💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
ShareChat
click to see wallet page
@sudarsan142
sudarsan142
💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
@sudarsan142
வர்ணிப்புபிரமிப்புமிகுந்த ஒன்றுநான்ரசித்த ஷேர்சாட்
🤩😍🤩 சில மாதங்களுக்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு திரும்பவும் நகைச்சுவை பதிவு இடுகிறேன் அனைவரும் கண்டுகளிக்கவும் 🤩😍🤩 🤩😍🤩 அடேய் சுதர்சன் இன்னடா இது அது ஒண்ணும் இல்லைடா என் மொபைல் பாஸ்வேர்ட் பின்னாடி இருந்து கண்டுபிடிக்கிறாங்கலாமா இந்த அம்மா நாமா எல்லாம் அப்போவே அப்படி இப்போ எப்படின்னு இன்னும் தெரிலபோல இந்த அம்மாவுக்குடா சுதர்சன் இன்னம்மோ போடா சுதர்சன் 🤩😍🤩 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:26
👉 The Law Of The Garbage Truck 👈 👉 குப்பை வண்டி விதி 👈 குப்பை வண்டி விதி தெரியுமா The Law of the Garbage Truck ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்...!! இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்...!! அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான் இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்...!! அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை ஏன் அவனை சும்மா விட்டீங்க நாலு வாங்கு வாங்கி இருக்கலாம் இல்ல அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான் என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார் அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் குப்பை வண்டி விதி எனப்படுவது....!! ஆங்கிலத்தில் The Law of the Garbage Truck என்பார்கள் இப்படிப்பட்ட மனிதர்களுக்கு குப்பை வண்டி என்று பெயர் ஸார் பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள் மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும் வைத்திருப்பார்கள் விரக்தி ஏமாற்றம் கோபம் அவர்களிடம் நிறைந்திருக்கும்...!! அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள் அதை நாம் பர்சனலாக எடுத்துக் கொள்ளக்கூடாது ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்...!! அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார் நம்ம பேர் தான் நாறிப் போகும் என்று சொல்ல அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்...!! இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பை வண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்...!! அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ வெளியிலோ காரண மின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்...!! நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம் அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம் இது ஒன்றே நாம் செய்ய வேண்டியது...!! குறிப்பு : வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - எதிர்த்து நிற்பவனெல்லாம் துரோகியும் அல்ல.!! ஆமாம் போடுபவனெல்லாம் நண்பனும் அல்ல.!! சூழ் நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாறும் இவ்வுலகில் எவனும் உத்தமன் அல்ல.!! SueGia SuooKss எதிர்த்து நிற்பவனெல்லாம் துரோகியும் அல்ல.!! ஆமாம் போடுபவனெல்லாம் நண்பனும் அல்ல.!! சூழ் நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாறும் இவ்வுலகில் எவனும் உத்தமன் அல்ல.!! SueGia SuooKss - ShareChat
👉 சிரிப்பு அதுவே நம்மை நலம் காக்கும் முதல் மருந்து 👈 அன்பொழுகும் பேச்சினை யாராவது பேசி கேட்டால் இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!! ஆதரவு கரம் நீட்டி நானிருக்கிறேன் என்ற குரலை கேட்டால் இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!! மரணத்தை விட கொடிய வலியான துரோகத்தை கண்டால் இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!! புறக்கணிக்கும் அவமானங்களை கண்டால் விழுந்து விழுந்து இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!! கண்ணீர் வராமல் வரும் வருத்தங்கள் வந்தால் இப்போதெல்லாம் சிரித்து விடுகிறேன்...!! வேறென்ன செய்ய வலி என்பது ஒரு தடவை வந்தால் தான் வலி...!! நிறைய இடங்களில் நிறைய வழிகளில் நிறைய தடவைகளில் தொடர்ச்சியாக வந்தால் அது வலி அல்ல மரத்துப் போதல் ஆதலால் சிரித்து விடுகிறேன்...!! மரத்துப் போன நெஞ்சத்துக்கு மரத்துப் போன உள்ளத்துக்கு மரத்துப் போன உயிருக்கு எதுவும் வேதனையில்லை எல்லாமே சிரிப்பு தான்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - தோல்வி உன்னை சுற்றி சுற்றிவந்தாலும் புன்னகை எனும் 9488608 கைவசம் வைத்துகொள் தன்னம்பிக்கை தானாய்உன்னிடம் தேடி வரும் !! ( Sudarsan Sudarsan தோல்வி உன்னை சுற்றி சுற்றிவந்தாலும் புன்னகை எனும் 9488608 கைவசம் வைத்துகொள் தன்னம்பிக்கை தானாய்உன்னிடம் தேடி வரும் !! ( Sudarsan Sudarsan - ShareChat
👉 நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈 உன் பணபலத்தை வெளிச்சம் போட்டு காட்டிக் கொள்ளாதே...!! ஏழ்மையில் தவிக்கும் யாரோ ஒருவருக்கு உன்னை அறியாமலே துன்பத்தை ஏக்கத்தை மனதில் விதைத்து விடுவாய்...!! உன் முயற்சியை உழைப்பை தன்னம்பிக்கையை வெளிச்சம் போட்டு காட்டு...!! சோர்ந்து கிடக்கும் ஏதோ ஒரு இதயத்திற்கு உன்னை அறியாமலே உந்து சக்தியாய் மாறிடுவாய்...!! நீ தடைக்கல்லா படிக்கல்லா...!! பிறர் வாழ்க்கை பாதையை நீ முடிவு செய்யாதே உன் நற்செயலில் அவர்களுக்கு உதவு உனக்கு நல்ல மனம் குணம் இருந்தால் தடைக்கல்லாக அல்ல படிக்கல்லாக...!! உன்னைப் பற்றி உன்னுடைய எண்ணங்கள் உறுதியாக இருக்கும் பொழுது பிறர் உன் மீதுவைக்கும் பலவீனமான எண்ணங்களினால் நீ எப்பொழுதும் பாதிப்படைய மாட்டாய்...!! பொய்யை அப்படியே ஏற்றுக் கொள்கின்ற உலகம் உண்மையை மட்டும் எப்போதுமே உரசிப் பார்க்காமல் ஏற்றுக் கொண்டது இல்லை...!! இறைவன் படைத்த இயல்பு கெடாமல் தொடரும் பட்டியல் இன்னும் மிச்சம் இருக்கிறது மழலையின் சிரிப்பும் நல்ல மனிதஇனத்தின் நல்ல மனமும் நல்ல குணமும்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - அடுத்தவன் என நினைப்பான் எறு ஆரம்பிச்சா வாழ அப்பவே DDDల 60 உனன் ೧11 0 போய்விடும் Sudarsan Sudarsan அடுத்தவன் என நினைப்பான் எறு ஆரம்பிச்சா வாழ அப்பவே DDDల 60 உனன் ೧11 0 போய்விடும் Sudarsan Sudarsan - ShareChat
😢😢😢 பள்ளி வாழ்க்கை 😢😢😢 👉 ஞாபகம் இருக்கா 30 years back to school time 👈 டக் டக் யாரது..!! திருடன் என்ன வேனும்...!! நகை வேனும் என்ன நகை கலர் நகை என்ன கலர்...!! பச்சை கலர் என்ன பச்சை மா பச்சை என்னம்மா...!! டீச்சரம்மா என்ன டீச்சர்...!! கணக்கு டீச்சர் என்ன கணக்கு...!! வீட்டு கணக்கு என்ன வீடு...!! மாடி வீடு என்ன மாடி மொட்ட மாடி என்ன மொட்ட...!! பழனி மொட்ட என்ன பழனி...!! வடபழனி என்ன வட...!! ஆமை வட என்ன ஆமை...!! கொளத்தாம என்ன குளம்...!! த்திரி குளம் என்ன திரி...!! விளக்கு திரி என்ன விளக்கு...!! குத்து விளக்கு என்ன குத்து கும்மாகுத்து...!! சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்...!! அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம்...!! நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்...!! வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்...!! ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்...!! என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்...!! புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்...!! வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்...!! நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்...!! போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ மிக மிக அடங்கவில்லை)...!! சனி ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருந்த தருணம்...!! எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருத்த தருணம்...!! விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படும் தருணம்...!! அனைவரது சாப்பாட்டையும் சாதி மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்...!! ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம் நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம் இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - వరాా ా Sudorson వరాా ా Sudorson - ShareChat
👉 ஒரு வரி படித்து விட்டு அனைத்துமே படித்து கரைத்து குடித்தது போல காட்டிக்கொண்டு இருப்பது முட்டாளைவிட வடிக்கட்டிய முட்டாள்கள் செய்யும் காரியம் ஏனேனில் (படித்தது கற்பது) அனைத்துமே கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு நினைவில்கொள்ள வேண்டும் 👈 👉 My Reality Poetry 👈 👉 சுதர்சன் ஆகிய நான் இப்பொழுது சொல்வது இதுவும் சரி✔இனி வரும் காலத்தில் சொல்ல போவது அதுவும் சரி✔யாக தான் இருக்கும் (தீர்க்கதரிசி) 👈 ஒருவர் இருக்கும் போது கொண்டாடப்படாத கவனிக்கப்படாத வீடு மக்கள் உலகம் அவர் இறந்தபின் அவரை கொண்டாடி பயன் என்ன மாண்டவர் மீண்டுமா வரப்போகிறார் சுவர் இருக்கும் பொழுதே நல்ல பயனுள்ள சித்திரம் வரைய பழகு அந்த சித்திரம் மட்டும் தான் உன் ஆயுட்காலம் ஆனால் அந்த சித்திரத்தின் ஆயுட்காலம் வரை உன் மறைவுக்குப் பின்பும் உன் புகழ் பேசப்படும் இதை உணர்ந்தால் போதும்...!! உன்னிடம் என்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு நாம் மட்டுமே விடை அறிவோம் நாம் கடவுளிடம் கேட்கப்படும் கேள்விக்கு உலகறிய பதில் கிடைக்கும் கடவுளிடம் இருந்து ஆகையால் அடக்கத்துடன் நன்னடைத்தை உடன் வாழ்வோம்...!! இன்பமோ துன்பமோ உறவாக நட்பாக நம்முடயே உடலில் இணைந்து பிறந்த நம் கண்கள் தான் முதலில் கலங்கும் அப்படி கலங்கி அதிலிருந்து எட்டி பார்க்கும் கண்ணிரை நம்முடைய உடலில் இணைந்தே பிறந்த கைகள் மட்டும் தான் முதலில் அந்த கண்ணிரை துடைக்க துடிக்கும் பிறகு தான் மற்ற எல்லா நம்முடன் பிறந்து இணைந்த மற்ற அனைத்து உறவுகளுமே பின்னே தான் வரும் (அப்படி ஒரு நல்ல உறவு நமக்கு கண்களாக கைகளாக இருந்தால் நம் வாழ்வில் நாம் வாழும் பொழுது இங்கேயே நாம் சொர்க்கத்தை காணலாம்)...!! வார்த்தை தடுமாற கண்களும் எண்ணமும் தான் காரணம் வாழ்க்கை தடுமாற நம் தீயஎண்ணங்கள் தீயபழக்க வழக்கம் தீயசகவாசம் தான் காரணமாக இருக்க முடியும்...!! மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ தேவையில்லை நம்மளை நமக்கே திருப்திப்படுத்தும் வாழ்க்கையை நாம் வாழ்ந்தாலே போதும் நிம்மதி சந்தோஷம் அந்த வாழ்க்கையில நமக்கு கிடைத்துவிடும்...!! இதயம் என்பது ஒரு கண்ணாடி போன்றது எவ்வளவுதான் நாம் பாதுகாத்தாலும் என்றோ ஒரு நாள் யாராவது ஒருவரால் நிச்சயம் உடைந்தே தீரும்...!! பிடித்தவர்கள் பிடித்தவர்களாக இருப்பதை விட நம்மை புரிந்து புரிந்தவர்களாக இருப்பது அதைவிட சிறந்தது...!! உன் முன்னேற்றத்தில் பல சறுக்குகள் இருக்கலாம் ஆனால் நீ முன்னேறி செல்வதை மட்டும் என்றும் நிறுத்தி விடாதே...!! அன்புக்கு அடிமையாகின்றவர்களை உங்கள் திமிருக்கு அடிமையாக்க நினைகாதீர்கள் இதன் விளைவு அவர்களின் அன்பை மட்டும் இல்லை அவர்களையே நீங்கள் இழக்க கூடும்...!! உலகில் நிதர்சன உண்மை என்னவென்றால் யாரு எப்போ எப்படி மாறுவார்கள் என்று தெரியாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தொலைந்து போனதை மட்டும் தேடுங்கள் விட்டு சென்றவை எதையும் நினைத்து கூட பார்க்காதீர்கள்...!! விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் காரணம் ஆயிரம் அந்த வலிகளை தாண்டி நமக்குள் ஏற்படும் தன்னம்பிக்கை வேர் ஊன்றிய பின் வலுவான ஆலமரமாக நிற்கும் இவை சுலபத்தில் சாயாது...!! மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவதை பணத்தால் காட்டாதீர்கள் உங்கள் நல்ல குணத்தால் நல்ல பண்பால் நல்ல எண்ணத்தால் நல்ல அறிவுரையில் மட்டுமே காட்டுங்கள்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - My best Teacher is my last Mistake Sudarsan Sudarsan My best Teacher is my last Mistake Sudarsan Sudarsan - ShareChat
👉 விதைப்பது எதுவோ முளைப்பதும் அதுவே 👈 துறவி ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண் என் கணவர் நிறைய குறைகளோடு இருக்கிறார் அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா...!! அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி அம்மணி இங்குள்ள பூ விதைகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன் எது வேண்டும் கேள் என்றார்...!! அப்பெண் தாழம்பூ விதையைக் கேட்டாள் அதைப் பராமரிப்பது மிகவும் கடினம் அதோடு அதில் நெறைய பாம்புகள் வேறு வரக்கூடும் இதுவா வேண்டும் என்றார் துறவி...!! எனக்கு தாழம்பூ மிகவும் பிடிக்கும் அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது என்றாள் அப்பெண்மணி...!! புன்னகைத்த துறவி சொன்னார் வாழ்கையும் அப்படிதான் பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அவர்களது குறை பெரிதாகத் தெரியாது என்றார்...!! அந்த ஒரு நொடி அப்பெண்மணி அவள் குறையை உணர்ந்தால் அந்த நொடியே அவள் கணவர் குறையை மறந்தால் உள்ளத்தால் வெட்க்கி தலை கவிழ்ந்து துறவி காலில் விழுந்து வணங்கி விட்டு தன் வீட்டை நோக்கி கணவனிடம் மன்னிப்புக் கேட்க ஓட்டினால்...!! குறிப்பு : தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதால் நம் தகுதி மரியாதை உயரும் என்பதை மட்டும் நம்ப வேண்டும்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - sudarsan Sudarsan sudarsan Sudarsan - ShareChat
👉 சிரிப்பும் கருத்தும் 👈 😂😂😂 சுதர்சன் எப்படி டா இப்படி 😂😂😂 👍 நிதர்சனம் சொல்வது சுதர்சனம் 👍 நாலு பேரோட பதிவை போய் பாருங்கள் அதோடு என்னோட பதிவை கம்ப்பேர் பண்ணுங்க நல்ல தரம் நல்ல கருத்து இருக்கும் நம்பி வாங்க சந்தோஷமாக போங்க 😂😂😂 பிடிச்சு இருந்தால் லைக் போடுங்க இது லலிதா ஜூவல்லரி வாக்குறுதி அல்ல சுதர்சன் வாக்குறுதி😂😂😂 அப்பா அந்தக் காலத்தில 3G 4G 5G இல்லாமல் எப்படி தான் வாழ்ந்திங்களோ மகனே நாங்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு மூன்று ஜீ இருப்பாங்கள் மாதாஜி பிதாஜி குருஜி ஒரு அறை விட்டாங்கன்னா எங்களுக்கு எல்லா நெட்வொர்க் ஓபன் ஆகிவிடும்😂😂😂 மகன் மகள்களிடம் தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி விறைப்பா நடந்துக்குற அப்பாக்களை காமடி பீஸ் ஆக்குவதற்கென்றே பிறக்கிறார்கள் பேரன் பேத்திகள் 😂😂😂 என்னாதான் கோக் பெப்சியை குழாய் போட்டு உறிஞ்சி தலை குனிந்து குடித்தாலும் நம்ம ஊர் கோலி சோடாவை தலை நிமிர்ந்து குடிப்பதில் ஒரு கெத்து தான் 😂😂😂 ஒரு கழுதை படம் வைத்தால் யோகம் வரும் என நம்பிய நாமதான் மரம் வைத்தால் மழை வரும் என நம்ப மறுக்கிறோம் 😂😂😂 கண்ணாடியை கண்டு பிடித்தவன் பெல்ஜியம்காரனா இருக்கலாம் ஆனால் அதில் விபூதி போட்டு துடைத்தால் தான் பளபளப்பாக இருக்குமுன்னு கண்டுபிடிப்புக்கு நம்ம ஆளுங்க தான்😂😂😂 துணி கிழிஞ்சு போச்சே என அழுத காலம் போயி கிழிஞ்ச துணிந்தான் வேண்டும் என அழற காலம் வந்துருச்சி நல்ல வளர்ச்சி 😂😂😂 இது எப்படி இருக்கு😍😍😍😍😍 💘🐦💜 Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - ShareChat
00:14
🙏🙏🙏 உன் கஷ்டத்தில் மட்டும் கடவுளை தேடாதே இஷ்டத்தோடு தேடு 🙏🙏🙏 ஒரு கட்டுமான எஞ்சினியர் 13 வது மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்…!! ஒரு முக்கியமான வேலை…!! கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…!! செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்...!! ம்ஹும் கொத்தனார் வேலை மும்முரத்தில் சித்தாளுடன் பேசிக் கொண்டிருந்தார்…!! போனை எடுக்கவில்லை...!! என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்...!! அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை…!! இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்…!! எஞ்சினியர் என்ன செய்வதென்று யோசித்தார்…!! ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து சுருட்டி மேலே இருந்து கொத்தனார் அருகில் போட்டார்…!! ரூபாயைப் பார்த்த கொத்தனார் அதை எடுத்து தன் பையில் போட்டுக் கொண்டார்…!! ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…!! என்ஜினியருக்கு ஒரே கோபம்...!! இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…!! ஒரு ஐநூறு ரூபாயை அதே போல் கொத்தனார் மேல் போட்டார்…!! அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கொத்தனார் மும்முரமாக வேலையில் இருந்தார்…!! எஞ்சினியர் பொறுமை இழந்து ஒரு மிகச் சிறிய கல்லை எடுத்து கொத்தனார் மீது போட்டார்…!! அது அவரது தோள் மீது பட்டவுடன் மேலே பார்த்தார்…!! அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்…!! மனிதனும் அப்படித்தான் மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை…!! உலக மாயைகளில் சிக்கித் தவிக்கின்றான் இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...!! அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை...!! ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்...!! எல்லா நேரங்களிலும் இறைவனை நினைவு கூர்வோம்...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💖நீயே என் சந்தோசம்🥰 - ShareChat
00:14
👉 பணம் 👈 இறைவன் பணத்தை படைத்திருந்தால் இதயம் வைத்திருப்பான் அதில் இரக்கத்தையும் இணைத்திருப்பான் இதை மனிதனல்லாவா படைத்தான் அதுதான் இதயத்தை இணைக்க தவறிவிட்டான் அதில் இரக்கம் வைக்கவும் மறந்துவிட்டான்...!! காகிதபணத்திற்கு ஏழைகளில் கதறல் கேட்குமா மனிதர்களின் பாசம்தான் புரியுமா...!! மனிதர்களுக்கு பணம் அவசியம் அதைவிட பாசம் முக்கியம் பணம் நம்மைவிட்டுப்போனால் திரும்ப வந்துவிடும் ஆனால் பாசம் விட்டுப்போனால் அதிலுள்ள மனமல்லவா நம்மை விட்டுப்போகும்...!! பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை மாற்றி பாசம் மனதின் மத்தியிலே பணம் அதற்கு பக்கத்திலே என்ற புதுமொழியை உருவாக்கு...!! பணத்தையும் பாசத்தையும் இணைத்து பவித்திரமான மனிதராய் வாழ்ந்துபார் உன்னை உணர்வதோடு பிறறையும் உணரும்போது பிறந்ததிற்கான பலனை இப்புவியிலேயே அடைவதை தெளிவாய் உணர்வாய் நீ...!! குறிப்பு : பண போகத்தால் அதன்மேல் உள்ள மோகத்தால் உன்னையே நீ உயர்வாக எண்ணிக்கொண்டு மற்றவரை தாழ்த்தி எடை போடாதே உன்னிடம் உள்ள பணத்தை விட மனித பாசம் அதிகம் உள்ளவரே உலகின் மிக பெரிய செல்வந்தர் ஆவார் மறந்து விடாதே உன் பணம் திமிர் பணம் உன்னிடம் உள்ள வரை தான் உன்னிடம் காக்கை கூட்டம் போல் மனித உறவு இருக்கும் அதுவே நல்ல குணமும் பண்பும் உன்னிடம் இருந்தால் நீ தேடி போகாமலே உன்னிடம் தானாக தேடி வரும் அனைத்துமே எல்லா வகையிலும் மறவாதே மறந்து உன்னையே நீ இழக்காதே என் கருத்து...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥
💞Feel My Love💖 - ShareChat
00:14