
Islamic Way ❤️ Of Life
@islamicwayoflifeofficial1
❤️ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ ❤️
"ஷவ்வால் பிறை 🌙 1 முதல் 29 (or) 30 க்குள் ஆறு நோன்புகள் வைக்கலாம் ஷவ்வால் முதல் ஆறு நாட்கள் தான் தொடர்ச்சியாக நோன்பு வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை உங்கள் சூழ்நிலை மற்றும் உடல்நிலயைப் பொறுத்து வைத்துக் கொள்ளுங்கள் இன் ஷா அல்லாஹ் ❤️ காலமெல்லாம் நம்மால் நோன்பு வைக்க முடியுமா? ஆனால் ரமளானைத் தொடர்ந்து இந்த ஆறு நோன்புகள் வைத்தால் காலமெல்லாம் நோன்பு வைத்த நன்மையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தருகிறான் சுப்ஹானல்லாஹ் ❤️ So Don't Miss It....‼️
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2159.
கேள்வி :
*ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா.?!*
பதில் :
*ஷெய்ஹ் முஹம்மது ஸாலிஹ் அல் உஸைமீன் (ஹ) கூறிகின்றார்கள் :*
நன்மைகளை விரைவுபடுத்துதல் என்ற அடிப்படையில் பெருநாளை தொடர்ந்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து ஷவ்வாலின் ஆறு நோன்புகள் தோற்பது தான் சிறந்ததாகும்.
பெருநாளை தொடர்ந்து தொடர்ச்சியாக தான் ஷவ்வாலின் ஆறு நோன்புகள் நோற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறாக அதற்குப் பிறகும் நோற்றுக் கொள்ளலாம்.
ஷவ்வால் மாதம் முடிவதற்குள் ஏதேனும் ஆறு நாட்களில் இடைவேளை விட்டும் நோன்பு நோற்றுக்கொள்ளலாம்.
காரணம்,
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*
யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகளை நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
*நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1167*
ஷவ்வாலின் ஆறு நோன்புகள் தொடர்ச்சியாக ரமலான் முடிந்தவுடனே வைக்க வேண்டும் என நபி (ஸல்) நிபந்தனை வைக்கவில்லை.
எனவே ஷவ்வாலின் ஆறு நோன்புகளை இடைவேளை விட்டு வைத்துக் கொள்ளலாம்.
📽️அரபு மூலம் வாசிக்க :
https://binothaimeen.net/content/10119
#⚡ஷேர்சாட் அப்டேட் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
"என் அன்பிற்கினிய உறவுகளே ❤️
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 💐💐
"உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய ஈத் அல் ஃபித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்கள் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் ❤️ நாம் அனைவருடைய நல் அமல்களையும் பொருந்திக் கொண்டு நாம் அனைவருடைய இம்மை மறுமை வாழ்வை செழிப்பானதாக அவன் பொருந்திக் கொண்ட வாழ்க்கையாக மாற்றுவானாக!!
"தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் 💫 உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக!!!
"நாம் அனைவருடைய இல்லத்தையும் உள்ளத்தையும் ❤️ மகிழ்ச்சி நிறைந்த பெருநாள் தினத்தைப் போல சந்தோஷமானதாக மாற்றுவானாக அதை என்றென்றும் நிலைக்கச் செய்வானாக!!!
"உங்களுடைய துஆவில் எங்களையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள் ❤️ என்னுடைய துஆவில் என்றென்றும் உங்களையும் இந்த உம்மத்துக்களையும் சேர்த்துக் கொள்வேன் இன் ஷா அல்லாஹ்!!
💫✨🌙 ஈத் அல்'ஃபிதர் முபாரக் 🌙✨💫
❤️رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ❤️
"என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்தும் கொள்வாயாக!
📚(அல்குர்ஆன் : 14:40)📚
#🌙ஈத் ஸ்டேட்டஸ்💐 #🥻ஈத் ஸ்பெஷல்🍲 #⚡ஷேர்சாட் அப்டேட் ##ramadanreminder #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
"Wish You Happy Eid Al Fitr 🌙✨
"Taqabbalallahu Minna Wa Minkum 📌🌙✨
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 ##ramadanreminder #⚡ஷேர்சாட் அப்டேட் #🥻ஈத் ஸ்பெஷல்🍲 #🌙ஈத் ஸ்டேட்டஸ்💐
🌙✨...تقبل الله منا ومنكم صالح الأعمال✨...🌙
"Eid Al Fitr Mubarak 🌙✨
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #⚡ஷேர்சாட் அப்டேட் #🥻ஈத் ஸ்பெஷல்🍲 ##ramadanreminder #🌙ஈத் ஸ்டேட்டஸ்💐
1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)
3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறி, இத்தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், நஸாயி)
4) நபி (ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி, ”தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றி திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் இத்தர்மத்தை கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு, இத்தர்மம் செய்தவர், நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக ”தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்” ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாம்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!
சட்டங்கள்: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக, மீதப் பொருள் மற்றும் தானியம் இருப்பின், அவர்கள் இத்தர்மத்தைக் கொடுக்க தகுதி பெறுவார்கள். பெருநாள் அன்று உண்ண தானியம் இல்லாதவர்கள், இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள்.
#🌙ஈத் ஸ்டேட்டஸ்💐 #🥻ஈத் ஸ்பெஷல்🍲 #⚡ஷேர்சாட் அப்டேட் ##ramadanreminder #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
"யா அல்லாஹ் ❤️✨
"எங்கள் அனைவருடைய ஹலாலான துஆக்களையும் தொழுகைகளையும் நோன்புகளையும் ருகூவுகளையும் ஸஜ்தாக்களையும் தான தர்மங்களையும் மேலும் இந்த கண்ணியமிக்க ❤️ ரமளான் மாதத்தில் நாங்கள் செய்த நல் அமல்களையும் எங்களுடைய பணிவான உள்ளச்சங்களையும் ஏற்று பொருந்திக் கொள்வாயாக எங்கள் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக!!
"நாங்க கேட்ட கேட்க மறந்த கேட்க நினைத்த அனைத்து ஹலாலான தேவைகளையும் விருப்பங்களையும் பிரார்த்தனைகளையும் கண்ணியமிக்க உன்னுடைய குன் ஃபயகூன் ❤️ என்ற சொல்லால் அனைத்தையும் நிறைவேற்றித் தா யா ரஹ்மானே!!
"ரமளானில் மட்டுமல்ல எல்லாக் காலங்களிலும் உன்னை அஞ்சக் கூடிய உள்ளத்தையும் 😥 உனக்கு கட்டுப்படக்கூடிய கண்ணியமான வாழ்வையும் எங்களுக்கு கொடு யா அல்லாஹ் ❤️
"பயபக்தியுடையவர்களுக்கு எங்களை வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் என்றென்றும் வாழ வை ரஹ்மானே ❤️ இன் ஷா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சிறந்த ஸாலிஹான கண்ணியமான சிறந்த வாழ்வைக் கொடு யா ரஹ்மானே ❤️
"இன் ஷா அல்லாஹ் ❤️ ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 🤲🏻❤️✨
❤️رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ❤️
"என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்தும் கொள்வாயாக!
📚(அல்குர்ஆன் : 14:40)📚
❤️رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ❤️
“எங்களுடைய இரட்சகனே உனக்காக நாங்கள் செய்த இப்பணியை எங்களிலிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்”
❣️ஆமீன்❣️
📚(அல்குர்ஆன் : 2:127)📚
இன்னும், நன்மைக்கும், (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள்,
📚(அல்குர்ஆன் : 5:2)📚
#☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #⚡ஷேர்சாட் அப்டேட் ##ramadanreminder #🌙ஈத் ஸ்டேட்டஸ்💐 #🥻ஈத் ஸ்பெஷல்🍲
•சிறந்த கண்ணிமிக்க ரமழான் மாதம் மிக விரைவாக நம்மை விட்டு கடந்து சென்று கொண்டு இருக்கிறது.
•அல்லாஹ் நாடினால் இன் ஷா அல்லாஹ் அடுத்த ரமழானை இறைவனின் உதவியால் அடைவோம்.
•இன் ஷா அல்லாஹ் இருக்கும் இந்த நேரத்தை மிக அழகிய முறையில் கழிப்போம்!!
#⚡ஷேர்சாட் அப்டேட் ##ramadanreminder
##ramadanreminder #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 ##ramadanreminder #⚡ஷேர்சாட் அப்டேட்
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிகச் சிறந்ததாகும்.
(அல்குர்ஆன் : 97:3)
تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
அதில் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய பரிசுத்த) ஆவியும் தங்கள் இரட்சகனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) ஒவ்வொரு காரியத்தின் நிமித்தம் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 97:4)
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
(அது) சாந்தியா(ன இரவாகும், அவ்விரவான)து அதிகாலை உதயமாகும் வரையிலாகும்.
(அல்குர்ஆன் : 97:5)
"அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!!
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.
(அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி) ##ramadanreminder #🕌லைலத்துல் கத்ர்🌙
"அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!!
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.
(அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி)
"யா அல்லாஹ் ❤️ உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் நல்ல முறையில் உனக்கு வழிபாடு செலுத்துவதற்கும் எனக்கு நீ உதவி செய்தருள்வாயாக!
📚 (அபூதாவூத், நஸாயி) 📚
"உள்ளங்களை ❤️ திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!
"இன் ஷா அல்லாஹ் ❤️ ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்!!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அந்த (லைலத்துல் கத்ர்) இரவை (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2164.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1901.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாடுகளில்) மற்ற நாட்களில் காட்டாத (அதிக) ஈடுபாட்டை, (ரமளானின்) இறுதிப்பத்து நாட்களில் காட்டுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2185.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவைத் தேடிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2166.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அந்த (லைலத்துல் கத்ர்) இரவைத் தேடுபவர் ரமளானின் இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடட்டும்!
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2165 #🕌லைலத்துல் கத்ர்🌙 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் ##ramadanreminder #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙



![⚡ஷேர்சாட் அப்டேட் - ஆறு நோன்பு" ரடளான் பரதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் பாதத்தல் ஆறு நோன்பு நோற்றவர் காலவல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றாவார்!! [முஸ்லிம் 2|59] 5" ஆறு நோன்பு" ரடளான் பரதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் பாதத்தல் ஆறு நோன்பு நோற்றவர் காலவல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றாவார்!! [முஸ்லிம் 2|59] 5" - ShareChat ⚡ஷேர்சாட் அப்டேட் - ஆறு நோன்பு" ரடளான் பரதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் பாதத்தல் ஆறு நோன்பு நோற்றவர் காலவல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றாவார்!! [முஸ்லிம் 2|59] 5" ஆறு நோன்பு" ரடளான் பரதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் பாதத்தல் ஆறு நோன்பு நோற்றவர் காலவல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றாவார்!! [முஸ்லிம் 2|59] 5" - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_581521_3a2f60e7_1774112578169_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=169_sc.jpg)







