சரவணகுமார்©183
ShareChat
click to see wallet page
@ssk183sivam
ssk183sivam
சரவணகுமார்©183
@ssk183sivam
தமிழ் கடவுள் முருகன் துணை
🔴 ⚠️ விழித்துக்கொள்! அதிகாரம் உன் கையில்! 💀 உன்னிடம் சாப்பாட்டையே கொடுத்தாலும் உனக்குச் சாப்பிடத் தெரிய வேண்டும். அதையும் நீ முதலாளியிடம் கொடுத்து, "எனக்கு ஊட்டிவிடு" என்று சொன்னால், உனக்கு மிஞ்சுவது எச்சில்தான்! குரங்கு அப்பம் பங்கிட்ட கதை நினைவிருக்கிறதா? பூனைகளிடம் அப்பம் கிடைத்தது; அதை ஆளுக்குக் கொஞ்சம் என்று சண்டையில்லாமல் பகிர்ந்து உண்ணத் தெரியவில்லை. அந்தப் பூனைகள் குரங்கிடம் கொடுத்துப் பங்கிடச் சொன்னதால் என்ன ஆனது? குரங்கு முழுவதையும் தின்றது! அதே நிலைதான் இன்றும்... ஜனநாயகத்தை உருவாக்கும் 'வாக்கு' உன் கையில் இருக்கிறது. ஆனால் நீயோ, கட்சி என்னும் பிரிவினையை உருவாக்கி, அதிகாரத்தை மீண்டும் ஒரு முதலாளியிடம் கொடுத்து "நிர்வகித்துத் தா" என்று கேட்கிறாய். அப்புறம் எப்படி ஜனநாயகம் மிஞ்சும்? ஜனநாயகம் அந்த முதலாளியின் வாய்க்குள் சென்றுவிடும்... உனக்கு மிஞ்சுவது அந்த 'முதலாளித்துவம்' என்னும் அடிமைத்தளை மட்டுமே! கசப்பான உண்மைகள்: · கட்சி என்ற பிரிவினை: மக்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், அரசியல்வாதி/முதலாளி) லாபம் அடைகிறது. · நிர்வாகப் பலவீனம்: சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாத சமூகம், எப்போதுமே ஒரு எஜமானரைத் தேடுகிறது. · முதலாளித்துவத்தின் வெற்றி: ஜனநாயகம் என்பது மக்களுக்கானது, ஆனால் அது இன்று முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. "உன் மூளையைப் பயன்படுத்தாதவரை, உன் வாக்கு உனக்குக் குழி தோண்டும் கருவியே தவிர, முன்னேற்றத்திற்கான ஏணி அல்ல!" #PowerOfVote #PoliticalAwareness #DemocracyInDanger #WakeUpTamilNadu #ModernSlavery #NoMoreCorruption #விழிப்புணர்வு #வாக்குரிமை #ஜனநாயகம் #@அமானுஷ்யம்@( HORROR ) #🤔புதிய சிந்தனைகள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
🔴 ⚠️ விழித்துக்கொள்! அதிகாரம் உன் கையில்! 💀 உன்னிடம் சாப்பாட்டையே கொடுத்தாலும் உனக்குச் சாப்பிடத் தெரிய வேண்டும். அதையும் நீ முதலாளியிடம் கொடுத்து, "எனக்கு ஊட்டிவிடு" என்று சொன்னால், உனக்கு மிஞ்சுவது எச்சில்தான்! குரங்கு அப்பம் பங்கிட்ட கதை நினைவிருக்கிறதா? பூனைகளிடம் அப்பம் கிடைத்தது; அதை ஆளுக்குக் கொஞ்சம் என்று சண்டையில்லாமல் பகிர்ந்து உண்ணத் தெரியவில்லை. அந்தப் பூனைகள் குரங்கிடம் கொடுத்துப் பங்கிடச் சொன்னதால் என்ன ஆனது? குரங்கு முழுவதையும் தின்றது! அதே நிலைதான் இன்றும்... ஜனநாயகத்தை உருவாக்கும் 'வாக்கு' உன் கையில் இருக்கிறது. ஆனால் நீயோ, கட்சி என்னும் பிரிவினையை உருவாக்கி, அதிகாரத்தை மீண்டும் ஒரு முதலாளியிடம் கொடுத்து "நிர்வகித்துத் தா" என்று கேட்கிறாய். அப்புறம் எப்படி ஜனநாயகம் மிஞ்சும்? ஜனநாயகம் அந்த முதலாளியின் வாய்க்குள் சென்றுவிடும்... உனக்கு மிஞ்சுவது அந்த 'முதலாளித்துவம்' என்னும் அடிமைத்தளை மட்டுமே! கசப்பான உண்மைகள்: · கட்சி என்ற பிரிவினை: மக்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதால், அரசியல்வாதி/முதலாளி) லாபம் அடைகிறது. · நிர்வாகப் பலவீனம்: சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாத சமூகம், எப்போதுமே ஒரு எஜமானரைத் தேடுகிறது. · முதலாளித்துவத்தின் வெற்றி: ஜனநாயகம் என்பது மக்களுக்கானது, ஆனால் அது இன்று முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. "உன் மூளையைப் பயன்படுத்தாதவரை, உன் வாக்கு உனக்குக் குழி தோண்டும் கருவியே தவிர, முன்னேற்றத்திற்கான ஏணி அல்ல!" #PowerOfVote #PoliticalAwareness #DemocracyInDanger #WakeUpTamilNadu #ModernSlavery #NoMoreCorruption #விழிப்புணர்வு #வாக்குரிமை #ஜனநாயகம் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல்📢 #📺அரசியல் 360🔴
ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார். ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார். அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்திருக்கின்றன. அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம்பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார். “அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான். ‘மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப்போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார். “இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான். அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார். “அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார். “அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர். “புரியவில்லை” என்றார் அரசர். “எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான். அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார். #🤔புதிய சிந்தனைகள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை
ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார். ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார். அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்திருக்கின்றன. அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம்பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார். “அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான். ‘மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப்போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார். “இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான். அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார். “அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார். “அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர். “புரியவில்லை” என்றார் அரசர். “எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான். அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார். #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #📺அரசியல் 360🔴
வாழட்டும் குவாரி திருடர்கள் ! வீழட்டும் தமிழ்நாடு! ரூ 20000 கோடி அபேஸ் ! ஒன்றிய அரசின் கனிமவள சட்டப்படி கொள்ளையடிக்கப்பட்ட கனிமவளத்தின் தொகையை (cost of mineral ) 100% மீட்டெடுக்க வேண்டும் . ஆனால் அதை முழுவதுமாக தள்ளுபடி செய்ய சட்டத்திற்கு எதிராகவும் புறம்பாகவும் one time regularization scheme கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு சட்டத்திற்கு எதிராக அரசாணை கொண்டு வர அதிகாரம் இல்லை. ஆனால் குவாரி கொள்ளையர்களும் திமுகவும் 20000 கோடி அபேஸ் செய்ய IAS அதிகாரிகள் முதல் அனைவரும் செய்த மாபெரும் மோசடி. முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்கள். அரசுக்கு வர வேண்டிய பணத்தை இந்த மோசடி திட்டம் மூலம் திமுக கட்சிக்கு தேர்தல் சமயத்தில் எத்தனை ஆயிரம்கோடி சுருட்ட இந்த திட்டம் போடப்பட்டது என்பதை இவர்கள் விளக்க வேண்டும்! Any sane Chief Minister and Deputy Chief Minister will withdraw this GO! M. K. Stalin Udhayanidhi Stalin #@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்
@அமானுஷ்யம்@( HORROR ) - குவாரி திருடர்கள்வாழட்டும் 4 தமிழ்நாடு வீழட்டும் ! BUMPER PRIZE API அப்போர் இய;B் One Time Regularization Scheme ரூ 20000 கோடி அபேஸ் ! குவாரி திருடர்கள்வாழட்டும் 4 தமிழ்நாடு வீழட்டும் ! BUMPER PRIZE API அப்போர் இய;B் One Time Regularization Scheme ரூ 20000 கோடி அபேஸ் ! - ShareChat
#🤔புதிய சிந்தனைகள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #@அமானுஷ்யம்@( HORROR )
🤔புதிய சிந்தனைகள் - 6 ஏற்றுக்கொள்ள இயலாத இரண்டு விஷயங்கள் [ மரியாதை இன்றி நடந்துகொள்ளும் @ಊಗಯಕಹಂೆೆ , அதை வேடக்கையாக எடுத்துக்கொள்ளும் பெற்றவர்கள்  நன்னடத்தை மிகவும் முக்கியமானது ` 6 ஏற்றுக்கொள்ள இயலாத இரண்டு விஷயங்கள் [ மரியாதை இன்றி நடந்துகொள்ளும் @ಊಗಯಕಹಂೆೆ , அதை வேடக்கையாக எடுத்துக்கொள்ளும் பெற்றவர்கள்  நன்னடத்தை மிகவும் முக்கியமானது ` - ShareChat
#@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்
@அமானுஷ்யம்@( HORROR ) - NEWS UPDA SUN adani NIS OCCRP மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அதானி குழுமம் அதானி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், ரகசியமான முறையில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதை சுவிஸ் வங்கி ஆவணங்களின் ஆதாரத்துடன் வெளியிட்டு அமெரிக்காவின் OCCRP அமைப்பு பரபரப்பு மொரிஷியஸ் UAE பெர்முடா போன்ற நாடுகள் வழியாக போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழும பங்குகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் OCCRP அமைப்பு தெரிவித்துள்ளது அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிவருவதாகவும் ஆனால் பிரதமர் மோடி இதைத் தடுப்பதாகவும் இந்த அறிக்கையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு sunnewslivein SUNNEWSTAMIL SUNNEWS 18FEB 2026 NEWS UPDA SUN adani NIS OCCRP மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அதானி குழுமம் அதானி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், ரகசியமான முறையில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதை சுவிஸ் வங்கி ஆவணங்களின் ஆதாரத்துடன் வெளியிட்டு அமெரிக்காவின் OCCRP அமைப்பு பரபரப்பு மொரிஷியஸ் UAE பெர்முடா போன்ற நாடுகள் வழியாக போலி நிறுவனங்கள் மூலம் அதானி குழும பங்குகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் OCCRP அமைப்பு தெரிவித்துள்ளது அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோரிவருவதாகவும் ஆனால் பிரதமர் மோடி இதைத் தடுப்பதாகவும் இந்த அறிக்கையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு sunnewslivein SUNNEWSTAMIL SUNNEWS 18FEB 2026 - ShareChat
#@அமானுஷ்யம்@( HORROR ) #🤔புதிய சிந்தனைகள் #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
@அமானுஷ்யம்@( HORROR ) - யாருக்கும் தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சிக்கலாம்  ஆனால் மத்தவங்களோட பாய்ண்ட் ஆஃப் வீவ்ல நாம பர்பெஃக்ட்டா தெரிய வாழனும்னு எந்த அவசியமும் இல்லை! @Kannan_Twitz Relaxplzz Technologies Our Services reloxolzz Digital Marketing | Application Development Website Development Mobile Apps Chennai Trivandrum wwwrelaxplzz com 080561 08192 070124 69969 யாருக்கும் தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ முயற்சிக்கலாம்  ஆனால் மத்தவங்களோட பாய்ண்ட் ஆஃப் வீவ்ல நாம பர்பெஃக்ட்டா தெரிய வாழனும்னு எந்த அவசியமும் இல்லை! @Kannan_Twitz Relaxplzz Technologies Our Services reloxolzz Digital Marketing | Application Development Website Development Mobile Apps Chennai Trivandrum wwwrelaxplzz com 080561 08192 070124 69969 - ShareChat
#இன்று_எடுக்கும்_முடிவ_உங்கள் #குடும்பத்தின்_தலையெழுத்தையே_மாற்றும் மனித சமுதாயத்தின் வரலாற்றை கூர்ந்து கவனித்துப் பார்த்தால், பணம் தான் அனைத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்கிற ஒரு முக்கியமான எளிய உண்மை நமக்குத் தெளிவாகப் புரியும். இந்த எளிய உண்மை புரியாமல், அல்லது புரிந்தாலும் அதற்குத் தகுந்த நேரடி நடவடிக்கை எடுக்காமல், எதன் எதன் பின்னாலோ மனிதன் ஓடிக்கொண்டிருக்கின்றான். தான் மட்டும் ஓடினால் பரவாயில்லை. தனது மகன், மகள், பேரன், பேத்தி என்று தன்னுடைய சந்ததியையும் அதே ஓட்டத்தில் இணைத்துவிடுகின்றான். ஒரு நிரலிடப்பட்ட இயந்திரம் (Programmed Machine) போல, தலைமுறைகள் தாண்டி, திரும்பத் திரும்ப ஒரே வாழ்க்கை முறையை, ஒரே பொருளாதார முறையை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்து வருகின்றான். நமது தாத்தா இப்படித்தான் இருந்தார். நமது அப்பா இப்படித்தான் இருக்கின்றார். அப்படியானால் நாமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த கேள்வியும் கேட்காமல் வாழ்ந்து முடித்தவர்கள் அதிகம். ஆனால் மிக மிகச் சிறிய அளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் ஒரு கேள்வி கேட்டார்கள். "நான் ஏன் என் முன்னோர்களைப் போல இப்படியே இருக்க வேண்டும்?" இந்த ஒரு கேள்வி தான் அவர்களின் வாழ்க்கையை மாற்றியது. இவர்கள் மக்களோடு, மக்களாக சமூக ஓட்டத்தினூடே ஓடவில்லை. மாறாக எதிர் திசையில் பயணித்து தனியே ஓட்டத்தை உருவாக்கினார்கள். இவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்யவில்லை. பணத்தை அவர்களுக்காக வேலை செய்ய வைத்தார்கள். ஒரு தலைமுறையின் தியாகம், ஒரு தலைமுறை எடுத்த துணிச்சலான முடிவின் விளைவாக, இன்று அவர்களது சந்ததிகள் பல தலைமுறைகள் பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமின்றி சுகபோகமாக வாழ்கின்றனர். இவர்களால் மட்டும் எப்படி இது சாத்தியமானது? காரணம் நாம் ஒரு முக்கியமான அமைப்பை புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்.. அது தான் வங்கி (Bank). இதை சமகாலத்திற்கு ஏற்றவாறு புரிய வைக்க முயற்சிக்கின்றேன். என்று வங்கி உருவானதோ, அன்றிலிருந்து இன்று வரை, வங்கி தான் மனிதனை ஆள்கின்றது. மனிதன் பணத்தை பயன்படுத்துகின்றான் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையில் பணம் தான் மனிதனை பயன்படுத்துகின்றது. மீண்டும் தெளிவாக நினைவுபடுத்துகின்றேன். ராமன் ஆண்டாலும்.இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை என்று கூறுவதைப் போல சமகாலத்தில் உங்கள் கண்கள் காண மன்னர் ஆண்டாலும் , பிரதமர் ஆண்டாலும், முதல்வர் ஆண்டாலும், ஐனாதிபதி ஆண்டாலும். இவ்வளவு ஏன் இறைவனே நேரடியாக வந்து ஆண்டாலும் சரி, இவை அனைத்தும் கண் துடைப்பு தான். உண்மையிலே உங்களை ஆட்சி செய்வது பணம் தான்.. பண அமைப்பை கட்டுப்படுத்துபவர்களின் தாக்கத்தை விட இங்கு வேறு எதுவும் பெரியல்ல. ஏனெனில், பணத்தை கட்டுப்படுத்துபவர்கள் தான் உண்மையான ஆட்சியாளர்கள். பணத்தை கட்டுப்படுத்துபவர்கள் தான் பொருளாதாரத்தையும் (Economy) கட்டுப்படுத்துகின்றார்கள். பொருளாதாரத்தை கட்டுப்படுத்துபவர்கள் தான் மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றார்கள். உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தை வங்கிகளில் வைத்திருக்கின்றார்கள். என்ன நினைப்பில் இதை செய்கின்றார்கள்? "என் பணம் பாதுகாப்பாக இருக்கின்றது" என்கிற எண்ணத்திலே இதை செய்கின்றார்கள். ஆனால் இவர்கள் கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், பணம் வங்கியில் செலுத்திய பிறகு பணத்தின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. விரும்பும் நேரத்தில், விரும்பும் முறையில், விரும்பும் அளவில், உங்கள் விருப்பம் போல கோடிக்கணக்கில் பணத்தை போட்டு விட்டு அதை நொடிப் பொழுதில் எடுக்க முடியாது. ஒரு நாளில் இவ்வளவு ரூபாய், atm card மூலம் இவ்ளவு ரூபாய், gpay மூலம் இவ்வளவு ரூபாய் என அனைத்திற்கும் ஒரு. வரையறை உள்ளது. பணத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள், விதிமுறைகள் என அனைத்தயும் வங்கி அமைப்புகள் தான் தீர்மானிக்கின்றது. இதற்கு ஒப்புதல் வழங்குவது போல் நடிப்பது தான் மத்திய அரசு. மத்திய கட்டுப்பாட்டு அமைப்புகள் (Central Systems) மூலம் தான் பணம் சார்ந்த அனைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றது என்பது பொதுவான நம்பிக்கை. இந்த நிலையில். பணம் உண்மையில் யாருடையது? மக்களுடையதா? அல்லது அமைப்புகளுடையதா? என்கிற ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. இந்த கேள்விக்கான பதிலைத் தேடும் போது, சட்ட திட்டம், சூழல் என சமகாலத்திற்கு ஏற்றவாறும், முயற்சி செய்தால் நாமும் செய்யலாம். நம்மாளும் முடியும் என்று சொல்லக்கூடிய அளவில் ஒன்று உள்ளது என்றால் அது தான் குடும்ப வங்கி (Family Bank). குடும்ப வங்கி என்றால் என்ன? ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து, தங்களுடைய பணத்தை ஒன்றாக சேர்த்து, அதை திட்டமிட்டு நிர்வகிக்கும் ஒரு தனி பொருளாதார அமைப்பு. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் மாதம் ₹2000 சேர்த்தால், மாதம் ₹10,000 ஒரு வருடத்தில் ₹1,20,000 இந்த பணத்தை சாதாரணமாக செலவு செய்து முடித்துவிடாமல், ஒரு சொத்தாக (Asset) மாற்றலாம். உதாரணம்: தங்கம் வாங்கலாம். சிறிய நிலம் வாங்கலாம். அல்லது வருமானம் தரக்கூடிய ஏதாவது ஒரு முதலீடு (Investment) செய்யலாம். வாடகை வருமானம் வருவது போன்று ஒரு சொத்தை வாங்கலாம். இந்த சொத்து காலப்போக்கில் மதிப்பு அதிகரிக்கும். அது குடும்பத்தின் நிரந்தர செல்வமாக மாறும். இதே முறையை எண்ணிக்கையில் அதிகமுள்ள மக்கள் செய்ய விரும்பினால், அதற்கு சமூக அறக்கட்டளை அமைப்ூப (Community Trust Structure) பயன்படுத்தலாம். அதாவது, பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு சட்டபூர்வமான அமைப்பை உருவாக்கி, அதில் அனைவரும் உறுப்பினர்களாக இருந்து, ஒன்றாக சேமித்து, ஒன்றாக முதலீடு செய்து, ஒன்றாக வளர முடியும். இந்த முறையில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழும். பணம் வங்கியில் இருக்கும் நிலை மாறும். பணம் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை உருவாகும். இதன் மூலம் ஒரு புதிய பொருளாதார சுதந்திரம் (Financial Freedom) உருவாகும். இந்த மாற்றம் ஒரு நாளில் நிகழாது. ஆனால் ஒரு முடிவில் தொடங்கும். அந்த முடிவு ஒரு கேள்வியில் தொடங்கும். "நான் சம்பாதிக்கும் பணம் முழுமையாக என் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?" இந்த கேள்வியை உண்மையாக கேட்கும் மனிதன் தான், ஒரு புதிய பொருளாதார வாழ்க்கையின் முதல் படியை எடுத்து வைத்திருக்கின்றான். இது தான் எங்களுக்குத் தெரியுமே எங்க ஊரில் இதைத் தான் சீட்டு பிடிக்கிறோம் சேரத் தயாரா என்று யாராவது ஒருவர் வந்து தினந்தோறும் கேட்கின்றார் என உங்களில் யாராவது நினைக்கலாம். உண்மைதான் உங்கள் எண்ணம் தவறு இல்லை. அதனால் நீங்கள் கேள்விபட்டதை, அல்லது உங்களுக்குத் தெரிந்ததை சட்ட பூர்வமாகச் செய்வது தான் குடும்ப வங்கி என்று புரிந்து கொள்ளுங்களேன். நம்மில் பலர் செய்யும் தவறு, எனக்குத் தெரியும் என்று சொல்வோமே தவிர எதையும் செய்து பார்ப்பது இல்லை. கேள்விப்படுவோம் செய்யாமல் கடந்து விடுவோம். மேலும் சட்டபூர்வமாக செல்லும் போது உங்கள் நோக்கம் மற்றும் இலக்கைப் பொறுத்து சட்டத்தின் அல்லது அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மானியம் அது இது என்கிற பெயரில் நீங்கள் கற்பனை செய்யாததை விட பல மடங்காகத் திரும்பி வரும். நாமக்கல்லை சேர்ந்த கோழிப் பண்ணை வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் 2 கோடி ரூபாய் கடன் என்று வந்தார். அவரது பிறப்பு அமைப்பின் படி எதை எப்படி செய்ய வேண்டும். எதை செய்யக் கூடாது என்று கூறிவிட்டேன். யோகத்தோடு பிறந்த்திருந்திருத்தாலும், நடுவீட்டில் படுத்து உறங்கினால்? அந்த யோகம் கிடைக்குமா என்ன? அப்படியே கிடைத்தாலும் நம்மிடம் தங்காது. எனவே என்ன நடந்தாலும் நம் உழைப்பு, முயற்சி, திட்டமிடல் சுவாசம் போல இலக்கை அடையும் வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நம் வாடிக்கையாளரிடம் இந்த குடும்ப வங்கி திட்டத்தைப் பற்றி கூறி புரிய வைத்ததேன். அவரது குடும்பத்தில் அப்பா, அம்மா, மனைவி, தங்கை என இவரோடு சேர்த்து மொத்தம் 5 நபர்கள். அவரது குடும்ப சூழலுக்கேற்றவாறு திட்டத்தை அமுல்படுத்தி ஒரு வருடத்தில் 50 லட்சம் கடனை அடைத்துவிட்டேன் என்று சமீபத்தில் அழைத்த போது கூறினார். வேறொரு வாடிக்கையாளரோ நண்பர்களிடத்தில் இந்த முறையை அமுல்படுத்தி மாதம் ஒருவருக்கு கடன் பத்திரம் (bond ) வாங்குகின்றார்கள். உதாரணம் ஒரு கடன் பத்திரத்தின் விலை 1 லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நபர் 10 ஆயிரம் என 10 நபர்கள் 10 ஆயிரம் தரும்போது அது ஒருவரின் பெயரில் கடன் பத்திரமாக மாறிவிடுகின்றது. தனி ஒருவரால் 1 லட்சம் சாத்தியமில்லை என்னும் போது பலர் சேரும் போது அது சுலபமாகிவிடுகின்றது. வணிகம் செய்யும் மூவர் ஒன்று சேர்ந்து தங்களுக்குள்ளே இந்த முறையை அமுல்படுத்தி தங்கள் தேவைகளுக்கு பணம் எடுப்பதும் கொடுப்பதும் என ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியதன் மூலம் தினசரி நான் இவ்வளவு ரூபாய் கட்டியாக வேண்டும் என்கிற நிலையில் இருந்து வந்த கந்து வட்டி சிக்கலில் இருந்து வெளியேறி நிம்மதியாக இருக்கின்றனர். இதைத் தான் பெரியவர்கள் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றனர். இது போல பல அனுபவங்களை கூற முடியும். ஆரம்பத்தில் சற்று சிரமமாகவும் கடினமாகவும் இருக்கலாம். இருக்கும். ஆனால் ஒரு முறை சக்கரம் சுழன்று விட்டால் போதும். உங்களது நிலையே வேறு.தனி உலகத்திற்குள் நுழைந்து விடுவீர்கள். நமது கூட்டு குடும்ப முறையில் இருந்த ஒரு நடைமுறை பழக்க வழக்கம் தான் இது. நாம் ஒற்றுமையாக இருந்தால் நம் குடும்பம் தானே கோடீசுவர குடும்பம். நாம் ஒற்றுமையாக இருந்தால் அவர்களுக்கு வியாபாரம் எப்படி நடக்கும்? விடுவார்களா விளைவு கூட்டுக் குடும்ப முறையை தகர்த்து விட்டார்கள். மீண்டும் நினைவூட்டுகின்றேன். பணத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள், விதிமுறைகள் என அனைத்தயும் வங்கிகள் தான் தீர்மானிக்கின்றது. முழுமையாக நிறைவுபெறவில்லை என்றாலும் கட்டுரை நீண்டு விட்டதாலும் முக்கியமானவற்றை கூறி விட்டேன் என்பதாலும் இத்துடன் நிறைவு செய்கின்றேன். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சித்துப் பாருங்கள் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #🤔புதிய சிந்தனைகள் #@அமானுஷ்யம்@( HORROR )
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - Tired of Banks Controlling Your Money? Start Your Own Community Trust! Community Trust Form a BANK BG More  No Bank Fees Bring everyone together. Grow Wealth Locally Be Financially Independent COMMUNITY TRUST] Pool Resources in Gold & Silver Invest in real assets Take Control of Your Future, Together! Share the Profits Receive dividends together @nellai selvakumaran Tired of Banks Controlling Your Money? Start Your Own Community Trust! Community Trust Form a BANK BG More  No Bank Fees Bring everyone together. Grow Wealth Locally Be Financially Independent COMMUNITY TRUST] Pool Resources in Gold & Silver Invest in real assets Take Control of Your Future, Together! Share the Profits Receive dividends together @nellai selvakumaran - ShareChat
"முறையான கல்வி இல்லை... மூடத்தனமான தொழில் கல்வி இருக்கிறது... அது சாராயம் குடிக்க வைக்கிறது... சாராயம் விற்பவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது... ஜங்க் புட் கம்பெனிக்கு வேலை செய்து கொடுக்கிறது... லஞ்சம் ஊழல் செய்கிறது... அதிகார ஊழல்வாதிகளின் புகழ் பாடுகிறது... முதலாளித்துவத்தை வளர்க்கிறது... பரம்பரை பரம்பரையாக ஊழல்வாதிக்கு வோட்டு போடுவதில் பெருமை கொள்கிறது... பிழைக்கிற வழியைப் பார் என்று அறத்தை வாயடைக்கிறது... எதிர்மறை கருத்துக்களை தத்துவமாக சொல்கிறது.. மூடநம்பிக்கைகளின் உச்சமாகிறது..." #அரசியல்மாற்றம் #விழிப்புணர்வு #சமூகநீதி #சிந்தித்துவாக்களிப்போம் #முறையானகல்வி #மதுவில்லாதமிழகம் #ஊழல்ஒழிப்போம் #அறம்வெல்லும் #SocialAwareness #WakeUpTamilnadu #PoliticalChange #😅 தமிழ் மீம்ஸ் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🙏வணக்கம்💐 #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢