#🤲துஆக்கள்🕋 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋ஜும்மா முபாரக்🤲
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲துஆக்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲
#🤲துஆக்கள்🕋 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் மரணித்த பிறகும் நன்மைகளை தொடர்ந்து கொண்டு வரும் மூன்று செயல்கள் இஸ்லாத்தில் உள்ளன: *ஸதகத்துல் ஜாரியா* - ஓடிக்கொண்டே இருக்கும் தர்மம், *பயனுள்ள அறிவு*, மற்றும் *தங்களுக்காக துஆ செய்யும் ஸாலிஹான பிள்ளை*.
மக்களுக்கு தொடர்ந்து உதவும் தர்மம், பிறரை நேர்வழிப்படுத்தும் அறிவு, அல்லது பெற்றோருக்காக உண்மையாக பிரார்திக்கும் பிள்ளை - இவை வருடக்கணக்கில் கூட நன்மையை சம்பாதித்துக்கொண்டே இருக்கும்.
மரணத்திற்கு பிறகும் நிலைத்து நிற்கும் பாரம்பரியத்தை விட்டுச் செல்லவும், தொடர்ந்து பலன் பெறவும் இவை அழகான வழிகள். இந்த வாழ்கையிலும் மறுமையிலும் நன்மை தரும் செயல்களில் முதலீடு செய்ய இது ஒரு நினைவூட்டலாக இருக்கட்டும்.
யா அல்லாஹ், நாங்கள் மரணித்த பிறகும் நன்மை தொடரும் அமல்களை எங்களுக்கு அருள்வாயாக. ஸதகத்துல் ஜாரியா, பயனுள்ள அறிவு, எங்களுக்காக துஆ செய்யும் ஸாலிஹான சந்ததியை எங்களுக்கு வழங்குவாயாக. ஆமீன்.🤲
#🤲துஆக்கள்🕋 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் எந்த இழப்பும்,* எந்த வேதனையும் `அல்லாஹ்வுடனான தொடர்பை` இழப்பதை விட பெரியதல்ல..
<< *மற்ற எல்லா இழப்புகளும் அதற்கு அடுத்தபடிதான்..* >>
`ஆகவே,` உன் ரப்புடன் இருக்கும் உறவை எப்போதும் `பாதுகாத்துக் கொள்..` 🤍✨"
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋ஜும்மா முபாரக்🤲 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲துஆக்கள்🕋 அடையாளமும் அதன் தன்டனையும்!
முக்கியமான மூன்று அடையாளங்களை
நபி ﷺ கூறினார்கள்:
«آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ»
"முனாஃபிக்கின் அடையாளங்கள் மூன்று:
பேசினால் பொய் பேசுவான்.
வாக்குறுதி அளித்தால் மீறுவான்.
நம்பி ஒப்படைக்கப்பட்டால் துரோகம் செய்வான்
ஹதீஸ்
புகாரி முஸ்லிம்
நான்கு அடையாளங்கள்
மற்றொரு ஹதீஸில் நபி ﷺ கூறினார்கள்:
«أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا...»
"நான்கு குணங்கள் எவரிடத்தில் இருந்தாலும் அவர் முழுமையான முனாஃபிக் ஆவார்:
நம்பி ஒப்படைக்கப்பட்டால் துரோகம் செய்வான்.
பேசினால் பொய் பேசுவான்.
உடன்படிக்கை செய்தால் மீறுவான்.
சண்டையிட்டால் எல்லை மீறி அநியாயமாக நடப்பான்."
ஹதீஸ் புகாரி முஸ்லிம்
அல் குர்ஆனில் கூறப்படும் சில அடையாளங்கள்
தொழுகையில் சோம்பேறித்தனம் காட்டுதல்
மக்களுக்குக் காட்டிக்கொள்வதற்காக மட்டுமே அமல் செய்தல்
அல்லாஹ்வை மிகக் குறைவாக நினைத்தல்
முஃமின்களிடம் ஒரு முகமும் காபிர்களிடம் வேறு முகமும் காட்டுதல்
உள்ளத்தில் ஈமான் இல்லாமல் வெளியில் முஸ்லிமாக நடிப்பது👈
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ☝️
அன்பான சகோதர சகோதரிகளே 🤍🥰
நயவஞ்சகம் என்பது ஒரு சிறிய குற்றமல்ல
அது ஒரு மனிதனை உலகிலும் மறுமையிலும் அழிவுக்குள்ளாக்கும் மிகப் பயங்கரமான நோயாகும். ஒரு மனிதன் மக்களின் கண்களில் நல்லவனாகத் தோன்றலாம்
அவன் தொழலாம், நோன்பு நோற்கலாம், மார்க்கத்தைப் பற்றி பேசலாம் ஆனால் அவனது உள்ளத்தில் கபடமும், பொய்யும், துரோகமும் மறைந்திருந்தால், அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கு தன்னை ஆளாக்கிக் கொள்கிறான்
அல்லாஹ் குர்ஆனில் முனாஃபிக்களைப் பற்றி பேசும்போது, சாதாரண நரகத்தைப் பற்றி அல்ல; “நரகத்தின் மிகக் கீழான அடுக்கில்” அவர்கள் இருப்பார்கள் என்று கூறுகின்றான்.
(ஸூரத்துன் நிஸா: 145)
இதைவிட பெரிய எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்?
சிந்தித்துப் பாருங்கள்! மறுமை நாளில் எல்லா மனிதர்களும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவார்கள். அந்நாளில் முனாஃபிக்கின் முகமூடி கிழிக்கப்படும். அவன் மறைத்து வைத்திருந்த அனைத்தும் வெளிப்படுத்தப்படும். மக்களின் முன்னிலையில் நல்லவனாக நடித்தவன், அல்லாஹ்வின் முன் அவமானப்படுத்தப்படுவான்.
குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
👇👇👇
“அவர்கள் விசுவாசிகளையும் ஏமாற்ற முயல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.”
(அல்-பகரா: 09)
முனாஃபிக் தனது புத்திசாலித்தனத்தால் மக்களை ஏமாற்றிவிட்டதாக நினைக்கலாம். ஆனால் இறுதியில் அவன் ஏமாற்றியது தன்னையே என்பதை உணர்ந்து கொள்வான்🖤
எனவே, சகோதரர்களே! நமது உள்ளங்களைப் பரிசோதிப்போம். நாம் பேசுவது உண்மையா? நமது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா? நம்பிக்கை வைக்கப்பட்டால் அதை பாதுகாக்கிறோமா? என்று சிந்திப்போம்
ஏனெனில், பொய், துரோகம் கபடம் இவை அனைத்தும் மனிதனை முனாஃபிக்கின் பாதைக்கு இழுத்துச் செல்லக்கூடியவை
யா அல்லாஹ்
எங்கள் இதயங்களை நிஃபாக்கிலிருந்து பாதுகாப்பாயாக🤲🤍
யா அல்லாஹ்
நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கக்கூடிய உள்ளங்களாக எங்களுடைய உள்ளங்களை ஆக்கியருல்வாயாக🤲🤍
யா அல்லாஹ்
எங்களை உண்மையான முஃமின்களாக வாழவும், உண்மையான முஃமின்களாக மரணிக்கவும் அருள்புரிவாயாக🤲🤍
#🕋ஜும்மா முபாரக்🤲 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 நேசிப்பவர் நோய்வாய்ப்படும் போது, அது ஒரு சோதனை என்கிறோம்*
ஆனால், *நாம் வெறுப்பவர் நோய்வாய்ப்படும் போது, அது ஒரு தண்டனை என்கிறோம்*
*நாம் நேசிப்பவருக்கு ஒரு துன்பம் வரும் போது, அவர் நல்லவர் என்பதால் வந்தது என்கிறோம்*
ஆனால், *நாம் வெறுப்பவருக்கு ஒரு துன்பம் வரும்போது, அவர் மக்களுக்கு அநீதி இழைத்ததால் வந்தது என்கிறோம்*
இறைவனின் விதிகளை (தீர்மானங்களை) உங்களது மனஇச்சைக்கு ஏற்ப பங்கிட்டுத் தீர்ப்பு வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
நாம் அனைவரும் குறைகளைச் சுமந்து கொண்டிருப்பவர்களே
*குறைகளை மறைத்தல் (அஸ்-ஸத்ர்) என்னும் இறைவனின் ஆடை மட்டும் நமக்கில்லை என்றால், கடுமையான வெட்கத்தினால் நம் தலைகள் குனிந்து போயிருக்கும்...*
சுப்ஹானல்லாஹ்....
#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲 #🤲துஆக்கள்🕋 🍁*
அல்லாஹ்வின் வார்த்தைகள் —
இதயத்திற்கு மருந்தாகும் *..*
*உன் மனம் சோர்ந்தால்,*
அதை திறந்து படி…
அதில் `அமைதி` உண்டு, `நிம்மதி` உண்டு, `வழிகாட்டுதல்` உண்டு.. >>
*ஒவ்வொரு* ஆயத்திலும்
உன் இதயத்தை குணப்படுத்தும் *ஒளி* உள்ளது…
> *அல் குர்ஆன் — இதயத்தின் சிகிச்சை 🤍🌙”*
#🕋ஜும்மா முபாரக்🤲 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
✨*முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் பற்றி வந்த ஹதீஸ்கள்* 🌙
முஹர்ரம் ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதம். அல்லாஹ் மகிமைப்படுத்திய 4 புனித மாதங்களில் ஒன்று. இதுல நிறைய சிறப்புகள் இருக்கு. முக்கியமானது:
*1. ரமலானுக்கு அடுத்தபடியா சிறந்த நோன்பு*
நபி ﷺ சொன்னாங்க:
*"ரமலானுக்கு பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பு. கடமையான தொழுகைக்கு பிறகு சிறந்த தொழுகை இரவு தொழுகை தான்"*
முஸ்லிம் 1163
அதாவது நஃபில் நோன்பு வைக்கணும்னா, ரமலானுக்கு அடுத்து முஹர்ரம் தான் சிறந்தது.
*2. ஆஷூரா நாள் - 10 முஹர்ரம் சிறப்பு*
ஆஷூரா நோன்பு பற்றி நபி ﷺ சொன்னாங்க:
*"ஆஷூரா நாள் நோன்பு, முந்தைய ஒரு வருட பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்னு அல்லாஹ்கிட்ட நான் நம்பிக்கை வைக்கிறேன்"*
முஸ்லிம் 1162
*3. தாஸூஆவுடன் சேர்து நோன்பு வைக்கிறது முஸ்தஹப்*
ஆஷூரா பத்தி கேட்டப்போ நபி ﷺ சொன்னாங்க:
*"நான் அடுத்த வருஷம் உயிரோட இருந்தா 9-ம் நாளும் நோன்பு வைப்பேன்"*
முஸ்லிம் 1134
ஏன்? யூதர்களுக்கு மாறு செய்ய. அதனால 9 + 10 முஹர்ரம் ரெண்டு நாளும் வைக்கிறது சிறந்தது. முடியலைனா 10 மட்டும் வச்சாலும் போதும்.
*4. முஹர்ரம் புனித மாதங்களில் ஒன்று*
அல்லாஹ் சொல்றான்:
*"நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு... அதில் நான்கு புனித மாதங்கள்"*
அத்தவ்பா 36
முஹர்ரம் அதுல ஒண்ணு. கத்தாதா ரஹ் சொன்னாங்க: "புனித மாதங்கள்ல செய்யுற நல்ல அமலுக்கு கூடுதல் கூலி, பாவத்துக்கு கூடுதல் தண்டனை உண்டு #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲துஆக்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲
#🕋ஜும்மா முபாரக்🤲 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋 ஓடும் வாழ்க்கை !*
இப்போதெல்லாம் பொழுது விடிகிறது... பொழுது முடிகிறது...
கண்களை மூடினால் திங்கட்கிழமை, திறந்துப் பார்த்தால் ஏற்கனவே வெள்ளிக்கிழமை.
ஒரு மாதம் கடப்பது ஒரு வாரம் போலவும்
ஒரு வருடம் நகர்வது சில நாட்கள் போலவும் இருக்கிறது.
நேற்று வரை குழந்தைகளாக இருந்தவர்கள், இன்று தங்கள் குழந்தைகளை அவசரமாக பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
சாப்பிடுவதிலும் அவசரம்.
பேசுவதிலும் அவசரம்.
அன்பை சொல்லக்கூட இப்போது மனிதர்கள் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வாழ்க்கை எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்றால், ஒருநாள் நம் கனவுகளைத் தொட்டுப் பார்க்கும் முன்பே நம் வயது நம்மைத் தாண்டி சென்றுவிடுகிறது....













