
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ்#ஜெய் ஸ்ரீ ராம் அழித்த பிறகு*., போா்க்களத்தில்* ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தாா்..!!*
அப்போது ஒரு பெண்ணின் நிழல் தொிந்தது..!!
அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்., அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை., ராமபிரான்.... நிழலின் அசைவின் மூலம் புாிந்து கொண்டார்..!!
உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்..!!
“நீ யாரம்மா?” என்றாா்....!!
“நான் ராவணனின் மனைவி மண்டோதாி..!!
என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!
ஆனால்., அவரையே ஒருவா் கொன்று விட்டார் என்றால்., அவாிடம் ஏதோ உயா்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்..!!
மேலும்.. க்ஷத்திரிய குல தா்மப்படி., கணவனை வென்ற/இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன்., என்ன வேண்டுமானாலும் செய்யலாம்..!!
ஆனால் நீ என்னிடம் வரவில்லை..!!
ஆச்சாியப்பட்டேன்..!!
இங்கே நீ., என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது., உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்..!
என் கணவாிடம் கூட., “ரகு குலத்தில் உதித்த ராமன்., மனிதன் அல்ல..!! உலகைக் காக்கும் பரம்பொருள்..!!
விஸ்வரூபன்..!! அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது..!! அவன் வேதத்தின் சாரம்..!! ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்..!! அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்..!!”
“அவா் கேட்கவில்லை..!!”
“உன் வெற்றிக்கு காரணம்., என் கணவாிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்..!!”
“அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை..!!”
“அதனால் தான் நீ வென்றாய்.,” என்றாள்.....!!
அனைத்தும் கேட்ட ராம பிரான் சிறு புன்னகை புாிந்தாா்.....!!
தன் சுயவடிவான “நாராயணனாக” அவளுக்கு “விஸ்வரூப தாிசனம்” கொடுத்தாா்.....!!
ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதாி.....!!
அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது., மண்டோதாி ஒழுக்கமான உடை அலங்காரத்தை கண்டு.,
‘இவள் சீதையாக இருப்பாளோ’ என்று சந்தேகம் கொண்டான் அனுமன்..!!
அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான்., கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் மண்டோதரிக்கு ‘நாராயணின் விஸ்வரூப தரிசனம்’ பெற்றாள்..!!
உயா்ந்த ஜாதியில் பிறந்தவன்., வசதியில் உயா்ந்தவன்., அரச பதவியில் இருப்பவன்., என இறைவன் பாா்ப்பதில்லை..!!
நம்முடைய பயபக்தி., அன்பு., ஒழுக்கம்., இறைச்சேவை., அப்பழுக்கற்ற தூய உள்ளம் என இவையே இறைவனின் அருள் தாிசனம் பெறும் வழிமுறையாகும்..!!
ஆகவே தான் அசுரகுலத்தில் பிறந்தாலும்., தன் ஒழுக்க குணத்தால்., ‘இராவணனின் மனைவி’ மண்டோதாிக்கு ஸ்ரீராமபிரானின்
விஸ்வரூபம் காணும் பாக்கியம் கிடைத்தது...!!!
ஸ்ரீ ராம ஜெயம்..!!
ஸ்ரீ ராம ஜெயம்..!!!
ஸ்ரீ ராம ஜெயம்..!!!!
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏽🙏🏽
#ஆன்மீக #பத்திஸ்டேட்ஸ்# ஜெய் ஸ்ரீ ராம் மிக்க ‘ராம’ நாமம்.*🌹
*மதிப்பு மிக்க ராம நாமத்தை சொல்லியதால்* ஒரு முதியவர் ஒருவருக்கு கிடைத்த மறுவாழ்க்கையை பற்றிய கதையை கீழே பார்க்கலாம். *
காசியிலே இருந்த செல்வந்தர் ஒருவர் மிகச் சிறந்த கொடை வள்ளலாக இருந்தார். முந்தைய வினைப் பயன் காரணமாக, அவரைத் தொழுநோய் முழுமையாகப் பற்றிக் கொண்டது. அவரிடம் உதவி பெற்ற பலரும் அவரைப் பராமரிக்க முன் வந்தனர். ஆனால் அவரோ தன்னுடைய கடைசிக் காலத்தில் எவருக்கும் துன்பம் தரக் கூடாது என்று நினைத்தார். எனவே, தன்னைப் பராமரிக்க முன் வந்தவர்களிடம், ‘என்னை கங்கைக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று மட்டும் வேண்டுகோள் வைத்தார். வாழ்நாள் முழுவதும் அவரை பராமரிக்க முன்வந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் அல்லவே.. அவர்களும் அவரை கங்கைக் கரைக்குத் தூக்கிச் சென்றனர்.
அங்கு சென்றதும் அந்த செல்வந்தர் கூறிய வார்த்தை, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
‘எனது உடலில் பெரிய கல்லைக் கட்டி, கங்கையாற்றில் தூக்கிப் போட்டு விடுங்கள். நான் கங்கையில் மூழ்கி இறந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார்.
ஆனால் அவரது நண்பர்களும், அவரால் உதவி பெற்று அதன் காரணமாக அவரைப் பராமரிக்க வந்தவர்களும், அவர் சொன்ன காரியத்தைச் செய்ய மறுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், வேறு வழியின்றி செல்வந்தரின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, அதோடு ஒரு பெரிய கல்லையும் இணைத்துக் கட்டினர்.
அதனைக் கண்டு அவருக்கு நெருக்கமான நண்பர்கள் பலரும் அழத் தொடங்கினர். அப்போது அந்த வழியாக வந்த கபீர்தாசரின் சீடர் பத்மநாபர் வந்தார். அவர் செல்வந்தரின் உடலில் கல் கட்டப்பட்டிருப்பதையும், அவரைச் சுற்றி நிற்பவர்கள் துக்கத்தில் இருப்பதைக் கண்டு, ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அவரிடம் நடந்த விஷயங்களை விளக்கமாக கூறினார்கள்.
உடனே பத்மநாபர் அங்கிருந்தவர்களிடம், ‘நான் சொல்லும்படி நீங்கள் செய்தால், அவரைக் காப்பாற்றி விடலாம்’ என்று சொன்னார். அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
பிறகு பத்மநாபர், ‘அனைவரும் ராம நாமத்தை மூன்று முறை சத்தமாக சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் அங்கிருந்தவர்களில் சிலர், ‘நாங்கள் ஏற்கனவே இவரை ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்று, வழிபாடுகளெல்லாம் செய்து பார்த்து விட்டோம். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை’ என்றனர்.
பத்மநாபரோ, ‘ராமனை வணங்கி நடக்காதது, ராமனின் பெயரைச் சொன்னால் நடக்கும். முயற்சித்துப் பாருங்கள்’ என்று நம்பிக்கையோடு கூறினார். அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ராம நாமத்தை மூன்று முறை சொன்னார்கள்.
என்ன ஆச்சரியம்! செல்வந்தரின் நோய் முழுமையாக நீங்கி, அவர் உற்சாகமாக எழுந்து நின்று கொண்டிருந்தார்.
பத்மநாபர் அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டுபோய், தனது குருவான கபீர்தாசரிடம் சென்று நடந்ததைக் கூறினார்.
ஆனால் கபீர்தாசரோ, மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகக் கோபம் கொண்டார்.
அவர் பத்மநாபரைப் பார்த்து, ‘ராம நாமத்தின் பெருமையை அறியாதவராக இருந்திருக்கிறாயே... ராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே, அவர் குணமடைந்திருப்பாரே, மூன்று முறை சொல்ல வைத்து, ராம நாமத்தின் மதிப்பைக் குறைத்து விட்டாயே’ என்று சத்தம் போட்டார்.
ராம நாமத்தின் பெருமை அவ்வளவு சிறப்புடையது.🌹










