#Today Gospel
ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
( வெளி 2 : 5 )
அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
( மத்தேயு 24 : 12, 13 )
#Today Gospel
எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.
( சங்கீதம் 137 : 5 )
நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.
( ஏசாயா 45 : 4 )
#Today Gospel
God has changing the times and changing the seasons.
ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாக இருக்குமானால் அவனை எல்லா நாசம் மோசத்திற்கும் முன் அறிவித்து தேவன் காக்க வல்லவர்.
அக்கினி, மழை, சூரியன், சந்திரன், காற்று, கடல் இவையெல்லாம் அவர் விரும்புகிறபடி உபயோகம் செய்கிறார். "தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்" 1நாளாகமம் 29:12
1. முழு பூமியும் அழியும் போது, நீதிமான் நோவா குடும்பம் மாத்திரம் 40 நாள் இரவு பகல் மழையிலும், ஜலப்பிரலயத்திலும் காக்கப்பட்டார்கள். ஆதி 7:4
2. சொதோம் கோமாரா முழு பட்டணமும் அழிக்கும் முன் நீதிமான் லோத் குடும்பம் மாத்திரம் அக்கினி கந்தக மழைக்கு தப்பியது ஆதி 19:24
3.வறட்சியான பஞ்ச காலத்தில் ஈசாக்கு விதை விதைத்து 100 மடங்கு அறுவடை செய்தான். ஆதி 26:12
4.யோசுவா எமோரியரோடு யுத்தம் பண்ணுகையில் சூரியனும் சந்திரனும் அஸ்தமனம் ஆகாதாபடி நிற்கும் படி செய்து கல்மழை வருவித்து அவர்களை கர்த்தர் நிக்கிரகம் செய்தார்.
5. உத்தமன் எசேக்கியாவுக்கு மனமிறங்கி 15 வருடம் ஆயுசு நாட்களை கூட்டினார். 2 இராஜா 20:6
6. முழு இஸ்ரவேல் மக்களும் பின் மாற்றமாய் போக வைத்த 850 பாகால் தீர்க்கதரிசிகளை நிக்கிரகம் செய்ய வானத்திலுருந்து அக்கினியை இறக்கி கர்த்தரே தெய்வம் என்று இஸ்ரவேல் மக்களை மனந்திரும்பும் படி செய்தார். 1 இராஜா 18:28
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்ற வல்லவர். நம் பிரச்சனைகள் அவருக்கு முன் ஒன்றுமில்லை.
#Today Gospel
அவர் படைத்த சமூத்திரத்தில் திரளான மீன்கள் இருந்தும் மீன் இல்லையா? அவர்களை அழைக்கும் போது மீன் பிடிக்கிற உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். மரிக்கப் போவதுக்கு முன்பாக என்னை பிதா அனுப்புவது போல உங்களை உலகத்திற்கு அனுப்புகிறேன் பிறரை மனந்திரும்புவதற்கும் இரட்சிக்கும்படி சாட்சியாருங்கள் என்றார்.யோவான் 20:21, லூக்கா 24 : 47,48
அவர் மரித்த பின் இயேசுவின் உயிர்த்தெழுதலை சாட்சி அறிவியாமல் மீண்டும் ஆதாயத் தொழிலை தேடி போய்விட்டனர்.
தனி நபர் சாட்சிகளும் சுவிசேஷமும் பிறரை விசுவாசத்துக்குள் நடத்தும், இவை இல்லாமல் இரட்சிப்பு பெருகுவது கடினம் தான்.சமாரியா ஸ்திரீ இதற்கு ஆதாரம். அநேக ஜீவனுள்ள சாட்சிகள் தனி நபரிடமும், சபையிலும் பெருகும் போது இரட்சிப்பும் பெருகும். அவர் பூமிக்கு அனுப்பப்பட்ட காரியம் (போஜனம் ) நிறைவேறும்.யோவான் 4:33
நீங்கள் அவர் கேட்கும் போது மீன்களை (இரட்சிப்பின் ஆத்துமாக்களை ) கொடுங்கள் 🙏🏻
#Today Gospel
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)
( சங்கீதம் 46 : 7, 11 )
#Today Gospel
அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. அப்போஸ் 5:29
#Today Gospel
இந்த offer உங்களுக்கு சாத்தான் கொடுத்தால் எதை தேர்வு செய்வீர்கள்?
சுவிசேஷமா அல்லது சுகபோகமா?













