#🙏கோவில்#தெய்வீகம்♥♦♥ வணக்கம். 20.05.2026. வைகாசி மாத திருஆதிரை வழிபாடு அழைப்பு. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கணிச்சப்புரி( கணிச்சப்பாக்கம்) புண்ணியத் தலத்திலே எழுந்தருளியுள்ள ஸ்ரீ உமையொரு பாகமாகிய ஸ்ரீ கணிச்சபுரிஸ்வரர் பெருமானுக்கு காலை 7.30 மணியளவிலே எங்கள் இறைவருக்கு சிறப்பான முறையிலே திருமஞ்சனம் நடைப்பெற்று இறுதியில் பசும் நெய்யினால் நீராட்டு நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருளுவார். எனவே, அனைவரும் வருக 🙏🏻இறையருள் பெறுக 🙏🏻இப்படிக்கு : திருக்கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் 🙏🏻சிவாயநம 🙏🏻( குறிப்பு ) வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் இங்கு குறிப்பிட்டுள்ள நேரத்தில் வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். ஏனென்றால் இறைவனுக்காக நாம் தான் காத்திருக்க வேண்டுமே தவிர, நமக்காக இறைவன் ஒருக்காலமும் காத்திருக்கக்கூடாது, நினைவில் கொண்டு வழிபாடு செய்யும் போதே இறைவனிடம் இருந்து முழுப்பலனை எதிர்பார்க்கலாம் 🙏🏻சிவாயநம 🙏🏻...