வாலி தன் எதிரியின் பலத்தில் பாதியை பெறுகிறவன். ராமனாலேயே நேரடியாக மோத முடியாமல் மறைந்திருந்து கொல்லப்பட்டவன். இதே மாதிரியான வரம் பெற்றவன்தான் மகாபாரதத்தின் சல்லியன். கர்ணனை நடு வழியில் அம்போவென்று விட்டு விட்டு போன அதே சல்லியன். அவனுக்கு எதிராக யார் கோபத்துடனும் ஆக்ரோசத்துடனும் ரௌத்ரத்துடனும் போர் செய்தால் அவனது பலம் பல மடங்கு அதிகரிக்கும். இவனை யாராலும் வீழ்த்த முடியாது. இவனை எதிர்த்து நின்றவர்கள் வென்றதும் கிடையாது.
பதினெட்டாம் நாள் இறுதி யுத்தத்தின் போது கௌரவ சேனையின் தளபதியாக சல்லியனை நியமிக்கிறான் துரியன். இவனுக்கு எதிராக யார் சண்டையிட்டாலும் கொல்லப்படுவார்கள் என்பதால் கண்ணன் தர்மனை பாண்டவர் தரப்பில் தளபதியாக்குகிறான். தர்மனுக்கு விதிக்கப்படுவதெல்லாம் ஒரே நிபந்தனைதான். கண்ணனை மனதால் நினைத்தபடி அன்போடும் கருணையோடும் சிரித்தபடியும் சண்டை போட வேண்டும். இருப்பதிலேயே கஷ்டமான விசயம் இதுதான். துளிக்கூட கோபமின்றி யுத்தத்தில் இறங்கி சல்லியனை வெற்றி கொள்கிறான் தர்மன்.!
#என் மனைவியிடம் பயன்படுத்துவதும் இதே டெக்னிக்தான்..!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்