🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை கொன்ற நர்சிங் கல்லூரி மாணவி மற்றும் காதலன் கைது..!
*கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட் புதரில் ஒரு பக்கெடில், அடைக்கப்பட்டு இறந்து கிடந்த பச்சிளம் குழந்தை-பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொன்ற நர்சிங் மாணவி.ரெஜினா(20) மற்றும் அவரது காதலன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்த முகேஷ்(25) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்-இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு முன் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் பிறந்த சில மணி நேரத்தில் வெளியே வீசி கொன்றது தெரிய வந்துள்ளது-இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.* #தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரத்தில் தேவர் சிலைக்கு விளாத்திகுளம் தி.மு.க வேட்பாளர் ஜி.வி. மார்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி ஏப்.1
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் அமைந்துள்ள தேசமும் தெய்வீகமும் தனது இருகண்கள் என போற்றிய தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு விளாத்திகுளம் திமுக வேட்பாளர் ஜி.வி. மார்க்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், புதூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் பேரூர் கழக செயலாளர் பாரதி கணேசன், எட்டையபுரம் பேரூராட்சி சேர்மன் ராமலட்சுமி சங்கரநாராயணன் கழக நிர்வாகி மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். #தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா அலுவலகம், வேலூர் சட்டமன்ற தொகுதியில் 2026ம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, தமிழக வெற்றி கழகம் சார்பில் வினோத் கண்ணா போட்டியிட வேட்பு மனுவினை வேலூர் தேர்தல் அலுவலர் செந்தில் குமார் வழங்கினர். இந்நிகழ்வின் போது உதவி தேர்தல் அலுவலர் பழனி உடனிருந்தனர். மற்றும் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பசும்பொன்னில் தேவர் சிலைக்கு மரியாதை*
#தற்போது செய்தி #செய்திகள்
கமுதி, ஏப், 01
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், தமிழ்நாடு நிதி அமைச்சர் மற்றும் திருச்சுழி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரம் விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
புதூரில் உற்சாகக் கொண்டாட்டம்: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அறிவிப்பை இனிப்புடன் கொண்டாடிய தொண்டர்கள்*
மதுரை வடக்கு மாவட்டத்தின் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக விஜய் அன்பன் கல்லானை அறிவித்ததை தொடர்ந்து, புதூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் மற்றும் பொதுச் செயலாளர் இணைந்து வெளியிட்ட இந்த அறிவிப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான விஜய் அன்பன் கல்லானைக்கு ஆதரவாக புதூர் பஸ் ஸ்டாண்டில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற உறுதியாக பணியாற்றுவோம் என்ற உறுதியையும் தெரிவித்தனர்.
புதூர் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், “தளபதி விஜயின் தலைமையில் கழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. விஜய் அன்பன் கல்லானை வெற்றி பெறச் செய்வது எங்கள் முதன்மை குறிக்கோள்” என்று தெரிவித்தனர்.
#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் ✍️🌹திருநெல்வேலி ஆத்தங்கரை சுடலைமாடன் சாம கொடை நடைப்பெற்றது. திரளான மக்கள் கலந்து கொண்டனர் #💞Feel My Love💖 #தற்போது செய்தி #செய்திகள்
#செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
மானாமதுரையில் தமுஎகச சார்பில் மக்கள் கவி பாரதி பிறந்தநாள் விழா மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பு கருத்து அரங்கம் நடைபெற்றது.
*****
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மானாமதுரை கிளை சார்பாக மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் அரசியல் சாசன பாதுகாப்பு கருத்தரங்கம் கிளைத்தலைவர் தேவதாஸ் தலைமையிலும், பொன்னையா சுந்தர பாண்டியன், பா. செல்வம், குரு. செல்வம் மற்றும் நந்தினி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர் கழக செயலாளர் பொன்னுசாமி கலந்து கொண்டார். இதில் கிளைச் செயலாளர் ரசீந்திரகுமார் வரவேற்புரையும், திருமாவளவன் சிறப்புரையும் ஆற்றினர். சிறப்புரையாற்றி பேசிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மானாமதுரை ஒவெசெ மேல்நிலைப் பள்ளியை முழுமையான அரசு பள்ளியாக மாற்றுவதற்கு பரிந்துரை செய்தார். இவ்விழாவை முன்னிட்டு பரதம், பாடல்கள், கவிதை, கண்காட்சி, கலைநிகழ்ச்சி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் மீனா பிரபாகரன் பரிசுகள் வழங்கினார். வாழ்த்துரை மற்றும் நன்றியுரையுடன் இவ்விழா இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தன், மாவட்டத் தலைவர் சிபூ, மாவட்டப் பொருளாளர் பாலமுருகன் துணைச் செயலாளர் மாணிக்கவள்ளி, சமூக ஆர்வலர் சரவணன் கருப்பையா, ஆசிரியர் முத்துராமலிங்கம், சோமசுந்தரபாரதி, முனைவர் அழகுமுருகன், சரவணன், நாரயணன்துரை, தங்கவேல், அறிவொளிபாண்டி, ஆசிரியர் வெங்கடேஷ் கமல்ராஜன், பஞ்சுராஜ், ஆதரவு அறக்கட்டளை ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், தமுஎகச நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.













