#சினிக்கூத்து மணிரத்தினத்திற்கு நிகராக வைக்க வேண்டியவர்... மலையாளி என்று ஒதுக்கி விட்டோமோ ??
.
Prathap pothen - இவரை நாம் நடிகனாக கொண்டாடிய அளவுக்கு ஒரு இயக்குனராக கவனிக்க மறந்து விட்டோம்
.
இவர் ஒரு மலையாளியாக இருந்தாலும் இவர் தமிழில் தான் அதிக படம் இயக்கியிருக்கிறார்
.
நான் சிறுவயதில் சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் போன்ற படங்கள் இவர்தான் இயக்குனர் என்று தெரியாமல் TV யில் பார்த்தேன்..
.
என் பேஸ்புக் நண்பர் வெங்கடேஷ் மூர்த்தி... சத்யராஜ் நடித்த ஜீவா என்ற படத்தை... பார்க்க சொல்லி கேட்டார்... நானும் தட்டி கழித்துக் கொண்டே வந்தேன்.. மூன்று நாளுக்கு ஒரு முறை மெசேஜ் வந்துவிடும் அந்த படத்தை பார்த்தீர்களா என்று
.
அந்தப் படத்தை நான் பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார் என்றே சொல்லலாம்...
.
அப்படி என்னதான் இந்த படத்துல இருக்குன்னு எடுத்து பார்த்தேன்
.
பார்த்த பிறகு தான் மிகவும் வருத்தப்பட்டேன் இந்த படத்தை இவ்வளவு நாள் எப்படி பார்க்காமல் விட்டோம் என்று
.
தமிழில் நாம் தலையில் தூக்கி கொண்டாட வேண்டிய ஒரு மிகப்பெரிய ரைட்டரை... ஒரு நேர்த்தியான மற்றும் stylish ஆன இயக்குனர் Prathap pothan னை ... தமிழ் சினிமா கொண்டாடாமல் விட்டுவிட்டது என்று அப்போது தான் தெரிந்தது
.
Jeeva (1988 ) - இந்த movie நீங்கள் இப்பொழுது எடுத்துப் பார்த்தாலும் சண்டைக் காட்சிகளைத் தவிர.. மற்ற எல்லா காட்சிகளும்.. இந்த இயக்குனர் இந்த வருடம் தான் இயக்கி இருக்கிறார்.. என்று நினைப்பீர்கள்..
அந்த அளவுக்கு எல்லா காலத்துக்கும் suit ஆகும் அளவுக்கு மேக்கிங் இருக்கும்
.
நீங்கள் ஒரு சில்க் ஸ்மிதா வெறியனாக இருந்தால்.. இந்த படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து.. சில்க் ஸ்மிதாவை இந்த அளவு கவர்ச்சியாக காட்டியது.. வேறு எந்த படமும் இருக்காது என்றே தோன்றும்
.
லக்கி மேன் படத்தை எடுத்தவர் prathap pothen என்று எனக்கு தெரியும்.. அதனாலேயே... அப்பொழுது இருந்த கமர்சியல் டைரக்டர் என்று நானும் இவரை கவனிக்க மறந்து விட்டேன்
.
ஜீவா படத்தை பார்த்த பிறகு ரைட்டிங்கில் இவரை குருவாக ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டேன்
.
எனக்கு தெரிந்து என்பது காலகட்டத்தில் ஒரு கதையின் ரைட்டிங்கில்... அதிகம் கவனம் செலுத்தியவர் இவர் தான் என்று எனக்குத் தோன்றுகிறது
.
எனக்கு மேக்கிங் பிடித்த அளவுக்கு இயக்குனர் மணிரத்தினத்திடம் ரைட்டிங்.. பிடிக்காது
.
ஆனால் மணிரத்தினம் இருந்த அதே காலகட்டத்தில்.. ஒருவர் மேக்கிங் மட்டும் ரைட்டிங்கில்... அன்று இருந்த இயக்குனர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி... ஒரு அவார்டுக்கு அனுப்பினால் இந்த படத்தின் writing கை பாராட்டுவார்கள்... அதே நேரத்தில் நம் மக்களுக்கு பிடித்த கமர்சியல்.. கதையாகவும் பேலன்ஸ் செய்து...எடுக்கக்கூடிய பிரதாப் போத்தன் என்ற போதிதர்மர் அப்பவே வாழ்ந்திருக்கிறார் நாம் தான் அவரைக் கண்டு கொள்ளவில்லை என்று இப்போதுதான் தெரிகிறது😇😇
.
ஜீவாவின் கதை பார்த்தீர்கள் என்றால்.. ஒரு வேலை வெட்டி இல்லாத போட்டோகிராபர்.. அவருக்கென்று ஒரு அழகான குடும்பம் அம்மா தங்கச்சி.. தங்கச்சியை காதலிக்கும் இவரின் நண்பர்.. நிழல்கள் ரவி... கஷ்டமே படாமல் படத்தின் ஓபனிங்கிலேயே அமலா என்று அழகான காதலி
.
ஒரு வழியாக அமலா மூலம் இவருக்கு ஒரு போட்டோகிராபர் வேலை கிடைக்கிறது மாதம் 2500 ரூபாய் சம்பளம்... இதை வைத்து என் தங்கச்சியை கல்யாணம் செய்து கொடுப்பேன் கார் வாங்குவேன் என்று அவர் சொல்லும்போது இன்று பார்க்க சிரிப்பு வந்தாலும் அந்த காலகட்டத்தில் 2500 பெரிய சம்பளம் போல என்று நினைத்துக் கொண்டேன்
.
அந்த வேலை கிடைக்க காரணம் இவர் ரகசியமாக சில்க்கை எடுத்த ஒரு போட்டோ தான்.. வேலை கொடுத்தவர் நீ மீண்டும் போய் சில்க்கை சந்தித்து அவரை நம் கேலண்டர் போட்டோவுக்கு மாடலாக ஆக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார் சத்யராஜ்ம் எப்படியோ கண்டுபிடித்து சில்க்கை மாடலாக போட்டோ போஸ் கொடுக்க சம்மதமும் வாங்கி வருகிறார்... ஆனால் சில்க் ஸ்மிதா ஏற்கனவே வில்லன் கேங்கால் ஒரு பிரச்சனையில் இருக்கிறார்.. சில்க் ஸ்மிதா இ***கும்பொழுது அவரிடம் இருந்த ஒரு டைரியை சத்யராஜின் addressற்கு அனுப்பி வைத்துவிட்டு இ**ந்து விடுகிறார்.. ஆனால் அது சத்யராஜ் அட்ரஸ்க்கு செல்லாமல் ஜனகராஜ் இடம் மாட்டிக் கொள்கிறது
.
அதற்குள் வில்லன் அந்த டைரி சத்யராஜிடம் தான் இருக்கிறது என்று நினைத்து.. அந்த டைரியை சத்யராஜிடம் இருந்து வாங்க வேண்டும் என்று அவன் அம்மா தங்கை என்று மனசை பதபதைக்கும் விஷயங்களை செய்கின்றனர்
.
அங்கு படம் விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் கிளைமாக்ஸ் வரை engage ஆக வைத்திருப்பார் இயக்குனர்
.
கிளைமாக்ஸ் இல் வில்லன் reveal காட்சிகள் எழுதப்பட்ட இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
.
யாரும் மிஸ் பண்ண கூடாத ஒரு படம் யூ***பில் இருக்கிறது வி பி என் உபயோகித்து பார்த்துக் கொள்ளுங்கள்
.
இந்தப் படத்தில் பிரதாப் போத்தன் abrakadabra மந்திரம் என்ற ஒரு பாட்டில் cameo ரோல் செய்திருப்பார்
.
இந்தப் பாட்டில் தான் பிரபுதேவா முதன் முதலில் குழந்தை டான்ஸராக ஆடி இருப்பார்
.
ஆனால் prathap pothen னே.. தமிழ் சினிமாவில் தன்னை ஒதுக்குகிறார்கள் என்று ஒரு இன்டர்வியூவில் ஆதங்கப்பட்டு இருப்பார்
.
80ஸ் actors reunion ஒன்று நடந்தது அதில் பிரதாப் போத்தனக்கு அழைப்பே வரவில்லை அதை அவர் பேஸ்புக்கில் போட அது வைரலானது
.
இதேபோல் ஒரு இளையராஜா பங்ஷனில் இவரை பின் சீட்டில் உட்கார வைக்க இவர் கோபப்பட்டு எழுந்து சென்றது அப்பொழுது ஒரு பிரச்சினை ஆனது
.
ஆக மொத்தம் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்க வேண்டியவர்கள் யாரும் உச்சத்தில் இல்லை என்பது தெரிகிறது.Don't miss it Ever Green film. #ரெங்கா! #renga-vamba! #காலை வணக்கம். வலைதளப் பதிவு இருந்து
நடிகர் விஜய், தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் தந்தையை மதிக்காமல் தந்தையுடன் சண்டை போடுவார். நிஜ வாழ்க்கையிலும் அதுபோலவே.
நடிகர் பிரசாந்த், தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் தந்தைக்கு அடங்கிய மகனாக இருப்பார். நிஜ வாழ்க்கையிலும் அதுபோலவே.
நடிகர் அஜித், தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் துரோகம் செய்து விட்டார்கள், முதுகில் குத்தி விட்டார்கள் என்று புலம்புவார். நிஜ வாழ்க்கையிலும் அதுபோலவே.
நடிகர் தனுஷ், தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் அடுத்தவன் மனைவியை, காதலியைக் கரெக்ட் பண்ணுவார். நிஜ வாழ்க்கையிலும் அதுபோலவே.
நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் ஏழையாக இருந்து கடுமையாக உழைத்துப் பெரும் கோடீஸ்வரனாக மாறிய பிறகு பணம் நிம்மதியைத் தராது என்று புலம்புவார். நிஜ வாழ்க்கையிலும் அதுபோலவே.
நீ எதுவாக நடிக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். #மாலை வணக்கம் #ரெங்கா! #renga-vamba!
ஈரானில் அமெரிக்காவின் தாக்குதல் உறுதியாகிவிட்டது, ஆனால் இது சதாம் உசேனின் ஈராக் , ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செய்த நேரடி தலையீடாக அமெரிக்கா புகுந்து கைபற்றும் போராக இருக்காது மாறாக ஈரானின் ஆட்சி மற்றும் ராணுவநிலைகளை அமெரிக்கா தாக்கும் அப்பின்னணியில் ஈரானிய மக்கள் அல்லது அமெரிக்க சார்பு சக்தி நாட்டை கைபற்ற வேண்டும் இதுதான் இப்போதைய திட்டம்
காரணம் ஈரான் ஒரு மாதிரியான ஆட்களை கொண்ட நாடு, உதாரணத்துக்கு அங்கிள் சைமன் இல்லாவிட்டால் அக்கட்சி கும்பல் என்னாகும்? யாரால் இவர்களை கட்டி மேய்க்க முடியும்? அப்படி ஈரானில் சரியான தலமை வேண்டும் தனக்கு கட்டுபட்டதாக இருக்கவேண்டும் என அது கருதுகின்றது, இது மக்கள் புரட்சியாக அமையட்டும் என கணக்கிடுகின்றது
அதே நேர்ம் ஈரான் உடனே சரியாது அது ஆடிவிட்டே அடங்கும், இப்போது ஈரானின் புரட்சிகர ராணுவம் அல் கய்தா, ஐ.எஸ் இயக்கம் போல் தடைவிதிக்கபட்ட இயக்கமாயிற்று இதனால் ஈரானின் கடைசி யுத்தம் இனி துவங்கும்
இந்த யுத்தத்தில் மொத்த பலமும் காட்டுவார்கள் சக அராபிய நாடுகளை தாக்குவார்கள், போக்குவரத்து வழிதடங்களை மூடுவார்கள், பெரிய மிரட்டலை செய்வார்கள்
அமீரகம், சவுதி,கத்தார் என பல நாடுகள் பாதிக்கபடும், இவை எல்லாம் பணக்கார தோற்றம் கொண்ட நாடு என்றாலும் இந்தியா போல பெரும் போரை தாங்கும் வல்லமைஅவர்களுக்கு இல்லை, சில நாட்களுக்கு தாங்கமாட்டார்கள் அழிவும் அதிகமாகும்
இதனால் சவுதி, அமீரகம் ஆகியவை போரை விரும்பவில்லை எனினும் அமெரிக்கா விட்டுவிடபோவதுமில்லை
இங்கு யார் வெல்வார்கள் யார் வீழ்வார்கள் என்பதல்ல விஷயம், இதனால் உருவாகபோவது பெரும் எண்ணெய் தட்டுப்பாடு, பெரும் குழப்பம்
அன்னார் புட்டீன் விரும்புவதும் இதைத்தான் என்பது. வேறுவிஷயம்
இப்படியான நிலையில் இந்தியா அமெரிக்க ஈரான் போர் மூண்டு எண்ணெய் தட்டுபாடு வந்தால் எப்படி சமாளிப்பது என கடும் ஆலோசனையில் உள்ளது, இன்றைய கணக்கு படி இப்போது போர் மூண்டாலும் மோடி அரசாலா 4 மாதம் இதே விலையில் தட்டுபாடு இன்றி இந்தியாவுக்குள் எண்ணெய் விநியோகத்தை மக்களுக்கு செய்யமுடியும், அவ்வளவு பெரிய அளவில் எண்ணெய் சேமிப்பில் உள்ளது
ஆனால் இது போதும் என ஒரு அரசு இருக்க முடியாது, போர் எவ்வளவு காலமும் நீளலாம் என்பதால் இந்தியா பெரும் மாற்று ஏற்பாட்டை செய்திருக்கின்றது
மோடி அரசின் பெரிய ராஜதந்திரம் ஒரே நாட்டிடம் எல்லாவற்றுக்கும் சிக்கியிருப்பது அல்ல, இதனால் எண்ணெய் இறக்குமதியினை அது எல்லா நாடுகளிலும் இருக்கும்படி பார்த்து கொண்டது, அதன்படி வளைகுடா நாடு மட்டுமல்ல, ரஷ்யா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, தென் அமெரிக்கா என பல இடங்களில் இருந்து கச்சா எண்ணெய் வரும்படி ஏற்பாடு செய்யபட்டுருக்கின்றது
மோடி அரசின் இன்னொரு முக்கிய வெற்றி உள்நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அதிகபடுத்தியது, அது அரச ஆலைகள் அம்பானி போன்றோரின் தனியார் ஆலைகள் என அதிகம், இதனால் எந்த நாட்டின் கச்சா எண்ணெயும் வாங்கி நம்மால் சுத்திகரித்து பயன்படுத்த முடியும்
போர் மூண்டால் நிச்சயம் பல குழப்பம் வரும், ஆனால் பல நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி இன்றி வாழமுடியாது அதனால் அவை உணவுக்கு எண்ணெய் என கூட இறங்கிவரும் ஆனால் கச்சா எண்ணெய்தான் தரும், அதை தேசம் சுத்திகரிக்கும்
முன்பு இதனால் சிக்கல் இருந்தது ஆனால் மோடி அரசு ஏகபட்ட முன் தயாரிப்புக்களை செய்திருப்பதால் தேசம் பெரிய தட்டுபாட்டை எதிர்கொள்ளாது
1990களில் வந்த வளைகுடா போரினை தொடர்ந்து இதே நிலை வந்தபோது முந்தைய காங்கிரஸ் அரசு ஒரு தயாரிப்புமின்றி தேசத்தை குழப்பியதும், அடுத்து உணவுக்கு எண்ணெய் என ஈராக்கிடம் வாங்க போய் அதிலும் ஊழல் செய்ததும் வரலாறு
மோடி அரசு அப்படி அல்ல, எல்லா சூழலுக்கும் தயாராக தேசத்தை பலமாக நிறுத்தியிருக்கின்ரது, எந்த நாட்டில் எந்த குழப்பம் என்றாலும் இந்திய தேசம் அதன் போக்கில் இயங்கும், மோடி எனும் மகான் வடிவமைத்து கொடுத்த சக்திவாய்ந்த தேச எந்திரம் அப்படியானது
வந்தே மாதரம், ஜெய்ஹிந்த். #ரெங்கா! #renga-vamba! #ஈரான் மீது #அமெரிக்கா யுத்தம் யுத்தம்
#வம்பா ஸ்டில் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ரெங்கா! #renga-vamba!
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #😇நம்மவர் கமல்😎 #ரெங்கா! #renga-vamba! குறத்தி மகன் படத்தில் சிறுவேடத்தில். ( நடுவில் இருப்பவர் மஞ்சள் சட்டை சீனியஸ் கமல்ஹாசன் & மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்










