💘💞Par Tha💞💘
ShareChat
click to see wallet page
@par_tha1234567890
par_tha1234567890
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES, They Are USEDLESS
"ஆட்சி மாறிய பின்னரும்... எதுக்குடா 10 ருபாய் அதிகமாக வாங்குறீங்க...? இந்த 10 ரூபாய் யாருக்குடா போகுது..? பதில் சொல்லுங்கடா... அடேய்...." என்று... தற்போது நிறைய TASMAC கடை கவுண்டரில் குடிகாரர்கள் விற்பனையாளர்களோடு சண்டை போடும் வீடியோக்கள் கடந்த 2 நாட்களில் நிறைய வெளியாகி வைரல் ஆகியுள்ளன. இந்த சண்டைக்கு காரணம் விஜய். திமுக ஆட்சி தோல்வியடைய முக்கிய காரணம் இது என்றும் கூறலாம். "பாட்டிலுக்கு 10 ரூபாய்... பாட்டிலுக்கு 10 ரூபாய்" என்று விஜய் கரூரில் பாட்டு பாடி... பஸ் மேலே நின்று டான்ஸ் ஆடியது... அந்த கரூரில்... அந்த இடத்தில்... அன்றிரவு நடந்த கோர சாவுகளை விடவும்... விஜய் பாடிய இந்த "பாட்டிலுக்கு 10 ரூபாய்" பாட்டுதான் அதிக மக்களை சென்றடைந்துள்ளது என்பது... தேர்தல் முடிவு வெளியான அன்று தெரியாவிட்டாலும் இன்று இந்த வீடியோக்களை காணும்போது நன்றாக புரிகிறது. பல லட்சம் பேர் நம்பியுள்ளனர். அதென்ன... பாட்டிலுக்கு 10 ரூபாய்..?! குடிகாரர்கள்... இரவில் குடித்து விட்டு சாலையோரம் பாட்டிலை தூக்கி வீசிவிட்டு... போவதால், பலருக்கு (மனிதர்கள் மற்றும் விலங்குகள்) காலில் கிளாஸ் துகள்கள் குத்தி படுகாயங்கள் ஏற்படுகின்றன. வாகனங்கள் பஞ்சர் ஆகி விபத்துகள் நடக்கின்றன. இதனை தடுக்க & தவிர்க்க... சென்ற திமுக ஆட்சியில் பாட்டிலை திரும்பக் கொண்டு வந்து தந்தால் 10 ரூபாய் தருவதாக சொல்லி வாங்கினார்கள். (பார்க்க : செய்திப் படம்). 2024ல் வெளியான அரசு அறிவிப்பு இத்துடன் இணைத்துள்ளேன். குடிகாரர்கள் குடித்த பிறகு சுய நினைவு இழந்து விடுவதால்... யாரும் பாட்டிலை வீட்டுக்கு எடுத்து சென்று பத்திரப்படுத்துவது இல்லை. அங்கேயே போட்டுவிட்டு செல்கிறார்கள். ஆகவே... தூய்மைப் பணியாளர்களில் விபரமான ஒரு சிலர்... அல்லது அந்த பணியில் இல்லாத வேறு யாரோ சிலர்... நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்னரே... அதிகாலை 3 அல்லது 4 மணிக்கே...இரண்டு மூன்று சாக்கு பைகளோடு வந்து... எல்லா உடையாத பாட்டில்களையும் சேகரித்து கொண்டு போய்... டாஸ்மாக் கடையில் தந்து பாட்டிலுக்கு10 ரூபாய் வீதம்... இவர்கள் பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். தினமும் 100 பாட்டில்கள் பொறுக்கினால்... 1000 ரூபாய்... வீதம்... மாசத்துக்கு 30,000 ரூபாய் இவர்களுக்கு கிடைத்து விடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ரமலானின் இரவுத் தொழுகை முடித்து சஹர் நேரத்தில் (3 மணி) பள்ளிவாசலில் இருந்து வீடு திரும்பும்போது எங்கள் ஊரில் இப்படி மது பாட்டில் பொறுக்கும் இருவரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஆக, பாட்டிலுக்கு 10 ரூபாய் கொடுத்த குடிகாரன் எவனோ... ஆனால்... அந்த காலி பாட்டில்களை பொறுக்கி கொண்டு போய் டாஸ்மாக் கடையில் தந்து பணமாக்கியவன் வேறு எவனோ. இதில் பழியை திமுக மீது போட்டு... அமோக ஓட்டு அறுவடை செய்ய... இதைத்தான்... "பாட்டிலுக்கு 10 ரூபாய்" என்று விஜய் பாட்டு பாட... "திமுக ஆட்சியாளர்கள் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் திருடிக் கொண்டு விட்டனர்" என்கிற பொய் பிரச்சாரம் மிக எளிதாக குடிகாரர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டது. காரணம், பாட்டிலை திரும்பக் கொண்டுபோய் தந்தால் 10 ரூபாய் திரும்பத் தரப்படும் என்பது... பெரும்பாலான குடிகாரர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்து இருந்தாலும்... அந்த 10 ரூபாய் தனக்கு கிடைக்காமல் யாருக்கோ போகிறது என்கிற இயலாமை & கோபம் அவர்களை விசில் நோக்கி திருப்பி விட்டது. விஜயின் இந்த "பாட்டிலுக்கு 10 ரூபாய்" பிரச்சாரத்தை... ஸ்டாலின் உட்பட யாருமே சீரியசாக எடுத்துக் கொள்ள வில்லை என்பது... தேர்தல் முடிவில் மட்டுமின்றி... நேற்றும் இன்றும் வெளியாகும் டாஸ்மாக் சண்டை வீடியோக்கள் மூலம் நன்றாகவே தெரிகிறது. "பாட்டிலை திருப்பி கொடுத்தா 10 ரூபாய் திருப்பி தருவாங்க... அதுதான் அந்த எக்ஸ்ட்ரா 10 ருபாய்" என்று திமுகவினர் யாரும் விஜய்க்கு பதில் தந்து விளக்கி பிரச்சாரம் செய்யவில்லை. ஆகவே, "விஜய் சொன்னபடி அந்த 10 ரூபாய் திமுகவுக்கு தான் போகுது" என்று நம்பி விசிலுக்கு ஓட்டு போட்ட குடிகாரர்கள் இப்போது மண்டை கொழம்பி போய் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக்கில் தினமும் சண்டை போடறாங்க. இனி, தமிழ்நாடு அரசியலிலும் அதிகம் பொய் சொல்கிறவர் தான் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று தெரிந்து விட்டது. 3 நாட்களிலேயே... தவெக தரப்பில் ஏகப்பட்ட பொய் புளுகித் தள்ளி விட்டனர். எந்த பொய்யை எடுத்து... "இதுதான் உண்மை" என்று சொல்லி ஆதாரத்துடன் பதிவிடுவது என்றே புரியவில்லை. மலைப்பாக இருக்கிறது. ஏதோ... 1 நாளுக்கு 3 பொய்யாவது நம்மால் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதுதான்... நம் வீட்டு குழந்தைகளின் மூளையை காப்பாற்றி நாளைய நம் தமிழ்நாட்டை காப்பாற்றும். #🤔தெரிந்து கொள்வோம்
எனக்கென்னமோ #லீமா_ரோஸ்-தான் அதிமுகவின் அடுத்த தலைவியா வருவாங்கன்னு தோணுது.! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
பேசாம சினிமாவுலயே நடிச்சிட்டு ஜாலியா இருந்திருக்கலாம்னு சத்தியமா ஒரு நிமிசமாவது நினைச்சிருப்பான் மனுசன்.! இந்த அஞ்சு வருச கால்ஷிட்ல மூணாவது நாளே முடியலை ஆளை விடுங்கடா பாடி லாங்வேஜ் காட்றாப்புடி.! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
எனக்கு #ஏஞ்சலினா_ஜோலி-ய பிடிக்கும். கிளாமரா இல்லை.!ஆக்சன் ஹீரோயினா.! மாடஸ்டி பிளைசிக்கு நிஜ உருவம் குடுத்த மாதிரியான தோற்றம். ஒரு காலத்துல டிப்ரசன் அதிகமாகி, தற்கொலை பண்ண முடிவெடுத்திருக்கு இந்த அழகு மயில். தற்கொலை பண்ணிகிட்டா, நம்ம சுத்தி இருக்குறவங்களெல்லாம் குற்ற உணர்ச்சில வாடுவாங்களேன்னு யோசிச்சு, ஒரு கூலி கொலையாளியை சந்திச்சு தன்னையே கொல்ல சொல்லி பணம் குடுத்துருக்கு. போட்டோவை பார்த்தவன், முதல்ல டுவின்ஸோன்னு நினைச்சிருக்கான். தேவதையோட சோக கதைய கேட்டவன், கொல்ல மறுத்துட்டான். அவனுக்கே அது புதுசா இருந்திருக்கனும். ரொம்ப தொந்தரவு செஞ்சதால, ரெண்டு வாரம் டைம் தர்றேன், இதே முடிவோட இருந்தா உன்னை கொலை பண்றேன்னு சொல்லி அனுப்பிட்டான். முதல் வாரம் எதுவும் நடக்கலை. இரண்டாவது வாரம் ஒரு படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்துருச்சு. அவ்ளோதான் மனசு மாறி தப்பிச்சிருச்சு. #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - OVC OVC - ShareChat
EVM மோசடின்னு சொல்லிட்டே இருக்காங்க. ஆனா, நிருபிக்க முடியலை. ஆனா நிருபிக்க குறுக்கு வழி ஒன்னு இருக்கு. ஒரே தொகுதியில் நூறு வேட்பாளர்களை டம்மியா நிறுத்தி பாருங்க.! ஒரு மிசின்-ல 16 வேட்பாளர் பெயரைத்தான் வைக்க முடியும். அதிகபட்சமா 64 வேட்பாளர்களை வைக்கலாம். நாலு மிசினை கூடுதலா இணைக்கனும். நூறு வேட்பாளர்கள்னா, மிசினை பயன்படுத்த முடியாது. ஓட்டு சீட்டுக்குத்தான் வந்தாகனும். எல்லா தொகுதியிலும் நூறு பேரை நிறுத்துனா மிசினை பயன்படுத்த முடியாது. பேப்பருக்குத்தான் வந்தாகனும். இதைத்தவிர வேற வழியேயில்லை. #பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வு ரொம்ப சின்னதாத்தான் இருக்கும்.! #🤔தெரிந்து கொள்வோம்
#சூப்பரப்பு.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - BREAKING NEWS SUN ~ e NEWS F TAMIL NADU மறுசீரமைப்பு! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் வேண்டும் மே மாதத்திற்கான உரிமைத்தொகை நாளை வரவு வைக்கப்பபாது! விஜய் தமிழ்நாடு முதலமைச்சர் 14 MAY 2026 | UQOSUNNEIVSTAMIL SUINEWS Osunnewslive in BREAKING NEWS SUN ~ e NEWS F TAMIL NADU மறுசீரமைப்பு! கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் வேண்டும் மே மாதத்திற்கான உரிமைத்தொகை நாளை வரவு வைக்கப்பபாது! விஜய் தமிழ்நாடு முதலமைச்சர் 14 MAY 2026 | UQOSUNNEIVSTAMIL SUINEWS Osunnewslive in - ShareChat