தேனும் பாலும் தெவிட்டாத சர்க்கரையும்
தீஞ்சுவை பழமும் தொங்கும் பேரிட்சையும்
பேணும் பஞ்சாமிர்தம் பழனிவாழ் முருகனுக்கென
பல்லாயிரம் பக்தர்கள் பால்காவடி தாங்கிவர
தானேஒரு தனியான தெய்வமென நின்றாயே
தம்மனதில் உன்னையே தலைவனாக போற்றி
காணும் துறவியாய் காட்சிதரும் கந்தனே
காலடியில் சரணடைந்தேன் காத்தருள் பெருமானே
ஒருமுறை முருகாவென ஒங்கி குரலெழுப்ப
ஒராயிரம்முறை ஒடிவந்து அருள்தருவான் - கரந்தனில்
வேல்தாங்கி விளையாடும் வேலாயுதம் நின்கால் பணிந்தேன் கருணைக்கடலே #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #🙏ஓம் முருக சரணம்🙏 #🕉️ஓம் முருகா