளி மக்கள் கட்சி செங்குட்டுவன் தலைமையில் 26 ஆம் ஆண்டுஅன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் இளங்கோவன், வேல்முருகன் , சற்குணன் , துரை , கணேசன், தமிழ்ச்செல்வி , ஆகியோர் கலந்து கொண்டு புளி சாதம், தயிர் சாதம், வெஜி சாதம் போன்றவற்றை அன்னதானமாக வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - @rm nrl' 0009 வ் 0 மாம பச1 525 80 mb' Viva 05/13 ' @rm nrl' 0009 வ் 0 மாம பச1 525 80 mb' Viva 05/13 ' - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி முத்தாரம்மன் கோவில் கொடைவிழா தூத்துக்குடி, மே.13 - தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 4,000 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. கொடைவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி சைவ வேளாளர் மண்டபத்தில் ஹரிஸ்மா கோல்டு பைனான்ஸ் அதிபர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவையுடன் அன்னதானம் நடைபெற்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் அன்னதான நிகழ்வை மாவட்ட அஇஅதிமுக தொழிற்சங்க தலைவரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான சுதாகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுப்பிரமணியசாமி மகமை அறக்கட்டளை தலைவர் எம்.எஸ்.எஸ்.கந்தப்பன், எல்.ஐ.சி கிட்டு, தொழிலதிபர் டி.ஏ. தெய்வநாயகம், எஸ்.பி. டைகர் சிவா,, பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் சண்முகசுந்தரம், 39வது வார்டு மகளிர் அணி தலைவி உஷாதேவி, முக்கிய நிர்வாகிகள், கோவில் கமிட்டியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் - 000 000 - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 கழக நிரந்தர பொது செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள இல்லத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தபோது..
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெண்கள் சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுக்கப்படும் வி.ஜி.சரவணன் அறிக்கை தூத்துக்குடி, மே. 13 - ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெண்கள் சுதந்திரமாக நடமாட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வி.ஜி.சரவணன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் நடப்பதாக பலர் என்னிடம் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். வருங்காலங்களில் இந்த தொகுதியில் பெண்களுக்கு எதிராக கேலி, கிண்டல் மற்றும் ஈவ்-டீசிங் போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் தப்பிக்க முடியாத அளவிற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் இனி சுதந்திரமாக நடமாட அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் இல்ல திருமண விழா தூத்துக்குடி, மே. 13- தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளரணி துணை அமைப்பாளரும் முன்னாள் யூனியன் கவுன்சிலருமான இரா.அந்தோணி தனுஷ் பாலன் இல்ல திருமண வரவேற்பு விழா தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே ராஜபாளையம் நிலா மஹாலில் நடைபெற்றது. மணமக்கள் அ.சிம்சன் காந்தி-கி.மைக்கேலின் சுவேதாஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, நிலா சீ புட்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வின், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட முதன்மை அரசு குற்றவியல் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் திமுக மாநில மாவட்ட அனைத்து அணி நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி வக்கீல் சங்க நிர்வாகிகள், அனைத்து அரசியல் கட்சியினர், அரசு துறை அலுவலர்கள், தொழிற்சங்கத்தினர், சமுதாய சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர், மற்றும் உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் திருமண வரவேற்பு விழா ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் பிரான்சிஸ் தெரசா, கிளாட்வின், ரஜினி ராஜகர்ணன், ஸ்டெல்லா, சச்சின் பாரதி,,நண்பர்கள், உறவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
செய்திகள் - உபகார்ந்து சாலையில் கும் குடிமகன்கள் குடிக் அருப்புக்கோட்டை, சென்டர் அதில் மாணவ, மாணவிகள்சுமார் ம00க்கும் ே.13 ப்புக்கோட்டை மேல் ன்றனர் இந்த படிக்கி அரு ரோட்டில்கோயில் சாலையில்தின அதிக مام மதுரை அளவில் பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகில்  உள்ளது இந்த டாஸ்மாக் மற்றும் பள்ளி மாணவ கடைக்குபார்வசதிஇல்லை  மாணவிகள்வந்துசெல்லும் அதனால் குடிமகன்கள் ளது மாக உ முக்கியமானஇந்தரோடு சாலையில் உட்கார்ந்து குடித்துவிட்டுபோதையில் டாஸ்மாக் கடை அருகில்  இருப்பதால் குடிமகன்கள்  தள்ளாடுவது அலப்பரை செய்வதால் பொதுமக்கள்  சரக்குவாங்கிகுடித்துவிட்டு பயத்துடன்செல்கின்றனர் . ரோட்டில்தள்ளாடுவதால் m & ( & ( க் 9 க ७० Q T & [_ 160) W 607 போக்குவரத்துநெரிசல்ஏற்படு  அகற்றக்கோரியும்அதிகாரிகள் அகற்றாதால்பொதுமக்கள்  கிறது மேலும்கோயில்களுக்கு பொது வேதனையடைந்துள்ளனர் . வரும் மக்கள் பயந்து செல்கின்றனர் . டாஸ்மாக் கடை அருகில் மாவட மசூதி அமுதலிங்கேஸ்வரர் நிர்வாகம்பாஸ்மாக்கடையை கோவில் ஆழாக்கு அகற்ற உரிய நடவடிக்கை  அரிசி விநாயகர்கோயில் இன்னும் எடுக்க வேண்டும் GT60 பொதுமக்கள்மற்றும்சமூக பல கோயில் உளளன ஆர்வலர்கள் கோரிக்கை டாஸ்மாக் கடை எதிரில் தனியார் கம்ப்யூட்டர் வைக்கின்றனர் . உபகார்ந்து சாலையில் கும் குடிமகன்கள் குடிக் அருப்புக்கோட்டை, சென்டர் அதில் மாணவ, மாணவிகள்சுமார் ம00க்கும் ே.13 ப்புக்கோட்டை மேல் ன்றனர் இந்த படிக்கி அரு ரோட்டில்கோயில் சாலையில்தின அதிக مام மதுரை அளவில் பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகில்  உள்ளது இந்த டாஸ்மாக் மற்றும் பள்ளி மாணவ கடைக்குபார்வசதிஇல்லை  மாணவிகள்வந்துசெல்லும் அதனால் குடிமகன்கள் ளது மாக உ முக்கியமானஇந்தரோடு சாலையில் உட்கார்ந்து குடித்துவிட்டுபோதையில் டாஸ்மாக் கடை அருகில்  இருப்பதால் குடிமகன்கள்  தள்ளாடுவது அலப்பரை செய்வதால் பொதுமக்கள்  சரக்குவாங்கிகுடித்துவிட்டு பயத்துடன்செல்கின்றனர் . ரோட்டில்தள்ளாடுவதால் m & ( & ( க் 9 க ७० Q T & [_ 160) W 607 போக்குவரத்துநெரிசல்ஏற்படு  அகற்றக்கோரியும்அதிகாரிகள் அகற்றாதால்பொதுமக்கள்  கிறது மேலும்கோயில்களுக்கு பொது வேதனையடைந்துள்ளனர் . வரும் மக்கள் பயந்து செல்கின்றனர் . டாஸ்மாக் கடை அருகில் மாவட மசூதி அமுதலிங்கேஸ்வரர் நிர்வாகம்பாஸ்மாக்கடையை கோவில் ஆழாக்கு அகற்ற உரிய நடவடிக்கை  அரிசி விநாயகர்கோயில் இன்னும் எடுக்க வேண்டும் GT60 பொதுமக்கள்மற்றும்சமூக பல கோயில் உளளன ஆர்வலர்கள் கோரிக்கை டாஸ்மாக் கடை எதிரில் தனியார் கம்ப்யூட்டர் வைக்கின்றனர் . - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
செய்திகள் - ரேஷன் கடையில் CCTV camera சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு வரவில்லையெனசொல்கிறார்கள் ரேஷன் விருதுநகர், மே13 தாலுகாவில்உள்ளபலரேஷன்கடையில் -யில்பொதுமக்கள்வாங்குவதற்கு அரசு சார்பில் பொது மக்களுக்கு விருதுநகர்மாவட்டத்தில் ரேஷன் கடை முன் அரிசி கடத்தும் கும்பல் வந்து வழங்கப்படும்ரேஷன் அரிசியைசிலர்  அரிசிகடத்தலைதடுக்கவேண்டும்என ஆர்வலர்கள்எதிர்பார்க்கின்றனர் . நிற்கின்றன இந்தஅரிசிவாங்கிதீட்டி வாங்கிபதுக்கிவைத்துவெளிமாநில 820 வியாபாரிகளுக்கு விற்பனைசெய்கிறார்கள் மேலும்அரிசி  விருதுநகர் மாவட்டத்தில் ஏழு வைத்து அனுப்பி  வருகிறார்கள் . மாவுபயன்படுத்திவெளிமாநிலத்திற்கு தாலுக்கா தாலுக்கா உள்ளன. ஏழு வைக்கின்றனர் விருதுநகர்  யில் CCTVவைக்க இதன் மூலம் அரிசி கடத்தல் ரேஷன் 99ILu கடை வேண்டும்அந்தகேமராகண்காணிப்பு காரர்கள்கொள்ளைலாபம்பார்த்து -த்தில் ஒரு லட்சத்துக்கும் மாவட் தாசில்தார் மற்றும்தனிதாசில்தார்( அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள்  வருகிறார்கள் இதனைசம்பந்தப்பட்ட வவழங்கல்  ஆகியதுறைகண்காணிக்க  மானியவிலையில்குடிமைப்பொருள்களை அதிகாரிகள்தடுக்கவேண்டும்அதிலும் வட் குறிப்பாகவட்டவழங்கல்பிரிவில்உள்ள  வருகிறார்கள் . வேண்டும் ரேஷன் கார்டுக்கு வாங்கி பயனடைந்து கடை ஒவ்வொருரேஷன்கார்டுதாரர்களுக்கும் தேதியில் இருந்து 10ம் அதிகாரிகள்ரேஷன் களுக்குநேரில் மாதம் முதல்  சடை பருப்பு சீனி, பாமயில், மாதந்தோறும்தலா 20 கிலோ சென்று இருப்புகளை ஆய்வு செய்ய தேதி வரை அரிசி ஆகியபொருட்கள்கொடுக்கின்றன ரேஷன் வேண்டும் ரேஷன் அரிசிகடத்துபவர்  கடைகள் லவசமாக மூலம் 10ம் தேதிக்கு பிறகு அரிசி, வழங்கப்படுகிறது  மற்றும் விற்பனை செய்பவர் மீது கொடுக்கிறார்கள் . அதில் Gur அரிசியைபல 6u வடிக்கை எடுக்க வேண்டும் 9651 ஆயிரம் நட என சமூகஆர்வலர்கள்எதிர்பார்க்கின்றனர் . அரிசி எப்ப கேட்டாலும் வாங்கி பயனடைந்து வருகிறார்கள் . ன்னும் ரேஷன் கடையில் CCTV camera சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு வரவில்லையெனசொல்கிறார்கள் ரேஷன் விருதுநகர், மே13 தாலுகாவில்உள்ளபலரேஷன்கடையில் -யில்பொதுமக்கள்வாங்குவதற்கு அரசு சார்பில் பொது மக்களுக்கு விருதுநகர்மாவட்டத்தில் ரேஷன் கடை முன் அரிசி கடத்தும் கும்பல் வந்து வழங்கப்படும்ரேஷன் அரிசியைசிலர்  அரிசிகடத்தலைதடுக்கவேண்டும்என ஆர்வலர்கள்எதிர்பார்க்கின்றனர் . நிற்கின்றன இந்தஅரிசிவாங்கிதீட்டி வாங்கிபதுக்கிவைத்துவெளிமாநில 820 வியாபாரிகளுக்கு விற்பனைசெய்கிறார்கள் மேலும்அரிசி  விருதுநகர் மாவட்டத்தில் ஏழு வைத்து அனுப்பி  வருகிறார்கள் . மாவுபயன்படுத்திவெளிமாநிலத்திற்கு தாலுக்கா தாலுக்கா உள்ளன. ஏழு வைக்கின்றனர் விருதுநகர்  யில் CCTVவைக்க இதன் மூலம் அரிசி கடத்தல் ரேஷன் 99ILu கடை வேண்டும்அந்தகேமராகண்காணிப்பு காரர்கள்கொள்ளைலாபம்பார்த்து -த்தில் ஒரு லட்சத்துக்கும் மாவட் தாசில்தார் மற்றும்தனிதாசில்தார்( அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள்  வருகிறார்கள் இதனைசம்பந்தப்பட்ட வவழங்கல்  ஆகியதுறைகண்காணிக்க  மானியவிலையில்குடிமைப்பொருள்களை அதிகாரிகள்தடுக்கவேண்டும்அதிலும் வட் குறிப்பாகவட்டவழங்கல்பிரிவில்உள்ள  வருகிறார்கள் . வேண்டும் ரேஷன் கார்டுக்கு வாங்கி பயனடைந்து கடை ஒவ்வொருரேஷன்கார்டுதாரர்களுக்கும் தேதியில் இருந்து 10ம் அதிகாரிகள்ரேஷன் களுக்குநேரில் மாதம் முதல்  சடை பருப்பு சீனி, பாமயில், மாதந்தோறும்தலா 20 கிலோ சென்று இருப்புகளை ஆய்வு செய்ய தேதி வரை அரிசி ஆகியபொருட்கள்கொடுக்கின்றன ரேஷன் வேண்டும் ரேஷன் அரிசிகடத்துபவர்  கடைகள் லவசமாக மூலம் 10ம் தேதிக்கு பிறகு அரிசி, வழங்கப்படுகிறது  மற்றும் விற்பனை செய்பவர் மீது கொடுக்கிறார்கள் . அதில் Gur அரிசியைபல 6u வடிக்கை எடுக்க வேண்டும் 9651 ஆயிரம் நட என சமூகஆர்வலர்கள்எதிர்பார்க்கின்றனர் . அரிசி எப்ப கேட்டாலும் வாங்கி பயனடைந்து வருகிறார்கள் . ன்னும் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுகுமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூகநல தாசில்தார் உதயகுமார் தலைமை இடத்து வட்டாட்சியர் மஞ்சுநாதன் மற்றும் விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - ShareChat
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் மற்றும் களியக்காவிளை பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு கன்னியாகுமரி, மே.12 - கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் மற்றும் களியக்காவிளை பேரூராட்சிக்குட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25- ன் கீழ் கருங்கல் பேருந்து நிலையம் மேம்பாடு செய்ய ரூ.5.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கருங்கல் பேருந்து நிலைய A பிளாக் கட்டிடத்திற்கான பூச்சு வேலை முடிவடையும் நிலையில் இருக்கிறது. B பிளாக் கட்டிடத்திற்கான கட்டுமான பணி முடிவடைந்து பூச்சு வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிழலகத்திற்கான கட்டுமான பணி கிரேடு பீம் வேலை முடிந்து காளம் அமைக்கும் பணிக்கான கம்பி வேலை நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பேருந்துநிலையத்திற்குள் பேருந்துகள் வரும் தோரணவாயில் மற்றும் பேருந்துகள் வெளியேறும் தோரணவாயில் ஆகியவற்றிற்கு தனித்தனியாக பணியாளர்களை வைத்து வேலை செய்ய வைக்க வேண்டும். 24x7 என்ற அடிப்படையில் பணியாளர்களை பயன்படுத்தி தொடர்ந்து வேலை செய்ய வைக்க வேண்டும். அதற்கு தேவையான பணியாளர்களை கூடுதலாக ஏற்பாடு செய்ய வேண்டும். கட்டிட வேலைகள் தனித்தனியாக நடைபெறுவதாலும், பயணிகள் நிழலகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாலும், அதனை தவிர்த்து மீதமுள்ள பகுதியில் தரைகாங்கிரீட் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். கட்டுமான பொருட்களின் தரம் ஆய்வு செய்து அறிக்கை பெறப்பட வேண்டும். பயணிகள் நிழலகத்திற்கான கூரைப்பணிகள் உடனடியாக அமைப்பதுடன் அதன் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் அமைக் வேண்டும். பக்கசுவர் யாவும் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட வேண்டும். கருங்கல் பேருந்து நிலைய மேம்பாடு பணியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி மற்றும் பயணிகள் அசவுகரியங்களை தவிர்க்கும் பொருட்டு மேற்கண்ட பணிகள் யாவும் இன்றைய தினத்திலிருந்து 30 தினங்களுக்குள் செய்து முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் அருகாமையில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 7000 மக்கள் தினசரி பயனடைவார்கள். எனவே இப்பணிகளை துரிதமாக மேற்கொள்வதோடு, கட்டுமான பணிகள் தரமானதாகவும், உறுதிதன்மையினை உறுதி செய்திட ஒப்பந்ததாரர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 2024-2025 ம் வருடம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9.20 கோடி மதிப்பீட்டில் வார்டு எண் 03- ல் களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுதல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கூரை பணிக்கான தூண்கள் அமைக்கும் பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், சுவர்களில் பூச்சு பணி செய்யவும், களியக்காவிளை மீன்சந்தையிலிருந்து வரும் கழிவுநீர் வடிகாலை சீரமைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கட்டுமான பொருட்களுக்கான பற்றாக்குறை சரி செய்து கொடுக்க உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி இயக்குநர் ஆகியோர்கள் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், விரைந்து பேருந்து நிலைய பணிகள் முடித்து களியக்காவிளை பேருந்து நிலையம் திறப்புவிழாவிற்கு ஆயத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். நடைபெற்ற ஆய்வுகளில் உதவி செயற்பொறியாளர் (பேரூராட்சிகள்) பாண்டியராஜன், செயல் அலுவலர்கள் திரசத்யதாஸ், (கருங்கல்), திருமதி.சந்திரகலா (களியக்காவிளை), கருங்கல் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சிவராஜ், இளநிலை பொறியாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
செய்திகள் - ShareChat