
மெய் கிறிஸ்தவம் | Christianity Original
@mei_kristhavam
கிறிஸ்துவின் இராஜ்யம் பூமி வருகிறது!
*#மாற்றுஇராஜ்யம்*
கர்த்தர் பவுலிடம், "பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து ரோமாபுரியில் சாட்சிகொடுக்கவேண்டும்," என்றார்.
*#பேரரசு* அவர்கள் சகோதரரை பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து, "உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை அரசர் என்று சொல்லி, ரோம பேரரசரின் கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்கள்," என்று கூக்குரலிட்டு, பட்டணத்து அதிகாரிகளை கலங்கப்பண்ணினார்கள். அப்போஸ்தலர் 23:11; 17:6-8.
ஆம், ரோம பேரரசு போன்ற மனிதனின் இராஜ்யங்கள் தான் தற்பொழுது உலகில் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அநீதி, அக்கிரமம், அநியாயம், கொடூரம், லஞ்சம், ஊழல், போர்கள், கொலை, கொள்ளை எல்லாம் பெருகி உள்ளன. ஆனால் இவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவரவிருக்கும் மகத்தான பேரரசு தான் கிறிஸ்துவின் இராஜ்யம்.
*#வரவிருக்கும்பேரரசு* அதில், நீதி, நியாயம், சமாதானம் செழிக்கும். மனிதர் அனைவரும் உயிர்பெற்று எழுவார்கள் (1கொரி 15:21-22). இழந்து போன அன்பிற்குரியவர்களை மீண்டும் கண்டு மகிழ்வார்கள். இன்னும் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த பேரரசில் நீங்களும் அரசர் ஆகலாம்!!
ஆம், இயேசு, "முடிவுபரியந்தம் என் *#கிரியைகளைக்* கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள் [உயிர்த்தெழுந்த மனுக்குலம்] மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இரும்புச்செங்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
*#கிரியைகள்* என்னைப் பின்பற்றிவா. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ போய், வரவிருக்கும் தேவனுடைய பேரரசைக் குறித்துப் பிரசங்கி," என்றார். வெளி 2:26-27, லூக்கா 9:59-60. #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
#gameofthrones நமக்கென ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். #அரசாங்கம் அவர் தோளின்மேல் வரும். ஏசாயா9:6. கல்லறையில் உள்ளோர் அனைவரும் அவர் சத்தத்தைக் கேட்டு எழும் காலம் வரும்! நல்லோர் ஜீவனுக்காகவும், தீயோர் நியாயத்தீர்ப்பிற்காகவும் எழுவர்." யோவான்5:28-29.
அவர் இரும்புச்செங்கோலால் அவர்களை ஆள்வார். வெளி12:5. "உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூமியின் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்." ஏசாயா26:9. #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴
*#அக்கினிக்குப்பின் #பரலோகத்தின்இராஜ்யம் #பூமியில்மறுபடிமக்கள் #உலகத்தின்முடிவுஅல்ல #யுகங்கள்வரும்இன்னும் #அடிப்படைவாதம்*
*இயேசு தனது ஊழியத்தின்போது பிரச்சாரம் செய்த முக்கிய செய்தியானது பூமியில் நிறுவப்படவிருக்கும் பரலோகத்தின் இராஜ்யம் (ஆதாவது பரலோகத்திலிருந்து ஆளப்படுகிற இராஜ்யம்) ஆகும்.*
அந்த *இராஜ்யம் பற்றின இறையியல் நம்பிக்கைகள் காலப்போக்கில் எங்ஙனம் மாறிவிட்டன* என்பதை திருச்சபை வரலாறு நமக்கு காண்பிக்கிறது.
இராஜ்யத்தைப் பற்றி தற்போது நிலவும் மூன்று பிரதான கோட்பாடுகளில் ஒன்றான நவீனத்துவ கோட்பாட்டிற்கு வேதவசன ஆதாரங்கள் எதுவும் இல்லை. இரண்டாவது கோட்பாட்டான அடிப்படைவாதத்திற்கு ஏதாவது வேதப்பூர்வ சான்றுகள் உள்ளனவா என்று இப்போது பார்க்கலாம்.
*அடிப்படைவாதிகள் அக்கினி உலகம் அழித்து போடும் என்று கூறுகின்றனர். இந்த "அக்கினி" என்ன? அதுகொண்டுவரும் அழிவுக்குப் பின் என்ன நடக்கவிருக்கிறது?*
"ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்.
*பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினாலே அழியும்.
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு,* நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்."(செப்பனியா 3:8-9).
இது ஒரு சுவாரஸ்யமான விசயம். ஏனெனில் –
1. பூமியை சுட்டெரிக்கும் அக்கினி என்பது எரிச்சலின் அடையாள அக்கினியாக காண்பிக்கப்படுகிறது.
2. இந்த *அக்கினி பூமியை அழித்த பிறகு, உலக ஜனங்கள் பூமியில் மீண்டும் திரும்பவும் இருக்கிறார்கள்!*
இவர்கள் எல்லோரும் உண்மையில் விசுவாசிகள் இல்லை, ஏனென்றால் அவர்களுக்கும் இன்னும் ‘சுத்தமான பாஷை’ தெரியவில்லை.
ஆம், *தற்போதைய உலக ஒழுங்குமுறையை அழித்தபின், தேவன் தம்முடைய இராஜ்யத்தை பூமியிலே நிலைநிறுத்தி,* உயிர்த்தெழுப்பப்பட்ட மனுக்குலம் அனைவர்க்கும் சத்தியத்தின் 'சுத்தமான பாஷையை' கற்றுக்கொள்வதற்கும் அவரை முழு இருதயத்தொடு ஒருமனப்பட்டு சேவிப்பதற்கும், வாய்ப்பளிக்கவிருக்கிறார்.
அடுத்த கேள்வி: மூன்றாவது கோட்பாடான *ஆன்மீகவாதத்திற்கு ஏதாவது வேதபூர்வ சான்றுகள் உள்ளனவா?* சிலர் யோவான் 18:36 வசனத்தை மேற்கோள் காட்டி *இராஜ்யம் என்பது ஓர் ஆன்மீக காரியமாக மட்டுமே இருக்கிறது என்று கூறுகிறார்கள்.* இந்த பார்வை சரியா? #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
*#உலகத்தின்முடிவுஅல்ல #பரலோகத்தின்இராஜ்யம் #யுகங்கள்வரும்இன்னும் #அடிப்படைவாதம்*
*இயேசு தனது ஊழியத்தின்போது பிரச்சாரம் செய்த முக்கிய செய்தியானது பூமியில் நிறுவப்படவிருக்கும் பரலோகத்தின் இராஜ்யம் (ஆதாவது பரலோகத்திலிருந்து ஆளப்படுகிற இராஜ்யம்) ஆகும்.*
அந்த *இராஜ்யம் பற்றின இறையியல் நம்பிக்கைகள் காலப்போக்கில் எங்ஙனம் மாறிவிட்டன* என்பதை திருச்சபை வரலாறு நமக்கு காண்பிக்கிறது.
இராஜ்யத்தைப் பற்றி தற்போது நிலவும் மூன்று பிரதான கோட்பாடுகளில் ஒன்றான நவீனத்துவ கோட்பாட்டிற்கு வேதவசன ஆதாரங்கள் எதுவும் இல்லை. இரண்டாவது கோட்பாட்டான அடிப்படைவாதத்திற்கு ஏதாவது வேதப்பூர்வ சான்றுகள் உள்ளனவா என்று இப்போது பார்க்கலாம்.
*அடிப்படைவாதிகள் உலகம் முடிந்து போகும் என்று கூறுகின்றனர். அது வேதாகமப்பூர்வ கூற்றா?*
*உலகத்தின் முடிவைப் பற்றி மத்தேயு 24:3 கூறவில்லையா?*
"உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?" - இங்கே *'ஏயியோன்' (aion) என்ற கிரேக்க வார்த்தையை 'உலகம்' (world) என்று சில தமிழ் வேதாகமங்கள் மொழிபெயர்க்கின்றன.*
உண்மையில் 'ஏயியோன்' என்றால் *'யுகம், நேரம், அல்லது காலம்' என்று பொருள்.*
எனவே மத்தேயு 24:3-இன் *சரியான மொழிபெயர்ப்பு '‘யுகத்தின் முடிவுக்கு அடையாளம் என்ன?’* என்பதாகும்.
மதிப்பிற்குரிய ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகள் (NIV/NASB) அதனை அவ்வாறே மொழிபெயர்க்கின்றன.
*இந்த யுகத்தின் முடிவு அடுத்த யுகத்தை (ஆயிரமாண்டு இராஜ்ய யுகத்தை) கொண்டுவரும்.*
அடுத்த கேள்வி: இது போன்ற யுக முடிவு ஏதேனும் பூமியில் இதற்கு முன் நிகழ்ந்துள்ளதா? #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴
#மீட்பு #உங்கள்அனுமதி #தேவைஇல்லை கடவுள் ஒருவரை தேர்ந்தெடுத்து விட்டால், அதன்பின் அந்த நபரை தன் சித்தத்தின் படி என்ன வேண்டுமென்றாலும் செய்யவைக்கிறார். எடுத்துக்காட்டு: யோனா தீர்க்கதரிசியின் கதை.
#இன்னொருஎடுத்துக்காட்டு #பவுல் சவுல் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். நடுங்கித் திகைத்தான். கர்த்தர், "நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ #செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்," என்றார்.
இயேசு, "நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நான் உங்களைத் தெரிந்துகொண்டேன். நான் உங்களை ஏற்படுத்தினேன்," என்றார்.
யோனா1:1-4,15-17, யோவான்15:16, அப்போஸ்தலர்9:3-6. #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
*#ஜெபம் #சேர்ந்துசெய் #இராச்சியம்வருவதாக #ஸ்டார்வார்ஸ்* *#செட்சேர்ந்துட்டாணுங்கப்பா*
"தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக." பிரசங்கி 5:2.
"அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம் நாமம் பரிசுத்தப்படுவதாக. உம் இராஜ்யம் வருவதாக, உம் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக."
மத்தேயு 6:7-10
அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
மத்தேயு 18:19-20 #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #📺அரசியல் 360🔴
#ஹிகுருமா #ஜுஜுட்சுகெயிசன் #தேவனின்இராஜ்யம் #திரும்பிவரப்போவதுயார் #எல்லாரும்தான் #📺அரசியல் 360🔴 #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
#சப்ரினா #தேவனின்இராஜ்யம் #பைபிளில்நரகம்இல்லை #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴
*#அபிஷேகம் #மேரி #நளதைலம் #யூதாஸ் #டைகர்கிங்*
பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனே கூடப்பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
யோவான் 12:1-8 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #🙏ஆன்மீகம்
*#சரியானஜெபம் #சுருக்கமாய்முடி #மெய்கிறிஸ்தவம்பழகு*
இயேசு, "அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, *அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.*
"அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள், உங்கள் பிதாவை நோக்கி *நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.*
"நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம் நாமம் பரிசுத்தப்படுவதாக. *உம் இராஜ்யம் வருவதாக,* உம் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக," என்றார். மத்தேயு 6:7-10.
பிரசங்கி நமக்கு அறிவுறுத்துகிறான், "தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் *சுருக்கமாயிருப்பதாக."* பிரசங்கி 5:2.
ஆமென். #🙏ஆன்மீகம் #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴










![🙏ஆன்மீகம் - ரஉளறி்கியான் யேசு தான் எனிசமல்ரி எ tachristianity Oiiginallcom கிறிஐெதீஹமீ ChristianityOriginal com/Kingdom] மத்தேயு 9:35 ta. ( ரஉளறி்கியான் யேசு தான் எனிசமல்ரி எ tachristianity Oiiginallcom கிறிஐெதீஹமீ ChristianityOriginal com/Kingdom] மத்தேயு 9:35 ta. ( - ShareChat 🙏ஆன்மீகம் - ரஉளறி்கியான் யேசு தான் எனிசமல்ரி எ tachristianity Oiiginallcom கிறிஐெதீஹமீ ChristianityOriginal com/Kingdom] மத்தேயு 9:35 ta. ( ரஉளறி்கியான் யேசு தான் எனிசமல்ரி எ tachristianity Oiiginallcom கிறிஐெதீஹமீ ChristianityOriginal com/Kingdom] மத்தேயு 9:35 ta. ( - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_914651_1fe5f668_1777344913141_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=141_sc.jpg)

