ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காகத் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை. எனவே, கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை வாரி எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்துத் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள்.
அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள்.
உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவித்தார்கள்: (புகாரி: 5999) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்பகரா' அத்தியாயத்தின்
(02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப் போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் (ரலி)
(நூல்: புஹாரி 4008)
ஒரு நல்ல விஷயத்திற்கு வழிகாட்டுபவருக்கு, அதைச் செய்பவருக்கு நிகரான நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
(ஸஹிஹ் முஸ்லிம் 1893) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
"யா அல்லாஹ்!
உனது அன்பையும்,
உன்னை நேசிப்பவர்களின்
அன்பையும், உனது
அன்பின் பக்கம் எங்களை
நெருக்கமாக வைக்கும்
அமல்களையும்,செயல்களையும்
உன்னிடத்தில் நாங்கள்
கேட்கிறோம்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
[அல்குர்ஆன் 23:1]
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
[அல்குர்ஆன் 23:2]
இன்னும், அவர்கள் வீணான பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
[அல்குர்ஆன் 23:3]
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
[அல்குர்ஆன் 23:5]
மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.
[அல்குர்ஆன் 23:9]
இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்.
[அல்குர்ஆன் 23:10]
இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[அல்குர்ஆன் 23:11] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே இரு உலகிலும் ஒளிமயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும்,.. தினந்தோறும் நீங்கள் என்னை உங்கள் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உங்களுக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ங்கள்!.
"ஹுதன்லில் முத்தக்கீன்” இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டக் கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை இரு உலகிலும் நல்லோர்களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.
அருள் மறை அல்-குர்ஆனை இறக்கி அருள்புரிந்த அல்லாஹ்வே!
குர்ஆனின் மூலம்
எங்கள் உள்ளங்களை
விசாலப்படுத்துவாயாக!
குர்ஆனின் மூலம் எங்கள் மண்ணறையை ஒளிமயமாக்குவாயாக
குர்ஆனை எங்களுக்கு சிபாரிசு செய்ய வைப்பாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களில் அதனை அழகாக்கியும் வைத்தான்; அன்றியும், நிராகரிப்பையும் பாவத்தையும், மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள்தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
[அல்குர்ஆன் 49:7] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
சில கடன்கள், அதை ஒருபோதும் திருப்பி செலுத்த முடியாது,..
ஆனால் துஆ செய்ய முடியும்.!
யா அல்லாஹ், எங்களுக்கும் எங்களுடைய பெற்றோருக்கும் உன்னிடத்தில் உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ்
சொர்க்கத்தை கேட்கின்றோம்,
ஒதுங்கும் இடங்களில் மிகவும் மோசமான நரகத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றோம். ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு
மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ 1837 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ்வுக்கு (சுக்ர்)
"சுக்ர்" என்பது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை குறிக்கிறது.
"ஏற்கனவே பெற்றுள்ள அருட்கொடைகளை பாராட்டத் தவறியவர்களுக்கு மகிழ்ச்சி ஒருபோதும் வராது."
அல்ஹம்துலில்லாஹ்,சொல்லுங்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை ஆண், பெண் வகையுள்ள ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
[அல்குர்ஆன் 50:7] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️