mariappan kumaravel
ShareChat
click to see wallet page
@mariappan0462
mariappan0462
mariappan kumaravel
@mariappan0462
நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்பதே என் மூலதனம்.
சித்திரை-1 தமிழ் புத்தாண்டு பராபவ வருடம் செவ்வாய்க்கிழமை 💐🙏 செந்தூர் முருகா 🙏🙏💐💐💐🙏நற்காலை வணக்கம்🙏💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:31
#🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 ஜாலியன் வாலாபாக் படுகொலை – நூற்றாண்டு நினைவலை------! 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 . இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துக்கொண்டு இருந்த சமயம்.---- பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி காந்தி தலைமையில் பெரும் அஹிம்சை போராட்டத்தை நடத்தி வந்தது. அப்போது, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மக்கள் கொதிப்பில் இருந்தனர். இது தலைவர்களின் பேச்சுக்களில் எதிரொலித்தது. நாட்டில் மிதவாதிகள் என்கிற அஹிம்சை வழி போராட்டக்காரர்கள், போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் இருந்த அதே நேரத்தில், தீவிரமான போராட்டக்காரர்களும் இருந்தனர். அவர்கள் துப்பாக்கி வழியே விடுதலை விரைவில் கிடைக்கும் என்றனர். பிரிட்டிஷ் படையை எதிர்த்து அங்கங்கு துப்பாக்கிகள் வெடித்தன. துப்பாக்கிகளைவிட, தலைவர்களின் பேச்சுக்கள் நாட்டு மக்களை சுதந்திரம் வேண்டி குரல் எழுப்பியது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆத்திரத்துக்கு உட்படுத்தியது. இதனை ஒடுக்க வேண்டும். அதனால் இந்திய மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமையை பறிக்கும் சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டது. அதுதான் ரௌலட் சட்டம். இந்த சட்டம், பேசுவது, எழுதுவது, கருத்து சொல்வது, அரசாங்கத்துக்கு எதிராக போராடுவது போன்ற அனைத்தையும் தடை செய்து, கட்டுபாடுகள் விதித்தது. தீவிரவாதி, நாட்டுக்கு எதிரானவர் என்றால் காவல்துறை, காரணம் கூறாமல் கைது செய்யலாம், இரண்டு ஆண்டு சிறையில் அடைக்கலாம், பிணையில் வரமுடியாது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியம்மில்லை. இந்த பயங்கர சட்டத்தை காந்தி, நேரு, ஜின்னா போன்றவர்கள் எதிர்த்தார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒத்துழயாமை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அப்படி எதிர்த்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் சாத்வீக முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதைய பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ்சில் பொற்கோவிலுக்கு அருகில் ஜாலியன்வாலாபாக் என்கிற காலி மைதானத்தில் அஹிம்சாவாதிகள் 1919 ஏப்ரல் 13-ம் தேதி ஒன்றுக்கூடி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த பரந்துவிரிந்த மைதானத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் இருந்துள்ளனர். கூட்டம் நடந்துக்கொண்டு இருந்தபோது அந்த இடத்துக்கு வந்தார் பஞ்சாப் லெப்டினென்ட்டாக இருந்த மைக்கேல் ஓ டையர். வெறிக்கொண்ட ஓநாய் படை டையருடையது. அந்த மைதானத்துக்கு ஒரே நுழைவாயில் தான். அதன் பெரிய இரும்பு கதவுகளை மூடியது காவல்படை. வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த 150 பிரிட்டிஷ் – இந்திய காவல்படையினரின் துப்பாக்கிகள் நிராயுதபாணியாக நின்ற விடுதலை போராட்டக்காரர்களை நோக்கியிருந்தது. கூட்டத்தினரை நோக்கி எந்த எச்சரிக்கையும் விடாத டையர் தனது காவலர்களை நோக்கி உத்தரவிட, அவர்களது துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுண்டனர். டையரும் தனது கை துப்பாக்கி மூலமாக சுட்டார். நிராயுதபாணியாக இருந்த போராட்டக்காரர்கள் ஆளுக்கொரு திசையாக ஓடினார்கள். அங்கிருந்த கிணற்றில் உயிரை காப்பாற்றிக்கொள்ள குதித்தார்கள். சுவர் ஏறி குதித்தனர். சில நிமிடங்களில் 1650 ரவுண்ட்கள் சுடப்பட்டன. இறந்தவர்கள் தோராயமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்றது காங்கிரஸ் கட்சி. பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்த விசாரணை கமிஷன் 379 பேர் என்றது. ஆயிரக்கணக்கானவர்கள் காயம்பட்டும், குண்டடிப்பட்டும் உயிருக்கு போராடிக்கொண்டு, கதறிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியிருந்ததால் மறுநாள் காலை வரை யாரும் அந்த மைதானத்தின் பக்கம் செல்லவில்லை. அரசாங்கமும் உதவவில்லை. சாவகாசமாக மறுநாளே மருத்துவக்குழு அங்கு வர அனுமதிக்கப்பட்டது. அதுவரை அவர்களின் அலறல் அப்பகுதி மக்களை தூங்கவிடாமல் செய்தது. இந்த படுகொலை குறித்த தகவல் வெளியுலகத்துக்கு ஒரு மாதத்துக்கு பின்பே தெரியவந்தது. காரணம், பத்திரிக்கை தணிக்கை முறையில் இருந்தது. செய்திகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான தணிக்கை செய்தபின்பே பிரிண்டாகின என்பதால் பத்திரிக்கைகளில் இது பெரியதாக வரவில்லை. இப்போதுபோல் அப்போது இணைய வசதியில்லை, பரவலான தொலைபேசிகள் கிடையாது, தபால், தந்தி மட்டுமே ஒரு இடத்து தகவல்களை மற்றொருயிடத்துக்கு கடத்தும் கருவியாக இருந்தது. ஒரு மாதத்துக்கு பின் தகவல் மெல்ல செய்தித்தாள்களில் வந்தபோது, தலைவர்கள் அதிர்ச்சியானார்கள். பல தலைவர்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பெற்ற பட்டங்களை, பதவிகளை துறந்தார்கள். போராட்ட களத்துக்கு வந்தார்கள். முன்பை விட பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டம் வலிமையடைந்தது. பிரிட்டிஷ் நாடாளமன்றத்திலும் அது எதிரொலித்தது. அதனால் ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து 1919 அக்டோபர் 14-ம் தேதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த குழுவின் முன் ஆஜரான டையர், " நான் தான் என் படைளுக்கு சுட உத்தரவிட்டேன். நானும் அந்த கூட்டத்தை பார்த்து சுட்டுக்கொண்டே இருந்தேன், போராட்டக்காரர்களை சுட வேண்டும் என்றே சுட்டேன். மக்களிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் மீது பயம் வரவேண்டும், பிரிட்டிஷ் அரசை நினைத்தாலே அவர்கள் உடல் நடுங்கவேண்டும். நெஞ்சம் பதற வேண்டும் என நினைத்து சுட்டேன். என் துப்பாக்கியில் இன்னும் குண்டுகள் இருந்தால் சுட்டு இருப்பேன், நான் சுட்டதுக்காக வருந்தவில்லை" என்றார். பல நூறு சாட்சிகளை விசாரித்தபின், மக்கள் கலைந்து செல்ல எந்த அறிவிப்பும் செய்யாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, டையர் அவர் அதிகாரத்தை மீறி செயல்பட்டதோடு, அவர் சொல்வது போல் பஞ்சாப் தீவிரவாத பிடியில் அப்போதுயில்லை என அறிக்கை தந்தது. மேம்போக்காகவே அந்த அறிக்கை இருந்தது. டையரை தண்டிக்கவேண்டும் என எதுவும் சொல்லவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், டையரை காப்பாற்ற, பணி விடுவிப்பு எனச்சொல்லி இலண்டனுக்கு அழைத்து தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டது. மாபெரும் படுகொலை நடந்த இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் ஜாலியான்வாலபாக் மைதானத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டது. இந்தியாவில் மக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வெகு சில நினைவு தூண்களில் இது முதன்மையானது, முக்கியமானது. 1940 மார்ச் 13-ம் தேதி, லண்டனில் உள்ள கேக்ஸ்டான் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு மைக்கல் ஓ டையர் வந்தார். மேடையில் பேச சென்றவரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார் உத்தம் சிங். டையர் அங்கேயே இறந்தார். உத்தம் சிங் சரணடைந்தார். அவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டது. உத்தம்சிங், ஜாலியான் வாலபாக் படுகொலை நடந்தபோது, இளைஞராக போராட்டத்துக்கு வந்துயிருந்தவர்களுக்கு தாகத்துக்கு நீர் தரும் இளைஞர் குழுவுடன் சேர்ந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார். அவர் கண் முன் நடந்த இந்த துப்பாக்கி சூடு அவரை ஆயுதம் ஏந்தவைத்தது. அதற்காகவே தன்னை தயார்படுத்திக்கொண்டவர் டையரை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதற்காகவே ரகசியமாக செயல்பட்டார். இறுதியில் அதனை செய்தும் காட்டினார். இந்தியா சுதந்திரத்துக்கு பின்னர், உத்தம்சிங் உடலை இங்கிலாந்திடமிருந்து பெற்றுவந்து இந்தியாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யவைத்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. இந்த மாபெரும் மனித வேட்டைக்கு இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கம் வருத்தம் தெரிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் அந்த மாபெரும் படுகொலை நடந்த 100 வது ஆண்டு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு அதாவது 2019 ஏப்ரல் 7-ம் தேதி, இலங்கிலாந்து பிரதமர் தெரிசா மே, இங்கிலாந்து அரசின் சார்பாக ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 - BUTCHER TH# of AMRITSMA G~IL R1iAiI ١ ٢٣ (ನ 50 BUTCHER TH# of AMRITSMA G~IL R1iAiI ١ ٢٣ (ನ 50 - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 12.4.26/பங்குனி 29/ஞாயிறு அன்று பெருநாழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் ஊர்பொது பொங்கல் சிறப்பாக நடைபெற்றது.
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
01:46
#நெஞ்சில் நிறைந்த பாடல்கள் நெஞ்சில் நிறைந்த பாடல்கள்💃🏾🎼 ஆயிரத்தில் ஒருவன்-1965
நெஞ்சில் நிறைந்த பாடல்கள் - ShareChat
01:31
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 ஓம் நமோ நாராயணா ஏழுமலை வாசா.எமை ஆளும் ஸ்ரீ நிவாசா கோவிந்தா ஹரி கோவிந்தா பங்குனி மாத சனிக்கிழமை இனிய காலை வணக்கம் 💐🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:25
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 ஏழைகளை நேசித்து எளிமையுடன் வாழ்ந்து காட்டிய ஷீரடி சாயியே போற்றி போற்றி வியாழக்கிழமை நற்காலை வணக்கம்💐🙏🙏🙏🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:33
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரி யம்மன் பங்குனி ப் பொங்கல் தீச்சட்டி திருவிழா அன்று(08.04.26) கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்தும் காட்சி💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
01:03
#நெஞ்சில் நிறைந்த பாடல்கள் நெஞ்சில் நிறைந்த பாடல்கள்💃🏾🎼📺 அடிமைப்பெண்-1969
நெஞ்சில் நிறைந்த பாடல்கள் - HD 0age ಖ6olbuGLooor புகைப்பபத்தொர HD 0age ಖ6olbuGLooor புகைப்பபத்தொர - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா🙏💐தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா💐🙏பங்குனி மாதம்🙏💐🙏💐🍕🪷 செவ்வாய்க்கிழமை நற்காலை வணக்கம்💐🍀🙏🙏🙏🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:36
லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், பிறந்தநாள் இன்று-! இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே. பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார். #நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார். #நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார். நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார். #பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம். #பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார். #கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார். இவரது வழிகாட்டுதலில் ஒரு புதிய ஒட்டு எலுமிச்சை ரகத்தையே உருவாக்கினார் புளியங்குடி அந்தோணிசாமி. #ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் நெல் நடவு என்பது உலக அளவில் பிரபலமானது. ஒற்றை நாற்று நடவு அல்லது செம்மை நெல் சாகுபடி என்றழைக்கப்படும் மடகாஸ்கர் நெல் நடவு 1960-களில் வெளியே தெரிந்தது. ஆனால், விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, மகசூலை மட்டும் அதிகமாகக் கொடுத்த ஒற்றை நாற்றுநடவை உலகுக்கே அறிமுகப்படுத்தியது தமிழர்கள்தான் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தவர் நம்மாழ்வார். இன்றைக்குத் தமிழகத்தில் ஒற்றை நாற்று நடவு பிரபலமாகி, ஏக்கருக்கு 27 மூட்டைகள் வரை நெல் மகசூல் ஈட்ட முடிகிறது என்றால் அதற்குக் காரணகர்த்தா நம்மாழ்வாரே! #1960 மற்றும் 70-களில் கலப்பின ரகங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கலப்பினங்களைப் பற்றிப் படித்தவர்கள், அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடையேகூடப் பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அந்த நேரத்தில் “கலப்பினம் மற்றும் வீரிய ரகங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அல்ல; மாறாக, ரசாயன உரங்களை விற்பனை செய்வதற்கான அரசியலே பசுமைப் புரட்சி பெயரிலான கலப்பின ஊக்குவிப்பு” என்று அன்றே சொன்னார் நம்மாழ்வார். #நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல... மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார். #நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு - தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறியதே இல்லை நம்மாழ்வார். #நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார். #விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள் என்பார். தனது கூட்டங்களிலும், ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார். #பி.டி. கத்திரியை இந்தியாவில் அறிமுகம் செய்யலாமா என்று அன்றைய மத்திய சுற்றுச்சூழல்அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டங்களில் தனது பிரதிநிதிகளை அனுப்பி பி.டி-க்கு எதிராகப் பேசச் செய்தார் நம்மாழ்வார். அதேபோல் நம்மாழ்வாரின் நண்பர்களான அரச்சலூர் செல்வம், டாக்டர் சிவராமன் ஆகியோர் அன்றைக்குத் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் நேரில் சென்று பி.டி-யின் கேடுகளை எடுத்துச் சொல்லி, தமிழகத்தில் அதற்குத் தடை உத்தரவும் பெற்றனர். #தொடக்கத்தில் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் தொடர்பாகப் பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக இயங்கிவந்தன. ஆனால், நம்மாழ்வார் ஆசைப்பட்டதாலேயே பூவுலகின் நண்பர்கள், ரிஸ்டோர், தமிழ்நாடு வணிகர்கள் சங்கம், பெண்கள் இணைப்புக் குழு, இந்திய நல்வாழ்வு நல்லறம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஒன்றிணைந்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு 2008-ல் தொடங்கப்பட்டது. #1990-களில் ஊடக விளம்பரங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரச்சாரங்கள் எனத் துரித உணவுக் கலாச்சாரம் இந்தியாவை மென்று தின்றுகொண்டிருந்தது. அப்போது இத்தாலி நாட்டில் நடந்த துரித உணவுக்கு எதிரான ஒரு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திரும்பிய நம்மாழ்வார், இங்கு ஆரம்பித்ததுதான் ‘ஸ்லோ ஃபுட் மூவ்மெண்ட்’. இன்றைக்கு, பளபளக்கும் பல்பொருள் அங்காடிகளில் கெலாக்ஸ்களுடன் நமது பாரம்பரியத் தானியங்களான சாமையும் கம்பும் போட்டிபோட முடிகின்றன என்றால், அதற்குக் காரணம் நம்மாழ்வாரே! #தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார். #நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள். #நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும். #கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். #காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார். #வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார். #அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார். #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪
🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 - ShareChat