#✍️தமிழ் மன்றம்
வெல்ஃபேர் கட்சி கோரிக்கை
போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்ய வேண்டுகோள்: உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல வழிவகுப்போம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனை அருகிலுள்ள சாலையில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலால் நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றன.
பொதுமக்களின் அவசரத் தேவையையும், நோயாளிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு:
வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவர்களும்,
குடியாத்தம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) அவர்களும்,
இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்து, ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித இடையூறுமின்றி செல்வதற்கான நிரந்தரப் போக்குவரத்து மேலாண்மை வழிகளை (Traffic Management) ஏற்படுத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உயிர்காக்கும் பணியில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வோம்!
இப்படிக்கு,
R.L.சுல்தான் ஷரீப்
வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர்,
வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு.
Welfare Party of India