#ராசிபலன் *╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 பங்குனி: 𝟭𝟴 🇮🇳꧂_*
*_🌼 புதன்- கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟭•𝟬𝟰•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் லாபம் ஏற்படும். திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்ப்புக்களின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உதவி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️அஸ்வினி : காரிய சித்தி உண்டாகும்.
⭐️பரணி : ஆதாயகரமான நாள்.
⭐️கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
பழைய சொத்துக்களை மாற்றி அமைப்பீர்கள். நிர்வாக துறைகளில் மதிப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புது விதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️கிருத்திகை : திறமை கூடும்.
⭐️ரோகிணி : பிரார்த்தனை நிறைவேறும்.
⭐️மிருகசீரிஷம் : அமைதி காக்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பயணம் மூலம் அனுபவம் மேம்படும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்கள் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : அனுபவம் மேம்படும்.
⭐️திருவாதிரை : தெளிவுகள் பிறக்கும்.
⭐️புனர்பூசம் : அனுகூலமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில முடிவுகள் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐புனர்பூசம்: லாபகரமான நாள்.
⭐பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
⭐ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். முகத்தில் பொலிவுகள் மேம்படும். வரவேண்டிய வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.
⭐மகம் : உதவிகள் கிடைக்கும்.
⭐பூரம் : பொலிவுகள் மேம்படும்.
⭐உத்திரம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். உயர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம்
⭐அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐சித்திரை : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். கை கால்களில் ஒரு விதமான வலிகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.
⭐சித்திரை : பதற்றமின்றி செயல்படவும்.
⭐சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐விசாகம் : புரிதல்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல்கள் அமையும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் அமையும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மதிப்புகள் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐விசாகம் : சிந்தனைகள் மேம்படும்
⭐அனுஷம் : சாதகமான நாள்.
⭐கேட்டை : உடைமைகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
கமிஷன் தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகன தொடர்பான விரயங்கள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் வகையில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐மூலம் : லாபங்கள் உண்டாகும்.
⭐பூராடம் : விரயங்கள் ஏற்படும்.
⭐உத்திராடம் : அனுகூலமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். ஆராய்ச்சி சிந்தனைகள் மற்றும் அதற்கான உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் பணிகளில் மாற்றமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும். புது விதமான சிந்தனைகள் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மேன்மை உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம்.
⭐உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
⭐திருவோணம் : மாற்றமான நாள்.
⭐அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️அவிட்டம் : உடைமைகளில் கவனம்
⭐️சதயம் : புரிதல்கள் உண்டாகும்.
⭐️பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
அலுவல் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். முயற்சி ஈடேறும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
⭐️ரேவதி : மாற்றம் உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
#🙏 தினசரி பஞ்சாங்கம்🙏🏵️💮🌼🌺🌷 *🕉🕉🌼🌸🌸உ🌸🌸🌼🕉🕉*
*🚩🕉️🔯 ௐ நமசிவாய✡️🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛 ⊹•꧂*
🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜
🛣 _*திருவெற்றியூரில்*_
*_பக்தர்கள் வேண்டிகின்ற_*
*வரங்களை வாரி வழங்கும்*
*வள்ளல் சக்தி நாயகியாம்*
*_🔥 அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பா௧ம்பிரியாள் அம்மன்*
*_🛕 உடனுறை 🐍_*
*_💥 வல்மீகநாத ॐ ஸ்வாமி_*
*🙏🏻திருவடிகளே🙏🏻 சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 பங்குனி:- 𝟭𝟴. :~*
*🌼 【 𝟬𝟭•𝟬𝟰•𝟮𝟬𝟮𝟲 】*
*🌸 புதன்- கிழமை.*
*☸️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:-*
*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம்}*
*🩸 2】அயனம்:- உத்தராயணம்.*
*⚛ 3】ருது:~ சிசிர - ருதௌ.*
*🪔 4】மாதம்:~ பங்குனி:-*
*( மீன - மாஸே. )*
*🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:-*
*🌕 பௌர்ணமி.*
*♨️ 6 】திதி:~ சதுர்த்தசி:-*
*காலை: 07.37 வரை, பின்பு பௌர்ணமி.*
*🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - பௌர்ணமி.*
*🌼 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*📅 9】நாள்: ~ புதன்கிழமை, { ஸௌம்ய- வாஸரம் } -*
*மேல் - நோக்கு நாள்.* ⬆️
*🌟 10】நக்ஷத்திரம்:-*
*உத்திரம்:- மாலை 04.37 வரை பின்பு அஸ்தம்.*
*🦋 11】நாம - யோகம்:*
*மாலை: 03.06 வரை விருத்தி, பின்பு துருவம்.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*மாலை 04.37 வரை அமிர்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.*
*🍄 13】கரணம்: ~ 06.00 - 07.30.*
*காலை: 07.37 வரை வணிசை, பின்பு இரவு: 07.47 வரை பத்திரை, பின்பு பவம்.*
*🦚 நல்ல நேரம்:-*
*காலை: ~ 09.30 - 10.30 AM.*
*மாலை: ~ 04.30 - 05.30 PM.*
*🕰 கௌரி- நல்ல நேரம்:*
*காலை: 10.30 - 11.30 AM.*
*மாலை: 06.30 - 07.30 PM.*
*🪴 ராகு காலம்:-*
*பிற்பகல்: ~ 12.00 - 01.30 PM .*
*🐃 எமகண்டம்:*
*காலை: 07.30 - 09.00 AM.*
*🪻 குளிகை:*
*காலை: ~ 10.30 - 12.00. PM.*
*🌅 சூரிய - உதயம்:*
*காலை: 06.12 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: 06.17 PM.*
*🪩 சந்திராஷ்டம நட்சத்திரம்:*
*அவிட்டம் - சதயம்.*
*🏵️ சூலம்: ~ வடக்கு.*
*🥛 பரிகாரம்: ~ பால்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🔔இன்றைய நன்நாளில்: 🙏🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🔱 பங்குனி உத்திரம்.*
*🌕 பௌர்ணமி.*
*🏛 வங்கி முழு வருட கணக்கு முடிவு.*
*😇 முட்டாள்கள் தினம்.*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_*
*━━━━━━━━ॐ━━━━━━*
*🌴🌴 பங்குனி: 𝟭𝟴:~ 🌴🌴*
🦋 *{ 𝟬𝟭•𝟬𝟰•𝟮𝟬𝟮𝟲 }* 🐝
🏵 *புதன் - கிழமை.* 💦
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*_🔯 சந்திராஷ்டம ராசி:_*
*━━━━━━ॐ━━━━━━━*
*💥 இன்றைய நாள் முழுவதும் கும்பம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 பழனி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவில் தேரோட்ட வைபவம்.*
*🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் திருக்கோவிலில் தண்டியலில் ரெங்க மன்னார் யாக வாகனத்தில் திருக்கல்யாணம்.*
*🪔 பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் ஆலயத்தில் தேரோட்ட வைபவம்.*
*🪔 ராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் ஆலயத்தில் சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா பவனி.*
*🪔 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில் விடையாற்று உற்சவ வைபவம்.*
*🪔 திருப்புல்லாணி ஸ்ரீஜெகநாதப்பெருமாள் ஆலயத்தில் தேரோட்ட திருவிழா.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🎠 குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 வழிபாடு, - தரிசனம் செய்ய நல்ல நாள்.*
*🌟 வாகன பழுதுகளைசரி செய்வதற்கு ஏற்ற நாள்.*
*🌟 கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.*
*🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள உகந்த நாள்.*
*🌟 நடனம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு சிறந்த நாள்.*
🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:-★★★ 📝_*
*━━━━━━━ॐ━━━━━━━━━*
*🪦 திருமணத் தடை உள்ளவர்கள். மாதாமாதம் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தொடர்ந்து 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பாலாபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும்.*
*◄•━━━━✧★★✧•━━━━•►*
*( 🪦 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலின் இந்த பஞ்சாங்கப் பதிவில் ஹோரைக்கு கீழே கடைசியில் 👇*
*👌 சிந்தனை கருத்து - ஆரோக்கிய தகவல் பொது அறிவு - சமையல் குறிப்பு பொன்மொழி. இவை அனைத்தும் ஒரே பதிவாக தினமும் இடம்பெறும், அன்பர்கள் படித்து பயன்பெறுக. )*
🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮
*_♊ லக்ன - நேரம்:_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
*_📖 ( திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_*
*🐠 மீனம்- லக்னம்:-*
*காலை: 05.18 - 06.58 AM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*காலை: 06.59 - 08.40 AM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*காலை: 08.41 - 10.34 AM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*காலை: 10.35 - 12.39 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:*
*பகல்: 12.40 - 02.51 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*பகல்: 02.52 - 04.57 PM வரை.*
*👩💼 கன்னி - லக்னம்:-*
*மாலை: 04.58 - 06.57 PM வரை.*
*⚖ துலாம்- லக்னம்:-*
*இரவு: 06.58 - 08.56 PM வரை.*
*🦂 விருச்சிக - லக்னம்:-*
*இரவு: 08.57 - 11.02 PM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*இரவு: 11.03 - 01.14 AM வரை.*
*🐴 மகரம் - லக்னம்.*
*இரவு: 01.15 - 03.20 AM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*இரவு: 03.21 - 05.13 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩 புதன் கிழமை - ஓரை_*
*_⛲ ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🕰️ காலை: 🔔🔔*
6-7.புதன். 💚 👈சுபம் ✅
7-8.சந்திரன்.💚👈சுபம் ✅
8-9. சனி.. ❤👈அசுபம் ❌
9-10.குரு. 💚 👈சுபம் ✅
10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌
11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
1-2. புதன். 💚 👈சுபம் ✅
2-3. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🌠 மாலை: 🔔🔔*
3-4. சனி.. ❤👈அசுபம் ❌
4-5. குரு. 💚 👈சுபம் ✅
5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*📚 நாளும் ஒரு சிந்தனை:-*
எதிர்மறையான சூழல்களில் கூட உங்கள் மனதை அமைதியாகவும், நேர்மறையாகவும் வைத்திருக்க பயிற்றுவிப்பது நல்லது...!!!
*📋 நாளும் ஒரு பொது அறிவு:-*
போக்குவரத்துக்கென காவலர்களே இல்லாத நாடு எது..??
*:-நியூசிலாந்து.*
*🍎 நாளும் ஒரு நலம் தரும் தகவல்:-*
கல்லீரல் நன்கு செயல்புரிய கரும்புச்சாறு நன்கு துணைபுரிகிறது.
*📰 நாளும் ஒரு செய்தி:-*
சிறுத்தையானது பூனையைப் போன்றே ஒலி எழுப்பும்.
*🫕 நாளும் ஒரு சமையல் குறிப்பு:-*
கீரை சமைக்கும் போது, மிளகு அளவில் சுண்ணாம்பை சேர்த்தால், கீரையின் நிறம் மாறாது.
*⚜️ நாளும் ஒரு பொன்மொழி:-*
வாக்கு செலுத்துவதை நாம்
தவிர்ப்போமானால்,
நம்மால் தவிர்க்கப்பட
வேண்டியவர்கள்
நம்மை ஆள நேரிடும்..!
*- அப்துல் கலாம்.*
*📆 பங்குனி: 18 & ஏப்ரல்: 1*
▪️ *முட்டாள்கள் தினம்.*
▪️ *1935:- இல் "இந்திய ரிசர்வ் வங்கி" ஆரம்பிக்கப்பட்டது.*
▪️ *1936-இல் ஒடிசா தனி மாநிலமானது.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1621- *குருதேவ் பகதூர்* (சீக்கிய குரு)
♋♋♋♋♋♋♋♋♋♋
#🖌பக்தி ஓவியம்🎨🙏 முருகன்
சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய ஒரு ஆய்வு ......
ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள். தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.
"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும், அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய். சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1. நெற்றி (பிரம்மந்திரா)
2. தொண்டைக் குழி (ஆங்ஞை)
3. மார்புக்குழி (விசுத்தி)
4. தொப்புள் குழி (மணிப்பூரம்)
5. ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6. முதுகுத்தண்டு முடிவு (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவ முடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது. இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். "முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடு". வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை. இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான், இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி, இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே! சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம். குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்.
"உள்ளொளியாய் இருந்து
உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி
உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி
எங்குமுனைக் காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன். இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரே அவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்கு கடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .
ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும். எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும். எனவே, எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும், அதை ஆவணப்படுத்தாவிடில் வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை பிள்ளையார் என்று அழைத்தார்.
சிவன் அணுத்துகள் atom, என்பதை உணர்ந்த அதந்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கை ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிறார்கள். சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல். இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு.
விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.
ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும். என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம்.
பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும், ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.
ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.
🙏 🦚🐓








![காலை வணக்கம் - PREPARATION] doesnt assure victory; ITASSURES CONFIDENCE. PREPARATION] doesnt assure victory; ITASSURES CONFIDENCE. - ShareChat காலை வணக்கம் - PREPARATION] doesnt assure victory; ITASSURES CONFIDENCE. PREPARATION] doesnt assure victory; ITASSURES CONFIDENCE. - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_988985_8b6b787_1774924981278_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=278_sc.jpg)




![காலை வணக்கம் - Good Morning "No expensive] wealth is required to bring a smile] on the face iU only requires good company Good Morning "No expensive] wealth is required to bring a smile] on the face iU only requires good company - ShareChat காலை வணக்கம் - Good Morning "No expensive] wealth is required to bring a smile] on the face iU only requires good company Good Morning "No expensive] wealth is required to bring a smile] on the face iU only requires good company - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_153036_e3dca92_1774919151384_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=384_sc.jpg)