#🚹உளவியல் சிந்தனை மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பதன் பொருள்… பிறருக்கு நாம் உதவ வேண்டும்… உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே…!
நாம் எதற்காக உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்…?
1.மேலோட்டமாகப் பார்த்தால் உலகத்திற்கு உதவுவதற்காக…!
2.ஆனால் உண்மையில் நமக்கே உதவுவதற்காக நாம் எப்பொழுதும் உலகத்திற்கு உதவ முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
3.அது ஒன்றே நமது மிக உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும்.
நாம் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் “உலகிற்கு நம் உதவி சிறிது கூடத் தேவையில்லை…” என்பதைக் காணலாம்.
நீங்களோ நானோ வந்து உதவி செய்வோம்… என்பதற்காக இந்த உலகம் படைக்கப்படவில்லை.
அழகிய இந்த உலகம் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் பிறருக்கு உதவி செய்வதற்கான நேரத்தையும் வாய்ப்பையும் இது தருகிறது.
இருந்தாலும் இதைக் கேட்கும் பொழுது உணர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் உலகத்திற்கு நாம் உதவி தேவைப்படுகிறது என்று சொல்வது தெய்வம் நிந்தனை ஆகாதா…?
உலகில் துயரம் மிகுந்திருப்பதை நாம் மறுப்பதற்கு இல்லை. நாம் சென்று பிறருக்கு உதவி செய்வதே செய்யத்தக்கவற்றுக்குள் சிறந்தது.
1.எனினும் பிறருக்கு உதவுவது என்பது
2.நமக்கு நாமே உதவிக் கொள்வது தான்…! என்பதை இறுதியில் உணர்வோம்.