ரவிசங்கர் ராஜா, ஆரணி
ShareChat
click to see wallet page
@ravisankarraja
ravisankarraja
ரவிசங்கர் ராஜா, ஆரணி
@ravisankarraja
நான் நெசவாளரின் மகன் (செங்குந்த/கைக்கோளர் வம்சம்)
🚩🦚 ஓம் சரவணபவ 🐓🙏🏻 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼முருகப்பெருமான் பாடல்கள்🎵 #தமிழ்க்கடவுள் முருகன் தமிழ்க்கடவுள் முருகன்
🕉️ஓம் முருகா - ShareChat
00:38
*தினம் ஒரு திவ்ய தேச தரிசனம்-1* புதிய தொடர் பதிவு! *ஸ்ரீரங்கம் ரங்கநாத* *சுவாமி கோயில்* 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் / உற்சவர்: ரங்கநாதர் / நம்பெருமாள் தாயார்: ரங்கநாயகி தலவிருட்சம்: புன்னை தீர்த்தம்: சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள் ஆகமம் / பூஜை: பாஞ்சராத்திரம் விமானம்: பிரணாவாக்ருதி பஞ்சரங்கத் தலங்களுள் (ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கப்பட்டணம், ஸ்ரீரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம், சாரங்கபாணி கோயில், குடந்தை, அப்பால ரங்கநாதர், கோவிலடி, பரிமள ரங்கநாதர் கோயில், மயிலாடுதுறை) ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது. 12 ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் தவிர ஏனையோரால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை கம்பர் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திற்க்கான தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம்: பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே. ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் ஆருளர்களைக் கணம்மா அரங்கமா நகருளானே! தல வரலாறு திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை. கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார். ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. கோயில் சிறப்பு இத்தலத்து ராஜ கோபுரம், இந்தியாவின் மிகப் பெரிய ராஜ கோபுரம் ஆகும். பல ஏக்கர் (ஏறத்தாழ 156 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் அழகிய மண்டபங்கள், திருக்குளங்கள், தனி சந்நிதிகள், 21 கோபுரங்கள், 7 சுற்றுப் பிரகாரங்கள் அமைந்துள்ளன. மேலும் 7 மதில்கள், 7 தாயார்கள், 7 உற்சவங்கள், 7 திருவடி சேவை, 7 கண்டுகளிக்கும் சேவை என்று சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. பொன்னால் வேயப்பட்ட ஸ்ரீரங்க விமானம், ‘ஓம்’என்ற பிரணவ வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளது. இதற்கு 24 கி.மீ தொலைவு சுற்றி எங்கிருந்து வழிபட்டாலும் இறைவனின் திருவடியை அடையக் கூடிய முக்தி நிச்சயம் என்று ஸ்ரீரங்க தலவரலாறு உரைக்கிறது. ரங்கவிலாஸ் மண்டபத்தில் உள்ள கல் கொடிமரத்தை வணங்கி, உயர்ந்து நோக்கினால், கொடிமரம் அசைவது போன்று தோன்றும். தனது 120-வது வயதில் (கிபி 1137) சாயுஜ்யம் அடைந்தார் ஸ்ரீராமானுஜர். இத்தனை ஆண்டுகள் கடந்தும் இக்கோயிலில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் கொஞ்சம், கொஞ்சமாகத் தேய்வதாக கூறப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை ரங்கநாதரின் திருப்பாதத்தில் இருந்து காலணிகள் கழற்றப்படும்போது, அவரே பயன்படுத்தப்பட்டவை போல தேய்ந்து காணப்படும். ரங்கநாதரின் திருக்கண்கள், விபீஷணனால் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் சேமிப்பு கிட்டங்கிகள் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டன. 20 அடி விட்டமும், 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் உள்ளன. எவ்வளவு நெற்கதிர்கள் கொட்டினாலும், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விரிவடையும் தன்மை கொண்டதாக நெற்குதிர்கள் அமைந்துள்ளன. ரங்கநாச்சியார் சந்நிதிக்கு வெளியில் அமைந்துள்ள ஐந்து குழி மூன்று வாசல் குறிப்பிடத்தக்கது. அர்த்த பஞ்சக ஞானத்தை ஐந்து குழி குறிப்பதாகவும், மூன்று வாசல் பிரம்மத்தின் வழி என்றும் கூறப்படுகிறது. ஐந்து குழிகள் வழியே ஐந்து விரல்களை வைத்து தென்திசை நோக்கினால் பரமபத வாசல் தெரியும் என்பதால் இவ்விதம், தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். இக்கோயில் சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம், பலாச தீர்த்தம், அசுவ தீர்த்தம், ஆம்ர தீர்த்தம், கதம்ப தீர்த்தம், புன்னாக தீர்த்தம் ஆகிய 9 தீர்த்தங்களைக் கொண்டுள்ளது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம், காடுகாண் காதை, அகநானூறு உறையூர் முதுகூத்தன்னார் பாடல்களில் திருவரங்கம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களில், 247 பாசுரங்கள் திருவரங்கம் மீது அமைந்துள்ளன. திருமங்கையாழ்வார் 73 பாடல்களையும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55, பெரியாழ்வார் 35, குலசேகராழ்வார் 31, திருமழிசையாழ்வார் 14, நம்மாழ்வார் 12, திருப்பாணாழ்வார் 10, ஆண்டாள், 10, பூதத்தாழ்வார் 4, பொய்கையாழ்வார் 1 பாடலையும், பேயாழ்வார் 2 பாடல்களையும் பாடியுள்ளனர். ரங்கநாதரும் 7 அதிசயமும் ரங்கநாதர் கோயில் உள்ள ஏழு மதில் சுற்றுகள் ஏழு உலகங்களாக கருதப்படுகின்றன. மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று - பூலோகம், திருவிக்கிரம சோழன் திருச்சுற்று - புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச்சோழன் திருச்சுற்று - சுபர்லோகம், திருமங்கை மன்னன் திருச்சுற்று - மஹர்கோகம், குலசேகரன் திருச்சுற்று - ஜநோலோகம், ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று - தபோலோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று - சத்யலோகம் என்று கருதப்படுகின்றன. பெரிய கோயில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம் (நைவேத்தியம்), பெரிய திருமதில், பெரிய கோபுரம் என்ற பெருமைகளைக் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் என்று 7 நாச்சியார் உள்ளனர். ஸ்ரீரங்கம் கோயிலில் வருடத்துக்கு 7 முறை (விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் - அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, பாரிவேட்டை, ஆதி பிரம்மோற்சவம்) நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். வருடத்துக்கு 7 முறை (சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, தை, மாசி, பங்குனி) நம்பெருமாள் கோயிலை விட்டு வெளியே எழுந்தருள்வார். ஏழு உற்சவத்தின்போது, 7-ம் நாள் (வருடத்துக்கு 7 முறை - சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி, பங்குனி) நெல்லளவு கண்டருள்வார். தாயார் சந்நிதியில் வருடத்துக்கு 7 உற்சவங்கள் (கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, நவராத்திரி, ஊஞ்சல் உற்சவம், அத்யயநோற்சவம், பங்குனி உற்சவம்) நடைபெறும். நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாளில் ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும். தமிழ் மாதங்களில் 7-ம் மாதமான ஐப்பசி 30 நாட்களும் தங்க குடத்தில் புனிதநீர் யானை மீது கொண்டு வரப்படும். திருமாலின் 7-ம் அவதாரமான ராமாவதாரம் பூஜித்த தலம் ஸ்ரீரங்கம் கோயில். பன்னிரெண்டு ஆழ்வார்களும் 7 சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். முதல் சந்நிதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், இரண்டாம் சந்நிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மதுரகவியாழ்வார், மூன்றாம் சந்நிதியில் குலசேகர ஆழ்வார், நான்காம் சந்நிதியில் திருப்பாணாழ்வார், ஐந்தாம் சந்நிதியில் தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆறாம் சந்நிதியில் திருமழிசை ஆழ்வார், ஏழாம் சந்நிதியில் பெரியாழ்வார், ஆண்டாள் எழுந்தருளியுள்ளனர். இராப்பத்து 7-ம் திருநாளில் பராங்குச நாயகி திருக்கோலத்தில் நம்மாழ்வார் அருள்பாலிப்பார். பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் (நாழிகெட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம், கார்த்திகை கோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம் தெற்கு கட்டை கோபுரம், தெற்கு கட்டை கோபுரம் - ஐஐ, ராஜ கோபுரம்) உள்ளன. 7 உற்சவ காலங்களில் (வசந்த உற்சவம், சங்கராந்தி, பாரி வேட்டை, அத்யயநோற்சவம், பவித்ரோற்சவம், ஊஞ்சல் உற்சவம், கோடை உற்சவம்) ரங்கநாதர் குறிப்பிட்ட மண்டபங்களில் மட்டும் எழுந்தருள்வார். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாக 7 சேவைகள் உள்ளன. அவை பூச்சாண்டி சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீராமநவமி சேர்த்தி சேவை, தாயார் திருவடி சேவை, ஜாலி, சாலி அலங்காரம் ஆகும். ஆலயத்திருவிழாக்கள் ஆடிப்பெருக்கு உற்சவத்தின்போது பெருமாள் அம்மா மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். காவிரித் தாய்க்கு அவர் சார்பில் பட்டுப் புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை போன்றவை சீதனமாக அளிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி 21 நாள் வைபவம், 3 பிரம்மோற்சவ விழா, மாசி மாத தெப்பத் திருவிழா, தமிழ், ஆங்கில புத்தாண்டு, சனிக்கிழமை தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் தொடர்பான காணொளிகாட்சி கீழே!👇🚩🕉🪷🙏🏼 #🙏பெருமாள் #திருச்சி ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏கோவில் #108 திவ்ய தேசங்கள்
🙏பெருமாள் - ShareChat
01:59
🚩🕉ஓம் நமசிவாய🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
00:30
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் திருமந்திர பாடல்-2500. உள்ளமும் இல்லை உருவில்லை தானே….! உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும் உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப் பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லை உள்ளமும் இல்லை உருவில்லை தானே. விளக்கம்:- உள்ளமே உருவம் என்றும், உருவமே உள்ளம் என்றும் கூறுவதன் உண்மையை அறிந்து கொண்டு, உள்ளத்துக்கும் உருவத்துக்கு உள்ள உண்மைத் தொடர்பை உணர்ந்து கொண்டவர் ஞானியர். இவர்களுக்கு துன்பம் தரும் நரகமும் இல்லை; இன்பம் தரும் சுவர்க்கமும் இல்லை. இவர்களுக்கு முப்பாழ்கள் இல்லை. உள்ளம் இல்லாததால், உலகியலில் நாட்டமும் இல்லை. இவர்கள் உடலைக் கடந்து விளங்குவர். ஆயிரம் கனவுகள்,ஆக்ரோஷப் போர்கள்.. இறுதியில் எஞ்சுவதோ ஒரு பிடி சாம்பல்! ஒரு வாளி நீர் போதும் உன் வாழ்நாள் சுவடுகளைத் துடைத்தெறிய. கரையப்போகும் சாம்பலுக்காக எதற்கு இந்த வேடங்கள்? மரணத்தின் மௌனத்திற்கு முன்னால் நம் வாழ்வு ஒரு வெற்று நாடகம்🖤💕 எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை யாகம் செய்தாலும் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் வாழ்க்கை என்பது வெற்றிடங்களின் தொகுப்பு அல்ல,எங்கோ ஒரு மூலையில் மலரும் சிறு நம்பிக்கையின் தொடர்ச்சி.காரணங்கள் தீர்ந்து போகலாம்,ஆனால் தேற்றி கொள்ளும் அந்த ஒற்றைத் திமிர் தீராது,ஆயிரம் முட்கள் தைத்தாலும் வீழக் காரணங்கள் கோடி இருந்தாலும் வாழ கிடைக்கும் ஒரே ஒரு புன்னகை போதும் எனக்கு! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள் எத்தனை பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் திருவிழாக் கூட்டத்தின் நடுவே அநாதையாய் நிற்பது போல் இருக்கு இந்த வாழ்வு!சுற்றிலும் கேட்கும் சிரிப்பொலிக்கு நடுவே, இருந்துமில்லாமல் போன நொடிகளை எண்ணி உறைந்து கிடக்கிறது சுயம்.சாகத் துணிந்தும் சாக முடியாமல் போனவனின் அந்தக் கழுத்துத் தழும்பைப் போல் கனத்துக் கிடக்கிறது நெஞ்சம்🖤💕 சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் எம்பெருமான் தரிசனத்துடன் எம் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏 நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருநாள், அதே நினைவு மீண்டும் வருகிறது. ஆனால் இந்த முறை அது காயப்படுத்தவில்லை. அமைதியாக அருகில் அமர்கிறது. அப்போது புரிகிறது; காலம் நினைவுகளை அழிப்பதில்லை. அவற்றின் கூர்மையை மட்டும் மழுங்கச் செய்கிறது! சில இரவுகளில் தூக்கம் வராமல் விழித்திருக்கும்போது, உன்னை இழந்த துக்கத்தைவிட உன்னை உண்மையென்று நம்பிய என்னை நினைத்துத்தான் அதிகமாக அழுகிறேன்! பகல் முழுதும் ஆயிரம் முகங்களுக்குப் பதிலளிக்கும் இவர்கள், இருள் கவிழ்ந்ததும் தங்கள் சுயத்தைத் தேடி அழுகிறார்கள். யாரும் இல்லாத அந்த நான்கு சுவர்களுக்குள் பக்குவம் என்பது கழற்றி வைக்கப்படும் ஒரு பாரமான உடை! அங்கே அவர்கள் வெறும் துண்டு துண்டாய் உடைந்த மனிதர்கள்🖤💕 #சிவசிவ #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #திருப்பந்தனைநல்லூர். ஆறாம் திருமுறை பதிகம் #பாடல் ஏறேறி யேழுலகு மேத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார் நீறேறு மேனியார் நீல முண்டார் நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார் ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி யனலுமிழும் ஐவா யரவு மார்த்தார் பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. #பொழிப்புரை பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர் . தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர் . நீறணிந்த மேனியர் . விடத்தை உண்டவர் . வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர் . உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர் . கங்கை தங்கு சடையினர் . ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர் . தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர் . புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர் . #திருச்சிற்றம்பலம் #வாழ்க்கை #ஒரே #போராட்டமா #இருக்கு..." என்ற எண்ணம் வரும் போதெல்லாம்... ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்... அதே நொடியில், யாரோ ஒருவர் ஒரு மருத்துவமனையின் படுக்கையில் இன்னும் சில நிமிடங்கள் உயிரோடு இருக்க _வேண்டும் என்பதற்காக மூச்சு விடவே போராடிக் கொண்டிருக்கிறார்.. நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பல விஷயங்கள், மற்றொருவரின் மிகப் பெரிய கனவாக இருக்கலாம். அதனால்... இருப்பதை எண்ணி நன்றியோடும், இல்லாததை நோக்கி நம்பிக்கையோடும் வாழ்வோம். நாம் நினைப்பதை விட #ஆசீர்வாதங்கள் #நிறைந்த #வாழ்க்கையைத்தான் #வாழ்ந்து #கொண்டிருக்கிறோம். #இலக்கை_நீங்கள் பற்றும் முன்னமே !! #இலக்கு_உங்களை பற்றி விடுகிறது !! இலக்கிடம் இலக்கு அற்று சிக்கி கொண்டே பின்னே தான் .. இலக்கு உங்களிடம் சிக்கின்றது !! இதில் வெற்றி பெற்றது இலக்கு தான் !! நீங்கள் அல்ல .. இலக்கை நீங்கள் அடையும் வரை, நீங்கள் இழப்பதோ ஏராளம் என்பதே மெய் .. இலக்கற்று இருங்கள் .. அடைவதை எல்லாம் அனுபவித்து வாழவந்தார்கள் தான் நீங்கள் .. #பிறப்பிற்க்கு_முன்னும் ?? #இறப்பிற்க்கு_பின்னும் ?? என்ன நடக்கும் .. என்ன நடந்தால் தான் என்ன ?? அங்கே நீ என்ற ஒன்றே இல்லை .. பிறப்பிற்கு முன்னே நீ என்ற அடையாளம் அற்று !! பிரபஞ்சத்தின் துகளாக !! இப்பிரபஞ்சமே உடலாக !! இது தான் நீ என்று சுட்டிக்காட்ட முடியாத வண்ணம், பிரபஞ்சமாகவே எல்லை அற்று, பிரபஞ்ச பேராற்றல் என்ற இறையோடு அதை இசைவுக்கு இசைந்தவண்ணம் நானற்று இருந்தாய் .. இறப்புக்கு பின்னே !! இது என் உடல் ?? உறவு ?? சொத்து ?? ஆற்றல் ?? திறமை ?? என்று உடல் என்னும் சிறைக்குள் சிக்கி !! அந்த சிறையை வசதியாக்க ?? சக சிறைவாசிகள் ஆதரவு தேடி ?? பாசம் தேடி ?? காதல் தேடி ?? அதில் எல்லாம் பக்கவுபட்டு !! இது தான் நான் ?? இவ்வளவு தான் நான் ?? என்ற தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் சிறையில் இருந்து விடுபட்டு .. பெற்றதை பெற்ற இடத்தில் !! அதை பெற பிறத்தவர்களிடம் கொடுத்துவிட்டு !! இது எதுவும் நான் இல்லை என்ற சுவடு அற்று !!! மீண்டும் எல்லையற்ற தன்மையுள் கலந்து விடுவாய் .. இங்கே என்ன நடக்கும் என்றால் ?? அதை பார்க்க ?? கேட்க ?? தெரிந்துகொள்ள ?? அடிப்படையாக ஓர் நான் என்ற அடையாளம் வேண்டும் தானே !! அதுவே இல்லதாபோது !! என்ன நடந்தால் தான் என்ன ?? 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #சிவசிவ. #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #திருப்பந்தனைநல்லூர். ஆறாம் திருமுறை பதிகம் #பாடல் கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார் காரோணங் காதலார் காதல் செய்து நல்லூரார் ஞானத்தார் ஞான மானார் நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார் மல்லூர் மணிமலை யின்மே லிருந்து வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப் பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. #பொழிப்புரை ஞானத்தை அடியார்க்கு வழங்குபவராய்த் தாமே ஞானவடிவாகி , நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய் , நாகை , குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான் . அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர் . வலிமை மிகுந்த அழகிய கயிலாய மலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன் தலைகள் சிதறுமாறு கோபித்த அப் பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர் . அவர் பைங்கண் ஏறு இவர்ந்து பணி ஏற்றவர் . #திருச்சிற்றம்பலம் சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் #அர்ச்சனை #திருமுறை #விளக்கம் மனிதர்களுக்குப் பல குறைகள் உண்டு. பல குறிக்கோள்களும் உண்டு. இவற்றையெல்லாம் அடைவதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும். ஆகவே, இறைவனிடம் அந்த எண்ணங்களைச் சொல்லி அதை நிறைவேற்றுமாறு விண்ணப்பம் செய்து கொள்வதே அர்ச்சனையாகும். தமிழில் அர்ச்சனை செய்யலாம். முறையாக பார்த்தால், நமக்கு நாமே தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் ஒரு ஆள் வைத்து செய்கிறோம், அது பின்னாளில் வந்தது. நாமே செய்வது சிறப்பு. அர்ச்சனை என்பது பாட்டேயாகும் என்பதை #சுந்தரர்பெருமான் வரலாற்றில் உணர்த்துவதாக #சேக்கிழார் மொழிகிறார். இறைவனைப் போற்றிப் பாடிவிட்டு நம் விண்ணப்பங்களையும் அதோடு சேர்த்து சொல்லுகிறோம். இதுவே அர்ச்சனையாகும். குறைகளும் குறிக்கோளும் உள்ள நாம் இறைவனிடம் விண்ணப்பம் செய்து அர்ச்சனை செய்கிறோம். இறைவன் தனக்கு என்று எந்த தேவையும் இல்லாதவன். அவனும் யாரிடமும் போய் எதையும் கேட்கும் அவசியமும் இல்லை. அப்படி என்றால், இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பது அர்த்தமற்றதாகும். நம்முடைய பெயைரை இறைவன் திருமுன் சொல்லி அவனைப் போற்றி, நம்முடைய விண்ணப்பங்களையும் அவனிடம் வைப்பதே அர்ச்சனையாகும். ஆகவே, அர்ச்சனை நம் பெயரைச் சொல்லியே செய்ய வேண்டும். இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கும் போது நமக்கு சரி என்று தோன்றுவதைக் கேட்கிறோம். நம் ஆசைகளைச் சொல்கிறோம். ஆனால், நிஜ உலகில், அதுவே நமக்கு வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து தந்துவிடும். ஆகவே, நமக்கு என்ன சரியாக வேண்டும் என்பது பெரும்பாலும் நமக்கே தெரிவதில்லை. நம்மைப் பற்றி நமக்குத் தெரிவதை விட முக்காலமும் முழுவதும் அறிந்த இறைவனுக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதும், நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும், நன்றாகவே தெரியும். ஆகவே, எனக்கு வேண்டியதை நீயே அறிவாய், அதை எனக்கு கொடுக்க விருப்பம் இருந்தால் அதைக் கொடுப்பா என்று இறைவனிடம் புத்திசாலிகள் வேண்டுவர். இதுவே #திருவாசகத்தில் வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ, வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்! வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன் தன் விருப்பு அன்றே! #விளக்கம் இறைவா, எனக்கு என்ன கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை நீயே அறிவாய். அப்படி நீ எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால், உன் விருப்பப்படியே அதை கொடுப்பா என்று கேட்பது மிகவும் சிறந்தது #திருச்சிற்றம்பலம் செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள் எத்தனை பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் 🙏ஓம் நமசிவாய 🙏ஐந்தெழுத்தின் மேன்மை 🙏திருமுறை.8 பதிகம் 26 அதிசயபத்து பாடல் 🙏 எண்ணி லேன்திரு நாம அஞ் செழுத்தும் என்ஏழைமை யதனாலே நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை அண்ணல் ஆண்டுதன் அடியரிற்கூட்டிய அதிசயங் கண்டாமே. இறைவனது திருநாமமாகிய ஐந்தெழுத்தை என் அறியாமையால் நினைக்கவில்லை அடியார்களோடு சேர்ந்திருக்கவில்லை நற்கருமங்களை விரும்பாமல் இம்மண்ணில் பிறந்து இறந்து மண்ணாவதற்கு இசைகின்ற அடியேனை, பெரியோனாகிய சிவபெருமான் ஆண்டருளித் தன் அடியாரோடு சேர்த்த அதிசயத்தைக் கண்டோம். திருச்சிற்றம்பலம்🙏 வாழ்க்கை பயணத்தில், சற்று திரும்பி, பார்க்கும்போது தான், புரிகின்றது தெளிவாக, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், நம்மை கொன்ற, நினைவுகள் எல்லாம், கானல்நீராய் கரைந்து, போகுமென்பதை.. பாவங்களை மனிதருக்குச் செய்து விட்டு... மன்னிப்பை மட்டும் கடவுளிடம் கேட்கும் அதிசயப் பிறவி நம் மனிதப் பிறவி தான்... பிறருக்காக நம்மை மாற்றிக்கொள்ள ..... வேண்டிய அவசியமில்லை... இருப்பினும் நமது இயல்புகளுக்கே ....... இடையூறு ஏற்படும் நிலையில்........ சிறிதளவு மாற்றிக்கொள்வது தவறில்லை....... 💚🌻💚🌻💚🌻💚🌻 வெளியே காட்டிய கோபம் #மன்னிப்புக்கு வழி தேடும்..... உள்ளே அடக்கிய கோபம் #பழிக்கு வழி தேடும்..... இல்லாதவர்களுக்குக் #கொடுக்க ஆசை இருக்கின்றவர்களுக்கு இன்னும் #எடுக்க ஆசை. #பணத்தைப் பார்த்துக் கொடு #உணவைப் பார்க்காமல் கொடு ஏனெனில் அடுத்தவனின் பசியைஉன்னால் #பார்க்கவோ #அறியவோ முடியாது. 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
🙏🏼ஓம் நமசிவாய - ஓற்நமதிவாண ஈசனின் அருள் ஆசியுபன் இந்த நாள் னிய நாளாத அமையட்டும் ஓற்நமதிவாண ஈசனின் அருள் ஆசியுபன் இந்த நாள் னிய நாளாத அமையட்டும் - ShareChat
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் மக்கள் எப்போதும் இறைவனால் அளிக்கப்பட்ட இரண்டு லாபங்களை மறந்து விடுகிறார்கள்.ஒன்று நேரம்; மற்றொன்று ஆரோக்கியம்.இந்த மறதியால் தான் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள். 🙏ஏழாம் திருமுறை🙏🙏🙏திருவெண்ணெய்நல்லூர்🙏 🙏பண் - இந்தளம் 🙏திருச்சிற்றம்பலம் 🙏இத்தலம் நடுநாட்டிலுள்ளது. 🙏சுவாமிபெயர் - தடுத்தாட்கொண்டவீசுவரர். தேவியார் - வேற்கண்மங்கையம்மை. 🙏 பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.🙏 🙏பாடல் விளக்கம்🙏 🙏பித்தனே, பிறையைக் கண்ணியாகச் சூடியவனே, பெருமை உடையவனே, பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய, 'அருட்டுறை' என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, 'உனக்கு அடியவன் அல்லேன்' என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!🙏 சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் 🙏 ஓம் நமசிவாய 🙏பிறவி என்னும் பிணி பிணி என்ற சொல்லுக்கு உரைநடையில் நோய் வியாதி என்ற பொருள் சொல்வோம் ஆனால் இலக்கியத்தில் உள்ள பிணி என்பதன் பொருள் வேறு. எப்படி? வியாதி நோய் போன்றவை மருந்து சாப்பிட்டால் தீரக்கூடியவை ஆனால் பிணி என்பது தீராதது மருந்து சாப்பிட்டால் அப்போதைக்கு தீரும் ஆனால் திரும்ப குறித்த காலத்தில் உடனே திரும்ப வரும் அது என்ன? ஒன்று பிறப்பு இன்னொன்று பசி. மணிமேகலை பசியை பிணிஎன்றேகூறுகிறது பசிப்பிணி தீர்க்கஅட்சயபாத்திரம்பெற்றாள் மணிமேகலை என்பது இலக்கியம்.பசியானது உணவு உண்டதும் போய்விடும் ஆனால் சிறிது கால இடைவெளியில் திரும்ப வந்துவிடும் அது போலவே பிறவியும் ஒருவகையில் பிணியே ஏனெனில்இப்போது இருப்போம் இறப்போம். மீண்டும் பிறப்போம் மீண்டும் இறப்போம் அதனால் தான் பெரியவர்கள் பிறவியை பிணி என்றனர் திரும்ப திரும்ப வரும் இந்த பிறவிப்பிணியை தீர்க்க ஐந்தெழுத்து மந்திரமும் திருநீறுமே மருந்தாகும் கூன்பாண்டியனின் வெப்புநோய் மட்டுமல்ல கூன் நிமிர்த்தியதும் இந்த அருமருந்தாம் திருநீறே .பல சிவாலயங்களில் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து என்று திருநீற்றுக்கோயில் வைத்துள்ளார்கள் பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார் என்று சம்பந்தர் 3ஆம் திருமுறையிலும் மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே 🙏8ஆம் திருமுறை நீத்தல்விண்ணப்பம் பாடல் 18 தாதாய் மூவே ழுலகுக்குந் தாயே நாயேன் தனையாண்ட பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே 🙏8ஆம் திருமுறை புணர்ச்சிப்பத்து பாடல் 9 என்று மாணிக்கவாசக சுவாமிகள் 8ஆம் திருமுறையிலும் பாடியுள்ளார்கள். ஆகவே தீராத இந்த பிணியை தீர்க்கும் அருமருந்தை நாம் வருமுன் எடுத்துக் கொண்டு காப்போம் போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் 🙏 ஓம் நமசிவாய 🙏பிறவி என்னும் பிணி பிணி என்ற சொல்லுக்கு உரைநடையில் நோய் வியாதி என்ற பொருள் சொல்வோம் ஆனால் இலக்கியத்தில் உள்ள பிணி என்பதன் பொருள் வேறு. எப்படி? வியாதி நோய் போன்றவை மருந்து சாப்பிட்டால் தீரக்கூடியவை ஆனால் பிணி என்பது தீராதது மருந்து சாப்பிட்டால் அப்போதைக்கு தீரும் ஆனால் திரும்ப குறித்த காலத்தில் உடனே திரும்ப வரும் அது என்ன? ஒன்று பிறப்பு இன்னொன்று பசி. மணிமேகலை பசியை பிணிஎன்றேகூறுகிறது பசிப்பிணி தீர்க்கஅட்சயபாத்திரம்பெற்றாள் மணிமேகலை என்பது இலக்கியம்.பசியானது உணவு உண்டதும் போய்விடும் ஆனால் சிறிது கால இடைவெளியில் திரும்ப வந்துவிடும் அது போலவே பிறவியும் ஒருவகையில் பிணியே ஏனெனில்இப்போது இருப்போம் இறப்போம். மீண்டும் பிறப்போம் மீண்டும் இறப்போம் அதனால் தான் பெரியவர்கள் பிறவியை பிணி என்றனர் திரும்ப திரும்ப வரும் இந்த பிறவிப்பிணியை தீர்க்க ஐந்தெழுத்து மந்திரமும் திருநீறுமே மருந்தாகும் கூன்பாண்டியனின் வெப்புநோய் மட்டுமல்ல கூன் நிமிர்த்தியதும் இந்த அருமருந்தாம் திருநீறே .பல சிவாலயங்களில் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து என்று திருநீற்றுக்கோயில் வைத்துள்ளார்கள் பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார் இறந்த காலத்தின், நினைவுகளை, சுமந்து கொண்டு, எதிர்காலத்தை நோக்கி, ஓட முயல்கையில், கால்கள் வலிப்பது, என்னவோ பாதையின், கடினத்தால் அல்ல, நீ சுமந்து கொண்டு, இருக்கும் பாரத்தினாலே. நம்பிக்கை எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் முளைக்கும் புல் கூட தன்னை ஆயுதமாக மாற்றும் 💪 பேசியது போதும் மௌனம் பழகு... விவாதித்தது போதும் விலகப் பழகு... பங்கேற்றது போதும் பார்க்கப் பழகு... பிறர்நலன் போதும் சுயநலம் பழகு... கொடுத்தது போதும் எடுக்கப் பழகு.... இங்கு யாரும் யாருக்காகவும் மாறப் போவதில்லை ஆதலால், மாற்றங்களை மற்றவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பதை விட்டுவிட்டு நாம் நம்மை மாற்றிக்கொள்வதே ஆக சிறந்தது... முடிவே தெரியாமல் சென்று கொண்டிருக்கும் உங்கள் பயணத்திற்கான வழி இறைவன் காட்டுவார். ‌உங்கள் #வலிகளும் #வேதனைகளும் காணாமல் போகும். எங்கு அதிகம் தோற்கிறீர்களோ அந்த இடத்தை விட்டு விடாதீர்கள். அங்கு தான் உங்கள் வெற்றிகள் மறைந்து இருக்கிறது. தினம் ஒரு பாடத்தை கற்றுத் தருகிறது நம் வாழ்க்கை என்னும் பாடசாலை. அதைப் புரிந்தவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள், #புரியாதவர்கள் #புதைந்தே #விடுகிறார்கள். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
🙏🏼ஓம் நமசிவாய - Vkog MACHI கேதார்நாதர் ७ கேதார்நாத் Vkog MACHI கேதார்நாதர் ७ கேதார்நாத் - ShareChat
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் சுடுகாட்டில் சிவன் ஏன்..? ¿ சிவன் பித்தனென்றும் சுடுகாட்டில் ஆடும் சடையன் என்றும் பலர் தானும் குழம்பி மற்றவரையும் குழப்பி மெய் உணராமல் பிதற்றுவர். அவர்களுக்கு மெய் உணர்த்தவே இந்த பதிவு! சுடுகாடு: உயிராகிய மெய், தான் தங்கிய கூடாகிய உடலை விட்டு பிரிந்த பின், அப்பயனற்ற கூட்டை நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு . சுடுகாட்டில் உயிரின் நிலை உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம். உயிரற்ற உடல் பிணம் ( சவம் ) 50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும் போது தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும்... (1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும் போது ஏற்படும் உணர்வு போல – 50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு அல்லவா?) தமக்கு என்றும் நிரந்தரம் என நினைத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டனர் . இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்று மெய்யை உயிர் உணர்ந்து பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார். இதை உணர்த்தவே அப்பர் பெருமான் திருஅங்கமாலை தேவாரத்தில் ‘உற்றார் ஆருளரோ – உயிர் கொண்டு போகும் பொழுது குற்றாலத் துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ...! மிக தெளிவாக கூறியுள்ளார். யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை என்று உணருங்கள். சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன் நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே ஈசன் திருவருளால் இப்பதிவு. ஓம் நமச்சிவாய ! 🌹🙏🌹 சிவசிவ. #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #திருப்பந்தனைநல்லூர். #ஆறாம் #திருமுறை #பதிகம் #பாடல் கடமன்னு களியானை யுரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல் செய்து மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார் மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார் நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார் படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. #பொழிப்புரை கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும் , உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான் , மத யானைத் தோலைப் போர்த்தவர் . எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர் . மான் தோலைத் தோளில் அணிந்து , நாகத்தைத் திருமேனியிற் பூண்டு , முடியிலும் பாம்பினைச் சூடி , நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓது கின்ற நாவினை உடையவர் . அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர் . #திருச்சிற்றம்பலம் சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் அதற்கு உண்டான தண்டனை கண்முன்னே தந்துவிட்டார் தெய்வம் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் சிவவாக்கியம் 🔱🔱🔱 பாடல் எண்: 415 சென்றுசென் றிடந்தொறும் சிறந்தசெம்பொன் னம்பலம் அன்றுமின்று நின்றதோ ரனாதியான தம்பலம் என்றுமென்று மிருப்பதோ ருறுதியான வம்பல மொன்றியொன்றி நின்றது ளொழிந்ததே சிவாயமே. -சிவவாக்கியர் விளக்கம்; ஆலயங்கள் இல்லாவிடினும் நாம் செல்லுமிடங்களில் எல்லாம் சிறந்த பொன்னம்பலமாக விளங்குவது கண்கள். அன்றும் இன்றும் எப்பொழுதும் இருக்கும் அநாதியான, உறுதியான ஆலயம். அதன் உள்ளே சென்று சோதியில் நினைவை ஒன்றித் தவம் செய்யவேண்டும். அச்சோதியில் ஒளிந்திருப்பது சிவாயமே. ஐந்தெழுத்தின் மேன்மை🙏 திருமுறை 4 பதிகம் 94 பாடல் 5 திருப்பாதிரிப்புலியூர் வைத்த பொருள் நமக்காம் என்று சொல்லி மனத்தடைத்துச் சித்தம் ஒருக்கிச் சிவாய நமவென்று இருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வார் அவர்பா திரிப்புலியூர் அத்த னருள்பெற லாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே. அறியாமையை உடைய மனமே !நமக்கு சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று சொல்லி மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லாது, திருப்பாதிரிப் புலியூரிலுள்ள தலைவனுடைய அருளைப் பெறுதல் இயலுமோ ? வார்த்தைகளால் தினமும் ஒருவரை காவு வாங்கும் உன் நாக்கிற்கு தெரியாது....... கத்தி வெட்டிய காயம் ஆறிவிடும்.....ஆனால் வார்த்தை வெட்டிய மனம் அமைதியாக தினமும் ரத்தம் சிந்தும்...... பாம்பு கொத்திய, முட்டைகளுக்காக, நீதிகேட்டு போன, குருவியின் மீது, இச்சமுகம் போட்டது, வழக்கு ஒன்று, கூடுகட்ட குச்சிகள், திருடிய குற்றத்திற்காக. தேவைக்கேற்ப தன்னை, மாற்றிக் கொள்ள, தெரியாத மனிதன்தான், இன்றளவிலும், துன்பப்பட்டு கொண்டு, இருக்கின்றான், உடலாலும் மனதாலும், நித்தமும் தன்வாழ்வில்.. மனிதனின் கோபமும் சரி கடலின் புயலும் சரி.... ஒரே மாதிரி தான் அவை அடங்கிய பிறகுதான்.... அடைந்த நஷ்டம் எவ்வளவு என்பது தெரியும்.... சந்தோசம் என்பது பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வது மட்டுமல்ல..... எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து வாழ்வதே..... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள் #ஓம் நமசிவாய
🙏🏼ஓம் நமசிவாய - குடும்பத்தின் சிவ ஆசியுடன் இனிய செவ்வாய் 3 காலை வணக்கம சிவபெருமானின் அருள் உங்கள் வாழ்வில் அமைதி ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை தரட்டும் ஓம் நமசிவாய குடும்பத்தின் சிவ ஆசியுடன் இனிய செவ்வாய் 3 காலை வணக்கம சிவபெருமானின் அருள் உங்கள் வாழ்வில் அமைதி ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியை தரட்டும் ஓம் நமசிவாய - ShareChat
அங்காளி பார்த்து கொள்ளவாள் பார்த்துக்கொண்டே உள்ளார் #சிவசிவ. #திருநாவுக்கரசு #சுவாமிகள் #தேவாரம். #திருப்பந்தனைநல்லூர். #ஆறாம் #திருமுறை #பதிகம் #பாடல் முற்றா மதிச்சடையார் மூவ ரானார் மூவுலகு மேத்தும் முதல்வ ரானார் கற்றார் பரவுங் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பேய் தோளி பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார் பான்மையா லூழி யுலக மானார் பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. #பொழிப்புரை பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர் . அவர் பிறை சூடிய சடையினர் . மூவுலகும் துதிக்கும் முதல்வர் . சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர் . பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர் . வெள்ளியநீறு அணிபவர் . தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர் . பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார் . #திருச்சிற்றம்பலம் சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் நீ பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி என் மீது அக்கறை கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி என்னை வெறுத்தாலும் சரி மறுத்தாலும் சரி எது எப்படியோ நீ என்றாலே நான் மகிழ்வேன் ! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் ஏழ் ஏழு தலைமுறை சாகப்தம் இல்லாமல் போகும் எல்லாம் இருக்கும் அனுப்பவிக்க வாரிசு இல்லாமல் போகும் அதற்கு உண்டான தண்டனை கண்முன்னே தந்துவிட்டார் தெய்வம் "கடந்த சனி, ஞாயிறு என்னிடம் ஆலோசனைக்கு வந்த நண்பர்களுடன் உரையாடியபோது, நான் சொன்ன வழிகாட்டுதல்கள் அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியதாகப் பகிர்ந்து கொண்டனர். 😊✨ ​நிச்சயமாக இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. உங்களின் நம்பிக்கைதான் என்னை இன்னும் கவனமாகச் செயல்படத் தூண்டுகிறது. எளிய முறையிலான இந்த வழிகாட்டுதல் பயணத்தில் என்னுடன் இணைந்த அனைவருக்கும் நன்றி! 🙏 விலகி நிற்கச் சொல்லி விட்டேன்...! ஆனால் விடைபெறுத்தான் முடியவில்லை...! நிழலாக கூட வர ஆசை இருந்தும் உனை தீண்ட முடியாமல் நிர்க்கதியாய் தள்ளி நிற்கிறேன்...! நீ எனக்காக காத்திருக்கும் ஒரு நொடி கூட யுகமாக காட்டுகிறது என் அனுபவம் ரொம்ப யோசிக்காதிங்க வாழ்வின் அற்புத தருணங்கள் பெரும்பாலும் திட்டமிடாமல் நடப்பவை.. ஆசைப்பத்து பாடல் எண் : 7 ************** பாரோர் விண்ணோர் பரவி யேத்தும் பரனே பரஞ்சோதீ வாராய் வாரா உலகந் தந்து வந்தாட் கொள்வானே பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் எனஏத்த ஆரா அமுதே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே பொழிப்புரை: **************** மண்ணுலகத்தாரும், விண்ணுலகத்தாரும் வழி பட்டுத் துதிக்கின்ற மேலானவனே! முத்தியுலகைத் தந்து வந்தாட் கொள்வோனே! உன் திருப்பெயர்கள் ஆயிரத்தையும் உச்சரித்து எம் பெருமானே என்று துதிக்க ஆசைப்பட்டேன். #உங்களை #நீங்களே ₹எப்படி #மதிப்பது: சில நேரங்களில் கொஞ்சம் #தொலைவில் இருங்கள். பெறுபவராக இருப்பதைவிட #கொடுப்பவராக இருங்கள். உங்களை அழைக்காத இடத்திற்கு செல்லாதீர்கள். மேலும், அழைக்கப்பட்டாலும் உங்கள் வரவேற்பை அதிகமாக #நீட்டிக்காதீர்கள். உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் #விரும்புகிறீர்களோ, அதே வழியில் மற்றவர்களை நடத்துங்கள் ஆனால் அவர்கள் உங்களுக்கு பணம் கடன் பட்டிருந்தால், இரண்டு முறை அழைப்பது போதும். அவர்கள் உங்களை #மதித்தால், அவர்களே திரும்ப அழைப்பார்கள். நீங்கள் செய்யும் வேலையில் #சிறந்தவராக இருங்கள் 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்
🙏🏼ஓம் நமசிவாய - வைத்தியநாத ஈசன் மருந்தால் தீராத நோயைபும் என் ஓரு சொல்லால் தீர்ப்பேன்! மனக்காயங்களுக்கு @_60[ மருந்தாவேன். கலங்காதே.. ஆரோக்கியம் உன என் பொறுப்பு! வைத்தியநாத ஈசன் மருந்தால் தீராத நோயைபும் என் ஓரு சொல்லால் தீர்ப்பேன்! மனக்காயங்களுக்கு @_60[ மருந்தாவேன். கலங்காதே.. ஆரோக்கியம் உன என் பொறுப்பு! - ShareChat
*இன்று*(22-6-2026) *ஆனித்திருமஞ்சனம்* *தொடர்பான அரிய* *ஆன்மீகத்தகவல்கள்* சிவ பெருமானுக்கு ஆனித் திருமஞ்சனம் நடைபெறுவது ஏன் தெரியுமா? சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலம். இந்தக் காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறான். அடுத்து வருவது தட்சிணாயன காலம். அப்போது தன் பாதையை சூரியன் மாற்றிக்கொள்கிறான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலம் ஆரம்பம். இதையே "*ஆனி இலை* *அசங்க*' என்பார்கள். கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து இதமான நாட்கள் தொடங்கும் மாதம் ஆனி. தேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம்; காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை; மாலைப்பொழுது ஆனி; இரவு ஆவணி; அர்த்த சாமம் புரட்டாசி என்பர். வைகறை பூஜை மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும்; காலைச்சந்தி பூஜை மாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; உச்சிக்கால பூஜை சித்திரை திருவோணத்திலும்; மாலை (சாயரட்சை) பூஜை ஆனி மாத உத்திர நட்சத்திரத்திலும்; இரண்டாம் கால பூஜை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியிலும்; அர்த்தஜாம பூஜை புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியிலும் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனத்தையொட்டி ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சில ஆலயங்களில் இந்த ஆனி மாத திருமஞ்சனத்தை விழாவாகவும் கொண்டாடுகிறார்கள். இது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. "அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்! முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்! சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்! ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜே!” கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடுகிறார் நடராஜன். தில்லையில் ஆனி உத்திரத்தன்று சூரிய உதய வேளையில், யானைகள் இழுக்கும் தேர்போல அமைக்கப்பட்டுள்ள ராஜசபையின் முன்மண்டபத்தில், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் அன்னை சிவகாமசுந்தரிக்கும் வெகுசிறப்பாக ஆனித் திருமஞ்சனம் நடைபெறும். பின்னர், சர்வ அலங்காரத்துடன் ஸ்ரீநடராஜப் பெருமான் ராஜசபையில் அருள்பாலிக்கிறார். இதேபோல் திருவாரூரில் அருள்புரியும் ஸ்ரீதியாகராஜருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனி மாதத்தில் ஒரே நாளில் சிதம்பரமும் திருவாரூரும் திருவிழாக் கோலம் காணும். அந்நாளில் நடராஜப் பெருமானுக்கும் தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இருவரும் அன்று தேரில் பவனி வருவார்கள். திருவீதி உலா முடிந்ததும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். ஆனித் திருமஞ்சனத்தின்போது அளிக்க வேண்டிய அபிஷேக ஆராதனைப் பொருட்களும்,அதன் பலனகளும் ஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. கங்கை தீர்த்தம் அளித்தால் நம் பாவங்கள் நசியும்; எண்ணெய் அளித்தால் சுகம் கிட்டும்; மாப்பொடி அளித்தல் கடனைப் போக்கும்; நெல்லி முள்ளி பொடி அளித்தால் நோய் நீங்கும்; பஞ்சகவ்யம் அளித்தால் மனதில் தூய்மை உண்டாகும்; இளநீர் அளித்தால் சுகமான வாழ்வு கிட்டும்; தேன் அளித்தால் மகிழ்ச்சி உண்டாகும்; பால் அளித்தால் ஆயுள் வளரும்; தயிர் அளித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; நெய் அளித்தால் மோட்சம் கிடைக்கும்; கரும்புச்சாறு அளித்தால் உடல்பிணியைப் போக்கும்; சந்தனம் அளித்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்; பன்னீர் அளித்தால் பணத் தட்டுப்பாடு இருக்காது; பஞ்சாமிர்தம் தயாரிக்க பழங்கள் அளித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன. ஆனித்திருமஞ்சன சிவ வழிபாட்டின் பலன்: பொதுவாக சிவபெருமானை வழிபட்டால் நமக்கு நல்லறிவு கிட்டும். இதனால் எது நல்லது- எது தவறு என்பதைப் பகுத்தறியலாம். உடலில் பதட்டம் இருக்காது. அமைதியான வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் சிவதரிசனம் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அதுவும் ஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்கிறார்கள். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙏ஆன்மீகம் #தெய்வீக சிந்தனைகள்
🙏🏼ஓம் நமசிவாய - ஆனிதிருமஞ்சனம் அரியதகவல்கள் ஆனிதிருமஞ்சனம் அரியதகவல்கள் - ShareChat
இன்று(22-6-2026) ஆனித்திருமஞ்சனம் சிறப்பு பதிவு! மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும். ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும். உதயத்திற்கு முன்பே. தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். நடராஜருக்கு ஆனி உத்திர நாளில் அபிஷேகம் நடைபெற்றஆனி உத்திர திருமஞ்சனம் "தோடுடைய செவி என் விடையேறியோர் தூவெண்மதி சூடி"என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கும் காணொளிக்காட்சி உங்களுக்காக கீழே!👇🏻🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #🙏🪔 இன்று ஆனி திருமஞ்சனம் 🪔🙏 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
01:59