#இயற்கை #இயற்கை அழகு# #இயற்கை கவிதை #என் கவிதைகள் ##puthuyugamtv #memories #rabindranathtagore #nationalanthem வங்கம் தந்த தங்கம், தாடி வைத்த இலக்கியம் இரவீந்திரநாத் தாகூர் (rabindranath tagore) அவர்களின் பிறந்த தினம் (மே 7,1861) இன்று... கவிதை எட்டாத எட்டு வயதில், சிந்தனை சிறகுகளை விரித்த இந்த கவிதைப் பறவை, தன் எழுத்துக்களால் வானம் தொட்டது..."கீதாஞ்சலியை செதுக்கிய சிற்பி... அதற்காக 1913 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் இவர். ஐரோப்பியர் அல்லாத ஒருவர் நோபல் பரிசு பெறுவது அதுவே முதல் முறை... பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு, தனது ஓவியங்கள், கேலிச் சித்திரங்கள் மூலம் போர்க்குணத்தை வெளிப்படுத்திய போராளி... குழந்தைகளின் உடலையும், மனதையும் காயப்படுத்தாத கல்வி முறையை அறிமுகப்படுத்த "சாந்தினிகேதன்" நிறுவினார்.... இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கண மன" எனும் இறவாப் படைப்பெழுதி இலக்கியமாகவே வாழ்ந்த இரவீந்திரநாத் தாகூர்,1941 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 7ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரின் பிறந்த நாள் தினமான இன்று, அவரை நமது புதுயுகம் சார்பில் நினைவு கொள்வோம்... #இயற்கை கவிதை