
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES,
They Are USEDLESS
மூன்று தளங்களில் இருந்து இயங்கும் கதையமைப்பு இறுதியை நெருங்க நெருங்க ஒரே தளத்தில் ஒன்றிணையும் உத்தியை ராஜேஷ்குமாருக்கும் முன்னால் #SAP தனது நாவல்களில் அற்புதமாகக் கையாண்டிருப்பார். SAP நாவல்கள் ஜனரஞ்சமாகக் கதை எழுத நினைக்கும் ஆரம்பகால எழுத்தாளர்களுக்குச் சிறந்த பாடம்.
(எஸ்.ஏ.பி. அண்ணாமலை (S.A.P. Annamalai, 1924–1994) அவர்கள் தமிழகத்தின் புகழ்பெற்ற இதழாளர், எழுத்தாளர் மற்றும் 'குமுதம்' வார இதழின் நிறுவனர் ஆவார்.)
#🤔தெரிந்து கொள்வோம்
என்னைய ஜெயிக்க வைச்சா, மாசாமாசம் தொகுதிக்கு வருவேன். நீங்க என்னை பாத்துக்கலாம்.
அப்ப, தொகுதிக்கு ஒன்னும் பண்ணமாட்ட.?
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
#கல்யாண_மோர்
கல்யாண மோர் என்றால் என்ன.?
குறிப்பாக தஞ்சாவூர் – கும்பகோணம் வாத்திமா கல்யாணங்கள் வெகு நேர்த்தியாக இருக்கும். நான்கு நாள் கல்யாணம். மூன்றாம் நாள் இரவு சம்பந்தி விருந்து. அன்று செம்மங்குடியோ, அரியக்குடியோ கச்சேரி இருக்கும். பக்கவாத்தியக்காரர்களும் பெரிய ஜாம்பவான்களாக இருப்பர். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள். கச்சேரி கேட்பதற்கென்றே கூப்பிட்டவர்கள், கூப்பிடாதவர்கள் என்று பல கிராமங்களில் இருந்தும் மிகப் பெரிய கூட்டம் வரும்.
கச்சேரி முடிந்ததும் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விடுவார்கள். 500 பேருக்குச் சமைத்த சமையல் 1000 பேருக்கு எப்படிப் போதும்.? சமையல் கலைஞர்களும் ஜாம்பவான்கள். ஒரு காளியாகுடி செட்டோ, அகோரம் செட்டோ ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் பெண் வீட்டாருக்குக் கவலை. எப்படி இவர்களையெல்லாம் சமாளிக்கப் போகிறோம் என்று.? சமையல் கலைஞர் சொல்வார். “கவலையை எங்களிடம் விடும். உக்கிராண உள்ளில் இருக்கும் சாமான்கள் போதும்” என்று.
சரி. ஆனால் மோருக்கு வழி.? ஒரு பெரிய அண்டா நிறைய அரிசி களைந்த நீரை (அது மோர் நிறத்தில்தான் இருக்கும்) கொட்டி, அதில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, சிறிதளவு உப்பு சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, பெருங்காயம் சேர்த்து, கடுகு தாளித்துப் பரிமாறுவார்கள். எல்லோரும் ருசித்து தொன்னையிலும் வாங்கிக் குடிப்பார்கள். “மோரு பலே ஜோரு” என்று சொல்லி, தாம்பூலம் வாங்கிக் கொண்டு விடை பெறுவார்கள். எப்போதுமே இமிடேஷன் ஒரிஜினலைவிட ஜொலிக்கும்தான். அதற்குக் கல்யாண மோரும் விதிவிலக்கில்லை.
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
"என்னடி, இப்பதான் தூங்கி எந்திரிச்சியா.?"
"இன்னிக்கு அமாவாசைதானடி. எங்க போனாலும் சாப்பாடு கிடைக்கும்."
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
வெளியில் போயிட்டு வரும்போது....
ஏன் லேட்டு-னு மனைவி கேட்கும்போது.... 🙄🤔🤭
கணவன் சொல்லும் கதைகளுக்கு கற்பனை வளம் அதிகம்.... 😛😊🤣
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
எங்கண்ணன் ஒருத்தன் பீகார்ல இன்ஜினியரா இருக்கான். அப்பப்போ வீட்டுக்கு வருவான். ஒருதடவை நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது, என்னோட பொழுது போக்கே கதை படிக்கிறதுதான். உன்னோட எல்லா கதையையும் நான் படிச்சிருக்கேன்னு சொன்னாப்புடி. என்னோட மைனஸ் பாயிண்ட் கதையை எழுதி முடிச்சதும் அதை மறந்து தொலைத்து விடுவது. வேணும்னே டைட்டிலை சொன்னேன். முழு கதையையும் சொல்லிட்டாரு.! கதையில வர்ர புது புது ஐடியாக்களை அவர் சிலாகிச்சு பேச பேச நெளிய ஆரம்பிச்சிட்டேன். இப்போதெல்லாம் எங்கண்ணனிடம் பழைய மாதிரி ஜாலியா பேசவே முடியாம, அவர பாத்தாவே தலைமறைவாயிட்டு இருக்கேன். எழுதுறதை சொந்தக்காரன் & பந்தக்காரனுக்கு தெரியாம ரொம்ப ரகசியமா வைச்சிருக்கேன். இல்லைன்னா நாளைக்கு சண்டை வந்தா இவனெல்லாம் ஒரு ரைட்டரான்னு செருப்பாலயே அடிப்பானுகன்ற பயம்தான்.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்
நைட் ஒரு மணிக்கு வேலை முடிஞ்சு வந்தா, நால்ரோட்டை தோண்டி போட்டு வைச்சிருக்காங்க.! அதை தாண்டுனாத்தான் வீட்டுக்கு போக முடியும். தோண்டுறவன் இதுல போங்கன்னு தூரத்துல ஒரு சந்தை காட்டுறான். உள்ளே போனா நாலஞ்சு நாய்கள். ரேபியஸ் வந்துதான் சாவோம் போலன்னு நினைச்சுகிட்டு மறுபடியும் பள்ளம் தோண்டிய இடத்துக்கே வந்தாச்சு. அப்புறம் நாலைஞ்சு வண்டிகள் வந்த பிறகு ஊர்வலமா அதே வீதியில நுழைஞ்சாச்சு. எங்கே இருக்கேன். எங்கே போறேன்னு ஒன்னும் புரியலை. கூட வந்தவனுக ஒவ்வொருத்தனா காணாம போய் ரோட்டுல நான் மட்டும்தான் இருக்கேன். எப்படியோ வந்தாச்சு. அங்கே வெயிட்டிங்குல இருந்த பறக்கும்படைகிட்ட மாட்டியாச்சு. பர்ஸ் & போனுன்னு செக் பண்றாங்க. அப்ப வந்த இன்ஸ்டா மார்ட் டெலிவரி பாய்கிட்ட பையை பிரிச்சு காட்ட சொல்றாங்க. உள்ளே தண்ணி பாட்டில். இதெல்லாமாடா ஆர்டர் போடுறாங்கன்னு போக சொல்லிட்டாங்க. யாரோ ஒரு கார்பரேட் கம்பெனிக்கு நைட் ஒன்றை மணிக்கு டெலிவரி பண்றவனால அவனோட சொந்த தொழிலில் இதே மாதிரியான உழைப்பை போட முடிவதில்லையே.? ஏன்.?
#🤔தெரிந்து கொள்வோம்
ஒரு மாநில தேர்தலில் ஜெயிக்க விரும்புகிற கட்சி, அந்த மாநிலத்திற்கு சில நல திட்டங்களையாவது அறிவித்து நல்லபெயர் வாங்க நினைக்க வேண்டும். அப்போதுதான் களத்தில் இருப்பவர்கள் அதை சொல்லி நாலு ஓட்டாவது வாங்க முடியும். இவனுக ஜெயிக்கிறதுக்காக பேசுற மாதிரி தெரியலை.!
#🤣 லொள்ளு
#🤔தெரிந்து கொள்வோம்












