Kollywood Street
ShareChat
click to see wallet page
@kollywoodstreet
kollywoodstreet
Kollywood Street
@kollywoodstreet
I Love Sharechat )
*விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்* திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால். ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ள மகுடம் திரைப்படமானது தமிழ் திரையுலகின் பெருமைமிகு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99 வது திரைப்படமாகவும் நடிகர் விஷாலின் திரைப்பயணத்தில் 35 வது திரைப்படமாகவும் அமையப் பெற்றிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வாயிலாக மக்களுக்கு ஓர் ஆழமான ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் திரைப்படமாக இது அமையப்பெற்றிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை மாதத்தில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் MAKUTAM என்ற தலைப்பில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், வி ஜே ஜான்சி, பதம் குமார் மற்றும் சபுமோன் ஆகியோர் தங்களது நேர்த்தியான நடிப்பின் வாயிலாக கதாபாத்திரத்திலேயே வாழ்ந்து, நடித்து இத்திரைப்படத்திற்கு மேலும் மெருகேற்றியிருக்கிறார்கள். மேலும் இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஜிவி பிரகாஷ் குமாரின் இசை அமைந்துள்ளது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி ஒளிப்பதிவாளர்களாகிய ரிச்சர்ட் எம் நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து ஒளிப்பதிவில் அசத்தியுள்ளனர். நேர்த்தியான சண்டைக் காட்சிகள் மூலம் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார் திலீப் சுப்பராயன். தமிழ் திரை உலகின் மகுடமாக திகழக்கூடிய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நினைவில் வாழும் ஆர்பி சவுத்ரி அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள டீசர் மூலமாக மேலும் பல மகுடங்களை சூட முன்னேறிக் கொண்டிருக்கிறது. *நடிகர்கள் குழு* விஷால் அஞ்சலி துஷாரா விஜயன் ஜான் விஜய் ஜெயபிரகாஷ் அஜய் வம்சி கிருஷ்ணா அபு சலீம் அர்ஜை பி ஜே ஜான்சி பதம் குமார் சபுமோன் *தொழில்நுட்பக் குழு* தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்: ஆர் பி சவுத்ரி தயாரிப்பாளர்கள்: B. சுரேஷ், R.B ஜீவன் சவுத்ரி, ஜித்தன் ரமேஷ்,ஜீவா எழுத்து மற்றும் இயக்கம்: விஷால் இசை இயக்குனர்: ஜி வி பிரகாஷ் குமார் ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் படத்தொகுப்பு: என் பி ஸ்ரீகாந்த் வசனங்கள்: பொன் பார்த்திபன், விஷால், ஆனந்த் குமரேசன் (தமிழ்) மற்றும் ராஜேஷ் A மூர்த்தி (தெலுங்கு) கதை: ரவி அரசு பாடல்கள்: எடகேசி, விவேக், உமாதேவி, கருணாகரன், V7H. கலை இயக்குனர்: ஜி துரைராஜ் நடன இயக்குனர்கள்: பிருந்தா, தினேஷ், அசார், அசார். ஸ்டண்ட் இயக்குனர்: திலீப் சுப்புராயன் ஆடை வடிவமைப்பாளர்: வாசுகி பாஸ்கர் ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்: எம் வி ரமேஷ் விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்டுடியோ: லார்வெண் ஸ்டுடியோ. சவுண்ட் எபெக்ட்ஸ் அண்டு மிக்ஸ்: T உதயகுமார் (சவுண்ட் வைப் ஸ்டுடியோ). DI : B2H ஸ்டுடியோஸ் டைட்டில் டிசைனர்: டியுனே ஜோகன் பப்ளிசிட்டி டிசைனர்: கண்ணதாசன் DKD ப்ரோமோ ஸ்டில்ஸ்: சுதர்சன் ஸ்டில்ஸ்: சாய் சந்தோஷ் மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ் (தமிழ்) சாய் சதீஷ் (தெலுங்கு). #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #👩எனக்கு பிடித்த நடிகை
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - StparCoud; FILI garh . HEASER ٢٥٢ ٨٣ r:ಳIm1` IISIIL MAGUDAM Atit tIPLII [lHttIlll TISIAI BI PIIIISII IIIIII IIII RJJETIII BIIIIIAII SURESH 'JITIII' IIIIISI JIIIA .91 DIாIIIII IIIIII | IIllIllllI MIMIIIIIV titl | sl INII IIISU TIUIIIII U SIIANTI MI MIIIII ٥٧٧٧٢ ٥ ٧٥٧ نسنس٥ DIVESH | AZar APSUR JuLY 2026 6   H9 @ maguamoffirial | supemoodflms MegudamDhcial | SuperBoodFims _ StparCoud; FILI garh . HEASER ٢٥٢ ٨٣ r:ಳIm1` IISIIL MAGUDAM Atit tIPLII [lHttIlll TISIAI BI PIIIISII IIIIII IIII RJJETIII BIIIIIAII SURESH 'JITIII' IIIIISI JIIIA .91 DIாIIIII IIIIII | IIllIllllI MIMIIIIIV titl | sl INII IIISU TIUIIIII U SIIANTI MI MIIIII ٥٧٧٧٢ ٥ ٧٥٧ نسنس٥ DIVESH | AZar APSUR JuLY 2026 6   H9 @ maguamoffirial | supemoodflms MegudamDhcial | SuperBoodFims _ - ShareChat
*FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது* தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை, FIFA தொடர்களின் பரவலான அளவுக்கும் ரசிகர்களின் ஆர்வத்திற்கும் ஏற்றவாறு, ஆழமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதோடு, தனது விளையாட்டு உள்ளடக்கப் பட்டியலை வலுப்படுத்தும் ZEE5-இன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. பார்வை அனுபவத்திற்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில், இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியா, FIFA World Cup 2026-க்கான ZEE5-இன் நிபுணர் குழுவில் இணைகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாக மதிக்கப்படும் பூட்டியா, தனது சிறப்பான விளையாட்டு வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் இந்திய கால்பந்திற்கான பங்களிப்புகள் மூலம் நாட்டில் இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விளையாட்டைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், மிகுந்த அனுபவமும், தொடரைப் பற்றி ஆழமான பார்வைகளைப் பெற விரும்பும் ரசிகர்களுக்கு அவரை மதிப்புமிக்க குரலாக மாற்றுகின்றன. நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக இணைவது குறித்து பாய்சுங் பூட்டியா கூறியதாவது: "இந்தியாவில் பல தலைமுறை கால்பந்து ரசிகர்களுக்கு FIFA World Cup என்பது உத்வேகம், உயர்வான கனவுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் ஆதாரமாக இருந்து வருகிறது. இது விளையாட்டைத் தாண்டி மக்களை ஒரே ஆர்வத்தின் மூலம் ஒன்றிணைக்கும் ஒரு தொடர். நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக ZEE5 மற்றும் Unite8 Sports உடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகக் கோப்பையை மிகவும் சிறப்பாக்கும் கதைகள், போட்டி உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத தருணங்களுடன் ரசிகர்களை மேலும் நெருக்கமாக இணைக்க பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விளையாட்டிற்கும் அதன் ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்." FIFA World Cup 2026 போட்டிகளை ஜூன் 11 முதல் ZEE5-ல் மட்டும் நேரலையில் காணத் தவறாதீர்கள்! ZEE5 மற்றும் Unite8-ல் FIFA World Cup 2026 பற்றி FIFA World Cup 2026™️, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உலகின் மிகப் புகழ்பெற்ற கால்பந்து தொடர்களை கொண்டு வருவதற்காக, 2034 வரை நீளும் Zee Entertainment மற்றும் FIFA இடையிலான முக்கியமான நீண்டகால கூட்டாண்மையின் தொடக்கமாக அமைகிறது. தனது இரண்டு தளங்களான ZEE5 மற்றும் Unite8-ஐ பயன்படுத்தி, Zee Entertainment ஒப்பற்ற பார்வை அனுபவத்தை வழங்கவுள்ளது. FIFA World Cup 2026™️ போட்டிகளின் முழுமையான ஒளிபரப்பை ஆங்கிலம், இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வழங்குவதன் மூலம், ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் போட்டியின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க முடியும். இந்த கூட்டாண்மை, FIFA World Cup 2030™️, FIFA Women’s World Cup 2027™️ உள்ளிட்ட பல முக்கிய FIFA தொடர்களையும், பிற முன்னணி சர்வதேச போட்டிகளையும் உள்ளடக்கிய விரிவான உரிமைப் பட்டியலை கொண்டுள்ளது. உயர்தர ஸ்ட்ரீமிங், வளமான பிராந்திய மொழி சேவைகள் மற்றும் ரசிகர்களை மையமாகக் கொண்ட ஆழமான அனுபவங்கள் மூலம், ZEE5 மற்றும் Unite8 உலக கால்பந்தை கோடிக்கணக்கான இந்திய பார்வையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருவதையும், நாட்டில் கால்பந்து ரசிகர் வட்டாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. #👩எனக்கு பிடித்த நடிகை #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
👩எனக்கு பிடித்த நடிகை - BHAOHUNG N BUFFIZA ( ७५ FIFA DLSD BHAOHUNG N BUFFIZA ( ७५ FIFA DLSD - ShareChat
*‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்* *அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’* *“அந்த வார்த்தையை விஜய் பின்பற்றுகிறாரோ இல்லையோ நான் பின்பற்றுகிறேன்” ; ‘ஆட்டி’ பட தயாரிப்பாளரும் நடிகருமான இசக்கி கார்வண்ணன்* *“நான் கமல் ரசிகன்.. ரஜினி நடித்த ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்திருக்கிறேன்” ; ‘ஆட்டி’ பட தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் ஓபன் டாக்* *“மெசேஜ் சொல்லும் எந்த படமும் ஓடுவதில்லை” ; இசக்கி கார்வண்ணன் வெளிப்படை பேச்சு* *“சீமானின் முகத்துக்கு நேராகவே அவரது தவறை சுட்டிக்காட்டிவிட்டு வெளியேறினேன்” ; அரசியல் பயணம் குறித்து இசக்கி கார்வண்ணன் பேச்சு* சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். “எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்” என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. பழந்தமிழர் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும், அதைக் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ இப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. ஜூன் 12-ஆம் தேதி ‘ஆட்டி’ படம் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்தும் தனது சினிமா, அரசியல் மற்றும் வியாபார பயணங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் இசக்கி கார்வண்ணன். “கிராமத்தில் இருந்து இவனை வெளியே அனுப்பி விடுங்கள் என்று ஊரே பஞ்சாயத்து கூட்டி ஒருவனை அனுப்பி வைக்கும் ஒரு சினிமா கதை போலத்தான் நான் மும்பைக்கு பயணமானேன். மும்பை சென்ற பிறகுதான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகமானது. கதை எழுதவும் தொடங்கினேன். ஆனால் தொடர்ந்து கதைகளாக எழுதுவதற்குப் பதிலாக எழுதிய கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் என்னை உந்தித்தள்ளியது. அப்படி சினிமாவிற்கு கிளம்பி வருவதற்குள் தொழிலதிபர் என்கிற அவதாரம் எடுக்க வேண்டிய சூழல் உருவானது. நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தை கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திறம்பட நடத்தி வருகிறேன். இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்த நான், தொழிலதிபராக முதலில் படத் தயாரிப்பில் இறங்கி சினிமாவைக் கற்றுக்கொள்ள முடிவு செய்து ‘முதல் கனவே’ என்கிற படத்தைத் தயாரித்தேன். இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒரு நல்ல இயக்குநர் வேண்டும் என்று இயக்குநர் சங்கத்திற்கே சென்று வேண்டுகோள் வைத்தேன். இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே இப்படி ஒரு இயக்குநர் தேடுதலை நடத்தியவன் நானாகத்தான் இருக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஹனி ரோஸை அந்தப் படத்தில்தான் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தினேன். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதற்கடுத்து ‘அதே நேரம் அதே இடம்’ என்கிற படத்தை ஜெய்யை கதாநாயகனாக வைத்து தயாரித்தேன். அப்படியே டைரக்ஷன் கற்றுக் கொண்டதால் அதன் பிறகு ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’, ‘தமிழ்க் குடிமகன்’, ‘பரமசிவன் பாத்திமா’ ஆகிய படங்களை நானே தயாரித்து இயக்குநராகவும் பொறுப்பேற்றேன். இதோ இப்போது ‘ஆட்டி’ திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறேன். அடுத்து இன்னொரு படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். இத்தனை வருட சினிமா பயணத்தில் சினிமா வேறு, பொது வாழ்க்கை வேறு என்பதை இப்போதுதான் பிரித்துப் பார்க்க பழகி இருக்கிறேன். காரணம், இதற்கு முன்பு நான் எடுத்த நான்கு படங்களும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது மெசேஜ் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்டது. இங்கே சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குதான். கருப்பு-வெள்ளை காலத்திலிருந்து மெசேஜ் சொல்லும் படங்கள் ஒருபோதும் ஓடியது இல்லை. இதைக் கற்றுக்கொள்வதற்கு எனக்கு நான்கு படங்களும் 10 கோடி செலவும் தேவைப்பட்டது. இன்று சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தரமாக எடுக்கப்பட்டாலும், யார் ஹீரோ என்றுதான் முதலில் ரசிகர்கள் பார்க்கிறார்கள். என்னுடைய படங்களில் ஜெய், விமல், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தாலும் கூட அவர்கள் மிகப்பெரிய ஹீரோக்கள் அல்ல. சமுத்திரக்கனியை வைத்து மெசேஜ் சொல்லும் படம் எடுத்தேன்.. வரவேற்பைப் பெறவில்லை. இன்றைக்கு திரையரங்குகள் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. அதற்கு காரணம், சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு செல்லலாம். ஆனால் அரசியலில் இருப்பவர்கள் சினிமாவிற்கு வரக்கூடாது. குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து வரும்போது திரையரங்குகளில் அதிகார துஷ்பிரயோகம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது. என்னுடைய ‘தமிழ்க்குடிமகன்’ பட ரிலீஸ் சமயத்தில் வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில்கூட எனக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. காரணம், அப்போது ஹிந்தி படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. கிட்டத்தட்ட 75 சதவீதத்திற்கும் அதிகமான திரையரங்குகளை அந்தப் படத்திற்கு ஒதுக்கினார்கள். அதில் பின்னணியில் ஒரு அரசியல்வாதி நடத்தும் சினிமா நிறுவனம் இருந்தது. யாரையும் கட்டாயப்படுத்தி படம் பார்க்க வைக்க முடியாது. என்னையே எடுத்துக் கொண்டால் நான் அடிப்படையில் கமல் படங்களை விரும்பி பார்ப்பவன். ஆனால் ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன்.. அதற்கு பிறகு அவரது எந்த படத்தையும் நான் பார்த்ததில்லை ஆனால் இன்று படம் பார்க்க வருபவர்களுக்கு வேறு வாய்ப்பே தரவில்லை என்றால், இருப்பதைத்தானே அவர்கள் பார்த்தாக வேண்டும் ? இதனாலேயே பெரும்பாலானவர்கள் திரையரங்குகளுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்கள். ஒரு காலத்தில் தியேட்டர் அதிபர்களின் கையில் சினிமா இருந்தது. நல்ல படங்களை மட்டுமே தேர்வு செய்து திரையிட்டார்கள். இப்போது அது அரசியல்வாதிகள் கையில் போய்விட்டது. எத்தனையோ பேர் ஒரு படத்துடனே மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தாக்குப்பிடித்து தொடர்ந்து படங்களை எடுக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். பிரபலமானவர்களை வைத்து படம் எடுக்கும்போது சில சங்கடங்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. ‘தமிழ்க் குடிமகன்’ படத்தைத் தயாரிக்கும் போது நடிப்பதற்காக வந்த இயக்குநர் சேரன், அந்தப் படத்தின் கதையின் போக்கையே மாற்றிவிட்டதில் எனக்கு ரொம்பவே வருத்தம். அவரை நடிகராகத் தான் அழைத்தோம்; ஆனால் அவரோ இயக்குநர் மனநிலையுடன் வந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அவரது செயல்பாடுகள் இல்லை என்பதால் அந்தப்படத்திற்கு ஒரு இயக்குநராகவும் அவர் நடந்துகொள்ளவில்லை. நடிகராகவும் நடந்துகொள்ளவில்லை. ‘ஆட்டி’ திரைப்படம் போதிய திரையரங்குகள் கிடைக்காமையால் இரண்டு முறை அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஒரு முறை எதிர்பாராமல் ‘காந்தாரா 2’ மற்றும் ‘பைசன்’ படங்கள் வெளியான சமயத்தில் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தோம். இப்போது ‘கருப்பு’ மற்றும் ‘பிளாஸ்ட்’ ஆகிய படங்கள் அதிக அளவு திரையரங்குகளில் ஓடுவதால் ‘ஆட்டி’ படத்தை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பட துவக்கத்தின் போது அனைவரிடமும் காணப்படும் இணக்கம், ஒரு படம் முடிந்து ரிலீஸ் சமயத்தின் போது இருப்பதில்லை. கடைசியில் தயாரிப்பாளர் மட்டுமே தனித்து விடப்படுகிறார். அந்த பொருளாதார வலியை அவர் மட்டுமே தாங்க வேண்டி இருக்கிறது. இப்படி பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கின்றன. இன்னொரு பக்கம் நடிகர்கள் சம்பளம் ஒரு படத்திலேயே இரட்டிப்பாக ஏறிவிடுகிறது. வரும்போது சினிமாவில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு சினிமா மீதான காதலோடு வருகிறவர்கள், வெற்றியைப் பார்த்ததும் அடுத்த படத்திலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு மாறிவிடுவதுதான் இதற்கு காரணம். ஹீரோக்கள் சம்பளம் கூட்டியதால் குணச்சித்திர நடிகர்களும் பல மடங்கு சம்பளத்தை ஏற்றி விட்டார்கள். விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் போல படங்களை தயாரிக்கும் நடிகர்களுக்கு இந்த வலி நன்றாகவே தெரியும். இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் தமிழ் தேசிய படங்கள் எதுவுமே வரவில்லை. தமிழ் தேசிய ஆர்வலர்கள் வந்திருந்தாலும் கூட அவர்களும் கமர்ஷியல் படங்களில்தான் கவனம் செலுத்துகிறார்கள். காரணம், இது போன்ற படங்களைப் பார்ப்பதற்கு இங்கே ரசிகர்கள் விரும்புவதில்லை. இயக்குநர் வெற்றிமாறன் கூட தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்தான். ஆனாலும் கூட அவரே அப்படிப்பட்ட படங்களை எடுக்கவில்லை. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி மிகப்பெரிய பணக்காரர். அவர் சாதாரண பட்ஜெட் படங்களில் நடித்தால் பெரிய அளவு வரவேற்பு பெறும். ஆனால் அவரும் ரஜினி, விஜய் ரேஞ்சுக்கு நடிக்க வேண்டும் என்று தேர்வு செய்து 50 கோடி வரை செலவு செய்து படம் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் அரசியலிலும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் நாம் தமிழர் கட்சியில் சீமானுடன் இணைந்து பணியாற்றினேன். சீமானைப் பொறுத்தவரை அசாத்தியமான திறமை கொண்டவர். ஆனால் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவர். அதனால்தான் அவரால் வெல்ல முடியவில்லை. “தனி மனிதனாக கட்சியை சுமக்காமல், அனைவரும் சேர்ந்து சுமக்கலாம் என்று கூறினேன் சேர்ந்து நின்று ஜெயித்தால் தலைமைப் பதவியே உங்களுக்குத்தான்” என்றோம். ஆனால் அவரோ “தனியாகத்தான் நிற்பேன்” என்றார். ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதை அவரிடமே தைரியமாக சொல்லிவிட்டு வெளியே வந்த முதல் ஆள் நான்தான். இத்தனைக்கும் சீமானுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல விஷயங்களில் ரொம்பவே ஆதரவாக இருந்தவன் நான்.. காரணம், சீமான் தோற்றுவிட்டால் அது தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று நினைத்தேன். அது போலத்தான் இப்போது நடந்திருக்கிறது. சினிமாவுக்காக வந்தவன் நான். 2009-க்கு பிறகு சூழல் என்னை அரசியலிலும் இழுத்துவிட்டது. அந்த வலிதான் இப்போது எனக்கு அதிகமாக இருக்கிறது. இதனால். குடும்பத்தை, பொருளாதாரத்தை இழந்திருக்கிறேன். அந்த கோபம் இப்போதும் என்னிடம் இருக்கிறது. விஜய் அரசியலில் எந்த அனுபவமும் இல்லாதவர். அவர் கட்சி துவங்கி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. ஆனாலும் மற்ற எல்லோருமாக சேர்ந்து அவரை எதிர்த்தது தான், ஒரு மாற்றத்தை விரும்பிய மக்கள் மனதில் அவரைப் பற்றிய ஒரு இரக்கத்தை உண்டாக்கிவிட்டது. தப்பு செய்பவர்களுக்கு, பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு பெண்களே தெய்வங்களாக மாறி தண்டனை கொடுக்கும் கருத்தை மையமாக வைத்து தான் இந்த ‘ஆட்டி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதையெல்லாம் எந்தப் பெண்கள் செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சொல்லப்போனால் தற்போது உருவாக்கி இருக்கிறார்களே ‘சிங்கப்பெண் படை’, இந்த அம்சத்தைத்தான் என்னுடைய படத்தில் சொல்லி இருக்கிறேன். இதனுடைய நீட்சியாக இரண்டாம் பாகமும் இருக்கிறது. முற்காலத்தில் நம் பெண்கள், இளம் கன்னிகள் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்கிற தாக்கத்தை இந்தப்படம் பெண்களிடம் ஏற்படுத்தும். முந்தைய ‘தமிழ் குடிமகன்’, ‘பரமசிவன் பாத்திமா’ படங்கள் படம் பார்த்தவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ‘ஆட்டி’ திரைப்படமும் அதுபோல ஒன்றுதான். இதுவரைக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை. எனக்கென ஒரு வெற்றி வரும்போதுதான் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என முடிவு செய்து வைத்திருக்கிறேன். இப்போது கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் கரை சேர வேண்டும். சினிமாவில் பயணிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என்றாலும், அரசியலையும் என்னால் விட முடியாது. அதே சமயம் இப்போதைய சூழலில் எந்தக் கட்சியிலும் போய் சேரும் எண்ணமும் இல்லை. எந்தக் கட்சியைப் பார்த்தாலும் அது இன்னொரு திராவிடக் கட்சி போலத்தான் காட்சியளிக்கிறது. தற்போது சுகா இயக்கத்தில் ‘தேனப்பன் சைக்கிள் மார்ட்’ என்கிற படத்தைத் தயாரித்திருக்கிறேன். சுகா ரொம்பவே தன்மையான மனிதர் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இசைஞானியின் இசையமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் ஒரு காதல் கதையை மையப்படுத்தி இன்னொரு படத்தை உருவாக்க இருக்கிறேன்.. தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என இதோ ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து வருகிறேன். குறிப்பாக ஒரு இயக்குநராக எனக்கான இடத்தை அடைய வேண்டிய போராட்டத்தில் இருக்கிறேன். உறவினர்கள், நண்பர்கள் கூட “எதற்கு இந்த போராட்டம்?” என்று கேட்பார்கள். ஆனால் விஜய் ஒரு படத்தில், “ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்பார்.. அதை நிஜத்தில் அவர் செய்கிறாரோ இல்லையோ, நான் பின்பற்றி வருகிறேன்” என்று கூறினார். #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #👩எனக்கு பிடித்த நடிகை
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - ShareChat
*‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்* *அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’* *“அந்த வார்த்தையை விஜய் பின்பற்றுகிறாரோ இல்லையோ நான் பின்பற்றுகிறேன்” ; ‘ஆட்டி’ பட தயாரிப்பாளரும் நடிகருமான இசக்கி கார்வண்ணன்* *“நான் கமல் ரசிகன்.. ரஜினி நடித்த ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்திருக்கிறேன்” ; ‘ஆட்டி’ பட தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் ஓபன் டாக்* *“மெசேஜ் சொல்லும் எந்த படமும் ஓடுவதில்லை” ; இசக்கி கார்வண்ணன் வெளிப்படை பேச்சு* *“சீமானின் முகத்துக்கு நேராகவே அவரது தவறை சுட்டிக்காட்டிவிட்டு வெளியேறினேன்” ; அரசியல் பயணம் குறித்து இசக்கி கார்வண்ணன் பேச்சு* சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். “எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்” என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. பழந்தமிழர் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும், அதைக் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ இப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. ஜூன் 12-ஆம் தேதி ‘ஆட்டி’ படம் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்தும் தனது சினிமா, அரசியல் மற்றும் வியாபார பயணங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் இசக்கி கார்வண்ணன். “கிராமத்தில் இருந்து இவனை வெளியே அனுப்பி விடுங்கள் என்று ஊரே பஞ்சாயத்து கூட்டி ஒருவனை அனுப்பி வைக்கும் ஒரு சினிமா கதை போலத்தான் நான் மும்பைக்கு பயணமானேன். மும்பை சென்ற பிறகுதான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகமானது. கதை எழுதவும் தொடங்கினேன். ஆனால் தொடர்ந்து கதைகளாக எழுதுவதற்குப் பதிலாக எழுதிய கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் என்னை உந்தித்தள்ளியது. அப்படி சினிமாவிற்கு கிளம்பி வருவதற்குள் தொழிலதிபர் என்கிற அவதாரம் எடுக்க வேண்டிய சூழல் உருவானது. நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தை கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திறம்பட நடத்தி வருகிறேன். இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்த நான், தொழிலதிபராக முதலில் படத் தயாரிப்பில் இறங்கி சினிமாவைக் கற்றுக்கொள்ள முடிவு செய்து ‘முதல் கனவே’ என்கிற படத்தைத் தயாரித்தேன். இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒரு நல்ல இயக்குநர் வேண்டும் என்று இயக்குநர் சங்கத்திற்கே சென்று வேண்டுகோள் வைத்தேன். இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே இப்படி ஒரு இயக்குநர் தேடுதலை நடத்தியவன் நானாகத்தான் இருக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஹனி ரோஸை அந்தப் படத்தில்தான் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தினேன். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதற்கடுத்து ‘அதே நேரம் அதே இடம்’ என்கிற படத்தை ஜெய்யை கதாநாயகனாக வைத்து தயாரித்தேன். அப்படியே டைரக்ஷன் கற்றுக் கொண்டதால் அதன் பிறகு ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’, ‘தமிழ்க் குடிமகன்’, ‘பரமசிவன் பாத்திமா’ ஆகிய படங்களை நானே தயாரித்து இயக்குநராகவும் பொறுப்பேற்றேன். இதோ இப்போது ‘ஆட்டி’ திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறேன். அடுத்து இன்னொரு படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். இத்தனை வருட சினிமா பயணத்தில் சினிமா வேறு, பொது வாழ்க்கை வேறு என்பதை இப்போதுதான் பிரித்துப் பார்க்க பழகி இருக்கிறேன். காரணம், இதற்கு முன்பு நான் எடுத்த நான்கு படங்களும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது மெசேஜ் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்டது. இங்கே சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குதான். கருப்பு-வெள்ளை காலத்திலிருந்து மெசேஜ் சொல்லும் படங்கள் ஒருபோதும் ஓடியது இல்லை. இதைக் கற்றுக்கொள்வதற்கு எனக்கு நான்கு படங்களும் 10 கோடி செலவும் தேவைப்பட்டது. இன்று சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தரமாக எடுக்கப்பட்டாலும், யார் ஹீரோ என்றுதான் முதலில் ரசிகர்கள் பார்க்கிறார்கள். என்னுடைய படங்களில் ஜெய், விமல், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தாலும் கூட அவர்கள் மிகப்பெரிய ஹீரோக்கள் அல்ல. சமுத்திரக்கனியை வைத்து மெசேஜ் சொல்லும் படம் எடுத்தேன்.. வரவேற்பைப் பெறவில்லை. இன்றைக்கு திரையரங்குகள் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. அதற்கு காரணம், சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு செல்லலாம். ஆனால் அரசியலில் இருப்பவர்கள் சினிமாவிற்கு வரக்கூடாது. குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து வரும்போது திரையரங்குகளில் அதிகார துஷ்பிரயோகம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது. என்னுடைய ‘தமிழ்க்குடிமகன்’ பட ரிலீஸ் சமயத்தில் வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில்கூட எனக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. காரணம், அப்போது ஹிந்தி படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. கிட்டத்தட்ட 75 சதவீதத்திற்கும் அதிகமான திரையரங்குகளை அந்தப் படத்திற்கு ஒதுக்கினார்கள். அதில் பின்னணியில் ஒரு அரசியல்வாதி நடத்தும் சினிமா நிறுவனம் இருந்தது. யாரையும் கட்டாயப்படுத்தி படம் பார்க்க வைக்க முடியாது. என்னையே எடுத்துக் கொண்டால் நான் அடிப்படையில் கமல் படங்களை விரும்பி பார்ப்பவன். ஆனால் ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன்.. அதற்கு பிறகு அவரது எந்த படத்தையும் நான் பார்த்ததில்லை ஆனால் இன்று படம் பார்க்க வருபவர்களுக்கு வேறு வாய்ப்பே தரவில்லை என்றால், இருப்பதைத்தானே அவர்கள் பார்த்தாக வேண்டும் ? இதனாலேயே பெரும்பாலானவர்கள் திரையரங்குகளுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்கள். ஒரு காலத்தில் தியேட்டர் அதிபர்களின் கையில் சினிமா இருந்தது. நல்ல படங்களை மட்டுமே தேர்வு செய்து திரையிட்டார்கள். இப்போது அது அரசியல்வாதிகள் கையில் போய்விட்டது. எத்தனையோ பேர் ஒரு படத்துடனே மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தாக்குப்பிடித்து தொடர்ந்து படங்களை எடுக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். பிரபலமானவர்களை வைத்து படம் எடுக்கும்போது சில சங்கடங்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. ‘தமிழ்க் குடிமகன்’ படத்தைத் தயாரிக்கும் போது நடிப்பதற்காக வந்த இயக்குநர் சேரன், அந்தப் படத்தின் கதையின் போக்கையே மாற்றிவிட்டதில் எனக்கு ரொம்பவே வருத்தம். அவரை நடிகராகத் தான் அழைத்தோம்; ஆனால் அவரோ இயக்குநர் மனநிலையுடன் வந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அவரது செயல்பாடுகள் இல்லை என்பதால் அந்தப்படத்திற்கு ஒரு இயக்குநராகவும் அவர் நடந்துகொள்ளவில்லை. நடிகராகவும் நடந்துகொள்ளவில்லை. ‘ஆட்டி’ திரைப்படம் போதிய திரையரங்குகள் கிடைக்காமையால் இரண்டு முறை அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஒரு முறை எதிர்பாராமல் ‘காந்தாரா 2’ மற்றும் ‘பைசன்’ படங்கள் வெளியான சமயத்தில் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தோம். இப்போது ‘கருப்பு’ மற்றும் ‘பிளாஸ்ட்’ ஆகிய படங்கள் அதிக அளவு திரையரங்குகளில் ஓடுவதால் ‘ஆட்டி’ படத்தை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பட துவக்கத்தின் போது அனைவரிடமும் காணப்படும் இணக்கம், ஒரு படம் முடிந்து ரிலீஸ் சமயத்தின் போது இருப்பதில்லை. கடைசியில் தயாரிப்பாளர் மட்டுமே தனித்து விடப்படுகிறார். அந்த பொருளாதார வலியை அவர் மட்டுமே தாங்க வேண்டி இருக்கிறது. இப்படி பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கின்றன. இன்னொரு பக்கம் நடிகர்கள் சம்பளம் ஒரு படத்திலேயே இரட்டிப்பாக ஏறிவிடுகிறது. வரும்போது சினிமாவில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு சினிமா மீதான காதலோடு வருகிறவர்கள், வெற்றியைப் பார்த்ததும் அடுத்த படத்திலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு மாறிவிடுவதுதான் இதற்கு காரணம். ஹீரோக்கள் சம்பளம் கூட்டியதால் குணச்சித்திர நடிகர்களும் பல மடங்கு சம்பளத்தை ஏற்றி விட்டார்கள். விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் போல படங்களை தயாரிக்கும் நடிகர்களுக்கு இந்த வலி நன்றாகவே தெரியும். இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் தமிழ் தேசிய படங்கள் எதுவுமே வரவில்லை. தமிழ் தேசிய ஆர்வலர்கள் வந்திருந்தாலும் கூட அவர்களும் கமர்ஷியல் படங்களில்தான் கவனம் செலுத்துகிறார்கள். காரணம், இது போன்ற படங்களைப் பார்ப்பதற்கு இங்கே ரசிகர்கள் விரும்புவதில்லை. இயக்குநர் வெற்றிமாறன் கூட தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்தான். ஆனாலும் கூட அவரே அப்படிப்பட்ட படங்களை எடுக்கவில்லை. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி மிகப்பெரிய பணக்காரர். அவர் சாதாரண பட்ஜெட் படங்களில் நடித்தால் பெரிய அளவு வரவேற்பு பெறும். ஆனால் அவரும் ரஜினி, விஜய் ரேஞ்சுக்கு நடிக்க வேண்டும் என்று தேர்வு செய்து 50 கோடி வரை செலவு செய்து படம் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் அரசியலிலும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் நாம் தமிழர் கட்சியில் சீமானுடன் இணைந்து பணியாற்றினேன். சீமானைப் பொறுத்தவரை அசாத்தியமான திறமை கொண்டவர். ஆனால் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவர். அதனால்தான் அவரால் வெல்ல முடியவில்லை. “தனி மனிதனாக கட்சியை சுமக்காமல், அனைவரும் சேர்ந்து சுமக்கலாம் என்று கூறினேன் சேர்ந்து நின்று ஜெயித்தால் தலைமைப் பதவியே உங்களுக்குத்தான்” என்றோம். ஆனால் அவரோ “தனியாகத்தான் நிற்பேன்” என்றார். ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதை அவரிடமே தைரியமாக சொல்லிவிட்டு வெளியே வந்த முதல் ஆள் நான்தான். இத்தனைக்கும் சீமானுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல விஷயங்களில் ரொம்பவே ஆதரவாக இருந்தவன் நான்.. காரணம், சீமான் தோற்றுவிட்டால் அது தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று நினைத்தேன். அது போலத்தான் இப்போது நடந்திருக்கிறது. சினிமாவுக்காக வந்தவன் நான். 2009-க்கு பிறகு சூழல் என்னை அரசியலிலும் இழுத்துவிட்டது. அந்த வலிதான் இப்போது எனக்கு அதிகமாக இருக்கிறது. இதனால். குடும்பத்தை, பொருளாதாரத்தை இழந்திருக்கிறேன். அந்த கோபம் இப்போதும் என்னிடம் இருக்கிறது. விஜய் அரசியலில் எந்த அனுபவமும் இல்லாதவர். அவர் கட்சி துவங்கி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. ஆனாலும் மற்ற எல்லோருமாக சேர்ந்து அவரை எதிர்த்தது தான், ஒரு மாற்றத்தை விரும்பிய மக்கள் மனதில் அவரைப் பற்றிய ஒரு இரக்கத்தை உண்டாக்கிவிட்டது. தப்பு செய்பவர்களுக்கு, பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு பெண்களே தெய்வங்களாக மாறி தண்டனை கொடுக்கும் கருத்தை மையமாக வைத்து தான் இந்த ‘ஆட்டி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதையெல்லாம் எந்தப் பெண்கள் செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சொல்லப்போனால் தற்போது உருவாக்கி இருக்கிறார்களே ‘சிங்கப்பெண் படை’, இந்த அம்சத்தைத்தான் என்னுடைய படத்தில் சொல்லி இருக்கிறேன். இதனுடைய நீட்சியாக இரண்டாம் பாகமும் இருக்கிறது. முற்காலத்தில் நம் பெண்கள், இளம் கன்னிகள் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்கிற தாக்கத்தை இந்தப்படம் பெண்களிடம் ஏற்படுத்தும். முந்தைய ‘தமிழ் குடிமகன்’, ‘பரமசிவன் பாத்திமா’ படங்கள் படம் பார்த்தவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ‘ஆட்டி’ திரைப்படமும் அதுபோல ஒன்றுதான். இதுவரைக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை. எனக்கென ஒரு வெற்றி வரும்போதுதான் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என முடிவு செய்து வைத்திருக்கிறேன். இப்போது கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் கரை சேர வேண்டும். சினிமாவில் பயணிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என்றாலும், அரசியலையும் என்னால் விட முடியாது. அதே சமயம் இப்போதைய சூழலில் எந்தக் கட்சியிலும் போய் சேரும் எண்ணமும் இல்லை. எந்தக் கட்சியைப் பார்த்தாலும் அது இன்னொரு திராவிடக் கட்சி போலத்தான் காட்சியளிக்கிறது. தற்போது சுகா இயக்கத்தில் ‘தேனப்பன் சைக்கிள் மார்ட்’ என்கிற படத்தைத் தயாரித்திருக்கிறேன். சுகா ரொம்பவே தன்மையான மனிதர் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இசைஞானியின் இசையமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் ஒரு காதல் கதையை மையப்படுத்தி இன்னொரு படத்தை உருவாக்க இருக்கிறேன்.. தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என இதோ ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து வருகிறேன். குறிப்பாக ஒரு இயக்குநராக எனக்கான இடத்தை அடைய வேண்டிய போராட்டத்தில் இருக்கிறேன். உறவினர்கள், நண்பர்கள் கூட “எதற்கு இந்த போராட்டம்?” என்று கேட்பார்கள். ஆனால் விஜய் ஒரு படத்தில், “ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்பார்.. அதை நிஜத்தில் அவர் செய்கிறாரோ இல்லையோ, நான் பின்பற்றி வருகிறேன்” என்று கூறினார். #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #👩எனக்கு பிடித்த நடிகை
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - ShareChat
*‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்* *அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’* *“அந்த வார்த்தையை விஜய் பின்பற்றுகிறாரோ இல்லையோ நான் பின்பற்றுகிறேன்” ; ‘ஆட்டி’ பட தயாரிப்பாளரும் நடிகருமான இசக்கி கார்வண்ணன்* *“நான் கமல் ரசிகன்.. ரஜினி நடித்த ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்திருக்கிறேன்” ; ‘ஆட்டி’ பட தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் ஓபன் டாக்* *“மெசேஜ் சொல்லும் எந்த படமும் ஓடுவதில்லை” ; இசக்கி கார்வண்ணன் வெளிப்படை பேச்சு* *“சீமானின் முகத்துக்கு நேராகவே அவரது தவறை சுட்டிக்காட்டிவிட்டு வெளியேறினேன்” ; அரசியல் பயணம் குறித்து இசக்கி கார்வண்ணன் பேச்சு* சமீப காலத்தில் கருத்து ரீதியாக ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒருசேர வரவேற்பைப் பெற்ற ‘பெட்டிக்கடை’, தமிழ்க் குடிமகன், ‘பரமசிவன் பாத்திமா’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவர் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இவர் தற்போது லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘ஆட்டி’. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணனே கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘அயலி’ புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சௌந்தர், பிரவீன் பழனிச்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். “எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள்” என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. பழந்தமிழர் வரலாற்றில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும், அதில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும் தாண்டி வந்ததைப் பற்றியும், அவர்கள் எதிர்நோக்கிய பாலியல் சீண்டல்களையும், அதைக் கையாண்ட விதம் பற்றியும் பேசுகிறது. சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ இப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. ஜூன் 12-ஆம் தேதி ‘ஆட்டி’ படம் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்தும் தனது சினிமா, அரசியல் மற்றும் வியாபார பயணங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார் இசக்கி கார்வண்ணன். “கிராமத்தில் இருந்து இவனை வெளியே அனுப்பி விடுங்கள் என்று ஊரே பஞ்சாயத்து கூட்டி ஒருவனை அனுப்பி வைக்கும் ஒரு சினிமா கதை போலத்தான் நான் மும்பைக்கு பயணமானேன். மும்பை சென்ற பிறகுதான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகமானது. கதை எழுதவும் தொடங்கினேன். ஆனால் தொடர்ந்து கதைகளாக எழுதுவதற்குப் பதிலாக எழுதிய கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் என்னை உந்தித்தள்ளியது. அப்படி சினிமாவிற்கு கிளம்பி வருவதற்குள் தொழிலதிபர் என்கிற அவதாரம் எடுக்க வேண்டிய சூழல் உருவானது. நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கொடுக்கும் ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தை கடந்த 25 வருடங்களுக்கு மேலாக திறம்பட நடத்தி வருகிறேன். இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்த நான், தொழிலதிபராக முதலில் படத் தயாரிப்பில் இறங்கி சினிமாவைக் கற்றுக்கொள்ள முடிவு செய்து ‘முதல் கனவே’ என்கிற படத்தைத் தயாரித்தேன். இந்தப் படத்தை இயக்குவதற்கு ஒரு நல்ல இயக்குநர் வேண்டும் என்று இயக்குநர் சங்கத்திற்கே சென்று வேண்டுகோள் வைத்தேன். இந்திய சினிமாவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலேயே இப்படி ஒரு இயக்குநர் தேடுதலை நடத்தியவன் நானாகத்தான் இருக்கும். இப்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஹனி ரோஸை அந்தப் படத்தில்தான் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தினேன். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதற்கடுத்து ‘அதே நேரம் அதே இடம்’ என்கிற படத்தை ஜெய்யை கதாநாயகனாக வைத்து தயாரித்தேன். அப்படியே டைரக்ஷன் கற்றுக் கொண்டதால் அதன் பிறகு ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’, ‘தமிழ்க் குடிமகன்’, ‘பரமசிவன் பாத்திமா’ ஆகிய படங்களை நானே தயாரித்து இயக்குநராகவும் பொறுப்பேற்றேன். இதோ இப்போது ‘ஆட்டி’ திரைப்படத்தை தயாரித்துள்ளேன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறேன். அடுத்து இன்னொரு படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். இத்தனை வருட சினிமா பயணத்தில் சினிமா வேறு, பொது வாழ்க்கை வேறு என்பதை இப்போதுதான் பிரித்துப் பார்க்க பழகி இருக்கிறேன். காரணம், இதற்கு முன்பு நான் எடுத்த நான்கு படங்களும் அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது மெசேஜ் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்டது. இங்கே சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குதான். கருப்பு-வெள்ளை காலத்திலிருந்து மெசேஜ் சொல்லும் படங்கள் ஒருபோதும் ஓடியது இல்லை. இதைக் கற்றுக்கொள்வதற்கு எனக்கு நான்கு படங்களும் 10 கோடி செலவும் தேவைப்பட்டது. இன்று சின்ன பட்ஜெட்டில் ஒரு படம் தரமாக எடுக்கப்பட்டாலும், யார் ஹீரோ என்றுதான் முதலில் ரசிகர்கள் பார்க்கிறார்கள். என்னுடைய படங்களில் ஜெய், விமல், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தாலும் கூட அவர்கள் மிகப்பெரிய ஹீரோக்கள் அல்ல. சமுத்திரக்கனியை வைத்து மெசேஜ் சொல்லும் படம் எடுத்தேன்.. வரவேற்பைப் பெறவில்லை. இன்றைக்கு திரையரங்குகள் கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. அதற்கு காரணம், சினிமாவிலிருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு செல்லலாம். ஆனால் அரசியலில் இருப்பவர்கள் சினிமாவிற்கு வரக்கூடாது. குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து வரும்போது திரையரங்குகளில் அதிகார துஷ்பிரயோகம் நடக்க ஆரம்பித்துவிடுகிறது. என்னுடைய ‘தமிழ்க்குடிமகன்’ பட ரிலீஸ் சமயத்தில் வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லாத நிலையில்கூட எனக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. காரணம், அப்போது ஹிந்தி படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. கிட்டத்தட்ட 75 சதவீதத்திற்கும் அதிகமான திரையரங்குகளை அந்தப் படத்திற்கு ஒதுக்கினார்கள். அதில் பின்னணியில் ஒரு அரசியல்வாதி நடத்தும் சினிமா நிறுவனம் இருந்தது. யாரையும் கட்டாயப்படுத்தி படம் பார்க்க வைக்க முடியாது. என்னையே எடுத்துக் கொண்டால் நான் அடிப்படையில் கமல் படங்களை விரும்பி பார்ப்பவன். ஆனால் ரஜினிகாந்த் நடித்த தனிக்காட்டு ராஜா என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன்.. அதற்கு பிறகு அவரது எந்த படத்தையும் நான் பார்த்ததில்லை ஆனால் இன்று படம் பார்க்க வருபவர்களுக்கு வேறு வாய்ப்பே தரவில்லை என்றால், இருப்பதைத்தானே அவர்கள் பார்த்தாக வேண்டும் ? இதனாலேயே பெரும்பாலானவர்கள் திரையரங்குகளுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்கள். ஒரு காலத்தில் தியேட்டர் அதிபர்களின் கையில் சினிமா இருந்தது. நல்ல படங்களை மட்டுமே தேர்வு செய்து திரையிட்டார்கள். இப்போது அது அரசியல்வாதிகள் கையில் போய்விட்டது. எத்தனையோ பேர் ஒரு படத்துடனே மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தாக்குப்பிடித்து தொடர்ந்து படங்களை எடுக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். பிரபலமானவர்களை வைத்து படம் எடுக்கும்போது சில சங்கடங்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. ‘தமிழ்க் குடிமகன்’ படத்தைத் தயாரிக்கும் போது நடிப்பதற்காக வந்த இயக்குநர் சேரன், அந்தப் படத்தின் கதையின் போக்கையே மாற்றிவிட்டதில் எனக்கு ரொம்பவே வருத்தம். அவரை நடிகராகத் தான் அழைத்தோம்; ஆனால் அவரோ இயக்குநர் மனநிலையுடன் வந்தார். கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அவரது செயல்பாடுகள் இல்லை என்பதால் அந்தப்படத்திற்கு ஒரு இயக்குநராகவும் அவர் நடந்துகொள்ளவில்லை. நடிகராகவும் நடந்துகொள்ளவில்லை. ‘ஆட்டி’ திரைப்படம் போதிய திரையரங்குகள் கிடைக்காமையால் இரண்டு முறை அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஒரு முறை எதிர்பாராமல் ‘காந்தாரா 2’ மற்றும் ‘பைசன்’ படங்கள் வெளியான சமயத்தில் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தோம். இப்போது ‘கருப்பு’ மற்றும் ‘பிளாஸ்ட்’ ஆகிய படங்கள் அதிக அளவு திரையரங்குகளில் ஓடுவதால் ‘ஆட்டி’ படத்தை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பட துவக்கத்தின் போது அனைவரிடமும் காணப்படும் இணக்கம், ஒரு படம் முடிந்து ரிலீஸ் சமயத்தின் போது இருப்பதில்லை. கடைசியில் தயாரிப்பாளர் மட்டுமே தனித்து விடப்படுகிறார். அந்த பொருளாதார வலியை அவர் மட்டுமே தாங்க வேண்டி இருக்கிறது. இப்படி பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கின்றன. இன்னொரு பக்கம் நடிகர்கள் சம்பளம் ஒரு படத்திலேயே இரட்டிப்பாக ஏறிவிடுகிறது. வரும்போது சினிமாவில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்கிற லட்சியத்தோடு சினிமா மீதான காதலோடு வருகிறவர்கள், வெற்றியைப் பார்த்ததும் அடுத்த படத்திலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு மாறிவிடுவதுதான் இதற்கு காரணம். ஹீரோக்கள் சம்பளம் கூட்டியதால் குணச்சித்திர நடிகர்களும் பல மடங்கு சம்பளத்தை ஏற்றி விட்டார்கள். விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் போல படங்களை தயாரிக்கும் நடிகர்களுக்கு இந்த வலி நன்றாகவே தெரியும். இத்தனை வருடம் தமிழ் சினிமாவில் தமிழ் தேசிய படங்கள் எதுவுமே வரவில்லை. தமிழ் தேசிய ஆர்வலர்கள் வந்திருந்தாலும் கூட அவர்களும் கமர்ஷியல் படங்களில்தான் கவனம் செலுத்துகிறார்கள். காரணம், இது போன்ற படங்களைப் பார்ப்பதற்கு இங்கே ரசிகர்கள் விரும்புவதில்லை. இயக்குநர் வெற்றிமாறன் கூட தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்தான். ஆனாலும் கூட அவரே அப்படிப்பட்ட படங்களை எடுக்கவில்லை. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி மிகப்பெரிய பணக்காரர். அவர் சாதாரண பட்ஜெட் படங்களில் நடித்தால் பெரிய அளவு வரவேற்பு பெறும். ஆனால் அவரும் ரஜினி, விஜய் ரேஞ்சுக்கு நடிக்க வேண்டும் என்று தேர்வு செய்து 50 கோடி வரை செலவு செய்து படம் எடுக்கிறார். ஒரு கட்டத்தில் அரசியலிலும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் நாம் தமிழர் கட்சியில் சீமானுடன் இணைந்து பணியாற்றினேன். சீமானைப் பொறுத்தவரை அசாத்தியமான திறமை கொண்டவர். ஆனால் கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவர். அதனால்தான் அவரால் வெல்ல முடியவில்லை. “தனி மனிதனாக கட்சியை சுமக்காமல், அனைவரும் சேர்ந்து சுமக்கலாம் என்று கூறினேன் சேர்ந்து நின்று ஜெயித்தால் தலைமைப் பதவியே உங்களுக்குத்தான்” என்றோம். ஆனால் அவரோ “தனியாகத்தான் நிற்பேன்” என்றார். ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதை அவரிடமே தைரியமாக சொல்லிவிட்டு வெளியே வந்த முதல் ஆள் நான்தான். இத்தனைக்கும் சீமானுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல விஷயங்களில் ரொம்பவே ஆதரவாக இருந்தவன் நான்.. காரணம், சீமான் தோற்றுவிட்டால் அது தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று நினைத்தேன். அது போலத்தான் இப்போது நடந்திருக்கிறது. சினிமாவுக்காக வந்தவன் நான். 2009-க்கு பிறகு சூழல் என்னை அரசியலிலும் இழுத்துவிட்டது. அந்த வலிதான் இப்போது எனக்கு அதிகமாக இருக்கிறது. இதனால். குடும்பத்தை, பொருளாதாரத்தை இழந்திருக்கிறேன். அந்த கோபம் இப்போதும் என்னிடம் இருக்கிறது. விஜய் அரசியலில் எந்த அனுபவமும் இல்லாதவர். அவர் கட்சி துவங்கி இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. ஆனாலும் மற்ற எல்லோருமாக சேர்ந்து அவரை எதிர்த்தது தான், ஒரு மாற்றத்தை விரும்பிய மக்கள் மனதில் அவரைப் பற்றிய ஒரு இரக்கத்தை உண்டாக்கிவிட்டது. தப்பு செய்பவர்களுக்கு, பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு பெண்களே தெய்வங்களாக மாறி தண்டனை கொடுக்கும் கருத்தை மையமாக வைத்து தான் இந்த ‘ஆட்டி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதையெல்லாம் எந்தப் பெண்கள் செய்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. சொல்லப்போனால் தற்போது உருவாக்கி இருக்கிறார்களே ‘சிங்கப்பெண் படை’, இந்த அம்சத்தைத்தான் என்னுடைய படத்தில் சொல்லி இருக்கிறேன். இதனுடைய நீட்சியாக இரண்டாம் பாகமும் இருக்கிறது. முற்காலத்தில் நம் பெண்கள், இளம் கன்னிகள் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள் என்கிற தாக்கத்தை இந்தப்படம் பெண்களிடம் ஏற்படுத்தும். முந்தைய ‘தமிழ் குடிமகன்’, ‘பரமசிவன் பாத்திமா’ படங்கள் படம் பார்த்தவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ‘ஆட்டி’ திரைப்படமும் அதுபோல ஒன்றுதான். இதுவரைக்கும் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்ததில்லை. எனக்கென ஒரு வெற்றி வரும்போதுதான் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என முடிவு செய்து வைத்திருக்கிறேன். இப்போது கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன். முதலில் கரை சேர வேண்டும். சினிமாவில் பயணிக்க வேண்டும் என்பதுதான் லட்சியம் என்றாலும், அரசியலையும் என்னால் விட முடியாது. அதே சமயம் இப்போதைய சூழலில் எந்தக் கட்சியிலும் போய் சேரும் எண்ணமும் இல்லை. எந்தக் கட்சியைப் பார்த்தாலும் அது இன்னொரு திராவிடக் கட்சி போலத்தான் காட்சியளிக்கிறது. தற்போது சுகா இயக்கத்தில் ‘தேனப்பன் சைக்கிள் மார்ட்’ என்கிற படத்தைத் தயாரித்திருக்கிறேன். சுகா ரொம்பவே தன்மையான மனிதர் இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இசைஞானியின் இசையமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் ஒரு காதல் கதையை மையப்படுத்தி இன்னொரு படத்தை உருவாக்க இருக்கிறேன்.. தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என இதோ ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து வருகிறேன். குறிப்பாக ஒரு இயக்குநராக எனக்கான இடத்தை அடைய வேண்டிய போராட்டத்தில் இருக்கிறேன். உறவினர்கள், நண்பர்கள் கூட “எதற்கு இந்த போராட்டம்?” என்று கேட்பார்கள். ஆனால் விஜய் ஒரு படத்தில், “ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்பார்.. அதை நிஜத்தில் அவர் செய்கிறாரோ இல்லையோ, நான் பின்பற்றி வருகிறேன்” என்று கூறினார். #👩எனக்கு பிடித்த நடிகை #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
👩எனக்கு பிடித்த நடிகை - ShareChat
*சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!* *மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு: டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டம்!* *துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்: மறைந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் நினைவேந்தல் கூட்டத்தில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் புகழஞ்சலி!* சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே. ராஜன் (வயது 85) அவர்கள், 2026 மே 17 அன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், சென்னையில் அவரது திருவுருவப் படத் திறப்பு மற்றும் அஞ்சலிக் கூட்டம் 06-06-2026 அன்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க வளாகத்தில் மிகுந்த உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவரும் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கி, கோலிவுட்டின் மிகத் துணிச்சலான மற்றும் நேர்மையான குரலாக விளங்கிய கே. ராஜன் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு, நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன், சங்கத்தின் நிர்வாகிகள் துணைத் தலைவர் பி. அந்தோணிதாஸ், இணைச் செயலாளர் எஸ். நந்தகோபால், பொருளாளர் யு. தருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள், அன்னாரின் குடும்பத்தினர் கே.ஆர். பிரபு, கே.ஆர். சுரேஷ் ராஜன், ராஜேஸ்வரி அன்பு, சங்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் சினிமா வர்த்தகத்தின் வெளிப்படைத்தன்மைக்காகவும் இறுதிவரை ஓங்கி ஒலித்த கே. ராஜன் அவர்களின் பங்களிப்பை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திரையுலகினர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர். திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேசுகையில், “எந்த ஒரு மேடையிலும், எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கப் பேசும் குணம் கொண்டவர் கே. ராஜன். சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, பல வர்த்தகச் சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். மேலும், சிறு தயாரிப்பாளர்கள் படும் நஷ்டம், நிதி நெருக்கடி மற்றும் விநியோகஸ்தர்களின் நஷ்டம் குறித்து தனது வாழ்நாளின் இறுதிவரை பொது மேடைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்” என புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு பேசுகையில், “தயாரிப்பாளர்களின் நன்மைக்காக அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சரி, உரிமையாளர்களுக்கும் சரி, ராஜன் அவர்கள் எடுத்து வைத்த வாதங்களும் விவாதங்களும் எண்ணிலடங்காதவை. அப்படிப்பட்ட மனிதரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. திருட்டு விசிடிக்காக அவர் நடத்திய போராட்டங்கள், சட்டை இல்லாமல்கூட போராட்டம் நடத்திய துணிச்சல் — அவை யாருக்கும் எளிதில் வராது. பலமுறை அவரிடம் சென்று உரையாடி இருக்கிறேன். என் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். அவர் ஆற்றிய சமுதாயப் பணியும் சமூகப் பணியும் எண்ணிலடங்காதவை. நான் படித்த செஞ்சாரங்க பள்ளியில்கூட அவர் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்தத் திரையுலகிற்கு வந்து மாபெரும் எழுச்சியை உருவாக்கினார். சகோதரர் ஐசரி கணேஷை ‘மாப்பிள்ளை, மாப்பிள்ளை’ என்று அன்பாக அழைப்பார். அவரும் ‘மாமா, மாமா’ என்று அன்பாக அழைப்பார். அப்படிப்பட்ட அன்யோனியமான உறவை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். அவருக்காக ஐசரி கணேஷ் எத்தனை சூழ்நிலைகளில் பக்கபலமாக இருந்து காத்தார் என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவர் வழியை இனிவரும் தலைமுறையினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அன்னாரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி” என்றார். நிகழ்வில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசுகையில், “அண்ணன் கே. ராஜனுக்காக எங்க வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் வரலாம். பல பிரச்சினைகளில் நான் அவருடன் நின்றிருக்கிறேன். எந்த சபையாக இருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவர் முரண்படுவார்; அதற்காக போராடுவார். சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த சங்கத்தின் தலைவர், பொருளாளர், நந்தகோபால், என்னுடைய சகோதரர் ஐசரி கே. கணேஷ், தாணு சார் ஆகிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட தருணங்களில் எல்லோரும் வரமாட்டார்கள்; நல்ல உள்ளங்கள் மட்டுமே வருவார்கள். அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார். கே. ராஜன் அவர்களின் மகள் ராஜேஸ்வரி அன்பு பேசுகையில், “நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வாக்கியம் இருக்கிறது — துணிச்சல், நேர்மை, போராட்டத் தகுதி; இந்த மூன்றும் பெற்றிருந்தால்தான் அவன் தமிழன் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தமிழனாக எங்கள் அப்பா இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை; அது எங்களுடைய பாக்கியம். ஓல்டு வாஷர்மேன்பேட்டையில் இருந்தாலும், அவருடைய உயிர் இந்த மீரான் சாகிப் தெருவிலும், தயாரிப்பாளர் கவுன்சிலிலும்தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சினைக்காகவும், திரைப்படத்திற்காகவும் எதையும் எதிர்பார்க்காமல் ஓடி வரக்கூடிய ஒரே ஜீவன். எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டார்; எவ்வளவு பெரிய மேடை என்று பார்க்க மாட்டார்; தைரியமாக வந்து போராட்டக் களத்தில் நிற்பார். எப்போதெல்லாம் நான் தளர்ந்து போகிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு தோள் கொடுத்தவர். தைரியத்தை இழந்தபோது தைரியம் கொடுத்தவர்; வாழ்க்கையை இழந்தபோது வாழ்க்கையை கொடுத்தவர்; வாழக் கற்றுக்கொடுத்தவர். சொல்லால் அல்ல, செயலாலும் செய்து காட்டியவர். இன்று அவர் மறைந்திருந்தாலும், கண்களில் நீரோடு சொல்கிறேன் — அவருடைய தைரியம் என்றென்றும் எங்கள் குடும்பத்தாரின் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அவர் வழிகாட்டிய பாதைகளில் நாங்கள் கண்டிப்பாக செல்வோம். இந்த வாய்ப்பில் ஐசரி கணேஷ் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தாய் மாமனாக என்னுடைய அப்பாவை கருதி, கடைசி வரை அவருக்காக செய்தது வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்று. எங்கள் குடும்பத்தின் சார்பில், அவருடைய குடும்பத்தாருக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு நல்லதை செய்யும் குணம் வாய்ந்த ஒரு தமிழனாகவும், ஒரு ஆண்மகனாகவும் நான் பார்த்தது என் அப்பாவைத்தான். எல்லோருக்கும் அவரவர் அப்பாதான் முதல் ஹீரோ; எனக்கும் என் கே. ராஜன் அப்பாதான் ஹீரோ. தேங்க்யூ சோ மச்” என்றார். #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #👩எனக்கு பிடித்த நடிகை
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - THECKT[.=.D.Assn THECKT[.=.D.Assn - ShareChat
*சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!* *மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு: டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டம்!* *துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்: மறைந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் நினைவேந்தல் கூட்டத்தில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் புகழஞ்சலி!* சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே. ராஜன் (வயது 85) அவர்கள், 2026 மே 17 அன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், சென்னையில் அவரது திருவுருவப் படத் திறப்பு மற்றும் அஞ்சலிக் கூட்டம் 06-06-2026 அன்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க வளாகத்தில் மிகுந்த உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவரும் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கி, கோலிவுட்டின் மிகத் துணிச்சலான மற்றும் நேர்மையான குரலாக விளங்கிய கே. ராஜன் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு, நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன், சங்கத்தின் நிர்வாகிகள் துணைத் தலைவர் பி. அந்தோணிதாஸ், இணைச் செயலாளர் எஸ். நந்தகோபால், பொருளாளர் யு. தருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள், அன்னாரின் குடும்பத்தினர் கே.ஆர். பிரபு, கே.ஆர். சுரேஷ் ராஜன், ராஜேஸ்வரி அன்பு, சங்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் சினிமா வர்த்தகத்தின் வெளிப்படைத்தன்மைக்காகவும் இறுதிவரை ஓங்கி ஒலித்த கே. ராஜன் அவர்களின் பங்களிப்பை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திரையுலகினர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர். திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேசுகையில், “எந்த ஒரு மேடையிலும், எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கப் பேசும் குணம் கொண்டவர் கே. ராஜன். சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, பல வர்த்தகச் சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். மேலும், சிறு தயாரிப்பாளர்கள் படும் நஷ்டம், நிதி நெருக்கடி மற்றும் விநியோகஸ்தர்களின் நஷ்டம் குறித்து தனது வாழ்நாளின் இறுதிவரை பொது மேடைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்” என புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு பேசுகையில், “தயாரிப்பாளர்களின் நன்மைக்காக அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சரி, உரிமையாளர்களுக்கும் சரி, ராஜன் அவர்கள் எடுத்து வைத்த வாதங்களும் விவாதங்களும் எண்ணிலடங்காதவை. அப்படிப்பட்ட மனிதரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. திருட்டு விசிடிக்காக அவர் நடத்திய போராட்டங்கள், சட்டை இல்லாமல்கூட போராட்டம் நடத்திய துணிச்சல் — அவை யாருக்கும் எளிதில் வராது. பலமுறை அவரிடம் சென்று உரையாடி இருக்கிறேன். என் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். அவர் ஆற்றிய சமுதாயப் பணியும் சமூகப் பணியும் எண்ணிலடங்காதவை. நான் படித்த செஞ்சாரங்க பள்ளியில்கூட அவர் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்தத் திரையுலகிற்கு வந்து மாபெரும் எழுச்சியை உருவாக்கினார். சகோதரர் ஐசரி கணேஷை ‘மாப்பிள்ளை, மாப்பிள்ளை’ என்று அன்பாக அழைப்பார். அவரும் ‘மாமா, மாமா’ என்று அன்பாக அழைப்பார். அப்படிப்பட்ட அன்யோனியமான உறவை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். அவருக்காக ஐசரி கணேஷ் எத்தனை சூழ்நிலைகளில் பக்கபலமாக இருந்து காத்தார் என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவர் வழியை இனிவரும் தலைமுறையினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அன்னாரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி” என்றார். நிகழ்வில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசுகையில், “அண்ணன் கே. ராஜனுக்காக எங்க வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் வரலாம். பல பிரச்சினைகளில் நான் அவருடன் நின்றிருக்கிறேன். எந்த சபையாக இருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவர் முரண்படுவார்; அதற்காக போராடுவார். சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த சங்கத்தின் தலைவர், பொருளாளர், நந்தகோபால், என்னுடைய சகோதரர் ஐசரி கே. கணேஷ், தாணு சார் ஆகிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட தருணங்களில் எல்லோரும் வரமாட்டார்கள்; நல்ல உள்ளங்கள் மட்டுமே வருவார்கள். அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார். கே. ராஜன் அவர்களின் மகள் ராஜேஸ்வரி அன்பு பேசுகையில், “நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வாக்கியம் இருக்கிறது — துணிச்சல், நேர்மை, போராட்டத் தகுதி; இந்த மூன்றும் பெற்றிருந்தால்தான் அவன் தமிழன் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தமிழனாக எங்கள் அப்பா இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை; அது எங்களுடைய பாக்கியம். ஓல்டு வாஷர்மேன்பேட்டையில் இருந்தாலும், அவருடைய உயிர் இந்த மீரான் சாகிப் தெருவிலும், தயாரிப்பாளர் கவுன்சிலிலும்தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சினைக்காகவும், திரைப்படத்திற்காகவும் எதையும் எதிர்பார்க்காமல் ஓடி வரக்கூடிய ஒரே ஜீவன். எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டார்; எவ்வளவு பெரிய மேடை என்று பார்க்க மாட்டார்; தைரியமாக வந்து போராட்டக் களத்தில் நிற்பார். எப்போதெல்லாம் நான் தளர்ந்து போகிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு தோள் கொடுத்தவர். தைரியத்தை இழந்தபோது தைரியம் கொடுத்தவர்; வாழ்க்கையை இழந்தபோது வாழ்க்கையை கொடுத்தவர்; வாழக் கற்றுக்கொடுத்தவர். சொல்லால் அல்ல, செயலாலும் செய்து காட்டியவர். இன்று அவர் மறைந்திருந்தாலும், கண்களில் நீரோடு சொல்கிறேன் — அவருடைய தைரியம் என்றென்றும் எங்கள் குடும்பத்தாரின் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அவர் வழிகாட்டிய பாதைகளில் நாங்கள் கண்டிப்பாக செல்வோம். இந்த வாய்ப்பில் ஐசரி கணேஷ் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தாய் மாமனாக என்னுடைய அப்பாவை கருதி, கடைசி வரை அவருக்காக செய்தது வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்று. எங்கள் குடும்பத்தின் சார்பில், அவருடைய குடும்பத்தாருக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு நல்லதை செய்யும் குணம் வாய்ந்த ஒரு தமிழனாகவும், ஒரு ஆண்மகனாகவும் நான் பார்த்தது என் அப்பாவைத்தான். எல்லோருக்கும் அவரவர் அப்பாதான் முதல் ஹீரோ; எனக்கும் என் கே. ராஜன் அப்பாதான் ஹீரோ. தேங்க்யூ சோ மச்” என்றார். #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #👩எனக்கு பிடித்த நடிகை
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - ShareChat
*சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!* *மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு: டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டம்!* *துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்: மறைந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் நினைவேந்தல் கூட்டத்தில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் புகழஞ்சலி!* சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே. ராஜன் (வயது 85) அவர்கள், 2026 மே 17 அன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், சென்னையில் அவரது திருவுருவப் படத் திறப்பு மற்றும் அஞ்சலிக் கூட்டம் 06-06-2026 அன்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க வளாகத்தில் மிகுந்த உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவரும் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கி, கோலிவுட்டின் மிகத் துணிச்சலான மற்றும் நேர்மையான குரலாக விளங்கிய கே. ராஜன் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு, நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன், சங்கத்தின் நிர்வாகிகள் துணைத் தலைவர் பி. அந்தோணிதாஸ், இணைச் செயலாளர் எஸ். நந்தகோபால், பொருளாளர் யு. தருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள், அன்னாரின் குடும்பத்தினர் கே.ஆர். பிரபு, கே.ஆர். சுரேஷ் ராஜன், ராஜேஸ்வரி அன்பு, சங்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் சினிமா வர்த்தகத்தின் வெளிப்படைத்தன்மைக்காகவும் இறுதிவரை ஓங்கி ஒலித்த கே. ராஜன் அவர்களின் பங்களிப்பை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திரையுலகினர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர். திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேசுகையில், “எந்த ஒரு மேடையிலும், எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கப் பேசும் குணம் கொண்டவர் கே. ராஜன். சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, பல வர்த்தகச் சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். மேலும், சிறு தயாரிப்பாளர்கள் படும் நஷ்டம், நிதி நெருக்கடி மற்றும் விநியோகஸ்தர்களின் நஷ்டம் குறித்து தனது வாழ்நாளின் இறுதிவரை பொது மேடைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்” என புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு பேசுகையில், “தயாரிப்பாளர்களின் நன்மைக்காக அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சரி, உரிமையாளர்களுக்கும் சரி, ராஜன் அவர்கள் எடுத்து வைத்த வாதங்களும் விவாதங்களும் எண்ணிலடங்காதவை. அப்படிப்பட்ட மனிதரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. திருட்டு விசிடிக்காக அவர் நடத்திய போராட்டங்கள், சட்டை இல்லாமல்கூட போராட்டம் நடத்திய துணிச்சல் — அவை யாருக்கும் எளிதில் வராது. பலமுறை அவரிடம் சென்று உரையாடி இருக்கிறேன். என் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். அவர் ஆற்றிய சமுதாயப் பணியும் சமூகப் பணியும் எண்ணிலடங்காதவை. நான் படித்த செஞ்சாரங்க பள்ளியில்கூட அவர் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அப்படிப்பட்டவர் இந்தத் திரையுலகிற்கு வந்து மாபெரும் எழுச்சியை உருவாக்கினார். சகோதரர் ஐசரி கணேஷை ‘மாப்பிள்ளை, மாப்பிள்ளை’ என்று அன்பாக அழைப்பார். அவரும் ‘மாமா, மாமா’ என்று அன்பாக அழைப்பார். அப்படிப்பட்ட அன்யோனியமான உறவை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். அவருக்காக ஐசரி கணேஷ் எத்தனை சூழ்நிலைகளில் பக்கபலமாக இருந்து காத்தார் என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவர் வழியை இனிவரும் தலைமுறையினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அன்னாரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி” என்றார். நிகழ்வில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசுகையில், “அண்ணன் கே. ராஜனுக்காக எங்க வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் வரலாம். பல பிரச்சினைகளில் நான் அவருடன் நின்றிருக்கிறேன். எந்த சபையாக இருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவர் முரண்படுவார்; அதற்காக போராடுவார். சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த சங்கத்தின் தலைவர், பொருளாளர், நந்தகோபால், என்னுடைய சகோதரர் ஐசரி கே. கணேஷ், தாணு சார் ஆகிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட தருணங்களில் எல்லோரும் வரமாட்டார்கள்; நல்ல உள்ளங்கள் மட்டுமே வருவார்கள். அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார். கே. ராஜன் அவர்களின் மகள் ராஜேஸ்வரி அன்பு பேசுகையில், “நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வாக்கியம் இருக்கிறது — துணிச்சல், நேர்மை, போராட்டத் தகுதி; இந்த மூன்றும் பெற்றிருந்தால்தான் அவன் தமிழன் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தமிழனாக எங்கள் அப்பா இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை; அது எங்களுடைய பாக்கியம். ஓல்டு வாஷர்மேன்பேட்டையில் இருந்தாலும், அவருடைய உயிர் இந்த மீரான் சாகிப் தெருவிலும், தயாரிப்பாளர் கவுன்சிலிலும்தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சினைக்காகவும், திரைப்படத்திற்காகவும் எதையும் எதிர்பார்க்காமல் ஓடி வரக்கூடிய ஒரே ஜீவன். எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டார்; எவ்வளவு பெரிய மேடை என்று பார்க்க மாட்டார்; தைரியமாக வந்து போராட்டக் களத்தில் நிற்பார். எப்போதெல்லாம் நான் தளர்ந்து போகிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு தோள் கொடுத்தவர். தைரியத்தை இழந்தபோது தைரியம் கொடுத்தவர்; வாழ்க்கையை இழந்தபோது வாழ்க்கையை கொடுத்தவர்; வாழக் கற்றுக்கொடுத்தவர். சொல்லால் அல்ல, செயலாலும் செய்து காட்டியவர். இன்று அவர் மறைந்திருந்தாலும், கண்களில் நீரோடு சொல்கிறேன் — அவருடைய தைரியம் என்றென்றும் எங்கள் குடும்பத்தாரின் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அவர் வழிகாட்டிய பாதைகளில் நாங்கள் கண்டிப்பாக செல்வோம். இந்த வாய்ப்பில் ஐசரி கணேஷ் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தாய் மாமனாக என்னுடைய அப்பாவை கருதி, கடைசி வரை அவருக்காக செய்தது வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்று. எங்கள் குடும்பத்தின் சார்பில், அவருடைய குடும்பத்தாருக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு நல்லதை செய்யும் குணம் வாய்ந்த ஒரு தமிழனாகவும், ஒரு ஆண்மகனாகவும் நான் பார்த்தது என் அப்பாவைத்தான். எல்லோருக்கும் அவரவர் அப்பாதான் முதல் ஹீரோ; எனக்கும் என் கே. ராஜன் அப்பாதான் ஹீரோ. தேங்க்யூ சோ மச்” என்றார். #👩எனக்கு பிடித்த நடிகை #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
👩எனக்கு பிடித்த நடிகை - Kராகன Kராகன - ShareChat
*ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்டத்துடன் வெளியாகி இருக்கும் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது!* லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது. திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. உற்சாகத்துடன் துள்ளலாக உருவாக்கப்பட்டுள்ள சிக்மா ஸ்டைல் பாடல், அதன் வண்ணமயமான காட்சிகள், பின்னணி மற்றும் எண்டர்டெயினிங்கான நட்சத்திரங்களின் திரையிருப்பு காரணமாக ரசிகர்களை உடனடியாக ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பு, ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல், வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடனம் இதனுடன் பாடலில் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான திரையிருப்பு இவையனைத்தும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஜூலை 31 அன்று வெளியாகும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவரும் இசை, ஸ்டைலிஷான உருவாக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரம்பியுள்ள இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. *நடிகர்கள்:* லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க, அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். *தொழில்நுட்பக்குழு விவரம்:* இசை: தமன் எஸ்., ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்., விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: ஹரிஹரசுதன், ஆடியோ உரிமம்:சரிகம #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #👩எனக்கு பிடித்த நடிகை
🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 - ನ ~ ನ ~ - ShareChat
*ஸ்டைல், ஸ்வேக் மற்றும் கொண்டாட்டத்துடன் வெளியாகி இருக்கும் ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்தது!* லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது. திரைத்துறையிலும் வர்த்தகம் வட்டாரத்திலும் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேசுபொருளாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. உற்சாகத்துடன் துள்ளலாக உருவாக்கப்பட்டுள்ள சிக்மா ஸ்டைல் பாடல், அதன் வண்ணமயமான காட்சிகள், பின்னணி மற்றும் எண்டர்டெயினிங்கான நட்சத்திரங்களின் திரையிருப்பு காரணமாக ரசிகர்களை உடனடியாக ஈர்த்துள்ளது. சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பு, ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல், வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடனம் இதனுடன் பாடலில் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான திரையிருப்பு இவையனைத்தும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஜூலை 31 அன்று வெளியாகும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கவரும் இசை, ஸ்டைலிஷான உருவாக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களால் நிரம்பியுள்ள இந்த பாடல், இளைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட பல முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. *நடிகர்கள்:* லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள ’சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்க, அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். *தொழில்நுட்பக்குழு விவரம்:* இசை: தமன் எஸ்., ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு: பிரவீன் கே.எல்., விஎஃப்எக்ஸ் மேற்பார்வை: ஹரிஹரசுதன், ஆடியோ உரிமம்:சரிகம #👩எனக்கு பிடித்த நடிகை #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
👩எனக்கு பிடித்த நடிகை - ShareChat