பார்வையாளர்களை அடிமுட்டாள்களாக நினைத்து இப்படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் தர்க்கப்பிழைகளைக்(logic mistake) கூட மன்னித்துவிடலாம். மருந்துக்கேனும் சுவாரஸ்யம் இருக்கவேண்டும் அல்லவா! அது இல்லை. கனவுருப் புனைவு என்பதற்காக தன்விருப்பம் போல காட்சிகளை எழுதி பக்தி உணர்வை கலந்துவிட்டால் போதுமென்ற அசட்டைதான் படம் முழுக்க விரவியிருக்கிறது. கதை திரைக்கதை வசனம் இயக்கம் என எல்லாவற்றிலும் கோட்டைவிட்ட கருப்பு படத்தை வேட்டகருப்பசாமியால் கூட காப்பாற்ற முடியாது.
அதிக சப்தத்தில் திரையரங்கம் அதிர்ந்தால் போதும் அதுதான் பின்னணிஇசை என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சாய்அபயங்கர்.
இந்தப் படத்திற்கு திரிஷா தேவையே இல்லை, ஆனால் நான் திரிஷாவுக்காகத்தான் படத்துக்குப் போனேன் என்பது தனிச்செய்தி. சூர்யா அவரால் ஆனமட்டும் படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார், அவரின் முகத்துக்காகத்தான் இப்படம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன், நாம நினைத்து என்ன புண்ணியம்! இயக்குனர் அல்லவா நினைத்திருக்க வேண்டும்.
படத்தில் முதல்பாதி நன்றாக இருக்கிறது என்றார்கள். இல்லை, முதல் பாதி மன்னிக்கக்கூடிய குற்றம்
இரண்டாம் பாதி மன்னிக்கவே முடியாத குற்றம்.
கருப்பு வண்ணமில்லை.... #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🍿பொழுதுபோக்கு எக்ஸ்பிரஸ்