#🙏கோவில் #ஆன்மிகம் #👏Inspirational videos #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 3, 2026
*திருச்சிற்றம்பலம்*
*ஐயடிகள் காடவர்கோன் நாயனார் அருளிய சேத்திரத் திருவெண்பா பதினோராம் திருமுறை பாடல்.*
*பாடல்* :
*தொட்டுத் தடவித்*
*துடிப்பொன்றுங் காணாது*
*பெட்டப் பிணமென்று*
*பேரிட்டுக் - கட்டி*
*எடுங்களத்தா என்னாமுன்*
*ஏழைமட நெஞ்சே*
*நெடுங்களத்தான் பாதம் நினை.* - 11.006.07
*பொருள்* :
*மனிதன் உயிர்நீத்ததும், உறவினர்கள் அவன் உடலைத் தொட்டுத் தடவி நாடித்துடிப்பு ஏதுமில்லாததைக் கண்டு, அவனை 'பிணம்' என்று பெயர் சூட்டி, "கட்டி எடுங்கள் (எடுத்துச் செல்லுங்கள்)" என்று சொல்வதற்குள், அறிவற்ற ஏழை நெஞ்சமே! நீ திருநெடுங்களம் என்னும் ஊரில் உறையும் சிவபெருமானின் திருவடிகளை நினைவாயாக! என்று ஐயடிகள் காடவர்கோன் நாயனார் வலியுறுத்துகிறார்.*
*திருச்சிற்றம்பலம்*
*அருள்தரும் ஒப்பிலாநாயகி அம்மை உடனாகிய அருள்மிகு திருநெடுங்களநாதர் திருவடிகள் போற்றி! போற்றி!!*
#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #👏Inspirational videos #ஆன்மிகம் #🙏கோவில்
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #ஆன்மிகம் #👏Inspirational videos #🙏கோவில் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 2, 2026
*திருச்சிற்றம்பலம்*
*திருமூல நாயனார் அருளிய பத்தாம் திருமுறை*
*முதல் தந்திரம் - உபதேசம்*
*பாடல்* :
*எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை*
*அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்*
*ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்*
*செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே.* - 10.01.04.18
*பொருள்* :
*ஒரு பக்தன், தனது அறிவின் முதிர்ச்சிக்கும் பக்குவத்திற்கும் எந்த அளவிற்கு ஞானத்தைத் தேடுகிறானோ, அந்த அளவிற்கு சிவபெருமான் அவனுக்குத் தனது திருவருளை வழங்குவான். நிகரற்ற, ஒப்புவமை இல்லாத அந்தப் பேரம்பலத்தில் உமாதேவியார் கண்டு களிக்க ஆனந்தத் திருக்கூத்து ஆடும் அவன், மாலை நேரத்துச் செவ்வானத்தை விடவும் ஒளி வீசும் மாணிக்க மணியைப் போன்ற பேரொளி வடிவானவன்!*
*திருச்சிற்றம்பலம்*
மாதம் 100 ரூபாய் கோவை அரன்பணி அறக்கட்டளையில் செலுத்தி சிவ புண்ணியத்தில் ஈடுபடுவோம்.
#🙏கோவில் #👏Inspirational videos #ஆன்மிகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏
#ஆன்மிகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #👏Inspirational videos #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 1, 2026
*திருச்சிற்றம்பலம்*
*திருமாளிகைத் தேவர் அருளிய ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா-திருப்பல்லாண்டு*
*கோயில் - உயர் கொடியாட பதிகம்* : பண் : பஞ்சமம்
*பாடல்* :
ஏர்கொள்கற் பகம்ஒத்து இருசிலைப் புருவம்
பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன்
பேர்கள்ஆ யிரம்நூறாயிரம் பிதற்றும்
பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று
சென்னிச் சிற்றம்பலக் கூத்தா !
நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்
நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. - 9.002.10
*பொருள்* :
*’அழகு பொருந்திய கற்பக விருட்சத்தின் கிளைகளைப் போல, வில் போன்ற இரண்டு புருவங்களையும், அருள் பொழியும் பெரிய, விசாலமான மூன்று கண்களையும் உடைய உன்னுடைய, ஆயிரம் மற்றும் நூறாயிரம் திருநாமங்களை எப்போதும் இடைவிடாது ஓதித் துதிக்கும், தகுதி மிக்க அடியவர்கள் வாழ்கின்ற 'பெரும்பற்றப்புலியூர்' என்னும் சிதம்பரம் தலத்தில், சிறப்புமிக்க கொக்கின் இறகும், கொன்றை மலர் மாலையும் நெருங்கி விளங்கும், திருமுடியை உடைய சிற்றம்பலத்தில் ஆடும் நடராசப் பெருமானே! கங்கையாற்றைத் தாங்கிய உமது சிவந்த சடையில் வாழ்கின்ற பிறை நிலவும், புதிய ஊமத்தம்பூவும், எப்போதும் என் நினைவில் குடிகொண்டு, எனது அறிவிலும் சிந்தனையிலும் நிறைந்து விளங்குகின்றன’ என்று திருமாளிகைத்தேவர் உருகுகிறார்.*
*திருச்சிற்றம்பலம்*
#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #🙏கோவில் #👏Inspirational videos #ஆன்மிகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 29, 2026
திருச்சிற்றம்பலம்
*எம்பிரான் மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறை*
*திருவாசகம் - திருச்சதகம் - அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)
இடையறா அன்பு அருளுக - பதிகம்*
*பாடல்* :
நாடகத்தால் உன்னடியார்
போல்நடித்து, நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான்,
மிகப்பெரிதும் விரைகின்றேன்;
ஆடகச்சீர் மணிக்குன்றே!
இடையறா அன்புனக்குஎன்
ஊடகத்தே நின்று, உருகத்
தந்தருள்;எம் உடையானே! - 8.005.10
*பொருள்* :
*இறைவா! நான் உண்மையான பக்தன் அல்ல; ஆனால், உன்னுடைய மெய்யடியாரைப் போலப் புறத்தே வேடமிட்டு, நாடகமாடி நடித்துக் கொண்டிருக்கிறேன்.அப்படிப் போலியாக நடித்தாலும், உன்னுடைய முக்தி உலகமாகிய வீட்டுலகிற்குள் எப்படியாவது நடுவிலே புகுந்துவிட வேண்டும் என்று மனதிற்குள் அளவுகடந்து அவசரப்படுகிறேன். சுத்தமான பொன்னால் ஆன, ஒளிவீசும் அழகிய ரத்தின மலையே! தகுதி இல்லாத என் மீதும் உனக்கு நீங்காத, இடைவிடாத பேரன்பு உண்டாகும்படிச் செய்து, என்னை ஆட்கொண்ட எஜமானனே! என் உடம்பின் உள்ளே இருக்கும் ஆன்மாவில் நீயே நின்று, என் நெஞ்சம் உருகிப் பணியும் உன்னத நிலையை எனக்கு அருள் செய்வாயாக!* என எம்பிரான் மாணிக்கவாசகர் இறைவனின் மேன்மையையும் தனது கீழ்மையையும் இப்பாடலில் கூறுகிறார்.
*திருச்சிற்றம்பலம்*
#ஆன்மிகம் #🙏கோவில் #👏Inspirational videos #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 29, 2026
திருச்சிற்றம்பலம்
*நம்பியாரூரர் அருளிய ஏழாம் திருமுறை*
*திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும் - பதிகம்*
*பண் : இந்தளம்*
*பாடல்* :
பாரோடு விண்ணும் பகலும்ஆகிப்
பனிமால் வரையாகிப் பரவையாகி
நீரோடு தீயும் நெடுங்காற்றும்ஆகி
நெடு வெள்ளிடைஆகி நிலனும்ஆகித்
தேரோட வரை எடுத்தஅரக்கன்
சிரம்பத்து இறுத்தீர்உம் செய்கைஎல்லாம்
ஆரோடும் கூடா அடிகேள்இதுஎன்
அடியோம் உமக்காட்செய அஞ்சுதுமே. - 7.002.10
*பொருள்*
*இறைவனாகிய நீரே பூமி, ஆகாயம், பகல் (சூரியன்) ஆகியவையாக இருக்கிறீர்கள். பனி சூழ்ந்த பெரிய மலைகளாகவும், பரந்த கடலாகவும் இருக்கிறீர்கள். நீர், நெருப்பு, நெடிய காற்று ஆகியவையாகவும் விளங்குகிறீர்கள். பரந்த வெளி மற்றும் நிலம் என ஐம்பூதங்களாகவும் நீரே நிறைந்துள்ளீர்கள். தன் தேர் ஓடுவதற்காக, கயிலை மலையைத் தூக்க முயன்ற அரக்கனாகிய ராவணனுடைய பத்து தலைகளையும் நெரித்து அடக்கிய உமது செயல்கள் யாவும், சாதாரண மனிதர்களின் அறிவுக்குப் பொருந்தாத விந்தையான செயல்களாக இருக்கின்றன. எம்பெருமானே! இத்தகைய பேரற்றல் கொண்ட உமக்கு அடிமை செய்து வாழ நாங்கள் அஞ்சுகிறோம்.*
திருச்சிற்றம்பலம்
*அருள்தரும் ஆவுடைநாயகி உடனாகிய அருள்மிகு பரங்கிரிநாதர் திருவடிகள் போற்றி! போற்றி!!*
#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #👏Inspirational videos #🙏கோவில் #ஆன்மிகம் 28, 2026
*திருச்சிற்றம்பலம்*
*திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறை - தேவாரம்*
*திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி - பதிகம்*
*பாடல்* :
*மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்*
*மணிமிழலை மேய மணாளர் போலும்*
*கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர் போலும்*
*கொடுகொட்டி தாளம் உடையார் போலும்*
*செழுங் கயிலாயத்துஎம் செல்வர் போலும்*
*தென்அதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்*
*அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்*
*அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.* - 6.009.10
*பொருள்* :
*எப்போதும் மங்காத திருநீற்றை அணிந்த மார்பை உடையவர்.திருவீழிமிழலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் மணாளர். அழகிய குவளை மலர் மாலையை அணிந்த உமையம்மைக்குத் தலைவரானவர்.கொடுகொட்டி வாத்தியத்தின் தாளத்தை உடையவர்.வளமான திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் எம் தலைவரானவர். திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியவர். துன்பப்படுபவர்களின் ஐயங்களைத் தீர்த்து அருள்பவர். அவரே அழகிய திருமேனியைக் கொண்ட திருஆமாத்தூர் ஐயனார் ஆவார்.*
*திருச்சிற்றம்பலம்*
*அருள்தரும் அழகியநாயகியம்மை உடனாகிய அருள்மிகு ஆமாத்தீஸ்வரர் திருவடிகள் போற்றி! போற்றி!!*
#🙏கோவில் #ஆன்மிகம் #👏Inspirational videos #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #👏Inspirational videos #ஆன்மிகம் #🙏கோவில்









