எதற்கும் ஓர் எல்லை உண்டு! EPS அதிமுகவின் உரிமையாளர் இல்லை!
அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெக ஆட்சியமைப்பதற்கான சட்டசபை வாக்கெடுப்பில் ஆதரவு கொடுக்க முடிவெடுத்த நிலையில் EPS அதை எதிர்க்கிறார்.
வாக்கெடுப்பின் போது கட்சித் தலைமையின் வழிகாட்டுதலுக்கு சில நீதிமன்றத் தீர்ப்புகள் முக்கியத்துவம் கொடுத்தாலும் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தவெகவிற்கு ஆதரவளிப்பது என எடுக்கும் ஒரு முடிவினை சபாநாயகர் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது.
ஒவ்வொரு பிரச்சினையும் வித்தியாசமானது. அடிப்படை நியாயயங்களில் வேறுபட்டவை.
அதிமுகவில் கட்சித் தலைவராக EPS பதவியேற்றதில் இருந்து அவரது தலைமை நீதிமன்றங்களில் கேள்விப் பொருளானது. அதே காலகட்டத்தில் தன்னை எதிர்த்த கட்சியின் பெரிய தலைவர்களை EPS திட்டமிட்டு ஓரம் கட்டியது வரலாறு.
கலைஞர், MGR, ஜெ போன்ற வலிமையான மக்கள் தலைவர்கள் பழியுணர்ச்சியுடன் நடந்து கொண்டதில்லை. அதிலும் எங்கிருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் தனக்கென ஒரு அணியை உருவாக்கி அரசியல் செய்தறியாத செங்கோட்டையன் பழிவாங்கப்பட்ட விதம் கொடுமையிலும் கொடுமையானது.
OPS, சசிகலா ஆகியவர்களின் ஓயாத சட்டப் போராட்டங்கள் உலகப் பிரசித்தமானவை. இன்றைய சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் தமிழகத்தின் கண்ணியமிக்க மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர். மேலும் அதிமுகவில் EPS இன் தன்னிச்சையான முடிவுகளால் அவரும் பாதிக்கப்பட்டவர்தான்.
EPS அதிமுகவின் உரிமையாளர் போல செயல்பட்டு வந்தார். EPS இன் வழக்கமான நடைமுறைகள் சபாநாயகருக்கு நன்கு தெரிந்ததுதான். அதுமட்டுமல்ல, இந்த பஞ்சாயத்துக்கள் வேறு எந்தக் கட்சிகளிலும் ஒரு தொடர்கதை போல நடந்தது இல்லை என்பதில் இருந்தே ஜெ க்குப் பின் காலங்காலமாக அதிமுகவில் நிலவி வரும் பிரச்சினைகள் புரியவரும்.
திமுகவின் ஆதரவுடன் முதலமைச்சராக விரும்பிய EPS, எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று புரிந்துகொள்ளாததால் வந்த விளைவுதான் இது. எனவே இந்தப் பின்புலத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு அதிமுகவில் ஒரு பிரிவினர் முன்வந்தால், சபாநாயகர் நியாயமான முடிவினை எடுப்பார் என நம்பலாம்.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
அப்படி நடக்குமா? நடந்தால் அதுதான் மகத்தான புரட்சி!
அதிமுக அல்லது மற்ற கட்சிகளில் இருந்து விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டால், தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தானாகவே தனி மெஜாரிட்டி கிடைக்கும்.
அதற்கு அடுத்த கட்டமாக ராஜினாமா செய்த அதே MLA க்கள் தவெகவில் சேர்ந்து அதன் சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் அந்த இடைத்தேர்தலுக்கு பின்பும் தவெகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இருக்கிற பட்சத்தில் கட்சித் தலைமை எந்த விதமான அரசியல் அழுத்தங்களுக்கும் அடி பணியாமல் 5 வருடங்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தர முடியும்.
இது நடக்குமா?
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
அழியாத அடையாளம்
கண்கள், கைகால்கள் இல்லாமல்கூட குழந்தைகள் பிறக்கலாம்; ஆனால், சாதிமதம் இல்லாமல் பிறப்பதில்லை! அது பிறந்த பிள்ளைகள் கேட்டுப் பெறுகின்ற அடையாளம் இல்லை. நமது சமுதாயத்தில் சாதி மதம் என்பது மனிதன் மீது திணிக்கந்டும் ஒரு பிறவி அடையாளம். சாதி, மதம் என்ற பிறவி முத்திரைகளை உறுதிப்படுத்தும் பொருட்டு சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலம் அவை ஆவணப்படுத்துகின்றன.
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், வங்கி, வேலை என்று அனைத்து மட்டங்களிலும் இந்த அடையாளங்களே ஆதாரங்களாக இருக்கின்றன. மனிதர்கள் மறந்தாலும் அவர்களுடைய அடையாளங்களை அரசியல் கட்சிகள் மறப்பதில்லை. எல்லா நிலைகளிலும் மனித குலம் அடையாளம் தேடி அலைகிறது.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...
- கண்ணதாசன்
பிறறைச் சூழ்ச்சிகள் பல செய்து ஏமாற்றிப் பணத்தைப் பறித்துவிட்டு, தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு சுகமாக வாழ நினைப்பவர்களால், அப்படி நிரந்தரமாக மறைந்திருக்க முடிவதில்லை. சுயத்தை இழந்தவனால் சுகமாக வாழ முடியாது! சுய அடையாளம் ஒரு நாள் மீண்டும் உயிர் பெற்று அவர்களைத் துரத்துகிறது.
இன்று நமது செயல்கள் ஒவ்வொன்றும் நமது தடங்களை சமூக வலைத் தளங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள், தொலைபேசிகள் ஆகிய பல்வேறு தளங்களில் விட்டுச் செல்கின்றன. பின்னர், வங்கிக் கணக்கு எண், பான் (PAN) கார்டு எண், தொலைபேசி எண் ஆகியவைகளும் மனிதனுடைய கூடுதல் அடையாளங்கள் ஆகின்றன. அடையாளச் சங்கிலியில் இப்படி ஏகப்பட்ட இணைப்புகள் (Links) உண்டு!
பல்வேறு தகிடு தத்தங்களின் மூலம் பலரை ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு சென்னையை விட்டுக் கேரளாவுக்கு ஓடிப்போன சதாசிவம், அங்கே சாமர்த்தியமாக மறைந்திருந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறான். ஜெகத்பிரதாப் என்ற இளைஞன் ஒரு கோடி ரூபாய் ஏலச் சீட்டு ஒன்றில், தன் தந்தையை ஏமாற்றி விட்டு சீட்டை ஏலத்தில் எடுத்துக் கொண்டு ஓடிய அந்த சதாசிவத்தைக் கண்டுபிடித்து, சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து, திட்டமிட்டுச் செயல் பட்டு அந்தப் பணத்தை மீட்கிறான்.
ஜெகதலப் பிரதாபனான கதாநாயகன் 'அடையாளத்தை' ஆயுதமாகக் கொண்டு, தந்தை இழந்த பணத்தினை மீட்டது மட்டுமல்லாமல், அதே கால கட்டத்தில் எப்படி கல்வி, அரசியல், தொழில், பொதுத் தொண்டு என்று தன் தாள் பட்ட இடத்திலெல்லாம் தடம் பதித்து, வெற்றிகரமாகக் காதலியையும் கரம் பிடிக்கிறான் என்பதே கதை.
- திரைபாரதி
Read அழியாதஅடையாளம் @ kobo.com
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
Is it arrogance or ignorance?
The quote "We'll decide" is attributed to Bill Gates within the context of global health initiatives, specifically regarding the distribution of vaccines and the setting of international health priorities. It is a sign of "philanthro-capitalism" — the idea that billionaire donors can dictate global agendas.
It highlights a shift in global power where private wealth can rival the influence of nation-states. This raises the question of whether a single individual’s vision, no matter how well-funded, should have the authority to shape the biological or social fate of billions without a public mandate.
Regarding his past associations and public persona, many observers see a pattern of "technocratic optimism"—the belief that any problem, including moral or social ones, can be "engineered" or solved through the sheer application of capital and data. This can often be perceived as a form of messianic egotism.
A Mandate for the Powerful
Wealth is not a mandate for moral supremacy, yet we live in an era where a bank balance is frequently mistaken for a compass. Business and political leaders today operate with a level of reach that would make the emperors of olden days shudder.
The assertion that a select few can "decide" the trajectory of the human race is not leadership; it is a delusion of omnipotence. When industrial titans and political elites believe they are the sole architects of our future, they trade wisdom for hubris.
Business success is a measurement of market capture, not a certification of character. It does not grant a person the right to experiment with the social fabric or the biological sovereignty of the masses.
Leaders must be reminded that their days are indeed numbered in the vast clockwork of the universe. To act as though one is exempt from the humility of the human condition is the height of ignorance.
If those at the top wish to steer the morality of humanity, they must first submit to it. They must realize that they are stewards, not owners. The moment a leader believes they are the "we" who decides for the "you," they have ceased to lead and have begun to rule.
The world does not need people with savior complexes; we need peers who respect the collective agency of the people they claim to serve. The world belongs to the many, not the few who happened to master the machinery of the moment.
#BillGates #TechnocraticOptimism #GlobalHealth
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
காதறுந்த ஊசி
"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்பது பட்டினத்தடிகளின் வாக்கு. மனிதர்கள் கொடுக்கிற வாக்குறுதிகளும்கூட அப்படித்தான். "கண்டிப்பாகச் செய்கிறேன்" என ஒருவர் வாக்குறுதி கொடுத்தாலும், அந்த இரண்டு வார்த்தைகளுக்கு முன், 'முடிந்தால்' அல்லது 'கடவுள் விரும்பினால்' (God wiiling) என்பதை சேர்த்துக் கொள்வது நல்லது. தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.
வாக்குறுதி என்பது ஒப்பந்தம் இல்லை. எனவே அது எதுவரை செல்லும் என்று சொல்ல முடியாது. "நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னவர் நாளை இருப்பாரா, இருந்தாலும் நம்மை பாத்துக் கொள்ளும் நிலையில் இருப்பாரா என்று சொல்வதற்கில்லை.
கிராமப்பறங்களில் "அவன் அப்படியா சொன்னான்? அவனுடைய வார்த்தைகள் நீர்மேல் எழுதி வைத்தது மாதிரிதான்" என்று சாதாரணமாகக் கூறுவார்கள். காகிதத்தில் எழுதியதே காற்றில் பறக்கும்போது, எழுதும்போதே அழிகிற நீரில் எழுதுகிற எழுத்து நீடிக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
நீரில் எழுதுவதாவது எழுதிய கணத்தில் மறைகிறது. சொல்கிற வார்த்தைக்கு சொல்லும்போதே உயிர் இல்லை என்றால் அது எவ்வளவு தூரம் வரும்? சரி, உயிருள்ள மனிதர்தானே சொல்கிறார்? பிறகு ஏன் இந்தக் கேள்வி?
உள்ளத்தில் ஒன்றை வைத்து, உதடுகள் அதை மறைத்து, பொய்யான வார்த்தைகளை உதிர்ப்பதுண்டு. அதாவது, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொடுத்த க்ஷணத்திலேயே இருப்பதில்லை. அப்போதைக்கு அவை சும்மா சமாதானத்திற்காக சொல்லப்படும் வார்த்தைகள்.
வாக்குறுதிகளை கேட்பவர் நம்பினாலும் சொல்பவர் நம்பாத நிலையில், அவை பொய்யாகும் போது அதற்கான அதற்கான வியாக்கியானங்கள் பெரிதாக இருக்கும். 100 வாக்குறுதிகளில் 90ஐ நிறைவேற்றிவிட்டோம் என மேடைகளிலே அரசியல் கட்சிகள் அலப்பறை செய்வதுண்டு.
90% வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு 10% பணம்கூடத் தேவைப்படாது. ஆனால், அந்த 10% வாக்குதிகளுக்கு 90% பணம் தேவைப்படும். பல அரசுகள் கடந்த காலங்களில் கவைக்கு உதவாத வாக்குறுதிகளை வதவதவென்று அள்ளி விட்டதன் சூட்சுமம் இதுதான்.
முதல்வர் விஜய் தனது பதவியேற்பு விழாவில் பேசும்போது, "முந்தைய அரசு கஜானாவை காலி செய்துவிட்டு போயுள்ளது … மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் (கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதற்கு) உதவியாகவும்
ஒத்துழைப்பாகவும்
இருக்கும்” என பேசியுள்ளது அவவரது வெளிப்படைத் தன்மையை காட்டுகிறது.
தேர்தலுக்கு முன் இன்றைய முதல்வர் விஜய் அளித்த சில வாக்குறுதிகள் நீண்டகால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டியவை. அது வளர்ச்சியை முன்னிட்ட ஒரு மாபெரும் பயணம். அதற்கு நம்பிக்கையே மூலதனம்.
விஜய் தந்த வாக்குறுதிகள் கடன்களை வாங்கி நிறைவேற்றக் கூடியவை அல்ல. அதற்கு அரசின் வருவாயை பெருக்க வேண்டும். அதனால், எதிர்க்கட்சிகள் இது விஷயமாக விமர்சனங்களை முன்வைக்கும் போது மக்கள் அவர்களுடைய உண்மையான நோக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
எல்லோரும் டிரம்ப் மாதிரி பேச ஆரம்பித்தால் எப்படி?
விஜய்க்கு எதிராக 60% மக்கள் இருக்கிறார்களாம். திருமாவளவன் அவர்களின் அரிய கண்டுபிடிப்பு! இது ஒரு பொறுப்புள்ள தலைவர் பேசுகிற முறையான பேச்சாகத் தெரியவில்லையே! எல்லோரும் டிரம்ப் மாதிரி பேச ஆரம்பித்தால் எப்படி?
"விஜய்க்கு எதிராக 60% மக்கள்" என்று திருமாவளவன் பேசியது முட்டாள்தனமானது!
தமிழக மக்கள் விஜய்யை எதிர்ப்பதற்கு -
* விஜய் ஊழல் செய்தாரா?
* பொது மக்கள் சொத்தை கொள்ளையடித்தாரா?
* அரசு பணத்தினை கையாடல் செய்தாரா?
* தமிழக மக்களுக்கு வேறு என்ன துரோகம் செய்தார்?
தமிழக மக்கள் விஜய்யை எதிர்ப்பதற்கு என்ன முகாந்திரம் உள்ளது? உங்கள் எதிரிகளை எல்லாம் மக்கள் எதிரிகளாக சித்தரிப்பதற்கு ஒரு வரைமுறை வேண்டாமா? இப்படிக்கூட அவர் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்கே தந்தியின் படத்தை அப்படியே தந்துள்ளோம் யாகாவாராயினும் நாகாக்க!
ஒருபக்கம் ஆதரவு கொடுத்துக்கொண்டே மறுபக்கம் ஊசியை வைத்துக் குத்திக் குடைச்சல் கொடுக்கிற பண்பாட்டை மக்கள் ரசிக்க மாட்டார்கள். அதிலும் கேப்பையில் நெய் வடிகிற கதையாக மாணாங்காணியாக பேசுவதை ஏற்பதற்கில்லை என்றாலும், பொதுவாவாக இவரது பேச்சை யாரும் பொருட்படுத்துவது இல்லை.
கோமணத்துல காசிருந்தா, கோழி கூப்பிடப் பாட்டு வரும் என்கிற கதையாக, இவர் பேசவில்லை - தமிழக அரசியல் இருக்கும் இக்கட்டானதொரு சமயத்தில் - இவர் வசம் இருக்கும் இரண்டு MLA சீட்டுக்கள் பேசுகின்றன. அப்படி இல்லையென்றால் ஒருவேளை இவருக்கு என்ன இக்கட்டான சூழ்நிலையோ...
திருமாவளவனுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் ஆதரவு வாக்குகள்; விஜய்க்கு விழாத வாக்குகள் எல்லாம் எதிர்ப்பு வாக்குகளா?அப்படிப் பார்த்தால், திமுகவிற்கு விழாத வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு எதிரான வாக்குகள் என இவர் மறைமுகமாகச் சொல்வது போலத் தெரிகிறது.
பாவம், சொல்லிவிட்டுப் போகட்டும்! ஏனென்றால் அதுதான் உண்மை. அதை நேரடியாக இவரால் சொல்ல முடியாது என்பதால் விஜய்யை வைத்து சுற்றி வளைத்துப் பேசுகிறார். இப்படித்தான் சீமானைப் பற்றி ஏடாகூடமாகப் பேசி சுடச்சுட வாங்கிக் கட்டிக்கொண்ட வரலாற்றுக்கு இவர் சொந்தக்காரர்.
போகிறபோக்கில் எதையாவது பேசி புழுதியை வாரித் தூற்றுவது அவர் கண்களிலும் வந்து விழும்... சரி, என்ன மனநிலையில் இருந்தாரோ, ஏதோ பேசிவிட்டார். பேசிவிட்டுப் போகட்டும், விட்டுத் தள்ளுவோம்!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
கட்சி உடைந்தாலும் பரவாயில்லை, நாற்காலியை விடமாட்டேன்...
தவெகவில் வேட்பாளர்கள் யாரென்று தெரியாமலேயே விழுந்த ஓட்டுக்கள் அத்தனையும் விஜய்க்காக விழுந்தன. அதே போல சீமானையும் சொல்லலாம். அப்படி எத்தனை ஓட்டுக்கள் EPS க்காக விழுந்திருக்கும்? நமது தளத்தில் பல காலமாகவே EPS அவர்கள் அதிமுகவை ஒழிக்காமல் ஓயமாட்டார் என்று ஒரு ஆதங்கத்தில் எழுதி வந்தோம். கட்சியில் அவருடைய எதேச்சாதிகாரத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவர எந்த விதமான முயற்சிகளும் கடந்த தேர்தல் வரை எடுக்கப்படவில்லை.
தேர்தலுக்குப்பின் "திருவிழாவில் தொலைந்த பிள்ளையை" போல அதிமுக கலக்கத்தில் இருக்கிறது. இன்று அதிமுகவில் குடுமிப்பிடிச் சண்டை உச்சத்தில் இருந்தாலும், ஊடகங்கள் பொருட்படுத்துவதே இல்லை அதை. ஊடகங்களில் விஜய் மற்றும் தவெக பற்றிய செய்திகளே பிரதானம். அதற்கடுத்ததாக காங்கிரஸ் மீது திமுக தொடுத்த கண்டனக் கணைகள்! அதிமுகவில் பூகம்பமே வெடித்தாலும் அதைப் பற்றிப் பேச நாதியில்லை. அதன் TRP ரேட் பாதாளத்திற்கு சரிந்தது!
இப்போது பொறுத்தது போதும் என்று அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். தற்போது 30+ MLA க்கள் சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தலைமையில் தனி அணியாக உருவெடுத்து கட்சியை உடைக்கக் காத்திருக்கிறார்கள். இது ஓரளவு எதிர்பார்த்ததுதான்.
விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் MLA க்கள் வெளியில் இருந்துதான் திமுகவின் சம்மதத்துடன் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இங்கு 'திமுகவின் சம்மதத்துடன்' என்பதை அடிக்கோடிட வேண்டியது அவசியம். அது சம்மதமா அல்லது அனுமதியா என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.
ஒரு சரியான சந்தர்ப்பத்தில் இடதுசாரிகள் ஊடுசெங்கல் உருவுகிற சூழ்நிலை வந்தால் தவெகவின் ஆட்சியை காப்பதற்கு அதிமுகவில் ஒரு பிரிவு துடிப்புடன் இருக்கிறது. அதற்குள் கட்சியை உடைத்து அதற்கு தயாராக இருக்கவேண்டும் என அந்தப் பிரிவு செயல்படுவதாகத் தெரிகிறது.
EPS தூக்கி எறிந்த தலைவர்கள் பட்டியல் வெகு நீளமானது. சசிகலா, OPS மற்றும் பல செல்வாக்கான முன்னணித் தலைவர்களை தயவு தாட்சண்யம் இன்றி கட்சியில் இருந்து EPS வெளியேற்றினார். (இன்று OPS எதிர்க்கட்சித் தலைவரானாலும் ஆச்சரியம் இல்லை!) ஆனால், கடைசியில் செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டதை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அடுத்து, பாஜக, தமாக போன்ற பிற கட்சிகளிடமும் தொகுதி பங்கீட்டில் EPS பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளாமல் துரோகம் இழைத்தார். குறிப்பாக அண்ணாமலையை மோசமானப் பழிவாங்கினார்.
அதிமுகவின் தோல்விகளுக்கு இப்படி காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அத்தனைக்கும் சூத்திரதாரி EPS தான். நேரங்கெட்ட நேரத்தில் மகன் மிதுனைவேறு வேலையில் இறக்கியுள்ளார். கடந்த தேர்தலில் வடமாவட்டங்களில் அதிமுக பெற்ற வெற்றிக்கு பாமக காரணமாக இருந்தது எனலாம். ஆனால், தேர்தலுக்குப்பின் பாமகவை EPS கண்டுகொள்ளவேயில்லை.
சட்டசபை, பாராளுமன்றம் மற்றும் உள்ளாட்சி என பத்துக்கும் மேற்பட்ட தேர்தல்களில் அதிமுக EPS தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்தது. அது அதிமுக வரலாற்றில் இல்லாதது. ஆகவே, தற்போதாவது EPS கண்ணியத்துடன் தலைமைப் பதவியில் இருந்து தானாகவே விலகியிருக்க வேண்டும். அதை அவர் செய்யத் தவறியது அதிமுகவை மேலும் பலவீனப் படுத்திவிட்டது.
இப்போது அதிமுக கட்சி பிளவுபடும் தருவாயில் இருக்கிறது. கட்சி உடைந்தாலும் பரவாயில்லை, நாற்காலியை விடமாட்டேன் என EPS இருக்கிறாரே என கட்சியில் அனைத்து மட்டத்தினரும் நொந்து கொள்கிறார்கள். (கட்சித் தலைவரான பின்னும் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியை அவர் லேசில் விடவில்லையே!) EPS பாணியில் சொல்வதானால் MGR/J ஆவிகள் அவரை மன்னிக்காது!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
வெள்ளை அறிக்கை கொடுத்து வெற்றிக் கொடிகட்டு!
வெள்ளை அறிக்கை (White Paper) என்பது ஒரு அரசாங்கம் சிக்கலான பிரச்சினைகள், கொள்கை அல்லது நிதிநிலை குறித்த உண்மையான தரவுகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக வெளியிடும் அதிகாரப்பூர்வ ஆவணம் ஆகும். இது ஒரு பிரச்சனையின் பின்னணி, தற்போதைய நிலை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கமளிக்கிறது.
முதல்வர் விஜய் அவர்கள்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற கையோடு ஆற்றிய உரையில் வெள்ளைஅறிக்கை பற்றிப் பேசியது, அவர் ஒரு தெளிவான திட்டத்துடன் செயல்படும் நோக்குடன் இருக்கிறார் எனத்தெரிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் அவரைப் பண்படுத்தியிருப்பது கண்கூடு.
இன்று மக்களின் அபிமானம் பெற்ற அரசியல் தலைவர்கள் மிகவும் குறைவு. அப்படி மக்களுடைய அபிமானம் பெற்ற தலைவர்களில் ஒருவர் செங்கோட்டையன். அவர் தவெகவில் இணைந்தபோது பெரும்பாலான அரசியல் நோக்கர்கள் அவருடைய கணிப்பு தவறாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது தவறவில்லை.
கரூர் சம்பவத்திற்குப்பின் விஜயின் அரசியல் வாழ்க்கை அத்துடன் முடிந்தது என்று ஆரூடம் சொன்னவர்கள் அனேகம் பேர். இதனால் மனரீதியாகவும் விசாரணைகளை முன்னிட்டு அலைச்சல்களாலும் சிரமங்களுக்கு உள்ளானார். அது போக ஜனநாயகன் பட விவகாரத்தில் கடுமையான மன அழுத்தங்களுக்கு ஆளானார்.
விஜய் சந்தித்த பல்வேறு இடையூறுகளினால் அவருடைய மன உறுதியினை குலைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த மோசமான அனுபவங்கள் தொடரப்போகும் அவரது நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒருவேளை விஜய் மேலும் ஒரு டஜன் தொகுதிகளில் வென்றிருந்தால் இந்த பொன்னான அனுபவங்கள் கிடைத்திருக்காது. விசிக, முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருகிறது என்றால், தவெக ஆட்சியின் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கின்றன என்று பொருள். சிறிய கட்சிகளாகவே இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம் என்று அவை ஆதரவு தந்தது பெரிய விஷயம்தான்.
தமிழகத்தின் நிதிநிலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கழக அரசுகள் ஏராளமாகக் கடன் வாங்கி வைத்துள்ளன. அதனால் ஏற்பட்ட வட்டிச்சுமையை தவெக சுமக்க வேண்டிய நிலை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலும் மேலும் கடன் வாங்குவதை ஓரளவிற்கு மேல் தொடர முடியாது.
போதிய நிதி ஆதாரங்களை உருவாக்கி அவற்றை மேம்படுத்துவதே விஜய் தலைமையில் அமைந்துள்ள அரசின் முக்கிய கடமையாக இருக்கும் என நம்பலாம். கட்டுக்கடங்காமல் கடன்களை வாங்காமல் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கி வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது மக்களும் அதைப் புரிந்து கொள்வார்கள் என நம்பலாம்.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
என் அப்பன் குதிருக்குள் இல்லை...
முன்பு மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் அன்று தவறான நேரத்தில் ஒரு தவறான முடிவினை எடுத்தன. கம்யூனிஸ்டுகளின் பாரம்பரியமே அதுதான். இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களிலிருந்து இன்று வரை மக்களுடைய மனநிலைக்கு எதிரான முடிவுகளை எடுப்பதே அவற்றின் வாடிக்கை.
அதே கம்யூனிஸ்டுகள் காலம் கடந்த காலத்தில் ஆத்ம பரிசோதனை செய்துகொண்டு தமது நிலைப்பாடு தவறானது என்று ஒப்புக்கொள்வார்கள். இத்தகைய முரண்பாடுகளால் அவர்களது வளர்ச்சியானது தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையானது. திருமாவளவனும் அவர்களுடன் சேர்ந்து அதே அரசியலைத்தான் செய்கிறார்.
இவர்கள் திமுக கொடுத்த சில இடங்களுக்காக வஞ்சகமில்லாமல் இன்னும் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், மக்கள் மனநிலைக்கு எதிரான நிலைப்பாட்டில் இன்று தங்களுடைய கட்சிகள் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை என்றே தெரிகிறது.
பிறகு என்ன சொல்வது? முந்தாநாள் விஜயகாந்தின் செல்வாக்கினை ஓவர் எஸ்டிமேட் செய்து அரசியல் செய்து அசிங்கப் பட்டார்கள். நேற்று விஜயின் செல்வாக்கினை அண்டர் எஸ்டிமேட் பண்ணி அரசியல் செய்தார்கள். இன்று நேரங்கெட்ட நேரத்தில் கூட்டணி தர்மம் என்று பேசிக்கொண்டு திமுகவை தூக்கிப் பிடிக்கிறார்கள்.
கழகங்கள் தங்களுக்கு தேவைக்கேற்ப யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்பார்கள், அல்லது கழற்றி விடுவார்கள். இவர்களிடம் கேட்பதில்லை. அதுதான் கழகங்களின் வரலாறு. உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான். அவர்கள் காங்கிரசை எதிர்ப்பதும் சரி ஆதரிப்பதும் சரி மாறி மாறி நிகழ்வதுதான். பிஜெபி ஆனாலும் அதில் மாற்றமில்லை.
கழகங்களின் தேர்தல் சூறாவளியில் சிக்கித் தவித்தது கூட்டணிக் கட்சிகளே. ஆனால், ஆட்சியில் பங்கா? மூச்! விஜய் ஆரம்பத்திலேயே கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்பதில் மட்டுமல்லாமல் இதர விஷயங்களிலும் தனது நிலைப்பாடுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்.
கம்யூனிஸ்டுகளை விட்டுத் தள்ளுங்கள். விசிகவிற்கு என்ன குழப்பம்? விஜய்க்கு விசிக ஆதரவு தர வேண்டுமா வேண்டாமா என்பதை திமுகவுடன் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது? அப்படியென்ன நிர்ப்பந்தம்?பிறகு மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காக "நாங்கள் சுதந்திரமாக முடிவெடுக்கிறோம் (என் அப்பன் குதிருக்குள் இல்லை என்க.)" என்று வீர வசனம் பேசலாமா?
உள்கட்சி விவகாரங்களில் சுதந்திரமாக முடிவெடுத்து செயல்பட முடிந்திருந்தால் திருமாவளவன் தான் விரும்பியபடி காட்டுமன்னார் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்கியிருப்பாரா? சாண் ஏறினால் முழம் சறுக்கும்
இப்பேர்ப்பட்ட கட்சிகள், வளர்ச்சிப் பாதையில் எப்போது நடைபோடத் துவங்கும்?
தமிழக இடதுசாரித் தலைவர்கள் அனைவரும் இப்படியே தாங்கள் இருக்கும் வரை அடங்கி ஒடுங்கி காலத்தை ஓட்டினால் போதும் என்று நினைக்கிறார்களா? பின்னே, காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது, முதுகில் குத்தி விட்டது என்று திமுகவினர் ஏன் பேசமாட்டார்கள்? அதைத்தானே நீங்களும் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்தீர்கள்? பிறகு காங்கிரஸ் மீதான திமுக வின் கண்டனங்கள் உங்களுக்கு ஏற்புடையதா?
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
Chennai is the Centre Point: India’s Maritime Strategy Rewired Under Fire
The disruption of the Strait of Hormuz in 2026 has forced India to rethink a long-standing assumption that global maritime choke-points are stable and predictable arteries of trade. Instead, Hormuz is increasingly viewed as a contested maritime zone, vulnerable to missile strikes, drone warfare, and geopolitical brinkmanship. For India, heavily dependent on energy imports transiting this corridor, the risks are immediate and tangible — ranging from supply disruptions to soaring insurance and freight costs.
At the same time, the strategic expansion of Pakistan’s ports under the China–Pakistan Economic Corridor introduces a parallel challenge. What was once seen purely as a regional infrastructure project now carries broader geopolitical weight. With proposed levies and rising insecurity in Hormuz, Pakistan’s coastline is being positioned as an alternative access point for trade and energy flows. Backed by China’s Belt and Road Initiative, this corridor significantly shortens supply routes — particularly for China — while potentially reshaping regional trade dynamics to India’s disadvantage.
However, this evolving landscape is not purely adverse. It is also catalyzing India’s strategic adaptation, particularly through the operationalization of the Eastern Maritime Corridor. Connecting Chennai Port with Vladivostok Port, this corridor represents a deliberate shift toward diversification and resilience. At approximately 5,600 nautical miles, it is significantly shorter than traditional routes via the Suez Canal, reducing transit times from over 40 days to around 24 days, with some voyages even faster.
Beyond time savings, the corridor offers tangible economic benefits. Reduced fuel consumption, lower insurance premiums, and minimized exposure to volatile regions like the Red Sea translate into meaningful cost efficiencies. More importantly, it enables direct access to the resource-rich Russian Far East, facilitating the import of critical commodities such as coking coal, crude oil, and LNG.
Strategically, the corridor strengthens India’s presence across key maritime spaces, including the South China Sea and the Bay of Bengal. By integrating additional ports like Visakhapatnam Port and Paradip Port, India is gradually building a more distributed and flexible maritime network.
In essence, the current crisis underscores a deeper shift: from reliance on a singular choke-points to the creation of diversified, multi-route trade architectures. While challenges persist — particularly from competing regional corridors — India’s evolving maritime strategy reflects a pragmatic recalibration. The contest is no longer just about controlling routes, but about ensuring resilience, and strategic autonomy in an increasingly uncertain maritime order.
#Hormuz #IndiaMaritimeStrategy #ChennaiToVladivostok #EnergySecurity #EMC #maritimestrategy #EasternMaritimeCorridor
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை




