💘💞Par Tha💞💘
ShareChat
click to see wallet page
@par_tha1234567890
par_tha1234567890
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES, They Are USEDLESS
கலைஞரும் கனவில் வந்த முருகனும்..!!! கலைஞர் கருணாநிதி அவர்கள் ‘கண்ணகி’ கதையை மீண்டும் எடுக்க விரும்பினார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி போன்றவர்கள் நடித்தார்கள். கே.பி.சுந்தராம்பாள் அம்மையாரை கவுந்தி அடிகள் வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை கொண்டார் கலைஞர். சுந்தராம்பாள் உடன்படவில்லை. “என் முருகக் கடவுளிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று கூறினார். அதற்குக் கலைஞர், “முருகக் கடவுளிடம் இதுபற்றிப் பேசும்போது ஒரு தகவலை அவரிடம் சொல்லுங்கள். அவரை நடிக்கக் கூப்பிடுவது கருணாநிதி என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். அவர் ஒப்புதல் அளித்து விடுவார்” என்றார். ஆச்சர்யம் என்னவென்றால் மறுநாள், கலைஞர் கருணாநிதியை, சுந்தராம்பாள் சந்திக்கிறார். அவரது படத்தில் நடிக்கச் சம்மதிக்கிறார். அப்போது சுந்தராம்பாள் என்ன கூறினார் தெரியுமா.? “நேற்று இரவு சொப்பனத்தில் என்னிடம் முருகன் குரல் பேசியதாகத் தெரிந்தது. அந்தப் படத்தில் நடிப்பது தேசத்துக்கு நல்லது என்று அந்தக் குரல் கூறியதுபோல் உணர்ந்தேன். உங்கள் படத்தில் நடிக்கச் சம்மதிக்கிறேன்” என்று கூறினார்களாம். (தகவல் : முக்தா சீனிவாசன் எழுதிய இணையற்ற சாதனையாளர்கள் - பாகம் 1) #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - 1924 2018 1924 2018 - ShareChat
காலையில் இருந்து இப்படித்தான் படுத்துக் கிடக்கேன்....!!!!! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
திரும்பிய பக்கமெல்லாம் காலக்கணியர்களாம் ‘#சோதிடர்கள்.’ #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
வடக்கர்கள் பெரியவர்களை சந்திக்கும்போது பொசுக் பொசுக் என்று குனிந்து பாதம் தொட்டு மரியாதை செலுத்துவார்கள். நாம் மாட்டவே மாட்டோம். இரயிலில் நாம் எல்லை தாண்டாமல் கால்களை கண்ணியமாக நீட்டுவோம். வடக்கர்கள் இது எதுவுமே பாராமல் நமது கால்களையும் தாண்டி கால் நீட்டி வெறுப்பேற்றுவார்கள். #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
#வந்தே_பாரத்தில் டின்னர் நேரத்தில் காம்பார்ட்மெண்டே போர்க்களம் போல இருக்கிறது. #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
மோகனுக்கு பட்டி பாக்க தெரியாது. ஏணியில் ஏறி வேலை செய்ய தெரியாது. ஆனால் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடைய மேஸ்திரி ஒரு குடிகாரன். குடித்து விட்டு வீட்டிலேயே படுத்திருப்பான். இன்ஜினியருக்கும், வீட்டுகாரனுக்கும் மோகன்தான் மேஸ்திரி மாதிரி. ஒருநாள் இன்ஜினியர், மேஸ்திரியை துரத்திவிட்டு மோகனை மேஸ்திரியாக்கி விட்டார். புதுசா மேஸ்திரியான மோகனோட பலவீனங்கள் என்னவென்று ஆட்களுக்கு தெரியும். அதனால் மேஸ்திரி பட்டி பாருங்க. ஏணியில ஏறுங்கன்னு அவனை ஓட்ட ஆரம்பித்தனர். இது வீட்டுகாரனுக்கு முன்னாலும், இன்ஜினியருக்கு முன்னாலும் நடந்தால் தனக்கு நல்லதில்லை என்று நினைத்தவன், ஒவ்வொரு ஆளாக வேலையை விட்டு நிறுத்தி விட்டு புதுபுது ஆட்களை உள்ளே கொண்டு வந்தான். புதிதாக வருபவர்கள் மேஸ்திரிக்கு எல்லா வேலையும் தெரியும் போலன்னு நினைச்சு, அவனிடம் பணிவாக நடந்து கொண்டனர். கீழேயிருந்து மேலே போகிறவன் முதலில் தன்னுடன் இருப்பவர்களைத்தான் கழட்டி விடுவான். அதுவே மனித சுபாவம். எடப்பாடியும் இதற்கு விதிவிலக்கில்லை.! #🤔தெரிந்து கொள்வோம்
இன்றைக்கு ஞாயிற்று கிழமை... மதியம் டிபன் பஜ்ஜூ செய்யுங்கோ நான் வறேன்... பஜ்ஜிகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்... உலகில எவ்வளவுதான் சாப்பிடறதுக்கு ஸ்னாக்ஸ் இருந்தாலும், நம்ப ஊரு பஜ்ஜிக்கினு ஒரு தனி இடம் என்னைக்குமே இருக்கு. அதுக்கு காரணம் செய்யறது ரொம்ப ஈஸி. ரொம்ப கிரிஷ்பியா இருக்கும். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் ரொம்ப விரும்பி சாப்பிடுற ஒரு ஐட்டம். யாராவது கெஸ்ட் வந்தால் பத்து நிமிஷம் செய்யக்கூடிய ஒரு ஸ்னாக்ஸ். அதனால நம்ம வீட்டு அம்மணிகளுக்கு வீட்டில வாழைக்காய் இல்லைனா கை உடைஞ்சு மாதிரி இருக்கும். சேலம், ஈரோடு, நாமக்கல் & தர்மபுரி காரங்களுக்கும் பஜ்ஜிக்கும் எப்பொழுதுமே ஒரு இணைபிரியாத ஒரு பந்தம் உண்டு. எப்படின்னு கேட்கறீங்களா.? எப்பொழுதாவது சாயங்காலமா தூரல் வந்து நின்னவுடனே உடனடியா ரோட்டோரக் கடைங்கள போயி பாருங்க. மக்கள் கூட்டம் அலை மோதும். எதுக்கு.? சுடசுட பஜ்ஜி சாப்பிடத்தான். கடையில உட்கார நிக்க இடமே இருக்காது. அவ்வளவு எதுக்குங்க. எங்க ஊர் பக்கம் பொண்ணு பார்க்க போனீங்கன்னா கூட பஜ்ஜியும் & டீயும் தான் கொடுப்பாங்க. (மற்ற ஊர் பக்கம் போயி பொண்ணு பாக்கல.) அதனால அவங்க என்ன கொடுப்பாங்கன்னு எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும். பஜ்ஜில எவ்வளவோ வகை இருந்தாலும் வாழைக்காய் பஜ்ஜிக்கின்னு ஒரு தனியிடம் என்னைக்குமே இருக்கும். சேலத்திலேயே ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொரு ஸ்பெஷலட்டி வழக்கத்தில் இருக்கு. மேட்டூர் ஓமலூர் பக்கம் போனீங்கன்னா வாழைக்காயை இரண்டாக வெட்டி அப்புறம் கட் பண்ணி செவ்வகமா பஜ்ஜி போடுவாங்க. வாழையிலையில வச்சி அதுக்கு தொட்டுக்க தேங்காய் சட்னி கொடுக்கிறது அதிகமான பழக்கமா இருக்கு. அதே சேலம் டவுன் பக்கம் போனீங்கன்னா, வாழைக்காயை அப்படியே நீளமாக கட் பண்ணி பஜ்ஜி போட்டுக் கொடுப்பாங்க. ஆனா தொட்டுக்க சாம்பார் ஊற்றுவாங்க. அப்படியே அந்தப் பக்கமா ராசிபுரம் போனீங்கன்னா, தினந்தோறும் பஜ்ஜி & டீ சாப்பிடுவதற்கு ஒரு கூட்டம் சாயங்காலம் நேரத்தில அலைமோதறத பார்க்கலாம். இங்கேயும் வாழைக்காயை அப்படியே நீளவாக்கில் கட் பண்ணி பஜ்ஜி போட்டு தருவாங்க. ஆனா ஒரு தட்டிலே வாழை இலையை போட்டு பஜ்ஜி வச்சு அதுமேல உருளைக்கிழங்கு மசாலா ஊத்தி கொடுப்பாங்க பாருங்க அடாடா. சாப்பிடதாங்க வாழ்க்கை. உங்க ஊர் பக்கம் இப்படி ஏதாவது சிறப்பாக இருந்தால் சொல்லுங்க. பஜ்ஜிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்....... #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
இன்னிக்கு கார்த்தால என்ன சாப்பாடு.? #பழையதுதான்... #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat