
saravanan
@ethumillay
Video Grapher. side velay, BALE SECTION, TEXTILE.
#innraya SINTHANAY சிந்தனை".*.( 01.04.2026)
.................................................
*"அமைதியைத் தேடி.."*
........................................
நம்மைச் சுற்றி எங்கும் அமைதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண். அது இயற்கையில் சாத்தியமில்லை.
தொடர் நீர்வீழ்ச்சியைப் போல அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டியது நிறைய இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஓய்வதில்லை.
அந்த வேலைகளுக்கு இடையேயும், அமைதியான உறக்கம் போல, நம் உள் மனம் அமைதியாக இருக்குமானால் அதை விடப் பெரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது.
அந்த அமைதியின் முத்திரை நாம் செய்கின்ற செயலின் சிறப்பில் கண்டிப்பாக வெளிப்படும்.
அனைத்து வசதிகளும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல..
ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.
எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், எனக்கு நேரும் மான அவமானங்களை விட,
'நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப் பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டு இருக்கிறார்களே…அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி...
சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!
ஆம்.,நண்பர்களே.
தொல்லைகளும் துன்பங்களும், பிரச்னைகளும் சூழ்ந்து இருக்கும் தருணத்தில் அவைகளைக் கண்டு பதற்றம் அடையாமல் எதிர்கொள்வதே ''உண்மையான அமைதி''.
(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி )💐💐💐💐💐
#emaatrangal. காரணம்
எதிர்பார்ப்புகள்.
எதிர்பார்ப்பது நிறைவேறாத போது
அந்த நிராசை உறவுச் சிக்கல்களாய்,
குடும்பப் பிரச்சினைகளாய்,
பின் மெல்ல மெல்ல நோய்களாய் மாறும்.
எதிர்பார்ப்புகள் வருவது இயற்கை.
எந்த நிலையிலும் எதிர்பார்ப்புகள் உண்டு.
நினைத்தது நடந்தால் சந்தோஷப்படும் நாம்,
பொய்த்தால் எதிராளியைக் குறை கூறுகிறோம்.
காதல், காமம், குடும்பம்,வாழ்வு முறை எனப் பல விடயங்களில்
நிஜத்தோடு தொடர்பில்லாத
எதிர்பார்ப்புகளால்
பலர் தங்கள் வாழ்க்கையில் தவறான
முடிவுக்கு வருகின்றனர்.
எதிர்பார்ப்புகள் குறையும் போது
வாழ்க்கை அழுத்தமில்லாமல் அழகாக மாறும்.
எதிராளியின் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும்.
அது புரிதலை எளிமைப்படுத்தும்.
குறிக்கோள்கள் இருக்கும் போது..!
கடமைகளைச் செய்யலாம்.
எண்ணத்தை வெளிப்படுத்தலாம்
எதிர்பார்ப்புகளின் பாரம் இல்லாமல்
அவைகளை இயல்பாய் மலர விடுங்கள்!
😊😊😊
#ovoru naalum. முறை மட்டுமே*_ _*பயணிக்க முடிந்த*_
_*நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு அளிக்கும் வரம்.*_
_இந்த வாழ்க்கை_ _பயணத்தில்_
_ஒவ்வொரு_ _நாளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு உங்களால் எந்த அளவுக்கு சிறப்பாக வாழ முடியுமோ வாழ்ந்து விடுங்கள்._
_*ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நம் வாழ்வில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளும் திறன் எல்லோருக்கும் இருப்பதில்லை.*_
_*எல்லாவற்றையும் படைத்தவர் பார்த்துக்கொள்வார்.*_
_சிலநேரங்களில் கவலைகளைப்பற்றி சிந்திப்பதால் புதிய கவலைகள் உருவாகுமே தவிர இருக்கும் கவலைகள் குறைவது இல்லை._
_*ஆகவே வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது...*_
_*என்ன நடக்கப்போகிறது...*_
_*என்று புரியாத பொழுது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்*_
_எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நம்புங்கள்._
#uthira natchathiram. உத்திரம் சிறப்புப் பதிவு
🌹 மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
🌹பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.
🌹தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.
பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :
🌹 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
🌹மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
🌹 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தை இந்நாளில் பெற்றார்.
🌹தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
🌹சந்திர பகவான் கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.
🌹ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ஸ்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.
🌹 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.
🌹 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
🌹 ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
🌹இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.
🌹 பங்குனி உத்திரத்தில் தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.
🌹அர்ச்சுனன் பிறந்தது பகுனி உத்திரத்தில் தான்.
🌹வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில் தான்.
🌹 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.
🌹 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.
🌹 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.
🌹பங்குனி உத்திரம் என்பது
சாதாரண நாள் இல்ல…
இது இயற்கை, ஜோதிடம், தெய்வீகம் மூன்றும் சேரும் அதிசய நாள் …
பூரட்டாதி – குருவின் அருள்
உத்திரம் – சூரியன் ஒளி
இந்த இரு சக்திகளும் ஒன்றாக இணையும்
புனித பௌர்ணமிதான் பங்குனி உத்திரம் …
இயற்கையின் சமநிலை நாள்
இந்த நாளில் பகலும் இரவும் சமமாக இருக்கும் …
வாழ்க்கையிலும் சமநிலை தேவை என்பதற்கான நினைவூட்டல் …
தெய்வத் திருமண நாள்
பல தெய்வங்களின் கல்யாணம் நடந்த நாள் என்று நம்பப்படுகிறது.
இந்த நாளில் வேண்டினால்
நிச்சயம் நன்மை கிடைக்கும்…
அருள் நிறைந்த பங்குனி உத்திரம்.இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்.
சிவவாக்கியர் அருளிய🌹...!*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
*🙏சிவவாக்கியம்..!*
➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿
💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚
*நூல்: 208...!*
அஞ்செழுத்தும் மூன்றெழுத்து மென்றுரைக்கு மன்பர்கா
ளஞ்செழுத்தும் மூன்றெழுத்து மல்லகாணு மப்பொருள்
அஞ்செழுத்து நெஞ்செழுத்தி லவ்வெழுத் தறிந்தபின்
அஞ்செழுத்தும் அவ்வின்வண்ண மானதே சிவாயமே.
*பொருள் விளக்கம்:*
அஞ்செழுத்து பஞ்சாக்கரமென்றும் மூன்றெழுத்து ஓங்காரம் என்றும் உரைத்து செபம் செய்யும் அன்பர்களே! ஈசன் அஞ்செழுத்தாகவோ, மூன்றெழுத்தாகவோ இருப்பதில்லை. “நமசிவய” நம் உடலே என்பதை உணர்ந்து, அதன் நெஞ்செழுத்து “சி“காரம் எனவும் அறிந்துகொள்ளுங்கள். அதுவே ஓரெழுத்து. அங்கிருந்துகொண்டு “சிவயநம” என்னும் பஞ்சாக்கரத்தை மனதில் செபிக்க வேண்டும். அப்பொழுது பிரமம் ஓரெழுத்தாகவும், அதுவே உயிராகவும் உள்ளதை உணர்வீர்கள். ஓரெழுத்திலே ஐந்தெழுத்தும் அடங்கி இருப்பதையும் அவ்வெழுத்தே பஞ்சாக்கரமாக ஐந்து வண்ணங்கள் ஆகி நிற்பதையும் அதிலேயே ஐந்து பூதங்களும் உள்ளதையும் அறிந்து உணர்ந்து ஞானவினை புரியுங்கள்.
*🌷நமசிவய ௐ🌷*
*சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி வணங்குகின்றேன்....!!!!*
*🙏சிவாய நம🙏*
*🙏திருச்சிற்றம்பலம்🙏*
*வளரும்...*
🟫🔶🟫🔶🟫🔶🟫🔶🟫🔶🟫🟫🔶🟫🔶🟫🔶🟫🔶🟫🔶🟫 #sithar sivavaakkiyam.












