சர்வதேச மருத்துவ ஆய்விதழில் தஞ்சை மாணவி அஃப்ரா ஷைரீன் சாதனை!
#👌அருமையான ஸ்டேட்டஸ் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
==================
தஞ்சாவூர் கோணலாம் பள்ளத்தைச் சேர்ந்தவரும், தற்போது கத்தாரில் பணிபுரிபவருமான முகம்மது பாக்கர் அவர்களின் மகள் அஃப்ரா ஷைரீன் (M.B. Afra Shaireen Mohamed Bakkar), உலகத்தரம் வாய்ந்த புதிய கொரோனா மருத்துவக் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு பயிலும் இவரது இந்த ஆய்வு, புகழ்பெற்ற 'International Journal of Pharmaceutical Sciences' ஆய்விதழால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
mRNA தொழில்நுட்பத்தின் எதிர்காலப் பயன்பாடுகள் குறித்த இந்த ஆய்வு, தனது படிப்பின் முக்கிய மைல்கல் என அவர் கூறியுள்ளார்.
தன் குடும்பத்தின் முதல் பட்டதாரியான அஃப்ரா ஷைரீன், சர்வதேச அளவில் தன் சொந்த மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.