RamaswamyAnnamali
ShareChat
click to see wallet page
@swamy_6943
swamy_6943
RamaswamyAnnamali
@swamy_6943
💝💋காதல் 💞 💋ஒரு 🖤 💘 இனிப்பான 💕 வாழ்க்கை💔
#பத்திஸ்டேட்ஸ் #திருவிளையாடல்_புராணம் 🔥#சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வலை வீசின படலம் ஐம்பத்தி ஏழாவது படலமாகும். 57. வலை வீசின படலம் 🐟🙏🏾#ஒரு_சமயம்_கையாலத்தில் சிவபெருமான் உமையம்மைக்கு வேதத்தின் உட்பொருளை விவரித்துக் கொண்டிருந்தார். இறைவனாரின் பாடத்தைக் கவனிக்காமல் வினாயகரையும் முருகனையும் கொஞ்சிக் கொண்டு உமையம்மை கனவக் குறைவாக இருந்தார். இதனை அறிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு உமையே நான் சொல்லிக் கொண்டிருக்கும் வேதத்தினை தெரிந்து கொள்ள ஆர்வமின்றி கவனக்குறைவாக இருந்ததால் நீ படிப்பறிவு இல்லாத மீனவப் பெண்ணாக மாறக் கடவாய் என்று சாபமிட்டார். இதனைக் கேட்டதும் ஐயனே தாங்கள் என்னுடைய பிழையைப் பொருந்தருளுங்கள். சாபத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினாள். இறைவனாரும் என்னுடைய பக்தனான பரதவன் என்னும் மீனவத் தலைவனின் விருப்பத்தை நிறைவேற்ற இத்திருவிளையாடலை நிகழ்த்தினோம். இறுதியில் உன்னை வந்து யாம் திருமணம் செய்து கொள்வோம். அஞ்ச வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளினார். 🔱🔥#இதனைப்_பார்த்த முருகர் கோபம் கொண்டு உங்களது மாயையின் காரணத்தினால்தான் அன்னை கவனக்குறைவாய் இருந்தாள். இதற்கா சாபம் கொடுப்பீர்கள் என்று வெகுண்டு தந்தை கையிலிருந்த வேதப் புத்தகத்தை கிழித்தார். முருகனின் செயலைக் கண்ட சிவபெருமான் வேதப் புத்தகத்தைக் கிழித்ததினால் ஊமையாய்ப் பிறப்பாய் என்று சாபமிட்டார். முருகனும் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு சாப விமோசனம் கேட்டார். எப்போது போற்றுதற்குரிய சிறந்த தமிழ்ப் பாடல்களை எப்போது கேட்டு கண்ணீர் வடிக்கின்றாயோ அப்போது உன் சாபம் நீங்கி எம்மிடம் வருவாய் என்றார். (முருகர் சாபத்தின்படி தனபதி தருமசாலினி என்ற தம்பதியினருக்கு ஊமை மகனாய் பிறந்து போற்றுதற்குரிய சிறந்த தமிழ்ப் பாடல்களை கேட்டு கண்ணீர் வடித்து புலவர் வழக்கை தீர்த்து வைத்தார். 55ஆம் திருவிளையாடலில் இருக்கிறது.) 🐘🔥#விநாயகர்_ஓடிவந்து சாத்திரப் புத்தகங்கள் அனைத்தையும் துதிக்கையால் துக்கிக் கடலில் எறிந்து விட்டார். சிவன் சினமுற்று வினாயகருக்கு சாபம் கொடுக்கும் நேரம் நந்தி குறுக்கே வர நீ கடலில் மீனாய் பிறக்கக் கடவாய் என அவருக்குச் சாபமிட்டார். இதனைக் கேட்டதும் நந்திதேவர் ஐயனே உங்களையும் கையிலாயத்தையும் பிரிந்து என்னால் இருக்க இயலாது. தயவு கூர்ந்து என்னைக் காப்பாற்றி அருளுங்கள் என்றார். இறைவனார் நந்திதேவரிடம் மீனவப் பெண்ணான உமையம்மையை திருமணம் செய்ய யாம் வரும் போது உன்னுடைய சாபம் நீங்கும் என்று அருளினார். 🙏🏾🔱 #இறைவனாரின் சாபப்படி உமையம்மை மதுரைக்கு கீழ்த்திசையில் இருந்த பாக்கம் என்னும் மீனவ ஊரில் புன்னை மரத்துக்கு அடியில் குழந்தையாகக் கிடந்து அழுதார். அம்மையின் அழுகுரல் குழந்தைப் பாக்கியம் இல்லாத மீனவத் தலைவன் பரதவனின் காதில் விழுந்தது. மீனவத் தலைவன் அழுகுரலின் திசையில் சென்று குழந்தையைப் பார்த்ததும் இக்குழந்தை எனக்கு சொக்கநாதர் தந்த பரிசு என்று எண்ணி குழந்தையை எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவியிடம் கொடுத்து வளர்த்தான். நந்திதேவரும் சுறாமீனாகப் பிறந்து கடலில் வீசி எறியப்பட்ட வேதங்களை மீட்டு இறைவனாரிடம் தந்து விட்டு கடலில் திரிந்து கொண்டிருந்தார். அம்மையும் நாளடைவில் திருமணப் பருவத்தை எட்டிய குமரிப் பெண்ணானாள். கடலில் இருந்த சுறாவானது அங்கு மீன்பிடிக்க வரும் மீனவர்களின் வலையைக் கிழித்து படகுகளைக் கவிழ்த்து தொந்தரவு செய்து வந்தது. நாளுக்கு நாள் சுறாவின் தொந்தரவு அதிகமாகவே மீனவத் தலைவன் சுறாவினை அடங்கும் வீரனுக்கு தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து தருவதாக முரசு அறிவித்தான். தங்களுடைய உயிருக்குப் பயந்து யாரும் சுறாமீனை அடக்க முன்வரவில்லை. 🙏🏾🔥🐟#இறைவனார்_அழகான மீனவ இளைஞனாகத் தோன்றினார். மீனவத் தலைவன் முன் சென்று ஐயா எனது பெயர் சொக்கநாதன். என்னுடைய ஊர் மதுரையாகும். நான் வலை வீசி மீன்பிடிப்பதில் வல்லவன். நான் சுறாவினை அடக்கி தங்களுடைய மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். இதனைக் கேட்டதும் மீனவத் தலைவன் தம்பி நீங்கள் கூறுவது போல் அது ஒன்றும் சாதாரண மீன் இல்லை. பல வலைகளைக் கிழித்தும் பல படகுகளைக் கவிழ்த்தும் உள்ளது அது. ஆகையால் அதனைப் பிடிப்பது அத்தனை சுலபம் இல்லை உன்னால் இயலாது என்றார். அதற்கு சொக்கநாதர் நான் வலைவீசினால் அதில் சிக்காத உயிர்களே கிடையாது. என்னுடைய வாலையைத் தூக்கக் கூட உங்களால் முடியாது தூக்கிப் பாருங்கள் என்றார். வலையை தூக்க மீனவர்கள் முயற்சி செய்தார்கள். எவராலும் வலையை அசைக்கக் கூட முடியவில்லை. சரி என்று மீனவத்தலைவன் அனுமதி கொடுத்தார். 🐟🔥🙏🏾#இறைவனார்_சுறாமீனைப் பிடிக்கச் சென்றார். இறைவனார் வலையை வீசி சுறா மீனைப் பிடித்தார். பின்னர் கரைக்கு அதனை இழுத்து வந்து மீவனத் தலைவனிடம் காண்பித்தார். மீனவத் தலைவனும் ஒப்பந்தம் செய்தபடி தன்னுடைய பெண்ணை மீனவனான இறைவனாருக்கு திருமணம் செய்வித்தார். பின்னர் மணமக்கள் பார்வதி பரமேஸ்வராக மீனவர்களுக்குக் காட்சியளித்தனர். இதனைக் கண்ட பரதவனுக்கும் அவன் மனைவிக்கும் மோட்சத்தைக் கொடுத்து கைலைக்கு அனுப்பினார் இறைவன். சுறா மீனாக இருந்த நந்திதேவரும் சுயரூபம் பெற்று கையிலையை அடைந்தார். இறைவனார் சொக்கநாதராக மாறி மீனாட்சி அம்மனுடன் மதுரையம்பதியில் இனிது வீற்றிருந்தார். 🙏🏾🔥சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை: நாம் செய்யும் செயலில் கவனக் குறைவாக இருந்தால் அது துன்பத்தை விளைவிக்கும் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்
பத்திஸ்டேட்ஸ் - 14 Jas 99 14 Jas 99 - ShareChat
#பத்திஸ்டேட்ஸ் #சிவபெருமான் கால் பதித்த பூமி திருவிடைமருதூர் 17 மீனவன் ஒருவன் ஒரு குளத்தில் மீன் பிடித்து அதனை பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி மீன்களை உயிரோடு அதில் இருக்க செய்து அதனை தனது மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பினான். மாலை நேரத்தில் பூமியை இருட்டு சூழ்ந்ததால், ஒரு பெரிய குளம் அருகே இருந்த மரத்தின் கீழ், மாடுகளை வண்டியில் இருந்து அகற்றி, அவற்றை கட்டி அவற்றிற்கு வைக்கோல் வைத்து வண்டியின் அருகேயே படுத்தான். ஸ்ரீ சிவபெருமான் மீனவனின் முன் தோன்றினார். மீன்களை அடைத்து வைத்திருந்த பாத்திரத்தின் மூடியை திறக்க சொன்னார். மூடியை திறந்தவுடனேயே மீன்கள் துள்ளி குதித்து குளத்தில் விழுந்தன. பாத்திரமும் கவிழ்ந்தது. பின்னர் மீன்கள் ருத்திர வடிவம் எடுத்து விண்ணுலகம் சென்றன. அன்று முதல், இந்த தீர்த்தக் குளம் "ருத்ர தீர்த்தம்" என்றானது. "ருத்ரதீர்த்தம்" திருவிடைமருதூர் தெற்கு வீதியில் ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயத்திற்கு பின்புறம் உள்ளது. மீனவனோ இறைவனிடம் தங்களது கட்டளைபடி நான் மீன்களை விட்டு விட்டேன், இங்கே இருந்து சேற்றில் எனது வண்டி போகும் போது, பாரம் இல்லாமல் வண்டி அங்கே இங்கே என போகுமே என்றார். வண்டியில் இருந்த பாத்திரத்தில் செங்கலை அடுக்கி எடுத்துப் போகச் சொன்னார் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி. வீட்டிற்கு வந்து நடந்ததை தனது தாயிடம் சொன்னார் மீனவர், பாத்திர மூடிகளை அகற்றி செங்கற்களை எடுத்து வைக்கலாம் என இருவரும் எண்ணி பாத்திரத்தை திறந்தால் செங்கற்கள் அனைத்தும் தங்கக்கட்டிகளாக இருந்தன. நடந்தவைகளை மன்னரிடம் சொன்னார் மீனவனின் தாய். மன்னர் நேரில் வந்து பார்த்து மீனவனையும் அந்த தாயையும் பாராட்டி நீங்களே அந்த தங்க கட்டிகளை வைத்துக்கொள்ளுங்கள், இது இறைவன் உங்களுக்கு அளித்த பரிசு என சொன்னார். திருவிடைமருதூர் தலத்தில் 35 தீர்த்தங்கள் உள்ளன.
பத்திஸ்டேட்ஸ் - ShareChat
#👦தளபதி ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 ஊரு எம் எல் ஏ க்கு*சிறப்பான வரவேற்பு*பென்னாகரம் மக்கள்*
👦தளபதி ஸ்டேட்டஸ் - ShareChat
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - தவறு செய்திருந்தால் கவலைப்படலாம் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்பதற்காக எல்லாம் கவலைப்பட முடியாது! தவறு செய்திருந்தால் கவலைப்படலாம் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்பதற்காக எல்லாம் கவலைப்பட முடியாது! - ShareChat
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:10
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:22
#ஆன்மீக *காஞ்சி பெரியவா*
ஆன்மீக - Ged la ஆலினடியில் அமர்ந்தஉரு அள்ளித்தரும் கற்பகத்தரு ஆன்மீகவழி நடத்தும் குரு அவர்பாதம் கதியென சரணம் சரணம் சந்திரசேகரா சரணம் சரணம் சத்குருவே Ged la ஆலினடியில் அமர்ந்தஉரு அள்ளித்தரும் கற்பகத்தரு ஆன்மீகவழி நடத்தும் குரு அவர்பாதம் கதியென சரணம் சரணம் சந்திரசேகரா சரணம் சரணம் சத்குருவே - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #🚹உளவியல் சிந்தனை
👉வாழ்க்கை பாடங்கள் - நீ அடுத்தவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை அது நல்லதுமல்ல நீ அடுத்தவர்களைப்பற்றி அக்கறை கொள்ளக் கூடாது நீ எதற்கு மறு்றவடுகஎச கவலைப்பட வேண்டும் 6T6u6u செய்ய வேண்டும் என்று அடுத்தவர்கள் இதைத்தான் செய்ய நீயார் வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீ முடிவெடுக்க நினைக்கும் இந்த நினைப்பே அதிகாரம் பெற்றவனாக இருக்கும் அரசியல் ஆசையை அடக்கி வைத்ததன் விளைவே அதன் வெளிப்பாடே ஆகவே காலத்தை வீணடிக்காதே உன்னைப் பார் நீ அடுத்தவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை அது நல்லதுமல்ல நீ அடுத்தவர்களைப்பற்றி அக்கறை கொள்ளக் கூடாது நீ எதற்கு மறு்றவடுகஎச கவலைப்பட வேண்டும் 6T6u6u செய்ய வேண்டும் என்று அடுத்தவர்கள் இதைத்தான் செய்ய நீயார் வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீ முடிவெடுக்க நினைக்கும் இந்த நினைப்பே அதிகாரம் பெற்றவனாக இருக்கும் அரசியல் ஆசையை அடக்கி வைத்ததன் விளைவே அதன் வெளிப்பாடே ஆகவே காலத்தை வீணடிக்காதே உன்னைப் பார் - ShareChat
#அரசியல் #🎙️அரசியல் தர்பார்
🎙️அரசியல் தர்பார் - ShareChat
01:04
#🤣 லொள்ளு #🤣காமெடி ஸ்டேட்டஸ் #😆சிரிப்போ சிரிப்பு😉
🤣 லொள்ளு - ShareChat
00:18