mariappan kumaravel
ShareChat
click to see wallet page
@mariappan0462
mariappan0462
mariappan kumaravel
@mariappan0462
நன்றி மறவாத நல்ல மனம் போதும், என்பதே என் மூலதனம்.
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 ஓம் நமோ நாராயணா ஏழுமலை வாசா.எமை ஆளும் ஸ்ரீ நிவாசா கோவிந்தா ஹரி கோவிந்தா தை மாத புதன்கிழமை இனிய காலை வணக்கம் 💐🙏
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:19
#🚹உளவியல் சிந்தனை மதமா மனிதமா
🚹உளவியல் சிந்தனை - ShareChat
01:39
#🚹உளவியல் சிந்தனை அவர் இறந்து 39 ஆண்டுகளாகிவிட்டன. இன்றும் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் போதெல்லாம் 'எம்.ஜி.ஆர்' என்ற பெயரை உச்சரிக்கத் துவங்கிவிடுகிறார்கள். அவரோடு சமகாலத்தில் வாழ்ந்து மறைந்துபோன தலைவர்களை அரசியல்வாதிகள் மேடைகளில் மக்களுக்கு நினைவுபடுத்துகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆரை மட்டும் மக்கள் நினைவில் எப்போதுமே நிறுத்திவைத்திருக்கிறார்கள். இது எப்படி நடக்கிறது? நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது அவர் இறந்தார். என்னுடைய ப்ளஸ் டூ காலக்கட்டத்தில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்தார். ஆண்டிப்பட்டியில் அங்கிருந்தபடியே வெற்றியும் பெற்றார். நாடுதிரும்பி அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற போது அவரால் பேச இயலவில்லை. தனி அறையில் அன்றைய ஆளுநர் குரானா அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அது விமர்சனத்துக்கு உள்ளானது. பேச இயலாத அவர் எப்படி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்? என்ற கேள்வி வந்தது. அவரை 'ஊமையன்' என்று பலரும் எள்ளி நகையாடியதை நானே கேட்டிருக்கிறேன். அந்தச் சொல் அவரைச் சென்றடைந்திருக்க வேண்டும். அவரது உயில் அதைத்தான் உணர்த்துகிறது. நான் புகைப்படம் எடுக்கத்துவங்கிய ஆரம்பகாலத்தில் இராமவரம் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கும், பேச இயலாத, செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான கல்வி நிலையத்திற்கும் செல்ல நேர்ந்தது. அங்கு சில புகைப்படங்களை எடுத்தேன். உண்மையில் மனது கலங்கியிருந்தேன். ஆனால் அங்கு பயின்ற பலர் மென்பொருள் நிறுவனங்களில் நல்ல வேலையில் இருப்பதாக தகவல் கேட்டறிந்தேன். அவர்களால் அந்த வேலையில் திறனுடன் பணிபுரிய முடிவதாக பள்ளியின் ஆசிரியை சொன்னார். எம்.ஜி.ஆரை குறித்த பாடலொன்றை அந்த ஆசிரியை காலை வணக்கத்தின் போது பாடுகிறார். அந்தக் குழந்தைகள் அதை அவர்களுக்கான குறியீட்டு மொழியில் பின்தொடர்கிறார்கள். அந்தப் பாடலின் பொருள் எம்.ஜி.ஆரை, அந்தக் குழந்தைகளின் தந்தை என்று குறிப்பதாக இருக்கிறது. குழந்தைப் பேறு இல்லாத அந்த மனிதர், இன்று பல குழந்தைகளின் தந்தை என்ற நிலையிலிருந்து அவர்களின் எதிர்காலத்திற்கான பாதையை வகுத்துத் தருகிறார். காலம் அவரை மக்கள் மனதில் அழியாத இடத்தில் அதனாலேயே வைத்திருக்கிறது! -இரா.குண அமுதன்.
🚹உளவியல் சிந்தனை - ச்ன் I] hli ஈமி ஈட்சத்லைவர் வாi் ಖIl ) ) ಖಯIಖIT LL U ` ச்ன் I] hli ஈமி ஈட்சத்லைவர் வாi் ಖIl ) ) ಖಯIಖIT LL U ` - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 முருகன் என்றே முழங்குது என் மனசு.. கடலைப்போல உன் கருணை பெரிசு... ஓம் முருகாl தை மாத செவ்வாய்க்கிழமை 💐🙏 செந்தூர் முருகா 🙏🙏💐💐💐🙏நற்காலை வணக்கம்🙏💐
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:34
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #தாய் எனும் தெய்வங்கள்
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - காயப்படுத்தி விட்டு சொல்லும் காரணம் 8660016ف @-0!860»6[ காணாமல கடந்து விடுங்கள் 9 த்தில் பல அவமான Sml Qrru L 4 தப்பிக்கலாம் இருந்து ೧೦ காயப்படுத்தி விட்டு சொல்லும் காரணம் 8660016ف @-0!860»6[ காணாமல கடந்து விடுங்கள் 9 த்தில் பல அவமான Sml Qrru L 4 தப்பிக்கலாம் இருந்து ೧೦ - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 இன்றைய தினம் பிறந்த நாள் காணும் கழக அவைத் தலைவர் முன்னாள் வக்ஃபுவார்டு சேர்மன் மரியாதைக்குரிய அருமை அண்ணன் டாக்டர். அ. தமிழ் மகன் உசேன் அவர்களுக்கு தலைமைக் கழக பேச்சாளர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 👏👌👏👌👏👌👏👌👏👌👏👌 மக்கள்திலகத்தின் உண்மைத் தொண்டரின் 90வது பிறந்தநாள் இன்று..! (10.02.1936) MGR ன் உயிர் போன்ற யார் இந்த தமிழ்மகன் உசேன்? கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர் மீது தீவிர பற்று கொண்டவர். அரசுப் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் இவர். கடந்த 1972 ஆம் ஆண்டு தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது, நாகர்கோவிலில் இருந்து மேலூருக்கு தான் ஓட்டி வந்த அரசுப் பேருந்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆதரவு தெரிவித்தார். தனது அரசுப் பணியையும் ராஜினாமா செய்துவிட்டார். இதன்பின்னர், 'எம்.ஜி.ஆர் தனிக்கட்சியைத் தொடங்க வேண்டும்' என வலியுறுத்தியவர்களில் ஒருவராக இருந்தார். அவ்வாறு எம்.ஜி.ஆர் தனிக்கட்சியைத் தொடங்க வேண்டுமென சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ரத்தக் கையொப்பமிட்ட 11 பேரில் ஒருவராக தமிழ்மகன் உசேன் இருந்தார். அ.தி.மு.கவின் தொடக்ககாலத் தொண்டர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் தமிழ்மகன் உசேன், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வக்பு வாரியத் தலைவராகவும் பணியாற்றினார். 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அவர் பாளையம்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், 13 ஏப்ரல் 2016 அன்று தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் பின்னர் அவருக்கு பதிலாக ஹைதர் அலி அதிமுக அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திசம்பர் 1, 2021 அன்று, அவர் கட்சியின் இடைக்கால அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 23 சூன் 2022 அன்று, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் மகன் உசேன் அதிமுக கட்சியின் அவைத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனக்கு அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து பொதுக்குழுவில் பேசிய தமிழ்மகன் உசேன், '68 ஆண்டுகாலம் பொதுச் சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்த இயக்கத்தின் எளிய தொண்டனாக எந்தவித மனச் சங்கடங்களுக்கும் இடம் கொடுக்காமல் இருந்ததைப் புரிந்து கொண்டு என்னை கவுரவிக்கும் வகையில் அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஓர் ஏழைத் தொண்டனும் இந்தச் சபையில் அவைத் தலைவராகலாம் என்ற வரலாற்றை உருவாக்கித் தந்துள்ளனர்' எனக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
#தாய் எனும் தெய்வங்கள்
தாய் எனும் தெய்வங்கள் - ShareChat
#தாய் எனும் தெய்வங்கள்
தாய் எனும் தெய்வங்கள் - ShareChat
#தாய் எனும் தெய்வங்கள்
தாய் எனும் தெய்வங்கள் - ShareChat
#தாய் எனும் தெய்வங்கள் #தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான். அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன் தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள். அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்? இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம், சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் – என்றாள். மகனுக்கு ஒரே சந்தோஷம். அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன், ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய். அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான். தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக, என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன். அப்போது தாய் அமைதியாக சொன்னாள்: மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய் மகன் திகைத்து நின்றான். இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய். நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை. எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை. நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்
தாய் எனும் தெய்வங்கள் - புரபசித்தலைவர்எம்ஜிஆர் - செல்விஜெயலலிதா  0LII60 LI6 திரை தமிம் ரசிகன் புரபசித்தலைவர்எம்ஜிஆர் - செல்விஜெயலலிதா  0LII60 LI6 திரை தமிம் ரசிகன் - ShareChat