
mariappan kumaravel
@mariappan0462
நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்பதே என் மூலதனம்.
#கரூர் துயரம்
எப்படி இருக்க வேண்டும் கட்சி தலைவர்கள்....
தமிழகம் இதுவரை காணாத கூட்டம் புரட்சித்தலைவர் முதன் முறை ஆக மக்கள் முன் பதவி ஏற்ற சென்னை அண்ணா சாலையில்...
ஒரு செருப்பு கூட தொலையவில்லை அப்போ... கட்டுப்பாட்டில் கூட்டம்...
பல முறை மேடைகளில் பேசும் போதே கூட்டத்தை கண்காணிப்பார் எம்ஜிஆர்
ஒருமுறை கட்டுக்குள் அடங்காத கூட்டத்தில் பெண்கள் குழைந்தைகள் இருக்க மேடையில் தன் எக்ஸ்ரே கண்களில் பார்த்த எம்ஜிஆர் பேசி முடிக்கும் போது...
இப்போ பெண்கள் அவரவர் குழந்தை செல்வங்கள் உடன் போக வழி விடுங்க... ஆண்கள் உடன் என்ன சொல்ல போறாரு என்று இருக்க
15 நிமிடங்கள் கழித்து தாய்மார்கள் பத்திரமா கலைந்து செல்ல...
சரி இப்போ ஆண்கள் நீங்களும் பத்திரமா போங்க என்கிறார் வாத்தியார்.....
ஒரு கல்யாண மண்டபம் கட்சி கூட்டம் அதில் மேடையில் இருந்த எம்ஜிஆர் ஒருவரை மேடைக்கு அழைக்க
அவரும் வர பளார் பளார் என்று செவுட்டில் விட்டார்
என்ன அருகில் இருக்கும் இளம் பெண்ணிடம் என்ன தப்பு பண்ணுறே உடனே வெளியே போ என்றார்...
நெல்லை பாளையில் கட்சி ஆரம்பித்து பேசிய முதல் கூட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் கூரைகளில் பலர் ஏறி மாடிகளில் பழைய கட்டிடங்களில் ஏறி இருந்தவர்கள் இறங்கிய பிறகே பேசுவேன் என்று அறிவிக்க மொத்த கூட்டமும் இறங்கிய சில நொடிகளில் அந்த கூரை இடிந்து விழ...
அப்போ தண்ணி பாம்புகளை பிடித்து சாக்கில் அடைத்து கூட்டத்தில் சிலர் விட பாம்புகளை கண்ட கூட்டம் சிதறி ஓட மீண்டும் அமைதி காத்து மேடையில் இருந்து பாம்புகள் சிதறி ஓடிய பின் கூட்டம் பேசினார் எம்ஜிஆர்.... பாம்புகள் விட்ட அவர் பின்னர் தலைவர் கட்சியில் அடைக்கலம் ஆனார்...
இவை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் சில கட்சிகள் எதுவும் செய்யும் கொடும் குணம் கொண்டவை...
அமரர் இந்திரா அம்மையார் மதுரை மாநகரில் திமுக ஆட்சி கலைக்க பட்ட பின் ஜீப்பில் நின்று ஊர்வலம் வரும் போது செருப்புகள் கற்கள் வீச பட்டு காயம் மண்டையில் காயம் அடைந்து அவர் எப்போதும் அணியும் வெள்ளை சேலையில் ரத்த கரைகள் இருக்க அது மாதவிடாய் ரத்தம் என்றார் அந்த நல்லவர்....
வன்முறை அவர்களுக்கு ரத்தத்தில் ஊறியது.
அதை உடன் அவர்கள் உடன் பயணித்த எம்ஜிஆர் உணர்ந்து இருந்ததால்
அவர்களை வெற்றி கொண்டார்.....
தன் படப்பிடிப்பில் தன்னை பார்க்க கடும் கூட்டங்கள் வரும் போதும் கடும் வெயில் நேரத்தில் அவர்களுக்கு உரிய தண்ணீர் மற்றும் உணவு வசதி தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கிறார்..
அது தான் தலைமை பண்பு
மேடையில் வேனில் உயரே நின்று பேசும் போது தெளிவா தெரியும் பேசும் தலைவருக்கு தெரிய வேண்டும் தலைவருக்கு
கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று.....
கரூர் சோக நிகழ்வுகள் சொல்லும் இவ்வளவு முன்னேறி இப்போ இருக்கும் நிலையில் என்ன இப்படி என்றே மனம் துடிக்கிறது...
எங்கும் இதே நிலை....
தூத்துக்குடி லூர்து அம்மாள் என்ற இடத்தில் டூரிங்க் திரைஅரங்கம் தீ விபத்தில் விபத்தில்
110 பேர் பெண்கள் குழந்தைகள் ஆண்கள் சிக்கி உயிர் நீக்க உடனே பறந்து வந்த எம்ஜிஆர்
இரண்டு நாட்கள் அங்கே இருந்து மருத்துமனை அதில் உயிர் இழந்தவர்கள் தீ காயங்கள் அடைந்த
அனைவரும் தனி தனியே சந்தித்து ஆறுதல் உதவிகள் செய்தார்....
டூரிங்க் அரங்கங்கள் அன்றுடம் ஓய்வு பெற்றன..
ஒரு தலைவர் இப்படி பலர் பச்சிளம் இரு பால் குழந்தை செல்வங்கள்
பெண்கள் ஆண்கள் உயிர் நீத்த செய்திகள் நிருபர்கள் திருச்சி
மற்றும் சென்னை விமான நிலையங்களில் கேள்விகள் கேட்கும் போது
தனி விமானம் அதற்க்கு கட்டணம் பல கோடிகள் கொடுத்து பறந்து சென்னை வீட்டில் அடைக்கலம் புகுந்து கொண்ட விஜய் சார்
என்ன இப்படி ஒரு பதில் சொல்லிட என்ன தயக்கம்
உங்களை சுற்றி இருப்பவர்கள் கவலை இல்லை எங்களுக்கு..
நேற்று நடந்த சோகத்தில் எல்லோரும் கரூர் நோக்கி இன்று ஓடி ஓடி பேட்டிகள் கொடுக்க...
தயக்கம் இல்லாம வாங்க அவர்களை சந்தியுங்கள்
என்ன வரும் வரட்டும்
நீங்கள் உங்கள் பிரச்சார வாகனம் அதில் எங்கள் தலைவர்கள் அமரர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படங்களை வைத்து வலம் வருகிறீர்கள்..நன்றி..
உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமையில் பதிவு இல்லை....
தீயசக்தி அது ஆலமரம் போல வளர்ந்து ஆட்டம் போடுகிறது... அதை மீறி அரசியல் முறையாக செய்ய பயிற்சி கொள்ளுங்கள்..
உங்கள் ரசிகர்களை
முதலில் பக்குவம் அடைய பயிற்சி கொடுங்கள்...
இதுவே நன்மை பயக்கும்
உலகெங்கும் வாழும் புரட்சித்தலைவர் நெஞ்சங்கள் சார்பாக...
துயர கரூர் சம்பவத்தில் உயிர் நீத்தவர்கள் அனைவருக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி..
சிகிச்சை பெறுவோர் நலம் பெற்று வீடு திரும்ப அவரவர் தெய்வங்களை வேண்டிக்கொள்ளும்
எம்ஜிஆர் பக்தர்கள்...
தீயசக்திகளை வீழ்த்த நினைக்கும் உங்கள் ஆர்வம் புரிகிறது.
அதை வீழ்த்தி அனுபவம் கொண்ட எங்களுடன் சேர்ந்து பயணம் செய்யுங்கள்.....
இனி உங்கள் விருப்பம் விஜய் சார்...நன்றி..
இது அரசியல் பதிவு அல்ல விழிப்புணர்வு பதிவு.
#சுதந்திரப் போராட்ட வீரர்கள்
இதே நாளில்,சுதந்திரப் போராட்ட வீரர்
பகத் சிங் செப்டம்பர் 28, 1907ல் பிறந்தார்.
இவர் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார்.
பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.
63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.
முன்னதாக,
1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார்.தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2௦ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார்.
பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார்.
பகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை.
பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை. என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொல்லக் கூட்டு சேர்ந்தார். இருந்தபோதிலும் ,
சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.
மகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் நேரு கூறியதாவது,
"பகத்சிங் பிரபலமடைந்தது அவரின் பயங்கரவாதச் செயலுக்காக அல்ல, ஆனால் அவர் லாலா லஜுபது ராயின் மரியாதையை, மேலும் அவர் மூலம் நம் நாட்டின் மரியாதையையும் நிலைநிறுத்த முயற்சித்ததற்காகவே. அவர் செயல் மறக்கப்பட்டது, ஆனால் அவர் ஒரு விடுதலை போராட்ட சின்னமாக உருமாறினார்." சில மாதங்களிலேயே பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மற்றும் சற்று சிறிய வீரியத்துடன் பிற வடக்கு இந்தியப் பகுதிகளிலும் அவரது பெயர் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.
பகத்சிங்கின் தூக்குத்தண்டனை :
பகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்.
"தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்' என்ற இந்தி திரைப்படத்தில் இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
கல்வி வழங்கும்
சரஸ்வதி தேவி
சாம்பவி தேவி
ரூபமே
போற்றி..
நவராத்திரி ஏழாம்நாள்
நற்காலை வணக்கம்
🌹🍀🌺🌸🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
அருள் வழங்கும்
காத்யாயினி
அன்னையே
சண்டிகா தேவி
இந்திராணி
ரூபமே
போற்றி..
நவராத்திரி ஆறாம்நாள்
நற்காலை வணக்கம்
🌹🍀🌺🌸🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
அருள் வழங்கும்
அன்னையே
வைஷ்ணவி
தாயே
போற்றி..
நவராத்திரி ஐந்தாம்நாள்
நற்காலை வணக்கம்
🌹🍀🌺🌸🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
எளியோரை நேசித்து
ஏழ்மையுடன்வாழ்ந்த
ஷீரடி சாயியே போற்றி போற்றி
நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
அருள் வழங்கும்
அன்னையே
மஹாலட்சுமி தாயே
போற்றி..
நவராத்திரி நான்காம்நாள்
நற்காலை வணக்கம்
🌹🍀🌺🌸🙏🙏
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
அருள் வழங்கும்
அன்னையே
வாராஹி ரூபமே
போற்றி..
நவராத்திரி மூன்றாம் நாள்
நற்காலை வணக்கம்
🌹🍀🌺🌸🙏🙏
#சுதந்திரப் போராட்ட வீரர்கள்
இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார் -
போரில் குயிலி என்ன ஆனார்?
வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் கடல் வரை நீண்டிருந்த மைசூர் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக ஹைதர் அலி இருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ளன.
1773 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் தனது கணவர் முத்து வடுகநாத பெரியஉடைய தேவர் மற்றும் தங்கள் சமஸ்தானமான சிவகங்கையை இழந்த பின்னர் வேலு நாச்சியார் தனது இளம் மகள் வெள்ளச்சியுடன் அடைக்கலம் மற்றும் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார்
.ஹைதர் அலி மற்றும் வேலு நாச்சியாரின் சந்திப்பு பரஸ்பர மரியாதை நிரம்பிய காலகட்டத்தின் தொடக்கமாக இருந்தது. அதை அடுத்த தலைமுறையில் திப்பு சுல்தானும் பின்பற்றினார்.
வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலியின் உதவி கிடைத்தபோது, என்றென்றும் மறக்க முடியாததாக மாறிய மதிப்பும் மரியாதையும் அவருக்கு கிடைத்தது.
இந்த மதிப்பு மரியாதை என்ன என்ற கேள்வியை விட்டுவிட்டு, வேலு நாச்சியார் யார், என்னென்ன சவால்களை எதிர்கொண்டார் என்ற தகவலை நாம் முதலில் பெறுவோம்.
இளவரசியில் இருந்து மகாராணியாக ஆன கதை;
வேலு நாச்சியாரின் பெற்றோர், ராமநாதபுரம் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்கள்.
1730 இல் பிறந்த தங்கள் ஒரே குழந்தையான வேலுவுக்கு அவர்கள் குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி அளித்தனர்.
ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்பட பல மொழிகளில் அவருக்கு ஞானம் இருந்தது. வேலுநாச்சியாருக்கு 16 வயதான போது சிவகங்கை இளவரசருடன் அவருக்கு திருமணம் நடந்தது.
இந்த தம்பதியர் 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக சிவகங்கையை ஆட்சி செய்தனர்.
கணவரின் கொலை மற்றும் ஹைதர் அலியுடன் சந்திப்பு;
1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார்.
தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினர்.
வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வேலு நாச்சியாரால் தன் கணவரின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.
ஹைதர் அ லியுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்க்க வேலு நாச்சியார்
தீர்மானித்தார். அவர் வேலுநாச்சியாருக்கு மாதாந்திர உதவித்தொகையாக 400 பவுண்டுகள் மற்றும் ஆயுதங்களையும் கூடவே சையத் கர்க்கியின் தலைமையின் கீழ் 5,000 காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஆதரவையும் வழங்கினார்.
"ராணி வேலு நாச்சியார், இந்தப் படையின் உதவியுடன் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை 1781-இல் அவர் அடைந்தார்," என்று ஷூபேந்திரா எழுதுகிறார்.
"ஆங்கிலேயர்களுக்கு கூடுதல் ராணுவ உதவி கிடைக்காமல் ஹைதர் அலி தடுத்தார். ஆனால் ராணி வேலுநாச்சியாருக்கு கோட்டைக்குள் நுழைய வழி இருக்கவில்லை. உடையாளின் தியாகத்தின் நினைவாக, ராணி வேலுநாச்சியார் அவர் பெயரில் ஒரு மகளிர் படையை உருவாக்கினார். இந்த படையின் தளபதி குயிலி, கோட்டைக் கதவுகளைத் திறக்க ஒரு திட்டத்தை முன்வைத்தார்." என்கிறார் அவர்.
"விஜயதசமி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அருகில் உள்ள ஊர் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வார்கள். அவர்களுடன் கலந்து நாங்களும் உள்ளே செல்கிறோம். நான் ஆயுதங்களை மறைத்து வைத்தபடி உடையாள் படையின் சிறிய பிரிவுக்கு தலைமையேற்று கோட்டைக்குள் நுழைவேன். பிறகு நாங்கள் கோட்டையின் கதவை உங்களுக்காக திறந்துவிடுகிறோம் என்று குயிலி சொன்னார்.” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ராணி வேலுவின் முகத்தில் புன்னகை பரவியது.
"குயிலி, நீ எப்பொழுதும் ஏதோ ஒரு வழியை கண்டுபிடித்து விடுகிறாய். நீ உடையாளுக்கு பெருமை சேர்த்திருக்கிறாய் என்று வேலு நாச்சியார் கூறினார்.
போரில் குயிலி என்ன ஆனார்?
விஜயதசமி நாள் வந்ததும் குயிலியும், அவருடைய குழுவும் சுற்றுவட்டார ஊர் பெண்களுடன் உள்ளே சென்று பெரிய கோவிலில் திரண்டனர்.
சடங்கு ஆரம்பித்தது. குறித்த நேரத்தில் குயிலி “சகோதரிகளே! எழுந்திருங்கள்” என்று குரல் எழுப்பினார்.
'உடையாள்' பெண்கள் உடனே எழுந்து வாள்களை உருவி காவலுக்கு நின்றிருந்த ஆங்கிலேயர்களை கீழ்படிய வைத்து வாயிலை நோக்கி நகர்ந்தனர்.
வாயிலில் வைக்கப்பட்டிருந்த தீ பந்தத்தை எடுத்து தங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டு, வீரர்களைப் பிடித்தவாறு வெடிமருந்து கிடங்கிற்குள் நுழைந்தார்கள்.
திடீரென கோட்டையில் இருந்து பெரிய வெடிச் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. இரண்டு 'உடையாள்' பெண்கள் குதிரைகளில் ஏறி ராணி வேலுநாச்சியாரின் படை மறைந்திருந்த இடத்தை அடைந்தனர்.
"ராணி! கதவுகள் திறந்திருக்கின்றன. பிரிட்டிஷ் வெடிமருந்து கிடங்கு தகர்க்கப்பட்டுவிட்டது. தாக்குவதற்கு இதுவே சரியான நேரம்,” என்று ஒரு பெண் வேலுநாச்சியாரிடம் சொன்னாள்.
"அது சரி, என் மகள் குயிலி எங்கே?" என்று வேலு நாச்சியார் கேட்டார்.
'உடையாள்' பெண்கள் கண்களைத் தாழ்த்தினர்.
"எங்கள் தளபதி பிரிட்டிஷ் வெடிமருந்துகளை அழிக்க உயிர் தியாகம் செய்துவிட்டார்," என்று அவர்கள் பதில் அளித்தனர்.
குதிரையில் அமர்ந்திருந்த ராணி வேலு நாச்சியார் இந்த செய்தியைக் கேட்டதும் உறைந்து போனார்.
அப்போது சையத் கர்க்கி அவரிடம், "அவரின் தியாகத்தை நாம் வீணடிக்க முடியாது. இப்போது தாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.
ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி
ராணி வேலுநாச்சியார் மனதை திடப்படுத்திக் கொண்டு தாக்குதலுக்கு உத்தரவிட்டார். கோட்டையின் உள்ளே கர்னல் வில்லியம்ஸ் ஃப்ளேட்டர்டன் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம், பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றாக்குறையை எதிர்கொண்டது.
1781 ஆகஸ்ட் மாதம் வேலு நாச்சியார் மற்றும் ஹைதர் அலியின் கூட்டுப் படைகள் இறுதியாக கோட்டையைக் கைப்பற்றியதாக எழுத்தாளர் சுரேஷ் குமார் குறிப்பிடுகிறார்.
முதல் இந்திய சுதந்திரப் போருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமையை வேலு நாச்சியார் இதன் மூலம் பெற்றார்.
"”படையை வலுப்படுத்த திப்பு சுல்தான் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வேலு நாச்சியாருக்கு கொடுத்தார்,” என்று எழுதியுள்ளார்.
திப்பு சுல்தான் வேலு நாச்சியாருக்கு ஒரு வாளை அனுப்பினார். அதை அவர் பல போர்களில் பயன்படுத்தினார்.
வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார். வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு சிவகங்கையில் காலமானார்.
தமிழ் கலாசாரத்தில் வேலு நாச்சியார் ’வீர மங்கை’ என்று அழைக்கப்படுகிறார் என்று ஹம்சத்வனி அழகர்சாமி எழுதுகிறார்.
2008 ஆம் ஆண்டில் அவரது நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது.
2014 ஆம் ஆண்டு சிவகங்கையில் வீர மங்கை வேலு நாச்சியார் நினைவிடத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ராணியின் 6 அடி வெண்கலச் சிலையும் அங்கு நிறுவப்பட்டது.
ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் வீரத்தை போற்றும் வகையில் ஜெயலலிதா ஆட்சியில், மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இந்த நினைவுச்சின்னம் கடந்த 5 ஆண்டுகளாக திண்டுக்கல் நகரில் ஒரு பிரபல சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. இதே திண்டுக்கல்லில்தான் ஹைதர் அலிக்கும் வேலு நாச்சியாரும் இடையிலான நீண்டகால நட்பு துளிர் விட்டது.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝
அருள் வழங்கும்
அன்னையே
கௌமாரி ரூபமே
போற்றி..
போற்றி....
நவராத்திரி இரண்டாம் நாள்
நற்காலை வணக்கம்
🌹🍀🌺🌸🙏🙏