ரவிசங்கர் ராஜா, ஆரணி
ShareChat
click to see wallet page
@ravisankarraja
ravisankarraja
ரவிசங்கர் ராஜா, ஆரணி
@ravisankarraja
நான் நெசவாளரின் மகன் (செங்குந்த/கைக்கோளர் வம்சம்)
இன்று(1-5-26) சித்ரா பௌர்ணமி நாளில் முதல் செலவாக, காசு கொடுத்து இந்த 1 பொருளை வாங்கி விட்டால் போதும். உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம், கடன் சுமை இருக்கவே இருக்காது. எல்லோருக்குமே வாழ்க்கையில் கடன் இல்லாமல், பணக்கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், ஏனோ தெரியவில்லை இந்த இரண்டு பிரச்சனைகளும் நம்மை விடாமல் துரத்துகின்றது. கஷ்டத்தை கொடுக்கக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, வீட்டில் ஐஸ்வரியம் பெருக, லட்சுமி கடாட்சம் பெருக, இன்று (1-05-2026) சித்ரா பௌர்ணமி தினத்தில் நாம் எந்தெந்த பொருட்களை வாங்க வேண்டும்,அந்த பொருட்களை எல்லாம் எதற்காக வாங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பின்பற்றி பலன் பெறலாம். பட்டியலில் நிறைய பொருள் இருக்கிறது என்று பயந்து விடாதீர்கள். உங்களால் இதில் எந்த பொருளை வாங்க முடியுமோ, அந்த பொருளை மட்டும் வாங்குங்கள். அதுவும் காலையில் எழுந்து கடைக்கு போய் முதல் செலவாக இந்த செலவை செய்து அந்த மங்களகரமான பொருளை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். சரி, அது எந்தெந்த பொருள் என்று பார்த்து விடுவோம். 1)வெள்ளை நிற டைமண்ட் கற்கண்டு, 2)பச்சரிசி, 3)மல்லிகைப்பூ, 4)கல் உப்பு, 5)மஞ்சள், 6)குங்குமம், 6 பொருட்கள் இதில் சொல்லப்பட்டுள்ளது. இன்று (1-5-26)சித்ரா பௌர்ணமி நாளில் சுக்கிரனுக்கு உகந்த மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளை நிற கல்கண்டு வாங்குவது சிறப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம். சித்ரா பௌர்ணமி தினத்தில் கல் உப்பை வாங்கினால் வீட்டில் கடன் சுமை கட்டாயம் குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மல்லிகைப்பூ மகாலட்சுமியின் அம்சம். இந்த வாசத்திற்கு மயங்காத நல்ல சக்தியே கிடையாது. பச்சரிசி சந்திர பகவானுக்கு உரிய பொருள். பிறகு வழக்கம் போல எந்த ஒரு நல்ல நாளாக இருந்தாலும் மஞ்சள் குங்குமம் வாங்குவது மங்களத்தை உண்டாக்கும். இந்த ஆறு பொருட்களை வாங்க முடிந்தவர்கள் வாங்கலாம். முடியாது என்பவர்கள் உங்களுக்கு இந்த நாளில் எந்த பொருள் தேவையோ இதில் ஏதாவது ஒன்றையாவது நிச்சயம் நீங்கள் வாங்க வேண்டும். காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வாங்கி வந்த இந்த பொருட்களை எல்லாம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளவும். காலையில் பூஜை செய்த இந்த பொருட்களை எல்லாம் எடுத்து மாலை சித்ரா பௌர்ணமி பூஜைக்காக பிரசாதம் செய்வீர்கள் அல்லவா, அதில் இந்த பொருட்களை எல்லாம் சேர்க்கலாம். தவறே கிடையாது. எந்த பொருளையும் வீணாக்காதீங்க. பூஜை முடித்த பின்பு எடுத்து சமையல் அறையில் வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். மல்லிகை பூக்களால் உங்களுடைய பூஜை அறையை அலங்காரம் செய்யுங்கள். மகாலட்சுமி பாதத்தில் சிறிதளவு மல்லிகை பூவை உதிரியாக அர்ச்சனை செய்து, அந்த பூக்களை எடுத்து கொண்டு போய் மேலே நிலா வெளிச்சத்தில் சிறிது நேரம் வைத்திருந்து, அந்த மல்லிகை பூவை பத்திரமாகக் கொண்டு வந்து நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் பண பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும். அந்த அளவுக்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் சித்ரா பௌர்ணமி அன்று வானத்தில் உதிக்கும் நிலவில் இருக்கிறது. இந்த சித்ரா பௌர்ணமி நன்னாளில் உங்களால் முடிந்தால் சித்ரா அன்னம் செய்து சந்திரனுக்கு வைத்து வழிபாடு செய்து விட்டு, சித்திரகுப்தன் வழிபாட்டை முடித்துவிட்டு நீங்கள் செய்த அந்த சித்ரா அன்னத்தை கொண்டு போய் பசியோடு இருக்கும் நாலு பேருக்கு அன்னதானம் செய்யலாம். சித்ரா பௌர்ணமி என்றாலே வீட்டில் பல வகையாக சாதங்கள் செய்திருப்பீர்கள். அது நிச்சயம் கொஞ்சமாக இருக்காது. நிறைய தான் இருக்கும். அதையெல்லாம் கொண்டு போய் ஏழையாக இருக்கக்கூடிய இரண்டு பேருக்கு உங்கள் கையால் தானம் கொடுத்தால் உங்களுடைய குடும்பம் சந்தோஷமாக வாழ்வாங்கு வாழும். 🚩🕉🪷🙏🏼 #ஆன்மீகம் #✨பௌர்ணமி🌝 #சித்ரா பௌர்ணமி மகிமை #சித்ரா பௌர்ணமி #பௌர்ணமி
ஆன்மீகம் - 1-5-2026இன்று சித்ரா பௌர்ணமி CHITRA POURNAMI| வழிபாடு 1-5-2026இன்று சித்ரா பௌர்ணமி CHITRA POURNAMI| வழிபாடு - ShareChat
சித்ரா பௌர்ணமி ஸ்ரீசித்ரகுப்தர் =================================== பதிவு=2 ======== சரிதம் மூன்று ============== சிவபெருமானை நோக்கி , 11,000 ஆண்டுகள் தவம் ============================================================= யமலோகத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய , பிரம்மன் தன் மனதுள் ரகசியமாக உருவகப்படுத்திய உருவத்தை இருத்தி , 11,000 ஆண்டுகள் ஈசனை நோக்கித் தவமியற்றினார் . முடிவில் தன் மனதில் இருந்தவரே தன் முன் கையில் எழுத்தாணி ஓலைச்சுவடியுடன் , இடையில் தொங்கும் உடைவாளுடன் தெய்விகக் களை சொட்டதோன்ற தவத்தின் பலனை உணர்ந்தவராக அகிமகிழ்ந்தார் ரகசியமாக என் உடம்பிலிருந்து ( காயம் ) தோன்றியதால் , சித்ரகுப்தர் என அழைக்கப்படுவாய் உனது சந்ததியினர் காயஸ்தா என அறியப்படுவர் என்று அருளினார் பிரம்மன் தமிழகத்தில் இவர்கள் கருணீகர் என அழைக்கப்படுகிறார்கள் . நான்கு ====== தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கவே ஈசனிடம் எமதர்மன் வேண்டிக்கொள்ளும் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார். இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்குத்தான் அச்செயலை ஈடேறும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல் ஏற்பட்டது. அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீளாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார்.அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாத்துவார்கள். ஸ்ரீகாஞ்சியில் சிவபெருமானை நோக்கி தவம் செய்த சித்ரகுப்தர் ================================================================= சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும் எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர். இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத் தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார். மேலும், மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன், சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து க்ஷத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வ பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகியோர் தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று திருமணம் செய்வித்தார். காஞ்சீபுரம் பஸ் நிலையத்துக்கு மேற்கில் உள்ள நெல்லுக்காரன் தெரு, இரட்டை மண்டபத்திற்கு வடக்கில் சித்ரகுப்தர் கோவில் உள்ளது. சூரிய பகவானுக்கும், நிலா தேவிக்கும் தோன்றியவர் சித்ர குப்தர். சென்னி சோழர் என்ற மன்னரின் அமைச்சர் திருகணக்காரயன் அவர்களால் அமைக்கப்பட்டது இத்திருக்கோவில். சித்திர புத்திர நயினார் நோன்புக் கதை: ======================================== “நயினார் நோன்பு தமிழகத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும், ஆற்றுப்பாசனம் உள்ள இடங்களில்தான் தவறாமல் கடைபிடிக்கப்படுகிறது. பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்டமாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். முன்பு சித்திரை முழு நிலவு நாளில் இரவு முழுக்க சித்திர புத்திர நாயனார் கதையைப் படித்துவிட்டு, மறுநாள் காலை உணவில் அவல், அகத்திக்கீரை, எள் போன்றவை உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம். ஒரு புராணக் கதை ============================================ பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந் ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்களில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள். தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவாகக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க்கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய் தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள். உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்களுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வாறே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள். அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்ததால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி. ஸ்ரீகேதுவின் அதிதேவதை ================= நவக்கிரகங்களில் மோக்ஷகாரகன்,ஞானகாரகனாகிய கேதுவின் அதிதேவதை சித்ரகுப்தர். இந்த வருடம் சித்திரா பவுர்ணமி. அன்று சித்திரகுப்தரின் முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால்பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம். சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி. சித்ரா பவுர்ணமியன்று தானங்கள் பல செய்யவேண்டும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. ரவிசங்கர் ராஜா, ஆரணி🚩🕉🪷🙏🏼 #ஆன்மீகம் #✨பௌர்ணமி🌝 #சித்ரா பௌர்ணமி மகிமை #சித்ரா பௌர்ணமி #பௌர்ணமி
ஆன்மீகம் - சித்திரா பௌர்ணமி சித்திரா பௌர்ணமி - ShareChat
🌕 ஆயுளை அதிகரிக்கும் சித்ரகுப்தன் வழிபாடு – 🍂சித்ரா பௌர்ணமியின் தெய்வீக ரகசியம் 🍂சித்திரை மாதம்… நிலவு முழுமையாக பிரகாசிக்கும் அந்த பௌர்ணமி இரவு… மனித வாழ்வின் மறைமுக உண்மைகளை நினைவூட்டும் ஒரு அதிசய நாள் — சித்ரா பௌர்ணமி. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு, சாதாரண பூஜை அல்ல. 👉 அது நம் வாழ்க்கையின் பாவ–புண்ணிய கணக்கை சீர்செய்யும் ஒரு ஆன்மிக வாய்ப்பு. 🔱 சித்ரகுப்தன் – மறைந்த கணக்கின் அதிபதி எமதர்மனின் துணையாக, உலகில் உள்ள ஒவ்வொரு உயிரின் செய்கைகளையும் பதிவு செய்வவர் — சித்ரகுப்தன் அவர் சாதாரண தெய்வம் அல்ல… 👉 மனித மனதில் மறைந்து இருக்கும் எண்ணங்களையும் கூட கணக்கிடும் சக்தி உடையவர். 🌺 சித்ரகுப்தன் அவதாரம் – கயிலாயத்தில் நடந்த அதிசயம் ஒரு நாள் கயிலாயத்தில், பார்வதி தேவி பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையை ஓவியமாக வரைகிறாள். அந்த ஓவியம் உயிரோடு இருப்பது போல பிரகாசித்தது. அந்த சமயம் அங்கு வந்த சிவபெருமான், அந்த ஓவியத்தை பார்த்து மகிழ்ந்தார். அவருக்கு உடனே ஒரு நினைவு வந்தது… 👉 உலக உயிர்களின் ஆயுள் முடிவை நிர்ணயித்து, 👉 அவர்களின் கர்மத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்கும் எமதர்மன் அவர் மிகுந்த வேலைப்பளுவால், “எனக்கு ஒரு உதவியாளர் வேண்டும்” என்று சிவனை வேண்டியிருந்தார். அந்த வேண்டுதலை நிறைவேற்றும் தருணம் அது. சிவபெருமான், பார்வதி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்தார்… தன் பிராணவாயுவை அதில் ஊதினார்… அடுத்த நொடியில் — 👉 ஓவியம் உயிர் பெற்றது! சிவசக்தியின் அம்சமாக உயிர்பெற்ற அந்த தெய்வீக உருவம் — 👉 “சித்ரகுப்தன்” எனப் பெயர்பெற்றது 📜 பெயரின் அர்த்தம் “சித்” → மனம் “குப்த” → மறைவு 👉 மனதில் மறைந்திருக்கும் எண்ணங்களையும் அறிந்து, 👉 பாவ–புண்ணிய கணக்குகளை பதிவு செய்பவர் அதனால் தான்: 👉 அவர் கையில் ஏடு மற்றும் எழுத்தாணியுடன் பிறந்தவர் என கூறப்படுகிறது 🌕 சித்ரா பௌர்ணமியின் முக்கியத்துவம் இந்த நாள் ஏன் முக்கியம்? சூரியன், சந்திரன் இரண்டும் சக்தி பெறும் நாள் கர்ம கணக்குகள் நினைவூட்டப்படும் நாள் பாவ நிவர்த்திக்கான அரிய சந்தர்ப்பம் இந்த நாளில்: 👉 மலை வலம் வருதல் 👉 முருகப்பெருமானை வழிபடுதல் 👉 தீர்த்த ஸ்நானம் செய்வது இவை அனைத்தும் வாழ்க்கையில் வளம் தரும் 🪔 வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடு சித்ரா பௌர்ணமி அன்று: வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும் சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைக்க வேண்டும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும் சந்தனம், குங்குமம் அணிய வேண்டும் 🍚 நைவேத்தியம்: பச்சரிசி + வெல்லம் வேப்பம்பூ பச்சடி பலவகை சாதங்கள் 👉 தேங்காய் சாதம் 👉 புளியோதரை 👉 எலுமிச்சை சாதம் 👉 தயிர் சாதம் 👉 சர்க்கரை பொங்கல் 👉 வெண்பொங்கல் 🕯️ தீபாராதனை ஐந்து முக குத்துவிளக்கு ஏற்றி: 👉 “என் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கட்டும்” 👉 “நல்ல வழியில் வாழ வையுங்கள்” என்று மனமாறி வேண்ட வேண்டும் 🌿 விரத முறைகள் முழு விரதம் மேற்கொள்வது சிறப்பு இரவு நிலவு தரிசனம் செய்த பின் உணவருந்த வேண்டும் 👉 இது மன கட்டுப்பாட்டையும், பக்தியையும் வளர்க்கும் 🏛️ சித்ரகுப்தன் தரிசன தலங்கள் சித்ரகுப்தனுக்கு தனிக் கோவில் உள்ள முக்கிய தலம்: 👉 காஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோவில் மேலும்: 👉 அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவில் இந்த தலங்களில் சித்ரா பௌர்ணமி அன்று தரிசனம் செய்தால்: 👉 பாவ நிவர்த்தி 👉 ஆயுள் விருத்தி 👉 மன அமைதி 🤲 தானத்தின் முக்கியத்துவம் நைவேத்தியத்தை: 👉 பசித்தோருக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் 👉 இதுவே உண்மையான புண்ணியம் 🕉️ வாழ்க்கை மாற்றும் உண்மை சித்ரகுப்தன் வழிபாடு செய்வது மட்டும் போதாது… 👉 “இனி பாவம் செய்ய மாட்டேன்” என்ற உறுதி 👉 “நல்ல செயல்கள் செய்வேன்” என்ற முடிவு இவை தான் உண்மையான வழிபாடு ரவிசங்கர் ராஜா, ஆரணி 🚩🕉🪷🙏🏼 🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅 #✨பௌர்ணமி🌝 #சித்ரா பௌர்ணமி மகிமை #பௌர்ணமி #ஆன்மீகம் #சித்ரா பௌர்ணமி
✨பௌர்ணமி🌝 - சித்ரா பௌர்ணமி ரகசியம் சித்ரகுப்தன் வழிபாடு ஆயுவை அதிகரிக்கும் உண்மை! தெரிந்துகொள்ளுங்கள் சித்ரா பௌர்ணமி ரகசியம் சித்ரகுப்தன் வழிபாடு ஆயுவை அதிகரிக்கும் உண்மை! தெரிந்துகொள்ளுங்கள் - ShareChat
🌕 சித்ரா பௌர்ணமி... (01-05-2026) 🌺 சித்ரகுப்தன் !! ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள்..!! சூரியன் உச்சம் பெறும் மாதமாக சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் சந்திரன் முழு மதியாக பலம் பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் மாதம் என்பதால் சித்திரை மாத பௌர்ணமி *சித்ரா பௌர்ணமி* என புகழப்படுகிறது. சித்ரகுப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்ரகுப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது மக்களின் நம்பிக்கை. சித்ரகுப்தரின் பிறப்பு : பார்வதி அம்பாள் சித்ரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்ரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா என பெயர் பெற்றார் என்று சிலர் கூறுகின்றனர். காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும், அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர். சித்ரகுப்தன் கதைச் சுருக்கம் : தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருப்பதாக ஈசனிடம் எமதர்மன் வேண்டிக்கொண்டார். அதன் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார். இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்கு தெரிவித்தார் பிரம்மதேவர். அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிரில் பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்ர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும், எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர். இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு, பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். சித்ரகுப்தருக்கான கோயில்கள் : தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சித்ரகுப்தர், எமன், பிரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்ர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கைகள் : உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்ர புத்திர நாயனார்தான் என்பது நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகள் சித்ரகுப்தனால் எழுதப்படுகிறது. எனவே, சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். கதை சொல்வதன் முக்கிய நோக்கம் : மக்கள் பாவச்செயல் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச்செயலில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்கவே. எனவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்பலன்களை பெறுவோமாக. ரவிசங்கர் ராஜா, ஆரணி 🚩🕉🪷🙏🏼 #சித்ரா பௌர்ணமி #சித்ரா பௌர்ணமி மகிமை #✨பௌர்ணமி🌝 #பௌர்ணமி #ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி - ShareChat
ஓம் நமோ நாராயணா 🙏🏽 #🙏பெருமாள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏🏼பெருமாள் பக்தி பாடல்கள் #திருச்சி ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில் #🙏 சனி பக்தி ஸ்பெஷல் ✨
🙏பெருமாள் - ShareChat
00:40
ஓம் சக்தி ஆதிபராசக்தி 🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #அம்மன் பக்தி பாடல்கள் #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟
🙏அம்மன் துணை🔱 - ShareChat
00:30
ஓம் சக்தி துணை 🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #அம்மன் பக்தி பாடல்கள் #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟
🙏அம்மன் துணை🔱 - ShareChat
00:34
🚩🕉🪷🙏🏼 #🕉️கணபதி போற்றி #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🎼விநாயகர் பாடல்கள் #🙏🐘விநாயகர் பக்தி பாடல்கள் 🙏 #🙏 சங்கடஹர சதுர்த்தி🙏
🕉️கணபதி போற்றி - ShareChat
00:33
இனிய உகாதி நல்வாழ்த்துகள்! 🙏" #🙏பெருமாள் #உகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள் 🌹❤💐 #யுகாதி திருநாள் #யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள் #📸பக்தி படம்
🙏பெருமாள் - RR Edits] மங்கலங்கஸ் மலரட்டும்x RR Edits மககலலைகஸ மறையட்டுமீ ھھلس265 நல்வாழ்த்துகள் RR Edits] மங்கலங்கஸ் மலரட்டும்x RR Edits மககலலைகஸ மறையட்டுமீ ھھلس265 நல்வாழ்த்துகள் - ShareChat
பிள்ளையார் துணை 🚩🕉🪷🙏🏼 #🙏🐘விநாயகர் பக்தி பாடல்கள் 🙏 #🎼விநாயகர் பாடல்கள் #🕉️கணபதி போற்றி #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #🙏 சங்கடஹர சதுர்த்தி🙏
🙏🐘விநாயகர் பக்தி பாடல்கள் 🙏 - ShareChat
00:30