ஓம்... சக்தி... ஓம்...🙏
அரபிக்கடல் ஓரம் அருளோடு அமர்ந்தவளே
ஆதிசக்தி மண்டைக்காட்டு பகவதி அம்மே...
அலைகடலும் அடங்கி நிற்கும் உன்னருளடி காண...
அடியாரெல்லாம் பாடி வரு...ஓம் உன் சன்னதி தேடி...!
காற்று மழையடித்தாலும் கண்மணிபோல் காக்கும் தெய்வம் நீயம்மா...
கண்ணீர் வந்த வீடுகளுக்கு கருணை தரும் தாயம்மா...
நாடு நல்லா வாழணும்னு நாளும் அருளும் நல்லம்மா...
நோய்நொடி நீக்கி வைத்து நிம்மதி தருவாய் தேவிமா...!
கோடை வெயில் எரித்தாலும் மழைக் குளிரை தரும் தாயம்மா...
கொடுமை வந்து சூழாமல் குலம்காக்கும் பிரம்மசக்தி நீயம்மா...
கண்ணீரைத் துடைத்து கருணை தரும் மகமாயி...
கடல்போன்ற உன்னன்புக்கு கரையேதும் இல்லையம்மா...!
கன்னி மண்ணின் காவல் தெய்வமே...
காருண்ய தேவி மகமாயி பகவதி சரணம்... 🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 வெள்ளிக்கிழமை பொழுது🙏