#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
விருதுநகர் மாவட்டம், மாரியம்மன் கோவில் திடலில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினம்-2026-னை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) செந்தில் குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 103 வது பிறந்த நாள் விழா
கேக் வெட்டி கொண்டாட்டம்
தூத்துக்குடி, ஜூன்.03
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் முத்தமிழ் அறிஞர் முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் 103 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்து கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் கலைஞர் அரங்கம் அருகே கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
நிகழ்வில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியை சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிரணியினர் மற்றும் கழக தொண்டர்கள் கலைஞருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், ராயல் வேலூர் செஸ் அசோசியேசன் ஆண்டுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தலைவர் மனோகரன் செயலாளர் மணிகண்ட சாமி பொருளாளர் பிரகாஷ் துணைத் தலைவர் டாக்டர் பால கணேசன் டாக்டர் தங்க மாரியப்பன் காட்பாடி தாலுக்கா பரமேஷ் வேலூர் தாலுகா தினகரன் அணைக்கட்டு தாலுக்கா பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி துவக்கம்
ஆட்சியர் விஷு மகாஜன் மனுக்கள் பெற்றார்.
தூத்துக்குடி ஜூன் 3
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி பணி தொடங்கியது. ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பசலி 1435 ஆம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடிவு வருடாந்திர "ஜமாபந்தி" பணி துவங்கியது. இதன் முதற்கட்டமாக ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கணக்கு முடிப்பு மற்றும் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் ஜமாபந்தி காலத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது எவ்வித தாமதமில்லாமல் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உரிய துரித சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏரல் வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை சார்ந்த கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் ஏரல் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் சூரனூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக முன்னோடி நிர்வாகி திருவாரூர் செந்தில் பாண்டியன் அவர்களது தலைமையில் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அனைவருக்கும் சால்வை அனிவித்து கட்சிகள் தீவிரமாக செயல்பட அறிவுறுத்தினார் மேலும் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் தளபதி விஜய் அவர்களது பிறந்த நாளில் 52 இடங்களில் திருவாரூர் ஒன்றியத்தில் கொடி ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை சூரனூர் பொறியாளர் கணேஷ் செய்திருந்தார். அருகில் மாவட்ட நகர நிர்வாகிகள் உள்ளன.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. பி. எஸ். லீலா அலக்ஸ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 16 நபர்களுக்கு ரூ.3,95,000/- மதிப்பில் தீருதவி தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இந் நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பூ. காஞ்சனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன் உட்பட பல உடனிருந்தனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31-2026 தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண்ஸ்ருதி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாநகர நகர் நல அலுவலர் கௌரிசங்கர் உட்பட பலர் உள்ளனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கா.பொற்கொடி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று. கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆகியோர் அனைத்து அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர். உடன் இயக்குநர், மீன்வளத்துறை விஜயகார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மற்றும் கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) திருமதி. ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் உட்பட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் துவக்கி வைத்தார். உடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினாய்குமார் மீனா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சுஜிதா உட்பட பலர் உள்ளார்கள்.













