#🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! #அரசியல் பழகு #கற்றுது அரசியல்
#🌙இரவு வணக்கம் #🚨கற்றது அரசியல் ✌️ #கற்றுது அரசியல் #renga-vamba! #ரெங்கா!
பெங்களூருவில் வெள்ளி விழா கொண்டாடிய கமலின் 8 திரைப்படங்கள்
சாதனைகள் பலவிதம். அதில் ஒன்று வெளி மாநிலங்களில் வெற்றிக்கொடி நாட்டுவது. சிவாஜி, கமல், ரஜினி என பலரது படங்கள் வெளிமாநிலங்களிலும் வெள்ளி விழா கொண்டாடியுள்ளன. அதில் கமலின் சாதனை தனித்துவமானது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கமல் நடித்த எட்டு திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியுள்ளன. அதாவது பெங்களூருவில் 25 வாரங்கள் கமலின் எட்டு திரைப்படங்கள் ஓடி சாதனை படைத்துள்ளன.
1. மரோசரித்திரா (1978 தெலுங்கு) பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், சரிகா, மாதவி நடித்த மரோசரித்ரா திரைப்படம் 1978 இல் வெளியானது. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தமிழ்நாடு கர்நாடகா இரு மாநிலங்களிலும் தெலுங்கிலே வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. சென்னையில் 500 தினங்களுக்கு மேல் சபையர் திரையரங்கில் ஓடிய திரைப்படம், பெங்களூரு கல்பனா திரையரங்கில் 693 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த சாதனையை இதுவரை எந்த தமிழ் நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.
2. சிகப்பு ரோஜாக்கள் (1978 தமிழ்) அதே 1978 தமிழில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாக்யராஜ் கதை, திரைக்கதையில் பாரதிராஜா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் கமலுடன் ஸ்ரீதேவி நடித்திருந்தார். வித்தியாசமான கதையாம்சத்துடன் வந்த இந்தத் திரைப்படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடி வெற்றியை பதிவு செய்தது.
3. சனம் தேரி கசம் (1982 இந்தி) 1982ல் கமல் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரைப்படம் சனம் தேதி கசம். நரேந்திர பேடி இயக்கத்தில் கமலுடன் ரீனாராய் நடித்திருந்தார். ஆர் டி பர்மன் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இந்தப் படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது.
4. சாகர சங்கமம் (1983 தெலுங்கு) கமல் நடிப்புக்கு உதாரணமாக திகழும் படங்களில் ஒன்று சலங்கை ஒலி. கே. விஸ்வநாத் தெலுங்கில் சாகர சங்கமும் என்ற பெயரில் எடுத்தத் திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றம் சலங்கை ஒலி. 1983இல் கமல், ஜெயப்ரதா நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளியான சாகர சங்கமம் திரைப்படம் கர்நாடகா பொங்களூருவில் தெலுங்கில் வெளியாகி 175 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது
5. சுவாதி முத்யம் (1986 தெலுங்கு) கே விஸ்வநாத் இயக்கத்தில் கமல் ராதிகா நடிப்பில் 1986இல் சுவாதி முத்யம் திரைப்படம் தெலுங்கில் வெளியானது. இந்தத் திரைப்படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியிடப்பட்டது. சுவாதி முத்யம் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தெலுங்கில் பெங்களூருவில் வெளியாகி 175 தினங்களை கடந்து ஓடி வெள்ளி விழா கண்டது.
6. நாயகன் (1987 தமிழ்) கமலின் பெஞ்ச் மார்க் திரைப்படமான நாயகன் 1987இல் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சரண்யா, ஜனகராஜ், நிழல்கள் ரவி பிரதான வேடங்களில் நடித்த இந்தத் திரைப்படம் தமிழிலேயே கர்நாடகாவில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெங்களூருவில் இந்தத் திரைப்படம் 175 தினங்களைக் கடந்து சாதனை படைத்தது.
7. புஷ்பக விமானம் (1987 தெலுங்கு) 1987 சசிங்கீதம் சீனிவாச ராவ் கன்னடத்தில் புஷ்பக விமான திரைப்படத்தை இயக்கினார். கமல் அமலா நடித்த இந்தத் திரைப்படம் வசனங்கள் இல்லாமல் உருவானது. மௌன பட காலத்திற்குப் பிறகு வசனமே இல்லாமல் உருவான இந்தியாவின் முதல் திரைப்படமாக அது அமைந்தது. நடிப்புக்கு சவாலாக அமைந்த இந்தத் திரைப்படம் கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா கேரளா தமிழகம் வடமாநிலங்கள் என இந்தியா முழுக்க வெளியானது. கர்நாடகா பெங்களூருவில் இந்த் திரைப்படம் 175 தினங்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.
8. அபூர்வ சகோதரர்கள் (1989 தமிழ்) கமலின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமான அபூர்வ சகோதரர்கள் சந்தான பாரதி இயக்கத்தில் கிரேசி மோகன் வசனத்தில் 1989 வெளியானது. கமல் இதில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதில் குள்ள அப்புவாக நடித்த வேடம் இந்திய அளவில் பேசப்பட்டது. இந்தத் திரைப்படம் பெங்களூருவில் 175 தினங்களை கடந்து ஓடியது. ஒரு நடிகரின் படம் பிற மாநிலத்தில் வெள்ளி விழா காண்பதே அரிது. கமலின் எட்டு திரைப்படங்கள் கர்நாடகாவின் பெங்களூருவில் வெள்ளி விழா கண்டுள்ளன. இது வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லாத சிறப்பாகும். #மதிய வணக்கம் #கமல்ஹாசன் ஹிட்ஸ் #கமல்ஹாசன் ஹிட்ஸ்🎼 #ரெங்கா! #renga-vamba!
.
*உங்க கனவ CM கிட்ட சொல்லுங்க* 👇🏼💭
#🚨கற்றது அரசியல் ✌️ #அரசியல் பழகு #ரெங்கா! #renga-vamba! #📝தகவல் பலகை
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் பற்றி இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழக ஊடகள் என்னதான் சொல்லிகொண்டிருந்தாலும் உலக ஊடகங்கள் சொல்வதும் உண்மையில் நடந்ததும் இதுதான்
இந்தியாவினை சில காரணங்களுக்காக டிரம்பர் மிரட்டி பார்த்தாலும் இந்தியா அசரவில்லை, கடந்த ஆகஸ்டுமாதம் 50% வரி என இந்தியாவுக்கு விதித்த அமெரிக்கா அதன் பதில்வினை அல்லது இந்த கெடுபிடியால் இந்தியாவின் நகர்வு எப்படி இருக்கும் என சோதித்தது அல்லது இந்தியா இதற்கு அஞ்சி தன்னிடம் வரும் என எதிர்பார்த்தது
இந்தியா வளரும் மிகபெரிய பொருளாதார நாடு, இதனால் பெரும் சவாலை எடுக்கமாட்டார்கள் சீனாவோடு அவர்களால் நெருங்கமுடியாது அதனால் தான் ஒன்றே கதி என வருவார்கள் என்பதெல்லாம் அமெரிக்க கணக்காக இருந்தது
ஆனால் மோடியின் இந்தியா வெற்றிகரமாக யாரும் எதிர்பாரா விதமாக இறங்கி அடித்தது, சீனாவோடு நல்லுறவு என கைகுலுக்கி கொண்டது அதனால் எல்லை பதற்றத்தை குறைத்தது, அமெரிக்க சந்தைக்கு மாற்றாக உலகெல்லாம் மாற்று வாய்ப்பினை தேடியது
தொடர்ந்து ரஷ்ய எண்ணெயினை வாங்கி தன் எரிபொருள் சந்தையினை நிலை நிறுத்தியது, அமெரிக்க வரி பாதிக்காத வண்ணாம் தொடர்ந்து பயணித்த இந்தியா ஒரு கட்டத்தில் ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தகம் எனும் நிலைக்கு செல்ல அமெரிக்கா அதிர்ந்தது
உலகின் சக்திவாய்ந்த பொருளாதார கேந்திரம் ஐரோப்பிய யூனியன் அதுவும் இந்தியாவும் ஒன்று சேர்வது தனக்கு மிகபெரிய ஆபத்து அதாவது யூரோவும் ரூபாயும் சேர்ந்து இயங்கினால் டாலர் சரியும் இன்னும் பல வாய்ப்பு இழக்கபடும் என்பதை உணர்ந்த அமெரிக்கா ஓடி வந்து இந்தியாவின் கையினை பிடித்து குலுக்கி கொண்டது
பெரிய மனிதன் அடிபட்டால் வெளிசொல்லமாட்டான் என்பது போல் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாகவே முடிந்துள்ளது, அமெரிக்காவின் எந்த நிர்பந்தத்துகும் இந்தியா பணியவில்லை, இறங்கி வந்தது அமெரிக்காதான்
ரஷ்ய எண்ணெயினை இந்தியா இனி வாங்காது என டிரம்பர் சொல்லிகொண்டிருக்கலாம் இந்தியா அதுபற்றி வாயே திறக்கவில்லை அதன் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடரத்தான் செய்யும்
ரஷ்யாவின் எண்ணெய் வளம் அதிகம் ஆனால் உக்ரைன்போர் இன்னும் அதன் எண்ணெய் உற்பத்தி மையங்கள் மேலான தாக்குதல், அதன் எண்ணெய் கப்பல்கள் மேலான அடி என ரஷ்ய ஏற்றுமதி குறைக்கபட்டிருக்கின்றது இது அவர்கள் உள்நாட்டு விவகாரம்
இப்படியான நிலையில் இந்தியாவுக்கு மேலதிக எண்ணெய் தேவை அதற்கு அது உலகின் எல்லா நாடுகளிலும் பரிவர்த்தனை செய்கின்றது, எரிபொருளோ ராணுவ கருவியோ தொழில்நுட்பமோ முழுக்க எந்த நாட்டையும் சார்ந்திருக்க கூடாது என்பது இந்திய அரசின் கொள்கை, அதை சரியாக பின்பற்றுகின்றது
அடுத்த 20 ஆண்டுக்குள் பெட்ரோல் பாவனையினை முழுக்க குறைத்து மின்சார வாகனங்களுக்கு மாறும் திட்டத்தில் இருக்கும் இந்தியா அதற்குரிய பணிகளையும் இன்னொரு புறம் செய்வதால் பெரிய அழுத்தத்தை எரிபொருள் விவகாரம் தரமுடியாது
இப்போது ரஷ்ய எண்ணெய் வரும் நிலையில் உலகெல்லாம் இருந்து எண்ணெய் வரும் நிலையில் அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெயினை தருவோம் எனும் நிலையில் இன்னொரு பெரும் எண்ணெய் வளநாடும் காட்சிக்குள் வருகின்றது அது கனடா
கனடாவின் எண்ணெய் வளம் பெரிது அப்படியே யுரேனியம் உள்ளிட்ட அணுசக்திக்கான ஏற்றுமதியும் பெரிது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உரசல் வரும் நிலையில் கனடிய அதிபர் அடுத்தமாதம் இந்தியா வருகின்றார் அவரின் வருகை பெரிய ஒப்பந்தங்களை செய்யும், இது இந்தியாவுக்கு இன்னும் பலனளிக்கும்
சுருக்கமாக சொன்னால் உங்களுக்கு அவசியமென்றால் நாங்கள் சொன்னபடி ஒப்பந்தம் செய்யலாம் இல்லை எங்களுக்கு உலகில் மாற்றுவழிகள் உண்டு என அமெரிக்காவிடம் மிக சரியாக தைரியமாக சொல்லி அவர்களை இறங்கி வர வைத்திருக்கின்றது இந்தியா
ரஷ்யா இந்தியாவின் நட்புநாடு ஆனால் எல்லாவற்றுக்கும் ரஷ்யாவினை நம்பியிருக்கமுடியாது அதே நேரம் அமெரிக்க பிடிக்குள்ளும் செல்லமாட்டோம் எது இந்தியாவிற்கு மிக பொருத்தமானதோ எது இந்திய மக்களுக்கும் தேசத்துக்கும் நன்மைகளை தருமோ அதை சரியாக செய்வோம் இதுதான் புதிய இந்தியா என உரக்க உலகுக்கு சொல்லியிருக்கின்றது மோடியின் இந்தியா
தன் மிரட்டல் மூலம் இந்தியாவினை அடக்கிவிடலாம் என வரிகுதிரையில் ஏறி வந்த டிரம்பர் இப்போது இக்குதிரையால் இந்தியாவினை மிரட்டமுடியாது என குதிரையினை அடித்துவிரட்டி விட்டு இந்தியாவினை நோக்கி கள்ளசிரிப்பு சிரிக்கின்றார்
இருந்துபாருங்கள் வரும் மேமாத வாக்கில் இந்தியாவுக்கு ஓடிவருவார் டிரம்பர், அந்த கடும் கோடையில் அரை டவுசரோடு அவர் வந்து தன் வழக்கமான சிரிப்புடன் நின்றாலும் ஆச்சரியம் ஏதுமில்லை, அநேகமாக அவர் இப்போது டவுசரை தேடி கொண்டிருக்கலாம். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba! வலைத்தளங்களில் பதிவு இருந்து











