
saravanan
@ethumillay
Video Grapher. side velay, BALE SECTION, TEXTILE.
#sree sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
*🙏சிவவாக்கியம்..!*
➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿
💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚
*நூல்: 210...!*
அக்கர மனாதியோ வாத்துமா வனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியோ
தக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ
மிக்கவந்த யோகிகாள் விரைந்துரைக்க வேணுமே.
*பொருள் விளக்கம் :*
உடல் அனாதியா? உயிரான ஆன்மா அனாதியா? ஐம்பூதங்களும், ஐம்புலன்களும் அனாதியா? ஆராய்ந்தறிந்து விளக்கத்தக்க நூல்கள் அனாதியா? சதாசிவம் அனாதியா? யோக ஞானம் மிகுந்து மேற்கூறியவற்றை விளக்கவல்ல யோகிகளே! விரைந்து விளக்கம் தாருங்கள்.
*🌷நமசிவய ௐ🌷*
*சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி வணங்குகின்றேன்....!!!!*
*🙏சிவாய நம🙏*
*🙏திருச்சிற்றம்பலம்🙏*
*வளரும்...*
🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧🟢🟧
#nalaairam thiviya prabantham. திவ்ய பிரபந்தம்...!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🔵🟠🔴🟤🟣🟢🟡🔵🟠🔴🟤🟣🟢🟡🔵
*ஸ்ரீ:*
*ஸ்ரீமதே ராமாநுஜாய நம:*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️🧡💛
*ஸ்ரீமத் வரவரமுநயே நம:*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*பெரியாழ்வார் திருமொழி...!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿
*பாசுரம்:148...!*
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலைநொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர்விடை செற்றுஇளங் கன்றுஎறிந் திட்ட இருடீகே சாஎன்தன் கண்ணே.
*விளக்க உரை:*
***- நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப்போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம். தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும், அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க. காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.
*🌹பாடல் என் : 149 ஐ நாளை நாம் பார்க்கலாம்🌹*
*🙏ஸ்ரீமன் நாராயணனிம்🙏*
*🙏ஓம் நமோ🙏*
*🙏நாராயணா🙏*
*தொடரும்...*
🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨🟥🟨
https://www.instagram.com/reel/DXW2Jjzkcne/?igsh=bGlsMHh1aGtuaDA4 #echarikkay kollvom petrorgale.
#emakku miga piditha Palagaaram. குறிப்புகள் :*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*தேங்காய் திரட்டுப் பால் செய்முறை விளக்கம்:*
தேங்காய் திரட்டுப் பால்
என்பது தேங்காய், வெல்லம் மற்றும் நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான பாரம்பரிய இனிப்பு வகை ஆகும். இதனைச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை கீழே காணலாம்:
*தேவையான பொருட்கள்:*
துருவிய தேங்காய்: 2 கப்
வெல்லம்: 1 கப் (தூள் செய்தது)
பச்சரிசி: 1 மேசைக்கரண்டி (1 மணிநேரம் ஊறவைத்தது) அல்லது அரிசி மாவு
நெய்: 2 முதல் 4 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள்: ஒரு சிட்டிகை
முந்திரி மற்றும் திராட்சை: வறுக்கத் தேவையான அளவு.
*செய்முறை:*
தேங்காய் அரைத்தல்:
ஊறவைத்த பச்சரிசியுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
வெல்லக் கரைசல்:
ஒரு வாணலியில் வெல்லத்தைப் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரையவிடவும். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
கிளறுதல்:
வடிகட்டிய வெல்லக் கரைசலை மீண்டும் வாணலியில் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து மிதமான தீயியில் கைவிடாமல் கிளறவும்.
நெய் சேர்த்தல்:
கலவை சற்று கெட்டியாகத் தொடங்கும் போது, நெய்யைச் சிறுகச் சிறுகச் சேர்த்து கிளறவும்.
வாசனை மற்றும்
அலங்காரம்:
கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் பக்குவத்தில், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
மற்றொரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து இதில் சேர்க்கவும்.
இறுதிப் பக்குவம்:
கலவை நன்றாகத் திரண்டு அல்வா போன்ற பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இந்தத் தேங்காய் திரட்டுப் பாலை உடனே பரிமாறலாம் அல்லது ஆறவிட்டுச் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்.
🔲🔘🔲🔘🔲🔘🔲🔘🔲🔘🔲🔲🔘🔲🔘🔲🔘🔲🔘🔲🔘🔲
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்,*
விசாகம் நட்சத்திரக்காரர்களின் கோயில்.
*மூலவர் : முத்துக்குமாரசுவாமி.*
*தீர்த்தம் : பூஞ்சுனை.*
*பண்பொழி -627 807.*
*செங்கோட்டை,*
*திருநெல்வேலி மாவட்டம்.*
*காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*
*+19 4633-237 131, 237 343, 237 122, 94435 08082, 94430 87005.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*
*★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்* *Mobile No* +918072055052
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝*
*!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!*
*சிறப்பு : சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம், பந்தளமன்னர் எழுப்பிய கோயில் இது இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில் குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.*
*விசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம் : வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள் சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும் தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர் தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர்.*
*இங்குள்ளமூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு, மலைமீது ஏறிச்செல்ல 620 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். விநாயகர் சன்னதிக்கு 16 படிக்கட்டுகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள்.*
*விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர் வேண்டியதையெல்லாம் கொடுக்கும் அருள்கடவுளாக உள்ளார்.*
*கோயில் பிரகாரங்களில் தீபம் ஏற்றுகின்றனர்.*
*இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்திரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும் அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம் இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.*
*மூக்கன் இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர். கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை அகழ்ந்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசல் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது கிராமப்புறத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள் நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்கன் முக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படும். இது திருமலை முருகனின் பெயர் தான், மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி முக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரை கூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காண முடியும். இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக உள்ளது.*
*பந்தளமன்னர் எழுப்பிய கோயில் : பந்தளமன்னர் எழுப்பிய கோயில் எது என யாரைக் கேட்டாலும், இது தெரியாதா! சபரிமலை ஐயப்பன் கோயில், என்பார்கள். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இக்கோயில் உருவாக காரணமாக இருந்த பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி பந்தளமன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளார். இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில் குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.*
*வாழை மட்டையில் கல் ஏற்றி இழுத்தவர், பண்பொழி அருகிலுள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார் இவரது கணவர் கங்கைமுத்து தேவர் இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் கோரினார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவெடுத்தார். இதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது இவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை.*
*தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய வரதர் மஸ்தான் என்ற மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள் என்றதும் அவருக்கே தன் சொத்துக்களை எழுதி வைத்தார். மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தார். இந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.*
*மலைப்பாதை: திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி கோயிலை அடைய வேண்டும் இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மலைப்பாதையின் துவக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. இவரை வணங்கி அடிவாரத்திலுள்ள பாதமண்டபத்தைத் தரிசித்து படியேற வேண்டும். இரண்டு பாதங்கள் இந்த சன்னதியில் உள்ளன பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும்.*
*அஷ்டபத்ம குளம் : மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபதம குளம் என்று அழைத்தனர் இந்தக் குளத்திற்கு தற்போது பூஞ்சுளை என் பெயரிட்டுள்ளனர். இங்கு இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர் இதில் பூத்தது. தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இது முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு உமையவளின் ஏழு சக்திகளே சப்தகன்னியர் ஆவர்.*
*விசாக நட்சத்திர கோயில் : விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம் கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள் இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழவில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம் வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.*
*மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார்: மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. இவரை சோடச விநாயகர் என்பர். 16படிகள் ஏறி தரிசிப்பதால், இவரை வணங்குவோருக்கு பதினாறு செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.*
*அன்னதானம் : ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் சபை சார்பில் இங்கு அன்னதானம் காலை மணி முதல் இரவு வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது.*
*ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமான்னு நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாடும் அதற்குள் சிலை இருக்கும் அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்றார்.*
*அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார் பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எசப்பினர் இக்கோயிலிலுக்கு ஏற 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவபடிக்கட்டுக்கள். எனவே இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது ஐதீகம் இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில் குளத்துப்புழை ஆகியவை உள்ளன. சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்பம்சம்.*
*பந்தளமன்னர் எழுப்பிய கோயில் இது இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.*
*இனிய காலை வணக்கம்.🙏💐*
*🌹அன்புடன்🌹*
*சோழ.அர.வானவரம்பன்.*
*+918072055052.*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
#innraya SINTHANAY சிந்தனை.*.( 21.04.2026.)
...............................................................
*இலக்கை நிர்ணயுங்கள்..''*
...............................................
உயரிய இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கு முறையான திட்ட்ங்களை வகுத்து, சரியானர்களின் வழிகாட்டுதல்களோடு, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறவர்கள் மாபெரும் வெற்றியாளனாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது.
எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்களுக்கென்று சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஏதேனும் அடைய வேண்டும் என்று நம் மனம் விருப்பப்படுவதற்குப் பெயர் இலக்கு அல்ல, அதற்குப் பெயர் ஆசை.
ஆசை வேறு, இலக்கு வேறு. இரண்டையும் ஒன்றுக்கொன்று குழப்பி விடக்கூடாது. ஆசை என்பது ஒன்றை விரும்புவதைத் தாண்டி எதுவும் இல்லை என்பது... இலக்கானது விருப்பப்படுவதோடு நின்று விடுவது இல்லை,
அதனை அடைவதற்கான தீவிர முயற்சியை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது.
வாழ்க்கையில் எதை அடைய வேண்டுமென்று நாம் எடுக்கும் திடமான முடிவுக்குப் பெயர் தான் இலக்காகும்.
இலக்கில்லா வாழ்க்கை.. உப்பில்லா பண்டம்
”உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
அதுபோல இலட்சியங்கள் இல்லாத வாழ்க்கையும் சுவாரசியமில்லாதவையாகத் தான் இருக்கும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மைக்கும், சலிப்புக்கும் முக்கிய காரணமே இலக்குகள் இல்லாமலிருப்பது தான்.
எனவே நாம் செய்கின்ற வேலையையோ அல்லது படிக்கின்ற படிப்பையோ தீராத ஆர்வத்தோடும், பெரும் ஈடுபாட்டுடன் செய்வதற்குத் தெளிவான இலக்குகள் அமைத்துக் கொள்வது அவசியமாகும்.
ஜான் எப்.கென்னடி அமெரிக்க அதிபராக இருந்த சமயம், அவர் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களில் ஒருவனிடம்,
“உன்னுடைய இலக்கு என்ன?” என்று கேட்டார்.
“இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் ஒருநாள் நான் ஒருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு” எனப் பதிலளித்த அந்த மாணவன் தான் பின்னாளில் அமெரிக்க அதிபரான பில்கிளிண்டன்.
அந்த சிறு வயதில் கிளிண்டன் தனது மனதில்
நிர்ணயித்திருந்த அந்த மாபெரும் இலக்கு தான் அவரை அவரது இலக்கு நோக்கி பயணிக்கச் செய்தது.
இன்னும் 5 ஆண்டுகள் (அ) 10 ஆண்டுகளுக்கு பின்னர் நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை இன்றே தீர்மானிக்க வேண்டியது அவசியம்.
இப்போது எங்கே இருக்கிறோம்? எந்த நிலையை அடைய விரும்புகிறோம்? என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, “இது தான் எனது இலக்கு” என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
*ஆம்.,நண்பர்களே..,*
இன்றே உங்கள் இலக்கை நிர்ணயுங்கள். அந்த இலக்கை அடைவதற்கு திட்டமிடும் போதே அதனை அடைவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
(உடுமலை சு.தண்டபாணி.............)💐💐💐🙏🏻🌹🌹🌹*
#sinthanay thulirgal !
சுத்தியல் ஒன்றுதான்
மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது.
ஒருநாள் சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து
அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன்.
பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை.
அவன் மீண்டும் அடித்தான்;
ஆனாலும் பூட்டு திறக்கவில்லை.
அப்போது அவன் மனைவி
“பூட்டை உடைக்காதீர்கள்;
சாவி கிடைத்து விட்டது” என்று
கத்திக்கொண்டே ஓடி வந்தாள்.
அவன் சாவியை வாங்கிப் பூட்டை
மிக எளிதாகத் திறந்து விட்டான்.
சாவியையும் சுத்தியலையும் அருகிலேயே வைத்து விட்டுப் போய்விட்டான்.
சுத்தியலுக்கோ மிக அவமானமாக இருந்தது.
“மிக வலிமையான நம்மால்
திறக்க முடியாத பூட்டை,
இந்தச் சிறிய சாவி திறந்து விட்டதே” என்று வருந்தியது.
சுத்தியல் சாவியிடம் பேச்சுக் கொடுத்தது.
“நான் உன்னைவிட மிகவும் #வலிமையானவன்;
ஆனால் நான் பூட்டைத் திறக்க மிகவும் கஷ்டப்படுகிறேன்.
நீ என்னைவிட மிகவும் #எளிமையானவன்;
ஆனால்
எளிதில் பூட்டைத் திறந்து விட்டாயே; என்ன காரணம்?” என்று
சுத்தியல் சாவியிடம் கேட்டது.
அதற்கு சாவி சொன்னது
“நீ என்னைவிட பலசாலிதான்.
ஆனால் நீ பூட்டை உடைக்க
அதன் தலையில் தட்டுகிறாய்.
அதனால்
அதுவும் தன் பலத்தைக் காட்டி
உன்னை எதிர்க்கிறது.
எனவே உனக்கு பூட்டைத் திறப்பது கடினமான வேலையாகிறது.”
“நான் பூட்டைத் திறக்க
அதன் இதயத்தைத் தொடுகிறேன். பூட்டும் என்னைப் புரிந்து கொண்டு திறந்து கொடுக்கின்றது;
எனவே என் வேலை எளிதாகின்றது.” என்று சாவி சொன்னது.
நாமும் மற்றவர் #மனம் என்னும்
பூட்டைத் திறக்க,
#அதிகாரம் என்னும்
சுத்தியல் கொண்டு அடிக்காமல்
#அன்பு என்னும் சாவியைப் பயன்படுத்தலாமே! 😊😊😊
#azagaana kutti kathay.
*_குட்டி ஸ்டோரி: எதையும் சமாளிக்கும் திறமை இருந்தால் வெற்றி நிச்சயம்!_*
* 🌹🌹🌹"வாழ்க்கையில் இது இப்படித்தான் நடக்க வேண்டும்" என ஒவ்வொன்றையும் நாம் திட்டமிட்டுச் செய்கிறோம். ஆனால், நாம் எதிர்பாராத ஏதோ ஒன்று சில நேரங்களில் நடந்து விடுகிறது. அந்தச் சூழலை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நம் வெற்றியும்(success in life) அமைந்திருக்கிறது; வாழ்வும் இனிக்கிறது.
இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் காண்போம்:
தேன்சிட்டும் அறிவியல் ஆசிரியரும்
ஒரு பள்ளியின் அறிவியல் ஆசிரியருக்குத் தலைமை ஆசிரியரிடமிருந்து திடீரென ஓர் அழைப்பு வந்தது. "பறவைகளைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா? உடனே ஒரு வலையோ அல்லது கூண்டோ எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள்" என்றார் தலைமை ஆசிரியர்.
"இது எதற்கு?" என்ற குழப்பத்துடனேயே சென்றார் அறிவியல் ஆசிரியர். அங்கே தலைமை ஆசிரியர் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பறைக்குள் ஒரு தேன்சிட்டு குருவி நுழைந்து, இனிமையாகப் பாடியபடி சுற்றிக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே உள்ளே வந்துவிட்ட அந்தப் பறவைக்கு, வெளியே போகத் தெரியவில்லை. இதைப் பார்த்த மாணவர்களின் கவனம் சிதறியதால், பாடம் நடத்த முடியவில்லை.
"இதைப் பிடித்து வெளியே விடுங்கள்" என்றார் தலைமை ஆசிரியர். அதற்கு அறிவியல் ஆசிரியர், "இதற்கு ஏன் சிரமப்பட வேண்டும்? தேன்சிட்டுகளுக்குச் சிவப்பு வண்ணம் மிகவும் பிடிக்கும். வாசல் கதவைத் திறந்து
வைத்து, அங்கே ஒரு சிவப்புத் துணியையோ அல்லது அட்டையையோ வைத்தால் அது தானாக வெளியே போய்விடும்" என்றார்.
எதிர்பாராத திருப்பம்
அதேபோல ஒரு சிவப்புத் துணியை வாசலில் வைத்தார்கள். ஆனால், அந்தக் குருவி வெளியே போகவில்லை; மாறாக, அந்த நிறத்தால் ஈர்க்கப்பட்டு வெளியிலிருந்து இன்னும் ஏராளமான குருவிகள் வகுப்பறைக்குள் வந்துவிட்டன! குழந்தைகள் உற்சாகமாக அவற்றை ரசிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசிரியர் திகைத்துப் போனார்.
அறிவியல் ஆசிரியர் உடனே குறுக்கிட்டு, "ஐயா, உங்கள் ஆங்கிலப் பாட வேளை முடிந்துவிட்டது" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார். பின் குழந்தைகளிடம், "இப்போது நாம் பறவைகளைப் பற்றிப் படிக்கலாமா?" என்று கேட்டபடி, அங்கிருந்த குருவிகளையே பாடமாக வைத்து வகுப்பு நடத்த ஆரம்பித்தார்
நாம் கற்க வேண்டிய பாடம்
வாழ்க்கையில் நாம் எதிர்பாராதவை நிகழும்போது, அவற்றை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் மோசமான நிகழ்வுகள் நம்மை நிலை குலைய வைக்கலாம். ஆனால் பயம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் அதிலிருந்து மீண்டு வர உதவாது. "இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி?" அல்லது "இதை நமக்குச் சாதகமாக மாற்றுவது எப்படி?" எனச் சிந்தித்தால் வெற்றியும் முன்னேற்றமும் நிச்சயம் கிடைக்கும்.
வெற்றிக்கான சில வழிகள்:
* நிதானம்: கோபம் ஏற்படும் சூழலில் உடனடியாக ஆத்திரப்படாமல், நிதானமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
* நேர்மறைச் சிந்தனை: எதிர்பாராத ஒன்று நடந்துவிட்டால், அது மோசமான விளைவையே தரும் என முன்கூட்டியே முடிவு செய்யக் கூடாது. அதிலும் ஒரு நன்மை இருக்கலாம் என யோசிக்க வேண்டும்.
* தன்னம்பிக்கை: எல்லாவற்றிற்கும் மேலாக, எதையும் சமாளிக்கும் திறமை நமக்கு இருப்பதாகத் தீவிரமாக நம்ப வேண்டும்.
தடையின்றி வெற்றி பெற, மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னேறுவதே சிறந்த வழி!
மாற்றங்களை வரவேற்போம்! நலமுடன் வாழ்வோம்!
🌹🌹🌹












