#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
*வரலாற்றில் ஓர் ஏடு-06*
*சோபனப் பேற்றை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஃபா(த்)திஹ்…*
800 ஆண்டுகளுக்கும் மேலாக *அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஓர் சோபனத்தைப் பெற்றிட வேண்டும்* என்கிற முனைப்போடு பல இஸ்லாமிய ஆட்சியாளர்கள் முயன்று அது கிடைக்காமல் போனதும், அந்த சோபனத்திற்கு சொந்தக்காரர் யார் என ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகும் எதிர்பார்த்த வரலாற்று நிகழ்வொன்று ஹிஜ்ரி 857 –இல் சாத்தியமானது.
அந்த சோபனத்தைச் சொந்தமாக்கியவர் *உஸ்மானிய கலீஃபாவான முஹம்மது இப்னு ஸுல்தான் என்று அறியப்படுகின்ற முஹம்மத் அல் ஃபாத்திஹ் (ரஹ்) அவர்கள்.*
அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"ஒரு முறை நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைச் சூழ அமர்ந்திருந்தோம். அப்போது, *காண்ஸ்டாண்டி நோபிள், ரோம் இவற்றில் எது முதலில் வெற்றி கொள்ளப்படும்?* என்று வினவினோம். அதற்கு, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்
அவர்கள், *"ஹிர்கலின் நகரம் காண்ஸ்டாண்டி நோபிள் முதலில் வெற்றி கொள்ளப்படும். படைத் தளபதிகளில் மிகச் சிறந்தவர். அந்த நகரத்தை வெற்றி கொள்ளும் தளபதியே! படைகளில் மிகச் சிறந்த படையும் அதுவே!"* என கூறினார்கள். ( நூல்: முஸ்னத் அஹ்மத் 6645 )
காண்ஸ்டாண்டி நோபிள் என்பது துருக்கியின் தற்போதைய இஸ்தான்பூல் நகரமாகும் இதை அரபு மொழியில் குஸ்தன்ஸீனியா என்றழைக்கப்படுகிறது.
அன்று இறுதி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் காலத்தில் பெரும் வல்லரசான ரோம் சாம்ராஜ்யம் பரந்த இரண்டு கிளைகளைக் கொண்டு அமைந்திருந்தது.
ஒன்று, ரோமைத் தலைநகராகக்கொண்ட மேற்கு ராஜ்யம். இன்னொன்று, காண்ஸ்டாண்டி நோபிளைத் தலைநகராகக்கொண்ட கிழக்கு ராஜ்யம். அக்கிழக்கு ராஜ்யம்தான் பைஸாந்தியப் பேரரசு என அறியப்பட்டது.
*இந்தச் சோபனத்தைப் பெற்றிட வேண்டும்* என்ற நோக்கில் முதலாவதாக முயற்சி மேற்கொண்டவர்கள் கலீஃபா *முஆவியா (ரலி) அவர்கள்.*
ஸுஃப்யான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் தலைமையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), அபூஅய்யூபுல் அன்ஸாரி (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நபித்தோழர்களைக் கொண்ட படையை அனுப்பி வைத்தார்கள்.
எனினும் அந்த நகரின் கோட்டைச் சுவரைக் கூட அந்தப்படையால் நெருங்க முடியாமல் போனது. அங்கு நடை பெற்ற போரில் வெற்றியும் கிடைக்கவில்லை. அபூஅய்யூபுல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அந்த போரில் ஷஹீத் ஆனார்கள். அந்த கோட்டையின் அருகேயே நல்லடக்கமும் செய்யப்பட்டார்கள்.
அதன் பின்னர் ஹிஜ்ரி 54 –இல் கலீஃபா வலீத் இப்னு அப்துல் மலிக்கின் காலத்தில் தளபதி மூஸா இப்னு நுஸைர் அவர்களும்,
ஹிஜ்ரி 99 –இல் ஸுலைமான் இப்னு அப்துல் மலிக்கின் காலத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
உமைய்யாக்கள் ஆட்சியின் போதும், அப்பாஸியர்கள் ஆட்சியின் போதும் பெரும், பெரும் முயற்சிகள் படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் தோல்வியே மிஞ்சியது.
அடுத்து சல்ஜூக்கிய சாம்ராஜ்யம் முயன்று அதுவும் தோல்வியில் முடிந்தது.
பின்னர், நீண்ட காலத்திற்குப் பின்னர் *உஸ்மானியப் பேரரசு அந்த சோபனத்தை நோக்கி நகர்ந்தது.*
ஆம்!
1393 –இல் உஸ்மானிய்ய பேரரசின் கலீஃபா பாயஸீத் காண்ஸ்டாண்டி நோபிளை முற்றுகையிட்டார்.
எனினும், ஐரோப்பியர்கள், மங்கோலியர்கள் ஆகியோரின் உதவியோடு பைஸாந்தியப் பேரரசன் முஸ்லிம் படையைத் தோற்கடித்தான். இதில் கலீஃபா பாயஸீத் (ரஹ்) ஷஹீத் ஆனார்கள்.
கலீஃபா பாயஸீதின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் முஹம்மது இப்னு பாயஸீத் ( 1 –ஆம் முஹம்மது ), அவர்களும், அவரைத் தொடர்ந்து அவரது மகன் முராத் இப்னு முஹம்மது ( 2 –ஆம் முஹம்மது ) அவர்களும் ஆட்சி செய்தனர்.
1432 –இல் முராத் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. முஹம்மத் என்று பெயரிட்ட முராத், ஆக் ஷம்சுத்தீன் என்கிற மாபெரும் மேதையிடம் தன் மகனை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
தன் மகனார் முஹம்மத் பார்க்கும் இடம் அனைத்திலும் *பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சோபனம் நிறைந்த அந்த நபி மொழியை இடம் பெறச் செய்து, அவரை நாள் தோறும் உற்சாகமூட்டிக் கொண்டே இருப்பார்.* தந்தை முராத் அவர்கள்.
ஆக் ஷம்சுத்தீன் அவர்கள் முஹம்மத் அவர்களை குர்ஆனில் தேர்ச்சி பெற்றவராகவும், ஹாஃபிழாகவும், ஹதீஸ் கலை, ஃபிக்ஹ் கலை, வரலாறு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவராக ஆக்கினார்.
அத்தோடு, அரபு, ஃபாரசீகம், லத்தீன், கிரேக்கம் துருக்கி ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவராகவும் ஆக்கினார்.
முறையான போர்பயிற்சிகள் வழங்கி மாபெரும் மதியூகியாகவும், வீரனாகவும் மாற்றினார்கள்.
அன்பும், பண்பும், மார்க்கப்பற்றும் கொண்டவராகவும் முஹம்மத் அவர்களை உருவாக்கி முராத் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அப்போது, முஹம்மத் அவர்களுக்கு வயது 12 தான் ஆகியிருந்தது. *ஒரு ஆட்சியாளருக்கு உரித்தான அத்துனை அம்சங்களும் தம் மகனுக்கு கிடைத்து விட்டதாகக் கருதிய* மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் (2ம் முஹம்மது) முராத் முஹம்மதை கலீபாவாக நியமித்து விட்டு அனைத்துப் பொறுப்புக் களிலிருந்தும் ஒதுங்கி தூரமான இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார்.
இந்நிலையில், அரியணையில் அமர்ந்து சில மாதங்கள் ஆவதற்குள் ரோமப்பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பு மேற்கொண்டது.
இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக இருந்தது. எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தார்.
*விரைவாக வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினார்.*
தந்தையிடமிருந்து *"இப்பொழுது நீ தான் ஆட்சியாளன், படைக்கும் நீயே தலைமை தாங்கு..! என்னால் வர முடியாது"* என்று பதில் வந்தது.
இதற்கு முஹம்மதின் பதில் கடிதம் பின்வருமாரு இருந்தது. *"ஆம் நான் தான் ஆட்சியாளன். இப்பொழுது நான் ஆட்சியாளனாக தங்களுக்கு கட்டளையிடுகிறேன், உடனடியாக வந்து படையை வழி நடாத்துங்கள்!"* என்று.
ஒருவாறாக தந்தையின் உதவியோடு படையெடுப்பை முறியடித்து வெற்றி வாகை சூடினார் முஹம்மத்.
மீண்டும் முராத் தம் மகனிடம் இருந்து ஆட்சிப் பொறுப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
*முஹம்மத் 18 –ஆவது வயதை அடைந்த போது உஸ்மானியப் பேரரஸின் 8 –வது ஆட்சியாளராக தந்தை முராதால் (மீண்டும்) நியமிக்கப்படுகின்றார்.*
நீண்ட கால போர்த்திட்டம் தீட்டி 1435 –ஆம் ஆண்டு ஹிஜ்ரி 857 –இல் 2,65,000 இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம் வீரர்களோடு காண்ஸ்டாண்டி நோபிளை நோக்கி படையெடுப்பை நடத்தினார்.
சுமார் 53 நாட்களாக கடல் வழியாகவும், தரை வழியாகவும் மிகப் பெரிய முற்றுகையிட்டு மகத்தான வெற்றி வாகை சூடினார்.
*ஹிஜ்ரி 52 –இல் முஆவியா (ரலி) அன்ஹு அவர்களிடம் இருந்து துவங்கிய ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சோபனத் தாகத்திற்கு வெற்றி வாகை சூடி சுமார் 805 ஆண்டு கால தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் முராதின் மகன் முஹம்மது.*
*வரலாற்றில் முஹம்மத் அல் ஃபாத்திஹ் என்ற நிரந்தர புகழுக்குச் சொந்தக்காரராக மாறிப்போனார்.*
*இதன் பின்னணியில் முஹம்மத் அவர்களின் தந்தை, மற்றும் ஆக் ஷம்சுத்தீன் (ரஹ்) அவர்களின் மகத்தான பங்களிப்பு என்பதோடு முராத் அவர்களின் இல்லத்திற்கும் மகத்தான பங்கு இருக்கின்றது.*
*அந்த இல்லம் எப்போதும் குர்ஆன், ஹதீஸ், வரலாறு ஒலிக்கும் இடமாக, அவரின் தந்தையின் துஆ ஒலிக்கும் இடமாக, காணும் இடமெல்லாம் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சோபனம் நினைவூட்டப்படும் இடமாக இருந்தது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.*
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு சோபனத்தைப் பெறுவதற்கு 800 ஆண்டு கால தொடர் முயற்சிக்குப் பிறகு மகத்தான வெற்றியை நல்கினான் என்றால்.. *இந்த உலகின் 100 ஆண்டு கால ஏகாதிபத்திய, மேற்குலக, ஃபாஸிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் இந்த உம்மத்திற்கு மகத்தான வெற்றியை நல்குவான்.*
*அந்த வெற்றியை நோக்கிய நகர்வுக்கு நாம் முஹம்மத் அல் ஃபாத்திஹ் போன்றவர்களை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.*
*அத்தகைய சூழல் கொண்ட இஸ்லாமிய இல்லங்களை நாம் உடனடியாக நிர்மாணிக்க சூளுரைக்க வேண்டும்.*
*அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்..!!*
ونشأ تحت رعاية أبيه السلطان "مراد الثاني" سابع سلاطين الدولة العثمانيةالذي عمل على تعليمه وإعداده ليكون جديرًا بمنصب السلطان ، والقيام بمسئوليته ، فأتم "محمد الفاتح" حفظ القرآن ، وقرأ الحديث النبوي ، وتعلم الفقه الإسلامي .
ودرس "محمد الفاتح" الرياضيات والفلك وفنون الحرب والقتال ، وإلى جانب ذلك تعلم اللغات العربية والفارسية واللاتينية واليونانية ، وخرج مع أبيه في معاركه وفتوحاته .
ثم ولاه أبوه إمارة صغيرة ؛ ليتدرب على إدارة شئون الدولة تحت إشراف عدد من كبار علماء عصره ، وهو ما أثر في تكوين شخصية الأمير الصغير ، وبناء تفكيره بناءً إسلاميًّا صحيحًا .
وقد نجح الشيخ "آق شمس الدين "- وكان واحدًا ممن قام على تربية "محمد الفاتح" وتعليمه – في بث روح الجهاد والتطلع إلى معالي الأمور في نفس الأمير الصغير، وأن يلمح له بأنه المقصود ببشارة النبي – صلى الله عليه وسلم- .. وكان لهذا الإيحاء دور كبير في حياة "محمد الفاتح" فنشأ محبًّا للجهاد ، عالي الهمة والطموح ، واسع الثقافة ، وعلى معرفة هائلة بفنون الحرب والقتال .
· توليه الحكم .. والعمل على تحقيق البشارة :
وبعد وفاة أبيه السلطان "مراد الثاني" في (5 من المحرم 852 ﻫ = 7 من فبراير 145 م) تولى "محمد الفاتح" عرش الدولة العثمانية ، وكان شابًّا فتيًّا في العشرين من عمره ، ممتلأ حماسًا وطموحًا ، يفكر في فتح مدينة "القسطنطينية" عاصمة الدولة البيزنطية .. وسيطر هذا الحلم على مشاعر "محمد الفاتح" ، فأصبح لا يتحدث إلا في أمر الفتح ، ولا يأذن لأحد ممن يجلس معه أن يتحدث في موضوع غير هذا الموضوع .
وكانت الخطوة الأولى في تحقيق هذا الحلم هو السيطرة على مضيق "البسفور" حتى يمنع "القسطنطينية" من وصول أية مساعدات لها من أوروبا ، فبنى قلعة كبيرة على الشاطئ الأوروبي من مضيق "البسفور" ، واشترك هو بنفسه مع كبار رجال الدولة في أعمال البناء ، ولم تمض ثلاثة أشهر حتى تم بناء القلعة التي عرفت بقلعة "الروم" ، وفى مواجهتها على الضفة الأخرى من "البسفور" كانت تقف قلعة "الأناضول" ، ولم يعد ممكنًا لأي سفينة أن تمر دون إذن من القوات العثمانية .
وفى أثناء ذلك نجح مهندس نابغة أن يصنع للسلطان "محمد الفاتح" عددًا من المدافع ، من بينها مدفع ضخم عملاق لم يُرَ مثله من قبل ، كان يزن (700) طن، وتزن القذيفة الواحدة (1500) كيلو جرام، وتسمع طلقاته من مسافات بعيدة ، ويجره مائة ثور يساعدها مائة من الرجال الأشداء وأطلق على هذا المدفع العملاق اسم المدفع السلطاني .
· فتح "القسطنطينية" .. وتحقق البشارة :
وبعد أن أتم السلطان "محمد" استعداداته زحف بجيشه البالغ (265) ألف مقاتل من المشاة الفرسان ومعهم المدافع الضخمة حتى فرض حصاره حول "القسطنطينية" ، وبدأت المدافع العثمانية تطلق قذائفها على أسوار المدينة الحصينة دون انقطاع ليلاً أو نهارًا ، وكان السلطان يفاجئ عدوه من وقت لآخر بخطة جديدة في فنون القتال حتى تحطمت أعصاب المدافعين عن المدينة وانهارت قواهم .
وفى فجر يوم الثلاثاء الموافق (20من جمادى الأولى 827 ﻫ = 29 من مايو 1453 م) نجحت القوات العثمانية في اقتحام الأسوار ، وزحزحة المدافعين عنها بعد أن عجزوا عن الثبات ، واضطروا للهرب والفرار ، وفوجئ أهالي "القسطنطينية" بأعلام العثمانيين ترفرف على الأسوار ، وبالجنود تتدفق إلى داخل المدينة كالسيل المتدفق .
وبعد أن أتمت القوت العثمانية فتح المدينة دخل السلطان "محمد"- الذي أطلق عليه من هذه اللحظة "محمد الفاتح" – على ظهر جواده في موكب عظيم وخلفه وزراؤه وقادة جيشه وسط هتافات الجنود التي تملأ المكان :
"ما شاء الله ، ما شاء الله ، يحيا سلطاننا ، يحيا سلطاننا "
ومضى موكب السلطان حتى بلغ كنيسة "آيا صوفيا" حيث تجمع أهالي المدينة ، وما إن علموا بوصول السلطان "محمد الفاتح" حتى خرُّوا ساجدين وراكعين ، ترتفع أصواتهم بالبكاء والصراخ لا يعرفون مصيرهم وماذا سيفعل معهم السلطان