#📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ்
#📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
மதீனா... மஸ்ஜிதுன் நபவி... உயிரிலும் மேலான ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பள்ளிவாசல்...
அந்த புனிதமான இடத்தில்...
2025 ஆம் ஆண்டில் 8,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் "அல் ஹாஃபிழ்" ஆகி முழுக் குர்ஆனை மனப்பாடம் செய்து முடித்துள்ளனர்!
இது ஒரு சாதாரண எண்ணிக்கை अល់ល...
120க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த இளைஞர்கள்...
ஆசைகள் அடக்கி... உலகத்தை ஒதுக்கி...
அல்லாஹ்வின் வார்த்தைகளை என் கல்பில் பதிக்க வேண்டும்" என்று தீர்மானித்து...
புனித அல் குர்ஆனை மனப்பாடம் செய்கிறார்கள்.
இந்த சாதனையின் பெருமை எவ்வளவு தெரியுமா?
50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது (Quran study circles) மூலம் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகின்றனர்.
இந்த கல்வி மஸ்ஜிதின் சுவர்களுக்குள் மட்டும் அல்ல...
உலகம் முழுக்க Digital platform மூலமாகவும் சென்றடைந்து வருகிறது!
உலகத் தரமான உஸ்தாத்கள், இமாம்கள் மற்றும் அமைப்புகள் வழிநடத்தும் கட்டுப்பாட்டான அமைப்பு!
புனித அல் குர்ஆன் மனப்பாடம்... வெறும் ஓதல் அல்ல...
அது ஒரு மகத்தான கல்வி ஈருலகம் போற்றும் வெற்றி
அது ஒரு ஈமானின் கவசம்...
ஒரு ஹாஃபிழ் உருவாகும் போது...
அவர்கள் பரம்பரைக்கு அல்லாஹ்வின் அருள் பொழிந்துகொண்டே
இருக்கும்...
அந்த குடும்பத்தில் பரகத் இறங்குகிறது...
அந்த வீட்ற்கு சைத்தான்கள் வர தயங்கும்...
அந்த குடும்பத்திற்கு இம்மையிலும் மறுமையிலும் பெரிய மதிப்பு, மரியாதை கிடைக்கும்...
அந்த நாட்டில் அல்லாஹ்வின் வார்த்தைகள் உயிர் பெறுகிறது...
இன்னும் மாட்டிலடங்காத பாக்கியங்கள் கிடைக்கும்...
ஒரு கேள்வி...
நாம் குர்ஆனை எப்போது திறக்கிறோம்?
நாம் குர்ஆனை எப்போது வாழ்வில் நடைமுறைப்படுத்தினோம்?
இன்று குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள் வென்றார்கள்...
ஆனால்...
குர்ஆன் நம்மை மாற்றவில்லை என்றால்... நாம் தோற்றுவிட்டோம்...
யா அல்லாஹ்! இந்த 8,000 ஹாஃபிழ்களுக்கும் உன்னுடைய பாதுகாப்பையும் பரகத்தையும் அருள்வாயாக.
அவர்களை உம்மத்தின் ஒளியாக ஆக்குவாயாக.
அவர்களுக்கு கற்றுத் தந்த ஆசான்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை கொடுப்பாயாக.
அவர்களை குர்ஆனின் சாட்சிகளாகவும், உலகின் வழிகாட்டிகளாகவும் ஆக்குவாயாக. ஆமீன்
இந்த பதிவு உங்களின் இதயத்தைத் தொடுந்திருந்தால்...
ஒரு விஷயத்தை இன்று உறுதி செய்யுங்கள்...
“நான் தினமும் குறைந்தது 5 நிமிடம் குர்ஆன் ஓதுவேன்."
அல்லாஹ் என் ஓதலை பார்த்துக் கொண்டிருக்கிறான்...
அந்த 5 நிமிடம்... உங்கள் வாழ்க்கையை மாற்றும்... இன்ஷாஅல்லாஹ்.
#📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
#📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋
யா அல்லாஹ்
இந்த பாக்கியத்தை முஃமினான முஸ்லிம் அனைவருக்கும் வழங்குவாயாக ...
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ்
#இஸ்லாமிய கேள்வி பதில் #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #📗குர்ஆன் பொன்மொழிகள்
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ்
காதலுக்கு_எதிரியா_இஸ்லாம்?
யார் சொன்னது, இஸ்லாம்_காதலுக்கு எதிரி” என்று.
நேர்மையான, கண்ணியமான_காதலுக்கு ஒருபோதும் இஸ்லாம்_எதிரியல்ல.
காதல்_ஓர்_இயற்கை_உணர்வு.
இஸ்லாம்_ஓர்_இயற்கை_நெறி.
இயற்கை, இயற்கையோடு எந்த நாளும் மோதாது.
முதல் மனிதர், முதல் இறைத்தூதர் ஆதமும் அவரிலிருந்தே அவருடைய துணை ஹவ்வாவும் எந்த வினாடி படைக்கப்பட்டார்களோ அந்த வினாடியே காதலும் தோன்றிவிட்டது.
உலகின்_முதல்_காதல்_ஜோடி
ஆதம்_ஹவ்வாதான்.
சரி, இறைத்தூதர்களின் வாழ்வில் காதல் இருந்ததா?
இருந்தது, சுருக்கமாகச் சொல்கிறேன்.
தன் கால்நடைகளுக்கு நீர் புகட்ட உதவிய மூஸா_நபியை அந்தப் பெண்ணின் மனம் பற்றிப் படர்ந்தது.
தன் தந்தையிடத்தில் அவரைப் பற்றி உயர்வாகப் பேசி, அவரையே வேலைக்கு வைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறாள்.
அந்தப் பெண் நாணத்துடன் நடந்து வந்து, “என் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று மூஸா_நபியிடம் சொன்னபோது அவள் உள்ளத்தில் எத்தனை எத்தனை பூக்கள்_மலர்ந்தனவோ..!
எட்டு அல்லது பத்து ஆண்டுகள் மாமனாரிடம் வேலை பார்த்து அந்தப் பெண்ணைக் கைபிடித்தார் மூஸா_நபி.(பார்க்க- குர்ஆன் 28:22-28)
மூஸா_நபியின்_காதல்
ஏழையின்_காதல்” எனில்,
சுலைமான்_நபியின்_காதல் ராஜகுமாரனின்_காதல்.”
சுலைமான்_நபி_மன்னாதி_மன்னர்.
நினைத்ததை முடிப்பவர்.
அவருடைய காதலும் ஒரு மாமன்னரின் தகுதிக்கு ஏற்பவே இருந்தது.
ஸபா நாட்டு ராணி குறித்துப் பறவை வந்து சேதி சொன்ன நிமிடத்திலிருந்து சுலைமான் நபியிடம் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது.
“தன்னை ஏற்றுக்கொண்டு பணிந்து வருமாறு” மகாராணிக்குக் கடிதம் எழுதியதுடன் நில்லாமல்,
அவளை வரவேற்க அவர் என்னென்ன ஏற்பாடுகள் செய்தார் என்பதைத் திருக்குர்ஆன் மிக அழகாக விவரிக்கிறது. (பார்க்க- குர்ஆன் அத்தியாயம் 27 அந்நம்ல்)
சரி, நம் கண்மணி_நாயகத்திடம் வருவோம்.
அவருடைய முதல்_திருமணமே
காதல்_திருமணம்தான்.
நபிகளாரின் இளமை, அழகு, வாய்மை, நேர்மை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட கதீஜா, தம் தோழியைத் தூதுவிட்டு, தம் எண்ணத்தை வெளிப்படுத்தி, திருமணம் முடித்தார் என்பது வரலாறு.
நபிகளாரின் வாழ்வில் இன்னொரு சுவையான நிகழ்வு.
மதீனாவில் ஒரு பெண், இறைத்தூதரைத் தன் இதயத்தில் இருத்தி நேசிக்கிறாள்.
தன்னை அவருக்கே அர்ப்பணித்திட வேண்டும் என்று விரும்புகிறாள்.
ஒருநாள் தோழர்கள் புடைசூழ நபிகளார் அமர்ந்திருக்கிறார்.
ஆண்கள் நிறைந்த சபை.
அந்தப் பெண் அங்கு வந்து நபிகளாரை நோக்கி, “இறைத்தூதர் அவர்களே, என்னை உங்களுக்கே அர்ப்பணிக்க விரும்புகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று தன் விருப்பத்தை (காதலை) வெளிப்படுத்துகிறாள்.
நபிகளார் எந்த மறுமொழியும் சொல்லாமல் அமைதி காக்கிறார்.
அந்தப் பெண் மூன்று முறை இதே போல் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.
அப்போதும் நபிகளார் எந்த மறுமொழியும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
உடனே தோழர்களில் ஒருவர் எழுந்து, “இறைத்தூதர் அவர்களே, அந்தப் பெண்ணை ஏற்றுக்கொள்ள நீங்கள் விரும்பவில்லை எனில் எனக்கு மணமுடித்துவையுங்கள்” என்று கேட்கிறார்.
இந்த ரீதியில் அந்த நபிமொழி தொடர்கிறது.
தன் எண்ணத்தை வெளிப்படுத்திய அந்தப் பெண்ணை நபிகளார் கண்டிக்கவும் இல்லை, தண்டிக்கவும் இல்லை.
இந்த நிகழ்வுகளிலிருந்து என்ன தெரிகிறது?
நேர்மையான- கண்ணியமான காதலுக்கு இஸ்லாம் எதிரி அல்ல.
அப்படியானால் இஸ்லாம் எத்தகைய காதலைத் தடுக்கிறது?
மரத்தடிக் காதல்,
மண்டபக் காதல்,
மகிழுந்துக் காதல்,
மறைமுகக் காதல்,
ஓடிப்போகும் காதல்
கட்டாயக் காதல்
காமக் காதல்,
திரையரங்குக் காதல்,
திருட்டுக் காதல்,
இருட்டுக் காதல்
இத்தகையக் காதலுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை.
கண்ணியமான காதலுக்கு இஸ்லாம் ஒருபோதும் எதிரி இல்லை. #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋யா அல்லாஹ்
#🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋
#🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋




![📗குர்ஆன் பொன்மொழிகள் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தூஹீ எதை சாப்பிட்டால் நோயாளியின் மனத்திற்குஆறுதல் அளிக்கும் கவலைகளில் சிலவற்றை போக்கும் என்று ுஸல்) அவர்கள் நபி கூறினார்கள் ? தல்பினாபபார்லி கஞ்சி) A) B] Gల6r c) பால் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தூஹீ எதை சாப்பிட்டால் நோயாளியின் மனத்திற்குஆறுதல் அளிக்கும் கவலைகளில் சிலவற்றை போக்கும் என்று ுஸல்) அவர்கள் நபி கூறினார்கள் ? தல்பினாபபார்லி கஞ்சி) A) B] Gల6r c) பால் - ShareChat 📗குர்ஆன் பொன்மொழிகள் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தூஹீ எதை சாப்பிட்டால் நோயாளியின் மனத்திற்குஆறுதல் அளிக்கும் கவலைகளில் சிலவற்றை போக்கும் என்று ுஸல்) அவர்கள் நபி கூறினார்கள் ? தல்பினாபபார்லி கஞ்சி) A) B] Gల6r c) பால் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தூஹீ எதை சாப்பிட்டால் நோயாளியின் மனத்திற்குஆறுதல் அளிக்கும் கவலைகளில் சிலவற்றை போக்கும் என்று ுஸல்) அவர்கள் நபி கூறினார்கள் ? தல்பினாபபார்லி கஞ்சி) A) B] Gల6r c) பால் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_38067_17d16666_1771157036571_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=571_sc.jpg)








