
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
👉 சிரிப்பும் கருத்தும் 👈
😂😂😂 சுதர்சன் எப்படி டா இப்படி 😂😂😂
👍 நிதர்சனம் சொல்வது சுதர்சனம் 👍
நாலு பேரோட பதிவை போய் பாருங்கள்
அதோடு என்னோட பதிவை கம்ப்பேர் பண்ணுங்க நல்ல தரம் நல்ல கருத்து இருக்கும் நம்பி வாங்க சந்தோஷமாக போங்க 😂😂😂
பிடிச்சு இருந்தால் லைக் போடுங்க
இது லலிதா ஜூவல்லரி வாக்குறுதி அல்ல
சுதர்சன் வாக்குறுதி😂😂😂
அப்பா அந்தக் காலத்தில 3G 4G 5G இல்லாமல் எப்படி தான் வாழ்ந்திங்களோ
மகனே நாங்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு மூன்று ஜீ இருப்பாங்கள்
மாதாஜி
பிதாஜி
குருஜி
ஒரு அறை விட்டாங்கன்னா எங்களுக்கு எல்லா நெட்வொர்க் ஓபன்
ஆகிவிடும்😂😂😂
மகன் மகள்களிடம் தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி விறைப்பா நடந்துக்குற அப்பாக்களை
காமடி பீஸ் ஆக்குவதற்கென்றே பிறக்கிறார்கள் பேரன்
பேத்திகள் 😂😂😂
என்னாதான் கோக் பெப்சியை குழாய் போட்டு உறிஞ்சி தலை குனிந்து குடித்தாலும்
நம்ம ஊர் கோலி சோடாவை தலை நிமிர்ந்து குடிப்பதில் ஒரு கெத்து
தான் 😂😂😂
ஒரு கழுதை படம் வைத்தால் யோகம் வரும் என நம்பிய நாமதான்
மரம் வைத்தால் மழை வரும் என நம்ப மறுக்கிறோம் 😂😂😂
கண்ணாடியை கண்டு பிடித்தவன் பெல்ஜியம்காரனா இருக்கலாம்
ஆனால் அதில் விபூதி போட்டு துடைத்தால் தான் பளபளப்பாக இருக்குமுன்னு கண்டுபிடிப்புக்கு நம்ம ஆளுங்க
தான்😂😂😂
துணி கிழிஞ்சு போச்சே என அழுத காலம் போயி
கிழிஞ்ச துணிந்தான் வேண்டும் என அழற காலம் வந்துருச்சி
நல்ல வளர்ச்சி 😂😂😂
இது எப்படி இருக்கு😍😍😍😍😍
💘🐦💜 Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🙏🙏🙏 உன் கஷ்டத்தில் மட்டும் கடவுளை தேடாதே இஷ்டத்தோடு தேடு 🙏🙏🙏
ஒரு கட்டுமான எஞ்சினியர்
13 வது மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…!!
ஒரு முக்கியமான வேலை…!!
கீழே ஐந்தாவது மாடியில் வேலை
செய்து கொண்டு இருந்த
கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…!!
செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்...!!
ம்ஹும் கொத்தனார் வேலை
மும்முரத்தில் சித்தாளுடன் பேசிக்
கொண்டிருந்தார்…!!
போனை எடுக்கவில்லை...!!
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்...!!
அப்பொழுதும்
கொத்தனார் மேலே பார்க்கவில்லை…!!
இவ்வளவுக்கும்
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில்
இருந்து அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…!!
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…!!
ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து
சுருட்டி மேலே இருந்து கொத்தனார்
அருகில் போட்டார்…!!
ரூபாயைப் பார்த்த கொத்தனார்
அதை எடுத்து தன் பையில்
போட்டுக் கொண்டார்…!!
ஆனால் சற்றும் மேல்
நோக்கிப் பார்க்கவில்லை…!!
என்ஜினியருக்கு ஒரே கோபம்...!!
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…!!
ஒரு ஐநூறு ரூபாயை அதே போல்
கொத்தனார் மேல் போட்டார்…!!
அதையும் எடுத்து சட்டைப் பையில்
வைத்துக் கொண்டு கொத்தனார்
மும்முரமாக வேலையில் இருந்தார்…!!
எஞ்சினியர் பொறுமை இழந்து
ஒரு மிகச் சிறிய கல்லை எடுத்து
கொத்தனார் மீது போட்டார்…!!
அது அவரது தோள் மீது பட்டவுடன்
மேலே பார்த்தார்…!!
அப்பொழுதுதான் எஞ்சினியர்
தன்னை அழைத்தார் என்பதை
உணர்ந்தார்…!!
மனிதனும் அப்படித்தான்
மேலே இருந்து இறைவன்
அவனை அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை…!!
உலக மாயைகளில்
சிக்கித் தவிக்கின்றான்
இறைவன் அவனுக்கு
அருட்கொடைகளை அளிக்கின்றான்...!!
அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...!!
ஆனால் ஒரு
துன்பம் நேரும் பொழுது தான்
இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்...!!
எல்லா நேரங்களிலும்
இறைவனை நினைவு கூர்வோம்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 பணம் 👈
இறைவன் பணத்தை படைத்திருந்தால் இதயம் வைத்திருப்பான் அதில் இரக்கத்தையும் இணைத்திருப்பான்
இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான் இதயத்தை இணைக்க தவறிவிட்டான் அதில் இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான்...!!
காகிதபணத்திற்கு ஏழைகளில் கதறல் கேட்குமா மனிதர்களின் பாசம்தான் புரியுமா...!!
மனிதர்களுக்கு பணம் அவசியம்
அதைவிட பாசம் முக்கியம் பணம் நம்மைவிட்டுப்போனால் திரும்ப வந்துவிடும் ஆனால் பாசம் விட்டுப்போனால் அதிலுள்ள
மனமல்லவா நம்மை விட்டுப்போகும்...!!
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை மாற்றி பாசம் மனதின் மத்தியிலே
பணம் அதற்கு பக்கத்திலே என்ற புதுமொழியை உருவாக்கு...!!
பணத்தையும் பாசத்தையும் இணைத்து பவித்திரமான மனிதராய் வாழ்ந்துபார் உன்னை உணர்வதோடு
பிறறையும் உணரும்போது
பிறந்ததிற்கான பலனை
இப்புவியிலேயே அடைவதை தெளிவாய் உணர்வாய் நீ...!!
குறிப்பு :
பண போகத்தால் அதன்மேல் உள்ள மோகத்தால் உன்னையே நீ உயர்வாக எண்ணிக்கொண்டு மற்றவரை தாழ்த்தி எடை போடாதே உன்னிடம் உள்ள பணத்தை விட மனித பாசம் அதிகம் உள்ளவரே உலகின் மிக பெரிய செல்வந்தர் ஆவார் மறந்து விடாதே உன் பணம் திமிர் பணம் உன்னிடம் உள்ள வரை தான் உன்னிடம் காக்கை கூட்டம் போல் மனித உறவு இருக்கும் அதுவே நல்ல குணமும் பண்பும் உன்னிடம் இருந்தால் நீ தேடி போகாமலே உன்னிடம் தானாக தேடி வரும் அனைத்துமே எல்லா வகையிலும் மறவாதே மறந்து உன்னையே நீ இழக்காதே என் கருத்து...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 செய்ய கூடாத பத்து செயல்கள் 👈
மகன் தந்தையின் கண்ணிரை பார்க்க கூடாது...!!
பெற்ற பிள்ளைகளின் அவப்பெயரை தாய் கேட்க கூடாது...!!
சகோதரர் உடன் பிறப்புகளிடம் அந்தஸ்து காட்ட கூடாது...!!
காதலர் தம்பதியர் இடையே சந்தேகம் இருக்க கூடாது...!!
வெற்றியாளர்களுக்கு இரும்மாப்பு இருக்க கூடாது...!!
தலைவனுக்கு நொடி பொழுதும் சபலம் இருக்க கூடாது...!!
வாழ்ந்து கெட்டவனை வறுமையே தூற்ற கூடாது...!!
பகைவன் ஆனாலும் அவன் இறப்பில் மகிழ கூடாது...!!
கடும் பசியிலும் மதியாதவர் வீட்டில் உணவு உண்ண கூடாது...!!
தர்மம் செய்வோரை தடுக்க கூடாது...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 நீ நீயாக இரு 👈
ஒரு நல்லபாம்பு ஒரு முனிவரிடம் வருத்தப்பட்டு சொன்னது எனக்கு நல்ல பாம்பு என்று பெயர் இருந்தாலும் யாரும் என்னை நல்லவனாக நினைப்பதில்லை என்னைக் கண்டாலே வெறுக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள் எனக்கு வருத்தமாக இருக்கிறது
அதற்கு அந்த முனிவர் நீ எல்லோரையும் கடித்து துன்புறுத்துகிறாய் யாரையும் கடிக்காமல் இரு என்று புத்தி சொல்லி அனுப்பினார்
சில நாள் கழித்து அந்த பாம்பு ரத்த காயங்களுடன் வந்து நின்றது
நீங்கள் சொன்னபடி யாரையும் நான் கடிக்கவில்லை இருந்தாலும் என்னைக் கண்டவுடன் கல்லால் அடிக்கிறார்கள் என்று அழுதது
நான் கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன் சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே நீ சீறியிருந்தால் அடிக்காமல் பயந்து ஒதுங்கி இருப்பார்கள்
நல்லவனாக இரு அதற்காக கோழையாக இருந்து விடாதே என்று மீண்டும் புத்தி சொல்லி அனுப்பினார்...!!
குறிப்பு :
இப்படி தான் சிலர் தம்மை வல்லவராக நினைத்து அடுத்தவரை இழிவு படித்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இழிவு படுத்தபட்டோர் திரும்பி நின்றாள் இருக்கும் இடம் தெரியாமல் அவர்கள் இழிவாக ஆகிவிடுவார் என்பதை மறந்து வாழ்கிறார்கள்
நல்லவர்களாக இருக்கலாம் அதற்கும் ஒரு அளவுகோல் உண்டு ஆனால் எப்பொழுதும் கோழையாக இருக்க கூடாது...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜 🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 கெஞ்சுதல் 👈
கெஞ்சுதல் என்ற ஒரு சொல் உண்டு...!!
நல்ல நட்பு நல்ல உறவுகள் நம் தவறினால் விலகினால் கெஞ்சுதல் தேவையாக இருக்கும் since mistake is ours...!!
மற்றபடி பொதுவாக தேவை இல்லாமல் யாரிடமும் கெஞ்சாதீர்கள்...!!
அது நம் தன்மானத்தை இழப்பது போல...!!
ஐயோ கெஞ்சி சரி செய்யாவிட்டால் என்ன நடக்குமோ என்று பயப்படாதீர்கள்...!!
அந்த பயம்தான் எதிராளிக்கு trump card
நம்மை அழவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்...!!
அதுபோன்ற சூழ்நிலைக்கு போய் விடாதீர்கள்...!!
இதனால் இழப்பு வருமோ என்று பயப்படாதீர்கள்...!!
தேவை என்று நினைத்தவர்கள் விலகினாலும் அதை விட சிறப்பானவர்கள் நம்மோடு இணைவார்கள்...!!
கடவுள் தேவையற்றவர்களை நம் வாழ்வில் இருந்து நம் நன்மைக்காக விலக்குகிறார் என்று மனதார நம்புங்கள்...!!
இதைவிட சிறப்பான வாழ்க்கையை இறைவன் நமக்கு அளிப்பார் என்று உறுதியான நம்பினால் அந்த positive எண்ண அலைகள் நம்மை வழிநடத்தும்...!!
இது ஒரு அனுபவபாடம்...!!
Relax முயற்சி செய்து பாருங்கள் முதலில் போராட்டம் போல தோன்றினாலும் இறுதியில் மகிழ்ச்சியை சுவைப்போம்...!!
குறிப்பு :
மொத்தத்தில் அர்த்தம் உறவு மனிதநேயம் இல்லாதவர்களிடம் நாம் நம்மை எடுத்து கூற கெஞ்சுவதும் தவறு நம்மை புரியாததவர்களை கூட வைத்து இருப்பதும் தவறு தான்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 நானும் என் கவிதையும் 👈
என் கவிதை பிறந்த காரணம் என்ன
வெள்ளைத்தாளில் இந்த வினாவை விதைத்து
விட்டு மெல்ல விழிமூடி உள்ளுக்குள் தேடுகிறேன்
ஏதேனும் புதுக்கவிதை வெளிவருமா முளைவிடுமா என்று...!!
கர்ப்பம் சுமப்பது போல் கவிதை சுமப்பவன் கவிஞன்
என்றெல்லாம் வெறுமனே கட்டுக் கதை சொல்லப்போவதில்லை...!!
கவிதையது கடவுள் தந்த வரமென்று காதில்
பூச்சுற்றும் எண்ணமில்லை எனக்கு
விழிகளுக்குள் விழுவதெல்லாம் என் விரல் நுனியில் விதையாகும் அதுவே கவிதையாகும்...!!
ஆசுகவி நானென்று உங்களை மோசம் செய்யும் எண்ணமில்லை
புல்நுனிப் பனித்துளி அது பொசுக்கென்று உருகும் போதும்
மெல்லென சரக்கென்று மலரொன்றை உதிர்க்கும் போதும்
பல்லில்லா குழந்தையது நம்மைப் பார்த்ததுமே சிரிக்கும் போதும்
எல்லோரின் உள்ளத்திலும் கவிதையது கால்பதிக்கும்...!!
நீங்கள் எண்ணத்தில் எழுதியதை நான் எழுத்தாலும் எழுதுகின்றேன் அதை
கவிதை என்று மதிப்போரை இரு கரம் கூப்பி வணங்குகிறேன்...!!
காற்று பிறந்ததன் காரணம் மானுடம் பிழைத்தல் என்றால் என்
கவிதை பிறந்ததன் காரணம் மனம் கொஞ்சம் உயிர்த்தல் என்பேன்...!!
வெடித்த உதடுகளில் துடிக்கும் வேதனைதான் என் கவிபிறக்கக் காரணமா
வாரக் கூலிக்கு வரிசையிலே காத்துநிற்கும் என் தேசச்சிறுவர்களின்
வறுமை அழித்து விட்ட வறண்ட வாழ்க்கைகூட ஒருவகையில் காரணம்தான்
பொருந்தாத கல்வியினால் பொதிமாடு போல புத்தகங்கள் சுமந்தபின்னும்...!!
படிப்பின் கனம் தாளாமல் பரிதவித்து பலியான எம் மாணவச்செல்வங்களின்
மனம் வடித்த கடைசிக்கண்ணீர் தடம் கூட ஒருவகையில் காரணம் தான்...!!
உற்ற தோழர்கள் விட்டுப்பிரியாத ஓரங்க நாடகமும் ஒருவகையில் காரணமே...!!
மாளாத மகிழ்ச்சியிலே என் கவிதை இதழிதழாய் மலர்ந்ததுண்டு
தாளாத சோகத்தில் அதுவே இமைநீராய்க் கரைந்ததுண்டு...!!
மூளாத செந்தீயாய் பெருங் கோபத்தனல் கொண்டதுண்டு
வாளாக உயிர் அறுக்கும் தீராத வலியாலும் பிறந்ததுண்டு...!!
எதன் பொருட்டுப் பிறந்ததென்று எனக்கே தெரியாமல்
எழுவாயே இல்லாத கவிதைகளும் என் களத்திலுண்டு...!!
இறுதியாய் இன்னுமொரு காரணமும் என் வரிகளின் வசத்திலுண்டு
இன்னும் அதை நான் என்னவென்று இருட்டிலே தேடுகின்றேன்...!!
எனவே இத்துடன் போதுமென்று இக்கவிதையை நான் முடிக்கின்றேன்...!!
நன்றி என் கவிதை பிடிக்கவில்லை என்று என்னை வெறுப்பவர்களுக்கும்
என் கவிதைகள் பிடித்ததால் என்னையும் என் கவிதையையும் ஆமோதிக்கும் நல்லுள்ளங்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள் பல...!!
இங்ஙனம் :
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
#💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
😍🤩😍 இந்த பதிவு சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காக தான் 😍🤩😍
👉 பல வருடங்கள் கடந்து வந்த ஞான உதயம் எனக்கு சில தீமையை தீயவையை தள்ளி வைத்தாலும் நமக்கு ஞானம் வரும் தீமையை தீயவையை நம்மை விட்டு ஒதுக்கினாலும் நமக்கு ஞானம் வரும் மொத்தத்தில் இடுபாடுகளை விட்டு இடம்பெயர்து வந்ததால் ஏற்பட்ட ஞான உதயம் இது 👈
அடுத்தவர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் மனம் கொண்டவர்கள் அவர்களின் வளர்ச்சியை பார்க்கும் போது உங்களது முயற்சி எவ்வளவு என சேர்த்து வைத்து பார் உனக்கு பொறாமை வராது...!!
வெற்றி எனும் இலக்கை அடைவதற்கு யாரும் நமக்கான வழியை பாதையை உருவாக்க மாட்டார்கள் நாம் தான் அதற்கான வழியை பாதையை செதுக்கி உருவாக்க வேண்டும்...!!
உழைப்பையும் ஊக்கத்தையும் மட்டும் வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் உன் தன்னம்பிக்கை எனும் ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான் வெற்றிக்கு வித்திட முடியும்...!!
நிலத்தில் தவறி விழுந்த விதையே முளைத்து மரமாகும் போது தடுமாறி விழுந்த நம் வாழ்வு மட்டும் சிறப்பாக மாறாமல் போய் விடுமா என்ன என்று நாம் விழும் போது தன்னம்பிக்கையுடன் நாம் எழ முயற்ச்சிக்க வேண்டும்...!!
குறிப்பு:
எந்த சந்தர்ப்பத்திலும் முடிவுகளை நாம் தான் எடுக்க பழக்க வேண்டும் பலரிடம் ஆலோசனை கேட்கலாம் தவறு இல்லை ஆனால் இறுதி முடிவு நம்முடையதாக தான் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் வலிமையும் நமக்கு வளரும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
@everyone
👉 விமர்சனமும் குறை கூறுவதும் 👈
👉 அவர் அவர் தீய எண்ணங்களினால் அவர்களின் புத்தியின் வெளிபாடு தான் இந்த விமர்சனமும் குறை கூறுவதும் 👈
ஒரு இந்திய சன்னியாசியை வெள்ளையர்கள் கடுமையாக கேலி செய்தார்கள்...!!
அவரோ அதனை கண்டுக் கொள்ளவே இல்லை அவர்கள் மேன் மேலும் கேலி செய்து சன்னியாசிக்கு கோபத்தை தூண்ட முயன்றனர்...!!
சன்னியாசி அசரவே இல்லை பொறுமை இழந்த வெள்ளையர்கள் உனக்கு சொரணையே இல்லையா உன்னை இவ்வளவு திட்டு திட்டினோம் நீ உன்பாட்டுக்கு இருக்கிறாயே என்று கேட்டனர்...!!
அதற்கு அந்த சன்னியாசி தன் கையில் இருந்த பிச்சைப் பாத்திரத்தை எடுத்து இதை வாங்கி கொள்ளுங்கள் என்றார்...!!
ஆனால் வெள்ளையர்கள் அதை வாங்க மறுத்து விட்டனர்...!!
சிரித்தப்படி சன்னியாசி சொன்னார் நான் கொடுத்த பொருளை நீங்கள் வாங்காததால் அது இன்னமும் என்னிடம் தான் இருக்கிறது...!!
அதுப்போல் உங்கள் வசவு சொற்களை நானும் வாங்கவில்லை அது உங்களிடமே இருக்கிறது என்றார்...!!
நாம் அனுமதிக்காத வரை எவரின் எந்த எதிர்மறை விமர்சனமும் நம்மை ஏதுவும் செய்ய முடியாது என்றார் சன்யாசி அது போல தான் மற்றவர்கள் விமர்சனமும் குறை கூறுவதும்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥









