Fahmi
ShareChat
click to see wallet page
@fahmieditz
fahmieditz
Fahmi
@fahmieditz
B.com
*என் ரப்பே!* *நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன் என்னைப் பலப்படுத்துவாயாக!* #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *நான் நிராசையுடையவனாக இருக்கிறேன்.. ஆனால் உன் மீது எனக்குள்ள நம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை.* *இன்றைய குழப்பமான சூழ்நிலையில் நேர்வழியைத் தேடியலைகிறேன்..* *உன்னையன்றி வழி காட்ட யாருமில்லை.* *என்னுடைய பலவீனமான நேரத்தில் என் மீது கருணை காட்டுவாயாக!* *என்னை விட்டு ஷைத்தானையும் நிராசையையும் தூரமாக்குவாயாக!* *எனது உள்ளத்திற்கும், அறிவிற்கும் நேர்வழி காட்டுவாயாக!* *என்னுடைய பாவங்களையும் தவறுகளையும் மன்னித்தருள்வாயாக!* *ஆமீன்..ஆமீன்...யா ரப்பல் ஆலமீன்...!*
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - $ ينإ @| ச் ینوقف $ ينإ @| ச் ینوقف - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *السلام عليكم ورحمة الله وبركاته:قال الشيخ علي ن الطنطاوى رح:الاسلام ليس دينا فى المسجد فقط بل هو صدق فى التجارة واتقان فى الصناعة وعدل فى الحكم ورحمة فى البيت.# اشترى إبراهيم_بن_أدهم غلامًا فقال له: أيش تأكل؟ قال: ما تطعمني. قال: أيش اسمك؟ قال: ما تسميني. قال أيش تلبس؟ قال: ما تكسوني. قال: أيش تعمل؟ قال: ما تستعملني. قال: ليس لك إرادة؟ قال: ليس للعبد إرادة مع سيِّده! ثم راجع نفسَه فقال: يا مِسكين هل كنتَ لله تعالى في عمرك ساعةً واحدة مثل ما كان لك هذا العبدُ في هذه الحالة؟! وبكى*பள்ளிவாசல்களில் நிறைவேற்ற வேண்டிய அமல்கள் மட்டுமல்ல "இஸ்லாம்"மாறாக வியாபாரத்தில் உண்மையாய் இருப்பதும் செய்தொழிலில் கூரிய கருத்துடன் நிலைத்திருப்பதும் தீர்ப்பு வழங்குவதில் சமநிலை கடைபிடிப்பதும் ஒத்த உறவினரிடம் அன்பாக'கனிவாக நடந்து கொள்வதும் தான் முழுமையான இஸ்லாம்* அல்லாமா: ஷைஃக் தன்தாவி(ரஹ்); தான் வாங்கிய அடிமையிடம் ஷைஃக் இப்ராஹிப்னு அத்ஹம் 'தம்பி நீ விரும்பும்‌உணவு என்ன?என்று கேட்டதும் நீங்கள் தருவதை விரும்பி சாப்பிடுவேன் என்றார்.உன் பெயரென்ன?:பதில் நீங்கள் சூட்டுவதுதான்.நீ விரும்பும் உடை என்ன? நீங்கள் தரும் உடையை விரும்பி உடுத்துவேன்.:‌என்னென்ன பணிகளை செய்வாய்!.பதில்:நீங்கள் உத்தரவிடும் அனைத்தையும்.:சரி தம்பி!உனக்கென தனியாக விருப்பமேதும் இல்லையா?'பதில்;எஜமானுடன் அடிமைக்கு ஏது?சுய விருப்பம். ஷைஃக் இப்னு அத்ஹம் உணர்ச்சியுற்று' தன் இதயத்தை நோக்கி'ஓ'அற்பமான மனமே!உன் வாழ்நாளில் எந்த நிமிடமாவது அடிமை வாழ்க்கையில் உனக்கு விசுவாசமாக‌ இவர் இருப்பதுபோல் நீ உன் ரப்புக்கு விசுவாசமாக இருந்திருக்கிறாயா?என தன்னைத்தானே கேட்டு இறை காதலால் வேதனையில் அழுதார்கள்.:தமிழாக்கம்: என்றும் நிறையன்பில் நூரிகள் பேரவை ஊழியன். முஹ்யித்தீன் நூரி'ஜலாலி.; குறிப்பு: ரப்புக்கும் நமக்குமான தொடர்பின் அகமியத்தை அவன் நமக்கு தெளிவு செய்து நல் அமல்கள் புரிய நற்துணை அருள்வாயாக
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்-233* *இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ்ரி நான்கு, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி)* இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கிவிட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, *சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி?* என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹுவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு ஆயிரத்து ஐநூறு தோழர்கள் மற்றும் பத்து குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள். அபூஸுஃப்யான் இரண்டாயிரம் மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் ஐம்பது குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள 'மர்ருள் ளஹ்ரான்' என்ற பகுதியிலுள்ள 'மஜன்னா' என்ற கிணற்றருகில் தங்கினார். அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும் என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இறுதியாக 'மர்ருள் ளஹ்ரான்' வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம், "குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்!" என்று கூறினார். பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டுதான் இருந்தனர். எனவேதான், அபூஸுஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம் பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல் அனைவரும் திரும்பிவிட்டனர். முஸ்லிம்கள் பத்ர் மைதானத்தில் எட்டு நாட்கள் தங்கி வியாபாரம் செய்தனர். ஒரு திர்ஹத்திற்கு இரண்டு திர்ஹம் அவர்களுக்கு இலாபமாக கிடைத்தது. அதற்குப் பின் எதிரிகள் மைதானத்திற்கு வராததால் சண்டையின்றி மதீனாவிற்கு திரும்பினர். மீண்டும் முஸ்லிம்கள் மீது மக்களுக்கு அச்சமும் மரியாதையும் ஏற்பட்டது. நிலைமைகள் அனைத்தையும் அல்லாஹ் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்போருக்கு, *இரண்டாம் பத்ரு, சிறிய பத்ரு, மற்றொரு பத்ரு, வாக்களித்துச் சென்ற பத்ரு* என பல பெயர்கள் வரலாற்றில் கூறப்படுகின்றன. (இப்னு ஹிஷாம், zஜாதுல் மஆது) *தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ்ரி ஐந்து, ரபீஉல்அவ்வல் 25)*... *(இன்ஷா அல்லாஹ் தொடரும்)*
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - కఓకక ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் కఓకక ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் [[[[[[[[[[[[[[[[ **** ]]]]]]]]]]]]]]]] *இஷ்கேஅவ்லியா* *தொடர்=983* [[[[[[[[[[[[[[[[ **** ]]]]]]]]]]]]]]]] 🌹🩵🌹🩵🌹🩵🌹🩵🌹🌹🩵🌹🩵🌹🩵🌹🩵🌹 *உடல்ஊனமுற்ற கருப்பு இனத்தைச்சேர்ந்த.. ஒருமாமேதையின் மகத்தான உபதேசம்..!* 🌹🩵🌹🩵🌹🩵🌹🩵🌹🌹🩵🌹🩵🌹🩵🌹🩵🌹 மாமேதை அல்லாமா عطا ابن ابي رباح *அதா இப்னு அபீ ரபாஹ்* ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிறவியிலேயே கட்டையாகவும், தட்டையான மூக்குடையவராகவும் ஒரு கண் குருடாக, ஒரு கை, ஒரு கால் ஊனமுற்றவராக இருந்தார்கள். ஆனால் இவர்கள் ரயீஸுல் முஃபஸ்ஸிரீன் *இப்னு அப்பாஸ் (ரலி),* *அப்துல்லாஹிப்னு ஜுபைர்(ரலி),* *ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)* ஆகிய பெரும் பெரும் ஸஹாபாக்களிடம் குர்ஆன் ஹதீஸ் கலையைக் கற்ற மாபெரும் மார்க்க மேதையாவார்கள். இவர்கள்மொத்தம் 70 ஹஜ்ஜுகள் செய்து இருக்கிறார்கள்.! இம்மாமேதையிடம் என்ன கேள்வி கேட்டாலும் உடனே பதில் சொல்லி விடுவார்கள். "எல்லோருக்கும் ஈமான் ஒரே மாதிரிதான் இருக்கும் கூடாது குறையாது என சிலர் சொல்கிறார்களே..?" என ஒருவர் கேட்டபோது *அதாஇப்னு அபீரபாஹா(ரஹ்)* அவர்கள் وَالَّذِیْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًی وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ ۟ எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) *அதிகப்படுத்தி,* அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான் என்ற (47:17) இந்த ஆயத்திற்கு என்ன பதில் சொல்வார்கள்.? என்றார்கள். رِجَالٌ ۙ لَّا تُلْهِیْهِمْ تِجَارَةٌ وَّلَا بَیْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِیْتَآءِ الزَّكٰوةِ یَخَافُوْنَ یَوْمًا تَتَقَلَّبُ فِیْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۟ۗۙ நல்லவர்களை வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தடுக்காது என்றால் என்ன? என்று ஒருவர் கேட்டபோது அல்லாஹ் கடமையாக்கிய எல்லா கடமைகளையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவார்கள் அதில் கவனக்குறைவாக இருக்க மாட்டார்கள். என்று விளக்கம் சொன்னார்கள். *முஹம்மத் இப்னு ஸவ்கா* என்பவர் எனக்கு உபதேசம் செய்யுங்கள். என்றார். "சகோதரரே! நமது முன்னோர்கள் திக்ர்செய்தல், குர்ஆன் ஓதுதல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல், நல்ல பேச்சுக்களைப் பேசுதல் போன்ற நற்காரிங்களைசெய்து வீணானகாரியங்களில் வீண்பேச்சுகளில் ஈடுபடாமல் வாழ்ந்தார்கள்.!" ஆனால் "நீங்களோ, எவ்வளவு வீண் பேச்சுக்களைப் பேசுகிறீர்கள்.?" وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். 82:11 كِرَامًا كَاتِبِیْنَ ۟ۙ (அவர்கள் கிராமன் காத்திபீன் என்ற) கண்ணியம் மிகுந்த எழுத்தாளர்கள். 82:12 یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟ நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள். 82:13 اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.82:14 وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۚۖ இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். என்ற வசனத்தையும்.. மேலும் "எந்த ஒரு வார்த்தை உங்கள் வாயிலிருந்து வந்தாலும்... அது உடனே எழுதப் படுகிறது என்கிற கீழ்க்கண்ட வசனத்தையும் நீங்கள் பார்த்ததில்லையா.?" اِذْ یَتَلَقَّی الْمُتَلَقِّیٰنِ عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ قَعِیْدٌ ۟ (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- 50:18 مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ ۟ கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை 50:19 ஆக "நாளை மறுமையில் அஃமால்நாமா எனும் நன்மைதீமைகளின் புத்தகத்தை உங்கள் கையில் கொடுக்கப்படும் போது.." "தீன் துன்யாவுக்கு பிரயோஜனமில்லாத நீங்கள் செய்த பாவகாரியங்கள் பட்டோலையில் இருக்குமே...?" அதனால் "அல்லாஹ்வின் கடும்கோபத்துக்கு ஆளாக நேரிடுமே எனநீங்கள்பயப்பட வேண்டாமா..?" என்பதாக அறிவுரை கூறி அனுப்பினார்கள். By மவ்லவி *U.அபூதாஹிர் ஃபைஜிபாகவி* அல்மதீனா பள்ளிவாசல் கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் செல்:9443061063
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - நளுற் Bbowd 0 உயாட்ப > பப் جنلل اولات تلسو هيلع ذللا ىلعص جنلا باحصآ نم اشاننآ 3 37'; Cg ^00 'I ನ ಓ 50 روجالاب ~0s ممن 03 9 مملارمآ لوضنب نوقدممتيو Lld _ 0ೆ೮ உ نوقذصت ەام مکل 33 =! رماد تاق دمم ~30 - ஆப 5 K-lc0 - ~300 பND مارحهي اممضوول متيارأ JV frl (4 J 0(t WIJtJ  uyll `ಋ நளுற் Bbowd 0 உயாட்ப > பப் جنلل اولات تلسو هيلع ذللا ىلعص جنلا باحصآ نم اشاننآ 3 37'; Cg ^00 'I ನ ಓ 50 روجالاب ~0s ممن 03 9 مملارمآ لوضنب نوقدممتيو Lld _ 0ೆ೮ உ نوقذصت ەام مکل 33 =! رماد تاق دمم ~30 - ஆப 5 K-lc0 - ~300 பND مارحهي اممضوول متيارأ JV frl (4 J 0(t WIJtJ  uyll `ಋ - ShareChat
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا وَاصِلٌ، مَوْلَى أَبِي عُيَيْنَةَ، عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ، عَنْ أَبِي ذَرٍّ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "يَا رَسُولَ اللهِ، ذَهَبَ أَهْلُ الدُّثُورِ بِالْأُجُورِ، يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَيَتَصَدَّقُونَ بِفُضُولِ أَمْوَالِهِمْ،" قَالَ: *"أَوَلَيْسَ قَدْ جَعَلَ اللهُ لَكُمْ مَا تَصَّدَّقُونَ؟"* *"إِنَّ بِكُلِّ تَسْبِيحَةٍ صَدَقَةً، وَكُلِّ تَكْبِيرَةٍ صَدَقَةً، وَكُلِّ تَحْمِيدَةٍ صَدَقَةً، وَكُلِّ تَهْلِيلَةٍ صَدَقَةً، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنْ مُنْكَرٍ صَدَقَةٌ، وَفِي بُضْعِ أَحَدِكُمْ صَدَقَةٌ،"* قَالُوا: "يَا رَسُولَ اللهِ، أَيَأتِي أَحَدُنَا شَهْوَتَهُ وَيَكُونُ لَهُ فِيهَا أَجْرٌ؟" قَالَ: *"أَرَأَيْتُمْ لَوْ وَضَعَهَا فِي حَرَامٍ أَكَانَ عَلَيْهِ فِيهَا وِزْرٌ؟ فَكَذَلِكَ إِذَا وَضَعَهَا فِي الْحَلَالِ كَانَ لَهُ أَجْرٌ."* (رواه مسلم) அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!?)" என்று கூறினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், *"நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா?* *இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்;* *இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்;* *ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்;* *ஒவ்வொரு 'ஓரிறை உறுதிமொழி'யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்;* *நல்லதை ஏவுதலும் தர்மமே;* *தீமையைத் தடுத்தலும் தர்மமே;* *உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு!"* என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், *"(நீங்களே) சொல்லுங்கள்: தடைசெய்யப்பட்ட வழியில் ஒருவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்!"* என்று விடையளித்தார்கள். (நூல் : முஸ்லிம்.)
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ہنع ہللا يضر ப்ச رذ يداففلا يبنلل اولاق مّلسو یَّلص ِباحصا نم اسان ّنا ) ّيبنلا للا ِہیلع مّلسو ٍهیلع ُهللا یَّلص மiடம ! <பர ப ِرونُڈلا يلصن امك نوَّلصُي ِروجألاب موصن امك نوموصيو لاق . مهلاومأ لوضفب نوقدصتيو ەللا لعج دق سیلوأ ةقدص ةحيبست لكب نإ ؟ نوقذصت ام مكل పమయ ةقدص ةليلهت لكو . ةقدص ةديمجت لكو . ةقدص ُرمأو Sve مكدحأ عضب يفو . ةقدصركنم نع يهنو , பவப ُهل نوکيو ہّتوهش اندحأ لوسر اي : اولاق . يتايأ  ۃقدص Al' 9 لاق ؟ ُرجأ اهیف اهيف هيلع ناكأ مارح يف اهعضوول متيارأ ازجا ُهل ناک ِلالحلا اهعضو اذإ كلذكف ؟ رذو ملسم ەداور ہنع ہللا يضر ப்ச رذ يداففلا يبنلل اولاق مّلسو یَّلص ِباحصا نم اسان ّنا ) ّيبنلا للا ِہیلع مّلسو ٍهیلع ُهللا یَّلص மiடம ! <பர ப ِرونُڈلا يلصن امك نوَّلصُي ِروجألاب موصن امك نوموصيو لاق . مهلاومأ لوضفب نوقدصتيو ەللا لعج دق سیلوأ ةقدص ةحيبست لكب نإ ؟ نوقذصت ام مكل పమయ ةقدص ةليلهت لكو . ةقدص ةديمجت لكو . ةقدص ُرمأو Sve مكدحأ عضب يفو . ةقدصركنم نع يهنو , பவப ُهل نوکيو ہّتوهش اندحأ لوسر اي : اولاق . يتايأ  ۃقدص Al' 9 لاق ؟ ُرجأ اهیف اهيف هيلع ناكأ مارح يف اهعضوول متيارأ ازجا ُهل ناک ِلالحلا اهعضو اذإ كلذكف ؟ رذو ملسم ەداور - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *________﷽________* *السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ* *இறைவனின் சாந்தியும், கருணையும், உங்கள் மீது உண்டாவதாக.......* *بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان* *امين امين يارب العالمين!* 💖💖💖💖💖💖💖💖💖 *இனிய இரவு வாழ்த்துகள்!* *╔═══🌻⊰⊱⊰🌹⊱⊰⊱⁶🌻═══╗* *கழுதைகளுடன் வாதிடப் போகாதீர்கள்!* ✶⊶⊷⊶⊷❍⊶⊷⊶⊷✶❍⊶⊶⊷⊶⊷❍ கழுதையொன்று புலியிடம், "புல்லின் நிறம் நீலம்!" என்று கூறியது. புலி கோபமடைந்து, "இல்லை, புல் பச்சை!" என்று கூறியது. விவாதம் சூடு பிடித்தது, இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர், எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர். சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, "அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?" என்று கேட்டது. சிங்கம், "உண்மை, புல் நீல நிறமானது" என்று பதிலளித்தது. கழுதை விரைந்து தொடர்ந்தது, "புலி என்னுடன் உடன் படவில்லை. முரண்படுகிறது• அரசே•••! என்னை எரிச்சலூட்டுகிறது, தயவு செய்து அவரை தண்டியுங்கள்." என்று கூறியது. அப்போது அரசர், "புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு யாருடனும் பேசக் கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும்••• இதுதான் உனக்குரிய தண்டனை" என்று அறிவித்தது. கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து, "புல் நீலநிறமானது!" "புல் நீலநிறமானது!" என்று கூறிக் கொண்டு அங்கிருந்து அகன்றது. புலி அதனது தண்டனையை ஏற்றுக் கொண்டது, ஆனால் அது சிங்கத்திடம்... "அரசே, ஏன் என்னைத் தண்டித்தீர்கள்? புல் பச்சை நிறம் தானே." என்றது. சிங்கம், "நீ சொல்வது சரிதான் - புல் பச்சைநிறம்தான்." புலி, "அப்படியானால் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?". சிங்கம் பதிலளித்தது, "புல் நீலமா அல்லது பச்சை நிறமா என்ற கேள்விக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான ஓர் உயிரினம் ஏன் கழுதையுடன் விவாதித்து நேரத்தை வீணாக்கினாய்? அதுவே எனக்கு கவலையை உண்டாக்கியது. அதற்கே இந்தத் தண்டனை!” முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவதுதான் மிக மோசமான நேர விரயமாகும். அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள், ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களது மாய்கையான நம்பிக்கைகளில் வெற்றி மட்டுமே. அர்த்தமில்லாத வாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். நாம் அவர்களுக்கு எத்தனை சான்றுகளை வழங்கினாலும் அவர்கள் புரிந்து கொள்ளும் திறன் இல்லாதவர்கள். அவர்களின் அகங்காரத்தாலும், வெறுப்பு மற்றும் கோபத்தாலும் கண் மூடித்தனமாகத்தான் இருப்பார்கள். அவர்கள் பிழையாக இருந்தாலும் அவர்களுக்கு தம்மை சரியாக இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும். அறியாமை அலறும் போது, ​​நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை. இறப்பின் மீது பயம் போய் விட்டால் மௌனமும் அமைதியும் உங்களிடம் தானாக குடிவந்துவிடும். மௌனம் அமைதியின் அடையாளம் மட்டுமல்ல மற்றவரின் உள்ளத்தில் உரசி உறவாடும் உன்னத மொழியும் மிகப் பலம் பொருந்திய ஆயுதமும் கூட. 💐 🌹 🌻 💐 🌹 🌻 💐 🌹 🌻 முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இன்று இரவு உறங்கி காலையில் சுபுஹுக்கு எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! இனிய கனவுகளுடன் இரவு இதமாகட்டும்... *இந்த இரவு இனிதாகட்டும்* தொகுப்பு... *S.S.ஷேக் ஆதம் தாவூதி* *No : 02 கடலங்குடி* *மயிலாடுதுறை* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *قال رجل لبعض العارفين'اوصني.قال اجعل لدينك غلافة كغلاف المصحف'لان لايدنس.قال وماغلاف الدين.قال:ترك الكلام إلا فيما لابدمنه٫وترك طلب الدنيا إلا مالابدمنه٫وترك مخالطة الناس إلا فيمالابدمنه."الكتاب "فيض القدير" 3/82.;மனிதா! நன்கு அறிந்து கொள்! வாழ்நாள் என்பது மிக குறுகியது.அதை விணாக்கிவிட்டதை‌ எண்ணி வருந்துவது சொல்லொன்னா நீண்டதாகும்.எனவே லாஇலாஹ இல்லல்லாஹ் (கலிபா தய்யிபா)வை அதிகமதிகம் ஓதுவதை‌ பற்றிக்கொள்!:தாபியீன் மணிமகுடம் ஹஸனுல் பசரீ(ரஹ்) கூறினார்கள்; சொர்க்கத்தின் விலை கலிமா :'தய்யிபாவாகும்.:'ஞானி ஒருவரிடம்'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என ஒருவர் கேட்டதற்கு அந்த ஞானி கூறிய அறவுரை:உனது வணக்க வழிபாட்டுக்கு ஒரு உறையிட்டுக்கொள்!மாசு படியாமலிருக்க குர்ஆனுக்கு உறையிடுதல்போல்.*வணக்க வழிபாடுக்குரிய உறை என்னவென வினவினார்.ஞானி பதிலுரைத்தார்*அவசியமின்றி யாரோடும் பேசாமல் இருப்பது.அளவு மீறி உலகாசை கொள்ளாதி ருப்பது*அவசியமின்றி மனிதர்களுடன் சேராமலிருப்பது */நூல் .ஃபைளுல் கதீர். பாகம்3 பக்கம்82 * தகையோன் அருளில்‌* தமிழாக்கம் நூரிகள் பேரவை தலைவர் முஹ்யித்தீன் நூரி'ஜலாலி الحمد لله ثم الحمد لله على هذا*
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - َكْيَلَعَو ٌةَليِوَط ُةَرْسَحْلا ٌليِلَق Jf lels Ji३Jl َلاَقَو ءُهَّللا اَّلِإ ةَلِإ اَل ْنَأ Jgs | j8| ُنَسَحْلا 9 al J  J Jlsi al &5 ُّيِرْضَبْلا ْنَمَث ِةَّنَجْلا َكْيَلَعَو ٌةَليِوَط ُةَرْسَحْلا ٌليِلَق Jf lels Ji३Jl َلاَقَو ءُهَّللا اَّلِإ ةَلِإ اَل ْنَأ Jgs | j8| ُنَسَحْلا 9 al J  J Jlsi al &5 ُّيِرْضَبْلا ْنَمَث ِةَّنَجْلا - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *பள்ளிவாசலின் இமாமின் மகள் நீதிபதியாகிறார்* *அஸ்ஸலாமு அலைக்கும்,* ஒரு பள்ளிவாசலின் இமாமின் மகளான ஹபீபா புகாரி, நீதிபதியாகப் பொறுப்பேற்று வரலாற்றைப் படைத்துள்ளார்! 👉பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், *ஹிஜாப்* அணியும் வழக்கமுடையவருமான இந்த இளம் பெண், நீதிபதி எனும் உயரிய பதவியை வெற்றிகரமாக அடைந்துள்ளார். பீகார் நீதித்துறைப் பணித் தேர்வில் (PCS-J) 30-வது இடத்தைப் பிடிப்பதன் மூலம், அவர் வெற்றியின் கொடியை வானுயரப் பறக்கவிட்டுள்ளார். பீகார் நீதித்துறைத் தேர்வில் 30-வது இடத்தைப் பிடித்ததன் வாயிலாக, இன்றும் கூட பலரால் பலவீனமானவர்களாகவோ அல்லது எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாகவோ கருதப்படும் கோடிக்கணக்கான பெண் பிள்ளைகளின் கனவுகளுக்கு ஹபீபா புகாரி குரல் கொடுத்துள்ளார். ஹபீபாவின் தந்தையான காரி முகமது அகமது புகாரி, குல்சார் போக்கர் பள்ளிவாசலின் இமாமாகப் பணியாற்றி வருகிறார். அவரிடம் செல்வமோ, புகழோ இருக்கவில்லை; அவர் எவருடைய பரிந்துரையையோ அல்லது செல்வாக்கையோ சார்ந்திருக்கவில்லை. அவரிடம் இருந்தது அவருடைய பிரார்த்தனைகளும், நேர்மையும், தன் மகள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் மட்டுமே. 👉ஒரு *மதரஸாவின்* (இஸ்லாமியக் கல்வி நிலையம்) தலைவரான அவருடைய மாமா அப்துல்லா புகாரி, அறிவின் மகத்தான முக்கியத்துவத்தை ஹபீபாவின் மனதில் ஆழமாகப் பதிய வைப்பதில் ஒரு முக்கியப் பங்காற்றினார். அவர் தனது பள்ளிப் படிப்பை (Matriculation) முங்கரில் நிறைவு செய்தார்; அதைத் தொடர்ந்து, இடைநிலை மற்றும் சட்டப் படிப்புகளை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர், பாட்னா உயர் நீதிமன்றத்தின் வளாகங்களுக்குள் இரவும் பகலும் அயராது உழைப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார்—புத்தகங்களிலும், வழக்கு ஆய்வுகளிலும் அவர் தன்னை முழுமையாக மூழ்கடித்துக்கொண்டார்! 👉ஹபீபா இவ்வாறு கூறுகிறார்: "இன்றைய பெண் பிள்ளைகளால் எதையும் சாதிக்க முடியும். எனது பெற்றோரின் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவே எனது மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது." இன்று, ஹபீபா ஒரு நீதிபதியாகத் தனது இருக்கையில் அமரும் வேளையில், இந்த வெற்றியானது *ஹிஜாப்* அணியும் ஒரு பெண்ணுக்கு மட்டுமே சொந்தமானதல்ல; மாறாக, தன் மகளை ஒரு சுமையாகக் கருதாமல், ஒரு வரப்பிரசாதமாகக் கருதும் ஒவ்வொரு தந்தைக்கும் கிடைத்த வெற்றியாகும் இது. 🤲 தனது பிரார்த்தனைகளின் அமைதியான, உண்மையான உள்ளுணர்வு மூலம் தன் மகளின் விதியை வடிவமைத்து மாற்றியமைக்கும் ஒவ்வொரு தாய்க்கும் கிடைத்த வெற்றியாகும் இது. இந்தச் சாதனை மூலம், பீகாரைச் சேர்ந்த ஒரு மகள், ஒட்டுமொத்த தேசத்தின் தலையையும் பெருமையுடன் நிமிரச் செய்துள்ளார். *ஒரு மகளின் ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்* @ நாசர் அப்பாஸ் சையது
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்-230* யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொன்றுவிட சதித்திட்டம் தீட்ட.. இந்தச் சதித்திட்டத்தை அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அறிவிக்கவே.. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர் முஹம்மது இப்னு மஸ்லமாவை நழீர் இனத்தவரிடம் அனுப்பி, *"மதீனாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்; எங்களுடன் மதீனாவில் நீங்கள் தங்கக் கூடாது; இனி மதீனாவில் வசிக்கக்கூடாது; பத்து நாட்கள் மட்டும் நான் உங்களுக்கு அவகாசம் தருகிறேன்; அதற்கு மேலும் யாராவது மதீனாவில் தங்கியிருந்தால் அவரது கழுத்தை வெட்டி விடுவேன்!"* என்று கூறும்படி சொன்னார்கள். மதீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்றிருந்த யூதர்களுக்கு இப்னு உபையின், "உங்களது இல்லங்களிலிருந்து வெளியேறவேண்டாம்." என்ற தவறான ஆலோசனையால் துணிவு பிறந்து, "எதிர்த்து போரிடுவோம்" என்று யூதர்கள் முடிவு செய்தனர். உண்மையில் இந்நிலைமை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மிகச் சிக்கலானதாகவே இருந்தது. முஸ்லிம்களின் மிகச் சிரமமான இக்காலகட்டத்தில் எதிரிகளிடம் மோதுவதும், சண்டை செய்வதும் ஆபத்தான முடிவை உண்டாக்கலாம்; மற்ற அரபுகள் ஒருபக்கம் தங்களைத் தாக்குகிறார்கள். மேலும், தங்களின் அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களையும் சதி செய்து கொன்று விடுகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருந்தனர். இதுமட்டுமின்றி நழீர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்கள் ஓரளவுக்கு தேவையான வலிமையுடன் விளங்கியதால் அவர்கள் சரணடைவது அடிபணிவது சற்று கடினமான விஷயம்தான். அவர்களுடன் போரிடுவது பல இன்னல்களை சந்திக்கக் காரணமாகலாம். ஆயினும், *இதற்கெல்லாம் முஸ்லிம்கள் தளர்ந்து விடவில்லை.* பிஃரு மஊனாவின் நிகழ்ச்சியும் அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியும் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை அதிகம் தூண்டின. *தங்களின் தனி நபர்களுக்கும் குழுக்களுக்கும் ஏற்படும் மோசடி மற்றும் வஞ்சகச் செயல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அதை செய்பவர்களுக்கும், செய்யத் தூண்டுபவர்களுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே கொல்லத் துணிந்த நழீர் இனத்தவரிடம் போர் செய்தே தீர வேண்டும்* என்று முடிவு செய்தனர். *அதனால் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் துணிந்தனர்.* நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹை இப்னு அக்தபின் பதில் கிடைத்தவுடன் தக்பீர் (அல்லாஹ் அக்பர் என்று) முழங்கினார்கள். தோழர்களும் தக்பீர் முழங்கினர். பின்பு நழீர் இனத்தவரிடம் சண்டையிட ஆயத்தமானார்கள். மதீனாவில் இப்னு உம்மு மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் படையின் கொடியை ஏந்தியிருக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படையுடன் புறப்பட்டுச் சென்று யூதர்களை முற்றுகையிட்டார்கள். நழீர் இனத்தவர் தங்களின் கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்களை நோக்கி அம்புகளையும், கற்களையும் வீசி எறிந்து தாக்கினர். இதற்கு, அவர்களது தோட்டங்களும் பேரீத்த மரங்களும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. எனவே, அவர்களின் தோட்டங்களையும் பேரீத்த மரங்களையும் வெட்டி எரித்து விடும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இதைப் பற்றியே ஹஸ்ஸான் கூறுகிறார். *புவைராவில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிவது பனூ லுஐ கூட்டத் தலைவர்களுக்கு மிக எளிதாகிவிட்டது.* இவர்களின் பேரீத்த தோட்டத்தின் பெயர்தான் புவைரா என்பது. அல்லாஹ் இதுகுறித்தே இந்த வசனத்தை இறக்கினான். *"நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்."* (அல்குர்ஆன் 59:05) குரைளா யூதர்கள் உதவிக்கு முன் வரவில்லை. அவ்வாறே இவர்களின் நண்பர்கள் கத்ஃபான் கிளையைச் சேர்ந்தவர்களும் மற்றும் இப்னு உபையும் உதவிக்கு வராமல் விலகிக் கொண்டனர். எனவேதான் இவர்களின் இந்த நடத்தையை அல்லாஹ் ஒரு உவமானத்துடன் கூறுகிறான். *"(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: 'நீ (இறைவனை) நிராகரித்து விடு!' என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும், 'நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்!' என்றான்."* (அல்குர்ஆன் 59:16) முற்றுகை ஆறு அல்லது பதினைந்து இரவுகள் நீடித்தது. அல்லாஹ் யூதர்களின் உள்ளத்தில் பயத்தையும் நடுக்கத்தையும் போட்டான். "ஆயுதங்களைக் கீழே போட்டு நாங்கள் பணிந்து விடுகிறோம்; நாங்கள் மதீனாவை விட்டு வெளியேறி விடுகிறோம்!" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தூதனுப்பினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், *"உங்களையும் உங்கள் பிள்ளை குட்டிகளையும் அழைத்துக் கொண்டு இங்கிருந்து கிளம்பிவிடுங்கள்; ஒட்டகங்கள் சுமக்கும் அளவுள்ள சாமான்களையும் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்லலாம்; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது!"* என்று கூறினார்கள். இந்த நிபந்தனைக்கு அவர்கள் அடிபணிந்தனர். தங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளை எவரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக அவற்றை அழித்தனர். வீட்டு கதவுகளையும் ஜன்னல்களையும் பெயர்த்து தங்களுடன் எடுத்து கொண்டனர். அவர்களில் சிலரோ ஆணிகளையும், முகட்டில் இருந்த பலகைகளையும், முளைக் கம்புகளையும் கூட தங்களுடன் எடுத்துக் கொண்டனர். பின்பு பெண்கள், சிறுவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அறுநூறு ஒட்டகைகளில் புறப்பட்டனர். ஹை இப்னு அக்தப், ஸல்லாம் இப்னு அபூஹுகைக் போன்ற தலைவர்களும் மற்றும் பெரும்பாலான யூதர்களும் கைபர் சென்று தங்கினர். மற்றவர்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றனர். அவர்களில் இருவர் மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தங்களது சொத்து செல்வங்களுடன் மதீனாவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இம்மக்களின் ஆயுதங்கள், அவர்களின் வீடுகள், நிலங்கள், செல்வங்கள் என அனைத்தையும் கைப்பற்றினார்கள். மொத்தம் ஐம்பது கவச ஆடைகளும், ஐம்பது தலைக் கவசங்களும், முன்னூற்றி நாற்பது வாட்களும் இருந்தன. இந்த யூதர்களின் செல்வங்கள், சொத்துகள், வீடுகள், நிலங்கள் அனைத்தையும் அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் கனீமத்தாக அருளினான். அவர்களின் விருப்பத்திற்கேற்ப அதை செய்து கொள்ள முழு அனுமதியளித்தான். அதை ஐந்து பங்காக ஆக்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிடவில்லை. ஏனெனில், இது சண்டையின்றி கிடைத்த பொருளாகும். இப்பொருட்களை முந்திய முஹாஜிர்களுக்கு (மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறியவர்களுக்கு) மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பங்கு வைத்தார்கள். ஆனால், அன்ஸாரிகளில் ஏழையாக இருந்த அபூதுஜானா, ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவருக்கும் அதில் பங்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது குடும்பத்தினருக்கு ஓராண்டுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து வந்தார்கள். மீதமிருந்ததை அல்லாஹ்வின் பாதையில் போருக்குப் பயன்படுத்தினார்கள். இப்போர் குறித்த விவரங்களை முழுவதுமாக ஹஷ்ர் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இறக்கினான். இந்த அத்தியாயத்தில், *யூதர்கள் எவ்வாறு விரட்டியடிக்கப்பட்டனர்; நயவஞ்சகர்களின் கொள்கையும் பழக்கமும் எவ்வாறனது? போரின்றி கிடைக்கும் செல்வத்தின் சட்டம் என்ன?* போன்ற விவரங்கள் கூறப்பட்டன. மேலும் முஹாஜிர்கள், அன்ஸாரிகள் குறித்து இந்த அத்தியாயத்தில் புகழ்ந்து கூறியிருக்கிறான். *போர் நலன்களை கருத்தில் கொண்டு எதிரிகளுக்குச் சொந்தமான மரங்களை வெட்டுவதும், கொளுத்துவதும் சரியானதே; இது விஷமத்தனமாக ஆகாது!* என்று அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ளான். அத்துடன் முஸ்லிம்கள் எப்போதும் இறையச்சத்தைக் கடைபிடித்து, மறுமைக்கான நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு இறுதியாக தனது புகழ்ச்சியைக் கூறி உயர்வுமிக்க தனது பெயர்களை விவரித்து அத்தியாயத்தை நிறைவு செய்கிறான். இந்த அத்தியாயத்தில் நழீர் இன யூதர்களை குறித்து முழுவதுமாக கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்தை நழீர் என்றும் கூறலாம் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், zஜாதுல் மஆது) இப்னு இஸ்ஹாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மற்றும் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் குறித்து கூறியதை நாம் இதுவரை பார்த்தோம். அபூதாவது, அப்துர் ரஜாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி மற்றும் பல அறிஞர்கள் இச்சம்பவத்திற்க வேறு பல காரணங்களைக் கூறுகின்றனர். அதாவது... *(இன்ஷா அல்லாஹ் தொடரும்)*
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - [ మ ८: ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் [ మ ८: ஸீரத்துன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் - ShareChat
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் *________﷽________* *السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ* *இறைவனின் சாந்தியும், கருணையும், உங்கள் மீது உண்டாவதாக.......* *بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان* *امين امين يارب العالمين!* 💖💖💖💖💖💖💖💖💖 *இனிய இரவு வாழ்த்துகள்!* *╔═══🌻⊰⊱⊰🌹⊱⊰⊱⁶🌻═══╗* *'’தர்மமும், பேரமும்!’’* ✶⊶⊷⊶⊷❍⊶⊷⊶⊷✶❍⊶⊶⊷⊶⊷❍ செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுக் கொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள். "ஒரு கட்டு கீரை என்ன விலை....?" "ஓரணாம்மா" "ஓரணாவா....? அரையணா தான் தருவேன். நாலு கட்டு கொடுத்திட்டு போ" "இல்லம்மா வராதும்மா". "அதெல்லாம் முடியாது. அரையணா தான்". பேரம் பேசுகிறாள் அந்தத் தாய். பேரத்திற்கு ஒத்துக் கொள்ளாத அந்தப் பெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்று விட்டு... "மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்றாள். "முடியவே முடியாது. கட்டுக்கு அரையணா தான் தருவேன்".. என்று பிடிவாதம் பிடித்தாள். கீரைக்காரி சிறிது யோசனைக்குப் பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறி விட்டு நாலு கட்டுக் கீரையை கொடுத்து விட்டு ரெண்டணா காசை வாங்கிக் கொண்டு கூடையைத் தூக்கி தலையில் வைக்கப் போகும் போது கீழே சரிந்தாள். "என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலயா...?" என்று அந்தத் தாய் கேட்க "இல்லம்மா போய் தான் கஞ்சி காய்ச்சணும்" "சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறி விட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும் போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். "இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த தாயினுடைய மகன் " ஏம்மா அரையணாவுக்குப் பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக் கூட ஆறு இட்லிக்கு மூன்றணா வருதும்மா? என்று கேட்க, அதற்கு அந்தத் தாய், "வியாபாரத்துல தர்மம் பார்க்கக் கூடாது, தர்மத்துல கணக்கு பார்க்கக் கூடாதுப்பா" என்று கூறினாள்...! 💐 🌹 🌻 💐 🌹 🌻 💐 🌹 🌻 முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இன்று இரவு உறங்கி காலையில் சுபுஹுக்கு எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! இனிய கனவுகளுடன் இரவு இதமாகட்டும்... *இந்த இரவு இனிதாகட்டும்* தொகுப்பு... *S.S.ஷேக் ஆதம் தாவூதி* *No : 02 கடலங் குடி* *மயிலாடு துறை* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹