தாரா அழகு நிலையம் டைலரிங்tara beauty tamil
ShareChat
click to see wallet page
@selvarani8522
selvarani8522
தாரா அழகு நிலையம் டைலரிங்tara beauty tamil
@selvarani8522
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
விதியை தர்ம பத்தினியாலும் வெல்ல முடியாது! நீதிக்கதைகள் ... மகரிஷி தன்ரீகரின் மனைவி பூந்ததி, கணவர் மீது பக்தி கொண்டவள். அதிகாலை எழுந்ததும் அவர் பாதங்களைத் தொட்டு வணங்குவாள். ஒரு நாள் கணவரின் பாதங்களைத் தொட்டு வணங்கியவள், தற்செயலாகத் திரும்பினாள். முனிவர் தன்ரீகர் நிம்மதியாகப் படுத்துக் கிடக்க… அவரது நிழல் மட்டும் அரையடி தள்ளி இருப்பதைப் பார்த்தாள். தன் கணவருக்கு ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது புரிந்து கலவரப்பட்டாள். இதைத் தடுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் எழுந்து அகல் விளக்கை நன்கு தூண்டி எரிய விட்டாள். குளித்து விட்டு சாணத்தைக் கரைத்துத் தெளித்தாள். கோலம் போட்டாள். கண் விழித்ததும் மகரிஷி தன்ரீகர் ஆற்றங்கரைக்கு நீராடக் கிளம்பினார். வாசலைத் தாண்ட முற்பட்ட போது, அவர் முன் வந்து நின்ற பூந்ததி, ‘‘ஸ்வாமி! இன்று நான் விரதம் அனுஷ்டிக்கிறேன். சூரியன் மறையும் வரை தாங்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்!’’ என்றாள் கண்ணீருடன். ‘‘நீ விரதம் இருப்பதற்கும் நான் வெளியே செல்லாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?’’& தன்ரீகர். ‘‘ஸ்வாமி… விளக்கம் கேட்காதீர்கள்! இன்று மாலை வரை குடிலை விட்டு வெளியே வராதீர்கள்.’’ _ கண்ணீரும் கம்பலையுமாக அவள் பேசிய விதம் மகரிஷி யின் மனதை இளக வைத்தது. உள்ளே சென்று, யோசனையுடன் அமர்ந்தவர், விலகியிருக்கும் தனது நிழலைக் கண்டார். உடனே, ‘பூந்ததி விதியுடன் போராடத் துணிந்து விட்டாள்’ என்பது புரிந்தது. புன் முறுவலுடன் வேடிக்கை பார்க்கத் தீர்மானித்தார். ஆற்றங்கரையில் காத்துக் கொண்டிருந்த எமதூதர்கள் தன்ரீகர் வராததால் ஏமாற்றமடைந்து குடிலை நோக்கி வந்தனர். குடிலை நெருங்கப் போனவர்களை அக்னிப்பிழம்பு எரித்தது. ‘‘மகா பத்தினி பூந்ததி தன் கற்பின் மீது சத்தியம் செய்து என்னைக் காவலாக நிறுத்தியிருக்கிறாள். எமதர்மனே வந்தாலும் உள்ளே போக முடியாது!’’ என்று அக்னி பகவான் எச்சரித்தார். மிரண்டு போன எமதூதர்கள் எமனிடம் விஷ யத்தைத் தெரிவிக்க விரைந்தனர். குடிலின் வாசலுக்கு எதிரே தீவிரமாக பூஜை செய்து கொண்டிருந்தாள் பூந்ததி. பக்கத்து மரக்கிளையில் வெகு நேரமாக ஒற்றைக் காகம் கரைந்து கொண்டே இருந்தது. நேரம் செல்லச் செல்ல அந்தக் காகம் பூந்ததிக்கு அருகில் வந்து கரைந்தது. பூஜை தடைபடக் கூடாது என்று கருதி, பூந்ததி கண்களை மூடிய வண்ணம் மந்திரங்களை ஓதினாள். திடீரென காகம் கரைவதை நிறுத்தியது. நிசப்தம் நிலவியதும் கண்களைத் திறந்தாள் பூந்ததி. இறைவனுக்குப் படைக்க இருந்த பிரசாதத்தை காகம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைக் கண்டு கோபமான பூந்ததி, அங்கிருந்த மரக் கிளையை ஒடித்து காகத்தை விரட்டினாள். காகம் தள்ளிப் போனது. பூந்ததி சற்று நகர்ந்து விரட்டினாள். மீண்டும் தள்ளிப் போனது. இப்படியாக காகத்தை விரட்டிக்கொண்டே குடில் அமைந்த நந்தவனத்தை விட்டே வெளியே வந்தாள். இதுவரை விலகிப் போன காகம், அவளது காலடியில் அமர்ந்து எமதர்மராஜனாக உருமாறியது. ‘‘தாயே… மன்னியுங்கள்! குடில் அருகே நீங்கள் இருந்தால், என் கடமையை செய்ய முடியாது. விதிப் படி எல்லாம் நடக்க வேண்டும் என்பதை அறிய மாட்டீர்களா?’’ என்றான் எமதர்மராஜன். ‘கணவரின் உயிரைக் காக்க இயலாத ஒரு பெண் உயிரோடு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது’ என்று, கிணற்றில் குதித்தாள் பூந்ததி. எமதர்மன் பின் தொடர்ந்து வந்து கிணற்றில் எட்டிப் பார்த்தான். ‘பூந்ததியின் ஆயுள் இன்னமும் முடியவில்லையே?’ என்று அவன் யோசித்தபோது… கிணற்றிலிருந்து காகமாக மாறி மேலே பறந்து வந்தாள் பூந்ததி. ‘‘தாயே! எங்கெங்கு நான் உயிர் எடுக்கப் போகிறேனோ… அங்கெல்லாம் காகம் உருவில் சென்று எச்சரியுங்கள்! இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய உணவு உண்டு அவரவர்க்கு சமர்ப்பணம் செய்யுங்கள்!’’ என்று பூந்ததியிடம் கேட்டுக் கொண்டான் எமதர்மராஜன். அதன்படி காகத்தின் வடிவில் இன்றும் மரணத்தை எச்சரித்துக் கொண்டும், இறந்தவரின் ஆன்மா சாந்திக்காக உணவு உண்டும் இருந்து வருகிறாள் பூந்ததி! காகம் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🙏கோவில் - shullerstockcom 2440804617 shullerstockcom 2440804617 - ShareChat
திருநெல்வேலி பாபநாசம் அம்பாளின் சேலையில் எச்சில்…! திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு. நமச்சிவாயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம். ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும்போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர், வெற்றிலை தரித்து போட்டுக்கொண்டு வாய்விட்டுப் பாடி வந்தார். மெய்ம்மறந்து பாடியபோது அவருமறியாமல் தெறித்த எச்சில் துளிகள் தேவியின் மேல்பட்டன. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோயிலில் மீண்டும் எழுந்தருளினாள். மறுநாள் காலையில், கோயிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர், உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார். அவ்வமயம் இறைவழிபாட்டுக்குப் பாபநாசம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் என அரசன் யோசித்துக் கொண்டு தூங்குகையில், அவன் கனவில் அசரீரி"விஜயரங்க சொக்கநாதா!! உலகம்மை யான்!! என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவனறியாது அவன்பின் சென்றவள் நானே!! எனது கவனக்குறைவாலே அவன் துப்பிய எச்சில் என் மீது பட்டது!!அவனை விட சிறந்த பக்தன் கிடையாது!! ஆதலின் அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாயாக!!!" என்று உலகம்மை எடுத்துரைத்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்தான் அரசன். "ஆஹா!! இவரை விட ச்ரேஷ்டமான தேவீ பக்தன் உண்டா??!?" என்றெண்ணி அம்பிகையின் உத்தரவின் படி கௌரவிக்க எண்ணினான். நமச்சிவாயரை கோவிலுக்கழைத்து "தாங்கள் அம்பிகை தாசர் என்பது ஸத்யமானால்,இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து, இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும்!! ம்!! ஆகட்டும்" என்றான் அரசன். "உலகம்மை அந்தாதி" எனும் அற்புதமான நூலை இயற்றினார். "அபிராமி அந்தாதி"யைப் போல் அதியற்புதமான நூலே இது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் அறுந்து விழுந்தன ஒவ்வொன்றாய். ஆஹா!! என்னே!! உலகம்மையின் கருணை!!! "விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய் செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே" எனும் பாடலை பாடி முடித்த சமயம் "படபட" வென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு தேவியின் கையிலிருந்து நமச்சிவாயர் கரத்திற்கு தாவி வந்தது. என்ன!! ஆச்சர்யம்!! அரசர் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாயர் பாதத்தில் விழுந்தனர். இவ்வாரு தன் பக்தனின் எச்சிலை அணியாக ஏற்ற உலகம்மையின் கருணை தான் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 என்னே.! அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
🙏ஆன்மீகம் - 1r17' laceer 1r17' laceer - ShareChat
அவன் ஒரு மாபெரும் செல்வந்தன், மது, மங்கை, போதை என்று எல்லாவற்றின் பின்னாலும் அலைந்து பாா்த்தான். அவன் வாழ்வில் மகிழ்ச்சியே கிடைக்கவில்லை, துறவறம் மேற்கொண்டால் மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்கும் என்று யாரோ சொல்ல... தனது வீட்டிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என்று அனைத்தையும் ஒரு மூட்டை கட்டிக்கொண்டு ஒரு யோகியின் காலடியில் வைத்துவிட்டு... "ஸ்வாமி இதோ என் அத்தனை சொத்துக்களையும் உங்கள் காலடியில் வைக்கிறேன்... இனி எனக்கு எதுவும் தேவையில்லை, நான் நாடிவந்திருப்பது மன அமைதி, சந்தோஷம் மட்டுமே" என்று சரணடைந்தான் செல்வந்தன். அந்த யோகியோ மூட்டையை அவசரமாக திறந்து பார்த்தாா்.. கண்ணை கூசவைக்கும் ஒளியுடன் ஜொலித்த தங்கம் வைரங்களை மீண்டும் மூட்டையாக சுருட்டி எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். செல்வந்தன் அதிா்ச்சி அடைந்தான், ஒரு போலி சாமியாரிடம் நம் செல்வத்தை ஏமாந்து கொடுத்து விட்டோமே என்ற துக்கம், ஆத்திரமாக மாற.... செல்வந்தன் யோகியைத் துரத்த ஆரம்பித்தான். யோகியின் ஓட்டத்திற்கு செல்வந்தனால் ஈடுகொடுக்க முடியவில்லை. சந்துபொந்துகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓடிய யோகி, இறுதியில் தான் புறப்பட்ட அதே மரத்தடிக்கே வந்து நின்றாா். மூச்சு இரைக்க இரைக்க அவரைத் துரத்திகொண்டு வந்த செல்வந்தனிடம் யோகி... "என்ன பயந்துவிட்டாயா.? இந்தா உன் செல்வம் நீயே வைத்துக்கொள்" என்று மூட்டையைத் திருப்பிக் கொடுத்தார்... கைவிட்டு போன தங்கமும் வைரமும் மீண்டும் கிடைத்ததில் பிடிபடாத சந்தோஷம் செல்வந்தனுக்கு. இங்கு வருவதற்கு முன்பும் கூட இந்தத் தங்கமும் வைரமும் உன்னிடம்தானே இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் மகிழ்ச்சி ஏன் அப்போது இல்லை. மகிழ்ச்சியை தன்னுள்ளே வைத்து கொண்டு மன அமைதிக்காக மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே யோகியின் கூற்று. #நேற்றைய நிகழ்வுகளை களைந்து, நாளைய சிந்தனையை மறந்து, ஒவ்வொரு விடியலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே தர்மத்தின் சித்தாந்தம்..! #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🙏ஆன்மீகம் - 7 7 - ShareChat
மெஹந்தி மருதாணி #💅மெஹந்தி #💁‍♀️இயற்கை அழகு குறிப்புகள்
💅மெஹந்தி - ShareChat
காளியம்மன் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம்
🙏கோவில் - 05= LO೦ Ornt ಹ@r; @Wlell Oi २२०  883 ద్గె B IIIQ 05= LO೦ Ornt ಹ@r; @Wlell Oi २२०  883 ద్గె B IIIQ - ShareChat
மருதாணி மெஹ #💅மெஹந்தி #மருதாணி டிசைன் ந்தி #மெஹந்தி
மெஹந்தி - ShareChat
Scallop blouse டிசைன் blouse நெஸ் design #👗பிளவுஸ் designs
👗பிளவுஸ் designs - ShareChat
Scallop princess neck blouse Design blouse #👗பிளவுஸ் designs
👗பிளவுஸ் designs - ShareChat
00:24
பழனி பாதயாத்திரை முருகன் #பழனி பாதயாத்திரை 🙏🕉️ #தைபூஷம் பழனி பாதயாத்திரை
பழனி பாதயாத்திரை 🙏🕉️ - ShareChat
01:59