
Islamic Way ❤️ Of Life
@islamicwayoflifeofficial1
❤️ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ ❤️
"புயல் வீசும் போது!!
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாஃபீஹா வகைர மா உர்ஸிலத் பிஹி. வஅவூது பி(க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா ஃபீஹா வஷர்ரி மா உர்ஸிலத் பிஹி
இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம்
பலத்த காற்று அடிக்கும்போது!!
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا
யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையை நான் உன்னிடம் கேட்கிறேன். இதன் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம் : அபுதாவுத், இப்னுமாஜா
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرَ مَا فِيهَا ، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا فِيهَا ، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ளதின் நன்மையையும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்பபட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில் கேட்கிறேன். இந்த காற்றின் தீமையைவிட்டும் இதிலுள்ளதின் தீமையைவிட்டும் எதனை கொண்டு இது அனுப்பபட்டுள்ளதோ அதன் தீமையைவிட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம் : முஸ்லிம், புகாரி
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ‘ஆத்" சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) "இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்" என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1640. #islamicduatamil
"காசா மீதான போர் முடிந்துவிட்டது!!
"ஃபலஸ்தீன பத்திரிக்கையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹி ரப்புல் ஆலமீன் 😥☝🏻📌✨
"காசாவிலிருந்தும் எல்லா இடங்களிலிருந்தும், இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் எழுதுகிறார்கள், அழுகிறார்கள், சுவாசிக்கிறார்கள். காசாவுக்கு அமைதி... மற்றும் அனைத்து பாலஸ்தீனியர்களுக்கும்!!
"ஸுப்ஹானல்லாஹ் ❤️ ✨
"அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்!!
"சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான்.
(அல்குர்ஆன் : 65:7)
உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?
இன்னல்களும் இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன. (அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது வரும்?”
என்று (புலம்பிக்) கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.
(அப்பொழுது அவர்களுக்கு இவ்வாறு ஆறுதல் கூறப்பட்டது:)
“இதோ! அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது.”
(அல்குர்ஆன் : 2:214)
#freegaza #palestine #don'tforgetgaza
"ஷாம்' தேசத்திற்கு நற்செய்தி உண்டு!! ❤🩹📌✨
இந்த வார்த்தை அல்லாஹுவுடைய தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தை,
ஒரு காலமும் இது பொய்யாகாது!!
ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு!!
இப்போது வேண்டுமானால் ஷாம் அலக்கழிக்கப்படலாம்!!
ஆனால்... ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக!!
இன்ஷா அல்லாஹ்!!!
ஷாம் தேசம் என்பது சிரியா, பலஸ்தீனம், ஜோர்டான், லெபனான். இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்!!
ஷாம் தேசத்தின் சிறப்புக்கள்!!
முஹம்மத் (ஸல்) அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாம்!!
அல்லாஹ்வின் பரக்கத் பொருந்திய இடங்களில் ஒன்று ஷாம்!!
நமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்!!
நமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்!!
அதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்!!
உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி ஸுஜூத் செய்ததும் ஷாமில் தான்!!
வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்!!
வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்!!
முஹம்மத் (ஸல்) அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்!!
பாரசீக கோட்டையில் இஸ்லாமிய கொடி பறக்கும் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்!!
எட்டாயிரத்திற்கும் அதிகமான ஸஹாபாக்கள் (றழி) ஷஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்!!
உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்!!
கியாம நாள் வரையிலும் ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்!!
முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு போராட்டக் குழுவை ஆதரித்தார் என்றால் ஷாமின் குழுவை தான்!!
அப்போதைய வல்லரசான பாரசீகத்தை இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்!!
மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்!!
ரோமர்களுக்கு இமாம் மஹ்தி (அலை) தலைமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்!!
யூதர்களை பார்க்கும் இடமெல்லாம் வெட்டுவதும் ஷாமில் தான்!!
ஈஸா (அலை) அலை இறங்குவதும் ஷாமில் தான்!!
தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்!!
மஹ்ஷர் பூமி ஏற்படுவதும் ஷாமில் தான்!!
கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்!!
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது!!
ஷாம் அழிக்கப்படுகிறது என்று யாரும் கவலைப்பட வேண்டாம்!!
இஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது!!
இப்போதைய நமது பணி, ஷாமிற்கும் அம்மண்ணுக்கு அதிகம் பிராத்திப்பதே ஆகும்!!
"உங்களுடைய பிரார்த்தனைகளில் ஒருபோதும் அந்த ஈமானிய உறவுகளை மறந்து விட வேண்டாம் இன் ஷா அல்லாஹ்!! 🇵🇸📌✨ #gaza🇸🇩 #freegaza #prayforgaza🇸🇩 #don'tforgetgaza #Palestine
🌒 *கிரகணத் தொழுகை*
சூரிய, சந்திர கிரகணங்களின் போது தொழுவது கட்டாய சுன்னாவாகும். இமாம் இப்னுல் கையூம் அல்-ஜவ்ஸிய்யா (ரஹ்), ஷேய்க் பின் பாஸ் (ரஹ்) போன்ற அறிஞர்கள் கிரகணத் தொழுகையைத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பதாலும், அவர்கள் அதனை செய்திருப்பதாலும், கட்டாயமாகத் தொழுதாக வேண்டும் என்று கூறுகின்றனர்.
📌 *தொழுகைக்குரிய நேரம்:*
சூரிய, சந்திர கிரகணம் ஆரம்பித்து முடிவதற்கிடைப்பட்ட நேரம் தொழுகைக்குரிய நேரமாகும்.
கிரகணம் முற்றாக நீங்கிவிட்டால், தொழுகையின் நேரம் முடிந்து விடும். கொஞ்சம் நீங்கி கொஞ்சம் இருந்தாலும் அது தொழுகைக்குரிய நேரமாகும்.
பார்க்க: புஹாரி (1060) மற்றும் முஸ்லிம் (904)
கிரகணத்தைக் கண்டால், *‘அஸ்ஸலாத்து ஜாமிஆ’* எனப் பள்ளிவாசலுக்குத் கிரகணத் தொழுகைக்காக வரும்படி அழைப்பு விடுக்க வேண்டும்.
பார்க்க: புஹாரி (1045)
கிரகணத் தொழுகை பள்ளிவாசலில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், பெண்களும் குறித்த தொழுகையில் கலந்துகொள்ளலாம்.
பார்க்க: முஸ்லிம் (1645) மற்றும் புஹாரி (1053)
கிரகணத் தொழுகை இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டது என்பதில் அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த முடிவில் உள்ளனர்.
ஆனால், தொழும் முறையில் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராயப் பேதம் உள்ளது என்றாலும், ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு நிலைகள், இரண்டு கிராஅத்துக்கள், *இரண்டு ருக்கூஃகள்*, இரண்டு சுஜூதுகள் என்ற கருத்தில் இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத் (ரஹ்) ஆகியோர் உள்ளனர் என்பதுடன் அக்கருத்தே மிகச் சரியானதாகும்.
பார்க்க: புஹாரி: (1047) மற்றும் முஸ்லிம்: (901).
எனவே அதன்படி தொழுகை முறை எவ்வாறு அமையும் என்பதைப் பார்ப்போம்.
📌 *தொழும் முறை:*
1. முதல் தக்பீர் கூறி ஆரம்ப துஆவை ஓதுதல், அஊது பிஸ்மி ஓதுதல், பின்னர் சூறதுல் பாத்திஹாவை ஓதியதும், நீண்ட ஒரு சூறாவை ஓதுதல்.
2. நீண்ட நேரம் ருகூஃ செய்தல்.
3. ருகூஃவிலிருந்து எழுந்து நிலைக்கு வருதல்.
4. சுஜூது செய்யாமல் சூறதுல் பாதிஹாவையும் முன்னர் ஓதியதை விட சற்று குறைவாக வேறு ஒரு சூராவையோ குர்ஆனின் சில பகுதியையோ ஓதுதல்.
5. மீண்டும் ருகூஃ செய்தல். அந்த ருகூஃவில் நீண்ட நேரம் இருத்தல். ஆனால், முன்னைய ருகூஃவை விட சற்று நேரம் குறைந்ததாக இரண்டாம் ருகூஃவை அமைத்துக் கொள்ளல்.
6. மீண்டும் ருகூஃவிலிருந்து எழுதல்.
7. பின்னர் நீண்ட நேரம் சுஜூது செய்தல். நடு இருப்புக்கு வந்து மீண்டும் சுஜூது செய்தல்.
8. பின்னர் இரண்டாம் ரக்அத்துக்கு எழுந்து இதே போன்று அந்த ரக்அத்திலும் செய்தல்.
தொழுகையின் பின்னர் குத்பா:
கிரகணத் தொழுகையின் பின்னர் குத்பா உரை இடம்பெற வேண்டும். கிரகணத் தொழுகையில் குத்பாவும் ஒரு அங்கம் என்பது இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் கருத்தாகும்.
✍️ ஆக்கம்:
எஸ். எச். எம். இஸ்மாயில் ஸலஃபி
🗣️ இன்று சந்திர கிரகணம் ஏற்படும் நேரத்தை நினைவில் நிறுத்தி, குறித்த நேரத்தில் கிரகணத் தொழுகையைத் தொழுவதுடன், அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ர் செய்தல் மற்றும் பாவமன்னிப்புக் கோருவதனூடாக நபிகளார் வலியுறுத்திய இந்தக் கட்டாய சுன்னாஹ்வை நிறைவேற்ற முன்வருவோமாக!
📍 உங்களுடைய ஊர் பள்ளிவாசல்களில் கிரகணத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், நீங்கள் வீட்டிலேயே தொழுதுகொள்ள முடியும்.
#Moonesclipse #சந்திரகிரகணம் #HalalPost #islam #Miracle
🌕🌘சந்திர கிரகணம்🌒🌕
✨எழுந்து விரைந்து தொழுங்கள் கிரகணம் விலகும் வரை.
✨அல்லாஹ்வை புகழுங்கள் (தக்பீர் கூறுங்கள்)
✨ஸதகா செய்யுங்கள்.
✨அதிகமாக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.
✨இரண்டு ருகூ இரண்டு ஸஜ்தாக்கள் ஒரு ரக்ஆத்திற்கு (மொத்தம் நான்கு) நீண்ட நேரங்கள் செய்யுங்கள்
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
ஸஹீஹ் புகாரி : 1045
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1042.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1048.
#islam #சந்திரகிரகணம் #Miracle #HalalPost #Moonesclipse



![islamicduatamil - பபுயல் வீசம் போது துஆ! ஓதும் ثلسذأ امريخو اهيِف امريخو اهديَخ كلأسأ يَّنإ RUl ய ثَلِسزَأ امَرَشَو اهيِف امرَشَو اهّرَش ْنِم كِب ذوغأو அல்லாஹு பீஹா 8)8 ேட இன்னீ அஸ்அலு(ு கைரஹா வகைர பரஃ வகைர G உர்ஸலதி பஜீ வஅவூது ப(ுர ன் ஒர்ரஹா க பீஹா் elif ७ வஷர்ரி பற உர்ஸலத் பீஹி!! இறைவா! இதல் உள்ள நன்பையையுர எந்த நன்பைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்பையையுட உன்னிடம வேண்டுகிறேன் இதன் வட்டுட், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக தீங்கை அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை வட்டுட் உன்னீடட் இது பாதுகாப்புத் தேடுகிறேன் முஸ்லம் 1640] 0,ದ C3ತ 1}s13 பபுயல் வீசம் போது துஆ! ஓதும் ثلسذأ امريخو اهيِف امريخو اهديَخ كلأسأ يَّنإ RUl ய ثَلِسزَأ امَرَشَو اهيِف امرَشَو اهّرَش ْنِم كِب ذوغأو அல்லாஹு பீஹா 8)8 ேட இன்னீ அஸ்அலு(ு கைரஹா வகைர பரஃ வகைர G உர்ஸலதி பஜீ வஅவூது ப(ுர ன் ஒர்ரஹா க பீஹா் elif ७ வஷர்ரி பற உர்ஸலத் பீஹி!! இறைவா! இதல் உள்ள நன்பையையுர எந்த நன்பைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்பையையுட உன்னிடம வேண்டுகிறேன் இதன் வட்டுட், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக தீங்கை அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை வட்டுட் உன்னீடட் இது பாதுகாப்புத் தேடுகிறேன் முஸ்லம் 1640] 0,ದ C3ತ 1}s13 - ShareChat islamicduatamil - பபுயல் வீசம் போது துஆ! ஓதும் ثلسذأ امريخو اهيِف امريخو اهديَخ كلأسأ يَّنإ RUl ய ثَلِسزَأ امَرَشَو اهيِف امرَشَو اهّرَش ْنِم كِب ذوغأو அல்லாஹு பீஹா 8)8 ேட இன்னீ அஸ்அலு(ு கைரஹா வகைர பரஃ வகைர G உர்ஸலதி பஜீ வஅவூது ப(ுர ன் ஒர்ரஹா க பீஹா் elif ७ வஷர்ரி பற உர்ஸலத் பீஹி!! இறைவா! இதல் உள்ள நன்பையையுர எந்த நன்பைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்பையையுட உன்னிடம வேண்டுகிறேன் இதன் வட்டுட், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக தீங்கை அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை வட்டுட் உன்னீடட் இது பாதுகாப்புத் தேடுகிறேன் முஸ்லம் 1640] 0,ದ C3ತ 1}s13 பபுயல் வீசம் போது துஆ! ஓதும் ثلسذأ امريخو اهيِف امريخو اهديَخ كلأسأ يَّنإ RUl ய ثَلِسزَأ امَرَشَو اهيِف امرَشَو اهّرَش ْنِم كِب ذوغأو அல்லாஹு பீஹா 8)8 ேட இன்னீ அஸ்அலு(ு கைரஹா வகைர பரஃ வகைர G உர்ஸலதி பஜீ வஅவூது ப(ுர ன் ஒர்ரஹா க பீஹா் elif ७ வஷர்ரி பற உர்ஸலத் பீஹி!! இறைவா! இதல் உள்ள நன்பையையுர எந்த நன்பைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்பையையுட உன்னிடம வேண்டுகிறேன் இதன் வட்டுட், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக தீங்கை அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை வட்டுட் உன்னீடட் இது பாதுகாப்புத் தேடுகிறேன் முஸ்லம் 1640] 0,ದ C3ತ 1}s13 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_291216_ede15ee_1764348289418_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=418_sc.jpg)



