💖ரூபன் 💖
ShareChat
click to see wallet page
@thala_2ajith
thala_2ajith
💖ரூபன் 💖
@thala_2ajith
தீமைக்கும் நன்மை செய்
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ ஒரு கவிதை என்ன செய்யுமென்று தானே கேட்கிறீர்கள் .. ஆம் யாருமே இல்லையென்றெண்ணுபவனுக்கு ஒரு ஆறுதலாயிருக்கும்.. தனிமையில் தேநீர் அருந்திக் கொண்டிருப்பவனுக்கு துணையாய் இருக்கும்.. சக மனிதனை நம்பி ஏமாந்து நொந்து கிடப்பவனை கரம் கொடுத்து தூக்கி விடும் .. வாழவே முடியாதென்று தற்கொலைக்கு புறபட்டவனை தடுத்து வாழவைக்கும்.. தோல்வியின் விளிம்பில் துவண்டு கிடப்பனை எழுப்பி தன்னம்பிக்கை கொடுக்கும்.. ஒரு நல்ல கவிதை சக மனிதனின் ஆறுதலை விட அதிகம் ஆற்றுப்படுத்தும்.. ஒரு கவிதை இத்தனையும் செய்யும்.. Ruban ❤️❤️❤️
😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ - ShareChat
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ விலகி செல்பவரை விட்டுவிடுங்கள்... வலிக்கதான் செய்யும்... ஆனால்.. இன்னமும் உடனிருந்து ஒருநாள் விருப்பமே இல்லாமல் தான் இவ்வளவு நாட்கள் இருந்தேன் என சொல்லும் பொழுது.... வரும் வலி அதைவிடக் கொடுமையாய் இருக்கும் .. அதனால் விலக நினைக்கும் பொழுதே வழியனுப்பி விடுங்கள்... ரூபன் 💔💔💔
😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ - ShareChat
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ #💑கணவன் மனைவி காதல்💞 உங்களுக்கு தேவையான ஒன்றை பற்றிப் பலமுறை விவாதித்தும், எதிர்முனையில் எந்த மாற்றமும் இல்லாதபோது, இனி நான் இல்லை என்று முடிவு எடுக்கும் அந்த நொடியில் தான் வாழ்க்கை மேம்படத் தொடங்குகிறது... யாரோ ஒருவர் தொடர்ந்து உங்களை உடைத்துக்கொண்டே இருக்கும் போது , நாம் சரி செய்ய வேண்டும் என்கிற அந்தப் பதற்றம் நம்மை விட்டு நீங்கும் அந்தத் தருணம் மிகவும் அமைதியானது, ஐந்தாவது முறை பேசிய அதே விஷயத்தை, ஆறாவது முறை பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்று தோன்றும் போது வலிகளுடன் கலந்து ஒரு மாற்றம் நிகழ்கிறது... அது நீங்கள் அவர்களை வெறுத்து விட்டீர்கள் என்றில்லை மாறாக அவர்களால் நீங்கள் வெறுக்கப்பட்டீர்கள் என்பதால், அல்லது உங்களுக்கு அன்பு இல்லை என்பதாலும் அல்ல, மாறாக, கசப்பான அந்த உண்மையை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள், அவர்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ, அதைத்தான் செய்வார்கள்... கசப்பான உண்மை என்னவென்றால், யாரும் இந்த உண்மையை எதிர்கொள்ள விரும்புவதில்லை. நீங்கள் முதல் முறை சொன்னபோதே அவர்கள் அதைக் கேட்டார்கள், உங்கள் முகம் வாடியதைக் கவனித்தார்கள், அவர்களின் செயலால் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் கண்டும், அந்த இழப்பு அவர்களுக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை... பலமுறை பேசியும் ஒருவரது நடத்தை மாறவில்லை என்றால், அது மறதியோ அல்லது குழப்பமோ அல்ல, அது ஒரு முடிவு, உங்கள் நிம்மதியை விட அவர்களின் சந்தோசமே முக்கியம் என்று அவர்கள் எடுத்த தெளிவான முடிவு... இதை நீங்கள் உணர்ந்துவிட்டால், எல்லாம் மாறிவிடும், அவர்களைப் புரிய வைக்க வேண்டும் என்று இனி நீங்கள் வார்த்தைகளைத் தேட மாட்டீர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே எல்லாம் புரியும், ஆனால் உங்கள் கருத்தை ஏற்க அவர்களுக்கு விருப்பமில்லை... அவர்களுக்குப் புரியும் வகையில் உங்கள் உண்மைகளை மென்மையாக்க மாட்டீர்கள்... அவர்கள் பெற மறுக்கும் தெளிவுக்காக இனி நீங்கள் பொறுப்பேற்க மாட்டீர்கள்... நீங்கள் மெதுவாக விலகிவிடுவீர்கள். எந்த அறிவிப்போ, விளக்கமோ இன்றி அமைதியாக ஒதுங்குவீர்கள், உங்கள் வார்த்தைகளைத் தொடர்ந்து அலட்சியம் செய்தவர்களுக்கு, உங்கள் கடைசி விளக்கத்தைப் தெரிந்துக்கொள்ள அவர்களுக்கு நேரமும், விருப்பமும் இல்லை... உங்கள் மதிப்பைக் கண்டறிந்து கொள்ளுங்கள், உங்கள் தேவைகள் ஒருவருக்கு வசதியாக இல்லை என்பதற்காக, அதை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் மன அமைதி விவாதத்திற்குரியது அல்ல.. ஒருவர் உங்களைத் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறார் என்றால், அதுவே அவர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைத்த பதில், அந்தப் பதிலுக்கு மேல் பேசுவதற்கு எதுவுமே இல்லை தானே சிலருக்கு இதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இருந்தாலும் பிடிவாதம் ஒன்று வெளியே வர விடாது... யாராவது அவர்கள் யார் என்பதை மீண்டும் மீண்டும் காட்டினால், அதை அப்படியே நம்புங்கள், அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள்... உதாசீனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்... ✍️ ரூபன் ❤️❤️❤️❤️
😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ - ShareChat
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ "உறவுகள் முறியலாம், மனுஷங்க நம்மளை விட்டுப் போகலாம். ஆனா அவங்க விட்டுட்டுப் போன அந்த நினைவுகள் இருக்கே... அது என்னைக்குமே நம்மளை விட்டுப் போகாது. காலம் மாறலாம், புதுப் புது ஆளுங்க நம்ம வாழ்க்கையில வரலாம், ஆனா சில நினைவுகள் மட்டும் அழியாத மை மாதிரி மனசுக்குள்ள அப்படியே தங்கிடும். ​ஒரு காலத்துல ஒன்னா நடந்த தூரம், பேசுன பேச்சு, சிரிச்ச சிரிப்பு... இதெல்லாம் இன்னைக்கு வெறும் நிழலா இருக்கலாம். ஆனா அந்த நிழலைத் தேடிப் போகும்போது தான் புரியும், நாம எவ்வளவு தூரம் அந்தத் தொலைஞ்சு போன உறவை இன்னும் சுமந்துட்டு இருக்கோம்னு. சில நேரத்துல அது சந்தோஷத்தைத் தரும், ஆனா பல நேரத்துல ஆறாத வலியத்தான் கொடுக்கும். ​உண்மையச் சொல்லப்போனா, நாம கடந்து வந்த பாதைக்கு அந்த நினைவுகள் தான் சாட்சி. சில சமயம் சிரிக்க வைக்கும், சில சமயம் அழ வைக்கும். ஆனா எல்லாத்தையும் தாண்டி, வாழ்க்கையை எப்படி வாழணும்னு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது இந்த நினைவுகள் தான்.. ​நினைவுகள் ஒரு ஆறுதல், ஆனா அதே சமயம் அது ஒரு பெரிய வேதனை. நம்மகிட்ட இருந்து பிரிஞ்சு போனவங்க விட்டுட்டுப் போன ஒரே சொத்து இதுதான்... அது நம்ம மனசுல ஒரு அழியாத ஓவியமா எப்பவும் இருக்கும்! 🕯️💔" ரூபன் ❤️❤️❤️❤️
😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ - ShareChat
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #💑கணவன் மனைவி காதல்💞 உங்கள் துணை ஒருவரைப் பற்றி "இந்த உறவு உனக்கு வேண்டாம், என்று சொன்னால், அதை வெறும் சொல்லாகப் பார்க்காதீர்கள், அது உங்கள் உறவைக் காக்க அவர் விடுக்கும் அபயக்குரல்... உங்களுக்குச் சரியாகத் தோன்றும் ஒரு நட்பு அல்லது உறவு, உங்கள் துணையின் மனதில் ஏதோ ஒரு ரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஒரு ஆழமான காதலில், உங்கள் துணையின் மனநிம்மதியை விட உங்களுக்கு வேறு எதுவும் மேலானது அல்ல... நீங்கள் இருவரும் ஒரு அழகான, சரியான காதலை வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஏதோ ஒரு #சைத்தான் நண்பன் என்ற பெயரிலோ அல்லது உறவு என்ற வேடத்திலோ உங்களுக்குள் நுழையக்கூடும்... அவர் வெறும் நண்பர்தானே, இதில் என்ன தவறு இருக்கிறது, என்று நீங்கள் ஆயிரம் நியாயங்கள் பேசலாம். ஆனால், அந்த நபர் உங்கள் துணைக்கு விருப்பமானவர் இல்லை என்றால், அதற்காக உங்கள் துணையை நோகடிக்காதீர்கள்... அவருடன் சண்டை போட்டு, அவரை மனரீதியாகக் காயப்படுத்தி, எனக்கு அந்த நட்புதான் வேண்டும், அந்த உறவுதான் முக்கியம், என்று பிடிவாதம் பிடித்து உங்கள் உயிரான துணையைப் பிரியாதீர்கள்... இறுதியில், அந்த இடையில் வந்த உறவு மெல்ல மெல்ல நச்சாக மாறி, உங்களை உங்கள் துணையிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிடும். ஒரு அந்நியருக்காக உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் வரப்போகும் துணையின் மனதை உடைப்பது தற்கொலைக்குச் சமம்... மீட்க முடியாத இழப்பும், ஆறாத வடுவாக மாறும். ஒருமுறை நம்பிக்கை உடைந்துவிட்டால், அதன் பிறகு நீங்கள் காலடியில் விழுந்து கதறினாலும், ரத்தம் சொட்டச் சொட்ட அழுதாலும், ஏன் உங்கள் உயிரையே மாய்த்துக்கொண்டாலும் கூட, இழந்த அந்தப் பழைய காதலையோ, அந்தத் துணையின் நம்பிக்கையையோ உங்களால் மீட்டெடுக்க முடியாது... காயப்பட்ட இதயம் ஒரு கல்லாக மாறிவிடும். நீங்கள் எத்தனை வருடங்கள் போராடினாலும், எத்தனை தூது அனுப்பினாலும் அவர் உங்களை மன்னிக்கவும் மாட்டார், மீண்டும் அந்தப் பழைய இடத்தைத் தரவும் மாட்டார். காலங்காலமாகச் சேர்த்து வைத்த அன்பு, ஒரே ஒரு தவறான பிடிவாதத்தால் சாம்பலாகிவிடும்... இருண்டு போகும் வாழ்க்கயின் வலியும் வேதனையும் துணையை இழந்த பிறகுதான் நரக வாழ்க்கை தொடங்கும். தற்காலிகமான ஒரு உறவுக்காக உங்கள் #பொக்கிஷத்தை இழந்த அந்த நிமிடம் முதல் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் மறைந்துவிடும்... தூக்கமில்லாத இரவுகளாக தலையணை நனையும் அளவுக்குக் கண்ணீர் விட்டாலும், உங்கள் துணையின் மடியில் கிடைத்த அந்த அமைதி மீண்டும் கிடைக்காது... மனச்சோர்வும் தனிமையும் உங்களை நீங்களே அழித்து கொல்லு(ள்ளு)ம் அளவிற்கு சுற்றிலும் ஆயிரம் பேர் இருந்தாலும், உங்கள் துணையின் அந்த ஒரு இல்லாமை உங்களைத் தனிமைச் சிறையில் தள்ளும்... உணவு இல்லாது,எதை உண்டாலும் இறங்காது, எதைப் பார்த்தாலும் அவர் நினைவே வந்து வாட்டும்... முடிவில்லாத மன உழைச்சலுக்குள் உங்களை தள்ளும், அன்று அவர் பேச்சைக் கேட்டிருக்கலாமே என்ற குற்ற உணர்வு உங்கள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்... வாழ்க்கையே ஒரு இருண்ட குகையாக மாறிவிடும். தனிமையும், வெறுமையும் உங்களைச் சூழ்ந்து, நீங்கள் வாழும் ஒவ்வொரு நொடியும் ஒரு மரண வேதனையைத் தரும்... உங்கள் உறவை நேசியுங்கள், கொண்டாடுங்கள், முன்னுரிமை கொடுங்கள், இடையில் வந்தவர்கள் இடையில் போய்விடுவார்கள். ஆனால், கடைசி மூச்சு வரை கை கோர்த்து நிற்கப்போவது உங்கள் துணை மட்டுமே... துணையின் உள்ளுணர்வை நம்புங்கள், உங்கள் துணை ஒருவரைப் பற்றி எச்சரிக்கிறார் என்றால், அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அதைச் சந்தேகமாகப் பார்க்காமல் அக்கறையாகப் பாருங்கள்... பிடிவாதத்தைத் தவிருங்கள், ஒரு அந்நியருக்காக உங்கள் துணையை நோகடிப்பது, உங்கள உறவை நீங்களே தீ வைப்பதற்குச் சமம்... இருக்கும் போதே பற்றிக்கொள்ளுங்கள் யாரோ ஒரு அறிமுகமில்லாத அல்லது தற்காலிகமான உறவுக்காக, உங்கள் வாழ்வின் #பொக்கிஷமான அந்த உறவை இழந்துவிட்டு, இறுதி மூச்சு வரை நிம்மதி இழந்து நரக வாழ்க்கை வாழாதீர்கள்... இழந்த பிறகு அழுவதில் பயமில்லை, இருக்கும் போதே அந்த அன்பைப் பற்றிக்கொள்ளுங்கள். அந்த இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்... துணையை இழந்துவிட்டு இருளில் தவிப்பதை விட, துணையின் சொல்லுக்கு மதிப்பளித்து ஒளியோடு வாழ்வதே புத்திசாலித்தனம்... மறுபடியும் சொல்கிறேன் நாணயதையும் சில்லறையையும் ஒரே அளவில் பார்க்காதீர்கள், சில சில்லறைக்காக உங்கள் நாணயத்தை #மாணிக்கத்தை தொலைத்து நிம்மதி இழந்து மரண படுக்கை வரைக்கும் செத்து மடியாதீர்கள்... ✍️ ரூபன் 🙏🙏🙏🙏
😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் - ):/@ ):/@ - ShareChat
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #🎬 சினிமா 5 சிறந்த காட்சிகள் அங்காடி தெரு படத்திலிருந்து 1. செல்வராணி வேலை போனாலும் பரவாயில்லை, வா பார்த்துக்கலாம்னு அவன்பா... வேலை இல்லைன்னா நான் எப்படி குடும்பத்தைக் காப்பாத்துவேன் அப்படின்னு காதலியத் தகாத வார்த்தை சொல்லி வார்த்தையாலயே கொன்றுவான். செல்வராணி இறந்ததுக்கப்புறம் அந்த கடை முன்னாடி அவளோட ரத்தம் அப்படியே காட்டுவாங்க. அங்கிருந்து ஒரு ஸ்மூத் ட்ரான்சிஷன் எடுத்து அடுத்த நாள் காலையில ஒரு பெரிய அழகான ரங்கோலி கோலம் இருக்கும். நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இறந்தாலும் பரவாயில்லை, அடுத்த நாள் நீயும் எல்லா மனிதர்களாலும் கடந்து போற ஒரு பக்கமாயிடுவே அப்படின்றத அந்த இடத்துல அவ்வளவு தெளிவா சொல்லியிருப்பாங்க...!! 2 செல்வராணியோட மரணம் லிங்குவ நடுங்க வைக்கும். கனிய அவன் கொஞ்சம் கொஞ்சமா அவாய்ட் பண்ணுவான். கனி எக்கச்சக்கமான வார்த்தைகள் விட்டதுக்கப்புறம் லிங்கு சொல்லுவான்... மாட்டிக்கிட்டா உன்ன வச்சு காப்பாத்த எங்கப்பனும் சொத்து சேர்த்து வைக்கல, மாப்பிள்ளைக்கு ஒரு லட்சம் சீர் செய்ய உங்கப்பனுக்கும் வக்கில்லைனு. அதானே ரியாலிட்டி? 3. பழிக்கு பழி அப்படின்ற மாதிரி லிங்குவும் கனி ஏலச்சீட்டு நடத்துறதை சொல்லி மாட்டிவிட்டரலாம்னு ஒரு அட்டெம்ப்ட் பண்ணுவான். கனி அழுதுகிட்டே வெளியில அடி வாங்கிட்டு வருவா. கனி சொல்லுவா... தொடக்கூடாத இடத்தைத் தொட்டு harassment பண்ணாலுமே பொறுத்துகிட்டேன் எல்லாமே இந்த வேலைக்காக தான் அப்படின்னு நம்மளையே உரைய வச்சிரும் கனியோட ஸ்டேட்மென்ட்...!!! 4. லிங்குவோட தங்கச்சி ஒரு தடவை தெரியாதவங்க கிட்ட அவங்க அண்ணன் வேலை செய்யுற கடையோட பேக் கேக்கப் போவா. அந்த பேக் அவளுக்கு கிடைச்சதும் எங்க அண்ணனே என் கூட இருக்கிற மாதிரி நினைச்சு ஒரு சிரிப்பு சிரிப்பா பாருங்க - மில்லியன் டாலர் ஸ்மைல். அப்படியே கட் பண்ணா இந்த பக்கம் கனியோட தங்கச்சி வயசுக்கு வந்துருவா. வேலை கொடுத்த அம்மா நாயைக் கட்டிப் போடுற இடத்துல அவளை உட்கார வைப்பாங்க வீட்டுக்கு தீட்டுனு சொல்லிட்டு. ஒரு கோவில்ல உள்ள வாமா இந்த கோவில் தீட்டு கிடையாதுன்னு சொல்லும்போது அந்தப் பொண்ணு சிரிக்கிற சிரிப்பு... அதுவும் மில்லியன் டாலர் ஸ்மைல்தான்...!!! 5. ஒரு காதல் வெளியில தெரிஞ்சுட்டா வேலையே போயிடும்னு நினைச்ச லிங்குவுக்கும், கனி கை, கால் போனதுக்கு அப்புறம் கூட நான் அவ கூட நிப்பேன்டா யாரு தயவும் எனக்கு வேணாம்னு கனிய கல்யாணம் பண்ணி அதே ஸ்ட்ரீட்ஸ்ல வாழ்ந்து காட்டுன லிங்குவுக்கும் எவ்வளவு வித்தியாசம். உனக்கு கை இல்லனாலும் பரவாயில்லை, கால் இல்லனாலும் பரவாயில்லை, நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, உனக்கு கான்ஃபிடன்ஸ் இருந்தா போதும் இந்த ஊர்ல பிழைச்சுக்கலாம்." அங்காடி தெரு 💔 , ரூபன் ❤️❤️❤️❤️
😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #😓காதல் துரோகம் #👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை வாழ்க்கை ஏற்கனவே உங்களைச் சோதித்து, பல முனைகளில் அடித்து வீழ்த்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்களை விட அதிகமாக நேசித்த உங்கள் கடைசி நம்பிக்கையான அந்த நபர் உங்களுக்கு இறுதி அடியைக் கொடுக்கத் துணியும் அந்தத் தருணம்... அது வெறும் இதயம் உடைவது மட்டுமல்ல, அது ஒரு உயிர் வலி... அந்த வலி என்பது வெறும் ஏமாற்றம் அல்ல, அது நீங்கள் கட்டிக்காத்த நம்பிக்கையின் மீது சுமத்தப்பட்ட பாரமான துரோகம். ஒட்டுமொத்த உலகத்தின் சுமையும் உங்கள் மார்பில் அழுத்த, நீங்கள் யாரிடம் அடைக்கலம் தேடுவீர்களோ அவரே உங்களுக்குப் பெரும் புயலாக மாறுவது போன்ற ஒரு கொடுமையான உணர்வு அது... அவர்களால் எப்படி இவ்வளவு சுலபமாகக் காயப்படுத்த முடிகிறது என்று உங்கள் மனம் திகைக்கும். அன்பு இவ்வளவு கொடூரமானதா, விசுவாசத்திற்குப் பரிசு இதுதானா என்ற கேள்விகள் உங்களை நிலைகுலையச் செய்யும். ஆனால், இந்த பேரழிவின் நடுவிலும் நீங்கள் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டிய ஒரு சத்தியம் இருக்கிறது... அவர்களது செயல்கள் ஒருபோதும் உங்கள் மதிப்பைத் தீர்மானிக்கப் போவதில்லை. அவர்களது தேர்வுகள் நீங்கள் காட்டிய நேர்மையையோ அல்லது உங்கள் விசுவாசத்தையோ அழித்துவிட முடியாது... அவர்கள் தந்த வாக்குறுதிகள், நீங்கள் காட்டிய அந்த ஆழமான அன்பின் வலிமையைக் குறைத்துவிடாது. அது வலிக்கிறது, மரணத்தை விடக் கொடிய பாரமாக இருக்கிறது, உங்கள் அடையாளத்தையே கேள்விக்குறியாக்குகிறது என்பது உண்மைதான்... ஆனால், அந்த இறுதி அடியிலிருந்தும் நீங்கள் மீண்டு வருவதுதான், உங்கள் உண்மையான மன உறுதி மற்றும் உங்களுக்கே நீங்கள் செலுத்த வேண்டிய முதன்மையான அன்பை நீங்கள் கண்டறியும் உன்னத தருணம். உங்களை அவர்கள் எவ்வளவுதான் உடைத்தாலும், அந்தத் துகள்களிலிருந்து முன்னை விட வலிமையான ஒருவராக உங்களால் மீண்டும் எழ முடியும்... அப்படி நீங்கள் மீண்டும் நிமிர்ந்து நிற்கும் போதுதான் ஒன்றை ஆழமாக உணர்வீர்கள், அவர்களைக் கடந்து செல்வது என்பது எதையும் இழப்பதல்ல, மாறாக, உங்களை நீங்களே ஒரு பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் மகத்தான செயல்... நீங்கள் அவர்களை இழக்கவில்லை, அவர்கள் உங்களை இழந்துவிட்டார்கள். இன்று நீங்கள் சிந்துகிற கண்ணீர் உங்கள் வலிகளைக் கழுவி, நாளை நீங்கள் காணப்போகும் அமைதிக்கான பாதையை உருவாக்கும். துணிந்து நில்லுங்கள், உடைந்த இடங்களிலிருந்துதான் ஒளி பிறக்கும்.. ரூபன் ❤️❤️❤️
👉வாழ்க்கை பாடங்கள் - ShareChat
#😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ காயப்படுத்தியவர்களை மன்னிப்பதற்கு தனித் தைரியம் வேண்டும் அந்த அளவுக்கு நான் இன்னமும் பக்குவப்பட வில்லை ஆகையால் என்னை மன்னித்து கொள்ளுங்கள் .. ரூபன் ❤️❤️❤️
😍⃝🤗தனிமை காதலன்😍⃝🤗♥ - ShareChat
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #👉வாழ்க்கை பாடங்கள் #நிதர்சனம் மிகத் தெளிவாய் யோசியுங்கள் உங்கள் சிந்தனையை யாரும் கலைத்து விட முடியாது. தேம்பி அழ வேண்டுமென்றால் அழுதே தொலையலாம். அடுத்தவர்களுக்கு அது அவஸ்தையாக இருக்காது. யாரையாவது வெறுத்து ஒதுக்கி விட நினைத்தால் தாமதிக்காமல் ஒதுங்கி நில்லுங்கள். சிரிக்க வேண்டுமென்றாலும் கூட சிரித்துத் தான் பாருங்களேன். ஓங்கி அறைந்து விட முடியுமென்றாலும் கூட ஒரு அறையாவது அறைந்து விடுங்கள். எவரிடமாவது உங்களுக்கான பதில் வேண்டுமென்றால் தைரியமாகக் கேளுங்கள். கேள்விகளால் மட்டுமே பதில்களைத் தர முடியும். கவலைப்பட வேண்டுமென்று தோன்றினால் கூட கவலைப்பட்டுத்தான் பாருங்களேன். எல்லாமும் முடிந்து, எல்லாவற்றையும் கடந்து சலனமின்றி, சப்தமின்றி எஞ்சியிருக்கும் நிலையில் ஒரு தெளிவு இருக்கும். அந்த நிலையில் நிற்கும் உன் மனம் தான் நீதிபதி. அந்த மனநிலை யாரையும் வஞ்சிக்காது,எவர் மீதும் பழி சுமத்தாது. நீ யார் என்பதை உனக்கு உணர்த்தும். யார் உன்னை நேசிக்கிறார்களென்று புரிதலைக் கொடுக்கும். யாருக்காக வாழ வேண்டுமென்று உணர்ந்து இருப்பாய். எப்படி வாழக் கூடாதென்று கூடத் தெரிந்திருப்பாய். நல்லவைகளை உனக்கு குருவாகக் கொள். தீயவைகளை உனக்கு எதிரியாய் கருது. நீ தோற்றும் இருக்கலாம். ஜெயித்தும் இருக்கலாம். ஆனால், நீ நீயாக வாழ மறந்த நாட்களை உன்னால் உனக்காகக் கூட திருப்பப் பெற முடியாது, என்பதே நிஜம். ரூபன் 🙏🙏🙏
😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் - பிறறைப் a [ [ ' ता [ m்த்துஒர்ுபோதம் வா பார்த்து வாழ [ೊ a சத்தயம் மசசத 00 மசிர சநம் மசிரி மஸ் சத்தியம் ] சத்தியம் மசிரில் சகதியம் சத்தியம் மச மசிரஸ ச கரயம ೫೫  பயனற்றது  ல் சத்தியம் சத்தய சn ದಗ  UD LD மல் சத்தியம் மசிரில் சத்தியம் பசிரில் சத்தியம் மசாஸ் சத்த மசரல் சத்தயம் பசரில் சத்தியம் ய மசா சத்தய 0 மல சத்தியம் மசிரிஸ் சத்தியம் ` மசிரில் சக்தியம் மசிரல் சத்தியம்  " சத்தியம் ம சரில் சந்தியம் மசரஸ் சத்தியம் மசரஸ் சத்தியம் ம மசிரில் சக்கியம்  சகறயம மசிரல் சக்றயம் மசிரிள சத்திய் [ மசிரிஸ் சத்தியம் மச யம் மசிரிலசத்தியா மசிரிலசத்சியம் உன்னைப் பார்த்து சந்தயம் த்தய் "D [ ದ   L மற்றவர்கள் வாழ  _111 } a " { 7   [ ஆசைப்படும் அளவிற்கு a வாழ்ந்து காட்டிவிட்டு போ. பிறறைப் a [ [ ' ता [ m்த்துஒர்ுபோதம் வா பார்த்து வாழ [ೊ a சத்தயம் மசசத 00 மசிர சநம் மசிரி மஸ் சத்தியம் ] சத்தியம் மசிரில் சகதியம் சத்தியம் மச மசிரஸ ச கரயம ೫೫  பயனற்றது  ல் சத்தியம் சத்தய சn ದಗ  UD LD மல் சத்தியம் மசிரில் சத்தியம் பசிரில் சத்தியம் மசாஸ் சத்த மசரல் சத்தயம் பசரில் சத்தியம் ய மசா சத்தய 0 மல சத்தியம் மசிரிஸ் சத்தியம் ` மசிரில் சக்தியம் மசிரல் சத்தியம்  சத்தியம் ம சரில் சந்தியம் மசரஸ் சத்தியம் மசரஸ் சத்தியம் ம மசிரில் சக்கியம்  சகறயம மசிரல் சக்றயம் மசிரிள சத்திய் [ மசிரிஸ் சத்தியம் மச யம் மசிரிலசத்தியா மசிரிலசத்சியம் உன்னைப் பார்த்து சந்தயம் த்தய் "D [ ದ   L மற்றவர்கள் வாழ  _111 } a { 7   [ ஆசைப்படும் அளவிற்கு a வாழ்ந்து காட்டிவிட்டு போ. - ShareChat
#😓காதல் துரோகம் #❤️காதல்💘 அன்று நான்தான் உனக்கு உயிராய் இருந்தேன் என் கைளை இறுகப்பிடித்திருந்தாய்.. நிலவொளியில் மெல்லிய குளிரில் உன் அணைப்பின் கதகதப்பில் அந்த தெருக்களில் நடந்துகொண்டிருந்தேன் அடிக்கடி என்பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தாய் உனக்குள் நான் எவ்வளவு ஆழமாய் வாழ்கிறேன் என்பதை நினைத்து பிரமித்தே போனேன் அந்த இருளில் வானத்திலிருந்த நிலாக்கூட பொறாமை கொண்டு முகிலுக்குள் ஒழிந்துகொண்டது நம்காதலின் ஆழம்கண்டு. இறுகப்பிடித்த உன்கைகளுக்குள் என்கைகள் விடுபடத்தோன்றாமல் மயங்கிக்கிடந்தது குழந்தைபோல கெஞ்சிய உன்வார்த்தைகளில் நான் தாயாகிப்போயிருந்தேன் உனக்கு பிறகு ஒரு நாள்.. பிறகு ஒருநாள் … காணாமலே போனாய் பிறகு ஒரு நாள் மறுபடி அதே மழலையாய் வந்து அமர்ந்தும் கொண்டாய் மறுபடியும் சண்டைபோட்டுக்கொண்டாய் போனாய் நீ வரும்போதெல்லாம் அணைத்துக்கொண்டு நீ விலகும்போதெல்லாம் துடித்துக்கொண்டு வெறுப்பு எதுவும் வராமல் நான் ஏன் உன்னை நேசித்தேன் என்று உனக்கு வியப்பிருக்கலாம் நீ தந்த அன்பை விடவும் அன்பை உனக்குக்கொடுத்தே அன்று நிறைந்துகிடந்தேன் நீ தந்த வலிகளை விடவும் உன் இருப்பின்கதகதப்பு என்னை உயிர்ப்பித்து ஒளிர்வித்து வைத்திருந்து பிறகு அணைத்தே போனது ரூபன் ❤️❤️❤️❤️😔😔😔
😓காதல் துரோகம் - ShareChat