Islamic Way ❤️ Of Life
ShareChat
click to see wallet page
@islamicwayoflifeofficial1
islamicwayoflifeofficial1
Islamic Way ❤️ Of Life
@islamicwayoflifeofficial1
❤️ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ‏ ❤️
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள் உங்கள் வாழ் நாளில் மிகச் சிறந்த 10 நாட்களாகும்: அல்லாஹ் தான் படைத்தவற்றில் ஓர் சிலதை விட சிலதை சிறப்பாக்கியிருக்கின்றான். ஓர் சில மாதங்களை விட மற்றும் சில மாதங்களை, ஓர் சில நாட்களை விட மற்றும் சில நாட்களை சிறப்பாக்கியிருக்கின்றான். துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களையும் அல்லாஹ் ஏனைய நாட்களை விட சிறப்பாக்கியிருக்கின்றான். ஒரு முஃமினுடைய வாழ்வில் மிக மகத்தான நாட்களே! துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள். இந்த மகத்தான நாட்களை இறை நெருக்கத்தைப் பெறும் விதத்தில் நற்செயலகளின் மூலம் அழகுபடுத்துவதற்கு ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். 1- அல்லாஹ் துல் ஹஜ் மாத முதல் பத்து இரவுகளையும் அதன் மீது சத்தியமிட்டு கண்ணியப் படுத்தியுள்ளான். وَلَيَالٍ عَشْرٍۙ‏ "பத்து இரவுகளின் மீது சத்தியமா", (அல்குர்ஆன் : 89:2) பத்து இரவுகள் என்பது துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளாகும். என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். 2- துல்ஹஜ் மாத முதல் 10 நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதை விட சிறப்புக்குரியதாகும்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளை யும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள். (புஹாரி 969) ஏனைய நாட்களில் செய்யும் கடமையான நற்செயல்களை விட இந்நாட்களில் செய்யும் கடமையான நற்செயல்கள் அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குரியவைகளகாகும். ஏனைய நாட்களில் செய்யும் உபரியான நற்செயல்களை விட இந்நாட்களில் செய்யும் உபரியான நற்செயல்கள் அல்லாஹ்விடத்தில் சறிப்புக்குரியவைகளாகும். ஏனைய அனைத்து நற்செயல்களும் இவ்வாறுதான். உங்கள் வாழ் நாளில் மகத்தான அந்த 10 நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு இதோ சில வழி காட்டல்கள்: 1- பாவ மீட்சி: கடந்த காலத்தில் நிழக்ந்த அனைத்து பாவங்களுக்கும் உள்ளமுறுகி தூய உள்ளத்துடன், மன உறுதியுடன் அந்தப் பாவங்களை மறு படியும் எனது வாழ்வில் நான் எண்ணிக் கூட பார்க்க மாட்டேன் என்ற மன உறுதியுடன் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி அவன் பால் மீண்டவராக, எந்தப் பாவமும் அற்ற தூய மனிதராக துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களை வரவேற்கத் தயாராகுங்கள். #qurbanreminder #குர்பானிசட்டங்கள் #islam #உழ்ஹிய்யா
qurbanreminder - துல்ஹஜ்  கூறினார்கள் - ஸல் அலை அவர்கள் ரூபி உலீக நாட்களில் சிறந்த ராட்கள் துல்ஹஜ் மrகு @தல் பத்து ராடகளாடும்!! ஸனரீண் அத்தூகீம் வாகதகம் 1150 அவடி ಗ41 துல்ஹஜ்  கூறினார்கள் - ஸல் அலை அவர்கள் ரூபி உலீக நாட்களில் சிறந்த ராட்கள் துல்ஹஜ் மrகு @தல் பத்து ராடகளாடும்!! ஸனரீண் அத்தூகீம் வாகதகம் 1150 அவடி ಗ41 - ShareChat
"இன் ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு நாட்களில் துல்ஹஜ் பிறை 🌙 ஆரம்பமாகும் குர்பானி கொடுப்பவர்கள் உங்களுடைய அவசிய தேவைகளை அதற்குள் முடித்துக் கொடுங்கள்!! பலருக்கும் எழக்கூடிய கேள்வி என்னவென்றால், 'வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தச் சட்டமா?' அறிஞர்களின் பதில்: "யார் சார்பாக குர்பானி கொடுக்கப்படுகிறதோ அவருக்கு இது. குடும்பத் தலைவர் தம் சார்பாகக் கொடுத்தால் அவர் இதைப் பேண வேண்டும். அல்லது அவரே தமது மனைவியின், பிள்ளையின் சார்பாக தம் பணத்தைக் கொடுத்துச் செய்தாலும், அவர்கள் மட்டும் இதைப் பேண வேண்டும். அனைவரும் அல்ல. 'உங்களில் ஒருவர்' என்றே நபியவர்கள் குறிப்பாக்கினார்கள். யார் கொடுப்பாரோ அவர்." நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், "இது நபி (ஸல்) அவர்கள் கூறியதன்று எனச் சிலர் கூறுகிறார்களே!" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இது நபி (ஸல்) அவர்கள் கூறியதுதான் என்று நான் அறிவிக்கிறேன்" என்றார்கள். 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3997📚 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3998📚 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 📚ஸஹீஹ் முஸ்லிம் : 3999📚 #qurbanreminder #hajjreminder #islam #குர்பானிசட்டங்கள் #உழ்ஹிய்யா
qurbanreminder - ரூபி ஸல் அலை அவர்கள் கூறினார்கள்! ஈநீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு உங்களில் ஒடுவர் கர்பானி கொடுக்க எண்ணினால் அவர் தமது மடியையும் ரகங்களையும்  அகற்றாமல் இடுக்கட்டும்!! முஸ்லிம் 3999 ரூபி ஸல் அலை அவர்கள் கூறினார்கள்! ஈநீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு உங்களில் ஒடுவர் கர்பானி கொடுக்க எண்ணினால் அவர் தமது மடியையும் ரகங்களையும்  அகற்றாமல் இடுக்கட்டும்!! முஸ்லிம் 3999 - ShareChat
"ஓட்டுக்காக அற்ப இலஞ்சத்தைப் பெற்று அல்லாஹ்வின் ஸுப்ஹானஹூவ தஆலாவின் அளவற்ற அருட்கொடையிலிருந்து தூராமாகி விடாதீர்கள்!! #haram#halal#bribery #haram #halal #islam #bribery #election2026 #tnelection2026 #tnelection2026
haram #halal #islam #bribery #election2026 #tnelection2026 - அற்துல்லிாஹ் பின் அமர் ரழி: அல்லாஹ்வன் தூதர்  ஸல் ) அவர்கள் இலஞ்சட் கொடுப்பவரையு6் வாங்குபவரையும் சபித்தார்கள்!! &७७म७ திர்பீதி:1837 CwhGly ಈ அற்துல்லிாஹ் பின் அமர் ரழி: அல்லாஹ்வன் தூதர்  ஸல் ) அவர்கள் இலஞ்சட் கொடுப்பவரையு6் வாங்குபவரையும் சபித்தார்கள்!! &७७म७ திர்பீதி:1837 CwhGly ಈ - ShareChat
"ஓட்டுப் போடுவது ஹலாலா!? ஹராமா! #halal #haram #bribery #tnelection #election2026
halal #haram #bribery #tnelection #election2026 - ShareChat
00:59
🚫 இலஞ்சம் 🚫 "கலிமாவைச் சுமந்து கொண்டு இஸ்லாமிய உறவுகளே சிந்தியுங்கள்!! "ஓட்டுக்காக இலஞ்சமாக (இரகசியமாக) பணம் பெறுவது ஹராம் ஹராம் ஹராம் 🚫 எந்த விஷயத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீனும் அல்லாஹ்வுடைய தூதர் உத்தம தூதர் ஸல் அலை அவர்களும் தடுத்தார்களோ அது பாவமாகும் அதை தவிர்த்துக் கொள்ள வாழ வேண்டும் அதுவே கலிமாவைச் சுமந்த ஒரு உண்மையான முஃமினின் அடையாளமாகும்!! "ஹராமான பணத்தை உண்பது ஹராம் அதை எந்தப் வழியில் செலவிட்டாலும் அதுவும் ஹராம் அதே நிலையில் மரணித்தால் அவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ஹராமை உண்ட உடல் சுவனத்திற்குள் நுழையாது லா ஹவ்ல வலா குவ்வத்த அல்லாஹ் பில்லாஹ் 💔 அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மற்றும் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் சாபத்தையும் பெற்று நாம் எங்கே செல்ல முடியும்⁉️ எப்படி இந்த துன்யாவில் வெற்றி பெற முடியும்⁉️ ஹராமான பணத்தில் இன்பமாக வாழ்வதை விட ஹலாலில் சோதனையை அனுபவிப்பது எவ்வளவோ சிறந்தது இறைவனிடத்தில் ஸுப்ஹானல்லாஹ் 📌 ✨ சிறு பணத்தை பெற்றுக் கொண்டு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அருகிலிருந்து தூரமாகி ஈருலகிலும் தோல்வியடைந்து விடாதீர்கள் 😥💔 அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதிலிருந்து நாம் அனைவரையும் பாதுகாத்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 🤲🏻📌✨ அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இலஞ்சம் கொடுப்பவரையும் இலஞ்சம் வாங்குபவரையும் சபித்தார்கள்." ஜாமிஉத் திர்மிதீ : 1337 அப்துல்லாஹ் பின் 'ஆம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இலஞ்சம் கொடுப்பவர் மீதும், அதை வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் (அதாவது, அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்படுதல் மற்றும் தண்டனை) உண்டு.” சுனன் இப்னுமாஜா : 2313 அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: தீர்ப்பு வழங்குவதிலும் (ஆட்சி நிர்வாகத்திலும்), இலஞ்சம் கொடுப்பவரையும், இலஞ்சம் வாங்குபவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இதனை ஐவர் பதிவு செய்துள்ளனர். திர்மிதி இதனை ஹஸன் என்றும், இப்னு ஹிப்பான் இதனை ஸஹீஹ் என்றும் தரப்படுத்தியுள்ளனர். புளூகுல் மராம் : 1411 #halal #haram #bribery #tnelection #election2026
halal #haram #bribery #tnelection #election2026 - ரூபி ஸல் 01668: இலஞ்சட் கொடுப்பவர் பீது6் 9|@5 வாங்குபவர் பீதும் அல்லாஹ்வன் அதாவது அல்லாஹ்வன் அருளலருந்து  சாபட் தூரமாக்கப்படுதல் மற்றும் தண்டனை ) ண்டு!! ೭ இற்னும|ஜா 2813 guhGuu ಈ೫ ரூபி ஸல் 01668: இலஞ்சட் கொடுப்பவர் பீது6் 9|@5 வாங்குபவர் பீதும் அல்லாஹ்வன் அதாவது அல்லாஹ்வன் அருளலருந்து  சாபட் தூரமாக்கப்படுதல் மற்றும் தண்டனை ) ண்டு!! ೭ இற்னும|ஜா 2813 guhGuu ಈ೫ - ShareChat
"ஷவ்வால் பிறை 🌙 1 முதல்‌ 29 (or) 30 க்குள் ஆறு நோன்புகள் வைக்கலாம் ஷவ்வால் முதல் ஆறு நாட்கள் தான் தொடர்ச்சியாக நோன்பு வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை உங்கள் சூழ்நிலை மற்றும் உடல்நிலயைப் பொறுத்து வைத்துக் கொள்ளுங்கள் இன் ஷா அல்லாஹ் ❤️ காலமெல்லாம் நம்மால் நோன்பு வைக்க முடியுமா? ஆனால் ரமளானைத் தொடர்ந்து இந்த ஆறு நோன்புகள் வைத்தால் காலமெல்லாம் நோன்பு வைத்த நன்மையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தருகிறான் சுப்ஹானல்லாஹ் ❤️ So Don't Miss It....‼️ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார். இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 2159. கேள்வி : *ஷவ்வால் ஆறு நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டுமா.?!* பதில் : *ஷெய்ஹ் முஹம்மது ஸாலிஹ் அல் உஸைமீன் (ஹ) கூறிகின்றார்கள் :* நன்மைகளை விரைவுபடுத்துதல் என்ற அடிப்படையில் பெருநாளை தொடர்ந்துள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து ஷவ்வாலின் ஆறு நோன்புகள் தோற்பது தான் சிறந்ததாகும். பெருநாளை தொடர்ந்து தொடர்ச்சியாக தான் ஷவ்வாலின் ஆறு நோன்புகள் நோற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாறாக அதற்குப் பிறகும் நோற்றுக் கொள்ளலாம். ஷவ்வால் மாதம் முடிவதற்குள் ஏதேனும் ஆறு நாட்களில் இடைவேளை விட்டும் நோன்பு நோற்றுக்கொள்ளலாம். காரணம், *நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :* யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகளை நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார். *நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1167* ஷவ்வாலின் ஆறு நோன்புகள் தொடர்ச்சியாக ரமலான் முடிந்தவுடனே வைக்க வேண்டும் என நபி (ஸல்) நிபந்தனை வைக்கவில்லை. எனவே ஷவ்வாலின் ஆறு நோன்புகளை இடைவேளை விட்டு வைத்துக் கொள்ளலாம். 📽️அரபு மூலம் வாசிக்க : https://binothaimeen.net/content/10119 #⚡ஷேர்சாட் அப்டேட் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
⚡ஷேர்சாட் அப்டேட் - ஆறு நோன்பு" ரடளான் பரதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் பாதத்தல் ஆறு நோன்பு நோற்றவர் காலவல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றாவார்!! [முஸ்லிம் 2|59] 5" ஆறு நோன்பு" ரடளான் பரதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் பாதத்தல் ஆறு நோன்பு நோற்றவர் காலவல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றாவார்!! [முஸ்லிம் 2|59] 5" - ShareChat
"என் அன்பிற்கினிய உறவுகளே ❤️ அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ 💐💐 "உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய ஈத் அல் ஃபித்ர் பெருநாள் நல்வாழ்த்துக்கள் அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் ❤️ நாம் அனைவருடைய நல் அமல்களையும் பொருந்திக் கொண்டு நாம் அனைவருடைய இம்மை மறுமை வாழ்வை செழிப்பானதாக அவன் பொருந்திக் கொண்ட வாழ்க்கையாக மாற்றுவானாக!! "தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும் 💫 உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக!!! "நாம் அனைவருடைய இல்லத்தையும் உள்ளத்தையும் ❤️ மகிழ்ச்சி நிறைந்த பெருநாள் தினத்தைப் போல சந்தோஷமானதாக மாற்றுவானாக அதை என்றென்றும் நிலைக்கச் செய்வானாக!!! "உங்களுடைய துஆவில் எங்களையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள் ❤️ என்னுடைய துஆவில் என்றென்றும் உங்களையும் இந்த உம்மத்துக்களையும் சேர்த்துக் கொள்வேன் இன் ஷா அல்லாஹ்!! 💫✨🌙 ஈத் அல்'ஃபிதர் முபாரக் 🌙✨💫 ❤️رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏❤️ "என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்தும் கொள்வாயாக! 📚(அல்குர்ஆன் : 14:40)📚 #🌙ஈத் ஸ்டேட்டஸ்💐 #🥻ஈத் ஸ்பெஷல்🍲 #⚡ஷேர்சாட் அப்டேட் ##ramadanreminder #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
🌙ஈத் ஸ்டேட்டஸ்💐 - Cud % Sit மின்டும்!! ககப்பலல்லாஹு மின்னா 0 அஅல்லரஹ் ரப்புல் ஆலமீன்  ங்களிடமிடுந்தும் உங்களிடமிடுந்தும் (ுற்செயல்களை ) ஏற்றுக் கொள்வானாக!! மீன்! 49 cdC MU BA RA K F [ D Cud % Sit மின்டும்!! ககப்பலல்லாஹு மின்னா 0 அஅல்லரஹ் ரப்புல் ஆலமீன்  ங்களிடமிடுந்தும் உங்களிடமிடுந்தும் (ுற்செயல்களை ) ஏற்றுக் கொள்வானாக!! மீன்! 49 cdC MU BA RA K F [ D - ShareChat
"Wish You Happy Eid Al Fitr 🌙✨ "Taqabbalallahu Minna Wa Minkum 📌🌙✨ #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 ##ramadanreminder #⚡ஷேர்சாட் அப்டேட் #🥻ஈத் ஸ்பெஷல்🍲 #🌙ஈத் ஸ்டேட்டஸ்💐
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - CuQdi  ககப்பலல்லிரஹு மின்னா வ மின்டும்!! அஅல்லஹ் ரப்புல் ஆலபீன் உங்களிடமிடுந்தும் ஏங்களிடமிடுந்தும் (ுல்அமல்களை) ஏற்றுக்கொள்வானாக!! eallke ஆமீன்!! 49 cAGl CuQdi  ககப்பலல்லிரஹு மின்னா வ மின்டும்!! அஅல்லஹ் ரப்புல் ஆலபீன் உங்களிடமிடுந்தும் ஏங்களிடமிடுந்தும் (ுல்அமல்களை) ஏற்றுக்கொள்வானாக!! eallke ஆமீன்!! 49 cAGl - ShareChat
🌙✨...تقبل الله منا ومنكم صالح الأعمال✨...🌙 "Eid Al Fitr Mubarak 🌙✨ #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 #⚡ஷேர்சாட் அப்டேட் #🥻ஈத் ஸ்பெஷல்🍲 ##ramadanreminder #🌙ஈத் ஸ்டேட்டஸ்💐
☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙 - ShareChat
00:37
1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) 2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் ஸதகத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம்: அபூதாவூத்) 3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறி, இத்தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், நஸாயி) 4) நபி (ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி, ”தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை கூறச் சொன்னார்கள். (ஆதாரம்: திர்மிதி) விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றி திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் இத்தர்மத்தை கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு, இத்தர்மம் செய்தவர், நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக ”தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்” ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாம்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக! சட்டங்கள்: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக, மீதப் பொருள் மற்றும் தானியம் இருப்பின், அவர்கள் இத்தர்மத்தைக் கொடுக்க தகுதி பெறுவார்கள். பெருநாள் அன்று உண்ண தானியம் இல்லாதவர்கள், இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். #🌙ஈத் ஸ்டேட்டஸ்💐 #🥻ஈத் ஸ்பெஷல்🍲 #⚡ஷேர்சாட் அப்டேட் ##ramadanreminder #☪️ரம்ஜான் ஸ்டேட்டஸ் 🌙
🌙ஈத் ஸ்டேட்டஸ்💐 - ஸதகத்துல் ஃபித்ர் ஈரோன்பாளியிடமிடுநுது ஏற்பட்ட வீணான காரியங்களை விடடும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளக்கு உணவாகவும் ரபி ஸஸல்) அவர்கள் ஃபித்ரா தரமத்தை விதியாக்கினார்கள்! இப்னு அப்பாஸ் (லி (ூல் அபூதாவூத் 1371) இப்னுமாஜா 1817 8ವ C ஸதகத்துல் ஃபித்ர் ஈரோன்பாளியிடமிடுநுது ஏற்பட்ட வீணான காரியங்களை விடடும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளக்கு உணவாகவும் ரபி ஸஸல்) அவர்கள் ஃபித்ரா தரமத்தை விதியாக்கினார்கள்! இப்னு அப்பாஸ் (லி (ூல் அபூதாவூத் 1371) இப்னுமாஜா 1817 8ವ C - ShareChat