💖சிவா 💖
ShareChat
click to see wallet page
@thala_2ajith
thala_2ajith
💖சிவா 💖
@thala_2ajith
தீமைக்கும் நன்மை செய்
#ஆண்களின் காதலின் வலி #ஆண்களின் மன வலி #ஆண்களின் மனதின் வலி #ஆண்களின் இதய வலி 😓 அவருடைய கண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது… பல நாட்களாக அவர் நிம்மதியாக தூங்கவே இல்லை என்று. கண் கீழே திடீரென கருவளையம் வருவது, தூக்கமின்மையால் தான்… எந்த பிரச்சினை இருந்தாலும், விவாகரத்து முடிந்த பிறகே மற்ற உறவுகளை வெளிப்படுத்துங்கள். இல்லையெனில், எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும் நீதிமன்றமும் சமூகமும் எதிர் தரப்பின் பக்கமே நிற்கும்… ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்காக ஐம்பது லட்சம் ரூபாய் தவறாமல் செலவு செய்யும் ஒரு தந்தைக்கு, தனது குழந்தைகளை பார்க்கும் உரிமையே இல்லையெனில், அவர் இடத்தில் நான் இருந்தால் அடுத்ததாக பத்து ரூபாய்கூட கொடுக்க மாட்டேன்… செலவுத்தொகைக்காக நீதிமன்றங்களை ஏறி இறங்கும் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்… மாதம் இரண்டாயிரம், ஐந்தாயிரம் ரூபாய் maintenance-க்காக எத்தனை பேர் போராடுகிறார்கள் என்று அப்போது புரியும்… செலவுத்தொகை அதிகமாக தர வேண்டாம் என்பதற்காக, மாத சம்பளத்தை குறைத்து காட்டும் பல புத்திசாலிகள் இருக்கிறார்கள்… அந்த கணக்கில் பார்த்தால் ஜெயம் ரவியை பூ வைத்து பூஜிக்க வேண்டும்… பாலா மாதிரியான ஒரு மோசடியுடன் ஜெயம் ரவியை ஒப்பிடவே முடியாது… காரணம், பத்து ரூபாய் செலவிட கூட அவனுக்கு மனசில்லை… ஆண்களுக்கும் இதயம் இருக்கிறது… அவர்களுக்கும் மனஅழுத்தம் இருக்கிறது… அவர்கள் அனுபவிக்கும் வலிகளுக்கு மதிப்பு இல்லாமல் போவது ஏன்…? அவர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் அநீதியாக கருதப்படாதது ஏன்…? மனிதத்தன்மை உள்ளவர்கள் என்றால், நம்மை வேண்டாம் என்று நினைக்கும் ஒருவரை நம்மோடு வலுக்கட்டாயமாக பிடித்து வைத்திருக்க மாட்டார்கள்… “போகட்டும்… போனால் போகட்டும்…” என்பதுதான் எண்ணமாக இருக்கும்… இல்லையா…?? ரூபன் 💔💔💔
ஆண்களின் காதலின் வலி - ShareChat
#💖love feel🌹 #💞Feel My Love💖 நீ வேறொருவருடன் இருப்பதைப் பார்ப்பது என்னை உடைத்துவிடாது, உனக்கு வசதியாக இருக்கும்போதும், உனக்கு ஆதாயம் கிடைக்கும்போதும் நீ எப்படி அன்பு செலுத்துவாய் என்பதை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன், காரியங்கள் உனக்கு சாதகமாக நடக்காதபோது நீ எப்படி நடந்துகொள்வாய் என்பதும் எனக்குத் தெரியும்... ஆனால், நீ என்னை வேறொருவருடன் பார்க்கும்போது, அது உன்னை நிச்சயம் காயப்படுத்தும்... ஏனென்றால், நான் உன்னை எப்படி நேசித்தேன் என்பது உனக்குத் தெரியும், அது உண்மையானது என்பதும் உனக்குத் தெரியும், எதையும் எதிர்பார்க்காமல், முழுமையாக என்னை உனக்காகக் கொடுத்தேன், ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், அப்படிப்பட்ட ஒரு அன்பை மீண்டும் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பது உனக்குப் புரியும்... ஒரு நாள், உனக்குக் கிடைத்த ஒரு அரிய அன்பை நீயே கைவிட்டுவிட்டாய் என்பது உன் மனதை உலுக்கும்...✍️ ரூபன் 🙏🙏🙏
💖love feel🌹 - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 அழைத்துப் பேச உன் அலைபேசி எண் இல்லை.... பார்த்து மகிழ உன் புகைப்படம் ஏதுமில்லை... எடுத்துப் பார்த்து சிரிக்க நீ தந்த நினைவுப் பொருட்கள் எதையும் நான் பத்திரப்படுத்தி வைக்கவில்லை... கண் பார்த்துப் பேச நீ அருகில் இல்லை... இத்தனை இல்லைகள் இருந்தும் நீ இருந்து கொண்டுதான் இருக்கிறாய் எனக்குள் என் இதயத்தில் ... உன்னை மறந்தால் மறுபடியும் நினைப்பேனா? தெரியவில்லை… எனக்குத் தான் உன்னை மறக்கவே தெரியாதே... என் நினைவில் வாழும் என் அன்பு தேவதையை எப்படி மறப்பதாம்.... ? ரூபன் ❤️❤️❤️
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
#dmk இந்த தேர்தலில் நான் மகிழும் ஒரே ஒரு நல்ல விஷயம், MKS அவர்களின் தோல்வி..... பெரியார், அண்ணா, கலைஞரைப் பார்த்து அரசியல் கற்ற ஆளுமை, மாண்புமிகு முதல்வர் அவர்களே என ஒரு மடக்கு ஊதியை பார்த்து சட்டமன்றத்தில் பேசுவதில் இருந்து காலமே அவரைக் காத்திருப்பதாக மகிழ்கிறேன். இந்தத் தேர்தல் தோல்வியைக் காட்டிலும் அதைப் பார்க்கும் துணிவு எனக்கில்லை.... அதற்காக, கொளத்தூர் மக்களுக்கு நன்றி... திராவிடத்தால் பயனடைந்தேன் திராவிடத்தால் உயர்ந்தேன்... என்றும் 🖤❤️🖤❤️ நான் #திமுக காரன்
dmk - ShareChat
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ என்னைப் பற்றி தங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று யார் சொன்னாலும், நான் உண்மையில் யார் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்!.. நான் மகிழ்ச்சியாக இருந்த இடங்கள் நான் சோகமாக இருந்த இடங்கள்... என் கனவுகள்... நான் முகம் கொடுத்த போராட்டங்கள்.. எனக்குள் எரித்து கொண்டிருக்கும் வேதனைகள் இவை அனைத்தும் என்னைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. உங்களுக்கு என் சிரித்த முகம் மட்டும் தான் தெரியும் ஆனால் எனக்குள் ஒளிந்து கொண்டு எப்போதும் அழுது கொண்டிருக்கும் அந்த முகம் யாருக்குமே தெரியாது... இப்போது எனக்குச் சொந்தமில்லாதவற்றை விட்டுவிட்டு, காயப்படுத்திய இடங்களிலிருந்து விலகி, நான் ஒரு சுதந்திரமானவனாக இருப்பதற்குப் பழகிவிட்டேன்... நீங்கள் என்னை வெறுமையானவனாகவும், ரட்சசனாகவும் காணலாம்... ஆனால், இவ்வளவு காலம் எனக்குள்ளேயே போராடிய பிறகு நான் கண்டுகொண்ட ஓர் ஆறுதல் அந்த மௌனத்திற்குள் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் நானும், உண்மையான நானும் முற்றிலும் வெவ்வேறானவன்.. ரூபன் 🩷🩷🩷🩷
😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ - ShareChat
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ விரும்பியதெல்லாம் வெறுத்துப் போகும் காலம் வரும். ஆசைப்பட்டதெல்லாம் வேண்டாமென்று ஒதுக்கும் காலம் வரும். கொண்டாடியதெல்லாம் தூக்கிப்போடும் காலம் வரும். தேனொழுகிய பேச்செல்லாம் கசந்து போகும் காலம் வரும். கெஞ்சிக் கேட்டதெல்லாம் அலட்சிய படுத்தும் காலம் வரும். மண்டியிட்டவர்களிடம் எதிர்த்துப் போகும் காலம் வரும். உறங்காத இரவுகளெல்லாம் திருப்தியாக உறங்கும் காலம் வரும். சுலபமெல்லாம் கடினமாகவும் கடினமெல்லாம் சுலபமாகவும் மாறும் காலம் வரும். தொலைத்தவர்களை தேடாமல் போனால் போகட்டும் என்றிருக்கும் காலம் வரும். ஏங்கி தவித்த வாழ்வினை உதாசீனப்படுத்தும் காலம் வரும். தேடிக்கொண்டிருந்த நிம்மதி தேடி வந்தும் வேண்டாமென்ற காலம் வரும். பெரும் போதை தந்த பொழுதுகள் அலுப்பை தட்டும் காலம் வரும். எல்லாமே காலத்தின் கைகளில் மட்டுமே உள்ளதென்று எண்ணிவிடாதீர்கள். சந்திக்கின்ற மனிதர்களின் கைகளிலும் உள்ளதென்று எண்ணுங்கள். ரூபன் 🩷🩷🩷🩷🙏🙏
😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ - ShareChat
#⏱ஒரு நிமிட கதை📜 #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கிளைமேக்ஸ் காட்சியில முழுமை பெற மாதிரி ஒரு வசனம் இருக்கும் ஆனா இந்த படத்திலும் இந்த காட்சி இந்த படத்தோட ஆணி வேரா இருக்கும்,. ❣️ அதுவரைக்கும் சசிகுமார் பத்தி தெரியாத அந்த ஆளு கடைசில ஊருக்கு போகும்போது அவருடைய பெயரை கேட்பார்..!! அப்துல் மாலிக் ❣️என்று சொல்லும்போது அவர் கண்ணில் தண்ணி வந்துட்டு சசிகுமார் கட்டிபிடிச்சதுக்கு அப்புறம் பேக்ரவுண்ட்ல ஒரு சாங் ஓடும் பாருங்க நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடி போகும் அன்புடைய தோட்டம் ஆகும் எல்லா ஊருமே ❣️ Movie peaked here - அயோத்தி ❣️ ரூபன் 🩷🩷🩷
⏱ஒரு நிமிட கதை📜 - ShareChat
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖நீயே என் சந்தோசம்🥰 #💖love feel🌹 தீபாவளி ❣️ உங்கள உயிருக்குயிரா காதலிச்சுட்டு கடைசில 'யார் நீ?' அப்படின்னு கேட்டுருக்காங்களா? பில்லு ஃபேஸ் பண்ண அதே சிச்சுவேஷன்...!! சுசிக்கு நடந்த ஒரு ஆக்சிடென்ட்ல மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் எல்லாமே மறந்துருச்சுன்னு சொல்றப்போ, பில்லு டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணுவான். டாக்டர் சொல்லுவாரு, 'ஒருவேளை மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் அவளுக்கு ஞாபகம் வந்துட்டா, இப்ப நடந்துட்டு இருக்க விஷயங்கள் ஏன் உன்னைக் கூட அவ மறக்க நிறைய வாய்ப்பு இருக்கு' அப்படின்னு. அப்போ சுசி சொல்லுவா, 'நானே உன்ன மறந்துருன்னு தெரியலன்னு சொன்னாலும், கேவலமா திட்டி விரட்டினாலும், கழுத்தை புடிச்சு வெளிய தள்ளினாலும் என்னை விட்டுற மாட்டல்ல... நீ இல்லன்னா நான் செத்துருவேன் பில்லு' அப்படின்னு. ஒரு ஸ்டேஜ்ல அவளுக்கு எல்லாமே மறந்துரும். அப்போ பில்லு சுசி கிட்ட போய் நடந்தது எல்லாமே சொல்லும்போது, அவ 'எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல, தயவு செஞ்சு நீ போயிரு' அப்படின்னு சொல்லுவா. அத்தனை அடியும் வாங்கிட்டு பில்லு வாயிலிருந்து வர ஒரே ஒரு வார்த்தை 'சுசி'யா மட்டும்தான் இருக்கும். லிப்ட்ல சுசியோட புடவை ஃபுல்லா மாட்டிரும், அப்போ பில்லுவோட ஷர்ட்ட சுசிக்கு கொடுக்கும்போது அந்த ஷர்ட்ட மோந்து பாப்பா... பில்லுவ பாப்பா... பில்லுவ ஞாபகம் இருக்காது, ஆனா அந்த வாசனை அவளுக்கு எங்கயோ பரிச்சயப்பட்ட வாசனை மாதிரி தான் இருக்கும்...! ஒரு பொண்ண லவ் பண்ண வைக்கிறதுக்காக எவ்வளவோ எஃபோர்ட் போடுறவங்கள பாத்திருப்போம். ஆனா இங்க 'நீ என்னதான் லவ் பண்ற' அப்படின்னு நம்ப வைக்கிறதுக்காக பில்லு போட்ட எஃபோர்ட்ஸ் எல்லாமே கடைசில கண்கலங்க வச்சிரும். ஆனா இது எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய் அவங்க அப்பா கையை உதறி விட்டுட்டு பில்லு கிட்ட போய் 'ஐ லவ் யூ பில்லு' அப்படின்னு சுசி சொல்லும்போது, பில்லு ரொம்ப ஆசையா 'ஞாபகம் வந்துருச்சா சுசி?' அப்படின்னு கேப்பான். அதுக்கு அவ சொல்லுவா, 'சத்தியமா எனக்கு ஞாபகம் வரல ஆனா எனக்காக நீ உயிரே கொடுக்கிற அளவுக்கு இவ்வளவு விஷயங்கள் பண்ணிருக்க, என்னால இத பாத்துட்டு இருக்க முடியல'ன்னு ரெண்டு பேரும் சேர்ற அந்த ஒரு மொமெண்ட்... ஞாபகம் வரலைன்னாலும், அன்னைக்கும் பில்லுவ லவ் பண்ணா... இப்பயும் பில்லுவ லவ் பண்றா. சோ எல்லாத்தையும் மாத்தக்கூடிய பவர் இந்த லவ்வுக்கு இருக்கு அப்படின்றத பில்லு ப்ரூவ் பண்ணிருப்பான்."❣️ யுவன் இசையில் ஒவ்வொரு பாடலும் வேற லெவல்ல நம்மளை பீல் பண்ணவைக்கும்❣️ ரூபன் 🩷🩷🩷
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat
#😨பிச்சைக்கார பெண்ணை கொன்று சீரழித்த கொடூரன்😱 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் என்னத்த கவித எழுதி என்னத்த போங்க இந்தப் பக்கம் திரும்புனா பட்டப் பகல்ல அம்புட்டு பேரு பாக்க வெட்டிக் கொல்லுறாங்க... அந்தப் பக்கம் திரும்புனா ஆடை அவுக்கிறது மார்பை தொடறதெல்லாம் பாலியல் குற்றத்துல வராது பாலியல் சீண்டல்னு அளந்து வுடுறாங்க... மாட்டு மூத்திரத்தை குடி ஹிந்திய படினு அது ஒருபக்கம் நாகரீகம் மறந்த சமூக மாற்றத்தை நோக்கி போன்னு புடிச்சி தள்ளுறாங்க பள்ளிக்கூடம் படிக்கிற பசங்க எல்லாம் கஞ்சா அடிக்கிற அளவு மலிவா கிடைக்கிது சோத்துக்கு தான் நட்டுக் குத்தலா நாள் முழுக்க பாடு படனும் போல வீட்ட விட்டுப் போனா புள்ள திரும்பி வந்து சேருமான்ற பயத்தை இந்த நூற்றாண்டுலையும் எந்த அரசும் போக்கல.. உழைப்புக்கு ஏத்த ஊதியம் இல்ல நல்லவனுக்கு இங்க மதிப்பும் இல்ல குடிக்கிறதும் கூத்தடிக்கிறதும் ஹீரோயிசம்னு சினிமாக்காரங்க வலுவா காட்டுறாங்க... பெண்ணியம்னு சொல்லீட்டு என்னத்தையெல்லாமோ அவுக பத்திரமா வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு ரீல்ஸா எடுத்துப் போடுறாங்க பாத்துட்டு வெறி ஏறிப் போயி நம்ம அப்பாவி பெண் குழந்தைங்கள நாசம் பண்றாங்க... வாங்கற விலைக்கு உணவுப் பொருள் இல்ல விக்குறவனுக்கு கிடைக்கிற லாபம் வெளைய வச்சவனுக்கு கிடைக்கிறதில்ல... நாடு நாசமாப் போகுது போகட்டும் நாமளும் சேந்து நாசமாப் போவோம் கவித எழுதுறேன்னு கண்டதையும் எழுதி மனச ஆத்திக்கிடுவோம் நமக்கு வேற வழி என்ன இருக்கு??? ரூபன் 🙏🙏🙏
😨பிச்சைக்கார பெண்ணை கொன்று சீரழித்த கொடூரன்😱 - NO FUTURE நாடு நாசமாய் போகுது ! ৩ঔ৮ GুuoR 9৩ট % NO FUTURE நாடு நாசமாய் போகுது ! ৩ঔ৮ GুuoR 9৩ট % - ShareChat
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ அழுகை என்பது அது வெளிப்படும் இடத்தைப் பொறுத்து அதற்கான மதிப்பை பெறுகிறது..., ஆனால்..., எங்கும் வெளிப்படுத்த இயலாமல் தனி அறைக்குள் நான் விடும் தீராத கண்ணீரின் மதிப்பை யார் அறிவார்..., நான் கொண்ட மாறாத காதலின் வெளிப்பாடு தான் இந்த தீராத அழுகை என்பதை யார் உணர்வார் உன்னைத் தவிர..., புரிந்துகொண்டாயா என்னை உன்னில் உணர்ந்தாயா சொல்லடி ......! ரூபன் 💔💔💔
😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ - ShareChat