💘💞Par Tha💞💘
ShareChat
click to see wallet page
@par_tha1234567890
par_tha1234567890
💘💞Par Tha💞💘
@par_tha1234567890
Youth Are Not USELEES, They Are USEDLESS
'இன்றைக்கு சாப்பிட என்ன செய்யட்டும்' என்று கேள்வி வராமல் இருந்தால், ஏற்கனவே #உப்புமா தயாராகி விட்டது என்றுப் பொருள்....!! 😂😂 #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
இசை மேதையான பீத்தோவன், பிரான்ஸ் மாவீரன் நெப்போலியனின் தீவிர ஆதரவாளர். அவரை புகழ்ந்து தன்னுடைய பாடல்களில் கூட அவருடைய பெயரை சில இடங்களில் பயன்படுத்தினார். பிரான்சின் சக்ரவர்த்தியாக நெப்போலியன் முடி சூடியதும் அரசின் உயரிய விருதுகளில் ஒன்று தனக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தார். நெப்ஸோ இசைக்கான விருதுகள் அத்தனையையும் ரத்து செய்து விட்டார்.... கடுப்பான பீத்தோவன் தன் பாடல்களில் இடம் பெற்ற நெப்போலியனின் பெயரை தூக்கி விட்டு உலகின் சிறந்த மனிதனுக்காக என்று வரிகளை மாற்றினார். சாகும்வரை நெப்போலியனின் மீது மிகுந்த வெறுப்புடனேயே இருந்து மறைந்தார் பீத்தோவன்...! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
தோளுக்கு மேல வளர்ந்த பெண்களை இன்னும் பாப்பா-னு தான் கூப்பிடுறாங்க #கிராமத்தில்... #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - ShareChat
“பழைய தங்க நகைகளுக்கு, பதிலாக புதிய தங்கம்” சொல்றாங்களே, ஏங்க தங்கத்திலே பழைய தங்கம், புது தங்கம்-ன்னு இருக்கா..? அது என்ன, கெட்டுப் போற பொருளா..? எப்டி, இப்டி ஏமாத்துறாங்க..! #தங்கம்னாலே சுரண்டல்தான்... #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - Ou ]0 ७0 _9 MONL7E 00_ dlh Ny (6' 001n Ou ]0 ७0 _9 MONL7E 00_ dlh Ny (6' 001n - ShareChat
வாலி தன் எதிரியின் பலத்தில் பாதியை பெறுகிறவன். ராமனாலேயே நேரடியாக மோத முடியாமல் மறைந்திருந்து கொல்லப்பட்டவன். இதே மாதிரியான வரம் பெற்றவன்தான் மகாபாரதத்தின் சல்லியன். கர்ணனை நடு வழியில் அம்போவென்று விட்டு விட்டு போன அதே சல்லியன். அவனுக்கு எதிராக யார் கோபத்துடனும் ஆக்ரோசத்துடனும் ரௌத்ரத்துடனும் போர் செய்தால் அவனது பலம் பல மடங்கு அதிகரிக்கும். இவனை யாராலும் வீழ்த்த முடியாது. இவனை எதிர்த்து நின்றவர்கள் வென்றதும் கிடையாது. பதினெட்டாம் நாள் இறுதி யுத்தத்தின் போது கௌரவ சேனையின் தளபதியாக சல்லியனை நியமிக்கிறான் துரியன். இவனுக்கு எதிராக யார் சண்டையிட்டாலும் கொல்லப்படுவார்கள் என்பதால் கண்ணன் தர்மனை பாண்டவர் தரப்பில் தளபதியாக்குகிறான். தர்மனுக்கு விதிக்கப்படுவதெல்லாம் ஒரே நிபந்தனைதான். கண்ணனை மனதால் நினைத்தபடி அன்போடும் கருணையோடும் சிரித்தபடியும் சண்டை போட வேண்டும். இருப்பதிலேயே கஷ்டமான விசயம் இதுதான். துளிக்கூட கோபமின்றி யுத்தத்தில் இறங்கி சல்லியனை வெற்றி கொள்கிறான் தர்மன்.! #என் மனைவியிடம் பயன்படுத்துவதும் இதே டெக்னிக்தான்..! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
எவரிடமிருந்தும் இதயக் குறியீடுகள் கிடைக்கவில்லை என்பதற்காக, எழுதுவதை நிறுத்திவிட முடியுமா..? யாரும் வாசிக்காமலேயே கடந்து செல்லும்போதும் என்னுள் எழுந்து நிற்கிறது மொழியின் பேரன்பு..! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - @ @ - ShareChat
மாமான்னு கூப்பிட சொன்னா, வாடா போடான்னுகூட கூப்பிடறேன், மாமான்னு கூப்பிட நானென்ன பட்டிகாடாங்குற மனைவி. இப்ப கோயமுத்தூர்ல பஸ் ஏறுறேன். மாமா இங்க வாங்கன்னு கூப்பிடுது அத்தை மக. கேக்கவே குளுகுளுங்குது. இதை வீட்டம்மணி படிச்சா நைட்டு சோறு கிடைக்கும்.? எதுக்கும் போகும்போதே நூடுல்ஸ் பாக்கெட் வாங்கிட்டு போயிரனும்.! #ஆனாலும் இம்புட்டு தைரியம் ஆகாதுப்பா.! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - 7 7 - ShareChat
#என் பொண்டாட்டி ரொம்ப ரொம்ப அழகு, அறிவாளி, எப்போதும் சிரித்த முகம், எல்லாரிடமும் பிரியமா பழகுவா... (இப்போ என் தோள்பட்டைக்குப் பின்னால நின்னு நான் போடற ஸ்டேட்டஸ உத்துப் பாத்துகிட்டிருக்கா...) #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat
வாழ்க்கையின் உண்மை ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள். ஒருநாள்... அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான். உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு. 1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது. 2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது. 3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை. 4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான். #🤔தெரிந்து கொள்வோம்
வால்மார்ட்ல பொருளை விக்குற கம்பெனிகளின் கணக்கு வழக்குகளை பார்த்து எப்படி செலவை குறைப்பது என்று சொல்லி தருவார்களாம். அடுத்த இந்திய பட்ஜெட்டை டிரம்ப் அமெரிக்கா பார்லிமெண்டில் வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை.! #எல்லாம் உங்களுக்குத்தான் காளிங்ஸ்.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - செய்திகள் NEWS UPDATE] டரம்ப்புக்கு நன்றி! நல்வாய்ப்பாக நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தான் தாக்கல் செய்தார் ஏனெனில் நாடு இருக்கும் செய்து நிலவரத்தில் டரம்ப் தாக்கல் விடுவாரோ என்கிற சந்தேகம் இருந்தது. காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநேட்! WDOFKalaignarwews @ wwW kalaignarseithiga.com 02.02.2026| செய்திகள் NEWS UPDATE] டரம்ப்புக்கு நன்றி! நல்வாய்ப்பாக நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தான் தாக்கல் செய்தார் ஏனெனில் நாடு இருக்கும் செய்து நிலவரத்தில் டரம்ப் தாக்கல் விடுவாரோ என்கிற சந்தேகம் இருந்தது. காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநேட்! WDOFKalaignarwews @ wwW kalaignarseithiga.com 02.02.2026| - ShareChat