நாம் தமிழர் கட்சி
ShareChat
click to see wallet page
@naamtamilarkatchi
naamtamilarkatchi
நாம் தமிழர் கட்சி
@naamtamilarkatchi
நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | இணைய:
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் தோல்வி காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் தனியார் மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்துள்ள கொடுந்துயர நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவலியையும் தருகின்றது. “மருத்துவக் கட்டமைப்பில் வட மாநிலங்களைவிட முன்னேறி, முதலிடத்தில் இருக்கிறோம்” என்றெல்லாம் தற்பெருமை பேசும் திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்தது உலக அளவில் மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீ சான் பார்மா (Shri Saan Pharma)  நிறுவனத்தின் ‘Coldrif’ இருமல் மருந்தில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ப்ரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol) அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டிருந்ததே 20 இளந்தளிர்களின் இன்னுயிர் பறிக்கப்பட முதன்மைக் காரணம் என்பது தற்போதைய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ சான் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன் மத்திய பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் (Drug Control Department) நடத்திய ஆய்வில், அந்த நிறுவனத்தில் 14 ஆண்டுகளாக எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முந்தைய அதிமுக அரசு மற்றும் தற்போதைய திமுக அரசுகளின் அலட்சியத்தால், ஸ்ரீ சான் பார்மா நிறுவனம் மொத்தம் 364 விதிமீறல்களைக் கடந்த 14 ஆண்டுகளில் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க கடந்த 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளில் நிலவும் ஊழல் முறைகேடுகளே அடிப்படை காரணமாகும். மருந்தகங்களில் மாதம் 1000 ரூபாயும், மருத்துவமனைகளில் மாதம் 2000 ரூபாயும், இலஞ்சமாக வசூலிக்கும் தமிழ்நாடு மருத்துவத் துறை அதிகாரிகள், இந்நிறுவனங்களிடமிருந்து இலட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளனர் என்பதும் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. - செந்தமிழன் #சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் #நாம்தமிழர்கட்சி #நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - Pa೧೭r o a nte Nroroe = e C காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உபிரைப் பறித்துள்ளது தமிழ்ஙாடு சுகாதாரத் துறையின் தோல்வி! செந்தமிழன் சீமான் கண்டனம் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி X NaamlamilarOrs Naamlamilarorg NaamTamilarKatchioff 10-10-2025 Pa೧೭r o a nte Nroroe = e C காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 பிஞ்சுக் குழந்தைகளின் உபிரைப் பறித்துள்ளது தமிழ்ஙாடு சுகாதாரத் துறையின் தோல்வி! செந்தமிழன் சீமான் கண்டனம் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி X NaamlamilarOrs Naamlamilarorg NaamTamilarKatchioff 10-10-2025 - ShareChat
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், முன்னாள் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!   சமூகநீதிக்காகவும்,  தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான  தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும்! சிறக்கட்டும்! - செந்தமிழன் #சீமான்  தலைமை ஒருங்கிணைப்பாளர்  #நாம்தமிழர்கட்சி #நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - முன்னாள் அமைச்சர் சுகாதாரத்துறை ஒன்றிய அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு  ஐயா நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! LITLLITST 18 09-10-2025 பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், முன்னாள் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்  மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர்  அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ! சமூகநீதிக்காகவும், தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும் ! சிறக்கட்டும் ! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் ಪupi ` கட்சி நாம் Seemdn4TN SenthamizhanSeeman  SeemanATN Official முன்னாள் அமைச்சர் சுகாதாரத்துறை ஒன்றிய அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு  ஐயா நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! LITLLITST 18 09-10-2025 பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், முன்னாள் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்  மதிப்பிற்குரிய ஐயா மருத்துவர்  அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ! சமூகநீதிக்காகவும், தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் தொடரட்டும் ! சிறக்கட்டும் ! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் ಪupi ` கட்சி நாம் Seemdn4TN SenthamizhanSeeman  SeemanATN Official - ShareChat
நேற்று 27-09-2025 கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தியறிந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் இன்று 28-09-2025 கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  மேலும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் உறவுகளையும் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, விரைந்து நலம் பெற்று வர அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். https://www.youtube.com/live/9S3hQr_EPWo?si=2Y2d-KjQ81GlAXRY  #KarurStampede | #STAMPEDE | #Karur | #TVKVijay #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி
😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி - ShareChat
தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்திமான் கருத்து ன் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஆட்சியாளர்களே! - சீமான் கடும் கண்டனம் @M.K.Stalin @PriyarajanDMK @Subramanian_ma @supriyasahuias @TThenarasu @MMathiventhan @chennaicorp @KN_NEHRU தங்களது வாழ்வாதார உரிமைகோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, கொடும் தாக்குதல் தொடுத்து, திமுக அரசு ஏவியிருக்கும் அடக்குமுறையானது அரசப்பயங்கரவாதத்தின் உச்சம். விளிம்பு நிலை மக்களின் நியாயமானக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, அவர்கள் மீது பாய்ச்சப்பட்டுள்ள ஒடுக்குமுறையானது கடும் கண்டனத்திற்குரியது. ‘சமூக நீதி’ எனும் சொல்லாடலைத் தாங்கள்தான் பிரசவித்தது போல, மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே! அடித்தட்டு உழைக்கும் மக்களின் மீது அதிகார வலிமைக் காட்டி, அடக்கி ஒடுக்குவதுதான் சமூக நீதியா? வாயிலும், வயிற்றிலடித்துக் கொண்டு கதறியழும் எளிய மக்களின் கண்ணீரும், ஓலமும் உங்கள் கல்மனதைக் கரைக்க வில்லையா? ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்றீர்களே, மொத்த தமிழ்நாடும் தூய்மைப்பணியாளர்கள் பக்கம் நிற்கிறது. நீங்கள் எந்த அணியில் நிற்கிறீர்கள்? ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்றீர்களே, எங்கள் உழைக்கும் மக்களோடு நிற்க மறுத்து, தனியார் முதலாளிக்கு எதற்கு வெண்சாமரம் வீசுகிறீர்கள்? சென்னை எனும் மாநகரத்தைத் தங்களது உழைப்பினால் உருவாக்கியது; உருமாற்றியது ஆதித்தொல் குடிமக்கள். ‘சிங்காரச்சென்னை’ என இன்றைக்கு தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். அதனை உருவாக்க இரத்தத்தை வியர்வையாய் நாளும் சிந்தி, அரும்பாடு பட்டு உழைத்தது ஆதித்தொல்குடி மக்கள்தான்; சேரிகளிலும், குப்பங்களிலும் வாழும் மண்ணின் மக்கள்தான். அந்த மக்கள் இன்றைக்குத் தூய்மைப்பணியாளர்களாக நிற்கிறார்கள். அவர்கள் போராடியது பொன்னையோ, பொருளையோ கேட்டல்ல; அடிப்படை வாழ்வாதார உரிமையைக் கேட்டு! அதனை செய்துகொடுப்பதில் என்ன சிக்கல்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் திமுக அரசு, தமிழ்நாட்டில் தூய்மைப்பணியைத் தனியார்மயமாக்குவதற்காக இந்தளவுக்கு வரிந்துகட்டுவது ஏன்? இதுதான் உங்கள் திராவிட மாடல் ஆட்சியா? போராடும் தூய்மைப்பணியாளர்களை ஏறெடுத்தும் பாராத உங்களுக்குக் கம்யூனிசம், சோசலிசம் குறித்தெல்லாம் பேசுவதற்குக் கூச்சமாக இல்லையா? மானக்கேடு! - சீமான் #நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும் பதவி மமதையும், ணவவெறியும் அடங்கும் வெகுதொலைவில் நாள் ஆ இல்லை ஆட்சியாளர்களே! செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழர் கட்சி நாம் JL1ಯs NaamTamilarOrg NaamTamilarkatchiOff 14-08-2025 wwwnaamtamilarorg தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும் பதவி மமதையும், ணவவெறியும் அடங்கும் வெகுதொலைவில் நாள் ஆ இல்லை ஆட்சியாளர்களே! செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழர் கட்சி நாம் JL1ಯs NaamTamilarOrg NaamTamilarkatchiOff 14-08-2025 wwwnaamtamilarorg - ShareChat
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக ஆடி 26ஆம் நாள் 11-08-2025 சென்னை மைலாப்பூர் சி.ஐ.டி. குடியிருப்புப் பகுதியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் 'எது நமக்கான அரசியல்?' என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கத்தில், #நாம்தமிழர்கட்சி-யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துரையாற்றினார். https://www.youtube.com/live/chOmlLxzu4U?si=oDLxKLoCdoAo9jW2 #நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி - நடத்தும் எது நமக்கான அரசியல் ? நம்முடைய கேள்விகளுக்கு மிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  ಗDಯ அவர்களின்பதில்  நடத்தும் எது நமக்கான அரசியல் ? நம்முடைய கேள்விகளுக்கு மிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  ಗDಯ அவர்களின்பதில் - ShareChat
மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்! "மேய்ச்சல் நிலம் என்பது எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, ஆடி 18ஆம் நாள் (03-08-2025) காலை 10 மணியளவில் தேனி மாவட்டம், அடப்பாறையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை முன்னெடுத்த, மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/rfyEHq3mulE  https://youtu.be/xR6NvwX2XYc https://youtu.be/5PsG8gKmEgA https://youtu.be/X09IjcBOHaM #📢ஆகஸ்ட் 3 முக்கிய தகவல்🤗
📢ஆகஸ்ட் 3 முக்கிய தகவல்🤗 - Ohan Ohan - ShareChat
#தேவேந்திரகுலவேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, #நாம்தமிழர்கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் அன்று (02-08-2025) மாலை 05  மணியளவில் #தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. https://www.youtube.com/live/w-uqZ3fVgt0?si=SnK0TSTxujDTPBRK #பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை #🔱ஆடி பெருக்கு🌊
🔱ஆடி பெருக்கு🌊 - மண்டிபிபா மானம்ப கட்சி ೯ಐಐಟಕೆ வீழ்ந்துவிபா வீரம்ப ಗೆmಗ A(1 கேோம் il(e; பல்பிர ০০ TI 5ட மண்டிபிபா மானம்ப கட்சி ೯ಐಐಟಕೆ வீழ்ந்துவிபா வீரம்ப ಗೆmಗ A(1 கேோம் il(e; பல்பிர ০০ TI 5ட - ShareChat
பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த  மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர #நாம்தமிழர்கட்சி துணை நிற்கும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் உறுதி அளித்தார். https://youtube.com/live/ybbNthpdgac?feature=share #JusticeForKavin #சீமான்
சீமான் - ShareChat
சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின்குமார் மரணத்தில் தொடர்புடைய கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின்குமார் அவர்கள் பட்டப்பகலில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியின் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். நவீனமும், அறிவியல் தொழில்நுட்பமும் உச்சப்பட்ச வளர்ச்சி பெற்றிருக்கும் தற்காலத்தில் நடந்தேறும் இத்தகைய ஆணவப் படுகொலைகள் நாகரீகச் சமுதாயத்தையே முற்றுமுழுதாகக்  கேள்விக்குள்ளாக்குகின்றன. தமிழினத்தின் ஓர்மையைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சாதிய வன்முறை வெறியாட்டங்களும், கொடுங்கோல் செயல்பாடுகளும் ஒருநாளும் ஏற்புடையதல்ல. சக மனிதரின் உயிரைப் பறிக்கும் கொடுஞ்செயல்கள் மனிதத்தன்மையே அற்றவை என்பதைத் தாண்டி, சாதியின் பெயரால் அவை நிகழ்த்தப்படுவது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கின்றன. ஒரு ஆணும், பெண்ணும் மனமொத்து விரும்பி, வாழ்க்கையைத் தொடங்குவதற்கு எதிராக சாதியை நிறுத்துவதும், அந்த சாதிக்காகப் பச்சைப்படுகொலைகளை செய்வதும் மிருகத்தனத்தின் உச்சமாகும். சமத்துவத்திற்கும், சமூக அமைதிக்கும் எதிரான இத்தகைய சாதிய ஆணவப் படுகொலைகள் நம்மைக் கற்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. ஆகவே, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளும், ஆணவக்கொலைகளும் முற்றாக நிறுத்தப்பட ஆளும் ஆட்சியாளர்கள் கடும் நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது. அந்தவகையில், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றவும், மனம்விரும்பி வாழ்க்கையைத் தொடங்கும் இணையர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் வேண்டியது ஆளும் அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும்.   ஆகவே, தம்பி கவின்குமார் அவர்கள் ஆணவப் படுகொலையில் தொடர்புடைய கொலையாளி சுர்ஜித், அதற்குத் துணைபோன பெற்றோரையும் சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். https://x.com/Seeman4TN/status/1949852950115041730 - செந்தமிழன் #சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் #நாம்தமிழர்கட்சி #JusticeForKavin  | #NeedSeperateLaw #EndCasteViolence | #StopHonourKillings #JusticeForVictims | #CasteBasedCrimes #PunishTheKillers | #EqualityForAll #StopCasteMurders | #HumanRightsForAll #JusticeDelayedJusticeDenied #சீமான்
சீமான் - நெவ்வேலி 7 சாதிய ஆணவப்படுகொலை செய்பப்பட்ட கவின்குமார் மரணத்தில் தம்பி தொடர்புபைப கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! செந்தமிழன் சீமான் வலியுறுத்தல் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி X NaamlamilarOrs Naamlamilarorg NaamTamilarKatchioff 28-07-2025 நெவ்வேலி 7 சாதிய ஆணவப்படுகொலை செய்பப்பட்ட கவின்குமார் மரணத்தில் தொடர்புபைப கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! செந்தமிழன் சீமான் வலியுறுத்தல் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி X NaamlamilarOrs Naamlamilarorg NaamTamilarKatchioff 28-07-2025 - ShareChat
ஜெகபர் அலி – யாஸ்மின் இணையரின் 6 வயதேயான அன்பு மகன் சயான் அரிய வகை தசைநார் சிதைவு நோயால் [Duchenne Muscular Dystrophy (DMD)] பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அரிதினும் அரிதான அக்கொடிய நோயிலிருந்து விடுபட்டு, முற்றிலும் குணமடைய மருத்துவச் சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் தேவைப்படுவதால், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெகபர் அலி – யாஸ்மின் இணையர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 வயதிற்குள்ளாக நோய் தீர்த்து உயிர்காக்கும் ஊசியை செலுத்தினால் மட்டுமே நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாக்க முடியும். சிறிய வயதில் கொடு நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் அன்பு மகன் சயான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7 வயதை நிறைவு செய்ய உள்ள நிலையில், அதற்குள் 25 கோடி ரூபாய் திரட்ட வேண்டிய அவசர அவசியத் தேவை உள்ளது. குழந்தையின் உயிர் காத்திட 25 இலட்சம் பேரிடம் 100 ரூபாய் வீதம் திரட்டும் மருத்துவ நிதியுதவிக்கான திரள் நிதி பரப்புரையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து அன்பு மகன் சயானை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்ற உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். வங்கி கணக்கு விபரம்:- Acc. No.: 00000044106004022 Acc. Name: MOHAMMED MEERAN  IFSC: SBIN0004272 #சீமான்
சீமான் - தசைநார் ஜெகபர் அலி யாஸ்மின் ணையரின் வயதேயான அன்பு மகன் சயான் அரிய வகை 6 சிதைவு தசைநார் சிதைவு நோயால் [Duchenne Muscular Dysfrophy (DMD)] பாதிக்கப்பட்டுள்ள நோயால் செய்தியறிந்து மிகுந்த அடைந்தேன் . வேதசை மன I60T அரிதினும் அரிதான அக்கொடிய நோயிலிருந்து பாதிக்கப்பட்ட  மருத்துவச்  விடுபட்டு, முற்றிலும்  குணமடைய சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி  சயான தேவைப்படுவதால், நடுத்தரக் குடும்பத்தைச் ரூபாய் சேர்ந்த ஜெகபர்  யாஸ்மின் இணையர் அலி செய்வதறியாது தவித்து வருகின்றனர் . குணமாக தங்களார தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயதிற்குள்ளாக நோய் தீர்த்து  -யிர்காக்கும் ஊசியை 7 உ செலுத்தினால் மட்டுமே நோயிலிருந்து முற்றிலுமாகக் இயன்ற சிறிய வயதில் கொடிய நோயுடன் குணமாக்க முடியும் போராடிக் கொண்டிருக்கும் அன்பு மகன் சயான் [ಗ8] எதிர்வரும்  மாதம் 7 வயதை நிறைவு  ஆகஸ்ட் கோடி நிலையில், அதற்குள் 25 செய்ய 9_6T6TT திரட்ட வேண்டிய அவசர அவசியத் தேவை ரூபாய் உதவி ள்ளது . குழந்தையின் யிர் காத்திட 25 இலட்சம் பேரிடம் உ உ 100 ரூபாய் வீதம் திரட்டும் மருத்துவ நிதியுதவிக்கான திரள் னெடுக்கப்பட்டுள்ளது. நிதி பரப்புரையும்  முன்(ு அளித்திடுங்கள் ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற  நிதி உதவியை அளித்து அன்பு மகன் சயானை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்ற உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் . A/C No 00000044106004022 A/C Namel MOHAMMED MEERAN IFSC CODE $BIN0004272 Seeman4TN SenthamizhanSeeman] Seeman4TN Official 24-07-2025 தசைநார் ஜெகபர் அலி யாஸ்மின் ணையரின் வயதேயான அன்பு மகன் சயான் அரிய வகை 6 சிதைவு தசைநார் சிதைவு நோயால் [Duchenne Muscular Dysfrophy (DMD)] பாதிக்கப்பட்டுள்ள நோயால் செய்தியறிந்து மிகுந்த அடைந்தேன் . வேதசை மன I60T அரிதினும் அரிதான அக்கொடிய நோயிலிருந்து பாதிக்கப்பட்ட  மருத்துவச்  விடுபட்டு, முற்றிலும்  குணமடைய சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி  சயான தேவைப்படுவதால், நடுத்தரக் குடும்பத்தைச் ரூபாய் சேர்ந்த ஜெகபர்  யாஸ்மின் இணையர் அலி செய்வதறியாது தவித்து வருகின்றனர் . குணமாக தங்களார தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயதிற்குள்ளாக நோய் தீர்த்து  -யிர்காக்கும் ஊசியை 7 உ செலுத்தினால் மட்டுமே நோயிலிருந்து முற்றிலுமாகக் இயன்ற சிறிய வயதில் கொடிய நோயுடன் குணமாக்க முடியும் போராடிக் கொண்டிருக்கும் அன்பு மகன் சயான் [ಗ8] எதிர்வரும்  மாதம் 7 வயதை நிறைவு  ஆகஸ்ட் கோடி நிலையில், அதற்குள் 25 செய்ய 9_6T6TT திரட்ட வேண்டிய அவசர அவசியத் தேவை ரூபாய் உதவி ள்ளது . குழந்தையின் யிர் காத்திட 25 இலட்சம் பேரிடம் உ உ 100 ரூபாய் வீதம் திரட்டும் மருத்துவ நிதியுதவிக்கான திரள் னெடுக்கப்பட்டுள்ளது. நிதி பரப்புரையும்  முன்(ு அளித்திடுங்கள் ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற  நிதி உதவியை அளித்து அன்பு மகன் சயானை அரிய வகை நோயிலிருந்து காப்பாற்ற உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் . A/C No 00000044106004022 A/C Namel MOHAMMED MEERAN IFSC CODE $BIN0004272 Seeman4TN SenthamizhanSeeman] Seeman4TN Official 24-07-2025 - ShareChat