💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
ShareChat
click to see wallet page
@sudarsan142
sudarsan142
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
👉 என் சாதனைகள் என் தேடலில் 👈 சாதனையின் ஒவ்வொரு தொடக்கமும் தேடலில் இருந்துதான்...!! தேடல் முயிற்சியாகும் முயற்சி பயிற்சியாகும் பயிற்சி வெற்றியின் பாலமாகும்...!! வெற்றி சாதனையாகும் சாதனை நாளைய சரித்திரமாகும்...!! 👉 சுதர்சன் சொல் 👈 அ _ அந்த சொல் ஆ _ ஆர்ப்பரிக்கும் சொல் இ _ இந்த சொல் ஈ _ ஈண்ற சொல் உ _ உன் சொல் ஊ _ ஊண்று கொள் சொல் எ _ என் சொல் ஏ _ ஏற்ற மிக்க சொல் ஐ _ ஐயம் இல்லாத சொல் ஒ _ ஒரே சொல் ஓ _ ஓங்காரம் சொல் ஔ _ ஔவை சொல் ஃ _ அஃதே என் சொல்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - இன்றையசோதனை நாளைய சாதனை ஏதோ ஒன்றுக்காக 44 நம்மை காலம் காக்க வைத்துக் 9 கொண்டு தான் இருக்கிறது Sudarsan] Sudorsn இன்றையசோதனை நாளைய சாதனை ஏதோ ஒன்றுக்காக 44 நம்மை காலம் காக்க வைத்துக் 9 கொண்டு தான் இருக்கிறது Sudarsan] Sudorsn - ShareChat
👉 எதார்த்தம் ஆனால் உண்மை 👈 👉 நட்புக்கு விஷம் கிடையாது அன்பு பாசத்திற்க்கு வேஷம் கிடையாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் 👈 👉 ஆறு அறிவுக்கு இல்லாத தூய நட்பு ஐந்தறிவுக்கு உண்டு (எடுத்துக்காட்டு) மலைப்பாம்பு எதையும் விழுங்கும் நாய் அதை கண்டால் மிரளும் ஆனால் நட்பு என்று வந்தால் மலைப்பாம்பு தலையும் கொடுக்கும் நாய் அதன் நாக்கால் வருடியும் கொடுக்கும் 👈 நெஞ்சத்தே வஞ்சம் வைத்தே நித்தமும் வேஷமிடும் மாந்தரினின் சபை நடுவே அச்சமற்ற அகத்தினோடு ஐந்தறிவில் அழகாய் உண்மையான ஒரு உயிர் ஒரு நட்பு...!! குறிப்பு : சில மனிதபதருகள் கொடிய விஷம் உள்ள பாம்பை விட மோசமானதாக உள்ளதுங்கள் மனித உருவில் ஊரில் உலா வந்துக்கொண்டு இவைகளை விட இந்த ஐந்து அறிவு கொண்ட ஜீவன்கள் எவ்வளவோ சிறந்தது இன்றைய காலகட்டத்தில்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - Suooson Sudarson Suooson Sudarson - ShareChat
👉 தன்னம்பிக்கை 👈 தன்னம்பிக்கை நம்மை பின் தொடர்வது நாம் பின்தொடர வேண்டியது மானுட வாழ்வியல் கோட்பாட்டில் உள்ளது...!! தன்னம்பிக்கை என்பது ஓர் உயிர் மூச்சாகும் உயிரில்லாதவன் பிணத்திற்கு சமம் என்பதுபோல் தன்னம்பிக்கை இல்லாதவன் உயிரற்ற ஜடத்திற்கு இணையாக கருதப்படுவார்கள்...!! யாராக இருந்தாலும் வெற்றியின் விளிம்பை அடையவும் வாழ்வில் உன்னத நிலையை அடையவும் தன்னம்பிக்கை என்பது மிகவும் அவசியம்...!! தன்னம்பிக்கை உடையவர்களே வாழ்வில் வெற்றி பெற்று உயருவார்கள்...!! ஒவ்வொரு விடியலும் கதிரவனின் தன்னம்பிக்கை...!! ஒவ்வொரு பௌர்ணமியும் நிலவின் தன்னம்பிக்கை...!! ஒவ்வொரு தளிரும் ஒரு செடியின் தன்னம்பிக்கை...!! ஒவ்வொரு விதையும் ஒரு மலரின் தன்னம்பிக்கை...!! ஒவ்வொரு மலரும் கனியின் தன்னம்பிக்கை...!! ஒவ்வொரு போட்டியும் ஒரு வீரரின் தன்னம்பிக்கை...!! ஒவ்வொரு வெற்றியும் ஒரு தோல்வியின் தன்னம்பிக்கை...!! தன்னம்பிக்கை தடைகல்லை உடைத்தெறியும் வெடிக்கல்லாகும் தன்னம்பிக்கையே ஒருவர் வாழ்வின் முதல் மூலதனமாகும் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு கொண்டாடத்தின் தன்னம்பிக்கை இதுதான் என் தன்னம்பிக்கை...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - தன்னம்பிக்கை முடங்கி கிடந்தால் முடக்கம் உனது! எழுந்து நடந்தால் பாதை உனது! எதிர்த்து நின்றால் வாழ்க்கை உனது! உறுதியோடு உண்மையாய் போராடு! உன்னை வெல்லயாரும் கிடையாது! தன்னம்பிக்கை Sudarsan Sudorson தன்னம்பிக்கை முடங்கி கிடந்தால் முடக்கம் உனது! எழுந்து நடந்தால் பாதை உனது! எதிர்த்து நின்றால் வாழ்க்கை உனது! உறுதியோடு உண்மையாய் போராடு! உன்னை வெல்லயாரும் கிடையாது! தன்னம்பிக்கை Sudarsan Sudorson - ShareChat
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈 திரைப்படம் பேசினால் அரசியல் தெரியாதோ என்பீர்...!! அரசியல் பேசினால் ஆறடி தள்ளி நிற்பீர்...!! மொழிப்பற்று கொண்டால் ஆங்கிலம் புரியாதோ என்பீர்...!! ஆங்கிலம் பேசினால் படித்த திமிர் என்பீர்...!! பகுத்தறிவு பேசினால் கடவுள் பிடிக்காதா என்பீர்...!! கடவுள் நம்பிக்கை கொண்டால் கர்னாடகம் என்பீர்...!! சகோதரத்துவம் சொன்னால் நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்...!! ஜனநாயகம் பேசினால் நாட்டின் இறையான்மைக்கெதிரானது என்பீர்...!! காதல் பிடிக்காதென்றால் ஆண்மையில் ஐயம் கொண்டவரா என்பீர்...!! காதல் பற்றி பேசினால் காதுகளைப் பொத்திக்கொள்வீர்...!! மெஞ்ஞானம் பேசினால் விஞ்ஞானம் அறியீரோ என்பீர்...!! விஞ்ஞானம் பேசினால் விலகித் தள்ளி நிற்பீர்...!! ஓடி ஓடி உழைத்தால் பணத்தாசை பிடித்தவன் என்பீர்...!! பொருள் வேண்டாமென்றாலும் பிழைக்கத் தெரியாதவான் என்பீர்...!! எதிர்த்துப் பேசினால் அதிகப்பிரசங்கி என்பீர்...!! பேசாமலிருந்தால் கல்லுலிமங்கன் என்பீர்...!! எத்தனை கடினம் இவ்வுலகில் நான் நானாய் வாழ்வதில்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலேடுகிறான் சாக்ரடீஸ் உண்மையை Throi" | வீர்டி சாய்பாபு சொல்பவன் பேசுபவன் மடையன் முட்டாளாக மாற்றபடுகிறான் Sudarsan Sudarsan வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலேடுகிறான் சாக்ரடீஸ் உண்மையை Throi" | வீர்டி சாய்பாபு சொல்பவன் பேசுபவன் மடையன் முட்டாளாக மாற்றபடுகிறான் Sudarsan Sudarsan - ShareChat
👉 பொறுத்தார் பூமி ஆள்வார் 👈 ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது அம்மா வாத்து முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரித்தது...!! பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும் துறுதுறுப்பாகவும் இருந்தன...!! ஆனால் அதில் ஒரு குஞ்சு மட்டும் அழகும் அடர்த்தியும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் அசிங்கமாக இருந்தது அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது...!! உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே பிடிக்கவில்லை அதன் தாய்கூட அதை வெறுத்து அதை மட்டும் ஒதுக்கிவிட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது...!! அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் வேதனை அடைந்தது...!! நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாக பிறந்தேன் முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே என்று வேதனையுடன் அழுது கதறியது நாட்கள் ஓடின...!! மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின இதுவோ உயரமாகவும் மேலும் நிறமற்றும் காணப்பட்டது தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு முடிகள் வளர்ந்து அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று...!! தினமும் வேதனையும் கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது...!! சில வேளைகளில் அன்பாய் அம்மாவையும் சகோதரர்களையும் நெருங்கும் ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும் மேலும் கொஞ்ச நாள் சென்றது...!! அசிங்கமாக இருந்த வாத்துக் குஞ்சின் நிறமற்ற முடிகள் பிரகாசிக்கும் வெண்மை நிறமானதாக மாற ஆரம்பித்தன தலையில் நீண்டிருந்த முடிகள் அழகான கொண்டையாக மாறிற்று இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன...!! இப்போது அந்த அசிங்கமான வாத்துக்குஞ்சு கண்கொள்ளா அழகுடன் காட்சியளித்தது...!! அம்மா வாத்துக்கும் கூடப் பிறந்த மற்ற வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போனது அதன் அருகில் நெருங்கக்கூட கூச்சமடைந்து வெட்கப்பட்டன...!! நடந்தது என்னவென்றால்...!! ஒரு அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டையிட்டுச் சென்றுவிட்டது...!! இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடைகாத்து குஞ்சு பொறித்து விட்டது...!! அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு...!! ஒரு நாள் வந்தது...!! அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றம் அளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு உந்துதல் தோன்றியது...!! படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது கேலி செய்தவர்கள் வெறுத்து விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ள...!! அன்னப்பறவை கம்பீரமாய் உயர உயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது...!! எவர் கண்டார் உங்களைத் தூற்றபவர்கள் யாவரும் வாத்து கூட்டங்களாக கூடஇருக்கலாம்...!! உங்கள் திறமையான சிறகுகள் வளர்ந்து...!! உங்கள் காலம் கனிந்து அன்ன பறவையாய் மாறும் காலம் வரை பொறுத்திருங்கள்...!! ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்...!! உங்களுக்கான நேரத்தை இறைவன் ஒதுக்கி கொடுப்பான்...!! அது வரை சற்று நிதானமாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - Sudarsan Sudarsan Sudarsan Sudarsan - ShareChat
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈 👉 முள்ளம்பன்றிக் கோட்பாடும் மனிதர்களும் தெரிந்துக் கொள்வோம் 👈 முள்ளம்பன்றிகளால் ஒன்றோடு ஒன்று நெருங்கி வாழ முடியாது அவற்றில் காணப்படும் முட்கள் காரணமாக எதிரிகள் மட்டுமல்ல சொந்த குட்டிகளைக் கூட அரவணைக்க முடியாது...!! குளிர்காலம் வந்து விட்டால் முட்களின் குத்துக்களை தாங்கிய வண்ணம் அவைகள் வெப்பத்தைத் தேடி நெருக்கமாக வந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும் வெப்பம் கூடும் போது குளிர்ச்சியை தேடி தூரமாகிவிடும் இப்படியே கிட்ட வருவதும் தூர செல்வதுமாக அவைகளின் குளிர்கால இரவுகள் கழிகின்றன...!! அதிகம் நெருங்குவதால் காயங்கள் அதிகரிக்கும் அதிகம் விலகுவதால் உயிருக்கு ஆப்பத்தாகிவிடும்...!! அதேபோல் மனிதர்களுடான நமது உறவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் நம்மில் யாரும் முட்கள் இல்லாதவர்கள் இல்லை வலிகளை சுமக்காமல் உறவுப் பாலத்தை கட்டியமைக்கவும் முடியாது...!! குறைகள் இல்லாத நண்பன் தேடியவன் காலமெல்லாம் தனித்து வாழ வேண்டி வரும் குறைகள் இல்லாத துணையை தேடியவன் காலமெல்லாம் திருமணம் முடிக்காமல் வாழ வேண்டி வரும்...!! சச்சரவு இல்லாத சகோதரனை தேடியவன் காலமெல்லாம் தேடிக்கொண்டே இருப்பான்...!! குறைகள் இல்லாத உறவினர்களை எதிர்பார்த்து வாழ்பவன் காலமெல்லாம் உறவுகளை துண்டித்தே வாழவேண்டி வரும்...!! குறைகளையும் பிழைகளையும் சுமக்காமல் வாழ்க்கை வண்டி நேராக பயணிக்காது...!! மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் எல்லாவற்றுக்கும் விளக்கம் தேடிப் போகாதீர்கள் எல்லாவற்றையும் அலசி ஆரயாதீர்கள் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யதீர்கள்...!! மாணிக்கமா மரகதமா என்று தேடிப் பார்த்தவனுக்கு சுட்டச்செங்கல் என்று தெரியவந்த கதை போல் ஆகிவிடும்...!! யாரையும் அளவுக்கதிகம் தெரிந்தது கொள்ள முற்படாதீர்கள் தெரியாமலும் இருந்து விடாதீர்கள்...!! முகத்துக்கு முன்னால் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதோடு நாம் நின்றுகொள்வது நமக்கு நல்லது...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - Sudarsan Sudarsan Sudarsan Sudarsan - ShareChat
🙏🙏🙏 அம்மா அப்பா 🙏🙏🙏 🙏 அம்மா 🙏 அம்மா நடமாடும் தெய்வம் அம்மா...!! கருவறை உள்ள கடவுள் அம்மா...!! உயிர் தந்த உயிர் உயிர் வளர்த்த உயிர் அம்மா...!! மனதில் அழியாத ஓவியம் மறக்க முடியாத காவியம் அம்மா...!! ஆடுகளும் மாடுகளும் கூட உச்சரிக்கும் உயர்ந்த சொல் அம்மா..!! வாய் பேசாத ஜீவன்களும் பேசிடும் ஒரே சொல் அம்மா...!! மகனின் வாழ்வு ஒளிர்ந்திட உருகிடும் மெழுகு அம்மா...!! உச்சங்களின் உச்சம் உலகின் உச்சம் அம்மா..!! அன்பின் சின்னம் அமைதியின் திரு உருவம் அம்மா...!! திசைக் காட்டும் கலங்கரை விளக்கம் அம்மா...!! கரை சேர்க்கும் தோணி உயர்த்திடும் ஏணி அம்மா...!! நேசம் பாசம் மிக்கவள் வேசம் அறியாதவள் அம்மா...!! 🙏 அப்பா 🙏 பெண் பிள்ளையிடம் செல்லமாகவும் ஆண் பிள்ளையிடம் வெற்று கோபமாகவும் இருப்பவரே...!! பிறந்த பொழுது தாலாட்டு பாடாது தலைமாட்டிலே வசிப்பாரே மார் மீது தூங்க வைத்து மையிருட்டு வேளையிலும் மனதார ரசிப்பாரே நடை பழகிய பின்னரும்கூட நாட்கணக்காய் தோள்மீதும் சுமப்பாரே...!! தேவையானதை கண்டறிந்து தேடித்தேடி செய்வாரே ஆனால் மீசை அரும்பியதும் பேசும் வார்த்தையும் சுருங்கிடுமே ஆசையாய் அவர் சொல்லும் ஓர் வாசகமும் மருந்தென்று கசந்திடுமே...!! மழைலையாய் இருந்த காலத்தில் அவர் சொல் மந்திரமாய் தோன்றியதே அகவை முவ்வாறானதும் அவை எல்லாம் முழுவதுமாய் மறந்ததே வீட்டிற்குள்ளே எதிரியென வெளிநடப்பு செய்துவிட்டு அவர் இல்லாத நேரத்திலே அதிகாரமாய் குரல் கொடுக்கும் போதுகூட வந்தவுடன் சாப்பிட்டானா என அவனறியாது கேட்பாரே...!! அவர் செய்த தியாகம் என்னவென்று புரிவதற்குள் பூமியில் இடமின்றி பூக்களோடு புன்னகைத்து புகைப்பட சாட்சியாய் சுவர்மீது சாய்ந்திருப்பார் அவர் தான் அப்பா...!! 💘🐦💜 Sudarsan Sudardan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:14
👉 தொடர்ச்சி 👈 தென்பொதிகை பிறந்த மொழி தென்பாண்டி வளர்ந்த மொழி தேனினும் இனிய மொழி தெவிட்டாத செந்தமிழ் மொழி அமிழ்தினும் இனிய மொழி ஆண்டாண்டுகளாய் வாழும் மொழி அன்னை மடியை விஞ்சும் மொழி அனைத்து என்னை மகிழும் மொழி எனது தாய்மொழி தமிழ்மொழி தான்...!! குறிப்பு : என் தமிழ் படிப்பதால் நான் பிச்சை எடுக்க மாட்டேன் ஆயிரம் பெருக்கும் தமிழை தாரவார்த்து தந்து அவர்களுக்கும் தமிழின் பெருமையை பரப்பி காட்டும் குணம் கொண்ட மொழி என் தமிழ் தாய்மொழி தான் என நினைவில் கொள்ளவும் அடக்கும் மொழி அல்ல என் தமிழ்மொழி அதே சமயம் அடங்கி போகும் மொழியும் இல்லை என் தமிழ் தாய்மொழி என்பதையும் மறவாதீர்கள்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - ShareChat
00:51
வ‌ட‌மொழி ய‌டைத்த‌ மாம‌றைக் க‌த‌வினைத் திட‌முட‌ன் திற‌ந்த‌ தேன்மொழி என‌து தமிழ்மொழி...!! மும்மையை யுண‌ர்த்தி முப்பொருள் காட்டும் செம்மை வாய்ந்த‌ செந்த‌மிழ் என‌து தமிழ்மொழி...!! பொல்லாப் பிள்ளையின‌‌ருளினால் ந‌ம்பிமுன் தில்லையிற் க‌ண்ட‌ திருமொழி என‌து தமிழ்மொழி...!! ஆறுசேர் ச‌டையான‌வைமுன‌ம் அணிபெற‌ நீறுசேர் சேர‌ர் நிக‌ழ்த்திய‌ தீந்த‌மிழ் த‌த்துவ‌ம் யாவும் த‌மிழ்மொழி யுண‌ர்த்த‌லால் ச‌த்திய‌ஞ் செய்வேன் என்தாய்மொழி அதுவே என்...!! நம் தமிழ்த்தாய் தாய்ப்பால் தந்து பல அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாட்டிலும் சரி வடமாநிலத்திலும் வயிறு முட்ட.கொடுத்தவள் என் தமிழ்தாய் தான் என உணர்த்துவேன் நான்...!! தாய்மொழி எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும் எனக்குக் கவலையில்லை தமிழன் என்று சொல்லி நான் பெருமை கொள்வதை விட முதலில் மனிதனாய் வாழ்ந்துகொள்ள பழகிக் கொள்கிறேன் என சூலுரைப்பவன் தமிழன் மட்டுமே...!! 👉 முழு விடியோ போட முடிய வில்லை தொடர்ச்சி மூன்றாம் விடியோவில் பார்க்கவும் 👈 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
01:30
🙏 என் தாய்மொழி 🙏 என்னைத் தாலாட்டிய மொழி எனதருமைத் தாய் மொழி என் இனிய தமிழ் மொழி எண்ணமெல்லாம் நிறைந்த மொழி...!! என்னை நான் தொலைத்த போது என்னுள்ளே புதைந்த போது எண்ணெய் ஆக மிதந்து என் எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி...!! இதயத்தின் நாளங்கள் முஹாரி மீட்டினாலும் இனிமையான கல்யாண ராகம் பாடினாலும் இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய் இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே...!! முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில் முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும் முகவரி இழக்காது இலக்கிய உலகில் முத்தாக மிளிரச் செய்யும் இனிய மொழி...!! கம்பன் என்றொரு கவிஞனும் கர்ஜித்த பாரதி என்னும் புலவனும் கருதுமிழ்ந்து கவிதை தந்த பாரதிதாசனும் கண்ணதாசன் என்னும் கவியரசனும் எப்போதும் அணைத்துக் கொண்ட மொழி எப்பொழுதும் கவிபாடிக் களித்த மொழி என்னுடல் கருகிச் சம்பலாகினாலும் என் சம்பலோடு பூத்து கமழ்ந்திருக்கும் தமிழ்மொழி...!! 👉 முழு விடியோ போட முடிய வில்லை தொடர்ச்சி இரண்டாம் விடியோவில் பார்க்கவும் 👈 💘🐦💜 Sudarsan Sudarsan #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - ShareChat
01:30