#🙏ஆன்மீகம் #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ *சிவராத்திரி* *சிவாலய* *ஓட்டம்* :
சிவபக்தனான சுண்டோதரன் என்னும் அரசன் தனக்கு எதிலும் வெற்றி கிடைக்கவேண்டுமென, இல்லறத்தை துறந்து பல வருடங்களாக திருமலை காட்டில் கடுமையான தவம் புரிந்து வந்தான். வருடங்கள் பல ஓட அவன் இளமையும் மாறியது.
அவன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவன் கேட்கும் வரங்களான இளமையையும், தன் வலதுகை சுண்டு விரலால் யார் உச்சியில் தொட்டாலும் அவர் பஸ்பமாக வேண்டும் என்ற வார்த்தையும் பெற்றான்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் தொட்ட அரசன் சுண்டோதரன் உடனே அந்த வரத்தை சோதிக்க எண்ணி காட்டில் யவரும் இல்லாத காரணத்தால் சிவபெருமானிடமே சோதிக்க எண்ணிணான்.
சிவபெருமானையே வென்று விடலாம் என்னும் கர்வம் தோன்றியது. நடப்பதை அறிந்த சிவபெருமான் அந்த இடத்தை விட்டு ஓடி ஒளிய ஆரம்பித்தார். அவர் ஓடி இளைப்பாறிய இடங்கள் முறையே,
1. திருமலை,
2. திக்குறிச்சி,
3. திற்பரப்பு,
4. திருநந்திக்கரை,
5. பொன்மனை,
6. திருப்பன்றிப்பாகம்,
7. கல்குளம்,
8. மேலாங்கோடு,
9. திருவிடைக்கோடு,
10. திருவிதாங்கோடு,
11. திருப்பன்றிக்கோடு.
இறுதியில் திருநட்டாலம் என்னுமிடத்தில் சிவபெருமான் மஹாவிஷ்ணுவின் உதவியை நாடினார். மஹாவிஷ்ணு மாயா மோகினி அவதாரம் எடுத்து தன் நாட்டிய திறமையால் சுண்டோதரனின் கையாலேயே அவனை அழித்து சாம்பலாக்கினார். பின் சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணனாக மக்களுக்கு காட்சியளித்தனர்.
சிவன் ஓடி ஒளிந்து இறுதியில் சங்கர நாராயணனாக காட்சியளித்த நாளே மஹா சிவராத்திரி நாளாக கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த இடங்களில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களால் ஆலயங்கள் கட்டப்பட்டு ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி நாளில் ஏராளமான பக்தர்கள் நடை பயணமாக இந்த 12 ஆலயங்களையும் வலம் வந்து இறைவனை தரிசிக்கின்றனர். மொத்தம் 110 கிலோமீட்டர் தூரம் மக்கள் வெறும் காலில் நடைபயணம் மேற்கொள்கிறார்கள்.
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
*சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.✍🏼🌹*
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #💫சிவ பக்தர்கள்🧿 #🔱 மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🕉️ #🙏ஆன்மீகம்








