
ரவிசங்கர் ராஜா, ஆரணி
@ravisankarraja
நான் நெசவாளரின் மகன்
(செங்குந்த/கைக்கோளர் வம்சம்)
காலை சிவசிந்தனை
====================
ஸ்ரீ சிவமஹாபுராணம்-கைலாஸஸம்ஹிதை:
ஸ்ரீஸுப்ரஹ்மண்யர் கூறினார்,
(முருகப்பெருமான்)
19.15-17.வேதங்கள் சிவபெருமானை
பொன்னிறத்தில்
திகழ்பவர் என்று கூறுகின்றன.பொன்னிறமான
கைகளை உடையவர் என்று
கூறப்படுவது அவர்
பொன்னிறத்தில் திகழ்பவர்
என்பதைக் காட்டுகிறது.
இல்லையெனில் அவரே பதி என்பது எவ்வாறு
உறுதியாகும்.சாந்தோக்யோபநிஷ த்தில் "ஸூர்யனில் உறையும் பரமபுருஷர் பொன்னிறமாக உள்ள திருமுடியையும்,மீசையையும்
உடையவர்",என்று
கூறப்படுகிறது.கால்நகத்தில் இருந்து தலைமுடி வரை
பொன்னிறம் தான்.
"19.15.தம் பாம்புநாதம் ஸ்ருதயோ வதன்தி ஹி ஹிரண்மயம்| ஹிரண்யபாஹவ இதி ஸர்வாங்கஸ்யோப லக்ஷணம்||
16.அந்யதா தத்பதித்வம் து ந பவேதிதி யத்னத:]
ய ஏஷோன்தரிதி பாம்புஸ்சாந்தோக்யே ஸ்ரூயதே
சிவ:
17,ஹிரண்யஷ்மஸ்ருவாம்ஸ்தத்வத் திரண்யமயகேஸவான்|
நகமாரப்ய கேயாக்ரா ஸர்வத்ராபி ஹிரண்மய: 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
காலை சிவ சிந்தனை
===========================
140. ஓம் ராமேஸ்வராய நம.
(வேதஸார சிவ ஸஹஸ்ர நாமம்)
ராமனின் தலைவன் -சிவபெருமான்
உமா ஸம்ஹிதையில், ராமபிரான் கோதாவரி தீரத்தில் அனேக லிங்கப்ரதிஷ்டைகளை செய்து வழிபட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
ப்ரஸித்தம்.
ராமகிரி
=======
பத்ம புராணத்திலும் கோதாவரி கரையிலுள்ள ராமகிரியில் ஓர் சிவாலயம் ராமபிரானால் நிர்மாணிக்கப்பட்டு பூசிக்கப் பெற்றது. ஸேதுபந்த க்ஷேத்ரமான ஸ்ரீராமேஸ்வரத்திலும் ராமநாதனாக ராமபிரானால் ஸ்தாபிக்கப் பெற்று ஜோதிர் லிங்கமாய் ஒளிரும் நிலை ப்ரஸித்தமன்றோ? 'தவஸ்ரியே மருதோ மர்ஜயந்த ருத்ரயதே ஜனி: சாருசித்ரம்' என்று ஸ்ருதி.வாக்கியம்.
ராமஸ்ய ஈய்வர: ராமேன கோதாவர்யாதௌ பஹூனி லிங்கானி ப்ரதிஷ்டாபிதானி இதி உமாஸம்ஹிதாயாம் ப்ரஸித்தம் |
கிஞ்ச பாத்மேபுராணேஃபி - அத ராமகிரௌ ராம: புண்யே கோதாவரீ தடே!
ஸ்ரிவலிங்கம் ப்ரதிஷ்டாப்ய இதி ப்ரஸித்தம் | ஸ்ஸிவலிங்க ப்ரதிஷ்டாதா இதி ஸ்ரீராமவிஷய ஸ்துதிரபி ப்ரஸித்தா | ஸேதுபந்தே ராமேஸ்வர ராமநாத இதி ஸ்ஸிவஸ்ய ராமேஸ்வரத்வமிதி ப்ரஸித்தமேவ | தவர்ரியே மருதோ மர்ஜயந்த
ருத்ரயதே ஜனி: சாருசித்ரம் இதி ஸ்ருதி: II
===========================
ராமாயணம்
==========
ராமேஸ்வரம்
===========
அத்ர பூர்வம் மஹாதேவ: ப்ரஸாதமகரோத் ப்ரபுரிதி ராவணவதானந்தரம் புஷ்பகமாருஹ்ய ஸீதயா லக்ஷ்மணேன் வானரேந்த்ரஸ்ச ஸஹ அயோத்யாம் ப்ரதி நிவர்த்தமானஸ்ய ராமஸ்ய ஸ்வஸ்தாபித ஸிவலிங்கம் ப்ரதர்ஸ்ய கதனம்ஸ்ரீமத்ராமாயணே
இதன் பொருள் :-
இவ்விடத்திலே மஹாதேவர் தனக்கு அருளியதால் ப்ரபு இவர் என ராவணவதம் ஆன பின்னர் புஷ்பக விமானமதில் அமர்ந்து ஸீதை லஷ்மணருடன் வானரர்க்கதிபதி சுக்ரீவருடன் கூடியவராக அயோத்தி திரும்புகையில் ஸ்தாபிக்கப் பெற்றவர் ஸ்ரீ ராமேஸ்வரன் என
ஸ்ரீ மத் ராமாயணம் கூற்று.
சிவ ஸஹஸ்ரநாம பாஷ்யத்திலிருந்து.... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
காலை சிவ சிந்தனை
==================
பஞ்சாக்ஷர மஹிமை
"''''''''''''''''''''''''""""""""""""""""""""""""""""
நம:சிவாய என்பது பஞ்சாக்ஷரம்
நம:என்பது ஜீவாத்மா
சிவ என்பது பரமாத்மா
நம:சிவாய என்பதால் ஜீவாத்மா பரமாத்மஐக்யமேற்பட்டு ஒன்றாக கலக்கிறது
அதனால் பஞ்சாக்ஷரம் பரப்ரும்மஸ்வரூபம்
மனதில் பஞ்சாக்ஷரத்தை நிலை நிறுத்திவிட்டால் ---
பலமந்த்ரங்களாலும் தீர்தங்களாலும் தவத்தாலும்
ஏதும்ப்ரயோஜனமில்லை
மந்த்ர தீர்த்த தபத்தைகாட்டிலும் பஞ்சாக்ஷரமே ச்ரேஷ்டமென ஸ்காந்தம் ப்ரும்மோத்தரகாண்டம்
சிவாய நமஹ
சிவன் - மங்களவடிவினன்.
அனைத்து வகையான துயரங்களையும் கடந்த நிலை பரமானந்த ஸ்வரூபன் என்று பொருள்.
தொடரும்..... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
காலை சிவ சிந்தனை
=================
சிவ பூஜை மான்மியம் :
==================
விண்ணவர் , முநிவர் , எவ்வெத் தலங்களிற் சிவபெருமானை உமையுடன் வழிபட்டனர் , எங்களுக்கு உணர்த்தியருளுக என முநிவர்கள் கேட்கச் ஶூதமாமுனிவர் கூறுகின்றார் .
திருமால்
திருமால் : - காசியிற் சிவனைப் பூசித்துக் காத்தல் தொழிலும் , ஐந்தாயுதமும் , திருமகளும் , கருடவாகனமும் பின்னும் பல வரங்களும் அளிக்கப் பெற்றார் . சிவலோகத்தின் கீழே வைணவபதத்தில் இருக்கப் பெற்றார் .
பிரமன்
பிரமன் : - காஞ்சியிற் பிஞ்ஞகனை வழிபட்டுப் படைத்தல் தொழிலும் கலைமகளும் , அன்னவாகனம் முதலியவும் தரப்பெற்று வைணவபதத்தின் கீழ் இருக்கப் பெற்றான் . அந்த இடம் பிரமலோகம் எனப்படும் .
இந்திரன்
இந்திரன் : -ஸ்ரீ சைலத்தில் ஈசனை அருச்சித்து வானுலக ஆட்சியும் , புலோமிசை( இந்திராணி ) யும் , ஐராவதமும் , உச்சைச்சிரவமும் , குலிசப்படையும் , கற்பகத்தருவும் , காமதேனுவும் , சிந்தாமணியும் , கீழ்த்திசையரசும் கிடைக்கப் பெற்றான் .
அக்கினி
அக்கினி : - அண்ணாமலையில் அண்ணலைப் பூசித்து அக்கினிகளுக்கு அரசும் , சுவாஹா தேவியும் , ஆட்டுவாகனமும் , சத்திப்படையும் , தென்கீழ்த் திசை அரசும் பெற்றான் ,
இயமன் : - கேதாரத்தில் எம்பெருமானை வழிபட்டுத் தண்டமும் , எருமைக் கடா வாகனமும் , நடுவன் என்ற நிலையும் பெற்றுத் தென்றிசைக்குத் தலைவனானான் : மற்றும் சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் புகவேண்டிய உயிர்களின் புண்ணிய பாவம் அறிந்து கூறும் சபையினரையும் , கதிரவன் முதலான உயிர்கள் புரியும் கருமத்தை அறிந்துரைக்கப் பதினான்கு எழுத்தாளர்களுக்குத் தலைமை பூண்ட சித்திரகுத்தனையும் பெற்றான்.
நிருதி : -
நிருதி கோகரணத்தில் நீலகண்டரைப் பூசித்து வாளும் , அரக்கர் சேனையும் பெற்றுத் தென்மேற்குத் திசைக்குத் தலைமை கொண்டான் .
வருணன் வருணன் : - திருவானைக்காவில் வள்ளலை வழிபட்டு மகரமீன் வாகனமும் , பாசம் முதலிய படைகளும் , கடலரசும் மேற்றிசைத் தலைமையும் பெற்றான் .
வாயு :
வாயு காளத்தியில் மங்கைப்பாகனைப் பூசித்துக் காற்றின் தலைமையும் , பல படைகளும் , வடமேற்குத் திசை அரசும் பெற்றான் .
குபேரன் : -
குபேரன் சித்தேச்சுரத்திற் குன்ற வில்லியைப் பரவி வடதிசையரசும் நவநிதித் தலைமையும் , புட்பக விமானமும் , இயக்கர் முதன்மையும் , கதை முதலாம் படைகளும் , சிவபெருமானது தோழமையும் அருளப் பெற்றான் .
ஈசானன்
ஈசானன் : - திருவாரூரில் எந்தையைப் பூசித்துப் பெயருக்கு ஏற்ப சிவரூபமும் , படைகளும் , விடைவாகனமும் , பிற சிவசின்னங்களும் வடகீழ்த் திசையரசும் , அதிகாரம் முடிந்தவுடன் சிவனடி நிழல் வாழ்வும் வேண்டிப் பெற்றனன் .
சூரியன் : -
சூரியன் காஞ்சியிற் சூலபாணியைப் பூசித்து மறைமண்டலத்தில் தனி இருப்பும் , ஏழ்பரித்தேரும் , நவக்கிரகத் தலைமையும் பெற்றுப் பகுதி மண்டலத்திலே இருக்கப் பெற்றான் .
சந்திரன் : - சந்திரன் கும்பகோணத்திற் சம்புவை ஆராதித்துப் பயிர்களுக்கு அரசும் , நக்ஷத்திரங்களுக்கு நாயகனாம் , பேறும் பெற்றுப் , பரமனுக்கு ஆபரணமுமாகிச் சூரியனுடன் மேருவை வலம்வரப் பெற்றான் .
கிரகங்கள்
இவ்வாறே செவ்வாய் ( அங்காரான் ) திருவிடைமருதூரிலும் , புதன் மதுரையிலும் , வியாழன் ( குரு பிரகஸ்பதி ) சேதுவிலும் , வெள்ளி ( சுக்கிரன் ) திருவாலங்காட்டிலும் , சனி வேதாரணியத்திலும் பரமனை வழிபட்டுச் சோம சூரிய மண்டலங்களின் மேற்கே அருகிலேயிருந்து உயிர்களின் வினைக்கீடாக அனுபவம் தரவும் , வியாழன் தேவர் குருவாகவும் , வெள்ளி அரசர் குருவாகவும் இருக்கப் பெற்றனர் .
ஏழு முநிவர் :
வசிட்டர் முதலான ஏழுமுநிவரும் ( தில்லைச் ) சிற்றம்பலத்திலே சிவனை வழிபட்டுப் பல நூல் உணர்வும் , நவ கோள்களின் மேல் நிலையிலே வாழும் பேறும் , இறுதியிற் பேரின்ப வீட்டை அடையும் வாழ்வையும் பெற்றனர்.
ஸ்ரீ ஶூதமாமுனிவர் மேலுஞ் சொல்கிறார் :
உத்தான பாதன் மைந்தன் துருவன் காசியில் விஸ்வேச்சுரனை வழிபாடு செய்து அளவற்ற வரங்களையும் எழுமுநிவர் நிலைக்கு மேலான நிலையும் , எழுமுநிவரும் தன்னைச்சுற்றி வரும் பேற்றையும் பெற்று உயர் பதத்தில் திகழ்கின்றான் .
ஆதிசேடன் கும்பகோணத்திற் பரமனை அருச்சித்துக் கடல் புவியனைத்தும் முடித்தலையிற் சுமக்கும் பேறு பெற்றான் .
இப்படியே எண்ணற்ற தலங்களினும் மலைமுடியினும் கடல் கரைகளிலும் இமையவரும் , முநிவரும் , சித்தரும் , காருடரும் , கந்தருவரும் , வித்தியாதரரும் , இயக்கரும் , சாகரும் மற்றும் பலரும் இறைவனைப் பூசித்துத் தத்தம் பதவியையும் வரங்களையும் பெற்றனர் .
ஆகையால் அறத்தை விரும்பும் மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வகைப் பொருளையும் பல்கும் சிவபூஜை செய்யவேண்டும் . இறை வழிபாட்டாற் சித்தராயினர் சிலர்.இங்கனம் வழிபட்டுப்புகழ் பெற்றவர் சனகாதசித்தர் கபிலராதியோர் நித்தராயினர் . சிலர் சாலோகத்தையும் , சிலர் சாமீபத்தையும் ,சிலர் சாரூபத்தையும் , சிலர் சாயுச்சியம் எனும் இறைவன் திருவடி நிழலையும் பெற்றனர் . சில மானிடர் சிவவழிபாட்டால் அளவற்ற செல்வத்தை இம்மையிலே பெற்றும் செல்வச்செருக்கால் மாயையில் மீளவும் மூழ்கி மறுபடியும் வழிபட்டார் . மற்றும் வெற்றி வேண்டினவர் வெற்றியையும் , மனைவி மக்களை வேண்டினவர் மனைவி மக்களையும் , பசு , வாகனம் , செல்வம் , அழகு , வடிவு , வண்மை , சத்தியம் . பராக்கிரமம் முதலிய வேண்டினவர் தாம் வேண்டினவற்றையும் சிவபூஜை வழிபட்டாற் பெற்றனர்.
திரு ஞானவரோதய பண்டாரம் இயற்றிய உபதேச காண்டம் என்னும் நூலில் இருந்து. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #சிவன் பக்தி #ஓம் நமசிவாய
காலை சிவசிந்தனை
====================
சிவ நாம மஹிமை
===================
பஞ்சாக்ஷர மந்த்ரம் எப்போதும் ஹ்ருதயத்திலிருக்க தீர்த்தமோ தவமோ யாகமோ எதற்கு?
(பஞ்சாக்ஷரம் ஒன்றே போதும்)
(கிம்தஸ்ய பஹுபிர்மந்த்ரை: கிம் தீர்த்தை:கிம் தபோத்வரை: யஸ்யோ நம:சிவாயேதி மந்த்ரோ ஹ்ருதயகோசர:)
சிவபூஜை மகிமை =1
=====================
பூஜை:சம்போ -
ஸ்ரீபதேசக்விரதானிச' என்பது வாக்கு.
பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை
வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று.
மஹாபாரதம்-துரோணபர்வம்
=========================÷÷÷=÷÷
"துர்லபம் ப்ராப்ய மானுஷ்யம் யேஅர்ச்சயந்தி சதாசிவம் தேஷாங்கி ஜன்மசாபல்யம் க்ருத்தார்ஸ்தே நரோத்தமம் அன்யஞ்ச ஸிவபூஜாரஹிதோ மனுஷ்யோ நிஷ்ப்ரயோஜனம்"
பொருள்
,========
அடையமுடியாத மனிதப்பிறவியை அடைந்து எவர்கள் சதாசிவனை பூஜிக்கின்றாரோ அவர்கள் ஜன்மம் பயனுடையது. அவர்கள் செய்யவேண்டியதை செய்பவர்கள்.சிவபூஜை செய்யாதவர்கள் பிறவி வீண்ஆனது.
சிவ சிவ சிவ சிவ சிவ 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #சிவன் பக்தி #ஓம் நமசிவாய
காலை சிவசிந்தனை
====================
ஸ்ரீ லிங்கமஹாபுராணம்-ஸர்வம் ஸோமமயம் ஜகத்:
ஸோமன் (சோமன் )என்றால் உமையுடன் கூடிய சிவபிரான்.
2.17.6-7.ஸோமத்தில் இருந்தே அனைத்தும் தோன்றின.யஜ்ஞ ஆஹுதி,அக்னி, யஜ்ஞம்,வஜ்ராயுதத்தை ஏந்திய ஶசீபதியான இந்த்ரன்,ஸ்ரீமானும்,விஷ்ணுவும் ஆன நாராயணன் என அனைத்தும் ஸோமமயமே.
"2.17.6.ஸோமம் ஸஸர்ஜ யஜ்ஞார்த்தம் ஸோமாதிதமஜாயத||
2.17.7.சருஶ்ச வஹ்னிர்யஜ்ஞஶ்ச வஜ்ரபாணி: ஶசீபதி:|
விஷ்ணுர்நாராயண: ஸ்ரீமான் ஸர்வம் ஸோமமயம் ஜகத்||"
ருக்வேதம்:
9.96.5.ஸோம: பவதே ஜனிதா மதீனாம் ஜனிதா திவோ ஜனிதா ப்ருதிவ்யா:|
ஜனிதோக்னேர்ஜனிதா ஸூர்யஸ்ய ஜனிதேந்த்ரஸ்ய ஜனிதோத விஷ்ணோ:||"
"உமாய ஸஹ வர்த்தத இதி ஸோம:|" -ஸாயனாச்சார்யர்.
"உமயா ஸஹித: ஸோம: தஸ்மை|ப்ரஸாதகாலே ஹி தேவ: ஸோம: ஸந்நிதத்தே|"-பட்ட பாஸ்கரர். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #ஓம் நமசிவாய #தெய்வீக சிந்தனைகள் #சிவன் பக்தி
அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
நமக்கு கிடைக்கும் அனைத்திற்கும்
ஏதோ ஒரு விலையை கொடுத்தாக வேண்டும்.
இறைவனின் அன்பும் கூட மாமருந்து தான். நாம் பிறரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பை பகிர்ந்தால் மட்டுமே கிடைக்கும்.
ஆகவே பிரபஞ்சத்தில் இருந்து நீங்கள் எடுத்துக் கொள்வதைப் போல கொடுப்பதற்கும் மனம் இருந்தால் பிரபஞ்சம் உங்களுக்காக கொடுப்பதும் மென்மேலும் அதிகமாகும்.
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும்
வாழ்க்கையில் சொகுசு சந்தோஷப்படுத்தும் என காத்திருந்தால் வாழ்க்கை முழுக்க காத்திருக்க வேண்டியதுதான். ஏன்னா மனசுக்கு போதும்னு கிடையாது இன்னொரு கார், இன்னொரு வீடு, இன்னொரு போன் என்று போய்க்கிட்டே இருக்கும்.
ஆனா பாறை மேல உட்கார்ந்தும் ஆனந்தமா இருக்க தெரிஞ்சவனுக்கு, உலகத்துல எங்க
போனாலும் வீடு மாதிரிதான். அவனுக்கு வெளியில இருந்து சந்தோஷம் தேவையில்லை. அவர்களே சந்தோஷமா தான் இருப்பாங்க
வாழ்க்கைனா என்னானு தெரியுமா! ?
ஆண்டு அனுபவிக்க வேண்டிய வயசுல கஷ்டத்தையும்...
முடியாத காலத்துல எல்லா வசதியையும் கொடுக்கும்..
என்றும் #இறைவன் #பாதம் #பணிந்திருங்கள்.
#பக்தியும்..! #ஆலய #வழிபாடும்..!!
#பரமாத்மாவாகிய #கடவுளின் மீது ஏற்படும் #நாட்டமே #பக்தி எனப்படுகிறது.
இல்வாழ்வில் உள்ளவர்களின் மனதை புலன் மயக்கங்களில் இருந்து விடுவித்து மேன்மையடையச் செய்வதே பக்தியின் நோக்கமாகும்.
பண்டைய காலங்களில் ப்ரம்மச்சரியம், கிரஹஸ்தம் ஆகிய இரண்டு நிலைகளிலும் பக்தியானது நம்பிக்கையோடு கூடிய ஆரம்ப நிலைப் பயிற்சியாகத்தான் விளங்கியது.
வானப்பிரஸ்தம் என்ற ஆசிரமத்தில் நுழையும் போதுதான் அது தீவிரமடைகிறது.
அப்போது கிரியையும் வளர்கிறது.
அதாவது மலர் பறித்தல், மாலை கட்டுதல், பூஜை முறைகளைக் கையாளுதல், இறை அடியார்களுக்கு தொண்டு செய்தல் போன்ற கிரியைகள்.
இத்தகைய சரியை, கிரியை வழிகளில் சென்று பாமரர்களும் பயனடையும் பொருட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டன.
பிற்காலங்களில் பாமரர்கள் கோவிலுக்குள்ளேயே செல்ல முடியாத நிலை உருவாகியது என்பது வேதனையான விஷயம்.
ஆலயம் என்பது ஆன்மாவை பதியாகிய இறைவனோடு லயமாக்குகிற புனிதமான இடம் என்பது பொருள்.
கோ என்றால் அரசன். அதாவது உலகுக்கே அரசனாகிய இறைவன் வாழும் வீடு, அதுவே கோயில்.
எனவேதான் உலகிலும், உடலிலும் உள்ள தத்துவங்களை விளக்கும் விதமாக ஆலயங்களும், அதிலமைந்துள்ள மூர்த்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
எனவேதான் நம் முன்னோர்கள் ஆலயங்களை அமைப்பதற்கென்று சில ஆகமங்களை உண்டாக்கி வைத்தார்கள்.
அத்தகைய ஆலயங்களில் சென்று வழிபடுவதற்கும் கூட சில விதிமுறைகள் காணப்படுவது எதற்காகவென்றால், ஆலய வழிபாட்டின் மூலம் மனமானது லயப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால், இன்றைய நிலையோ வேறு விதமாக இருக்கிறது.
ஏதோ கோவிலுக்கு போக வேண்டுமே என்ற நிர்பந்தம் இருப்பதாகக் கற்பித்துக் கொண்டு போகிறார்கள்.
பல ஊர் கதைகளைப் பேசிக் கொண்டு வலம் வருகிறார்கள்.
உட்காராமல் போனால் சனீஸ்வர பகவானும் அவர்களுடனேயே வீட்டுக்கு வந்து விடுவார் என்று சொல்லி கொஞ்ச நேரம் அமர்ந்து விட்டு போகிறார்கள்.
இதனால் யாதொரு பயனுமில்லை.
உட்காருவது என்றால் தியானத்தில் அமர வேண்டும் என்பதே கருத்து.
மன ஒருமைப்பாடும், ஆன்ம நேயமும், எல்லாம் இறையாற்றலின் சொரூபமே என்ற பரந்த நோக்கும் வளர வேண்டும் என்தற்காகவே ஆலய வழிபாடு அமைந்துள்ளது.
மனமானது சிதறலடையாது இறைவனின் பால் செலுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கம்.
அதுவே பயிற்சி.
மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன்தான் ஆலயங்களுக்குள் போக வேண்டும் என்பது கோட்பாடு.
இறை சிந்தனையல்லாது வேறு எந்த உலக விவகாரங்களும் மனதில் இருக்கக் கூடாது என்பது விதி.
நான் என்ற அஹங்கார எண்ணத்தை கொடிமரத்திற்கு முன் உள்ள பலிபீடத்தில் பலியிட்டு விழுந்து வணங்கி விட்டே உள்ளே செல்ல வேண்டும்.
கூச்சலும், கோஷங்களும் உண்மையான வழிபாடு ஆகா.
அமைதியும், சாந்தமும் கொண்ட மனதோடுதான் ஆலய வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
பல மகான்களும், ஞானிகளும் ஆழ்ந்து எண்ணிய ஆழமான, உயர்ந்த எண்ணங்கள் நிரம்பிய இடம் ஆலயமாகும்.
எனவே வழிபாடு முடிந்தவுடன் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
அவ்வாறு தியானிப்பதன் மூலம் அத்தகைய உயர்ந்த எண்ணங்களும், நோக்கங்களும் தியானிப்பவர்கள் உள்ளங்களிலும் பிரதிபலிக்கும்.
இதுவே ஆலய வழிபாடு செய்பவர்கள் பெறும் பெரிய பேறாகும்.
இத்தகைய மனப்பான்மையுடன் மக்கள் சென்று வழிபடவழிபட ஆலயத்தின் சக்தியானது இன்னும் அதிகமாகும்.
ஆலயத்திலிருந்து சக்தியைப் பெறுவதோடு ஆலயத்தின் சக்தியையும் பெருக்கும் சேவையை நாம் செய்கிறோம்.
ஆலய வழிபாட்டின் ஒப்பற்ற பயன் இதுவேயாகும்.
#அன்புடனும், #ஒருமனதுடனும் ₹சேவிப்பவர்களை #ஆண்டவன் #நல்வழிப்படுத்துவதோடு #முடிவில் #தன்னோடு #ஐக்கியப்படுத்திக் #கொள்கிறார்.
#திருச்சிற்றம்பலம்
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
#பந்தம், #பற்றை #விட்டு #விலக..!
#சிவசிவ
ஸ்ரீ #ருத்ரத்தின் #இறுதியில், #மஹா #ம்ருத்யுஞ்சய #மந்த்ரம் வரும். மிகப் பிரபலமானது.
“த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம்
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ
பந்தனாத் ம்ருத்யோர்
முக்க்ஷீய மாம்ருதாத்.”
இதில் ‘உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய’ என்ற வரிகளின் அர்த்தம், ‘வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து விடுபடுவது போல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்’ என்பதாக அமையும்.
வெகு நாட்களாக ஒரு சந்தேகம். எந்தப் பழமாயிருந்தாலும், பழுத்தவுடன், ‘பட்’டென்று தன் கொடி, செடி அல்லது மரத்திலிருந்து அறுந்து விழுந்து விடும்தானே!
இதில் வெள்ளரிப்பழத்தை மட்டும் ஏன் இந்த மந்திரத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது என்று. பல வேத விற்பன்னர்களிடம் கேட்டும் திருப்தியான பதில் கிடைக்கவில்லை.
பின் ஒருமுறை, மஹா பெரியவா இதற்கு ஒரு அற்புதமான விளக்கம் அளித்திருந்ததைப் படிக்க நேர்ந்தது. அதாவது, மற்ற பழங்கள் போல் அல்லாமல், வெள்ளரிப் பழம் கொடியில் பூத்துக் காய்த்துப் பழுக்கும். வெள்ளரிக்கொடி, தரையோடு தரையாய்ப் படரும். அதனால், வெள்ளரிப் பழமும், தரைத் தளத்திலேயே பழுத்துக்கிடக்கும். அது பழுத்தவுடன், அதைச் சுற்றியுள்ள கொடியின் கிளைகள், இலைகள் போன்றவை தன்னால் (தானாகவே) அந்தப் பழத்தை விட்டு விலகுமாம். அதாவது, பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது.
அதுபோல, ஞானிகளுக்கு, அவர்கள் பந்தம், பற்றை விட்டு விலக வேண்டு மென்பதில்லை. சரியான தருணத்தில், ‘இவர் பழுத்து விட்டார்’ எனத் தெரிந்தால், பந்தம், பற்று போன்றவை அவரை விட்டு தாமாகவே எப்படி வெள்ளரிக் கொடி தன் பழத்தை விட்டு விலகுகிறதோ, அது போல விலகி விடுமாம்.
அற்புதமான விளக்கம்.
நமது மந்திரங்களின் ஆழமான கருத்தும் புரிந்துகொள்ள நேர்ந்தது.
#திருச்சிற்றம்பலம்
பொதுவாக குறை கூறுபவர்களை
மூன்று வகையாக பிரிக்கலாம்.
1) நம் வாழ்க்கை தரத்திற்கு
உயர முடியாதவர்கள்.
2) நம்மிடம் இருப்பது அவர்களிடம் இல்லாமல் இருப்பது.
3) நம்மை போலவே இருக்க
முயற்சித்து, முடியாததால்.
🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #தெய்வீக சிந்தனைகள்
அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
#சுவையோ #சுவை !
#திருப்பாட்டு- #உன்னை #விட்டால் #வேற #ஆள் #இல்லையா ?
சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய பாடல்களை திருப்பாட்டு என்று கூறுவர்.
பொதுவாக நால்வர் பாடிய பாடல்களை தேவாரம் என்று கூறினாலும், #மணிவாசகர் பாடியது #திருவாசகம் என்றும், #அப்பர் பாடியது #தேவாரம் என்றும், #சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது #திருப்பாட்டு என்றும், #திருஞானசம்பந்தர் அருளியது #திருக்கடைக்காப்பு என்றும் அழைக்கப்படும்.
ஒரு முறை #சுந்தரர் பாச்சிலாச்சிராமம்
என்ற திருத் தலத்துக்குச் சென்றிருந்தார்.
அங்குள்ள சிவனடியார்களுக்கு உதவி செய்யும் பொருட்டு சிவனிடம் பொருள் வேண்டினார்.
#சிவன், அவருடன் விளையாட நினைத்து பொருள் தர தாமதித்தார்.
#சுந்தரருக்கு கோபம் வந்து விட்டது.
"உன்னை விட்டால் வேற ஆள் இல்லையா" என்ற கோபம் தொனிக்கும் படி ஒரு பதிகம் பாடி அருளினார்.
இறைவன் பொற் கிழி கொடுத்தான் என்பது புராணக் கதை.
"உனக்கே என் தலையும், நாவும், மனமும் வைத்தேன்.
உனக்கே அடிமை செய்தேன். அப்படி இருந்தும் நான் கேட்பதைத் தராமல் கையில் பாம்போடு, கோவணத்தை அணிந்து கொண்டு பித்தன் மாதிரி இருந்தால், உன்னை விட்டால் எனக்கு வேறு ஆள் இல்லையா என்ன"
#பாடல்
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்
நெஞ்சமும் வஞ்ச
மொன் றின்றி
உய்த்தனன் தனக்கே
திருவடிக் கடிமை
உரைத்தக்கால்
உவமனே யொக்கும்
பைத்த பாம் பார்த்தோர் கோவணத் தோடு
பாச்சிலாச் சிராமத்
தெம்பரமர்
பித்தரே யொத்தோர்
நச்சில ராகில்
இவரலா தில்லையோ
பிரானார்
#தேவாரம் ஏழாம் திருமுறையில் #திருப்பாச்சிலாச்சிராமத்தில்(திருவாசி) #சுந்தரர் அருளிச்செய்த #வைத்தனன் #தனக்கே என்று தொடங்கும் பாடல்
#பொருள்
வைத்தனன் தனக்கே = அவனுக்கு என்றே வைத்தேன்
தலையும் = தலையும்
என் நாவும் = என் நாவையும்
நெஞ்சமும் = என் மனமும்
வஞ்சமொன் றின்றி = ஒரு வஞ்சனையும் இல்லாமல்
உய்த்தனன் தனக்கே = உரிமை பொருள் ஆக்கினேன்
திருவடிக் கடிமை = அவன் திருவடிக்கே அடிமை செய்தேன்
உரைத்தக்கால் = இதை நானே சொன்னால்
உவமனே யொக்கும் = மக்கள் ஏதோ பெருமைக்கு சொல்கிறேன் என்று நினைப்பார்கள்
பைத்தபாம் = படம் விரித்த பாம்பு
பார்த்தோர் கோவணத் தோடு = பார்க்கும் படி ஒரு கோவணத்தை ஆடையாகக் கொண்டு
பாச்சிலாச்சிராமத் = பாச்சிலாச்சிராமம் என்ற
திருத்தலத்தில்
தெம் பரமர் = எம் முன்னவார், உயர்ந்தவர், தலைவர்
பித்தரே யொத்தோர் = சரியான பித்தனைப் போல் இருக்கிறார்
நச்சில ராகில் = என் மேல் விருப்பம் இல்லாமல் இருந்தால்
இவரலா தில்லையோ = இவர் அல்லாது இல்லையோ
பிரானார் = வேறு கடவுள்கள்
கடவுள் மேல் அத்தனை அன்பு.
அன்பு உள்ள இடத்தில்தானே கோபிக்க முடியும்?
அது என்ன நான் கேட்டு நீ தராமல் இருப்பது என்ற உரிமை.
மற்றவர்கள் இறைவனிடம் வேண்டுவார்கள், கெஞ்சுவார்கள், தரமாட்டாயா என்று ஏங்கிக் கிடப்பார்கள்.
#சுந்தரர் அப்படி எல்லாம் இல்லை.
ஒரு பிள்ளை எப்படி தன் தாயிடமோ அல்லது தந்தையிடமோ எப்படி உரிமையாகக் கேட்குமோ,
ஒரு காதலன் தன் காதலியிடம் எப்படி உரிமையுடன் கேட்பானோ அப்படி கேட்கிறார்.
"நீயும், உன் டிரஸ்ம், சரியான பைத்தியக்காரன் போல இருக்கு. என்னமோ உன்னை விட்டால் வேற ஆளே இல்லைன்னு நினைப்பா" என்று செல்லமாக கொஞ்சுகிறார்.
இது இந்து மதத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்று.
மற்ற மதங்களில்
இறைவனைக் கண்டு
பக்தர்கள் பயப்படுவார்கள்.
இங்கே, இறைவன் தோள் மேல் கை போட்டுப் பேசலாம்.
அவ்வளவு அன்யோன்யம்.
#திருச்சிற்றம்பலம்
#எங்கோ_இருக்கிறேன் என்று #என்னையே #ஏமாற்றிக்கொண்டேன் ??
எம் ( என்னுடைய ) கோ ( தலைவனாகிய பிரபஞ்சத்தின் பேரசனோடு ) தான் எப்போதும் , எங்குமிருக்கின்றேன் என்று ஏனோ உணராத்திருக்கிறேன் ??
எம் இருப்பே !!
எம் கோவோடு தானே ..
எங்கோ என்று ஏமாறாது !!
எம் கோ என்று மெய்யுணர்ந்து வாழ்வோமே ........
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
#ஆன்மீகம் என்பது #அறுபது வயதிலா? #இருபது வயதிலா? இப்படி ஓர் கேள்வி ..
வயது அற்றதே ஆன்மிகம் !!
வயது என்பது அந்த ஆன்மா தற்போது கொண்டு இருக்கும் சட்டை உடையது !!
அதை உடைத்து மெய்யை அறிவிக்கவே ஆன்ம நிலையை மீட்டு எடுக்கவே ஆன்மீகம் என்ற பெயரே அதற்க்கு !!
வயது என்பது
புதுசட்டையா !! பழைய சட்டையா ?? என்றே கருதலில் இருத்தும் !!
ஆனால்
சடையில் இல்லாவிட்டாலும் நீங்கள், நீங்கள் தானே என்ற
ஆன்ம நிலை உணர சடைத்தன் தான் போடு இருக்கோம்,
சட்டை நாம் அல்ல என்று தெளிய எந்த வயசாக இருந்தால் தான் என்ன ??
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் அதற்கு உண்டான தண்டனை கண்முன்னே தந்துவிட்டார் தெய்வம்
🙏திருச்சிற்றம்பலம்🙏
🙏திருமுறை.11 பதிகம் 9 பாடல் 39,40
கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
வாயிலே வைக்கு மளவில் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே தூயவே
கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத்து
எம்பெருமான் ஓர் அஞ் செழுத்து.
தூய்மையுடைய திருவேகம்பரே தேவியோடு நிலை பெற்றிருக்கும் கயிலைப் பெருமானே திரு ஐந்தெழுத்தை உபதேசித்த அளவில் அது மருந்தாகி கொடிய பிறவி நோயைத் தீர்க்கும்
அஞ்செழுத்தும் கண்டீர் அருமறைகள் ஆவனவும்
அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும்-நஞ்சவித்த
காளத்தியார் யார்க்கும் காண்டற்கு அரிதாய்ப்போய்
நீளத்தே நின்ற நெறி
விடத்தின் வேகத்தைத் தணித்த
திருக்காளத்தியில் எம்பெருமானைக் காணமுடியாத அளவு நீளத்தே நின்ற நெறி அஞ்செழுத்தும் கற்க அணித்தாகும் அஞ்செழுத்தே அருமறைகளாகும் என்பதை காணுங்கள்
எத்தனை பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும்
திருச்சிற்றம்பலம்
இடம் : தில்லை ( சிதம்பரம் )
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசர்
இறைவர் திருப்பெயர் : கனகசபை - சபாநாயகர், திருமூலட்டானம் - திருமூலநாதர்
இறைவியார் திருப்பெயர் :கனகசபை - சிவகாமி, திருமூலட்டானம் – உமையம்மை
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர் சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன் பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர் எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர் சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம் திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
அல்ல லென்செயும் அருவினை யென்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம் நான்நி லாவி யிருப்பனென் னாதனைத் தேன்நி லாவிய சிற்றம் பலவனார் வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும் சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர் பாலணு கான்செறு காலனே.
ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர் திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார் விருத்த னாரிளை யார்விட முண்டவெம் அருத்த னாரடி யாரை யறிவரே.
விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக் கண்நி றைந்த கடிபொழி லம்பலத் துள்நி றைந்துநின் றாடு மொருவனே.
வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம் வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன் தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.
நாடி நாரணன் நான்முக னென்றிவர் தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத் தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன் சதுரன் சிற்றம் பலவன் திருமலை அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.
திருச்சிற்றம்பலம்
உங்கள் #மகிழ்சியை திரும்பத் திரும்ப திருடும்,
உங்கள் ஆற்றலை வற்றடிக்கும்,
அல்லது உங்கள் ஆன்மாவை காயப்படுத்தும்
எதிலிருந்தும் விலகி இருங்கள்.
நீங்கள் உணர்சி ரீதியாக காயப்பட்டிருக்கும் இடத்தில்,
உங்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதை நிறுத்தும்போது,
உள்ளார்ந்த அமைதி சாத்தியமாகிறது.
நீங்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கும் தருணத்தில்தான்
குணமடையும் பயணம் தொடங்குகிறது.
உங்கள் அமைதியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்,
ஏனெனில் அமைதியான மனம்
வாழ்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று.
🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #தெய்வீக சிந்தனைகள்
இன்று(2-6-26)வைகாசி மாதம் மூலம் நட்சத்திர
நாளில்
திருஞானசம்பந்தருடன் சிவனடி சேர்ந்த நாயன்மார்கள் பற்றிய சிறப்பு பதிவு.
வைகாசி மூலத்திருநாளின் நெகிழ்ச்சி பின்னணி!
இன்று (2-6-26)வைகாசி மூல நட்சத்திரத் திருநாள்.
பெருமைமிக்க இந்த நாளில் சிவனின்
புகழ்பாடி சீலம் கொண்ட நாயன்மார்கள்
நால்வரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
ஈசனின் பிள்ளையாகவே வளர்ந்த ஞானக் குழந்தையாம் திருஞான சம்பந்தர்,திருநீலநக்க நாயனார், இசையால் ஈசனை வசமாக்கிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்புகலூர் முருக நாயனார் ஆகிய நால்வரின் குருபூஜை தினம் இன்று.
இவர்கள் நால்வருமே
ஒரே நாளில், ஒரே ஊரில்,ஜோதியில் கலந்தது அதிசயிக்கத்தக்க நிகழ்வு.
மேலும் இந்தநாள், திருஞானசம்பந்தரின் திருமண நாளாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திருஞானசம்பந்தமூர்த்தி :
தேவார மூவரில் முதன்மையானவர். ஈசனின் அருளையும் அம்பிகையின் அருட்பாலையும் பெற்ற ஞானக்குழந்தை. பேசத் தொடங்கிய காலத்திலேயே ஈசனைப் பற்றி பாடத் தொடங்கியது. 'தோடுடைய செவியன்' என்று பாடத் தொடங்கி தலம்தோறும் சென்று சைவ சமயத்தின் புகழைப் பரப்பினார். செல்லும் இடமெங்கும் ஈசனின் பெயரால் பல அற்புதங்களைச் செய்த அருளாளர் ஞானசம்பந்தப் பெருமான்.
திருநீலநக்க நாயனார் : சாத்தமங்கை என்ற திருத்தலத்தில் பிறந்த இந்த நாயனார், ஈசனையே எல்லாமுமாக எண்ணி வாழ்ந்தவர். ஒருமுறை சாத்தமங்கை அயவந்தீஸ்வரரின் திருக்கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று செல்ல, அதைக் கண்ட நீலநக்கரின் மனைவி விரைவாகத் தனது வாயால் ஊதி அந்த சிலந்தியை விரட்டினார். இதனால் பதறிப்போன நீலநக்க நாயனார், ஈசனை எச்சில் வாயால் ஊதி அவமதித்ததாகக் கூறி அவரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார். அன்றிரவே நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன், 'நாயனாரின் மனைவி வாயால் ஊதிய இடம் தவிர மற்ற எல்லா இடங்களும் கொப்புளங்களால் வெம்மை பெற்றிருப்பதாகவும், தன்பால் கொண்டிருந்த அன்பின் காரணமாக அப்படிச் செய்த மனைவியை ஏற்றுக்கொள்ளுமாறும்' கட்டளையிட்டார். இப்படி ஈசனிடம் மட்டற்ற பக்தியும் கனிவும் கொண்டவர் திருநீலநக்க நாயனார்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் : திருஎருக்கத்தம்புலியூரில் பாணர் குலத்தில் பிறந்தவர். இசையால் ஈசனை மகிழ்விக்கும் திருப்பணியை செய்துவந்தவர். மதங்கசூளாமணி எனும் தனது மனைவியுடன் இணைந்து தலம்தோறும் சென்று இறைவனை இசையால் அர்ச்சித்து வந்தார். இவரது இசைக்கு மயங்கிய ஆலவாய் அண்ணல் சொக்கநாதர், இவரை கோயிலுக்குள் அழைத்து பொற்பலகையிட்டு இசைக்க வைத்தார். 'தரையில் இருந்து இசைத்தால் அவரது இசைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பொற்பலகையைக் கொடுத்தோம்' என்று அசரீரியாகத் தனது பக்தர்களுக்கும் எடுத்துச் சொல்லி, பாணரின் இசைத் திறமையை புகழ்ந்தார் ஈசன். சீர்காழியில் திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கி, அவருடைய பாடல்களை இசைத்து இறைவனை வழிபட்டு வந்தார்.
முருக நாயனார் : சோழ நாட்டின் திருப்புகலூரில் அவதரித்த நாயனார் இவர். திருப்புகலூர் வர்த்தமானீச்சுரத் திருக்கோயில் நந்தவனத்தைப் பராமரித்து, அங்கு மலர்ந்த பூக்களைக் கொய்து, மலர் மாலைகளாக்கி ஈசனுக்கு அணிவித்து சேவை செய்து வந்தார் முருகனார்.
கோயிலின் திருமடத்தில் தங்கி சேவை செய்து வந்த இவரைக் காண திருநாவுக்கரசர் பெருமானும், திருஞானசம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருசேர வந்திருந்தார்கள்.
அவர்களைக் காண திருநீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாரும் வந்து மடத்தில் தங்கி இருந்தார்கள்.
அவர்களோடு அன்பால் இணைந்த முருக நாயனார் பெரிதும் மகிழ்ந்தார்.
இந்த நிலையில், பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு சம்மதித்தார் ஞானசம்பந்தப் பெருமான்.
திருநல்லூர் பெருமணம் திருத்தலத்தில் ஞானசம்பந்தருக்குப் பெண் அழைப்பு நடைபெற்றது.
இதில் சம்பந்தரின் உறவினர்களோடு முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் கலந்துகொண்டார்கள்.
அப்போது தனது அவதார நோக்கம் முடிவடைந்ததை உணர்ந்துகொண்ட சம்பந்தப் பெருமான், சிவலோகத் தியாகேசர் திருக்கோயிலில்
நெக்குருகி 'நமசிவாயத் திருப்பதிகம்' எனும் பாடல்களைப் பாடினார்.
``காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே'
என்று தொடங்கிய பதிகத்தின் முடிவில், பெரும் ஜோதிப் பிழம்பொன்று தோன்றியது.
உடனே சம்பந்தரும் அவரோடு வந்த கூட்டத்தாரும் சிவனின் கருணையை எண்ணி வியந்து, பஞ்சாட்சரம் ஓதியவாறு ஜோதியில் கலந்தனர்.
அந்த நாள் வைகாசி மூலத்திருநாள். சம்பந்தருடன் இணைந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நாயன்மார்கள் தனது குடும்பத்தாரோடு ஒரே நாளில்,ஒரே இடத்தில் ஈசனின் திருவடியை அடைந்தார்கள்.
அதனால் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயத்தில் திருஞானசம்பந்தரின் திருமண திருவிழா இந்த நாளில் நடைபெறுகிறது. '
இந்த திருமணத்துக்கு வந்திருந்து ஆசீர்வதித்து அம்பிகை திருநீறு அளித்தார்' என்ற ஐதீகத்தால் இன்றும் இந்த ஆலயத்தில் திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறே அளிக்கப்படுகிறது.
இயன்றவர்கள் இன்று இந்த ஆலயத்துக்குச் சென்று இந்த நான்கு நாயன்மார்களோடு சிவசக்தி தம்பதியையும் தரிசித்து வாருங்கள். மங்கள வாழ்வும், முக்திக்கான வழியும் கிடைக்கும் என்பது ஐதீகம். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #63 நாயன்மார்கள் வரலாறு #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
இன்று(2-6-26)வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் முக்தியடைந்ததை முன்னிட்டு
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் வரலாறு பற்றிய சிறப்பு பதிவு!
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்:
"திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்."
"திருஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் இசை அமைத்துப் பாடியவர்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.
சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார்.
அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நீலகண்டேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ நீலமலர்க்கண்ணி
அவதாரத் தலம் :
எருக்கத்தம்புலியூர்
முக்தி தலம் : ஆச்சாள்புரம்
குருபூஜை நாள் : வைகாசி - மூலம்
"ஆழி சூழும் திருத்தோணி அமர்ந்த அம்மான் அருளாலே
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான்
காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு
வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர்."
பாடல் விளக்கம்:
ஆழி......உண்ட - கடலாற் சூழப்பட்ட திருத்தோணியிலே விரும்பி எழுந்தருளிய இறைவரது திருவருளினாலே யாழிசையினும் இனிய மொழியாளராகிய உமையம்மையார் ஞானவமுத மூட்ட உண்டருளிய; எம்பெருமான்.....வணங்குதற்கு - எமது பெருமானும், சீகாழி நாடுடையவரும், கவுணியர் தலைவரும் ஆகிய ஆளுடைய பிள்ளையாரது தாமரைபோன்ற திருவடிகளை வணங்கும் பொருட்டு; வாழி.....யாப்பாணர் - வாழ்வுடைய மறையவர்களது பதியாகிய சீகாழிப்பதியினில் சந்தமுடைய யாழ்ப்பாணனார் வந்தனர்.
சோழவள நாட்டிலே அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர் என்னும் நகரில் ஓர் பெரிய சிவன் கோவில் உண்டு.
அக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு, நீலகண்டேசுவரர் என்றும், சக்திக்கு நீலமார்க் கண்ணம்மை என்றும் பெயர்.
தலவிருட்சம் வெள்ளெருக்கு.
இத்தகைய தெய்வ வளமிக்க நகரில், பாணர் மரபில் பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர்.
இவரது மனைவி மதங்க சூளாமணி.
இசையே உருவெடுத்த பாணரும், அவரது வாழ்க்கைத் துணைவியாரும், நீலகண்டேசுவரர் புகழை யாழில் இனிமையுடன் உள்ளம் உருக இசைத்து எல்லையில்லா இன்பம் எய்தினர்.
இவர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று யாழ் இசைத்து எம்பெருமான் அருள் பெற்று பெருமையுற்றனர்.
சோழவள நாட்டிலுள்ள எல்லா சிவன் கோவில்களையும் கண்டுகளித்துப் பேரின்பம் பூண்ட பாணரும் அவரது மனைவியாரும் மதுரையம்பதிக்குச் சென்றனர்.
பாணர் தம் மனைவியோடு திருஆலவாய் அண்ணலாரது ஆலயத்தின் புறத்தே நின்று எம்பெருமானின் புகழை யாழில் சுருதி கூட்டி பண்ணமைத்துப் பாடிக் கொண்டிருந்தார்.
பண்டை நாட்களில், பாணர் மரபினோர் ஆலயத்துள் சென்று இறைவனை வழிபடுவது கிடையாது.
புறத்தே நின்று வழிபடுவதையே நியதியாகக் கொண்டிருந்தார்கள்.
பாணரின் யாழிலே உள்ளம் உருகிய சோமசுந்தரக் கடவுள் தமது பக்தனைக் காக்க திருவுள்ளம் கொண்டு மதுரையம்பதி சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளினார்.
யாழ்ப்பாணரையும், அவரது மனைவியாரையும் கோவிலுள் அழைத்து வந்து தரிசனம் செய்வதற்கு ஆணையிட்டார்.
அவ்வாறே பாணர் கனவிலும் எழுந்தருளினார்.
பாணரே! உம்மை, எம்மிடம் அழைத்து வந்து தரிசனம் செய்து வைக்க ஆவன செய்துள்ளோம் என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார்.
மறுநாள் வழக்கம்போல் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவியாருடன் கோயிலின் புறத்தே அமர்ந்து யாழ் இசைத்து தம்மை மறைந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தொண்டர்கள் அவர்களைக் கண்டு வணங்கி எம்பெருமானின் ஆணையைக்கூறி அவர்களை அகத்து எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக் கொண்டனர்.
அவர்களும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கோயிலுக்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தனர்.
பக்தி வெள்ளத்தில் மூழ்கிய அன்பர் இருவரும் தரை ஈரமாக இருப்பதனை கூட பொருட்படுத்தாமல், ஈரத்தரையில் அமர்ந்து மெய்மறந்து யாழை மீட்டி பாடத் தொடங்கினர்.
இவருடைய இன்ப இசையில் மயங்கிய மதுரையம்பதி ஈசன் தரையின் குளிர்ச்சி பட்டு யாழின் சுருதி கெட்டுவிடுமே என்று திருவுள்ளம் பற்றினார்.
அசரீரி வாயிலாக பெருமான் நிலத்திலிருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும்.
எனவே அவர்கட்கு அமர்ந்து பாடப் பலகை ஒன்று இடுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
அப்பொழுது அத்தொண்டர்கள் அவர்களுக்கு அழகிய பீடம் ஒன்றை எடுத்து வந்து அதன் மீது அமர்ந்து பாடுமாறு செய்தனர்.
பீடத்தில் அமர்ந்த யாழ்பாணரும், மதங்க சூளாமணியும் அழகிய இனிய தெய்வ சக்திமிக்கப் பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர்.
அதன் பிறகு இருவரும் மதுரையம்பதியில் நெடுநாள் தங்கியிருந்து தங்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர்.
அடுத்துள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தனர்.
திருவாரூர் தியாகேசப்பெருமானும், பிராட்டியாரும் பாணர் இசையில் மயங்கினர்.
அன்றிரவு ஈசன் திருவாரூர் மெய்யன்பர்கள் கனவிலே எழுந்தருளி, எமது அன்பன் பாணனுக்கு திருக்கோயிலுள் வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக் கோயிலுக்குள் அழைத்து வந்து இசை பாடத் துணைபுரிவீர்களாக என்று கட்டளையிட்டருளினார்.
மறுநாள் தொண்டர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளும் பொருட்டு வடதிசையில் வாயில் ஒன்று நிர்மாணித்தனர்.
அதன் வழியாக அவரையும், அவரது மனைவியாரையும் எம்பெருமான் திருமுன் எழுந்தருளச் செய்தனர்.
யாழ்ப்பாணர் வீதிவிடங்கப் பெருமானைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்து பக்திப் பாடல்கள் பாடினார்.
சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டே, சீர்காழியை வந்தடைந்து சம்பந்தரை வணங்கினார்.
பாணரின் யாழிசையில் எல்லையில்லா இன்பம் எய்திய திருஞானசம்பந்தப்பெருமான் அவரையும், அவர்தம் மனைவியாரையும் தம்முடனேயே இருந்து தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து பாடும் வண்ணம் அருள்புரிந்தார்.
இறுதியில் திருபெருமணநல்லூரில் ஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில், பாணரும், அவர்தம் மனைவியாரும் கலந்து சிவபதவியை அடைந்தனர்.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் வைகாசி மாதம்
மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.
திருநீலகண்ட யாழ்ப்பாண
நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில்
கொண்டாடப்படுகிறது. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #63 நாயன்மார்கள் வரலாறு #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏













