gurumadasamy
ShareChat
click to see wallet page
@guruseemaraja
guruseemaraja
gurumadasamy
@guruseemaraja
Am in life race🏃‍♂️
#வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம் - கொஞ்சம் சுயநலம் அவசியம் அளவுக்கு மீறியதியாகம் கடைசி காலங்களில் மனநலம் பாதிக்கும் நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும் கொஞ்சம் சுயநலம் அவசியம் அளவுக்கு மீறியதியாகம் கடைசி காலங்களில் மனநலம் பாதிக்கும் நிலைக்கு கொண்டு சேர்த்துவிடும் - ShareChat
#🙏ஆன்மீகம் #🙏கோவில் வழிபாடு... வீட்டு வாசலில் பசு வந்து நின்றால் இவ்வளவு நன்மைகளா? இதோ அதன் ஆன்மீக ரகசியங்கள்... இந்து வாழ்வியல் நெறிமுறைப்படி, இயற்கையாக நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஏதேனும் ஒரு காரணம் பின்னணியில் இருக்கும். அவற்றை கூர்ந்து ஆராய்ந்தால் அதன் பலனை நீங்கள் உணர்வீர்கள். பசு ஒன்று உங்கள் வீட்டு வாசலில் அடிக்கடி தென்படுவது ஒரு சாதாரண செயல்தான். ஆனால், பின்னால் ஒளிந்துள்ள ஆன்மீக தகவலைப் பற்றி தெரியுமா? பசு என்பது சனாதான தர்மத்தில் மதிக்கப்படும் மற்ற விலங்குகளைப்போல் இல்லாமல், அதற்கென்று தனி மரியாதை உண்டு. பசு கடவுளாக மட்டும் பார்க்கப்படாமல் ஒரு தாயாகவும் மதிப்பும் மரியாதையுடன் நடத்தப்படுகிறது. பசுவின் உடலில் மும்மூர்த்திகளும் ஏனைய மற்ற தேவர்களும் வசிப்பதாக பல புராணங்கள் கூறுகின்றன. மிகவும் குறிப்பாக பசு என்பது மகாலட்சுமியின் அம்சமாக வணங்கப்படுகிறது. வீட்டு வாசலில் பசு அடிக்கடி தென்படுவது ஒரு மங்களகரமான சகுனமாகும். உங்கள் வீட்டு வாசலில் பசு நிற்கிறது என்றால் அது சாதாரண தற்செயல் நிகழ்வல்ல. உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரப்போகிறது என்பதையே, பசுவின் வரவு உங்களுக்கு அறிவிக்கிறது. பசுவினை பார்த்துவிட்டு அன்றையநாள் தொடங்கினால், நாள் முழுக்க அதிர்ஷ்டம் உங்களை வந்து சேரும். பொதுவாகவே அனைத்து இடங்களிலும் பசுவின் நடமாட்டம் இருக்காது. துர்சக்திகளும், தூய்மையற்ற எண்ணங்களை கொண்டவர்கள் இருக்கும் இடங்களில் பசுவினால் இயல்பாக இருக்க இயலாது. அது உங்கள் வீட்டில் வாசலில் வந்து நின்றால், உங்கள் வீட்டில் கடவுளின் ஆசி நிரம்பியுள்ளது என்று அர்த்தம். நல்ல அதிர்வுகள் இருக்கும் இடங்களில் பசு விரும்பி வருகிறது. பசுவின் வருகை வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை விரட்டி விடுகிறது. மேலும் வாஸ்து சார்ந்த குறைபாடுகளையும் பசுவின் ஆசிர்வாதம் நீக்குகிறது. இதன் காரணமாகவே புதிதாக குடிபுகும் வீடுகளில் பசு மற்றும் கன்று ஆகியவற்றை வீட்டிற்குள்ளே அழைத்துச்சென்று அதன் ஆசிகளை பெறுகின்றனர். வீட்டிற்கு வரும் பசுவின் நிறத்தினை வைத்து உங்களுக்கு எந்த கிரகத்தின் ஆசிகள் கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். சாதாரணமாகவே பசுக்களை வழிபடுவதும் அவற்றிற்கு உணவு அளிப்பதும் கிரக தோஷங்களை நீக்கும் நடவடிக்கையாக இருக்கிறது. வெள்ளைப் பசு: வெள்ளை நிற பசு உங்கள் வீட்டு வாசலில் தென்பட்டால், அதனால் சந்திர பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் மன அமைதியையும் மகிழ்ச்சியையும் இது தரும். அசல் பதிவேற்றியவருக்கு நன்றி கருப்பு நிறப்பசு: கருப்பு நிற பசு வீட்டு வாசலுக்கு வந்தால் வீட்டில் உள்ள தீமைகள நீங்கள். சனீஸ்வர பகவானின் பூரண ஆசி கிடைக்கும். அவரது தீவிர பார்வையில் இருந்து விமோசனம் கிடைக்கும். வாசலில் பசுவைப் பார்த்தால் என்ன செய்யவேண்டும்? பசுவினை விரட்டுவதோ, துன்புறுத்தவோ கூடாது. பசுவினை விரட்டுதல் அதிர்ஷ்டத்தை விரட்டுவதற்கு சமமாகும். முடிந்த அளவு பசுவிற்கு வீட்டு வாசலில் தண்ணீர் வைப்பது நல்ல பலன் தரும். அது இயலாவிட்டால் வாழைப்பழம், புல், ரொட்டி, பழங்கள், கீரைகள் போன்றவற்றை தரலாம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களின் ஆசியையும், முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் பெறலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பசு வாசலுக்கு வந்தால் அதற்கு அருகம்புல் அல்லது கீரைகளை கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது, வீட்டிற்கு மங்களகரமான அதிர்ஷ்டங்களை கொண்டுவரும். பசுவை வணங்குவது ஒரு ஆன்மீகச்செயல் மட்டுமல்லாமல், நமக்கு உணவளிக்கும் புனித விலங்கின்றி நன்றி தெரிவிக்கும் செயலும் ஆகும்.
🙏ஆன்மீகம் - ShareChat
#🙏ஆன்மீகம் #🙏கோவில் வெள்ளிக்கிழமை அன்னபூரணி வழிபாடு: வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய வழிமுறைகள்! எந்த வீட்டில் உணவு வீணாகாமல், விருந்தோம்பல் சிறப்பாக நடக்கிறதோ, அங்கு அன்னை அன்னபூரணி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அன்னபூரணியை வழிபடுவது விசேஷமானது. வழிபாடு செய்யும் முறை: • சுத்தம் செய்தல்: வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, குளித்து முடித்துவிட்டு பூசையறையில் கோலமிடுங்கள். • அன்னபூரணி சிலை/படம்: உங்கள் வீட்டில் சிறிய அன்னபூரணி விக்கிரகம் இருந்தால், அதை ஒரு சிறிய தட்டில் வைத்து, சுற்றிலும் தானியங்கள் அல்லது அரிசியைப் பரப்பி வைக்கலாம். • அலங்காரம்: அன்னைக்கு உதிரிப் பூக்கள் அல்லது மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்வது சிறப்பு. • நெய் தீபம்: பசு நெய் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி வழிபாட்டைத் தொடங்குங்கள். • நிவேதனம்: அன்னைக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயசம் அல்லது கற்கண்டு கலந்த பால் நிவேதனமாகப் படைக்கலாம். ஒரு கிண்ணத்தில் சுத்தமான பச்சரிசியை வைத்து அன்னைக்கு அர்ப்பணிப்பதும் மிக நன்று. • துதிப்பாடல்: "அன்னபூர்ணே சதாபூர்ணே..." எனத் தொடங்கும் அன்னபூரணி அஷ்டகத்தைப் பாராயணம் செய்யுங்கள். சித்தர்கள் போற்றிய அன்னதானத்தின் சிறப்பை உணர்ந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வழிபாட்டின் பலன்கள்: • உணவுப் பஞ்சம் நீங்கும்: வீட்டில் எப்போதும் தானியங்களும் உணவும் நிறைந்து இருக்கும். 'அட்சய' பாத்திரம் போல செல்வம் குறையாது. • மன அமைதி: குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் ஒற்றுமை பெருகும், வீண் சண்டைகள் நீங்கி அமைதி நிலவும். • பொருளாதார மேன்மை: கடன் தொல்லைகள் நீங்கி, புதிய வருமான வாய்ப்புகள் பெருக அன்னை அருள் புரிவாள். • வறுமை ஒழிப்பு: தரித்திரம் விலகி, மங்கலம் உண்டாகும். இந்த வழிபாட்டை முடித்த பிறகு, உங்களால் முடிந்தால் பசியோடு இருக்கும் ஒருவருக்காவது உணவு வழங்குங்கள். அதுவே அன்னபூரணிக்குச் செய்யும் மிகச்சிறந்த பூசையாகும். 🙏 Friday Worship of Goddess Annapoorani: Simple Methods to Eliminate Poverty and Attract Wealth! According to tradition, Mother Annapoorani resides in any home where food is never wasted and where hospitality is practiced with excellence. Worshipping Annapoorani, particularly on Fridays, is considered highly auspicious. Method of Worship: • Cleansing: On Friday mornings, clean your home thoroughly, complete your ritual bath, and draw a Kolam (decorative floor pattern) in the prayer room. • Annapoorani Idol/Image: If you possess a small idol of Annapoorani in your home, place it on a small plate and arrange grains or rice around it. • Adornment: It is considered especially auspicious to adorn the Goddess with loose flowers or jasmine blossoms. • Ghee Lamp: Begin the worship by lighting two lamps filled with pure cow ghee. • Offerings (Nivedanam): You may offer Sakkarai Pongal (sweet rice pudding), Paal Payasam (milk pudding), or milk sweetened with rock candy (Kalkandu) as Nivedanam to the Goddess. It is also highly meritorious to place a bowl of pure raw rice before the Goddess as a dedicated offering. • Hymns: Recite the Annapoorani Ashtakam, the hymn that begins with the verse "Annapoorne Sadapoorne..." Reflect upon the profound significance of Annadanam (the charitable act of feeding others)—a virtue extolled by the great Siddhars—and offer your prayers with wholehearted devotion. Benefits of the Worship: • Elimination of Food Scarcity: Your home will always remain abundant with grains and food; much like the mythical Akshaya Patra (inexhaustible vessel), your wealth will never diminish. • Mental Peace: Unity among family members will flourish; needless conflicts will cease, and an atmosphere of peace will prevail within the home. • Economic Prosperity: The Goddess will bestow her grace to resolve financial burdens and create new opportunities for income generation. • Eradication of Poverty: Misfortune and destitution will be dispelled, paving the way for auspiciousness and prosperity. After completing this worship, if you are able, provide food to at least one hungry person. That is the greatest form of worship you can offer to Goddess Annapoorani.
🙏ஆன்மீகம் - வெள்ளிக்கிழறை அன்னபூரணிவழிாடு @livcke) TheVoiceof TheUniverse வெள்ளிக்கிழறை அன்னபூரணிவழிாடு @livcke) TheVoiceof TheUniverse - ShareChat
#🙏ஆன்மீகம் #🙏கோவில் வெள்ளிக்கிழமை அன்னபூரணி வழிபாடு: வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய வழிமுறைகள்! எந்த வீட்டில் உணவு வீணாகாமல், விருந்தோம்பல் சிறப்பாக நடக்கிறதோ, அங்கு அன்னை அன்னபூரணி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அன்னபூரணியை வழிபடுவது விசேஷமானது. வழிபாடு செய்யும் முறை: • சுத்தம் செய்தல்: வெள்ளிக்கிழமை அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து, குளித்து முடித்துவிட்டு பூசையறையில் கோலமிடுங்கள். • அன்னபூரணி சிலை/படம்: உங்கள் வீட்டில் சிறிய அன்னபூரணி விக்கிரகம் இருந்தால், அதை ஒரு சிறிய தட்டில் வைத்து, சுற்றிலும் தானியங்கள் அல்லது அரிசியைப் பரப்பி வைக்கலாம். • அலங்காரம்: அன்னைக்கு உதிரிப் பூக்கள் அல்லது மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்வது சிறப்பு. • நெய் தீபம்: பசு நெய் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி வழிபாட்டைத் தொடங்குங்கள். • நிவேதனம்: அன்னைக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயசம் அல்லது கற்கண்டு கலந்த பால் நிவேதனமாகப் படைக்கலாம். ஒரு கிண்ணத்தில் சுத்தமான பச்சரிசியை வைத்து அன்னைக்கு அர்ப்பணிப்பதும் மிக நன்று. • துதிப்பாடல்: "அன்னபூர்ணே சதாபூர்ணே..." எனத் தொடங்கும் அன்னபூரணி அஷ்டகத்தைப் பாராயணம் செய்யுங்கள். சித்தர்கள் போற்றிய அன்னதானத்தின் சிறப்பை உணர்ந்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வழிபாட்டின் பலன்கள்: • உணவுப் பஞ்சம் நீங்கும்: வீட்டில் எப்போதும் தானியங்களும் உணவும் நிறைந்து இருக்கும். 'அட்சய' பாத்திரம் போல செல்வம் குறையாது. • மன அமைதி: குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் ஒற்றுமை பெருகும், வீண் சண்டைகள் நீங்கி அமைதி நிலவும். • பொருளாதார மேன்மை: கடன் தொல்லைகள் நீங்கி, புதிய வருமான வாய்ப்புகள் பெருக அன்னை அருள் புரிவாள். • வறுமை ஒழிப்பு: தரித்திரம் விலகி, மங்கலம் உண்டாகும். இந்த வழிபாட்டை முடித்த பிறகு, உங்களால் முடிந்தால் பசியோடு இருக்கும் ஒருவருக்காவது உணவு வழங்குங்கள். அதுவே அன்னபூரணிக்குச் செய்யும் மிகச்சிறந்த பூசையாகும். 🙏 Friday Worship of Goddess Annapoorani: Simple Methods to Eliminate Poverty and Attract Wealth! According to tradition, Mother Annapoorani resides in any home where food is never wasted and where hospitality is practiced with excellence. Worshipping Annapoorani, particularly on Fridays, is considered highly auspicious. Method of Worship: • Cleansing: On Friday mornings, clean your home thoroughly, complete your ritual bath, and draw a Kolam (decorative floor pattern) in the prayer room. • Annapoorani Idol/Image: If you possess a small idol of Annapoorani in your home, place it on a small plate and arrange grains or rice around it. • Adornment: It is considered especially auspicious to adorn the Goddess with loose flowers or jasmine blossoms. • Ghee Lamp: Begin the worship by lighting two lamps filled with pure cow ghee. • Offerings (Nivedanam): You may offer Sakkarai Pongal (sweet rice pudding), Paal Payasam (milk pudding), or milk sweetened with rock candy (Kalkandu) as Nivedanam to the Goddess. It is also highly meritorious to place a bowl of pure raw rice before the Goddess as a dedicated offering. • Hymns: Recite the Annapoorani Ashtakam, the hymn that begins with the verse "Annapoorne Sadapoorne..." Reflect upon the profound significance of Annadanam (the charitable act of feeding others)—a virtue extolled by the great Siddhars—and offer your prayers with wholehearted devotion. Benefits of the Worship: • Elimination of Food Scarcity: Your home will always remain abundant with grains and food; much like the mythical Akshaya Patra (inexhaustible vessel), your wealth will never diminish. • Mental Peace: Unity among family members will flourish; needless conflicts will cease, and an atmosphere of peace will prevail within the home. • Economic Prosperity: The Goddess will bestow her grace to resolve financial burdens and create new opportunities for income generation. • Eradication of Poverty: Misfortune and destitution will be dispelled, paving the way for auspiciousness and prosperity. After completing this worship, if you are able, provide food to at least one hungry person. That is the greatest form of worship you can offer to Goddess Annapoorani.
🙏ஆன்மீகம் - வெள்ளிக்கிழறை அன்னபூரணிவழிாடு @livcke) TheVoiceof TheUniverse வெள்ளிக்கிழறை அன்னபூரணிவழிாடு @livcke) TheVoiceof TheUniverse - ShareChat
#🙏கோவில் #🙏ஆன்மீகம் புஷ்ப பூஜை: இந்தப் பாடலைப் பாடினால் சிவனுக்கு 14 வகைப் பூக்களைச் சமர்ப்பித்த பலன் உண்டு புண்ணியம் செய்வாருக்குப் பூவுண்டு நீருண்டு, அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்’ என்கிறது திருமந்திரம். பூக்களை ஆய்ந்துத் தூய்மைப்படுத்தி, தண்ணீரில் நனைத்த பிறகே இறைவனுக்குச் சூட்ட வேண்டும். பன்னீரில் நனைத்துப் பூஜிப்பது விசேஷம்! இறைவன் பெயருடன் போற்றி என்பதைச் சேர்த்துச் சொல்லி மலரிட்டு வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு வாரத்தில் ஏழு நாள்களும் என்னென்ன பூக்கள் சமர்ப்பிக்கலாம் என்று துதிநூல்கள் விவரிக்கின்றன. அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமை தாமரை; திங்களன்று வெள்ளாம்பல்; செவ்வாய் செங்கழுநீர்ப் பூக்கள்; புதனன்று கயலாந்தங்கரை எனும் பூக்கள்; வியாழனன்று குவளை மலர்கள்; வெள்ளிக்கிழமையில் வெண் தாமரை; சனிக் கிழமையில் நீலோற்பலம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். அதேபோல், ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி தினத்தில் அந்தந்த மாதத்துக்கு உரிய மலர்களைச் சமர்ப்பித்து இறைவனை வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும். சித்திரை - முருக்கன் பூ, வைகாசி - புன்னை, ஆனி - வெள்ளெருக்கு, ஆடி - அலரி, ஆவணி - செண்பகம், புரட்டாசி - கொன்றை, ஐப்பசி - தும்பை, கார்த்திகை - கத்தரி, மார்கழி - பட்டி, தை - தாமரை, மாசி - நீலோற்பலம், பங்குனி - மல்லிகை. சிவபூஜையில் குறிப்பிட்ட பூக்களை- இலை களைச் சமர்ப்பிப்பதால் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்கின்றன பூஜா பத்ததி நூல்கள். எள்ளுப் பூ: பிரம்மஹத்தி தோஷம் நீக்கும். கொன்றை - பெற்றோர் சாபம் தீர்க்கும். வில்வம் - செல்வ வளம் அருளும். தும்பை- கோஹத்தி முதலான சகல தோஷங்களையும் போக்கும். நெல்லி - கொடும் பிணிகளால் ஏற்படும் துன்பத்தை நீக்கும். மல்லிகை - இல்லற வாழ்வைச் சிறக்கவைக்கும். அருகம்புல் - ஆயுள் பெருகும் கருவூமத்தைப் பூ - பிள்ளைப்பேறு அருளும் அகத்திப் பூ- புகழைத் தரும் வெள்ளை ஊமத்தை - பகைவர் தொல்லை விலகும். அலரிப் பூ - நோய்கள் விலகும். தாமரை - சகல சம்பத்துகளையும் வறுமை இல்லாத செல்வ வளத்தையும் அருளும். சரி, வெளியூர்ப் பயணம் அல்லது பூக்கள் கிடைக்காத நிலை. இப்படி யான சூழலில் என்ன செய்யலாம். கவலையே வேண்டாம். திருமூலர் அற்புதமான ஒரு பாடலைத் தருகிறார். அந்தப் பாடல்... அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல் வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. இதில், 14 வகையான பூக்களைக் குறிப்பிட்டு, அவற்றால் செய்ய வேண்டிய வழிபாடுகளையும் விவரிக்கிறார். மனத்தில் ஈசனைத் தியானித்து இந்தப் பாடலைப் படித்தாலே போதும். பதினான்கு வகை யான பூக்களால் சிவனை பூஜித்த புண்ணியம் கிடைக்கும். இந்திரபோகம் உண்டாகும்; சகல நன்மைகளும் உண்டாகும். நினைத்த காரியம் நல்லபடியே நிறைவேற சிறப்பு புஷ்ப பூஜை! நினைத்த காரியங்கள் நல்லபடியே நடந்தேற திங்கள் கிழமை செய்ய வேண்டிய எளிய வழிபாடு உண்டு. அன்று மாலை வேளையில் நீராடி, திருநீறணிந்து, பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். சிவபுராணம் போன்றவற்றைப் பாடி வழக்கம்போல் வழிபடலாம். அத்துடன், சக்தி மிக்க எட்டு சிவநாமங்களைக் கூறி, எண் வகைப் பூக்களால் அர்ச்சித்து வழிபடுவது விசேஷம். எண்வகை பூக்கள்: மல்லிகை, காட்டு மல்லி, மர மல்லிகை, மகிழம்பூ, கொன்றை, செண்பகம், சிறு செண்பகம், மருக்கொழுந்து. சொல்லவேண்டிய சிவநாமங்கள்: ஓம் சர்வாய தேவாய நம: ஓம் பவாய தேவாய நம: ஓம் ருத்ராய தேவாய நம: ஓம் உக்ராய தேவாய நம: ஓம் பீமாய தேவாய நம: ஓம் பசுபதே தேவாய நம: ஓம் ஈசானஸ்ய தேவாய நம: ஓம் மஹதேர் தேவாய நம: எனக் கூறி மேற்கண்ட பூக்களைச் சமர்ப்பித்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டின்போது, இயன்ற பதார்த்தங்களை நைவேத்தியம் செய்யலாம். இதன் மூலம் இவ்வுலக வாழ்வில் நாம் நினைத்தவை நடக்கும்; நிறைவில் சிவனடியைச் சேரும் புண்ணியம் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள். நன்றி : சக்தி விகடன் -ஜோதிட ஶ்ரீ முருகப்ரியன்
🙏கோவில் - ஆன்மீக தகவல்கள் ஆன்மீக தகவல்கள் - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 தீர்த்தங்கள்: பாவங்களைப் போக்கி அருளை அள்ளித்தரும் ஆலயக் குளங்கள்!* 🌹 சென்ற தலைமுறையில் கோயில்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களை தீர்த்த யாத்திரை செல்வதாக சொல்வர். பிரபலமான நதிகளில், குளங்களில், ஆறுகளில் குளிப்பதை பெரும் பேறாக கருதுவர். உதாரணமாக கங்கை, காவிரி, பிரம்மபுத்திரா, கோதாவரி, யமுனை, போன்ற நதிகளில் நீராடுவதை சடங்காகவே கருதுகின்றனர். கர்நாடகத்தில் கோயில் சார்ந்த குளங்களை கல்யாணி எனவும், ஆந்திராவில் புஷ்கரணி எனவும் அழைக்கின்றனர். மன்னர்கள் காலத்தில் கோயிலுக்கு உதவும் குளங்கள் வெட்டிக் கொடுத்தால் அவருக்கு வரிவிலக்கு உண்டு. மேலும் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் கருதினர். இந்து மதத்தில் ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம், என்பது மிகவும் முக்கியமானது. கும்பகோணத்தில் பல கோயில்களுக்கு சொந்தமான குளங்கள் உள்ளன.17குளங்கள் உள்ளதாக அறிகிறோம். இவற்றில் மகாமக குளம் மிகவும் பிரபலம். மாசி மகத்தன்று குளிப்பது பெரும் பேறாக கருதப்படுகிறது. திருப்பதியில் குளத்தை புஷ்கரணி என்ற பெயரில் அழைப்பர். திருவிழாவின்போது இறைவனுக்கு தீர்த்தவாரி நடக்கும். திருப்பதியில் 17குளங்கள் உள்ளன. இவற்றில் சக்கர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சப்தகிரி தீர்த்தம், கபிலர் தீர்த்தம், ஆகாச கங்கை பிரபலமாக இருப்பவை. காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரத்தில் உள்ளவற்றை சிவகங்கை என அழைப்பர். தீர்த்தங்களில் தெப்பத் திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. திருவாரூர் கமலாலய தெப்பம், மதுரை மாரியம்மன் தெப்பம், திருச்சி தாயுமானவர் தெப்பம், காஞ்சி மற்றும் பல கோயில்களின் தெப்போற்சவம் சிறப்பாக கருதப்படுகிறது. திருவாரூர் குளத்தை கமலாலயம் எனவும், தஞ்சை மாரியம்மன் குளத்தை அமிர்த புஷ்கரணி எனவும், செம்பணார் கோவில் ஆண்டவர் குளத்தை புஷ்கரணி எனவும் கேரளாவில் திருச்சானூர் குளத்தை பத்ம சரஸ் எனவும் அழைப்பர். சில குளங்களின் நடுவில் நீராழி மண்டபம் இருப்பதைக் காணலாம். இதில் பொதுவாக 4-16 தூண்கள் இருக்கும். கர்நாடகாவில் உள்ள கோகர்ணாவில் உள்ள ராமர் தீர்த்தம் மிகவும் பிரபலம். நந்தி, பட்சி, சங்கு, அக்னி, ராமர் மற்றும் சரவண தீர்த்தம் என்ற பெயர்களில் உள்ள தீர்த்தங்கள் விசேஷமாக கருதப்படுகிறது. வருடத்தில் ஒரு முறையாவது இந்த தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபட்டு மேன்மை அடைவோம்.🙏🌹
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - நமது வாக்கு நமது உரிமை குவறாது வாக்களிப்பீர! ೯uneu 23/4/26 6Iu யாழன வி காலை வணக்கம் நமது வாக்கு நமது உரிமை குவறாது வாக்களிப்பீர! ೯uneu 23/4/26 6Iu யாழன வி காலை வணக்கம் - ShareChat
#வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம் - செருபபுத் தேற தேற இழைத்தாலுற் வாசல் வரை தான்ி நற்றில் ஈலரி நற்றில் சிலரை ரன்டடுத்துற் விதம் இவ்விதறே R செருபபுத் தேற தேற இழைத்தாலுற் வாசல் வரை தான்ி நற்றில் ஈலரி நற்றில் சிலரை ரன்டடுத்துற் விதம் இவ்விதறே R - ShareChat
#வாழ்க்கை தத்துவம்
வாழ்க்கை தத்துவம் - வார்த்தைகள் இலவசம் தானே என்றுவாரி வீசாதே0 எதிரில் இருப்பவர்கள் வாங்கி திரும்பிவீசினால் தாங்க மாட்டாய்  [R வார்த்தைகள் இலவசம் தானே என்றுவாரி வீசாதே0 எதிரில் இருப்பவர்கள் வாங்கி திரும்பிவீசினால் தாங்க மாட்டாய்  [R - ShareChat