நாம் தமிழர் கட்சி
ShareChat
click to see wallet page
@naamtamilarkatchi
naamtamilarkatchi
நாம் தமிழர் கட்சி
@naamtamilarkatchi
நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | இணைய:
அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு சொற்பொழிவாளர்! இதழியல் மொழிநடையை உருவாக்கி தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தந்தை! அரசியல், இலக்கியம், சமயம் என பல்துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த தமிழறிஞர்! இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்து, தொழிலாளர் உரிமைபெறத் தோள்கொடுத்துத் துணைநின்ற புரட்சிப்போராளி! செந்தமிழும், சிவநெறியும் போற்றி வளர்த்த சைவப் பேரறிஞராகத் திகழ்ந்தபோதும் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இசுலாம் உள்ளிட்ட பல மதக் கோட்பாடுகளையும் கற்றுத்தேர்ந்த சமயப் பேதமற்ற சமூகச் சிந்தனையாளர்! அரசியல் அறிஞர், ஆகச்சிறந்த ஆசிரியர், படைப்புத் திறன்மிக்கப் பத்திரிகையாளர், தனித்தமிழியக்க முன்னோடி, பெண்ணுரிமைப் போராளி, சாதிய தீண்டாமையை எதிர்த்துப் போராடிய தீரர், சமரச சன்மார்க்க அருளாளர், காந்தியவாதி, பொதுவுடைமை சிற்பி என்ற பன்முகச் சிறப்பிற்குரிய பெருந்தகையாளர்! தமிழாகவே வாழ்ந்த, தமிழர் நலத்திற்காகவே வாழ்ந்த, தமிழ்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகவும், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் தன் வாழ்வெலாம் அரும்பாடுபட்ட நம்முடைய ஐயா தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் நினைவைப்போற்றுவோம்! #நாம்தமிழர்! https://x.com/Seeman4TN/status/1835877653322125498?t=NsZFRUZ8vDnKZ-R855QASA&s=19 - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர் #நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 17 முக்கிய தகவல்📢
📺செப்டம்பர் 17 முக்கிய தகவல்📢 - அருவிபோல் கொட்டும் அருந்தமிழ் பேச்சால் அறிவுக்கு விருந்தினைப் படைக்கும் ஆற்றல்மிகு சொற்பொழிவாளர் ! இதழியல் மொழிநடையை உருவாக்கி தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தந்தை ! அரசியல் , இலக்கியம் , சமயம் என பல்துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றி அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த தமிழறிஞர் ! இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்து , தொழிலாளர் உரிமைபெறத் தோள்கொடுத்துத் துணைநின்ற புரட்சிப்போராளி ! செந்தமிழும் , சிவநெறியும் போற்றி வளர்த்த சைவப் பேரறிஞராகத் திகழ்ந்தபோதும் சைவம் , வைணவம் , சமணம் , பௌத்தம் , இசுலாம் உள்ளிட்ட பல மதக் கோட்பாடுகளையும் கற்றுத் தேர்ந்த சமயப் பேதமற்ற சமூகச் சிந்தனையாளர் ! அரசியல் அறிஞர் , ஆகச்சிறந்த ஆசிரியர் , படைப்புத் திறன்மிக்கப் பத்திரிகையாளர் , தனித்தமிழியக்க முன்னோடி , பெண்ணுரிமைப் போராளி , சாதிய தீண்டாமையை எதிர்த்துப் போராடிய தீரர் , சமரச சன்மார்க்க அருளாளர் , காந்தியவாதி , பொதுவுடைமை சிற்பி என்ற பன்முகச் சிறப்பிற்குரிய பெருந்தகையாளர் ! தமிழாகவே வாழ்ந்த , தமிழர் நலத்திற்காகவே வாழ்ந்த , தமிழ்த் திருநாட்டின் வளர்ச்சிக்காகவும் , இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் தன் வாழ்வெலாம் அரும்பாடுபட்ட நம்முடைய ஐயா தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம் ! நாம் தமிழர் ! Sid செந்தமிழன் சீமான் செப்டம்பர் 17 2024 71 ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் நினைவைப் போற்றுவோம் ! தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி Seeman4TN ☎ Seeman4TN_Official ( f SenthamizhanSeeman - ShareChat
இன விடுதலை எனும் ஈடு இணையற்ற இலட்சியப் பயணத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு, அதற்காகவே தனது வாழ்வை ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துக் கொண்ட என் ஆருயிர் இளவல்!  நாம் தமிழர் எனும் பெரும் படையின் தொடக்க காலம் தொட்டு இன்றுவரை எத்தனை எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும், அத்தனையும் தோற்கடிக்க எம் தோளுக்குத் துணையாக நின்று, தமிழ் நிலத்தில் தமிழ்த்தேசிய அரசு மலர்ந்திட அல்லும் பகலும் அயராது சிந்தித்து, களப்பணியாற்றும் என் படைத்தளபதி! பேச்சு, எழுத்து, களப்பணி, அறிவாற்றல், ஆளுமைத்திறன் என எல்லா தனித்திறன்களையும் ஒருங்கே திரட்டி, தமிழ்த்தேசிய இனத்தின் இருளகற்ற தன்னை மெழுகுவர்த்தியாய் உருக்கிக்கொண்ட என் உயிருக்கினியவன்! நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சட்டத்தரணி மணிசெந்தில் அவர்களுக்கு அண்ணனின் அன்புநிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢
📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢 - இ I ன விடுதலை எனும் ஈடு இணையற்ற இலட்சியப் பயணத்தில் தன்னையும் , செப்டம்பர் 08 தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு , அதற்காகவே தன்னுடைய வாழ்வை ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துக் கொண்ட என் ஆருயிர் இளவல் ! நாம் தமிழர் எனும் பெரும் படையின் தொடக்க காலம் தொட்டு இன்றுவரை எத்தனை எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும் , அத்தனையும் தோற்கடிக்க , எம் தோளுக்குத் துணையாக நின்று , தமிழ் நிலத்தில் தமிழ்த்தேசிய அரசு மலர்ந்திட அல்லும் பகலும் அயராது சிந்தித்து , களப்பணியாற்றும் என் படைத்தளபதி ! பேச்சு , எழுத்து , கவிதை , களப்பணி , அறிவாற்றல் , ஆளுமைத்திறன் என எல்லா தனித்திறன்களையும் ஒருங்கே திரட்டி , தமிழ்த்தேசிய இனத்தின் இருளகற்ற தன்னை மெழுகுவர்த்தியாய் உருக்கிக்கொண்ட என் உயிருக்கினியவன் ! நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ! அன்புத்தம்பி மணி செந்தில் அவர்களுக்கு அண்ணனின் அன்புநிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ! 19 wwwwww OCCOIRE அன்புத்தம்பி சட்டத்தரணி SOUNI மணி செந்தில் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் செந்தமிழன் ' சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி Seeman4TN Seeman4TN_Official SenthamizhanSeeman - ShareChat
ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க, அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி, இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்! தான் உயிரோடு இருந்த நாள் வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற தன்னிகரில்லா படைத்தளபதி! தாயகம் காக்க விடுதலை நெருப்பாய் வெடித்துச் சிதறிய மாவீரன் சுந்தரலிங்கனாரின் இணையில்லா வீரத்தையும், ஈடில்லா ஈகத்தையும் போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று தாய்மண்ணைக் காப்போம் என்ற உறுதியினை ஏற்போம்! வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம்! #நாம்தமிழர்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢
📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢 - ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க , அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி , இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர் ! தான் உயிரோடு இருந்த நாள் வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற தன்னிகரில்லா படைத்தளபதி ! தாயகம் காக்க விடுதலை நெருப்பாய் வெடித்துச் சிதறிய மாவீரன் சுந்தரலிங்கனாரின் இணையில்லா வீரத்தையும் , ஈடில்லா ஈகத்தையும் போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே தன்மானத்தோடு நின்று தாய்மண்ணைக் காப்போம் என்ற உறுதியினை ஏற்போம் ! வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் வீரவணக்கத்தைச் செலுத்துவோம் ! நாம் தமிழர் ! செப்டம்பர் 08 2024 225 ஆம் ஆண்டு நினைவுநாள் ஒரே இரத்தம் ! அதே வீரம் ! வீரமிகு நமது பாட்டனார் சுந்தரலிங்க குடும்பனார் நினைவைப் போற்றுவோம் ! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி Seeman4TN Seeman4TN_Official ( f ) SenthamizhanSeeman - ShareChat
இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!  இயன்முறை மருத்துவத் துறையில்  பெருந்தொண்டாற்றி,  உலகெங்கிலும் பல கோடிக்கணக்கான மக்களின் உடலியக்கத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து, உடலை இயக்கும் திறன் பெற்ற இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவுகூர்வோம்! அதேநேரத்தில், மருத்துவத் துறையில் தங்கள் உரிமைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் இயன்முறை மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரம் இன்னும் வழங்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது. சென்ற ஆண்டு, துணை மருத்துவத் துறை சார்ந்த ஆணையம் அமைப்பது பற்றி, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் இயன்முறை மருத்துவர்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் (Technician) என்று வகைப்படுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக, இயன்முறை மருத்துவர்களின் கோரிக்கைகளை அங்கீகரித்து, தனி ஆணையம் (Physiotherapy Council) அமைத்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது நம் கடமையாகும்.  வாதம் என்னும் விலங்கை உடைத்து, முடியாது எனும் எண்ணம் தகர்த்து,  மருந்தில்லா மருத்துவம் செய்யும் மந்திரக்காரர்களுக்கு அன்பு நிறைந்த இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢
📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢 - இயன்முறை மருத்துவத் துறையில் பெருந்தொண்டாற்றி , உலகெங்கிலும் பல கோடிக்கணக்கான மக்களின் உடலியக்கத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து , உடலை இயக்கும் திறன் பெற்ற இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்வோம் ! அதேநேரத்தில் , மருத்துவத் துறையில் தங்கள் உரிமைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் இயன்முறை மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரம் இன்னும் வழங்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது . சென்ற ஆண்டு , துணை மருத்துவத் துறை சார்ந்த ஆணையம் அமைப்பது பற்றி , தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் இயன்முறை மருத்துவர்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் ( Technician ) என்று வகைப்படுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது . உடனடியாக , இயன்முறை மருத்துவர்களின் கோரிக்கைகளை அங்கீகரித்து , தனி ஆணையம் ( Physiotherapy Council ) அமைத்து , அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது நம் கடமையாகும் . வாதம் என்னும் விலங்கை உடைத்து , முடியாது எனும் எண்ணம் தகர்த்து , மருந்தில்லா மருத்துவம் செய்யும் மந்திரக்காரர்களுக்கு அன்பு நிறைந்த இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள் ! செப்டம்பர் 08 இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள் ! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி 08-09-2024 12 Seeman4TN ⑨ Seeman4TN_Official ( f SenthamizhanSeeman - ShareChat
சிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கி, தம் கடும் உழைப்பால் தமிழ்த்திரைப்படத் தாயாரிப்பாளர்களில் வெற்றிநாயகனாக மிளர்ந்த சாண்டோ சின்னப்பத்தேவர் என்றழைக்கப்பட்ட மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று! ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து, குடும்பத்தின் வறியச் சூழலால் இரும்பு அடிக்கும் பணிபுரிந்த போதிலும், ஜெர்மானிய உடற்கலைவல்லுநர்  ’யூஜின் சாண்டோ’ மீது கொண்ட அளப்பரிய ஈர்ப்பால், அயராது முயன்று, தானும் ஒரு உடற்கலை வல்லுநரானதோடு, தன்பெயரின் முன்னாலும் சாண்டோ என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொண்டவர்! பரம்பரை செல்வந்தர்கள் மட்டுமே கோலோச்சிய தமிழ்த்திரைத்துறையில் பாமரனும் படம் எடுத்து சாதிக்க வைக்க முடியும் என்பதை தன்னுடைய தேவர் பிலிம்ஸ் மூலம் நிரூபித்த கலைமேதை! இந்திய அளவில் புகழ் உச்சியில் இருந்த நடிகர்களையெல்லாம் தம் நேரந்தவறாமை எனும் கட்டளைக்குள் கட்டுப்படவைத்த திறமையான நிர்வாகி! தன் படத்திற்காக உழைக்கும் துணைநடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை தொழிலாளர்களின் வியர்வைக் காய்வதற்குள் உரிய நேரத்தில் ஊதியம் கொடுத்த உத்தமர்! ஆறறிவு மனிதர்களை மட்டுமல்ல ஐந்தறிவு விலங்குகளை நடிக்க வைத்தும் வெற்றிப்படங்களை வெளியிட முடியும் என்பதைச் செய்து காட்டிய சாதனையாளர்!   திரைக்கலை மீதான காதலால், தன்னிகரில்லா தயாரிப்பாளராக உயர்ந்து, காலத்தால் அழியாத காவியப்படைப்புகளைத் தந்த  கலைத்தாயின் தலைமகன் நமது ஐயா சாண்டோ சின்னப்பத்தேவரின் நினைவைப்போற்றுவோம்! #நாம்தமிழர்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢
📺செப்டம்பர் 08 முக்கிய தகவல்📢 - சிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கி , தம் கடும் று உழைப்பால் தமிழ்த்திரைப்படத் தாயாரிப்பாளர்களில் வெற்றிநாயகனாக மிளர்ந்த சாண்டோ சின்னப்பத்தேவர் என்றழைக்கப்பட்ட மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று ! ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து , குடும்பத்தின் வறியச் சூழலால் இரும்பு அடிக்கும் பணிபுரிந்த போதிலும் , ஜெர்மானிய உடற்கலைவல்லுநர் ' யூஜின் சாண்டோ ' மீது கொண்ட அளப்பரிய ஈர்ப்பால் , அயராது முயன்று , தானும் ஒரு உடற்கலை வல்லுநரானதோடு , தன்பெயரின் முன்னாலும் சாண்டோ என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொண்டவர் ! பரம்பரை செல்வந்தர்கள் மட்டுமே கோலோச்சிய தமிழ்த்திரைத்துறையில் பாமரனும் படம் எடுத்து சாதிக்க வைக்க முடியும் என்பதை தன்னுடைய தேவர் பிலிம்ஸ் மூலம் நிரூபித்த கலைமேதை ! இந்திய அளவில் புகழ் உச்சியில் இருந்த நடிகர்களையெல்லாம் தம் நேரந்தவறாமை எனும் கட்டளைக்குள் கட்டுப்படவைத்த திறமையான நிர்வாகி ! தன் படத்திற்காக உழைக்கும் துணைநடிகர்கள் முதல் செப்டம்பர் 08 2024 46 ஆம் ஆண்டு நினைவுநாள் கலைத்தாயின் தலைமகன் சாண்டோ தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை தொழிலாளர்களின் சின்னப்பத்தேவர் வியர்வைக் காய்வதற்குள் உரிய நேரத்தில் ஊதியம் கொடுத்த உத்தமர் ! ஆறறிவு மனிதர்களை மட்டுமல்ல ஐந்தறிவு விலங்குகளை நடிக்க வைத்தும் வெற்றிப்படங்களை வெளியிட முடியும் என்பதைச் செய்து காட்டிய சாதனையாளர் ! திரைக்கலை மீதான காதலால் , தன்னிகரில்லா தயாரிப்பாளராக உயர்ந்து , காலத்தால் அழியாத காவியப்படைப்புகளைத் தந்த கலைத்தாயின் தலைமகன் நமது ஐயா சாண்டோ சின்னப்பத்தேவரின் நினைவைப்போற்றுவோம் ! நாம் தமிழர் ! நினைவைப் போற்றுவோம் ! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி Seeman4TN © Seeman4TN_Official f SenthamizhanSeeman - ShareChat
திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?  சென்னை சைதாப்பேட்டை மற்றும்  அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதியின்றி நடைபெற்றதா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் நடைபெற்றதா? அப்படி தெரியாமல் நடைபெறுகிறது என்றால் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? அந்த அளவிற்கு அரசு வலிமையற்றதாக இருக்கிறதா? ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின், அமைச்சகத்தின் அனுமதியோடுதான் நடைபெற்றதென்றால் அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது?  ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வுகள் அரங்கேறி கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிலிருந்து அரசு பாடம் கற்கவில்லையா? பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்? அறிவுக்கருவறையில் நம்மைச் சுமக்கின்ற தாயாகத் திகழும் ஆசிரியப்பெருமக்களைப்  பார்க்கும்போது வணங்குவது, மனதில் வைத்து போற்றுவதுதான் தமிழர் மரபு. அதைவிடுத்து ஆசிரியர் தினமன்று, ஆசிரியர் கால்களை மாணவ- மாணவியர் கழுவி, அதற்கு பூசைகள் செய்வது என்ன மாதிரியான நடைமுறை? இதெல்லாம் யாருடைய பண்பாடு?  அத்தனையையும் அனுமதித்துவிட்டு, வெளியே தெரிந்து விமர்சனங்கள் எழுந்தவுடன் அரசும், அமைச்சகமும் தப்பித்துக்கொள்ள ஒவ்வொரு முறையும் கடைநிலை அரசு ஊழியர்களைப் பலியாக்குவது ஏன்? அரச நிர்வாகத்தில் எத்தகைய தவறு நிகழ்ந்தாலும் அரசும், தொடர்புடைய அமைச்சகமும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனையாமல் தவறுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்று, மக்களிடம்  மன்னிப்புக்கோருவதோடு, இனி அத்தவறுகள் நிகழாது என உறுதியளித்து அதன்படி  செயல்படுவதுதானே ஒரு நல்ல அரசின் நேர்மையான நிர்வாக நடைமுறையாக இருக்க முடியும்? ஆகவே, சென்னை அசோக்நகர் பள்ளியின் தலைமையாசிரியர் அம்மா தமிழரசி அவர்களுக்கு  வழங்கியுள்ள இடமாற்ற தண்டனையை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற வேண்டுமெனவும், இனி இதுபோன்ற தவறுகள் நிகழாது மிக கவனமாகச் செயல்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் வாயிலாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர் #நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 07 முக்கிய தகவல்📢
📺செப்டம்பர் 07 முக்கிய தகவல்📢 - ப்பரய NaamTamilarkatchioffl wwwnaamtamilar org NNaamTamilarOrg 07-09-2024 &_} பரசினர் திமுக அரசின் மல்வேலம் புள்ளி நிர்வாகத்தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா? செந்தமிழன் சீமான் கண்டனம் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழர் கட்சி [  ப்பரய NaamTamilarkatchioffl wwwnaamtamilar org NNaamTamilarOrg 07-09-2024 &_} பரசினர் திமுக அரசின் மல்வேலம் புள்ளி நிர்வாகத்தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா? செந்தமிழன் சீமான் கண்டனம் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழர் கட்சி [ - ShareChat
"தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு தாரைவார்க்க நீங்கள் யார்?  பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள்" என்று இந்திராகாந்தி அரசைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில்  முழங்கியபோது, இடைமறித்த காங்கிரசாரை நோக்கி, 'நீங்கள் எங்களின் துரோகிகள்' என்று அன்றே அடையாளப்படுத்தி வெளிநடப்பு செய்த உறங்காப்புலி..! களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தொகுதி மாறாது வென்று சரித்திர சாதனை படைத்த ஒப்பற்ற தலைவர்..! உசிலம்பட்டி, நீலித்தநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவி சாதி, மதம் பாராது ஏழை குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த வள்ளல்..! வட இந்தியாவில் குடியேறும் அகதிகளைவிட  தமிழ்நாட்டு மக்களுக்கு குறைவான நிதி ஒதுக்குவதாக அன்றே இந்திய அரசை  கண்டித்து தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்த பெருந்தகை..! இந்தியக் கட்சியில் தலைமையேற்று இருந்தபோதிலும், இருமொழி கொள்கையை ஏற்காமல் இந்தியைத் திணித்தால் இந்த நாட்டின் ஒருமைப்பாடு உடைபடும் என்று இந்திய அரசைத் துணிவுடன் எச்சரித்த தீரர்..! முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை  உயர்த்தி தென்மாவட்ட வறட்சியைப் போக்க வேண்டும்(1965), கிருஷ்ணா நதிநீரைக் கொண்டுவந்து சென்னையின் குடிநீர்த் தேவை தீர்க்க வேண்டும் (1969), தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் (1975), நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் (1969) என்று தமிழ்நாட்டின் தீர்க்க முடியா சிக்கல்களுக்கு தீர்க்க தரிசனத்தோடு தீர்வு சொன்ன தேவர் தந்த தேவர்! ஐயா மூக்கையாத்தேவரின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே உண்மையும், நேர்மையுமாக நின்று மண்ணுக்கும், மக்களுக்கும் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்! 'தேவர் தந்த தேவர்' உறங்காப்புலி ஐயா மூக்கையாத்தேவர் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்! #நாம்தமிழர்! https://x.com/Seeman4TN/status/1831926767902511168 - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர் #நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 06 முக்கிய தகவல்📢
📺செப்டம்பர் 06 முக்கிய தகவல்📢 - இந்திய கட்சியில் தலைமையேற்று இருந்தபோதிலும் , இருமொழி கொள்கையை ஏற்காமல் இந்தியை திணித்தால் இந்த நாட்டின் ஒருமைப்பாடு உடைபடும் என்று இந்திய அரசை துணிவுடன் எச்சரித்த தீரர் .. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தி தென்மாவட்ட வறட்சியைப் போக்க வேண்டும் ( 1965 ) , கிருஷ்ணா நதிநீரை கொண்டுவந்து சென்னையின் குடிநீர் தேவை தீர்க்க வேண்டும் ( 1969 ) , தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ( 1975 ) , நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் ( 1969 ) என்று தமிழ்நாட்டின் தீர்க்க முடியா சிக்கல்களுக்கு தீர்க்கத்தரிசனத்தோடு தீர்வு சொன்ன தேவர் தந்த தேவர் ஐயா மூக்கையாத் தேவரின் நினைவைப் போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே உண்மையும் , நேர்மையுமாக நின்று மண்ணுக்கும் , மக்களுக்கும் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம் ! ' தேவர் தந்த தேவர் ' உறங்காப்புலி ஐயா மூக்கையாத் தேவர் அவர்களுக்கு புகழ்வணக்கம் ! செப்டம்பர் 06 2024 45 ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழினப் பெருமகன் - கல்வி வள்ளல் நமது தாத்தா பா.கா.மூக்கையாத் தேவர் நினைவைப் போற்றுவோம் ! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி 2 Seeman4TN 6 Seeman4TN_Official f ) SenthamizhanSeeman - ShareChat
ஆசு என்றால் குற்றம்;  இரியர்  என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள். நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள்! கல்வி அறிவு சிறந்ததுதான்; ஆனால், அதைவிடவும் சிறந்தது கேள்வி அறிவு! ஏனென்றால், கல்வி என்பது உள்ளதை உள்ளபடி நம் அறிவைக் கொண்டு நாம் கற்பது; ஆனால் கேள்வி என்பது ஆசிரியர் தம் அறிவையும், அனுபவத்தையும் கலந்து நம் ஒவ்வொருவருக்கும் ஊட்டுவது! அதனால்தான் நமது பாட்டன் வள்ளுவப்பெருமகனார், ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்றார்.  ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள். அறிவின் விழிகொண்டு அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த நல் ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள். எங்கோ வான் பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியில், எளிய கிராமத்தில் பிறந்த என்னையெல்லாம் உருவாக்கித் தந்த என்னுடைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும், மதிப்போடும் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன். நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன். அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி  #teachersday2024 #👨‍🏫ஆசிரியர் தின வாழ்த்துக்கள்💐
👨‍🏫ஆசிரியர் தின வாழ்த்துக்கள்💐 - அறிவுக் கருவறையாகத் திகழும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ! ஆசு என்றால் குற்றம் ; இரியர் என்றால் அகற்றுபவர் . ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள் . நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல ; நம் எண்ணங்களில் , சொற்களில் , செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் உ வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும் உயர்ந்த உள்ளங்கள்தான் ஆசிரியப்பெருமக்கள் ! கல்வி அறிவு சிறந்ததுதான் ; ஆனால் , அதைவிடவும் சிறந்தது கேள்வி அறிவு ! ஏனென்றால் , கல்வி என்பது உள்ளதை உள்ளபடி நம் அறிவைக் கொண்டு நாம் கற்பது ; ஆனால் கேள்வி என்பது ஆசிரியர் தம் அறிவையும் , அனுபவத்தையும் கலந்து நம் ஒவ்வொருவருக்கும் ஊட்டுவது ! அதனால்தான் நமது பாட்டன் வள்ளுவப்பெருமகனார் , ‘ செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை ' என்றார் . ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள் . ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள் . தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார் . ஆசிரியப்பெருமக்கள்தான் அந்தக் குழந்தையை இந்த உலகிற்கே காண்பிக்கிறார்கள் . அறிவின் விழிகொண்டு அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த நல் ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள் . எங்கோ வான் பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியில் , எளிய கிராமத்தில் பிறந்த என்னையெல்லாம் உருவாக்கித் தந்த என்னுடைய ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் நன்றியோடும் , மதிப்போடும் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன் . நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் அறிவுக் கருவறையாகத் திகழும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் நாளில் வணங்கி மகிழ்கிறேன் . அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் ! செந்தமிழன்'சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி ( Seeman4TN Seeman4TN_Official SenthamizhanSeeman - ShareChat
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது. ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கப்பதக்கமும், 2020 ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்ற தம்பி மாரியப்பன் தங்கவேலு, தற்போது வெண்கலம் வென்றதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாம் முறையாக பதக்கம் வென்ற சாதனையைப் படைத்துள்ளது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும், தமிழ் மண்ணிற்கும் அளவிலாப் பெருமையைச் சேர்த்திருக்கிறது.  இம்மகிழ்வான தருணத்தில் அவரது வெற்றிக்குத் துணைநின்ற பெற்றோருக்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்து வளர்த்தெடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் மென்மேலும் சாதனை புரிய என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பும், வாழ்த்துகளும்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #🥳ஹாட்ரிக் பதக்கம் வென்ற மாரியப்பன்🏅
🥳ஹாட்ரிக் பதக்கம் வென்ற மாரியப்பன்🏅 - பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாம் முறையாக பதக்கம் வென்று சாதனையைப் படைத்துள்ள அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த அன்பும் , வாழ்த்துகளும் ! பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் , பெருமிதத்தையும் தருகிறது . ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கப்பதக்கமும் , 2020 ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்ற மாரியப்பன் தங்கவேலு , தற்போது வெண்கலம் வென்றதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றாம் முறையாக பதக்கம் வென்ற சாதனையைப் படைத்துள்ளது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் , தமிழ் மண்ணிற்கும் அளவிலாப் பெருமையைச் சேர்த்திருக்கிறது . இம்மகிழ்வான தருணத்தில் அவரது வெற்றிக்குத் துணைநின்ற பெற்றோருக்கும் , ஆக்கமும் ஊக்கமும் தந்து வளர்த்தெடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கும் , பயிற்சியாளர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் . அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் மென்மேலும் சாதனை புரிய என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பும் , வாழ்த்துகளும் ! INDIA செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி 04-09-2024 SeemanOfficial SenthamizhanSeeman www.seeman4tn.com - ShareChat
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும், 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், அன்புத்தங்கை மனிசா ராமதாஸ் மற்றும் அன்புத்தங்கை நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்ற செய்தியறிந்து பெருமிதமும், மிகுந்த மனமகிழ்வும் அடைந்தேன். பிறந்த தமிழ் மண்ணிற்கும், பேணி வளர்த்த பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள அன்புத்தங்கைகள் துளசிமதி முருகேசன், மனிசா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் மேலும் பல பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்று,  பதக்கங்கள் வென்று சாதனை படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்! ஒலிம்பிக் போட்டியில் பெற முடியாத தங்கப்பதக்கத்தை வென்றதோடு, இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 15 பதக்கங்களை வென்று இந்தியப் பெருநாட்டினைப் பதக்கப்பட்டியலில் முன்னிலைப்படுத்திச் சாதனை புரிந்துள்ளதன் மூலம் பாரா ஒலிம்பிக் வீரர் – வீராங்கனைகள், தாங்கள் மாற்றுத்திறன் படைத்தவர்கள் அல்ல; நாங்கள்தான் உண்மையான திறன் படைத்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்! பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்-வீராங்கனைகளுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #📺செப்டம்பர் 04 முக்கிய தகவல்📢
📺செப்டம்பர் 04 முக்கிய தகவல்📢 - வளர்த்த பல (NDIA பெற 7 06160086u10 6160 15 அனைத்து வீரர் 03-09-2024 f SenthamizhanSeeman Seeman4TN_Official SeemanATN நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! ரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சோந்த அன்புத்தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும் அன்புத்தங்கை மனிசா ராமதாஸ் மற்றும் அன்புத்தங்கை நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்ற செய்தியறிந்து பெருமிதமும் மிகுந்த மனமகிழ்வும் அடைந்தேன். பிறந்த தமிழ் மண்ணிற்கும், பேணி பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள அன்புத்தங்கைகள் துளசிமதி முருகேசன், மனிசா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் மேலும் பன்னாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைக்க பங்கேற்று, என்னுடைய அன்பும், வாழ்த்துகளும் ! ஒலிம்பிக் போட்டியில் முடியாத தங்கப்பதக்கத்தை இதுவரை 3 தங்கம் 5 வெள்ளி, வென்றதோடு, பதக்கங்களை வென்று இந்தியப் பெருநாட்டினைப் பதக்கப்பட்டியலில் முன்னிலைப்படுத்திச் சாதனை புரிந்துள்ளதன் மூலம் ஒலிம்பிக் வீரர் - வீராங்கனைகள், தாங்கள் பாரா மாற்றுத்திறன் படைத்தவர்கள் அல்ல; நாங்கள்தான் திறன் படைத்தவர்கள் என்பதை உண்மையான நிரூபித்துள்ளனர் ! பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீராங்கனைகளுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! செந்தமிழன் சீமான் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம்  வளர்த்த பல (NDIA பெற 7 06160086u10 6160 15 அனைத்து வீரர் 03-09-2024 f SenthamizhanSeeman Seeman4TN_Official SeemanATN நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! ரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் 17வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் இறகுப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சோந்த அன்புத்தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும் அன்புத்தங்கை மனிசா ராமதாஸ் மற்றும் அன்புத்தங்கை நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்ற செய்தியறிந்து பெருமிதமும் மிகுந்த மனமகிழ்வும் அடைந்தேன். பிறந்த தமிழ் மண்ணிற்கும், பேணி பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள அன்புத்தங்கைகள் துளசிமதி முருகேசன், மனிசா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் மேலும் பன்னாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைக்க பங்கேற்று, என்னுடைய அன்பும், வாழ்த்துகளும் ! ஒலிம்பிக் போட்டியில் முடியாத தங்கப்பதக்கத்தை இதுவரை 3 தங்கம் 5 வெள்ளி, வென்றதோடு, பதக்கங்களை வென்று இந்தியப் பெருநாட்டினைப் பதக்கப்பட்டியலில் முன்னிலைப்படுத்திச் சாதனை புரிந்துள்ளதன் மூலம் ஒலிம்பிக் வீரர் - வீராங்கனைகள், தாங்கள் பாரா மாற்றுத்திறன் படைத்தவர்கள் அல்ல; நாங்கள்தான் திறன் படைத்தவர்கள் என்பதை உண்மையான நிரூபித்துள்ளனர் ! பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீராங்கனைகளுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! செந்தமிழன் சீமான் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் - ShareChat