ஆத்மா சாந்தியடைய பகவானை வேண்டுகிறேன் 🤟 கலியுகம் என்னவெல்லாம் நடக்கிறது 😤 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
#🌀வானிலை தகவல்கள்🌨️ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்) ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளது, எனவே யாராவது மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும், காற்றோட்டம் இருக்கும் வகையில் அறையின் கதவைத் திறந்து வைக்கவும், மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும், மொபைல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது, தயவுசெய்து கவனமாக இருங்கள் மற்றும் மக்களுக்குத் தெரிவிக்கவும், தயிர், மோர், மர ஆப்பிள் சாறு போன்ற குளிர் பானங்களை முடிந்தவரை பயன்படுத்தவும்.
மிக முக்கியமான தகவல்
குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை பின்வருவனவற்றை எச்சரிக்கிறது. வரும் நாட்களில் 47 முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான பகுதிகளில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் குவி மேகங்கள் இருப்பதாலும், இங்கே சில எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் உள்ளன.
இவற்றை கார்களில் இருந்து அகற்ற வேண்டும்
1. எரிவாயு பொருட்கள் 2. லைட்டர்கள் 3. கார்பனேற்றப்பட்ட பானங்கள் 4. பொதுவாக வாசனை திரவியங்கள் மற்றும் உபகரண பேட்டரிகள் 5. கார் ஜன்னல்கள் சற்று திறந்திருக்க வேண்டும் (காற்றோட்டம்) 6. காரின் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்ப வேண்டாம் 7. மாலையில் காருக்கு எரிபொருள் நிரப்பவும் 8. காலையில் காரில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் 9. குறிப்பாக பயணத்தின் போது கார் டயர்களை அதிகமாக காற்றோட்டப்படுத்த வேண்டாம்.
தேள்கள் மற்றும் பாம்புகள் தங்கள் துளைகளிலிருந்து வெளியே வந்து குளிர்ந்த இடங்களைத் தேடி பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்குள் நுழையக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள்.
நிறைய தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்கவும், எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்காமல் பார்த்துக் கொள்ளவும், மின்சார மீட்டர்களை ஓவர்லோட் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும், வீட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் மட்டும் ஏர் கண்டிஷனரைப் பயன்படுத்தவும், குறிப்பாக கோடை காலத்தில். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கும் 30 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். வெளியே 45-47°, வீட்டில் ஏசியை 24-25° இல் வைத்திருங்கள், உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு நன்றாக இருக்கும். குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளியில் நேரடியாகத் தொடுவதைத் தவிர்க்கவும்.
இறுதியாக: இந்தத் தகவலைப் பகிரவும், ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரியாது, மேலும் நீங்கள் இதை முதல் முறையாகப் படிக்கலாம்.
அன்புடன், சிவில் பாதுகாப்பு இயக்குநரகம்
இது உங்களுக்குகாக நாம்ம வணங்க வேண்டிய இடம் பக்தியுடன் பண்டாரம் 🙏🌺ஒரே சிற்பி செய்த 5 நடராஜர் சிலைகள்! சிதம்பரத்தில் ஒன்று; நெல்லையில் நான்கு...எப்படி? பார்ப்போம்.🌺
செல்வமே சிவபெருமானே..
நற்றுணையாவது நமசிவாயவே🙏
🌹பல்லவ மன்னன் சிம்மவர்ம பல்லவன் மிகச்சிறந்த சிவபக்தர். ஒரு முறை அந்த மன்னனுக்கு, நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை வடிவமைத்து சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்ய எண்ணம் வந்தது. அதற்காக மிகச்சிறந்த சிற்பி ஒருவரைத் தேடினார். அப்போது சோழ தேசத்தைச் சேர்ந்த நமச்சிவாய முத்து என்ற சிற்பியைக் கண்டறிந்தார். அந்தச் சிற்பியும் மிகச்சிறந்த சிவபக்தர்.
மன்னன் சிற்பியிடம், நடராஜர் திருவுருவத்தை வடிவமைத்துக் கொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். சிற்பியும், மன்னனின் விருப்பப்படி, மிக அற்புதமான நடராஜர் சிலையை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த செப்புச் சிலையில் மிகவும் அழகாக இருந்த நடராஜரைப் பார்த்த மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்
செப்புச் சிலையிலேயே இறைவன் இவ்வளவு அழகாக இருக்கும்போது, தங்கத்தில் வடித்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருப்பார் என்று ஒரு ஆசை மேலிட்டது மன்னனுக்கு. அதனால் சிற்பியிடம் தங்கத்தைக் கொடுத்து நடராஜர் சிலையை தங்கத்தில் வடித்துத் தரும்படி சொன்னார்.
*🌹சிதம்பரம் நடராஜர் :*🪷
சிற்பியும் தூய தங்கத்தில் நடராஜர் சிலையை செய்தார். சிலையை முடித்துப பார்த்தபோது, அதுவும் செப்புச் சிலையாகவே தோற்றமளித்தது. இதைக் கண்ட மன்னன், தங்கத்திற்கு ஆசைப்பட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணி சிற்பியை சிறையில் அடைத்தான். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘சிற்பியின் மீது தவறில்லை. அவர் வடித்த தங்கச் சிலையை நான்தான் செப்புச் சிலையாக மாற்றினேன். நான் செப்புச் சிலையாக இருக்கவேவிரும்புகிறேன். ஏற்கனவே செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து தென் பகுதிக்குக் கொண்டு செல்லச் சொல்’ என்றார்.
இதையடுத்து மன்னன், தங்கம் செப்பாக மாறிய சிலையை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தான். முதலில் செய்த செப்புச் சிலையை சிற்பியிடம் கொடுத்து, ஈசன் கட்டளைப்படி தென்பகுதிக்கு கொண்டு செல்ல பணித்தான்.
🌹செப்பறை :
முதன் முதலில் வடிக்கப்பட்ட செப்புச் சிலையுடன் சிற்பி தென் பகுதி நோக்கி புறப்பட்டார். அவருடன் மன்னனின் படைவீரர்கள் சிலரும் பாதுகாப்புக்காகச் சென்றனர். திருநெல்வேலியை நெருங்கியபோது, படைவீரர்கள் சுமந்து வந்த சிலையின் எடை அதிகரிப்பது போல் தோன்றியது. இதுபற்றி அவர்கள் சிற்பியிடம் கூறினர். அவரும், படைவீரர்களை சற்று ஓய்வெடுக்க பணித்தார். சிலையை இறக்கி வைத்து விட்டு அனைவரும் ஓய்வெடுத்தனர்; கண்ணயர்ந்தனர். விழித்துப் பார்த்தபோது நடராஜர் சிலையைக் காணவில்லை.
இது பற்றி சிற்பியும், படைவீரர்களும் அந்தப் பகுதியை ஆண்டு வந்த ராமபாண்டியனிடம் சென்று தெரிவித்தனர். நெல்லையப்பரின் தீவிர பக்தரான ராமபாண்டியன், நடராஜர் சிலை காணாமல் போனது பற்றி கேள்விப்பட்டதும் வருந்தினான். தானும், படைவீரர்களுடன் சேர்ந்து சிலையை மீட்கும் பணியில் ஈடுபட்டான். சிலை திருட்டுப் போன பகுதிக்கு மன்னனும் மற்றவர்களும் சென்றடைந்தனர். அப்போது, அருகிலிருந்த காட்டுக்குள் இருந்து சிலம்பொலிச் சத்தம் கேட்டது. மன்னன், தனது படைவீரர்களுடன் காட்டுக்குள் சென்று பார்த்தான்.
அங்கு ஓரிடத்தில் இருந்து எறும்புகள் வரிசை, வரிசையாகக் குறிப்பிட்ட இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அந்த எறும்புகள் சென்ற வழியில் போய்ப் பார்த்த மன்னன், அங்கு சுயம்புலிங்கம் ஒன்றும், அதன் அருகில் நடராஜர் செப்புச்சிலை இருப்பதையும் கண்டு வியந்து போனான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘மன்னனே! இந்த இடத்தில் எனக்குக் கோவில் அமைத்து வழிபாடு செய்’ என்றது அந்தக் குரல். அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோவில் அமைக்கப்பட்டது. செப்பால் ஆன நடராஜருக்குத் தனிச்சன்னிதி ஏற்படுத்தப்பட்டது. சிற்பியால்செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அமைந்திருக்கும் இந்த ஊர் ‘செப்பறை’ என்றழைக்கப்படுகிறது. திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ராஜவல்லிபுரம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் செப்பறை திருத்தலம் உள்ளது.
🌹கட்டாரிமங்கலம்:
மன்னன் ராமபாண்டியன் தான் தினமும் வழிபடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும், அதே போன்றதொரு நடராஜர் செப்புச் சிலையை அமைக்க விரும்பினான். அதே போல் ராமபாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசனான வீரபாண்டியன் என்பவனும், தன்னுடைய ஆளுகையில் உள்ள கட்டாரிமங்கலத்தில் ஒரு நடராஜர் சிலையை வைத்து வழிபட எண்ணினான். இதையடுத்து மன்னன் ராமபாண்டியன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு ஒன்றும், சிற்றரசன் வீரபாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப கட்டாரிமங்கலத்துக்கு ஒன்றும் ஆக இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து தரும்படி அதே சிற்பியிடம் சொன்னான்.
சிற்பியும், நடராசர் தோற்றத்திலான இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து முடித்தார். தனக்குரிய செப்புச் சிலையை வாங்கிப் போக வந்திருந்த சிற்றரசன் வீரபாண்டியனுக்கு, சிலைகளின் அழகைக் கண்டதும் மதி மயங்கியது. இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் செல்ல எண்ணினான். மேலும் இதே போன்ற சிலையை வேறு யாருக்கும் செய்து கொடுத்து விடக்கூடாது என்பதற்காக சிற்பியின் கையையும் அவன் துண்டித்து விட்டான். பின்னர் அவரது படை வீரர்கள் இருபிரிவாக பிரிந்து இரண்டு சிலை களையும் எடுத்துச் சென்றனர். ஒரு பிரிவினர் கட்டாரிமங்கலம் சென்று அங்குள்ள ஆலயத்தில் செப்புச் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பேய்குளம். இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கட்டாரிமங்கலம் திருத்தலம்.
🌹கரிசூழ்ந்தமங்கலம் சிற்றரசன் வீரபாண்டியனின் மற்றொரு படைப்பிரிவினர், இன்னொரு செப்புச் சிலையுடன் வேறு வழியில் சென்றபோது, இடையில் தாமிரபரணி ஆறு குறுக்கிட்டது. அப்போது ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், படைவீரர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் படைவீரர்கள் அனைவரும் சிலையோடு, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
சில நாட்களுக்குப் பின்பு, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்ததும், நடராஜர் தோற்றத்திலான செப்புச்சிலை ஒரு கரையில் ஒதுங்கிக்கிடந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதை ஒரு இடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர். இதைப் பற்றி அறிந்ததும் மன்னன் ராமபாண்டியன், அந்தச் சிலையைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தான். ஆனால் அது முடியவில்லை. அன்றிரவு அவன் கனவில் தோன்றிய ஈசன், ‘கரிய மேகங்கள் சூழ்ந்த இந்த இடத்திலேயே இருக்க நான் விரும்புகிறேன். அங்கு எனக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடு’ என்றார். அதன்படி அங்கு ஒரு ஆலயத்தை எழுப்பினான் ராமபாண்டியன். சிற்பியால் செய்யப்பட்ட நான்காவது செப்புச் சிலை கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் பாதையில் உள்ளது பத்தமடை. இந்த ஊரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் சென்றால் கரிசூழ்ந்தமங்கலத்தை அடையலாம்.
🌹கருவேலங்குளம்:
இந்த சம்பவங்களுக்குப் பிறகு கையை இழந்த சிற்பிக்கு, மன்னன் ராமபாண்டியன் மரக்கை ஒன்றைத் தயாரித்துப் பொருத்தினான். மரக்கை பொருத்தப்பட்ட பின்பு, அந்தச் சிற்பி மரக் கைகளின் உதவியுடன் ஒரு நடராசர் செப்புச்சிலையைத் தன் உதவியாளர்களுடன் சேர்ந்து செய்யத் தொடங்கினார். அந்த செப்புச் சிலை இதற்கு முன்பு செய்யப்பட்ட நான்கு செப்புச் சிலைகளைக் காட்டிலும் அழகுற காட்சியளித்தது.
அந்தச் சிலையில் அழகில் மயங்கிய சிற்பி, சிலையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார். அவர் கிள்ளிய வடு, அந்தச் சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. கிள்ளிய வடுவுடன் கூடிய அந்தச் சிலை கருவேலங்குளம் எனும் ஊரிலிருக்கும் கோவிலில் நிறுவப்பட்டது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில், சேரன்மகாதேவி வழியாகக் களக்காடு செல்லும் பாதையில் இருக்கிறது கருவேலங்குளம் திருத்தலம்.
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.🦚🌹🦚ஓம் நமசிவாய🙏 #ஓம் நமச்சிவாய
🪐✨ 2026 சனி பெயர்ச்சி
வாக்கிய பஞ்சாங்கப்படி சனியின் இடமாற்றம் ராசிகளின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் 🔮
கடின உழைப்புக்கு பலன்,
சோதனைகளுக்கு பின் வெற்றி,
கர்மத்தின் பலனை உணர்த்தும் சனி பகவானின் அதிசய காலம் 🌿 பொறுமையும் நம்பிக்கையும் இருந்தால் நன்மைகள் நிச்சயம்!
சனி அருள் எல்லோருக்கும் காக்கட்டும் ✨
குறிப்பு.. அவரவர் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும்.. என்னை திட்டாதீர்கள் 😍😂 #ஓம் நமச்சிவாய
https://youtube.com/watch?v=I0m9PmiajFw&si=UKwbk03t_HeR7c-E #🌀வானிலை தகவல்கள்🌨️
*🦉☔ எச்சரிக்கை: தென் தமிழக ஆறுகளில் 20 ஆண்டு கால அதிகபட்ச நீர்வரத்துக்கு வாய்ப்பு!*
இந்த வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon - NEM) காலத்தில் முதல்முறையாக, ஐரோப்பிய மத்திய கால வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (ECMWF) உலகளாவிய வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு (Global Flood Forecasting System) தமிழகத்திற்கு முக்கியமான வெள்ள அபாய முன்னறிவிப்பை அறிவித்துள்ளது. வரும் நாட்களில், தென் தமிழக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து, சில இடங்களில் 20 ஆண்டு கால அதிகபட்ச நீர்வரத்து ஏற்பட 30% வாய்ப்பு உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🌊 ஆறுகளின் நீர்வரத்து நிலவரம்
அடுத்த 3 நாட்களுக்குள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தாமிரபரணி ஆற்றுப் படுகையில் – குறிப்பாகத் திருநெல்வேலி பகுதியில் – குறிப்பிடத்தக்க அளவிலான நீர்வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிற்றாறு மற்றும் வைப்பாறு போன்ற மற்ற ஆறுகளில் அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் (Early next week) குறிப்பிடத்தக்க நீர்வரத்து இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
⚠️ 20 ஆண்டு அதிகபட்ச நீர்வரத்துக்கான வாய்ப்பு
தாமிரபரணி, சிற்றாறு மற்றும் வைப்பாறு ஆகிய இந்த மூன்று ஆறுகளிலும் 20 ஆண்டு கால அதிகபட்ச நீர்வரத்தைத் (20 year high inflow) தொடுவதற்கு 30% வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளன. இது மிகவும் கவனிக்கத்தக்க ஒரு அபாயக் குறியீடாகும்.
🌀 வானிலையின் தாக்கம்
தற்போது குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல சுழற்சியானது (Circulation over Comorin Sea) மெதுவாக நகர்வது அல்லது அதே இடத்தில் நீடிப்பது போன்ற காரணங்களால், தென் தமிழகத்தில் மழைப்பொழிவு வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே, இந்த வளிமண்டல சுழற்சியின் நகர்வுகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியம். பொதுமக்கள் மற்றும் அதிகார அமைப்புகள், அடுத்த சில நாட்களுக்கு ஆறுகளின் நீர்வரத்து மற்றும் வானிலை நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது புத்திசாலித்தனம்.இந்த,செய்தியை, முடிந்தளவு அனைவரிடமும் கொண்டு சேருங்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
திருச்சிற்றம்பலம்
தில்லையம்பலம்
திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலையில் அருள்புரியும்
உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோவிலில்
உள்ள கிரிவலப் பாதையில் உள்ள புனித தீர்த்த குளங்கள்
(சந்திர லிங்கம் கோவில் உள்ள தீர்த்த குளத்தில்)
அடியார் பெருமக்களால் உழவாரப்பணி நடைபெற்றது
உழவாரம் செய்வோம் உள்வினை அறுப்போம்
உழவாரப்பணி செய்த அனைத்து அடியார்கள் திருவடிக்கு நன்றி........
உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாரின் அருள் பரிபூரணமாக கிடைக்க எல்லாம் வல்ல இறைவனின்
திருவருளும் குருவருளும் திருகருணையும் கிடைக்கட்டும்
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்! என் கடன் பணி செய்து கிடப்பதே நமச்சிவாய 🤘 வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் இந்தப் பணி இனிதே நடைபெறும் 🤟 தமிழகத்தில் இருந்து கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர் வாட்சப் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்🙏 #ஓம் நமச்சிவாய









![📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - GLOFAS Flood Forccast 1 3 days bascd on २२०d Novcmbcrinitial conditions 0- Vaippar rivet is also . Cpcctcd t0 sce inCred inflos over the nexr couple of dars 7_7பட ~ப பட -1 0-[) 5 Ualland2lcu Ipurplel occodinoc Probklllule Euo mlcrwneal mloru Dum bacol படபr1l 1 FFh d1do mrranrನe உட்டடL பபடLT ` _ ١ ٥ uir Tn IUCN IuunI OW S 51 751 Wl 75-1 Increased inflows into Chittar (tibutary of Thmimapamni) from Couttralam 3l50 expected Io incrclsc ovcrithc next couplc of days davs Ovcr thc ncxt couplc of inflow into Thamiraparani is ೮pccted t0 simificinty ' Increase hetucen the Ghats and Tirunelveli town on he back of heavy Fains possibly over the Manjolai ]lills GLOFAS Flood Forccast 1 3 days bascd on २२०d Novcmbcrinitial conditions 0- Vaippar rivet is also . Cpcctcd t0 sce inCred inflos over the nexr couple of dars 7_7பட ~ப பட -1 0-[) 5 Ualland2lcu Ipurplel occodinoc Probklllule Euo mlcrwneal mloru Dum bacol படபr1l 1 FFh d1do mrranrನe உட்டடL பபடLT ` _ ١ ٥ uir Tn IUCN IuunI OW S 51 751 Wl 75-1 Increased inflows into Chittar (tibutary of Thmimapamni) from Couttralam 3l50 expected Io incrclsc ovcrithc next couplc of days davs Ovcr thc ncxt couplc of inflow into Thamiraparani is ೮pccted t0 simificinty ' Increase hetucen the Ghats and Tirunelveli town on he back of heavy Fains possibly over the Manjolai ]lills - ShareChat 📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - GLOFAS Flood Forccast 1 3 days bascd on २२०d Novcmbcrinitial conditions 0- Vaippar rivet is also . Cpcctcd t0 sce inCred inflos over the nexr couple of dars 7_7பட ~ப பட -1 0-[) 5 Ualland2lcu Ipurplel occodinoc Probklllule Euo mlcrwneal mloru Dum bacol படபr1l 1 FFh d1do mrranrನe உட்டடL பபடLT ` _ ١ ٥ uir Tn IUCN IuunI OW S 51 751 Wl 75-1 Increased inflows into Chittar (tibutary of Thmimapamni) from Couttralam 3l50 expected Io incrclsc ovcrithc next couplc of days davs Ovcr thc ncxt couplc of inflow into Thamiraparani is ೮pccted t0 simificinty ' Increase hetucen the Ghats and Tirunelveli town on he back of heavy Fains possibly over the Manjolai ]lills GLOFAS Flood Forccast 1 3 days bascd on २२०d Novcmbcrinitial conditions 0- Vaippar rivet is also . Cpcctcd t0 sce inCred inflos over the nexr couple of dars 7_7பட ~ப பட -1 0-[) 5 Ualland2lcu Ipurplel occodinoc Probklllule Euo mlcrwneal mloru Dum bacol படபr1l 1 FFh d1do mrranrನe உட்டடL பபடLT ` _ ١ ٥ uir Tn IUCN IuunI OW S 51 751 Wl 75-1 Increased inflows into Chittar (tibutary of Thmimapamni) from Couttralam 3l50 expected Io incrclsc ovcrithc next couplc of days davs Ovcr thc ncxt couplc of inflow into Thamiraparani is ೮pccted t0 simificinty ' Increase hetucen the Ghats and Tirunelveli town on he back of heavy Fains possibly over the Manjolai ]lills - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_950516_20761c05_1764006948234_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=234_sc.jpg)
