💘💞Par Tha💞💘
ShareChat
click to see wallet page
@par_tha1234567890
par_tha1234567890
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES, They Are USEDLESS
நண்பன் ஒருத்தன் இறந்து போயிட்டான். முதமுதல்ல பீர் குடிக்க கூட்டி போனது அவன்தான். செகண்ட் ஷோ சினிமா பாக்க பழக்குனது அவன்தான். கூட படிச்சவன் பழகுனவனுக இறந்தா, லைட்டா பயம் வருது. அடுத்த நாள்லருந்து போனஸ் மாதிரி தெரியுது. இனிமேலாவது நல்லவனா மாற டிரை பண்ணுவோம்னு தோணுது. நாலுநாள்தான் இந்த நினைப்பெல்லாம். கூட இருக்குறவனுக சும்மாவா இருக்கானுக.? எதையாவது சொறிஞ்சுவிட்டு நம்மை பழைய நிலைமைக்கே கொண்டு போயிர்ரானுக.! #இன்று நீ.! நாளை நான்.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
பெரியார்தான் முதல்முதலா கடவுள் மறுப்பை பேசியதாக ரொம்ப பேர் நினைச்சிட்டு இருக்காங்க.! அதை விட பத்து மடங்கு வீரியமா ஒருத்தர் ரொம்ப நாள் முன்னாடியே பாடி வைச்சுட்டு போயிருக்கார். பேரு #சிவ_வாக்கிய_சித்தர். இவனுக பெருமைப்படுகிற இந்து மதத்தை சடங்குகளை வேதங்களை தாக்கித்தான் மொத்த பாடலுமே.! உண்மையான ஆன்மீகம்னா என்னன்னு தெரியனும்னா இவரோட பாடல்களை படித்தால் போதும். படிச்சுட்டு இருக்கேன்.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
நல்லவர் சிலநாள் மறைந்திருப்பார் நாள்வரும்போது வெளி வருவார் வருவார் என்பதை நானறிவேன் வருகின்ற நாளை நானறியேன் #கவிஞர் #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
#பாச_மலரில் தங்கை ராதாவை அவளது காதலன் ஆனந்திடம் தனியாகப் பேசும்போது, தனது அண்ணன் ராஜசேகரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதும், தீர்மானமாக அண்ணனைக் கேவலப் படுத்தும் காதலன் தனக்குத் தேவையில்லை என்று காதலனிடமே கூறும் ராதா, கல்யாணத்திற்கு சம்மதித்துப் பின்னர் அண்ணன் காளி வழிமறித்ததும் சலனப்பட்டுப் பாதிதூரம் போய் மீண்டும் அண்ணனிடம் ஓடி வரும் வள்ளியை விட ஒரு மாற்று அதிகம்தான். என்ன நான் சொல்வது.? #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - Puasa ம சகரா Sரளள் சயாசி Reo 59 கலசன் ராயாமர சக்ச் பாசமலர ஐரச்சன்பீம்சிய் ssiu i ஈசா்நாயம் Ka 1 s i LLL2a Puasa ம சகரா Sரளள் சயாசி Reo 59 கலசன் ராயாமர சக்ச் பாசமலர ஐரச்சன்பீம்சிய் ssiu i ஈசா்நாயம் Ka 1 s i LLL2a - ShareChat
ஏதோ ஒன்றை பாரயாணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், Say பாசுரம் அல்லது விஷ்னு சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி Anything. நம் த்வைத மனம் ஆரம்பத்தில் என்ன செய்யும் ஒரு வரி வாய் சொல்லும் பொழுது மனம் அடுத்த வரியை தயார் செய்து வைக்கும் அது மாடிப்படிகளில் முன்னும் பின்னும் ஏறி இறங்குவது போல் ஒரே இடத்தில் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருக்கும். இந்த நகர்தலில் எங்காவது சின்க் விட்டுப் போய்விட்டது என்றால் நாம் திக்கி விடுகிறோம். பின் தொடர்வோம். அதே சமயம் அத்வைத மனமானது நாம் சொல்லும் வரிகளில் மட்டும் ஏறி அமர்ந்து கொண்டால் அது மாடிப்படிகளின் கைப்பிடியில் ஏறி அமர்ந்திருப்பதைப் போல நம்மை வழுக்கி எடுத்துக்கொண்டு அந்தவரிகளூடே பிரயாணம் செய்யும். இங்கு தப்பவோ திக்கவோ செய்யாது. அந்தந்த ஸ்லோகக்ங்களுக்கு உண்டான கட்டமைப்பு படி இந்த பிரயாணம் நம் சூட்சும ஆதார புள்ளிகளை தொட்டு தடவி உயிர்ப்பிக்கும். இதுவே நாம் இது போன்ற பாரயணங்களுக்குப் பிறகு கிடைக்கும் புத்துணர்ச்சியின் காரணம் என்பது என் எண்ணம். இப்போது இத்தகைய நீளமான பாரயண ஸ்லோகங்களை விட்டு விட்டு நாம ஜபத்திற்கு வருவோம். மனம் ஒரு சில வாக்கியங்களே உள்ள அந்த தொடர்களில் மிகவும் எளிதாக ஏறி அமர்ந்து கொள்ளும். அப்போதும் நாம் ஒரே இடத்தில் இருப்பத்கில்லை..அந்த ஜபத்தின் வழி இந்த பிரக்ரிதிக்குள் பயணித்து கொண்டிருக்கிறோம். அதே மாற்றங்கள் நடக்கிறது இந்த மாற்றங்களை நம்முள் கொண்டு வருவதற்கான வழியில் தள்ளி விடுவதே ஒரு குருவின் வேலை. அதை ஒரு ஸ்துலம் அல்லது சூட்சும தொடுகை மூலம் அவர் நடத்திக்காட்டுகிறார். அந்த இடத்திற்கு நகர்ந்த பின் அதை தக்க வைத்துக்கொள்வதில் நம் ஊழ் வினைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. நம் ஊழ் மிகச்சரியாக. இருந்தால் இங்கு தடுமாறும் போதும் குரு வந்து உதவுவார். மனித உருவில் வாழ்ந்த இது போன்ற புண்ணிய ஆத்மாக்களின் சூட்சும உருவம் ஆரஞ்சு வர்ண்த்தில் அவர்களின் ஸ்துலத்தை ஒத்தே இருப்பதுண்டாம். ஆரஞ்சு வர்ணங்களை நாம் தியானத்தில் கண்டால் அதை குருவின் ஆசீர்வாதம் அருகாமை என்றும் எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் இதற்கு முன் ஒரு Preparatory Course தேவைப்படுவது மறுக்க முடியாத உண்மை. அது தான் கோவில்கள் ஆஸ்ரமம் மற்றும் ஞானியர் சத் சங்கங்கள். #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
நம்மிடம் நாம் பயன்படுத்திய பழைய பொருட்கள் இல்லை ஆனால் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம் நாம் இந்த ஆண்டு விவசாயம் செய்து அறுவடை செய்த புது நெல் அரிசி இல்லை ஆனால் நாம் பொங்கல் வைக்கின்றோம் நம்மிடம் நம்மோடு வாழ்ந்த மாடுகள் இல்லை ஆனால் நாம் மாட்டுக்காக மாட்டுப் பொங்கல் வைக்கிறோம்ம் உறவினர்களும் நண்பர்களும் இல்லாமல் செல்போனை மட்டும் நம்பி வாழ்கிறோம் ஆனால் யாரையும் காணாமல் காணும் பொங்கல் கொண்டாடுகிறோம் எதுவுமே இல்லை பிறகு எதற்கு பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம் நம் மனதில் படிந்துள்ள மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத்தனங்களையும் தீயிட்டு கொளுத்தி போகிப் பண்டிகையை கொண்டாடுவோம் நம் நிலங்களையும் நீர் நிலைகளையும் விவசாயத்தையும் மீட்டெடுத்து புது நெல் அரிசியில் பொங்கல் வைப்போம் நம்மோடு வாழ்ந்த மாடுகளை மீண்டும் மறு உருவாக்கம் செய்து மாட்டுப் பொங்கல் வைப்போம் உறவினர்களையும் நண்பர்களையும் கண்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு காணும் பொங்கலை கொண்டாடுவோம் இந்த நம்பிக்கையில் தான் நாம் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறோம் இந்த பொங்கல் திருநாளில் நாம் இழந்ததை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் தமிழராய் ஒன்று பட்டு போராடுவோம். #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - 1999 Ponqall Thai Happy 1999 Ponqall Thai Happy - ShareChat
தானம் செய்வதில் தர்மர் எப்போதும் வல்லவர், ஆனால் அனைவரும் கர்ணனின் புகழையே பெருமையாக பேசினர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் போய் முறையிட்டான். கிருஷ்ணனும் யோசித்து விட்டு, "வா அர்ச்சுனா, நேரில் சென்றே பார்த்து விடுவோம்" என கூறி அந்தனர் வேடமிட்டு இருவரும் சென்றனர் முதலாவதாக, தருமரின் அரண்மனைக்குச் சென்று, "தருமரே, நாங்கள் சமைக்க விறகு வேண்டும், மழை பெய்து கொண்டிருப்பதால் விறகு கிடைக்க வில்லை. சிறிது விறகு தானமாக கொடுங்கள்" என கேட்டனர். தருமரோ, "அந்தணர்களே, அரண்மனையில் இருந்த விறகுகள் சமைக்க பயன்படுத்தப்பட்டு விட்டன, மழை பெய்வதால் தற்போது விறகு வெட்டவும் முடியாது, அதனால் நீங்கள் தாராளமாக இங்கு சாப்பிட்டு செல்லுங்கள்" என்றார். அதற்கு அவர்களோ, "பரவாயில்லை அரசரே, நாங்கள் வருகிறோம்" என்று கூறி அங்கிருந்து சென்றனர செல்லும் வழியில், "அண்ணனிடம் இல்லாததை கேட்டால் அவரால் எப்படி தர இயலும்?" என அர்ச்சுனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணரோ, சிரித்துக் கொண்டே கர்ணனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். கர்ணனிடமும் அதே போல், விறகு வேண்டும் என கேட்டனர். இதோ இருங்கள், என கூறி விட்டு தன் வில்லை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான் கர்ணன். திரும்பி வரும் பொழுது கைகள் நிரம்ப விறகுகள் எடுத்து வந்தான். மழை பெய்யும் போது, விறகு எப்படி கிடைத்தது என அந்தனர்கள் கேட்டனர். அதற்கு கர்ணனோ, சிரித்துக் கொண்டே, "அந்தணர்களே, என் அரண்மனையில் விறகு இல்லை, ஆனால் என்னிடம் "தானமாக" கேட்டதை, இல்லை என நான் கூறியது இல்லை. ஆதலால், என் வில்லை பயன்படுத்தி, என் அரண்மனையில் இருந்த கதவு, சன்னல்களை உடைத்து இதை எடுத்து வந்தேன்" என கூறினான அதை பெற்ற இருவரும் புறப்பட்டனர். இதை என் அண்ணனாலும் செய்ய முடியுமே என அர்ச்சுனன் கேட்டான். கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, "செய்ய முடியும் " என்பதற்கும், "செய்வதற்கும்" நிறைய வித்தியாசம் உள்ளன என்றார். அர்ச்சுனன் வெட்கித் தலை குனிந்தான். நியதி: தானம் கேட்டு வருபவர்களுக்கு என்ன தருகிறோம், எவ்வளவு தருகிறோம் என்பது முக்கியமல்ல. உங்களிடம் இருப்பதில் எவ்வளவு தருகிறீர்கள் என்பதே முக்கியம். மகாபாரத இறுதி போரில், பதினேழாம் நாள் முடிவில், கர்ணன் வீழ்ந்து கிடந்தான். ஆனால் உயிர் பிரிய வில்லை. ஏனெனில், அவன் செய்த தானத்தின் பலன்கள் கர்ணனின் உயிரை காத்து நின்றது. இதை உணர்ந்த கிருஷ்ணர், அந்தணர் வேடமிட்டு வந்து, அந்த தானத்தின் பலனை, தனக்கு வேண்டும் என தானமாக கேட்டார். இதை கேட்டதும் சிரித்த கர்ணன், தன் இரத்தத்தை எடுத்து "நான் இதுவரை செய்த, செய்யும், இனி செய்ய போகும் தானம் அனைத்தின் பலனும் உம்மையே சாரும்" என கொடுத்தான். பிறகு கர்ணனின் உயிர் பிரிந்தது. ஆனால், அந்த தானத்தை கொடுக்கும் பொழுது, மனிதன் கர்ணனின் கை உயர்ந்தது, தானத்தை பெறும் பொழுது கடவுள் கிருஷ்ணரின் கை தாழ்ந்தது. தானம் செய்யும் கரங்களை உயர்த்த, கடவுள் தன் கையை தாழ்த்திக் கொள்ளவும் தயங்க மாட்டார். (மாய கிருஷ்ணா..!) ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்..! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - VS ئ3] KARRINA R 4 P B A T T GHOR SANATAN VS ئ3] KARRINA R 4 P B A T T GHOR SANATAN - ShareChat
"ஒரு அஞ்சு பேருக்கு சமையல் செய்வதையே கிரேட் இந்தியன் கிச்சன்னு படமெடுத்து குற்ற உணர்ச்சியை தூண்டுகிறார்களே..? பெரிய பெரிய ஓட்டல்களில் கல்யாணங்களில் அத்தனை பேருக்கு வடித்து கொட்டுகிறார்களே நம் ஆட்கள் அதுல ஒருத்தனாவது சலித்து கொண்டிருக்கிறானா..? அட அதெல்லாம் விடுங்க..! பீமன், நளன்னு சமையலுக்கு பேர் போனது ஆண்கள்தானே..? எங்கே புராணத்துலயோ இதிகாசத்துலயோ ஒரே ஒரு பெண்ணோட பேராவது வந்திருக்கிறதா..?" #பத்த வைச்சுட்டியே பரட்டை..! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
முடிவெட்டிக்கொள்ள சலூனுக்குப் போனேன். ஒரு சிறுவனுக்கு முடிவெட்டிக் கொண்டிருந்தார் சலூன்காரர். சிறுவனுக்கு அடர்த்தியான தலைமுடி. ஏழைப் பையன்தான் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் வெட்டி முடித்த பிறகு, அவன் எழுந்து ₹50 ரூபாய் கொடுத்தான். வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டார் சலூன்காரர். அடுத்து நான்... கால் மணிநேரம்கூட ஆகவில்லை. என் தலையில் அவ்வளவுதானே முடி இருக்கிறது. ₹100 ரூபாய் கொடுத்தேன். ஒரு பழைய பத்திரிகை ஜோக் நினைவுக்கு வந்ததால், பேசாமல் வந்தேன். அந்த ஜோக்... “நிறைய தலைமுடியோட வந்தவருக்கு முடிவெட்ட ₹50 ரூபாய் வாங்கினீங்க. எனக்கு முடிவெட்ட ₹100 ருபாயா..?” “ஆமா… முடியைத் தேடித்தேடி வெட்டணும்ல”... 😜😂 #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
80களில் கல்யாணங்கள் வீட்டில்தான் நடந்தன. பணக்காரன் தன் அந்தஸ்தை காட்ட மண்டபங்களில் கல்யாணத்தை வைத்தான். அதுதான் அந்தஸ்து என்று நினைத்த அனைவரும் மண்டபங்களுக்கு மாறினர். இப்போது அதே அந்தஸ்தை காட்ட மெனு வரிசைகள் வந்து விட்டன. செல்போனும் அதே போல்தான். எவனுமே தன்னை இல்லாதவன் என்று காட்டி கொள்ள விரும்புவதில்லை. கடனை வாங்கியாவது இருப்பவன் போல் சீன் காட்ட நினைப்பதாலேயே வாழ்க்கை சிக்கலாகிறது.! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - 818 Uber 818 Uber - ShareChat