அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருத்தேர் திருவிழா 28 6 2026 ஞாயிற்றுக்கிழமை #தேர் திருவிழா திருநெல்வேலி
திருவாரூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். இரவு பத்து மணிக்கு மேல் பேருந்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் எனக்கு அருகில் வந்து உட்கார்ந்தார்.
ஏதோ சில காரணங்களால் பேருந்து சிறிது நேரம் நின்று கொண்டிருந்தது. பொதுவாகப் பேருந்தில் பயணிக்கும் போது ஏதாவது ஒரு வாராந்திர புத்தகத்தை வாங்கிப் படிப்பது என்னுடைய வழக்கமாக இருந்த காலக் கட்டம் அது. என்னை வழியனுப்ப வந்த என் மாமனார் தண்ணீர் பாட்டிலுடன் சக்தி விகடன் புத்தகத்தை வாங்கிக் கொடுத்திருந்தார். அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
பேருந்து சில நிமிடங்களில் நகரத் தொடங்கியது. அருகிலிருந்தவர் புன்னகையுடன் "தம்பிக்கு கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி போல.." என்றார்.
நானும் சிரித்துக் கொண்டே "அப்படி எல்லாம் இல்லைங்க.. இந்த ராசி பலன் மட்டும் அப்பப்ப பார்த்துக்குவேன்.." என்றேன்.
சரி தான்.. அப்ப உங்களுக்கு நம்பிக்கை இருக்குன்னு தான அர்த்தம்..
புன்னகையுடன் புத்தகத்தை அவரிடம் கொடுக்க, அவரோ "எனக்கெல்லாம் வீட்டுக்கே தபால்'ல வந்துடும்.. வந்த உடனே நானும் என் மனைவியும் படிச்சிடுவோம்.." என்றார்.
"நல்லதுங்க.." என்றபடி சக்தி விகடனை என்னுடைய பேக்கிற்குள் வைத்து விட்டு, புஷ்-பேக் சீட்டை லேசாகச் சாய்த்து விட்டபடி கண்களை மூடிக் கொண்டேன். அவர் ஏதாவது பேச்சை ஆரம்பிக்க, அது பிறகு சீர்காழி சிதம்பரம் பண்ருட்டி வடலூர் வரை தொடர்ந்தால் என்ன செய்வது என்ற பயம் தான் காரணம்.
தம்பி.. தம்பி..
என்னங்க..
தூக்கம் வருதுங்களா?..
ஆமாங்க..
சரி தூங்குங்க..
பேருந்தில் அணைந்து விளக்குகளையும் அனைத்து விட்டார்கள். சில வினாடிகளுக்குப் பிறகு அவராகவே மீண்டும் "தம்பி.. இந்தக் கர்மா பத்தி என்ன நினைக்குறீங்க?.." என்றார்.
"இதோ.. உன் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்குறேன் பாரு.. இது தான் அந்தக் கருமம் பிடிச்ச கர்மா.." என்று நினைத்துக் கொண்டு "சார்.. தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்குத் தூக்கம் வருது.." என்றேன்.
சரிங்க தம்பி..
சட்டென்று அவருடைய முகம் வாட, எனக்கு என்னவோ போல இருந்தது.
சரி சொல்லுங்க சார்.. என்னமோ சொல்ல வந்தீங்களே?..
இல்ல இந்தக் கர்மா மேல எல்லாம் நம்பிக்கை இருக்கா?..
இருக்கு சார்.. நிறையவே இருக்கு..
பேருந்திற்குள் விளக்குகள் அனைத்தும் அனைக்கப்பட்டு ஜன்னல் கண்ணாடி வழியாக அவ்வப்போது வெளிச்சம் உள்ளே வந்து கொண்டிருந்தது.
சாமி கும்பிட்டா இந்த கெட்ட கர்மா எல்லாம் குறையுமா தம்பி?..
அப்படித் தான எல்லாரும் சொல்றாங்க..
தம்பி.. நான் அரசாங்கத்தோட உள்கட்டமைப்புப் பிரிவு துறையில அதிகாரியா வேலை செய்திருக்கேன்.. கிட்டத்தட்ட 36 வருஷ சர்வீஸ்.. கை நிறையப் பென்சன் வாங்குறேன்.. ஆனா மன நிறைவே இல்ல..
நான் அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டபடி இருந்தேன்.
நான் வேலை செய்த காலத்துல ஒரு பைசா கூட லஞ்சம் வாங்குனதே கிடையாது.. எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்.. அழகான அன்பான மனைவி.. எல்லாமே திருப்தியா அமைஞ்சது எனக்கு.. நான் வேலை செய்த துறையில, எந்தவொரு திட்டமும் அமைச்சரவையோட (Cabinet) இறுதி ஒப்புதலுக்குப் போறதுக்கு முன்னாடியே, அதோட மதிப்பீடு, அதுக்கான தேர்வு செய்யப்படுற இடம், அரசுத்துறையில ஒருசிலருக்கு மட்டும் தான் தெரியும்.. அதுல நானும் ஒருத்தன்..
விஷயம் வெளிய கசியுறதுக்கு முன்னாடியே எங்களுக்குத் தெரிஞ்சிடும்.. நாங்களும் உடனே அந்த லொகேஷன்'ல இருக்குற ஒரு ஏக்கர் ரெண்டு ஏக்கர்'ன்னு வாங்கிப் போட்டு, திட்டம் அறிவிச்ச கொஞ்ச காலத்துலயே, அந்த இடத்தை நல்ல ரேட்டுக்கு வித்துடுவோம்.. அதாவது விஷயம் தெரிஞ்சு பத்து லட்சத்துக்கு வாங்குன இடம், ரெண்டு வருஷத்துல நாற்பது ஐம்பது லட்சத்துக்குப் போகும்..
"அட ஒங்கொக்க மக்கா.." சட்டென்று என் மனதில் இருந்த சலிப்பு முழுவதுமாக நீங்கி விழிப்புணர்வு வந்து விட்டது. என் ஆர்வத்தைப் புரிந்து கொண்டவரை போல மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்த அந்த நபர் மேலும் பேசினார்.
நான் யாரையும் ஏமாத்தலையே.. அன்னைக்கு ரேட்'ல தான இடத்தை வாங்கிப் போட்டேன்.. இப்படித் தான் தம்பி நானும் நினைச்சுகிட்டு இருந்தேன்.. வர்ற லாபத்துல ரெண்டு சதவிகிதம் குலதெய்வ கோவிலுக்குக் கொடுத்துடுவேன்.. வருஷா வருஷம் கிடா வெட்டு அது இதுன்னு அமர்களப்படுத்துவேன்.. எங்க ஊர் பக்கம் இருக்குற பாதிக் கோவில்கள்'ல ஏதாவது ஒரு மார்பிள் கல்லுல என்னோட பெயர் இருக்கும்..
நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
திருப்பதி திருச்செந்தூர் எல்லாக் கோவிலுக்கும் போவோம், ஸ்பெஷல் தரிசனம் அன்னதானம் எல்லாம் அடிக்கடி பண்ணுவோம்..
சிறிது நேரம் ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓட விட்டவர் "ஒரு முறை எங்க ஊர்'ல புதுப் பஸ் ஸ்டேண்ட் கட்ட இடம் பார்த்துகிட்டு இருந்தாங்க நம்ம அரசாங்கம்.. நான் அந்தப் பஸ் ஸ்டேண்ட்அமைய போற இடத்துக்கு 100 மீட்டர் தொலைவுல ரெண்டு கிரவுண்ட் இடத்தை வாங்கிப் போட்டேன்.. அந்த இடத்தை வித்த அம்மாவுக்கு ஒரே மகன் அவன் சிங்கப்பூர்'ல இருந்தான்.. இடத்தை அவன் வர்ற வரைக்கும் விக்க வேண்டாம்'னு சொல்லி இருந்தான்.. அவனோட மனைவியும் பிரசவத்துக்குப் போயிருந்தா போல.. இடத்தை விக்கப் பவர் ஆப் அட்டார்னி அந்த அம்மா பெயர்'ல இருந்தது.. ஏதோ ஆத்திர அவசரத்துக்கு இடத்தை விக்க வேண்டி வந்தா என்ன பண்றதுன்னு, அந்த மகன் அம்மா பெயர்'ல பவர் ஆப் அட்டார்னி கொடுத்திருப்பான் போல..
நான் அந்த அம்மா கிட்ட அப்படி இப்படிப் பேசி, கூடக் காசு தர்றேன்னு சொல்லி இடத்தை வாங்கிட்டேன்.. நாலு மாசத்துல அந்த இடத்துக்குப் பக்கத்துல அரசாங்கம் புதுப் பஸ் ஸ்டேண்ட் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. இடத்தை வித்த அந்த அம்மாவுக்கு ஒன்னும் புரியல.. சிங்கப்பூர்'ல இருந்து வந்த மகனுக்கு விஷயம் தெரிஞ்சு என்கிட்ட வந்து சண்டை போட்டான்..
மீண்டும் பேருந்தின் ஜன்னல் வழியே பார்வையை ஒட விட்டவர், பிறகு என்னைப் பார்த்து "அரசாங்க அதிகாரி.. என் கூடவே ஆளுங்க வேற இருப்பாங்க.. அவனால என்னை எதிர்த்துச் சண்டை போட முடியல.. நான் பத்து மடங்கு லாபத்துக்கு அந்த இடத்தை வேற பார்ட்டிக்கு வித்துட்டேன்.." என்றார்.
அந்த அம்மாவோட மகன் கோபத்துல அந்த அம்மாவை அடிச்சு விரட்டிட்டான்.. அந்த அம்மா என் வீட்டுக்கிட்ட வந்து அழுதுச்சு.. "இப்படி ஏமாத்திட்டீங்களே ஐயா.." அப்படின்னு அழும்.. என் வீட்டு வேலைக்காரங்க அந்த அம்மாவை விரட்டி விடுவாங்க..
அங்கங்க சாப்பிட்டுக்கிட்டுப் பித்துப் பிடிச்சு திரிஞ்ச அந்த அம்மா ஆக்சிடெண்ட்'ல செத்து போச்சு..
என் மனதை ஏதோ ஒன்று பிசைவதை போல இருந்தது.
சில வினாடிகள் அமைதியாகத் தலையைக் குனிந்தபடி இருந்த அவர், பிறகு சட்டென்று "என் மகன் அமெரிக்கா போகணும்'னு ஆசைப்பட்டான்.. அனுப்பி வைச்சேன்.. அங்கேயே ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான்.. அவனுக்குக் குழந்தையும் பிறந்தது.. என் பொண்ணையும் அமெரிக்கா அனுப்பி வைச்சேன்.. அவளும் கல்யாணம் குழந்தைன்னு செட்டில் ஆகிட்டா.. ரிட்டையர்மெண்டுக்கு பிறகு நானும் என் மனைவியும் நாலைஞ்சு தடவை அமெரிக்கா போயிட்டு வந்தோம்..
என் மகனோட மகன், அதாவது என் பேரனுக்கு ரெண்டு வயசாகும் போது தான் அவனுக்கு ஆட்டிசம் இருந்தது தெரிய வந்தது.. நிறையச் செலவு பண்ணி பார்த்தான் என் மகன்.. ஒரு கட்டத்துல அவனோட மனைவி அவனை விட்டு விலகி போயிட்டா.. ரெண்டு வருஷம் என் மகன் என் பேரனோட வந்து இங்க இருந்தான்.. அப்புறம் பேரனை எங்க கிட்டயே விட்டுட்டு அவனும் அமெரிக்கா போயிட்டான். ரெண்டு மூனு மாசத்துக்கு ஒரு தடவை போன் பண்ணுவான்.. அவ்வளவு தான்..
என் மகளுக்கும் விவாகரத்து ஆகிடுச்சு.. ஏதேதோ காரணம் சொல்றா.. அமெரிக்காவுல இருக்குற என் நண்பரோட மகன் சொல்றான்.. என் மக யாரு கூடவோ கல்யாணம் பண்ணாமலே தங்கியிருக்காளாம்..
சட்டென்று உடைந்து அழுதார். நான் ஒருவித அசௌகரியத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தேன். பேருந்தில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஒருசிலர் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் திரும்பி கொண்டார்கள்.
சார்.. அழாதீங்க..
தன் இரண்டு கரங்களால் முகத்தைத் துடைத்துக் கொண்டவர், "இப்ப தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் மனைவிக்குப் பக்கவாதம் வந்துடுச்சு.. மாசத்துக்கு ஐம்பதாயிரம் சம்பளம் கொடுத்து என் பேரனையும் மனைவியையும் பார்த்துக்க ரெண்டு ஆள் வைச்சிருக்கேன்.. அவங்களும் பாவம் நல்லா தான் பார்த்துக்குறாங்க.." என்றார்.
இப்ப எங்க சார் போய்கிட்டு இருக்கீங்க?..
அவர் கண்கள் கலங்க புன்னகையுடன் "ஒரு அம்மா ஆக்சிடெண்ட்'ல செத்து போச்சுன்னு சொன்னேன் தான.. அவங்க மகன் இப்ப சென்னையில இருக்கானாம்.. ஏதோ கஷ்டத்துல இருக்கான்னு கேள்விப்பட்டேன்.. அதான் அவன் கிட்ட இருபது லட்ச ரூபா செக்'கை கொடுத்துட்டு வரலாம்னு போய்கிட்டு இருக்கேன்.." என்றார்.
நல்லதுங்க..
என்னமோ தம்பி.. நான், என் மனைவி, மகன், மகள், எல்லாரும் சிங்கப்பூர், மலேசியா அப்புறம் ஒரு முறை லண்டனுக்குக் கூடப் போயிட்டு வந்திருக்கோம்.. எல்லா ஸ்டார் ஹோட்டல்'லயும் திருப்தியா சாப்பிட்டிருக்கோம்.. ஆனா எந்த நினைவுகளும் சந்தோஷத்தை தரல தம்பி.. வயசான பிறகு ஒரு இடத்துல உட்காருவோம் தான.. அப்ப நம்ம மனசாட்சி நம்மள குடைய ஆரம்பிக்கும் பாருங்க.. ஐயோ.. அது ரொம்ப வலிக்கும்..
ஒரு பக்கம் எழுந்து நடமாட முடியாத மனைவி.. இன்னொரு பக்கம் பத்து வயசாகியும் குழந்தையாவே இருக்குற பேரன்.. பெத்த மகனும் மகளும் எப்படி இருக்காங்கன்னு தெரியாத கொடுமை.. இதுக்காகவா நான் ஓடி ஓடி சம்பாதிச்சேன். ரொம்பப் புத்திசாலித்தனமா சொத்து சேர்த்தேன்?..
பேருந்து விக்கிரவாண்டியை தாண்டி திண்டிவனம் நெடுஞ்சாலையில் வேகமெடுக்க ஆரம்பித்தது.
சரிங்க.. மனசை தளர விடாதீங்க..
தம்பி.. கொஞ்சம் நினைச்சு பாருங்க.. எனக்கு இடத்தை வித்த அம்மாவை, அவங்க பெத்த மகனே வீட்டை விட்டு விரட்டிட்டான்.. அந்த அம்மா மனசு எப்படித் துடிச்சிருக்கும்.. வயசான காலத்துல பித்துப் பிடிச்சுத் தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்கும் போது கூட, என்னை எங்கயாவது ரோட்டுல பார்த்தா கையெடுத்து கும்பிட்டு "ஐயா சாமி.. என் பேரனை தொட கூட விட மாட்டேங்குறாங்க சாமி.. குடுத்துடுங்க சாமி.." அப்படின்னு அழும்..
இதைச் சொல்லும் போது அவர் உடல் அளவுக்கு அதிகமாக நடுங்கியது.
அவரைத் தேற்ற நினைத்த நான் "சரி விடுங்க.. அப்படிப் பார்த்தா பெத்த அம்மாவை விரட்டியடிச்ச அந்த மகனும் தான தப்பு பண்ணியிருக்கான்.." என்றேன்.
இங்க தான் தம்பி கர்மா வேலை செய்யுது.. பாவம் ஒரு சங்கிலி தொடர் மாதிரி.. அந்த அம்மாவோட மகனும் பைக்'ல இருந்து கீழ விழுந்து கால் துண்டாகிடுச்சு.. இப்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கான்.. நான் அந்த இடத்தை அன்னைக்கு வாங்காம இருந்திருந்தா அந்த அம்மாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது தான.. அந்த அம்மா மகன் எல்லாரும் நல்லா இருந்திருப்பாங்க தான..
நான் அமைதியாகப் பேருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்.
இத்தனைக்கும் அந்த அம்மா என்னைத் திட்டுனதில்ல.. சாபம் விட்டதில்ல.. ஏமாத்திட்டீங்களே ஐயா.. அப்படின்னு ஈனஸ்வரத்துல புலம்பும்.. நான் கோடி கோடியா சம்பாதிச்சு இருக்கேன், ஆனா இப்ப அதெல்லாம் ஒரு மயிருக்கும் பிரயோஜனப்படல..
அதிகாலை ஐந்து மணிக்கு அவர் மறைமலை நகரில் இறங்கி கொண்டார். அதன் பிறகு பேருந்து நிலையத்தில் இருந்து வீடு வந்து சேரும் வரை அவர் கூறிய வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மண்ணை வாரி தூத்தல.. காது கூச கெட்ட வார்த்தையால திட்டல.. என் பொண்டாட்டி புள்ளைங்க மேல சாபம் விடல.. ஆனா என்னைப் பார்த்து வெம்பி அழுதா அந்தக் கிழவி.. அவளோட ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் நான் பல சொட்டு இரத்தம் சிந்திக்கிட்டு இருக்கேன்.. அதான் தம்பி கர்மா.. உடம்புல ஒட்டுத் துணி இல்லாம நெருப்புல புரண்டு பரிகாரம் பண்ணாலும், என்னால அநியாயமா பாதிக்கப்பட்டு அழுதவனோட கண்ணீருக்கு நானும் என் வம்சமும் பதில் சொல்லியே ஆகணும்.. நமசிவாய🤟🤘 #கர்மா 🕉️
சிவ பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் நடைபெறுவது ஏன் தெரியுமா?
சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும்.
மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது.
மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்.
இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது.
அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலம்.
இந்தக் காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறான்.
அடுத்து வருவது தட்சிணாயன காலம்.
அப்போது தன் பாதையை சூரியன் மாற்றிக்கொள்கிறான்.
கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம்.
இதையே "*ஆனி இலை* *அசங்க*' என்பார்கள்.
கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி.
தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி.
இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர்.
தேவர்களுக்கு
* வைகறை மார்கழி மாதம்;
* காலைப்பொழுது மாசி மாதம்;
* உச்சிக் காலம் சித்திரை;
* மாலைப்பொழுது ஆனி;
* இரவு ஆவணி;
* அர்த்த சாமம் புரட்டாசி என்பர்.
வைகறை பூஜை மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும்;
காலைச்சந்தி பூஜை மாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்;
உச்சிக்கால பூஜை சித்திரை திருவோணத்திலும்;
மாலை (சாயரட்சை) பூஜை ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும்;
இரண்டாம் கால பூஜை
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்;
அர்த்தஜாம பூஜை புரட்டாசி மாத
வளர்பிறை சதுர்த்தியிலும் நடைபெறுகிறது.
ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சில ஆலயங்களில் இந்த
ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.
இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.
மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
"அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!”
கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடுகிறார் நடராஜன்.
தில்லையில் ஆனி உத்திரத்தன்று சூரிய உதய வேளையில், யானைகள் இழுக்கும் தேர்போல அமைக்கப்பட்டுள்ள ராஜசபையின் முன்மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் அன்னை சிவகாமசுந்தரிக்கும் வெகுசிறப்பாக ஆனித் திருமஞ்சனம் நடைபெறும்.
பின்னர், சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீநடராஜப் பெருமான்
ராஜசபையில் அருள்பாலிக்கிறார்.
இதேபோல் திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும்
அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும் திருவிழாக் கோலம் காணும்.
அந்நாளில் நடராஜப் பெருமானுக்கும் தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இருவரும் அன்று தேரில்
பவனி வருவார்கள்.
திருவீதி உலா முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.
ஆனித் திருமஞ்சனத்தின்போது அளிக்க வேண்டிய அபிஷேக ஆராதனைப் பொருட்களும்,அதன் பலனகளும்
ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம்.
அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
* கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்;
* எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்;
* மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்;
* நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்;
* பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்;
* இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்;
* தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்;
* பால் அளித்தால் ஆயுள் வளரும்;
* தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்;
* நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்;
* கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்;
* சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்;
* பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது;
* பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்
என்று ஞான நூல்கள் சொல்கின்றன.
ஆனித்திருமஞ்சன சிவ வழிபாட்டின் பலன்:
பொதுவாக சிவபெருமானை வழிபட்டால் நமக்கு நல்லறிவு கிட்டும்.
இதனால் எது நல்லது-
எது தவறு என்பதைப் பகுத்தறியலாம்.
உடலில் பதட்டம் இருக்காது. அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்கிறார்கள்.
🌷 நமசிவாய🤘🤟 #நடராஜர் அபிஷேகம் ஆனித் திருமஞ்சனம் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜப்பெருமான்
வாழ்க்கையில் அமைதியையும், தைரியத்தையும், வெற்றிகளையும் தரக்கூடிய முருகப் பெருமானின் மூல மந்திரம் இதுவாகும்.
முருகப் பெருமானின் மூல மந்திரம்:
"ஓம் சரவண பவ"
இந்த மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சிறப்பான பொருளைக் கொண்டது:
ச- அறிவு மற்றும் ஞானத்தை அளிப்பவர்.
ர - இன்பத்தையும் செல்வத்தையும் தருபவர்.
வ - துன்பங்களை நீக்கி வெற்றியைத் தருபவர்.
ண - அறிவை மேம்படுத்தி, நன்மைகளைச் சேர்க்கும் சக்தி கொண்டவர்.
ப - நம்முடைய பயத்தைப் போக்கி, தைரியத்தைத் தருபவர்.
வ - பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து, மோட்சத்தை அருள்பவர்.
இந்த மந்திரத்தை மனதார உச்சரிப்பது உங்களுக்கு மன அமைதியையும், முருகப் பெருமானின் அருளையும் பெற்றுத்தரும்.
'வேல்' வழிபாட்டின் தத்துவம்
முருகனின் கையில் இருக்கும் வேல், வெறும் ஆயுதம் அல்ல; அது ஞானத்தின் குறியீடு.
நம்முடைய அறியாமை என்னும் இருளைப் போக்கி, உண்மையான அறிவை வழங்கும் சக்தியாக இது கருதப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடத் தேவையான தைரியத்தை வேல் வழிபாடு நமக்கு வழங்குகிறது.
முருகனை வழிபட சிறந்த நாட்கள்
சஷ்டி திதி:
ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி முருகனுக்கு மிகவும் உகந்த நாள்.
குறிப்பாக, ஐப்பசி மாதத்தில் வரும் 'கந்த சஷ்டி' விழா, சூரனை சம்ஹாரம் செய்த வெற்றியை நினைவுகூரும் வகையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை:
செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தைக் கொண்டவர் முருகன் என்பதால், செவ்வாய்க்கிழமைகளில் அவரை வழிபடுவது ஜாதக ரீதியான தடைகளை நீக்க உதவும்.
முருகனின் பெயர்களும் அவற்றின் சிறப்பும்
முருகப் பெருமானுக்குப் பல பெயர்கள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணத்தை வெளிப்படுத்துகின்றன:
கந்தன்:
மன்மதனைப் போல அழகுடையவன்.
குமரன்:
என்றும் இளமை மாறாதவன்.
சரவணபவன்:
'சரவணம்' எனப்படும் நாணல் காட்டில் தோன்றியவன்.
வேலன்:
கையில் வேலை ஏந்தியவன்.
பக்தியில் சரணடைதல்
முருகப் பெருமானின் அருள் கிடைக்க, பெரிய பூஜைகள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
தூய அன்போடு ஒருமுறை "முருகா" என்று அழைத்தாலே போதும், அவர் நம்முடைய துயரங்களைப் போக்கி காப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.!.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! #🕉️ ஓம் சரவணபவ 🦚
*🔴 தமிழகத்தின் கடன் – அதிர்ச்சி புள்ளி விவரங்கள்*😩😩😩 #தமிழக அரசியல் களம்
அர்ஜுனனுக்கு வயோதிகர் மூலம் அனுபவம் போதித்த கிருஷ்ணர்....
அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். அர்ஜுனன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுத்தான். அதற்கு அந்த வயோதிகர், ஆகா இது என் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார். இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் அப் பொற்காசுகளைக் களவாடி சென்று விட்டான்.
சுமார் பத்து தினங்கள் கழித்து மீண்டும் அவ்வழியே அர்ஜுனன் வந்தான். பணம் களவாடப்பட்டதைக் கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லைக் கொடுத்தான். இதையாவது பத்திரமாக வைத்திருந்து உங்கள் வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான். இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றார் வயோதிகர். தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த ஒரு பானையில் நவரத்தின கல்லைப் போட்டு வைத்தான்.
அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டுமே அதை எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான். இதையறியாத அவர் மனைவி ஒருமுறை பரணிலிருந்து அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது. அதை அவள் பெரிதுபடுத்தவில்லை.
அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான். ஏதும் அறியாத மனைவி நடந்ததைக் கூறினாள். உடனே ஆற்றிற்கு சென்ற அவர் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.
சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூறினான். அர்ஜுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறினான். அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார். ஆச்சர்யப்பட்டான் அர்ஜுனன். ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை… வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?
எனக்கும் தெரியவில்லை..?
என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா. அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர். அவன் வீட்டிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா எனக் கேட்டான்… உடனே தனக்குள் யோசித்த அவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணினான். பின் அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.
அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு, அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்தான். மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான். ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது… உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான். அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணினான்.
உடனே திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான். அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்ஜுனன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்டான். கண்ணனும் சிரித்துக் கொண்டே, இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.
அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தத பணம் மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்தார். அதனால் தான் அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார் கிருஷ்ணர். இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻🤘 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
🔥 _இந்திய வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாள்!_
இன்று (ஜூன் 10), பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜவஹர்லால் நேருவின் 4398 நாட்கள் சாதனையை முறியடித்து, *மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் பணியாற்றிய இந்தியப் பிரதமர்* என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கிறார்! 💥
கடந்த 12 ஆண்டுகளில் மோடி ஜி செய்த அசாத்திய புரட்சிகள்:
👉 பிரிவு 370 ரத்து, நக்சலிசம் ஒழிப்பு & அசைக்க முடியாத எல்லைப் பாதுகாப்பு! 💪
👉 சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு & டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி! 🚀
இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த தலைவருக்கு வாழ்த்துகள்!
📱 _இப்போதே பகிருங்கள்!_🚩🚩🚩 #பாரத் மாதா கி ஜே பி ஜே பி வரிகள்
சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கவுமாரம், சவுரம் என்ற ஆறு மதப் பிரிவுகள் முன்பு இருந்தன.
இவர்கள் சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, முருகன், சூரியன் ஆகியோரை முதல் கடவுளாக கருதி வழிபட்டனர்.
இந்த ஆறு மதங்களையும் ஒன்றிணைத்து, சனாதான தர்மத்தை, உருவாக்கினார் ஆதிசங்கர பெருமான்.
இந்த மாபெரும் சகாப்தத்தை உருவாக்கிய மகானின்
போதனைகள் அனைவராலும் ஏற்கத்தக்கவை.
"பொருளின் மீது உள்ள பேராசையை விட வேண்டும். உழைப்பால் அடைந்ததை வைத்து திருப்தி அடைய வேண்டும்.
இரவுக்கு பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், குளிர்காலத்திற்கு பின் வசந்தமும் மாறி மாறி வருகின்றன.
காலம் விளையாடல் புரிகின்றது. ஆயுள் தேய்ந்து கொண்டே வருகின்றது. அப்படி இருந்தும் வீண் ஆசைகள் மட்டும் நம்மை விட்டு அகல மறுக்கிறது.
வாழ்வின் உண்மைத்தன்மையை அறிந்து வீணான ஆசைகளை விட்டு நியாயமாக கிடைப்பதைக் கொண்டு வாழ வேண்டும்.
ஜடை தரித்தல், மொட்டை அடித்தல், காவி ஆடை அணிதல் ஆகிய வேடங்களால் எந்த பலனும் கிடைக்காது.
கடவுளுக்கு பயந்து அவருக்கு பிடித்தமானதை செய்யாமல் இவ்வாறான வேடங்களை அணிபவன் போலியாகவே இருக்கிறான். இவனைப் போன்ற முட்டாள்களை நம்பக்கூடாது.
எல்லாரிடமும் அன்பை காட்டுங்கள். அப்படியானால் தான் இறைவனின் தன்மையையும், அருளையும் உணர முடியும். எல்லாருடனும் சமநோக்குடன் பழகுங்கள்" என்கிறார் ஆதிசங்கரர்.
இந்த அருமையான போதனைகளை தந்த அந்த மகானை அன்புடன் நினைவு கூர்வோம். நமசிவாய🙏 #🙏ஆன்மீகம்
தமிழக உள்கட்டமைப்புக்கு மாபெரும் ஊக்கம்!
திருவாரூர் 4 வழிப் புறவழிச்சாலை மற்றும் 2 புதிய மேம்பாலங்கள் அமைக்க ₹1,427.61 கோடி நிதியொதுக்கிய பாரதப் பிரதமர் திரு.Narendra Modi மற்றும் மத்திய அமைச்சர் திரு.Nitin Gadkari அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாரத் மாதா கி ஜே 🚩 #நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம்.
எதிர்க்கட்சிகள் வெறும் அரசியல் நாடகம் மட்டுமே ஆடி வரும் நிலையில், தமிழகத்தின் மேம்பாட்டிற்காகத் திட்டங்களை வாரி வழங்கும் நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்!
₹1,427.61 Cr infrastructure boost for Tamil Nadu
Thank you, PM Thiru.Narendra Modi & Union Minister Thiru.Nitin Gadkari for sanctioning the 4-lane Thiruvarur bypass & 2 new flyovers to seamlessly connect our key industrial hubs.
BJP government always proves its dedication to TN's growth through pure action and visionary development!
நாம் 117 நாடுகளுக்கு கரோனா சமயத்தில் பல மில்லியன் வாக்ஸின்களை அனுப்பினோம், அர்ஜன்டைனா உட்பட. அப்போது இங்கிருக்கும் கட்சிகள் மோடியை வசைபாடின.
இப்போது அர்ஜன்டைனா LNG (கேஸ்) அனுப்பி வைத்து "இது மோடி என்னும் மாமனிதனுக்காக எங்கள் பரிசு" என்று சொல்லியிருக்கிறது.
மகிழ்வோம், இத்தகைய மாமனிதரை நமது தலைவனாகக் கொண்டதால், பெருமிதம் கொள்வோம்!
வாழ்க, வாழ்க! பாரத் மாதா கி ஜே 🚩 #நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம்.









![பாரத் மாதா கி ஜே பி ஜே பி வரிகள் - LONGEST UNBROKEN TENURES OF INDIA'S DEMOCRATICALLY ELECTED PRIME MINISTERS #2 #1 #3 NARENDRA JAWAHARLAL LNDIR: CANDHI NEHRU MODI 4,399 Days 4077 Days 4398 Days Ongolng ay ٥ + 26 20 13 1952 21 1964 _ _ #4 *5 #7 #8 PVNARASIMHA IOIRA VOPAEE RAO CANDHI 5559 16752 Days 1791 Days م - ^ ] W பட9 0- 9 #6 pome MANMOHAN SINGH 7 و 3,656 Days 1] RII CANDHI 410 r 7006 250y201 1858 Days " 1 [ 9- MATRIX @Indlanmatrix LONGEST UNBROKEN TENURES OF INDIA'S DEMOCRATICALLY ELECTED PRIME MINISTERS #2 #1 #3 NARENDRA JAWAHARLAL LNDIR: CANDHI NEHRU MODI 4,399 Days 4077 Days 4398 Days Ongolng ay ٥ + 26 20 13 1952 21 1964 _ _ #4 *5 #7 #8 PVNARASIMHA IOIRA VOPAEE RAO CANDHI 5559 16752 Days 1791 Days م - ^ ] W பட9 0- 9 #6 pome MANMOHAN SINGH 7 و 3,656 Days 1] RII CANDHI 410 r 7006 250y201 1858 Days 1 [ 9- MATRIX @Indlanmatrix - ShareChat பாரத் மாதா கி ஜே பி ஜே பி வரிகள் - LONGEST UNBROKEN TENURES OF INDIA'S DEMOCRATICALLY ELECTED PRIME MINISTERS #2 #1 #3 NARENDRA JAWAHARLAL LNDIR: CANDHI NEHRU MODI 4,399 Days 4077 Days 4398 Days Ongolng ay ٥ + 26 20 13 1952 21 1964 _ _ #4 *5 #7 #8 PVNARASIMHA IOIRA VOPAEE RAO CANDHI 5559 16752 Days 1791 Days م - ^ ] W பட9 0- 9 #6 pome MANMOHAN SINGH 7 و 3,656 Days 1] RII CANDHI 410 r 7006 250y201 1858 Days " 1 [ 9- MATRIX @Indlanmatrix LONGEST UNBROKEN TENURES OF INDIA'S DEMOCRATICALLY ELECTED PRIME MINISTERS #2 #1 #3 NARENDRA JAWAHARLAL LNDIR: CANDHI NEHRU MODI 4,399 Days 4077 Days 4398 Days Ongolng ay ٥ + 26 20 13 1952 21 1964 _ _ #4 *5 #7 #8 PVNARASIMHA IOIRA VOPAEE RAO CANDHI 5559 16752 Days 1791 Days م - ^ ] W பட9 0- 9 #6 pome MANMOHAN SINGH 7 و 3,656 Days 1] RII CANDHI 410 r 7006 250y201 1858 Days 1 [ 9- MATRIX @Indlanmatrix - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_682392_bfbfbc7_1781093680856_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=856_sc.jpg)


![நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம். - (96 BAHIA BLAN (OuLu] e மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு 50 OOOLன் LPS அனுப்பிய அர்ஜென்டினா LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில் அர்ஜென்டினா 20K soOOO டன் டPடயை இந்தியாவிற்கு ள்ளது இது மோடி என்றட வழங்கி மாமனிதனுக்காக எங்கள் பரிசு Dislike என்றும் கூறி இருக்கிறது இது இந்தியாவின் பெருமை 209 மட்டுமல்ல மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை> மரியாதையை காட்டுகிறது Share (96 BAHIA BLAN (OuLu] e மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு 50 OOOLன் LPS அனுப்பிய அர்ஜென்டினா LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில் அர்ஜென்டினா 20K soOOO டன் டPடயை இந்தியாவிற்கு ள்ளது இது மோடி என்றட வழங்கி மாமனிதனுக்காக எங்கள் பரிசு Dislike என்றும் கூறி இருக்கிறது இது இந்தியாவின் பெருமை 209 மட்டுமல்ல மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை> மரியாதையை காட்டுகிறது Share - ShareChat நாம் அனைவரும் இந்தியர் களே. வெற்றியும் தோல்வி யும் சகஜம். - (96 BAHIA BLAN (OuLu] e மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு 50 OOOLன் LPS அனுப்பிய அர்ஜென்டினா LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில் அர்ஜென்டினா 20K soOOO டன் டPடயை இந்தியாவிற்கு ள்ளது இது மோடி என்றட வழங்கி மாமனிதனுக்காக எங்கள் பரிசு Dislike என்றும் கூறி இருக்கிறது இது இந்தியாவின் பெருமை 209 மட்டுமல்ல மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை> மரியாதையை காட்டுகிறது Share (96 BAHIA BLAN (OuLu] e மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு 50 OOOLன் LPS அனுப்பிய அர்ஜென்டினா LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில் அர்ஜென்டினா 20K soOOO டன் டPடயை இந்தியாவிற்கு ள்ளது இது மோடி என்றட வழங்கி மாமனிதனுக்காக எங்கள் பரிசு Dislike என்றும் கூறி இருக்கிறது இது இந்தியாவின் பெருமை 209 மட்டுமல்ல மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை> மரியாதையை காட்டுகிறது Share - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_512226_2801f806_1779732510368_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=368_sc.jpg)