
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
#💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈
மனிதன் எதில் நிலைத்து நிற்கிறான்
சத்தியத்திலா...!!
மனிதன் எதனால் சிறப்படைகிறான்
மன உறுதியாலா...!!
பூமியைவிட பொறுமைமிக்கவர் யார்
தாயா...!!
ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தவர் யார் தந்தையா...!!
காற்றைவிட வேகமாகச் செல்வது எது
மனமா...!!
புல்லைவிட அற்பமானது எது
கவலையா...!!
சாகப் போகிறவனுக்கு யார் துணை
தர்மம் அதுதான் அவன்கூட பயணம் செல்லுமா…!!
மனிதன் எதைவிட்டால் துயரமில்லை
கோபத்தையா...!!
எதை இழந்தால் மனிதன் தனவானாகிறான்
ஆசையையா...!!
மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்
கடன் வாங்காதவரா...!!
வேகம் மிக்கது எது
நதியா...!!
வெற்றிக்கு அடிப்படை எது
விடாமுயற்சியா...!!
உலகில் மிகச்சிறந்த தர்மம் எது
கொல்லாமையா...!!
உலகெங்கும் நிறைந்து நிற்பது எது
அஞ்ஞானமா...!!
முக்திக்குரிய வழி எது
பற்றினை முற்றும் விலக்குதலா...!!
முக்திக்குத் தடையாக இருப்பது எது
நான் என்னும் ஆணவமா...!!
எது ஞானம்
மெய்ப்பொருளை அறிதலா...!!
எப்போதும் நிறைவேறாதது எது
பேராசையா...!!
நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்டும் தான் என்றென்றும் வாழ்ந்திருப்போம் என்று மனிதன் நினைக்கிறானே அதுதானா...!!
குறிப்பு :
இதில் அனைத்திலும் எது வியப்பானது உயர்வானவன் என்பது குலத்தினாலா ஒழுக்கத்தினாலா கற்ற பல சாஸ்திரங்களினாலா
ஒழுக்கத்தினால் மட்டுமே உயர்ந்தவனாகிறான் என் நினைப்பது தவறு நான்கு வேதங்கள் கற்றவனாயிருந்தாலும் கெட்ட நடத்தை உள்ளவன் இழிந்தவனே
பெற்ற தாய் தந்தையை பெரியோர்களை மகிழ்விப்பவனே உலகில் தர்மனாகிறான் நான் கேட்ட கேள்விகளுக்கு தகுதி மிக்கவன் ஆகிறார்கள் என் கருத்து...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 YES I AM CHANGING 👈
ஒருவர் தன் வயதை ஒத்த தன் நண்பரை பார்த்து கேட்டார் இந்த வயதில் உன்னைப் பொறுத்தவரை what is changing in your life style என்று...!!
Yes I am changing இதுவரை என் பெற்றோர் மனைவி குழந்தைகள் நண்பர்கள் என்று அன்பு செலுத்திக் கொண்டிருந்த நான் now I have started loving myself...!!
Yes I am changing இப்போது தான் உணர்ந்தேன் I am not Atlas The world does not rest on my shoulders...!!
Yes I am changing சிறு வியாபாரிகளிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன் ஒரு சிறு தொகையை அதிகமாக கொடுப்பதால் நான் திவாலாகிவிட மாட்டேன் அந்த சிறு தொகை அவர்கள் வாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம்...!!
Yes I am changing Taxi driverக்கும் ஹோட்டல் சர்வருக்கும் தாராளமாக tips கொடுப்பதை வழக்கமாக்கிகொண்டேன் அவர்கள் என்னை விட தங்கள் வாழ்வாதாரத்திற்கு கடுமையாக உழைக்கிறார்கள் அவர்கள் என்னை நோக்கி புன்னகைப்பது எனக்கு உற்சாகம்...!!
Yes I am changing மிகவும் வயதானவர்கள் பல முறை சொன்ன தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை மீண்டும் சொல்லும் போது குறுக்கிடுவது இல்லை After all the story makes them walk down the memory lane and breathe Oxygen...!!
Yes I am changing எல்லோரையும் மனதார அவர்கள் நல்ல செயல்கள் செய்தால் பாராட்டுகிறேன் அது அவர்கனை உற்சாகப்படுத்துவது மட்டுமல்ல என்னையும் உற்சாகப்படுத்துகிறது...!!
Yes I am changing தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது இல்லை என் மன அமைதி எனக்கு முக்கியம்...!!
Yes I am changing என்னுடைய புறத்தோற்றத்தை பற்றி கவலைப்படுவது After all personality speaks louder than appearances...!!
Yes I am changing என்னை மதிக்காதவர்களை விட்டு I am Just walk away அவர்களுக்கு என் மதிப்பு புரியவில்லை...!!
Yes I am changing என்னோட Ego வை விட உறவுகள் முக்கியம் என்று உணர்ந்ததால் உறவுகளை தொலைப்பதில்லை...!!
Yes I am changing ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன் இந்நாளே கடைசி நாளாகவும் எனக்கு இருக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன்...!!
Yes I am changing நிறைவாக
I am doing what makes me happy After all I am responsible for my happiness and I owe it to me...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🩺 ஸ்டெதஸ்கோப் 🩺
ஸ்டெதஸ்கோப் பற்றி தெரிந்து கொள்வோம்...!!
நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் மருந்து மாத்திரைகளையும் தாண்டி ஸ்டெதஸ்கோப்பின் கண்டுபிடிப்பு மிக முக்கியமான திருப்புமுனை...!!
என்ன பிரச்னை என்று புரிந்துகொள்ள முடிந்தாலே பாதிக்கிணறு தாண்டிய மாதிரிதான் ஸ்டெதஸ்கோப் விஷயத்தில் மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவி செய்தது இந்த பாதிக்கிணறு ஃபார்முலாதான்...!!
இதயத்துடிப்பு, நுரையீரலின் அசைவுகள் போன்றவை ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் காரணிகளாக இருப்பதைப் புரிந்துகொண்ட மருத்துவர்கள் நோயாளியின் மார்புப் பகுதியில் காது கொடுத்துக் கேட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள்...!!
18ம் நூற்றாண்டு வரை இதுதான் நடைமுறையில் இருந்தது. 1816ல் கிரேக்க மருத்துவரான ரெனி லேனக் சிகிச்சைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பரிசோதித்தபோது இந்த முறையை மாற்றினார் ஒரு காகித அட்டையை சுருட்டி நெஞ்சில் வைத்து அதன் மறுமுனையைக் காதில் வைத்துக் கேட்டபோது உள்ளுறுப்புகளின் சத்தம் கேட்டது...!!
இதன் தொடர்ச்சியாக ஒரு சிறுவன் காகிதத்தை சுருட்டி வைத்து ஒரு பக்கம் ‘ஹோ’வென சத்தமிட அதன் மறுபகுதியில் அந்த சத்தத்தைக் கேட்டு இன்னொரு குட்டிப் பையன் சிரித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார் லேனக் உடனே சுறுசுறுப்பானது லேனக்கின் மூளை ஸ்டெதஸ்கோப்புக்குப் பிள்ளையார் சுழி விழுந்தது இங்கேதான்...!!
மர உருளையையும் மறுபக்கத்தில் காதில் கேட்கும் வகையில் டிரம்பெட் இசைக்கருவி வடிவத்திலும் இணைத்து ஒரு கருவியை உருவாக்கினார் இதுதான் ஸ்டெதஸ்கோப்பின் முதல் மாடல்...!!
இது கிட்டத்தட்ட நம்மூர் நாதஸ்வரம் வடிவத்தில்தான் இருந்தது. இதன் மூலம் நோயாளிகளின் மார்பில் காதை வைத்துக் கேட்பதில் இருந்த சங்கடங்களில் இருந்து விடுதலை கிடைத்தது...!!
நெஞ்சுப் பகுதியை பரிசோதனை செய்யும் கருவி என்ற அர்த்தத்தில் ஸ்டெதஸ்கோப் என்ற பெயர் சூட்டினார் லேனக் கிரேக்கத்தில் ‘ஸ்டெதேஸ்’ என்ற வார்த்தை மார்பையும் கோப் என்ற வார்த்தை பரிசோதனையையும் குறிக்கிறது...!!
லேனக்கின் கண்டுபிடிப்பைப் பார்த்து மற்ற மருத்துவர்களும் ஸ்டெதஸ்கோப்பைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் இரண்டு காது இருக்கும்போது ஒரு காதில்தான் கேட்டாக வேண்டுமா என்று யோசித்த அயர்லாந்து மருத்துவர் ஆர்தர் லியர்ட் இரண்டு பக்கமும் காதில் கேட்கிற வகையில் அதை மாற்றி வடிவமைத்தார்...!!
இதற்கும் அமோக வரவேற்பு ஃபைனல் டச் கொடுத்தார் அமெரிக்க மருத்துவர் ஜார்ஜ் சமான் இப்போது மருத்துவர்கள் கோட்டுக்கு மேல் ஸ்டைலாகப் போட்டுக் கொண்டிருக்கும் நவீன ஸ்டெதஸ்கோப்பை வடிவமைத்தது அவர்தான் வடிவமைத்ததோடு உலகம் முழுவதும் அதை வெற்றிகரமான வியாபாரமாகவும் ஆக்கியதும் ஜார்ஜ்தான்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 Bioclock என்றால் என்ன 👈
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம் ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம் இது தான் Bioclock...!!
நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம் என நினைக்காதீர்கள்...!!
50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம் அப்படி செய்யாதீர்கள் 70வதை கடந்தாலும் இன்னும் இளமையாக இருப்போம் என் நம்புங்கள்...!!
அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம் நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விட்டு தவறாக நாமே Bioclock செட் செய்து விடுறோம்...!!
உதாரணம் 1:
மனநிலை சரியில்லாதவர்களுக்கு வயதாவதில்லை
அவர்கள் தோற்றத்தில் பெரிதாக எந்த மாறுபாடும் இருக்காது என்ற உண்மை தெரியுமா
(இப்ப சொல்லுங்க யார் மன நோயாளி என்று)...!!
உதாரணம் 2 :
சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள் அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது...!!
எனவே நண்பர்களே
1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்...!!
2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 70 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்...!!
3. டை அடியுங்கள் (முடி இருந்தால் ). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்...!!
4. சுறுசுறுப்பாக இருங்கள் வாக்கிங் போகாதீர்கள் ஜாகிங் போங்கள்...!!
5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள் (அது தான் உண்மை)...!!
6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம் Never ever allow the bioclock set your ending...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💐 அனைத்து பெண்களுக்கும் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துகள் 💐
பெண்கள் சமையலறையில் மட்டும் இருப்பவர்கள் அல்ல. இன்று பெண்கள் உயர்கல்வி கற்றவர்களாகவும், நல்ல பதவிகளில் பணியாற்றுபவர்களாகவும், பல துறைகளில் சாதனை படைக்கும் வலிமையானவர்களாகவும் உள்ளனர்...!!
ஆனால் அதோடு சேர்ந்து வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் நிற்க உதவும் சில அடிப்படை திறன்களையும் கற்றுக்கொள்வது அவசியம்
அது பெண்களை இன்னும் வலிமையானவர்களாக மாற்றும்...!!
அந்த வகையில் பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய சில நடைமுறை திறன்கள் :
1. சமையல் செய்ய தெரிந்திருக்க வேண்டும்
2. கேஸ் சிலிண்டர் காலியானால் மாற்ற தெரிந்திருக்க வேண்டும்
3. கேஸ் அடுப்பு சிறிய பழுதுகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்
4. சுவற்றில் ஆணி அடிக்க தெரிந்திருக்க வேண்டும்
5. மின்பல்பு மாற்ற தெரிந்திருக்க வேண்டும்
6. பியூஸ் போனால் பியூஸ் கம்பி மாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
7. மின்சாதனங்களில் வயர் துண்டிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வது தெரிந்திருக்க வேண்டும்
8. வீட்டின் மெயின் ஸ்விட்சை ஆன்–ஆஃப் செய்வது தெரிந்திருக்க வேண்டும்.
9. குடிநீர் மோட்டாரை இயக்குவது தெரிந்திருக்க வேண்டும்
10. குழாய் லீக் ஏற்பட்டால் அதை சரி செய்வது தெரிந்திருக்க வேண்டும்
11. வீட்டில் உள்ள அடிப்படை கருவிகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்
12. மொபைல் மூலம் பணம் பரிமாற்றம் செய்ய தெரிந்திருக்க வேண்டும்
13. ATM பயன்படுத்தி பணம் எடுப்பது தெரிந்திருக்க வேண்டும்
14. வங்கியில் செலான் பூர்த்தி செய்து பணம் போடுவது அல்லது எடுப்பது தெரிந்திருக்க வேண்டும்
15. வீட்டு வரி மின்சார கட்டணம் தண்ணீர் கட்டணம் போன்றவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும்
16. மின்சாரம் தடைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறையினரை தொடர்பு கொண்டு பிரச்சனையை தெரிவிக்க தெரிந்திருக்க வேண்டும்
17. அவசர எண்கள் மற்றும் அவசர உதவி முறைகள் தெரிந்திருக்க வேண்டும்
18. குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் மற்றும் நல்ல சூழ்நிலையில் வளர வழிகாட்ட தெரிந்திருக்க வேண்டும்
19. குழந்தைகளுக்கு பாடல்கள் நல்ல கதைகள் போன்றவற்றை கற்றுக் கொடுக்க தெரிந்திருக்க வேண்டும்
20. இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
21. வாகனத்தில் சிறிய பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும்
22. குடும்ப செலவுகளை திட்டமிட்டு கையாளும் திறன் இருக்க வேண்டும்
இவை எல்லாம் பெண்களை கட்டுப்படுத்துவதற்காக அல்ல
அவர்களின் திறமையையும் தன்னம்பிக்கையையும் இன்னும் உயர்த்துவதற்காக...!!
ஒரு பெண் வலிமையாக இருந்தால்
ஒரு குடும்பம் வலிமையாகும்
ஒரு குடும்பம் வலிமையாக இருந்தால் ஒரு சமுதாயம் முன்னேறும்...!!
குறிப்பு :
இன்றைய உலக பெண்கள் தினத்தில் அனைத்து பெண்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்கள் அறிவும் திறமையும் தன்னம்பிக்கையும் என்றும் உயர வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 சகுனமும் விஞ்ஞானமும் 👈
வெளியில் செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அது நல்லதல்ல என்று முன்னோர்கள் நம்பினார்கள்...!!
ஆனால் அது தவறு என்று கார்ப்பரேட் சைன்ஸ் கம்பெனிகள் நம்மை நம்ப வைத்தார்கள்...!!
அதன் விளைவு இப்போது நாம் பூனை குறுக்கே மட்டுமல்ல எப்படி வந்தாலும் கண்டுகொள்வதில்லை...!!
நம்மை இப்படி மாற்றிவிட்டு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா...!!
மேலும் படியுங்கள்
சீனாவை ரகசியமாக கண்காணிப்பதற்காக உளவு செயற்கைக்கோள்களை சீனாவின் மீது நிலைநிறுத்துவது அமெரிக்காவின் வழக்கம்...!!
சிலவருடங்களுக்கு முன்னர் அப்படி செய்த போது செயற்கைக் கோள்கள் ஒரு நிமிடம் செயலிழந்து ஸ்தம்பித்தன...!!
பலமுறை முயன்ற போதும் அப்படியே நிகழ்ந்தது. அதை சரி செய்யவே முடியவில்லை...!!
சரி அதன் கீழே சீனாவில் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ந்தார்கள். ..!!
அங்கே அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது...!!
அங்கே இருந்தது எந்த ஊரும் இல்லை. அது ஒரு பெரும் காடு...!!
அந்தக் காட்டின் நடுவே ஒரு கோயில் இருந்தது. மேலும் ஆய்வு செய்த போது அது சீனாவின் பிரசித்தி பெற்ற பூனைக் கோவில் என்று கண்டறிந்தார்கள்...!!
அந்த பூனைக்கோவிலில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுதான் செயற்கைக் கோள்கைளை ஸ்தம்பிக்க வைத்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார்கள்...!!
உடனே பூனைகளை வாங்கி நாசா ஆய்வகத்தில் வைத்து ஆராய தொடங்கினார்கள்...!!
பூனையின் வாலில் இருந்து பிரத்யேக மின்காந்த அலைகள் வெளியாவதை நாசாவின் அதிநவீன உபகரணங்கள் படம் பிடித்தன...!!
மனிதர்களை பார்க்கும் போது அந்த கதிர்களின் அலைநீளம் உடனே மாறியது...!!
குறிப்பாக பூனைகள் வாசலில் இருந்து குறுக்காக செல்லும் போது அபாயகரமான காமா கதிர்கள் வெளிப்படுவதை அறிந்து ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே போய்விட்டனர் விஞ்ஞானிகள்...!!
இந்த காமா கதிர்கள் மனிதனது சிந்தனையை குழைத்து ஆபத்து ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தவை...!!
இதனாலேயே பூனை குறுக்கே வந்தால் போன காரியம் விளங்காது என்று நம் முன்னோர்கள் கூறி வைத்தனர்...!!
நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈
சில பொழுதாவது சோகப்படுங்கள்
ஆனந்தத்தின் அருமை புரியும்...!!
யாருக்காவது ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள் புன்னகையின் அருமை புரியும்...!!
ஒரு நாளாவது பணம் இல்லாது ஊர் சுற்றுங்கள் வறுமையின் கொடுமை தெரியும்...!!
மாளிகை கட்டடிடவீடு விட்டு மண்குடிசை ஓலை குடிசை தெருவோரம் மக்கள் பக்கம் போய்வாருங்கள் அன்றாடம் காய்ச்சியின் அழுகுரல் கேக்கும்...!!
மொழி புரியாத ஒரு மாநிலம் ஒரு தேசம் செல்லுங்கள் கல்வியின் அவசியம் தெரியும்...!!
அன்புக்குரியவர்களிடம் இருந்து சிலமணிதுளி விலகிஇருந்து பாருங்கள் மரணத்தின் வேதனை புரியும்...!!
குற்றவாளிகளின் கதறல்கள் கேளுங்கள் முன் கோபத்தின் பின்விளைவுகள் தெரியும்...!!
யாருக்கும் ஞானியாக நாம் இருக்க வேண்டாம் ஒரு சிறந்த நல்ல
மனிதனாக இருக்க முயற்சிப்போம் இது என் கருத்து...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
🤩😍😍 அடேய் சுதர்சன் இன்னடா இது மௌன விரதம் இருந்தது ஒரு குத்தமாடா சுதர்சன் இன்னம்மோ போடா
சுதர்சன் 🤩😍🤩
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘
#💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
👉 பல்லாங்குழி 👈
தமிழகத்தின் பழம்பெரும் விளையாட்டுக்களில் இன்றளவும் எஞ்சியிருப்பன சில விளையாட்டுகள் மட்டுமே அவற்றில் மிக முக்கியமானது பல்லாங்குழி பல்லாங்குழி ஆட்டம் பொதுவாக பெண்களால் ஆடப்படுகிறது பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்கு உரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுது போக்குவதற்கும் மட்டுமே உபயோகப்படுத்திய இந்த விளையாட்டை அப்பொழுது பலரும் பல நேரங்களில் ஆடிப்பார்க்கிறார்கள் பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களுடன் பல்லாங்குழியை கொடுக்கும் வழக்கம் அந்த காலங்களில் இருந்து வந்துள்ளது இன்றளவும் சில சிற்றூர்களில் இந்த பழக்கம் கடைபிடிப்பதை காண முடிகிறது இவ்வாறான பல்லாங்குழியின் வரலாற்றுப் பின்னணி நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்...!!
பல்லாங்குழி ஆடும் முறை:
இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளுடன் ஆட்டம் தொடங்குகிறது...!!
முதல் நபர் தன்னுடைய காய்களை எடுத்து ஆடும் பொழுது ஆட்டத்தின் சமத்தன்மை முதல் முறையாக குறைகிறது...!!
சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழியினைத் துடைத்துவிட்டு அதற்கடுத்த குழியில் உள்ள காய்களை முதலில் ஆடுபவர் எடுக்கும் பொழுது நிறைய காய்கள் கிடைக்கின்றன அல்லது குறைந்த காய்களை உடைய குழி கிடைக்கிறது...!!
ஒரு வெற்றுக்குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினை இட்டு வரும்போது அது நாலாகப் பெருகிய உடன் அதை பசு என்று சொல்லி அந்த குழிக்குரியவர் எடுத்துக்கொள்வார் இதனால் ஆட்ட துவக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் மீண்டும் ஒரு குழியில் கிட்டுவதே இல்லை...!!
ஆட்ட இறுதியில் தோற்பவரின் கையில் எஞ்சி நான்கு காய்கள் மட்டும் இருக்கும் பட்சத்தில் குழிக்கு ஒரு காய் வீதம் இட்டு ஆட்டம் துவங்குகிறது இதற்கு கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர் (கஞ்சி என்ற சொல் வறுமையை உணர்த்தும் குறியீடாகும்) தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் இருக்கும்போது ஆட்டம் முற்று பெருகிறது...!!
பல்லாங்குழியின் வரலாற்று முக்கியத்துவம்:
இன்றைய சூழலில் விளையாட்டு என்பது பொதுவாக பொழுதை போக்கும் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சங்ககாலம் தொட்டே விளையாட்டுக்கள் சமூக அல்லது தனிமனித வாழ்வியல் தத்துவங்களை உள்ளடக்கியே இருந்து வந்துள்ளது...!!
விளையாட்டின் அடிக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும் தத்துவங்கள் இந்த காலத்திற்கும் ஏற்புடையதாகவே இருக்கின்றன...!!
சமதன்மை நிலவி வந்த பழைய சமூகத்தில் ஆட்டத்தின் பெயரால் சமத்தன்மை குலைக்கப்பட்டு ஒருவரின் செல்வம் அடுத்தவரின் கைக்கு நேரடி வன்முறை இல்லாமல் எளிமையாக போய்ச்சேர்ந்துவிடுகிறது இதனால் தோற்றவரின் இழப்பு நிரந்தரமாக்கப்படுகிறது...!!
தனி உடைமை உணர்வினையும் தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த வறுமையினையும் பண்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தும் வெளிப்பாடே பல்லாங்குழி ஆட்டம். இந்த நியாய உணர்ச்சியின் விளைவாகவே தனி மனித மனங்களில் திணிக்கப்பட்ட தனிச்சொத்துரிமை வளர்ச்சி மிகப்பெரிய வேகத்தினைப் பெற்றிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்...!!
நாம் செய்ய வேண்டியது:
இன்றைக்கு செல்போன்கள் இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது அதனால் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பொழுதுபோக்கின் பெரும் நேரத்தை இவ்வாறான செல்போன்களே எடுத்துக்கொள்கின்றன இன்றைய நவீன சூழலில் வளரும் குழந்தைகளுக்கு வெளி விளையாட்டுகள் சாத்தியமற்ற ஒன்றாகவே ஆகிவிட்டது. இருப்பினும் வீட்டின் உள் விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை சொல்லிக்கொடுப்பதும் அதன் வரலாற்றை கதைகளாக சொல்வதும் அந்த விளையாட்டின் உங்கள் கடந்த கால அனுபவங்களைச் சொல்வதும் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டி வரலாறு குறித்த அவர்களின் பார்வையை மாற்றும்...!!
குறிப்பு :
இது வேறும் விளையாட்டு இல்லை
ஒருவர் எப்படி பிழைக்க வேண்டும் என சொல்லிதரும் ரகசியம்
கையில் கிடைக்கும் காசு செலவுக்கு போக நாளைக்கு ஒன்றுக்கு தேவைபடும் என கொஞ்சம்மாக சேர்ந்து வைத்து வந்தால் ஒருநாள் எதாவது ஒன்று எதிர்பாராமல் நடந்து வேறும் கையை வழிச்சு திண்ணும் வேளை வரும்பொழுது அவன் அத்தனை நாள் சிக்கனமாக பிழைத்த
ஒருவர் எப்படி பிழைக்க வேண்டும் என சொல்லிதரும் ரகசியம்
கையில் கிடைக்கும் காசு செலவுக்கு போக நாளைக்கு ஒன்றுக்கு தேவைபடும் என கொஞ்சம்மாக சேர்ந்து வைத்து வந்தால் ஒருநாள் எதாவது ஒன்று எதிர்பாராமல் நடந்து வேறும் கையை வழிச்சு திண்ணும் வேளை வரும்பொழுது அவன் அத்தனை நாள் சிக்கனமாக பிழைத்த பிழைப்பே யாரையும் எதிர்பார்க்காமல் அடுத்த குழியில் அவனுக்கு சேமிப்பாய் திரும்பவரும்
ஒரு மனுஷன் சந்தோஷமா இருக்க காசு வேண்டுமா என எனக்கு தெரியாது
ஆனால்
மரியாதையாக இருப்பதற்கு நிச்சயம் காசு வேண்டும்
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥 #💞Feel My Love💖











