பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
ShareChat
click to see wallet page
@hnjbc
hnjbc
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
@hnjbc
இயேசுவின் இரகசிய வருகைக்கு ஆயத்தமாகும் சபை...
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 03/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 313 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XII 2)"மிகுந்த சத்தமிட்டு தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள் என்று கூறினான்." (வெளி 14:7). அன்பான கர்த்தருடைய பரிசுத்த ஜனமே, ஒரு பாவ மனிதனுக்கு கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவன் உண்டு என்பதே சுவிசேஷம். தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஊற்றப்படும் மகா உபத்திரவ காலத்திலும், மனித இனத்துக்கு தன்னுடைய சுவிசேஷத்தை அறிவிக்க தேவன் விரும்புகிறார். எனவே பலத்த சத்தத்தோடு, பூமியின் குடிகள் அத்தனை பேரும் புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் தூதன் சொல்லுகிறான். 1. தேவனுக்குப் பயப்படுங்கள். 2. தேவனை மகிமைப்படுத்துங்கள். 3. தேவனைத் தொழுது கொள்ளுங்கள். இந்தச் செய்தி உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு மனித இனத்துக்கு சொல்லப்பட்டதுதான் என்றாலும், தூதன் மூலமாக அவசரமாக அறிவிக்கப்படும் காரணத்தையும் தூதன் சொல்கிறான். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்கி விட்டது. இதைக் கூர்ந்து தியானிக்கையில் இந்தத் தூதனுடைய செய்தியானது, அந்திக்கிறிஸ்துவுக்குப் பயப்படாதிருங்கள், அந்திக்கிறிஸ்துவை மகிமைப்படுத்தாதிருங்கள், அந்திக்கிறிஸ்துவை தொழுது கொள்ளாதிருங்கள் என்று ஜனங்களை எச்சரிக்கின்றதாகவே நாம் உணர்கிறோம். "அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படிச் செய்தது. அன்றியும், அது மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின் மேல் அக்கினியை இறங்கப் பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம் போக்கி பட்டயத்தினாலே காயப்பட்டுப்பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ண வேண்டுமென்று பூமியின் குடிகளுக்கு சொல்லிற்று.” (வெளி 13:12-14). இவ்வசனங்கள் மூலம் கள்ளத்தீர்க்கதரிசியானவன், ஜனங்களை வஞ்சித்து மோசம் போக்கும்படி அதிசய அற்புத அடையாளங்களை நடப்பித்து, முந்தின மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவுக்கு சொரூபம் பண்ணி அதை வணங்கச் செய்து கொண்டிருந்தான். அந்நிலையில் தேவனானவர் தன் தூதனைக் கொண்டு ஜனங்களை எச்சரிக்கும்படி, நியாயத்தீர்ப்பு வருகிறது; ஆகையால் யாவற்றையும் உண்டு பண்ணின தேவனையே தொழுது கொண்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பூமியின் சகல ஜனங்களையும் எச்சரிக்கிறார் என்றே ஆவிக்குள் நிதானிக்கிறோம். கடைசி நாட்களைக் குறித்து இயேசு ராஜா பிரசங்கித்தபோது, "ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்." (மத் 24:14) என்றார். "அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது" (கொலோ 1:23) என்கிறார் அப்.பவுல். தேவனாகிய கர்த்தர் கடைசி நாட்களில் சகல சிருஷ்டிகளுக்கும், அறிவிக்கும்படியான ராஜ்யத்தின் சுவிசேஷமாகிய நித்திய ஜீவனைச் சார்ந்த சுவிசேஷத்தை, கடைசிக் காலமான அந்திக்கிறிஸ்துவின் மகா உபத்திரவ காலத்தில், இத்தூதனைக் கொண்டு வானத்தின் கீழிருக்கிற சகல ஜனங்களுக்கும் அறிவிக்கிறார் என்றே அறிந்து கொள்கிறோம். "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" என்று நீதி 1:7; நீதி 9:10 ஆகிய இரண்டு இடங்களில் வேதாகமத்தில் வாசிக்கிறோம். உபா 10:12: யோசுவா 24:14; 1 12:13; ஏசா 8:13; 5 10:28: | 5 1:17. 2:17 ஆகிய கர்த்தருடைய திருவசனங்கள் யாவும் கர்த்தருக்குப் பயப்பட வேண்டும் என்று போதிக்கின்றன. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி கீழ்க்காணும் கர்த்தருடைய திருவசனங்களில் காண முடிகிறது. (I சாமு 12:14; சங் 25:12; சங் 31:19: ஏசா 50:10; 1:50; லூக்கா 10:35) கர்த்தருக்குள் அன்பான தேவனுடைய பரிசுத்தவான்களே. கீழ்க்காணும் கர்த்தருடைய திருவசனங்களின்படி தேவாதி தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்று போதிக்கப்படுகிறோம். ''நம்முடைய துதியினாலும்" (சங் 22:23); "நற்கிரியைகளினாலும்" (மத் 5:16). "நம்மில் வெளிப்படும் நற்கனிகளினாலும்" (யோவா 15:8). ''நம்முடைய சகோதர ஐக்கியத்தினாலும்" (ரோம 15:7); "நம்முடைய அர்ப்பணிப்பினாலும்," (1 கொரி 6:20) தேவாதி தேவனைத் தொழுது கொள்ளும்படியாக அறிவிக்கும் தூதன் அதற்கான காரணத்தையும் முதலாவதாக அறிவிக்கிறார். வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீருற்றுகளையும் சிருஷ்டித்தவர் தேவன் என்பதினால், அவர் ஒருவரே மனிதனுடைய தொழுகைக்குப் பாத்திரராயிருக்கிறார். "கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" (யோவே 2:32). "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறனெவனோ அவன் இரட்சிக்கப்டுவான்" என்று தேவன் உரைத்திருக்கிறார். (அப்.2:21). “கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்கிறவன் இரட்சிக்கப்படுவான்." (ரோம 10:13). “நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தரும் ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறார்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிப்பதாக ஆமென்." (I தீமோ 6:15-16). மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம், " நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமான சர்வ சிருஷ்டி கர்த்தாவாகிய தேவாதி தேவனை தொழுது கொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான்" என்று மனுக்குலத்திற்குப் போதிக்கின்றது. ''அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை பட்சிக்கிறது போல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே: அவர்கள் கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறதில்லை. (சங் 14:4:53:4) இவ்வசனங்கள், "அக்கிரமக்காரர் தேவனைத் தொழுது கொள்ளுகிறதில்லை” என்பதை அறிவிக்கின்றது. “தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல், சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள். அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்" (ரோம 1:25,26) என்ற இவ்வசனம் தேவனைத் தொழுது கொள்ளாதவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்று அறிவிக்கின்றது. கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝️இயேசுவே ஜீவன் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசுவே ஜீவன் - ன்றைய வெளிப்பர்த்தின் வி( Gaop @ தியானம் 03/07/2026 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் XII 2) ` பீகுந்த சத்தமிட்டு தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்  வவெளி 14:7). என்று கூறினான் ' பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை ன்றைய வெளிப்பர்த்தின் வி( Gaop @ தியானம் 03/07/2026 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் XII 2) ` பீகுந்த சத்தமிட்டு தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுது கொள்ளுங்கள்  வவெளி 14:7). என்று கூறினான் ' பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை - ShareChat
இன்றைய வசனம் : 03/07/2026 #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝️இயேசுவே ஜீவன்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
00:54
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 02/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 312 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XII 1)“பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,” (வெளி 14:6) (Part - 2) "சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன." (ஏசா 52:7) “சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி; இதோ, உங்கள் தேவன் என்று கூறு.” (ஏசா 40:9) “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின் மேல் வருகிறது." (நாகூ 1:15) “அனுப்பப்படாவிட்டால் எப்படி பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.” (ரோம 10:15) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் எல்லாம், தேவனுடைய நற்செய்திகளை மனுக்குலத்திற்கு சுவிசேஷங்களாய் அறிவிக்கும்படி சுவிசேஷகர்களையும், இரட்சிப்பின் செய்திகளை அறிவிக்க அப்போஸ்தலர்களையும் தேவாதி தேவன் வேதாகம காலங்களில் அனுப்பியுள்ளார் என்பதையே நமக்குப் போதிக்கின்றது. மாறாக தேவ தூதர்களைக் கொண்டு மனுக்குலத்திற்கு எந்த ஒரு சுவிசேஷத்தையோ, இரட்சிப்பின் சத்தியங்களையோ அறிவித்ததாக வேதாகமத்தில் அறிய முடியவில்லை. வெளி 14:6-ம் வசனத்தில் பூமியில் வாழும் சகல ஜனங்களுக்கும் நித்திய சுவிசேஷமான, நித்தியானந்த தேவனுடைய மகிமையை அடைந்துகொள்ள அறிவிக்கும் சுவிசேஷமான இரட்சிப்பின் சுவிசேஷத்தை, வானத்தின் மத்தியில் பறந்து கொண்டு ஒரு தூதன் அறிவித்ததை அப்.யோவான் காண்கிறார். வானத்தின் மத்தியில் பறந்து கொண்டு நித்திய சுவிசேஷத்தை இத்தூதன் அறிவிக்கிறபடியால்,இவர் தேவதூதன் என்று பல வேத பண்டிதர்கள் என்ணுகின்றனர். மேலே தியானம் செய்த அநேக வேத வசனங்கள் மனுக்குலத்திற்கு சுவிசேஷத்தையோ, இரட்சிப்பின் சத்தியத்தையோ மனுக்குலத்திலிருந்து மீட்கப்பட்ட பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களைக் கொண்டே தேவன் அறிவிக்கிறார் என்பதை அறிவிக்கின்றது. “தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்." (2 பேது 1:21), "வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது". (2 தீமோ 3:16) “பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக் கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவ தூதரும் ஆசையாயிருக்கிறார்கள்." (I பேது 1:12) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம், தேவனுடைய பரிசுத்த மனுஷர்களாகிய அபோஸ்தலர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு தீர்க்கதரிசனங்களை பேசினார்கள் என்று அறிவிக்கின்றது. தூதன், அப்போஸ்தலன் என்றால் அனுப்பப்பட்டவன் என்ற பொருளையுடையதாயிருக்கிறது. "அனுப்பப்படாவிட்டால் எப்படிப் சங்கிப்பார்கள்?." (ரோம 10:15). வெளி 14:6-ம் வசனத்தில் வானத்தின் மத்தியில் பறந்து கொண்டிருக்கும் தூதனானபடியால் சீயோனிலிருந்து வந்த தூதன் என்று எண்ணுகிறார்கள். வெளி 12:7-ம் வானத்தில் வலு சர்ப்பத்தோடும் அவனைச் சேர்ந்த தூதர்களோடும் மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் யுத்தம் பண்ணி, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் ஜெயித்தார்கள்." (வெளி 12:11) என்று வாசிக்கிறோமே. மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் என்றால் வெளி 12:1-ம் வசனத்தின்படி மணவாட்டி சபையின் தலைமை அப்போஸ்தலன் மற்றும் அவரைச் சார்ந்த உடன் ஊழியர்களும் என்றே ஆவிக்குள் அறிகிறோம். இந்த ஊழியர்கள் நடுவானம் என்ற மத்திய ஆகாயத்திற்கு. ஆவியில் பூரணமடைந்து மகிமையின் மறுரூபத்தை அடைந்தவர்களாய் பறந்து போய், வலு சர்ப்பத்தோடு யுத்தம் பண்ணி ஜெயத்தை அடைகிறார்கள் என்பதை ஆவிக்குள் நிதானிக்க வேண்டும். வெளி 12:7.11, 6, 14 வசனங்களின்படியான சம்பவங்கள் அந்திக்கிறிஸ்துவின் முதல் 3½ ஆண்டின் இறுதியில் நடக்கிறது. வெளி 14:6,7 வசனங்களின்படியாக சம்பவங்கள் அந்திக்கிறிஸ்துவின் பின் 3½ ஆண்டான மகா உபத்திரவ காலத்தில் நடக்கிற சம்பவங்களாகும். பின் 3½ ஆண்டின் மீட்பின் ஊழியத்தைப் பற்றி வெளி 11:3-12 வசனங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வூழியத்தை வெளி 11:3-ம் வசனத்தின்படி எலியா. ஏனோக்கு என்பவர்களின் ஊழியமாயிருக்கிறது. மல் 4:5,6 வசனங்களின்படி எலியாவை “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன்” என்கிறார் தேவனாகிய கர்த்தர். அந்திக்கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி ஆரம்பமாவதற்கு முன் எலியாவின் ஆவியைப் பெற்ற கிருபையின் கால ஊழியம் செய்யும்படியான ஒரு அப்போஸ்தலனை அனுப்பி, வலுசர்ப்பத்தை ஜெயிக்கும் மிகாவேலாகவும் (வெளி 12:7,11) வெளி 14:6 வசனங்களின்படி ஆவிக்குள் மறுரூபமடைந்து நடுவானத்திற்கு சென்று கடைசிக்கால நித்திய சுவிசேஷத்தை அறிவிக்கும் தூதனாகவும், ஊழியம் செய்யும் படியான திட்டத்தை தேவன் தன் ஆதீனத்தில் கொண்டுள்ளார் என்பதை ஆவிக்குள் நிதானிக்கிறோம். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝பைபிள் வசனங்கள்
🙏ஆன்மீகம் - ன்றைய வெளிப்படுத்தின் விசேஷ தியானம் 0 02/07/2026 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் 3. வேறாரு தூதன் வானத்தின்  மபின்பு, பறக்கக் கண்டேன்; XII 1) மத்தியிலே  வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், அவன் பூமியில் பாடைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்  அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,  வெளி 14:6 ) Part 2 ) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை ன்றைய வெளிப்படுத்தின் விசேஷ தியானம் 0 02/07/2026 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் 3. வேறாரு தூதன் வானத்தின்  மபின்பு, பறக்கக் கண்டேன்; XII 1) மத்தியிலே  வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், அவன் பூமியில் பாடைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்  அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,  வெளி 14:6 ) Part 2 ) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை - ShareChat
இன்றைய வசனம் : 02/07/2026 #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
🙏கோவில் - ShareChat
00:54
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 01/07/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 311 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XII 1)“பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,” (வெளி 14:6) (Part - 1) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அப்.யோவான் வெளி 14-ம் அதிகாரத்தில் காணும் இரண்டாவது தரிசனம் 6,7 வசனங்களில் சொல்லப்படுகிறது. சகல ஜாதிகளுக்கும், கோத்திரங்களுக் கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் (உலகத்தில் உள்ள சகல ஜனங்களுக்கும்) அறிவிக்க வேண்டிய நித்திய சுவிசேஷத்தை உடைய தேவ தூதன் வானத்தின் மத்தியிலே பறந்து கொண்டிருப்பதை அப்.யோவான் காண்கிறார். இந்த அதிகாரத்தில் மட்டும் ஐந்து தூதர்கள் கடைசி காலத்துக்குரிய செய்திகளை உலகத்தாருக்குக் கொண்டு வருகிறார்கள். ஆகையால் உலகத்தார் அத்தனை பேரும் விளங்கிக் கொள்ளும் விதத்தில் ஒரு பொதுவான பாஷையில் இந்த தூதன் தன் செய்தியை அறிவிப்பான் என்று சில வேத பண்டிதர்கள் எண்ணுகிறார்கள். நித்திய சுவிசேஷம் (Everlasting Gospel) என்ற வார்த்தை வேதாகமத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவாதி தேவன் நித்தியவாசியானபடியால் அவருடைய சுவிசேஷமும் நித்தியமானது. அதற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. “நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்." (2 தெச 2:14). "நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது." (I தீமோ 1:11). ஆகையால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன்." (2 தீமோ 2:10). நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." (யோவா 2:25). "நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்." (அப் 13:48). “அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்." (யோவா 12:50). "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு றிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்." (யோவா 17:3) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம் நித்திய ஜீவனை அடைவதற்குரிய வாக்குத்தத்தங்களாகவே காண முடிகிறது. நித்திய சுவிசேஷம் என்றாலே, "நித்தியானந்த தேவனுடைய மகிமையையும்" (I தீமோ 1:11): "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையையும்" (2 தெச 2:14) அடைந்து கொள்வதற்குரிய நற்செய்தியே நித்திய சுவிசேஷம் என்று இவ்வசனங்கள் போதிக்கின்றது. தேவனுடைய மகிமையின் மறுரூபத்தை அடைந்தாலே நித்திய ஜீவன் ( கொரி 15:51,52; 2 பேது 1:3) என்பதினால் வெளி 14:6,7 மூலம் தூதனால் அறிவிக்கப்பட்ட நித்திய சுவிசேஷமாவது, மனுக்குலம் நித்திய மகிமையை அடைந்துகொள்ள அறிவித்த அழைப்பின் சுவிசேஷமே என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சுவிசேஷத்தை அறிவிக்கும் பொறுப்பினை தேவனாகிய கர்த்தர் ஆதி முதற்கொண்டு மனிதர்களாகிய பரிசுத்தவான்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறார். பழைய ஏற்பாட்டிலானாலும், புதிய ஏற்பாட்டிலானாலும் தேவ தூதர்கள் மனித இனத்துக்கு பரலோகத்திலிருந்து பல செய்திகளைக் கொண்டு வந்தார்கள் என்றாலும், இரட்சிப்பின் சுவிசேஷத்தை அவர்கள் ஒரு போதும் அறிவித்ததில்லை. "தங்கள் நிமித்தமல்ல, நமது நித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக் கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது, இவைகளை உற்றுப்பார்க்கத் தேவ தூதரும் ஆசையாயிருக்கிறார்கள்." (I பேது 1:12) “தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்து கொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங் குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டு பண்ணினேன்." (அப் 1:1,2). "அதற்காக அவர்கள் ஒரு நாளைக் குறித்து, அநேகம் பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்கால மட்டும் மோசேயின் நியாயப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான்." (அப் 28:23). "மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக் கொண்டிருந்தான்." (அப் 28:31). “இதோ நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்க மாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன்." (அப் 20:25). “பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக் குறித்துச் சம்பாஷணை பண்ணி, புத்தி சொல்லிக் கொண்டு வந்தான்". (அப் 19:8). "பவுலும் பர்னபாவும் அந்நியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங் கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் 'கொண்டிருந்தார்கள்". (அப் 15:35). “இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்ய வேண்டுமென்று - கர்த்தர் பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்." (தெச 5:27). "இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு இது - லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்: வோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள். பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக் கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்" (கொலோ 4:16,18) (தொடரும்) கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில்
🙏ஆன்மீகம் - ன்றைய வெளிப்படுத்தின் விசேஷதியானம் 01/07 /2026 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம்  வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; பின்பு, XII 1) வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பூமியில்  அவன் பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நீத்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து , ' (oھ6f 14:6) (Part 1) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை ன்றைய வெளிப்படுத்தின் விசேஷதியானம் 01/07 /2026 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம்  வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; பின்பு, XII 1) வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பூமியில்  அவன் பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நீத்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து , ' (oھ6f 14:6) (Part 1) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை - ShareChat
இன்றைய வசனம் : 01/07/2026 #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝️இயேசுவே ஜீவன் #🙏ஆன்மீகம்
✝பைபிள் வசனங்கள் - ShareChat
00:54
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 30/06/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 310 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XI. 2. "இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்." (வெளி 14:5) அன்பான தேவனுடைய பரிசுத்தவான்களே, சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு இருக்கும் ஆவியின் முதற்பலனைப் பெற்ற இவர்களில் மேலும் இரண்டு தேவனுடைய திவ்ய சுபாவங்கள் இருப்பதை இவ்வசனத்தில் காண்கிறோம். 1. வாயில் கபடம் இல்லாதவர்கள். 2. மாசில்லாதவர்கள். இவர்கள் வாயில் கபடம் (Guile) இல்லை என்பது, இவர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் என்பதை அறிவிக்கிறது. "சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை: அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும் போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." (யோவான் 8:44) பொய் பேசுபவர்கள் அவனுடையவர்களாயிருக்கிறார்கள். தீட்டுள்ளதும், அருவருப்பையும், பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை. (வெளி 21:27). “பொய்யை விரும்பி அதின்ன்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்." (வெளி 22:15). இவர்கள் அனைவரும் சீயோனுக்குப் புறம்பே இருப்பார்கள் என்று அறிய முடிகிறது."இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ் செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சக நாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை.” (செப் 3:13). “எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்." (சங் 32:2). “உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன் தானே. அவன் தன் நாவினால் புறங் கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்கு செய்யாமலும், தன் அயலான் மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்." (சங் 15:2,3). இவனே தேவனுடைய கூடாரத்தில் தங்க முடியும் என்று மேற்காணும் கர்த்தருடைய வசனங்கள் நமக்குப் போதிக்கின்றது. சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடே நிற்கும் மணவாட்டி சபையினரின் கடைசி திவ்ய சுபாவமானது. இவர்கள் மாசில்லாதவர்களாய் இருக்கிறார்கள் (without Blame), பரிசுத்தமான ஆட்டுக் குட்டியானவருடன் இவர்கள் காணப்படுவதின் இரகசியம் இது தான். "கறை திரை முதலானவைகள் ஒன்றும், இல்லாமல், பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக (எபே 5:27) தேவனை ஆராதித்தவர்களானபடியால், இயேசு மணவானன் தன் இரகசிய வருகையில் மணவாட்டி சபையாக சேர்த்துக் கொண்டார். ஆகையால் நித்தியத்தில் சீயோன் மலையில் மணவாளனாகிய ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கிறார்கள். இவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்பதல்ல. இவர்கள் பாவ மில்லாதவர்கள் என்றால் மீட்கப்பட வேண்டும் என்பதில்லையே. "உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.” (ஏசா 1:18). “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி யாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப் பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.”(1 பேது 1:19). "வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்." (யூதா :24) என்ற கர்த்தருடைய திருவசனங்களின்படி கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்ட இவர்கள் மாசில்லாதவர்களாகி சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு நிற்கிறார்கள். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
🙏ஆன்மீகம் - ன்றைய வெளிப்படுத்தினவிசேஷதியானம் 30/06/2026 1 3. வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவீல்லை;ீ XI. 2. இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கீறார்கள் ? (0@!60 14:5) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை ன்றைய வெளிப்படுத்தினவிசேஷதியானம் 30/06/2026 1 3. வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவீல்லை;ீ XI. 2. இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கீறார்கள் ? (0@!60 14:5) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை - ShareChat
இன்றைய வசனம் : 29/06/2026 #🙏கோவில் #✝பைபிள் வசனங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✝️இயேசுவே ஜீவன் #🙏ஆன்மீகம்
🙏கோவில் - ShareChat
00:55
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 29/06/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 309 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XI. 2) “ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ள வர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்." (வெளி 14:4) (Part - 2) சபையின் இருண்ட காலமான கி.பி.6-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை வேதத்தின் மூல நூல்கள் கத்தோலிக்க சபையாரின் திருமணஞ் செய்யாத துறவிகளின் கரங்களில் இருந்த போது இந்த வசனம் அவர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று பல வேத பண்டிதர்களின் கருத்தாயிருக்கிறது. அப்.யோவான் சபையானது தங்களைக் கறைப்படுத்தாதவர்களாய், கற்புள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று நிரூபங்களில் வலியுறுத்துகிறார். "கறை திரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக" இருக்க (எபே 5:27)ல் அப்.பவுல் வலியறுத்துகிறார். "கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடமற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்க வேண்டும்." (பிலி 2:15) என்கிறார் அப்.பவுல். தங்களைக் கறைப்படுத்தாதவர்கள். கற்புள்ளவர்கள் என்று அப்.யோவான் கூறும்பொழுது உலகத்தோடு ஐக்கியங் கொள்ளுதல், பொருள் ஆசையோடிருத்தல் ஆகிய பாவங்களை மனதில் கொண்டு உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்." (பிலி 3:10,11) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம் கிறிஸ்துவின் சித்தத்திற்கு தங்களை முற்றிலுமாக ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்துள்ள ஜீவியத்தை நமக்கு அறிவிக்கின்றது. இவர்களுடைய ஒப்புக் கொடுத்துக் கொண்ட வாழ்க்கையிலே சிலவேளை இவர்கள் கரடுமுரடான பாதையினூடாக தவித்திருக்கலாம். போகும் வழியை அறிந்து கொள்ளாமலும், விளங்கிக் கொள்ள முடியாமலும் இருந்திருக்கலாம். தான் எங்கே போகிறேன் என்பதை அறியாமலேயே தன் வீட்டாரையும், நாட்டையும் விட்டுப் பிரிந்து தேவன் காட்டிய வழியில் நடந்த ஆபிரகாமின் நம்பிக்கை இவர்களிடம் காணப்பட்டிருக்க வேண்டும். "என் பின்னே வாருங்கள்” (மத் 4:19) என்பது தான் கிறிஸ்து இயேசு ராஜா தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்த முதல் அழைப்பு என்பதை அறிவோம். சீயோன் மலையில் புதுப்பாட்டைப் பாடுகிற இவர்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மனுஷரிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள். "கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." (1 கொரி 6:20) "நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்;மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்”(கொரி 7:23) இவ்வசனங்களின்படி தேவன் அவர்களை கிரையம் கொடுத்து வாங்கினபடியால் தேவனுக்குச் சொந்தமானவர்கள் ஆனார்கள். ஆகையால் இவர்கள் தேவனுக்கென்றதான முதற்பலன்களானவர்கள். "அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சைரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்." (எண் 18:2) இஸ்ரவேலர்கள் தங்களுடைய விளைச்சலில் முதலாவதாக ஒரு நல்ல பங்கைத் தெரிந்து கொண்டு அதை தேவனுக்கு காணிக்கையாகச் செலுத்தினார்கள் என்பதை மேற்காணும் வசனம் போதிக்கின்றது. "அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்." (யாக் 1:18) “அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவீகாரம் வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம்." (ரோம 8:23) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களின்படி, கிருபையின் கால சத்திய வசனங்களுக்கு கீழ்ப்படிந்த கோடானகோடி தேவ ஜனங்களில், கடைசிக் காலத்தில் சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு புதிய பாடலைப் பாடி நித்திய வாசிகளாவதற்கு ஆவியின் முதற் பலன்களானவர்களாகிய மணவாட்டி சபையை மகிமையின் தேவன் தெரிந்தெடுத்துள்ளார் என்பதை அறிந்து மகிமை நாதராகிய இயேசு மணவாளனை மகிமைப்படுத்துவோம். கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - இன்றைய வெளிப்படுத்தின விசேஷ 29/06/2026 தியானம் 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் XI. 2) சஸ்திரீகளால் தங்களைத் கறைப்டுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள்இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிவர்கள் இவர்களே;ீ  இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்  முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் " - (வெளி 14:4) (Part  2) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை இன்றைய வெளிப்படுத்தின விசேஷ 29/06/2026 தியானம் 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் XI. 2) சஸ்திரீகளால் தங்களைத் கறைப்டுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள்இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிவர்கள் இவர்களே;ீ  இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்  முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் " - (வெளி 14:4) (Part  2) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை - ShareChat
இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 28/06/2026 வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 308 வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் : XI. 2) “ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ள வர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்." (வெளி 14:4) (Part - 1) அன்பான கர்த்தருடைய பரிசுத்தவான்களே, இவ்வசனத்தின்படி சீயோன்மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு கூட இருந்து புதுப்பாடலைப் பாடிய இவர்கள், ஆவிக்குரிய நான்கு நிலைகளை உடையவர்களாய் இருப்பதைக் காண்கிறோம். 1. ஸ்திரீகளால் கறைப்படுத்தப்படாதவர்கள். 2. கற்புள்ளவர்கள். 3. ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிறவர்கள். 4. முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள். அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே, ஸ்திரீகளால் கறைப்படுத்திக் கொள்ளாதவர்கள் (not defiled with women) என்பதினால் திருமணமாகாத ஆண்கள் மட்டும் தான் சீயோன் மலையில் காணப்படுவார்கள் என்ற தவறான கருத்துக்கள் சில சபைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. அப்போஸ்தலர்களில் திவ்ய வாசகனாகிய அப். யோவான் மட்டுமே திருமணமாகாதவராய் இருந்தார் என்று அறியப்படுகிறது. அப்படியானால் திருமணமான அப்போஸ்தலர்களும், பரிசுத்தவான்களும், தீர்க்கதரிசிகளும் இந்த சீயோன் மலையின் நித்திய மேன்மைகளை இழந்து விடுவார்களா? வேதாகமத்தில் திருமண உறவைத் தடை செய்யும் அல்லது பிரம்மச்சரியத்தை ஆதரிக்கும்படி எந்த வசனமும் சொல்லப்படவில்லை. "மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்." (ஆதி 2:18) என்பது தேவனுடைய நியமம். ஆதாம் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று தேவனிடம் ஜெபித்ததே இல்லை. "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது." (எபி 13:4) என்று தேவன் சொல்லுகிறார். திருமண ஐக்கியம் பாவமானதாக இருக்குமேயானால் அப்.பவுல் கிறிஸ்துவுக்கும் சபைக்குமிடையே உள்ள உறவை கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவோடு சம்பந்தப்படுத்திப் பேசியிருக்க மாட்டார். (எபே 5:28-32). வெளி 14:4-ம் வசனத்தை எழுத்தின்படியாக எடுத்துக்கொள்வோமானால் ஸ்திரீகள் எவருமே சீயோனுக்குப் போக முடியாது என்றாகிவிடும். வெளி 14:4-ம் வசனத்தில் “ஸ்திரீயினால்” தங்களைக் கறைப் படுத்தாதவர்கள் என்று எழுதப்படாமல் “ஸ்திரீகளால்” என்று பன்மையில் எழுதப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்திரீகள் என்பதினால் விவாகம் பண்ணினவன் தன் மனைவியை அல்லாமல் வேறொரு ஸ்திரீயோடு உறவு கொண்டு விபசாரனாகக்கூடாது. “புருஷன் தன் மனைவியை சொந்தச் சரீரமாகப் பாவித்து அவரில் அன்பு கூற வேண்டும். தன் மனைவியில் அன்பு கூறுகிறவன் தன்னில் தான் அன்பு கூறுகிறான்.'' (எபே 5:28) என்கிறார் அப்.பவுல். "விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்." (எபி 13:4) என்பதைப் பார்க்கிறோம். இங்கே "விவாக மஞ்சம்" என்கிறார். மஞ்சம் என்றால் நீதி 7:16-ல் படுக்கை என்று அறிய முடிகிறது. "விவாக மஞ்சம்" என்றால் விவாக வாழ்க்கையாகும். விவாக வாழ்க்கையை உடையவர்கள் வேசித்தனம். விபச்சாரம் ஆகியவைகளுக்கு இடம் கொடாத கற்புள்ள வாழ்க்கையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்படியில்லாத வாழ்க்கை வாழ்கிறவர்கள் கற்பில்லாத கறை படிந்த, விபச்சார வேசித்தன வாழ்க்கையுடையவர்கள் என்று எபி13:4-ம் வசனத்தில் எச்சரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு காத்திருக்கிறது. ஆகையினால் அப். யோவான் வெளி 14:4-ம் வசனத்தில் சீயோனுக்குப் போக வேண்டுமென்றால், ஸ்திரீகளால் கறைபடாதவர்களாய் இருக்க வேண்டும் என்கிறார் அப்.யோவான். "கற்புள்ளவர்கள் இவர்களே" என்பது They are Virgins (கன்னிகைகள்) என்பதின் மொழி பெயர்ப்பாகும். "நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவ வைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன்.” (2 கொரி 11 :2). “கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." (உன் 1:3). இவ்வசனங்களின்படி திருமணமாகாத கன்னியர்களாகிய கன்னிப்பெண்கள் மட்டுமே சீயோனிலே காணப்பட முடியும் என்பதாகிவிடும். திருமண உறவு பாவம் இல்லை என்பதனால், "நீங்கள். பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்." (ஆதி 9:1). "பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி. பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஐந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்." (ஆதி 1:28) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்கள் எல்லாம் தேவனாகிய கர்த்தர் திருமண உறவை ஆசீர்வதிக்கிறார். “அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவ பக்தியுள்ள சந்ததியைப் பெறும்படி தானே” (மல் 2:15) “அப்பொழுது ஒலிமுக வாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி; நாங்களும் சாட்சி தான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டு பேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப் போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ் பெற்றிருக்கக்கடவாய்." (ரூத் 4:11) என்ற திருவசனங்களெல்லாம் திருமண உறவை கர்த்தராகிய தேவன் ஆசீர்வதித்ததைப் பார்க்கிறோம். (தொடரும்) கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர், I. ஆசீர்வாதம் "பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை" மதுரை, இந்தியா, (தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805) Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n. #✝பைபிள் வசனங்கள் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #✝️இயேசுவே ஜீவன் #🖌பக்தி ஓவியம்🎨🙏
✝பைபிள் வசனங்கள் - ன்றைய வெளிப்படுத்தின விசேஷ 28/06/2026 தியானம் 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் XI. 2) மஸ்திரீகரால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே;  தற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும்  ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் ` வெளி 14:4 ) Part 1 ) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை ன்றைய வெளிப்படுத்தின விசேஷ 28/06/2026 தியானம் 3.வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் XI. 2) மஸ்திரீகரால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே;  தற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும்  ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் ` வெளி 14:4 ) Part 1 ) பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை - ShareChat