💘💞Par Tha💞💘
ShareChat
click to see wallet page
@par_tha1234567890
par_tha1234567890
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES, They Are USEDLESS
ரஞ்சன், நம்பியார், ஆனந்தன்-னு தலைவருக்கு டப் கொடுக்க எத்தனையோ பேர் இருக்கும் போது, யார்ரா இந்த காந்தராவ்.? குரூப்புல டூப்பா.? #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
#ஆதவ்_அர்ஜீனா.! நீங்க ஏன் முதல்ல சாட்டை துரைமுருகன்கூட விவாதம் பண்ணகூடாது.? #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - lilarakhiand  ((Ily /ukltuutt  lilarakhiand  ((Ily /ukltuutt - ShareChat
🔥 துபாயில் சிக்கிய இந்தியர்களுக்கு தெய்வமாக வந்த தொழிலதிபர்! 🇮🇳❤️ மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், துபாயிலிருந்து இந்தியா திரும்ப வேண்டிய பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் துபாய் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர். ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்து போனது… பண வசதி இல்லை… குழந்தைகளும் முதியவர்களும் உடன்… தங்க இடமின்றி நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை! 😔 அந்த நேரத்தில் ஒரு மனிதர் செய்த செயல் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் யோகேஷ் தோஷி உடனடியாக களமிறங்கினார். தனக்குச் சொந்தமான 64 குடியிருப்புகள் கொண்ட பெரிய கட்டிடத்தை முழுவதும் இந்தியர்களுக்காக திறந்துவிட்டார். 🏠 தங்க இடம் – இலவசம் 🍛 உணவு – இலவசம் 💧 தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் – அனைத்தும் இலவசம் தற்போது 125-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அந்த குடியிருப்புகளில் பாதுகாப்பாக தங்கி உள்ளனர். “சொந்த நாட்டினர் துயரத்தில் இருக்கும்போது நாமெப்படி அமைதியாக இருக்க முடியும்?” என்று அவர் கூறிய ஒரு வார்த்தை, இன்று ஆயிரக்கணக்கான மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது. ❤️ மனிதாபிமானம் இன்னும் உயிருடன் இருப்பதை நிரூபித்த இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 👏 இப்படிப்பட்ட மனிதர்களால் தான் உலகம் இன்னும் அழகாக இருக்கிறது. 👉 இந்த மனிதநேய செயலை அனைவரும் பாராட்ட ஒரு 👍 அல்லது ❤️ போடுங்கள். 👉 நண்பர்களுக்கும் பகிருங்கள்… நல்ல செய்தி அதிகமாக பரவட்டும். #ProudToBeIndian #HumanityFirst #RealHero #YogeshDoshi #IndiansHelpingIndians #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கும் மீட்டர் மூலம் கணக்கிட்டு வரி போட்டுவிடலாம்... #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - SMRஙகம் SUN NEWS டேட்டாவுக்கு வரி இந்தியாவில் MOBILE DATA பயன்படுத்த தனியாக வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு தற்போது இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்க்கு 18% GST தனியாக வசூல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. D NSUNNEWSTAMIL @@ SUNNEWS @ sunnewslivein | HaR 2026 | SMRஙகம் SUN NEWS டேட்டாவுக்கு வரி இந்தியாவில் MOBILE DATA பயன்படுத்த தனியாக வரி விதிக்க ஒன்றிய அரசு திட்டம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இதுகுறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு தற்போது இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ்க்கு 18% GST தனியாக வசூல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. D NSUNNEWSTAMIL @@ SUNNEWS @ sunnewslivein | HaR 2026 | - ShareChat
வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போறவங்களை விட..., வியாழக்கிழமை சாய்பாபா கோவிலுக்கு போற கூட்டம் அதிகமாயிடுச்சு. #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ಭ  ಭ - ShareChat
முருகன் கோயிலுக்கு போயிருந்தேன். மதியம் கோயில் திறக்கலை. வெயிட்டிங்கில் இருந்த போது பக்கத்துல ஒரு பொண்ணு வந்து உக்காந்துச்சு.! கையில ரெண்டு பசங்க. சரியான சேட்டை. கழுத்துல கருகமணி மாலை. பாக்க பாயம்மா மாதிரி இருக்கு. பொட்டு & பூ இல்லை.! கோயில் திறந்ததும் அர்ச்சனைக்கு பேர் கேக்கும் போது பேரை சொல்லாம வீட்டுகாரரை கூப்பிடுது. வந்த ஆள் பேர் ராஜேஸ், சமீமா பீவீன்னு பேர் சொல்றாரு. பூசாரி உட்பட யாருமே வித்தியாசமா பாக்கலை.! செல்லை நோண்டுன புருசனை ஆராதனையின் போது சாமிய பாருங்கன்னு சொல்லுது. ஆனா கடைசிவரை திருநீறை நெத்தியில வைக்கவே இல்லை.! லவ் மேரேஜா இருக்கனும். அவரவர் மதத்தில் அவரவர்கள் வாழ்கிறார்கள். பிறந்த பசங்க முஸ்லீம் வீட்டிலும் & இந்து வீட்டிலும்தான் வாழ்கிறார்கள். #பம்பாய் படத்து கதைய சொல்றான்.! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
போனில் அழைத்தால் invite பன்றாங்க.. வாட்ஸ் அப்பில் அனுப்பினால் inform செய்றாங்கன்னு அர்த்தம்.... #நவீனகால_அழைப்புகள் #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - WhatsApp WhatsApp - ShareChat
யாருக்காவது காத்திருக்கும் போதுதான்... பல வாட்ஸ் அப் பகிர்வுகள் படிக்கப்படுகின்றன. #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - WhatsApp WhatsApp - ShareChat
முதல் புள்ளியும் முற்று புள்ளியும்! சத்யவதி இருள் நடுவே அமர்ந்திருந்தாள். அரண்மனையின் அகல்விளக்குகள் காற்றில் அலைந்து அங்கும் இங்குமாக வெளிச்சத்தை அள்ளிவீசி கொண்டிருந்தன. அந்த அரைகுறை வெளிச்சத்தில் யாரோ நடந்துவரும் ஓசை கேட்டது. "யாரது?" அவளின் குரல் சுவரில் பட்டு எதிரொலித்தது. " நான்தான் பெரிய அத்தை" என்றது பழக்கப்பட்ட மென்மையான குரல். " வந்திருப்பது கிருஷ்ணனா?" "ஆம். நானேதான்!" அவன் வெளிச்சத்திற்கு வந்தான். "நலமா அத்தை?" "நலம் விசாரிக்கும் நேரமா இது? என் வம்சம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. கௌரவர் தரப்பில் திருதராஷ்டிரனுக்கு கொள்ளி போட ஒரே ஒரு கவுரவன் மட்டும் எஞ்சியிருக்கிறான்.அவனும் வேலைக்காரிக்கு பிறந்தவன்." "அவன்தான் நாளை அஸ்தினாபுரியின் அரசன்.துரியனின் நாட்டை ஆளப்போகும் வாரிசு." "பாண்டவர் தரப்பில் யாரும் இல்லை.அஸ்வத்தாமன் பாண்டவர் வாரிசான உபபாண்டவர் உட்பட அனைவரையும் கொன்றுவிட்டான். உத்திரையின் வயிற்றில் உள்ள கரு மட்டுமே வாரிசாக எஞ்சியிருக்கிறது. அதுவும் ஆணா பெண்ணா என்று தெரியாது" "அது நாளைய கவலை. எதுவாக பிறப்பினும் அதுவே வாரிசு" "நான் என்ன பாவம் செய்தேன்? என் வம்சத்திற்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?" "எனக்கு காரணம் தெரியும். அதை சொன்னால் உன் மனம் புண்படும்" " இதற்கு மேல் புண்பட என்ன இருக்கிறது?" "அப்படியானால் நான் அறிந்த உண்மையை சொல்கிறேன். அதை ஏற்பதும் ஏற்காததும் உன் இஷ்டம்" "இங்கே எல்லாமே உன் இஷ்டம்போல்தானே நடக்கிறது. அடுக்கு உன் காரணங்களை " "நான் சொல்வதை கேட்டு கோபப்படாதே அத்தை. இந்த அழிவிற்கு பிள்ளையார்சுழி போட்டது நீ தான்" "நானா?" "ஆம். நீ தான். நீ ஒரு பரதவப் பெண்ணாக பிறந்தாய். மேனியில் மீன் வாடையடிக்கும் உனக்கு மச்சகந்தி என்று பெயர். பராசரன். முற்றும் அறிந்த முனிவன்.நல்ல நேரத்தில் அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அவசரமாக உன்னுடன் கூடி வியாசனை பெற்றான். உன் கன்னிதன்மையை திரும்ப தந்ததுடன் மேனியில் சௌந்தர்யமணதினையும் எழுச் செய்தான். தற்செயலாக உன்னை சந்தித்த அஸ்தினாபுரியின் மன்னன் சாந்தனு அந்த வாசனையால் கவரப்பட்டு உன்னை மணக்க விரும்பினான்.அவனது முதல் மனைவி கங்கை. அவளுக்கு பீஷ்மன் என்ற மகன் இருந்தான்.அவனே அடுத்த அரசன்.எனக்கு பிறக்கும் பிள்ளைகள் தான் அரசாள வேண்டும் என்றதால் பீஷ்மன் பிரம்மசரிய விரதம் ஏற்றான்." " இது எல்லோரும் அறிந்தது தானே?" "ஆம். ஆனால் அனைவரும் கர்மத்தை அறிவதில்லையே? உன் ஆசை உன் பிள்ளைகள் அரசாள வேண்டும் என்பது. உனக்கு பிறந்தவர்கள் இருவர். ஒருவன் விசித்திரவீரியன் இன்னொருவன் சித்ராங்கதன்.அவர்களுக்கு பெண் தேடிச்சென்ற பீஷ்மன் காசிநாட்டின் மூன்று இளவரசிகளை தூக்கி வந்தான்.அம்பாவை திருமணம் செய்ய மறுத்ததன் மூலம் அவனே அவன் உயிருக்கு ஆபத்தை தேடிகொண்டான்.அம்பிகாவையும் அம்பாலிகாவையும் திருமணம் செய்துகொண்ட இரு சகோதரர்களுக்கும் குழந்தை பிறக்கவேயில்லை. நீ நியோக முறையில் வாரிசை உருவாக்க நினைத்தாய். நீ நினைத்திருந்தால் பீஷ்மனை அம்பாவை திருமணம் செய்ய சொல்லி உன் சத்தியத்தை திரும்ப பெற்றிருக்கலாம். நாளை வாரிசு போட்டி வந்துவிடுமோ என்று மவுனமானாய். இப்போது வாரிசு இல்லாத நிலையில் நீ பீஷ்மனிடம் நியோக முறையில் வாரிசை பெற உதவி கேட்டிருக்கலாம். மூத்தகுடியின் மகன் என்பதால் அவனை நிராகரித்தாய். நியோகத்தை நடத்த வியாசன் வந்தான்.அவனுடன் கூட விருப்பமில்லாத உன் மருமகள்களை நீ கூடச் சொல்லி நிர்பந்தித்தாய். ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண்ணே எதிரியானது இப்போதுதான் அத்தை. அவர்களின் மனதை நீசுக்குநூறாக உடைத்தாய்.வியாசனுக்கு பிறந்த திருதராஷ்டிரன் கண்பார்வையற்று பிறந்தான். பாண்டு பலவீனமாக பிறந்தான். இருவருக்கும் பிறந்த உன் பேரப்பிள்ளைகள் தான் உன் வம்சத்தை அழித்து கொண்டிருக்கிறார்கள். உன் குலம் தழைக்க ஒருவனது வாழ்வை நீ அழித்தாய். தன் தாயிற்காக தியாகம் செய்த பீஷ்மனின் வாழ்வு வீணாயிற்று. நல்ல நோக்கத்திற்காக அவன் செய்த தியாகம் தவறாகிவிட்டது. நீ செய்த கர்மா சில தலைமுறைகள் கடந்து வேலை செய்கிறது. நீ உறங்கலாம். உன் கர்மா உறங்காது. தர்மம் என்பது எல்லோருக்கும் நன்மை செய்வது. ஒருவனின் வாழ்வை அழிப்பதல்ல! நீ செய்த பாவங்களுக்கான தண்டனை உடனே கிடைத்துவிடாது. தலைமுறைகள் தாண்டிவரும் அந்த புதிர் கணக்கு. உன் வம்சம் மட்டுமே ஆளவேண்டும் என்று நினைத்தாய்..உன் மகன்களின் அழிவை கண்ணால்பார்த்தாய். இப்போது பேரன்களின் அழிவை அதே கண்களால் பார்க்கிறாய். வம்சத்தை காப்பாற்ற நினைத்த நீயே வம்ச அழிவுக்கு காரணமானாய்." "ஆம். நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம். எனக்கு ஏன் மரணம் வரவில்லை?" "நாம் நீண்டநாள் வாழ்ந்து எப்போதோ செய்த தவறுகள் நம் முன்வந்து நின்று நியாயம் கேட்கும்வரை ஒரு மனிதனுக்கு மரணம் வராது அத்தை. குரு வம்சத்தின் முதல் புள்ளியையும் நீயே வைத்தாய். முற்றுபுள்ளியையும் நீயே வைக்கிறாய்.நீண்ட ஆயுளே ஒரு சாபம்தான் அத்தை, நான் வந்த வேலை முடிந்துவிட்டது. நான் வருகிறேன்" அவன் வெளிச்சத்திலிருந்து இருட்டில் இறங்கினான். அரண்மனைக்கு வெளியேயும் இருள் கவிய தொடங்கியது. #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - உலகின் மிக நீண்ட இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம் உலகின் மிக நீண்ட இதிகாசங்களுள் ஒன்று மகாபாரதம் - ShareChat
பாரத போரின் ஒன்பதாம் நாள் மாலை போர் முடிவதற்கான சங்கொலி காற்றில் பரவியது. போரின் கொடுமையை காண சகிக்காமல் ஆதவன் மேற்கே மறைந்தான். இருதரப்பின் படைவீடுகளில் லாப நஷ்ட கணக்கு துவங்கியது.நேற்று இருந்தவர் இன்று இல்லை. செலவு கணக்கில் வரவாகி இருந்தார். இன்றுவரவு கணக்கில் இருப்பவர்கள் நாளை செலவு கணக்கில் வரவு வைக்க தயாராக இருந்தனர். யார் முந்தி. யார் பிந்தி என்பதைத்தான் யாரும் அறியமுடியவில்லை. படைவீட்டின்மையத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். "கிருஷ்ணா!அடுத்தது யாரை கொல்லலாம் என்று யோசிக்கிறாயா?" என்றான் அர்ச்சுனன். "இல்லை! என்னால் கொல்லமுடியாதவர்களை பற்றி யோசிக்கிறேன்" "ஆச்சரியம்! உன்னால் கொல்லமுடியாதவர்களும் இருக்கிறார்களா?" என்றான் பீமன்.அவன் குரலில் வியப்பிருந்தது. "ஆம். இருவர் இருந்தார்கள். ஒருவனை சந்தேகத்தின் பெயரால் களத்திற்கு வராமல் செய்துவிட்டேன். இன்னொருவரைத்தான் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறேன். ஒருவன் பிறப்பென்னும் ஒரு கதவு வழியாக இங்கே வந்தால் மரணமென்னும் இன்னொரு வாசல் வழியாக வெளியேறியாக வேண்டும். இதுதான் உலகின் இயற்கை நியதி. ஒருவன் ஜனனம் என்னும் ஒருவழிப்பாதையில் வந்தவன். இன்னொருவனுக்கு மரணத்தின் வாயில் அவனாக நினைக்கும்வரை திறவாது" "புதிராக பேசாதே! விளக்கமாக சொல்" என்றான் தர்மன். "நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு இங்கிருக்கும் யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்" "கேள் உன் கேள்விகளை?" "இந்த யுத்தம் எதற்காக நடக்கிறது. ? பெண்ணை அவமதித்ததற்காகவா? இல்லை மண்ணை தரமறுத்ததற்காகவா?" "இரண்டுக்கும்தான்" என்றான் சகாதேவன்.அவன் மனதில் திரெளபதியின் விரிந்த கூந்தல் வந்து போனது. "சாஸ்திர நிபுணனே!உனக்கு தெரியாத மூன்றாவது காரணம் ஒன்றிருக்கிறது. அதை உன்னால் கூறமுடியுமா?" அவன் சுற்றிலும் பார்த்தான். அனைவரது உதடுகளும் பிதுங்குவதை பார்த்து" எனக்கு தெரியவில்லை. நீயே கூறு" என்றான். "சரி. நானே சொல்கிறேன். நான் கூறிய இருவரில் ஒருவன் அஸ்வத்தாமன். சாவே இல்லாத சிரஞ்சீவிகளில் ஒருவன். ஒருவழிப்பாதையில் உலகில் உழல்பவன்.அவன் கவுரவர் படை தலைவனாக வந்தால் நம் கதி அதோகதிதான். சாவே இல்லாத ஒருவனுடன் சண்டைபோட்டு நாம்தான் சாவோம். துரியன் மனதில் சந்தேகத்தை விதைத்து அவனை களத்திலிருந்து அகற்றினேன்.துரியனின் சக்திவாய்ந்த ஆயுதம் அவன்தான்.அவனை பயன்படுத்த மறுக்கிறான் துரியன் .நாம் வெற்றி என்னும் இலக்கை அடையும்வரை அவன் களத்திற்கு வரமாட்டான். இன்னொருவர் பீஷ்மர். தான் நினைக்கும்போது சாகும்வரம் பெற்றவர். அவரை வீழ்த்த யாராலும் முடியாது. அவர் களத்தில் இருக்கும்வரை வெற்றியும் வசப்படாது. அவரைப்பற்றித்தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்" "யார் நம்பாட்டனாரையா சொல்கிறாய்?" " ஆம். அவரேதான்." "அவர் போரிலிருந்து ஒதுங்கிகொண்டால்?" "அது நடவாது. அஸ்தினாபுரத்து அரியணைக்கு அடிமை அவர். அதில் வீற்றிருப்பவர்யாராயினும் அவரின். விசுவாசி அவர். அரியணைக்கு ஆபத்து வரும்போது களம் காண மறுப்பாரா என்ன?" "அவரை வெல்ல என்னதான் வழி?" "எனக்கு எதுவும் புலப்படவில்லை," "அப்படி என்றால் நாம் தோற்பது உறுதி என்கிறாயா? இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை." "போர்முஸ்தீபுகளில் சொல்ல மறந்துவிட்டேன். இப்போதுதான் நினைவுக்கு வந்தது" "இப்போது என்ன செய்வது ?" "அவரை எப்படி வீழ்த்துவது என்று அவரிடமே கேட்போம்" "முட்டாள்தனமாக இருக்கிறது. யாராவது தன் பலவீனத்தை எதிரியிடம் சொல்வார்களா?" "ஒருவன் தன் பலவீனத்தை சொல்கிறான் என்றால் அதை வெல்லும் வழிகளையும் அறிந்துவைத்திருப்பான் என்பதுதானே நியதி. " "எனக்கு இது சரியாக தோன்றவில்லை. அவர் தன்னை வீழ்த்தும் வழிகளை சொல்வாரா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது." "மரத்தை நோக்கி கல்லை எறிவோம். விழுந்தால் பழம். இல்லை. கல்.இரண்டில் ஒன்று." "எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. அவர் சொல்ல மறுத்துவிட்டால் இந்த யுத்தத்தின் முடிவு?" "விதி விட்ட வழி. வாருங்கள் பீஷ்மரின் படைவீடு நோக்கி போவோம்." பாண்டவரோடு நடந்தான் கிருஷ்ணன். தங்களிடையே பாண்டவரோடு பிரவேசித்த கிருஷ்ணனை பார்த்து சலசலத்தது கௌரவர் படை. சேதியறிந்து வாசல் வந்த பீஷ்மரின் காலில் விழுந்தார்கள் பாண்டவர்கள். "தீர்க்காயுஷ்...என்று ஆசீர்வாதம் செய்ய திறந்த அவரின் வாய் சற்று தடுமாறி மவுனமானது. " ஏன் தாத்தா! ஆசீர்வாதம் செய்ய விருப்பமில்லையா? வாயில் வந்த வார்த்தைகள் பாதியில் தடைபட்டு நின்றுவிட்ட வே?" என்றான் குறும்பு சிரிப்புடன் கிருஷ்ணன், "ஆசீர்வாதம் செய்ய வேறு வார்த்தைகளை தேடுகிறேன் கிருஷ்ணா" "காலம்காலமாக சொல்பவைதானே? வெறும் வாய் வார்த்தைதானே?" "ஆசிர்வாதம் உள்ளன்போடு வரவேண்டும். போகட்டும். இப்போது இவர்களை ஏன் இங்கு அழைத்து வந்தாய்? இனி சமாதானம் பேச ஏதுவுமில்லையே?" "சமாதானம் பேச வரவில்லை தாத்தா! சண்டை செய்யத்தான் வந்திருக்கிறோம். உங்களை வீழ்த்தினால் யுத்தம் முடிவுக்கு வந்துவிடும்." "என்னை வீழ்த்த உன்னால் முடியுமா?" " முடியாது என்று தெரிந்துதானே உங்களிடமே வந்திருக்கிறேன்" "விசித்திரமாக இருக்கிறது உனது போர் யுக்தி. " "வெல்லமுடியாதவர்களிடம் சரணாகதி அடைவதுதானே விவேகம்'அந்த விவேகத்தை மதிப்பவர் தானே வீரர். நான் விவேகி. நீங்கள் வீரர் !" "நன்றாகவே பேசுகிறாய்.நான் பெண்களை, நிராயுதபாணிகளை எதிர்த்து போர்புரியமாட்டேன். சிறந்த வில்லாளியான அர்ச்சுனனுக்கும் இதே விதிகள் பொருந்தும்." "நன்றி தாத்தா! நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த உங்கள் மரண கதவின் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டீர்கள். உங்களுக்காக அதன் கதவை அகல திறந்துவைக்கிறேன்." "அது உன்னால் முடியாது. நான் சாகவேண்டும் என்று நினைத்தால்தான் சாவேன். நான் அப்படி நினைக்க போவதில்லை" "சரி தான் தாத்தா! ஒரு மனிதனின் குற்றவுணர்ச்சி ஆயுள் முழுவதும் அவனை கொல்லும் சக்தி படைத்தது. அதே ஆயுதம் தான் உம்மையும் கொல்லபோகிறது. வருகிறேன் தாத்தா! நாளை நாம் களத்தில் சந்திப்போம்" அவர்கள் திரும்ப நடந்தார்கள். பீஷ்மர் அவர்களை பார்த்து புன்னகைத்து கொண்டார். செய்தியறிந்த துரியன் சிரித்தான்.இப்படி ஒரு கேவலத்தை நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லை.இதிகாசம் இழித்து பேசட்டும் இந்த இழிபிறவிகளை என்று இடிஇடித்தது போல் சிரித்தான் அவன். படைவீட்டில் கிருஷ்ணன் புன்னகைத்தான். "நாளை பீஷ்மருக்கு எதிராக நிற்க போவது சிகண்டி" என்று அறிவித்தான் அவன். "துருபதன் மகனா?" "அவனேதான். பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவன்.அவனது நதிமூலம் பீஷ்மருக்கு தெரியும். அவர் அவனுக்கு எதிராக ஆயுதம் ஏந்த மாட்டார். அவர் ஆயுதத்தை கீழே போடும் முன்பாக அர்ஜுனா உன் பானங்களை ஏவிவிடு. அவரை படுகாயபடுத்து. அம்பு படுக்கையில் கிடத்து. மீதியை நான் பார்த்து கொள்கிறேன்" "நிராயுதபாணியை எப்படி கொல்வது?" "ஆயுதம் கையில் இருக்கும்வரை அவர் நிராயுதபாணியல்ல." "அவர் திருப்பிதாக்கினால்?" "சிகண்டியை முன்நிறுத்து. அவனுக்கு பின்னால் பதுங்கி தாக்குதல் நடத்து. உனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் திறமையை காட்டவேண்டும். புரிகிறதா?" "அப்படியே ஆகட்டும்" பத்தாம் நாள் யுத்த முடிவில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கிறார். காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தால் கண்ணன். "என்ன தாத்தா! இந்த படுக்கை எப்படி இருக்கிறது. ? வெறுந்தரையில் படுத்த தேகம் முள் படுக்கையை ஏற்கிறதா?" "வா! கண்ணா' எனக்கு எதற்கு இந்த நிலை?" "தாத்தா!எல்லாம் கர்மவினை..அம்பாவின் வாழ்வோடு விளையாடினாய். அவன் மறுபிறவி எடுத்து சிகண்டியாக வந்து வன்மம் தீர்த்தான். சகுனியின் சகோதரர்கள் நூறு வரை கொன்றாய். தப்பிபிழைத்த சகுனியோ நூற்றுவரின் கூற்றுவனாக மாறி குரு வம்சத்தை அழித்தான். திரவுபதியின் துகில் உறியப்பட்டபோது அரியணையின் அடிமையாக அமைதிகாத்தாய். அர்ச்சுனன் பழிதீர்த்தான்" "நான் செய்த எதுவும் எனக்கு தவறாக தோன்றவில்லையே?" "காரணம் துரியனின் செஞ்சோற்று கடன். நைஷ்டிக பிரம்மசாரியான நீர் உப்பில்லாத உணவையே உண்டீர். அதில் துரியனின் பாவ எண்ணங்கள் கலந்திருந்தன. அதனால் அவன் செய்வது எதுவும் உமக்கு தவறாக தோன்றவில்லை.இதோ இந்த அம்பு படுக்கையில் வடியும் ரத்தத்தில் உமது பாவங்கள் விடைபெறுகின்றன. அதனால் நீர் செய்த பாவங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும். இத்தனை பேர் குடும்பங்களை அழித்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு உமக்கு வரும். நீர் இனி உயிர்வாழ விரும்பமாட்டீர். மரணத்தின் கதவுகள் அகல திறந்துவிட்டன. இனி நீர் பயணம் செய்வது மட்டுமே பாக்கி. " "குரு வம்சத்தை தோற்றுவித்தவன் நான். வழிதவறியவர்களை நல்வழிசெலுத்த வேண்டியவன் நான்.அநீதி நடக்கும்போதெல்லாம் அமைதி காத்ததுதான் நான் செய்த மிக பெரிய குற்றம்.நான் ஒருவன் செய்த தவறால் மொத்த நாடும் நாசமாகிறது. இது வினை அறுக்கும் காலம்" "உண்மையை உணர்ந்து பேசுகிறீர்" "எனக்கு ஒரு உதவி செய்" "சொல்லுங்கள்" "எனக்கு தண்ணீர் தாகமெடுக்கிறது. என் அன்னையை காணவேண்டும் போலிருக்கிறது" "அர்ச்சுனா. அவரது தலைமாட்டில் ஒரு அம்பை விடு" அர்ச்சுனன் அம்பு விட்ட இடத்தில் கங்கை நீர் பீறிட ஆரம்பித்தது. "கங்கையின் மைந்தனே! இதோ உன் தாயின் அரவணைப்பு. போரின் முடிவை பார்த்தபின்பே உமது உயிர் பறவை உடலைவிட்டு போகும். அதுவரை உம்மை காண வருவர்களுக்கு நல்வழி கூறுவீராக" பீஷ்மர் கண்களுக்கு திறந்த நெடுங்கதவு ஒன்று புலப்பட்டது. #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - 'o ్  MAHABHARATAM VO1 'o ్  MAHABHARATAM VO1 - ShareChat