mariappan kumaravel
ShareChat
click to see wallet page
@mariappan0462
mariappan0462
mariappan kumaravel
@mariappan0462
நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்பதே என் மூலதனம்.
பராபவ ஆண்டு வைகாசி-23 ஜூன்-06 சனிக்கிழமை ஏழுமலை வாசா எமை ஆளும் ஸ்ரீநிவாசா போற்றி போற்றி நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:38
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு வைகாசி-22 ஜூன்-05 வெள்ளிக்கிழமை அருள் தரும் அன்னையே முத்துமாரி அம்மா போற்றி போற்றி நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:33
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4 ஜூன் 1946. ல் பிறந்தார்...அவரின் பிறந்தநாள் இன்று..!, இவர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவர் "பாடும் நிலா" என்று அழைக்கப்படுகிறார்.இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன், பிலிம்பேர் விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றையும் வென்றுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக "கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில்" இடம் பிடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டில், இந்தியத் திரைத்துறைப் பங்களிப்புகளுக்காக "என்.டி.ஆர் தேசிய விருது" இவருக்கு வழங்கப்பட்டது.2016 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான "வெள்ளி மயில் விருது" வழங்கப்பட்டது. இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (2001), பத்ம பூசண் (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.ஜனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 2021இல் இவருக்கு" பத்ம விபூசண்" விருது இவரின் மறைவிற்குப் பின்பு இந்திய அரசால் வழங்கப்பட்டது. இவரது மகன் எஸ். பி. பி. சரண் விருதினைப் பெற்றுக் கொண்டார். பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடகராக முதன் முதலில் 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 15 தேதி "சிறீ சிறீ சிறீ மரியாத ராமண்னா"(1967) என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக எஸ். பி. கோதண்டபாணியின் இசையில் பாடினார். இப்பாடல் பதிவான எட்டாம் நாளில் கன்னடத்தில் "நக்கரே அதே சுவர்க "என்ற திரைப்படத்திற்காகப் பாடினார். இவரது முதலாவது தமிழ் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் எல். ஆர். ஈஸ்வரியுடன் "ஓட்டல் ரம்பா" என்ற திரைப்படத்துக்காகப் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" என்பதாகும். ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 1969 இல் "சாந்தி நிலையம்" படத்தில் வரும் "இயற்கையெனும் இளையகன்னி" என்ற பாடலை ஜெமினி கணேசனுக்காகப் பாடினார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆருக்காக "அடிமைப் பெண்" திரைப்படத்தில் பாடிய "ஆயிரம் நிலவே வா" பாடல் வெளிவந்தது. இதுவே இவர் பாடி வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும். எஸ். ஜானகியுடன் இவர் பாடிய முதலாவது பாடல் "கன்னிப் பெண் "(1969) படத்துக்காக "பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்" என்பதாகும். இதன் பின்னர் இவர் ஜி. தேவராஜனால் "கடல்பாலம்" என்ற திரைப்படம் மூலம் மலையாளத் திரைத்துறைக்கும் அறிமுகமானார்.பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த "சங்கராபரணம்" என்ற திரைப்படத்திற்காகப் பாடல்களைப் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாகக் கருதப்படுகிறது.கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்தது. விஸ்வநாத் பாலசுப்பிரமணியத்தின் பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கே. வி. மகாதேவனால் கருநாடக இசை மெட்டுகளில் உருவாக்கப்பட்டது. பாலசுப்பிரமணியம் முறையாக கர்நாடக இசையைக் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து "சங்கராபரணம்" பாடல்களைப் பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் தனது முதலாவது சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றார். இவரது முதலாவது இந்தி மொழித் திரைப்படம்" ஏக் தூஜே கே லியே" (1981) இவருக்கு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. கே. பாலசந்தர் இதனை இயக்கினார். பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரைப்படங்களுக்கு நிறையப் பாடல்களை பாடினார், குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்தும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடகிகளுடன் சேர்ந்தும் 70களின் இறுதி முதல் 80களிலும் பல பாடல்களைப் பாடினார்.தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான "சலங்கை ஒலி" (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர். "சிப்பிக்குள் முத்து "(1986), "உருத்திரவீணா" (தெலுங்கு, 1988) இவர்கள் இருவருக்கும் மீண்டும் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்தன. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார். 1989 முதல் பாலசுப்பிரமணியம் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்குப் பின்னணி பாடிவந்தார். "மைனே பியார் கியா (1989)" இந்திப் படம் பெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் எல்லாப் பாடல்களையும் இவரே பாடினார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது. மட்டுமல்லாது "தில் தீவானா" பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் 90களிலும் காதல் ரசனையோடு கானின் திரைப்படங்களுக்கு பாடினார். இவற்றில் குறிப்பிடத்தக்கதாக "ஹம் ஆப்கே ஹைன் கௌன்" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் லதா மங்கேசுக்கருடன் இவர் பாடிய "திதி தேரா தேவர் தீவானா" பாடல் மிகவும் பிரபலமானது. இவற்றின் மூலம் பாலசுப்பிரமணியம் இந்திய அளவில் மிகச்சிறந்த பின்னணிப்பாடகர்களில் ஒருவராக இனங்காணப்பட்டார். இவர் நடிகராகவும் சிகரம்,தளபதி,அவ்வை சண்முகி,திருடா திருடா போன்ற 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ள்ளார். ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும்.ஏ ஆர் ரகுமானின் முதலாவது படமான "ரோஜா"வில் மூன்று பாடல்களைப் பாடினார். இதற்குப் பிறகு நிறையப் பாடல்களை ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவந்தார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார்." கிழக்குச் சீமையிலே" திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். "டூயட்" படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். "மின்சார கனவு" படத்தில் "தங்கத்தாமரை மகளே" பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது இவருக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும். பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். அம்சலேகாவின் "பருவ காலம் "ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. நிறையப் பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார். இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவாயி திரைப்படத்தில் "உமண்டு குமண்டு" பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் இந்துஸ்தானி இசையில் பாடியதன் மூலம் பெற்றார். பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார். ஆனால் அவரின் தெய்வீகக்குரலால் மக்கள் மனதில் வாழ்கிறார்..!
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 எளிய உருவில் வந்து ஏழைகளுக்காக வாழ்ந்த சீரடி சாயியே போற்றி போற்றி வியாழக்கிழமை நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:19
பராபவ ஆண்டு வைகாசி-21 ஜூன்-04 வியாழக்கிழமை ஓம் விநாயகா போற்றி போற்றி சங்கடஹர சதுர்த்தி நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:23
இசைஞானிக்கு வயது எண்பத்து மூன்று..! இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: ஜூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். இளையராஜாவின் இயற்பெயர் "ராசய்யா" என்பதாகும். தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை: இராமசாமி ; தாயார்: சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர். டி. பாஸ்கர்), கங்கை அமரன் என்ற அமர் சிங் ஆகிய மூவரும் இவரது உடன்பிறப்புகள் ஆவார். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி. சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார். 1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார். 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில், இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில், பத்ரகாளி திரைப்படத்தில் "கண்ணன் ஒரு கைக்குழந்தை", மற்றும் ரீதி கௌளை ராகத்தில் கவிக்குயில் திரைப்படத்தில் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார். இளையராஜா புதிதாக 'இசை ஓடிடி' என்ற பிரத்தியேக இணையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்திய திரைப்படங்களில், மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில், இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் இளையராஜாவுக்கு, இசைஞானி என்ற பட்டம் சூட்டப்பட்டது 1986 ஆம் ஆண்டில், விக்ரமுக்கு தமிழ் படங்களுக்கான கணினி மூலம் திரைப்படப் பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் ஆவார் . அவர் 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர், 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைப்பட பின்னணி இசையை வழங்கியவர் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் நிகழ்த்திய உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஆவார். இளையராஜா இசையமைத்தது, சிம்பொனியில் (2006) ஆகும். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திருவாசகம் முதல் இந்திய சொற்பொழிவு ஆகும் . இளையராஜாவின் முதல் இரண்டு திரைப்படம் அல்லாத ஆல்பங்கள் இந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையின் இணைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். முதல், அதை எப்படி பெயரிடுவது(HOW TO NAME IT?) (1986),இரண்டாவது, நத்திங் பட் விண்ட் (NOTHING BUT WIND1988), இளையராஜாவின் கிளாசிகல்ஸ் ஆன் தி மாண்டோலின் (CLASSICALS ON THE MONDALIN-1994) அவரது குரு ரமணா geetam (2004) இந்து மதம் மறைபொருள் ஈர்க்கப்பட்டு பிரார்த்தனை பாடல்களை ஒரு சுழற்சி உள்ளது ரமணா மகரிஷி , தன் Thiruvasakam (2005) புடாபெஸ்ட் சிம்பொனி இசைக்குழு .இளையராஜாவின் மிக சமீபத்திய வெளியீடு தி மியூசிக் மெசியா ( THE MUSIC MESSAIAH-2006) என்ற உலக இசை சார்ந்த ஆல்பமாகும் . இளையராஜா 'பஞ்சமுகி' என்று பிரபலமாக அறியப்படும் ஒரு புதிய கர்நாடக ராகத்தை கண்டுபிடித்தார், இது இசைத்துறையில் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இளையராஜாவுக்கு ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன - சிறந்த இசை இயக்கத்திற்கான மூன்று மற்றும் சிறந்த பின்னணி ஸ்கோருக்கு இரண்டு. 2010 இல், இவருக்கு பத்ம பூசண், , பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்க நாடக் அகாடமி விருதைப் பெற்றார் . கிளாசிக்கல் கிதாரில் தங்கப் பதக்கம் வென்றவர் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் , லண்டன்2013 ஆம் ஆண்டில். 100 ஆண்டு இந்திய சினிமாவைக் கொண்டாடும் சி.என்.என்-ஐ.பி.என் நடத்திய கருத்துக் கணிப்பில் , இளையராஜா இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட-இசை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க உலக சினிமா போர்டல் "டேஸ்ட் ஆஃப் சினிமா" சினிமா வரலாற்றில் 25 சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்தது, இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்தியர். இளையராஜா தனது பழைய ஹார்மோனியத்தை இன்னும் பயன்படுத்துகிறார், ஒரு இசை நிகழ்ச்சியின் போது தனது ஸ்டுடியோவில் அல்லது மேடையில் ஒரு பாடலை இசையமைக்கும்போது, ​​அவர் தனது வாழ்க்கையில் 7000 க்கும் மேற்பட்ட பாடல்களை அடித்துள்ளார். 1986 ஆம் ஆண்டில், விக்ரம் படத்திற்காக கணினி மூலம் இந்திய திரைப்பட பாடல்களை பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் இளையராஜா . அகாடமி விருது பெற்ற இசைக்கலைஞர் ஏ. ஆர். ரகுமான் இளையராஜாவின் குழுவில் ஒரு பியானோ கலைஞராக பணியாற்றினார், மேலும் அவரது குழுவில் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு பணிபுரிந்தார். இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி ஒருமுறை, "இளையராஜா இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளராக மாறப்போகிறார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தனது செம்பருத்தி (1992) படத்திற்காக இளையராஜா வெறும் 45 நிமிடங்களில் ஒன்பது பாடல்களை இயற்றியுள்ளார், இது ஒரு பதிவு என்று கூறுகிறார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இளையராஜா திரைப்படத்தின் முழு இசைத்தடத்திற்காக உருவாக்கும் நிறைவு செய்துவிட்டதாகவும் கூற்றுக்கள் தளபதி "அரை நாள்" குறைவான. ஆர்.டி.பர்மனின் இசைக்குழுவுடன் மும்பையில் தளபதி திரைப்படத்தின் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலுக்கான பதிவின் போது, ​​இளையராஜா அவர்களுக்கு குறிப்புகளைக் கொடுத்தபோது, ​​அவை மிகவும் நகர்த்தப்பட்டு இசையமைப்பால் எடுக்கப்பட்டன, இதனால் அனைத்து இசைக்கலைஞர்களும் பிரமிப்புடன் கைகளை தட்டினர். இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக நின்று பேசினர். HBD #🤩90's ஹிட் மூவிஸ்
🤩90's ஹிட் மூவிஸ் - சாவத்தை பளா55 Oilillllaliall كدتباا زو 4 5ت0 థl |LLaITi . சாவத்தை பளா55 Oilillllaliall كدتباا زو 4 5ت0 థl |LLaITi . - ShareChat
#என்றும் அதிமுக 1963 ல் வெளிவந்த பணத்தோட்டம் படப்பாடல்.. தலைவர் பாடியபடி ஒவ்வொருவரும்.... "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே,ஒரு தலைவன் இருக்குறான் மயங்காதே" என்று தைரியமாக செயல்பட வேண்டும். அதிமுக விலிருந்து காசு க்காக விலை போன 4 MLA க்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் தேர்தல் ஆணையமும் சுப்ரீம் கோர்ட்டும்:; அது மட்டுமல்ல,இவர்களை குதிரை பேரம் நடத்தி கட்சிக்காக பிள்ளை பிடிக்கும் வேலையை செய்து வரும் வளர்ந்த மாடன் செங்கொட்டையன் விசில்காரன் ஆகியோர் மீது CBI விசாரணை நடத்தப்பட வேண்டும். மதில்மேல் பூனையாக முடிவெடுக்காமல் இருக்கும் சண்முகம் விஜய பாஸ்கர் இருவரும் மனம் திருந்தி அதிமுகவில் நீடிக்க வேண்டும்.
என்றும் அதிமுக - ShareChat
01:41
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு வைகாசி-18 ஜூன்-01 திங்கள்கிழமை ஓம் நமசிவாய அருள் புரியும் அண்ணாமலையே போற்றி போற்றி நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:31
அதிமுக விலிருந்து காசு க்காக விலை போன 4 MLA க்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் தேர்தல் ஆணையமும் சுப்ரீம் கோர்ட்டும்:; அது மட்டுமல்ல,இவர்களை குதிரை பேரம் நடத்தி கட்சிக்காக பிள்ளை பிடிக்கும் வேலையை செய்து வரும் வளர்ந்த மாடன் செங்கொட்டையன் விசில்காரன் ஆகியோர் மீது CBI விசாரணை நடத்தப்பட வேண்டும். #என்றும் அதிமுக
என்றும் அதிமுக - ShareChat
01:40
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 பராபவ ஆண்டு வைகாசி-17 மே-31 ஞாயிற்றுக்கிழமை அருள் புரியும் அண்ணாமலையே போற்றி போற்றி நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
01:02