கடவுளின் பேரால் ஓர் உலகப் போரா?
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத், பெண்டகனில் நடந்த ஒரு பிரார்த்தனையில், ஈரானுக்கு எதிரான போரில் “அளவுக்கதிகமான வன்முறை” தேவைப்படுவதாகக் கூறியது, ஒரு சாதாரண அரசியல் கருத்தாக இல்லை.
மேலும் இந்தப் போரை ஒரு தெய்வீகத் திருப்பணி (Divine Mission) என வர்ணிப்பது ஓர் ஆபத்தான மாற்றத்தின் அறிகுறி — போரைக் கடவுளின் பேரால் நியாயப்படுத்தும் முயற்சி.
இந்த கருத்தை தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், “அமெரிக்கா 250 ஆண்டுகளுக்கு முன்பு யூத-கிறிஸ்தவ மதிப்புகளின் அடிப்படையில் உருவானது” என்று கூறி, இந்த அணுகுமுறைக்கு மத ரீதியாக முட்டுக் கொடுத்தார். அவர் இதை ஒரு “நல்ல விஷயம்” என்றும் தேசிய நெருக்கடியின் நேரத்தில் பிரார்த்தனை செய்வது அவசியம் என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
ஆனால், இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக வாடிகனிலிருந்து ஒரு செமையான பதில் வந்தது. போப் லியோ XIV, “வன்முறையைத் தேர்வு செய்பவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் கேட்பதில்லை” என்று கடுமையாக எச்சரித்தார்.
போப் மேலும், “மரணத்தை உருவாக்கும் முடிவுகளை கடவுளின் பேரில் நியாயப்படுத்துபவர்களின் கைகள் இரத்தத்தில் தோய்ந்திருக்கின்றன” என்று சொல்லி இயேசுவின் போதனைகளை நினைவு படுத்தினார். “உன் வாளை எடுத்த இடத்திலேயே திருப்பி வை” என்ற அந்த செய்தி, வன்முறைக்கு எதிரான தெளிவான மறுப்பு ஆகும்.
ஓரு வல்லரசு நாட்டின் பாதுகாப்பு செயலாளர், ஓர் ஊடக தொடர்பு உயரதிகாரி, மற்றும் ஓர் ஆன்மீகத் தலைவர் ஆகியோருடைய இந்த மூன்று விதமான நிலைப்பாடுகள் இன்று உலகம் எங்கு நிற்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
பிரார்த்தனை என்பது ஒரு மனிதனை அமைதி வழிக்கு இட்டுச் செல்லும் ஒரு உள்ளார்ந்த செயல். ஆனால், அதையே வன்முறைக்கான ஆதரவாக மாற்றுவது, அதன் அர்த்தத்தையே சிதைக்கும் செயல்.
“ஜூடியோ-கிறிஸ்தவ மதிப்புகள்” என்று கூறுவது எளிது; ஆனால் அந்த மதிப்புகள் உண்மையில் என்ன சொல்லுகின்றன? அன்பு, இரக்கம், பொறுமை — இவையே அதன் மையம். அதற்கு மாறான செயல்களை அதன் பேரில் செய்வது, ஒரு முரண்பாடு மட்டுமல்ல — அது ஒரு ஆபத்தான ஏமாற்று நடைமுறை.
ஒரு போரை “தெய்வீக கடமை” என்று மாற்றும் போது, அதை எதிர்ப்பது “தவறு” என்று காட்டப்படும் அபாயம் உள்ளது. இது மிகவும் ஆபத்தான போக்கு. ஏனெனில், அப்போது விவாதத்திற்கும் தர்க்கத்திற்கும் வேலை இல்லாமல் போய்விடுகிறது!
இது ஒரு சாதாரண அரசியல் விவாதம் அல்ல. இது மதத்தின் பெயரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை கேள்வி.
கடவுள் அமைதியின் மொழியில் பேசுகிறார். மனிதன் அதை வன்முறையின் மொழியாக மாற்றும் போது — அங்கே தான் உண்மையான பிரச்சினை தொடங்குகிறது.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
வால் புலியை ஆட்டுகிறது!
ஊகம் (Speculation) என்றால் என்ன? அது ஒரு இடைவெளியை நிரப்பும் சக்தி. பள்ளத்தை நோக்கி ஓடும் நீர் போல, அது தானாகவே குறைபாடுகள் உள்ள இடங்களில் பாய்ந்து வெற்றிடத்தை நிரப்புகிறது. அரசியல் உலகில் இந்த ‘இடைவெளிகள்’ என்பது ரகசியங்களால் உருவாகின்றன.
உண்மைகள் வெளியில் தெரியாமல் மறைக்கப்படும்போது, மக்கள் மனதில் ஊகங்கள் பிறக்கின்றன. ஆரம்பத்தில் அவை வெறும் சந்தேகங்களாக இருக்கலாம்; ஆனால் காலப்போக்கில் அவை நம்பிக்கைகளாக மாறிவிடுகின்றன. அப்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. ஒரு சமயத்தில் உண்மையை கண்டுபிடிக்க முயன்றவர்கள் கூட, அந்த ஊகங்களை உடைக்கமுடியாமல் அதிலேயே சிக்கிக்கொள்கிறார்கள்.
இன்றைய உலக அரசியலைப் பார்க்கும்போது, “வால் புலியை ஆட்டுகிறது” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. அதிகாரம் எங்கு இருக்கிறது, அதை யார் பயன்படுத்துகிறார்கள் அல்லது இயக்குகிறார்கள் என்ற கேள்விகள் இப்போது மிகவும் சிக்கலானவையாக மாறியுள்ளன. கூட்டணிகள், இரகசிய உடன்படிக்கைகள், மறைமுக அழுத்தங்கள் — இவை எல்லாம் சேர்ந்து உலக அரசியலை ஒரு குழப்பமான சதுரங்கமாக மாற்றிவிட்டன.
இதில் மிகப்பெரிய தவறு —ரகசியத்தையும், ராஜதந்திரத்தையும் ஒன்றாகக் கருதுவது. ரகசியம் என்பது மறைப்பது. ராஜதந்திரம் (Diplomacy) என்பது மனிதர்களை காயப்படுத்தாமல், அவர்களை புரிந்து கொண்டு, உரையாடலின் மூலம் தீர்வை கண்டுபிடிக்கும் கலை. ஒருவரை அழுத்தி, மிரட்டி, திணிக்க முயல்வது — அது பேச்சுவார்த்தை அல்ல, அது அதிகாரத்தின் தவறான பயன்பாடு.
இன்று உலக அரசியலில் நாம் காணும் மிகப்பெரிய குறைபாடு இதுதான். குறிப்பாக ஈரான் போரின் பின்னணியில், உலக தலைவர்களின் செயல்பாடுகள் ராஜதந்தித்திலிருந்து விலகி நிற்பதை தெளிவாகக் காட்டுகின்றன. வார்த்தைகள் பொறுப்புடன் பயன்படுத்தப்படவில்லை. பொய்கள் சாதாரணமாகச் சொல்லப்படுகின்றன. அதன் விளைவாக மக்கள் அந்த உரைகளைக் ‘பிரச்சாரம்’ என்று பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு நாட்டின் தலைவர் மற்ற நாடுகளை மிரட்டும் மொழியில் பேசும்போது, அது அந்த நாட்டின் வலிமையை காட்டுவதில்லை; அதன் பலவீனத்தைக் காட்டுகிறது. மரியாதை இழக்கப்படுகிறது. நட்பு உறவுகள் மெதுவாக சிதற ஆரம்பிக்கின்றன. வெளிப்படையாக எதுவும் நடக்காதது போல தோன்றினாலும், உள்ளுக்குள் நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஒரு வல்லரசு நாட்டின் தலைவரின் மீது இன்னொரு நாட்டின் தலைவர் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தும்போது அது பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளுக்கு வழி கோலுகிறது. இந்த சூழலில், “வால் புலியை ஆட்டுகிறது” என்ற கருத்து மிகவும் பொருத்தமானதாகிறது.
ஒரு சக்திவாய்ந்த நாடு, அதன் கூட்டாளியின் தாக்கத்தில் செயல்படும்போது, அது தனது சொந்த மதிப்பையும், சுயாதீனத்தையும் இழக்கிறது. வெளியில் பார்த்தால் அது இன்னும் வலிமையான புலியாகத் தெரிந்தாலும், அதை இயக்குவது வேறு ஒரு சக்தி என்ற உண்மை வெளிப்பட ஆரம்பிக்கிறது.
இதன் விளைவாக, உலக மேடையில் அந்த புலியே விமர்சனத்திற்கு உள்ளாகிறது. செயல்களை தூண்டியது யார் என்பது மறைந்து போகிறது; செயல்களை செய்தது யார் என்பதுதான் கண்களுக்கு தெரிகிறது. அதனால் தான் குற்றச்சாட்டு முழுவதும் அதன்மேல் விழுகிறது. இது ஈரான் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும்.
முடிவில், ஒரு விஷயம் தெளிவாகிறது: ரகசியம் அதிகமான இடத்தில் ஊகம் பெருகும். ஊகம் நம்பிக்கையாக மாறும்போது, உண்மை பலவீனமாகிறது. ராஜதந்திரம் இல்லாத இடத்தில், அதிகாரம் மட்டுமே இருக்கும். ஆனால் அதிகாரம் மட்டும் எந்தப் பிரச்சினைக்கும் நீண்டநாள் தீர்வாக இருக்க முடியாது.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
Rumours are an integral part of wars!
King Al-Khalifa runs away from Bahrain?
It is important to note that similar rumours regarding the flight of various leaders frequently emerge in the Middle East during high-tension scenarios. As of the latest news, the leadership appears to be in place.
Beware:
Rumours are an integral part of wars!
Let's see the basis of this rumour. Shia Muslims represent significant minority populations in most Gulf Cooperation Council (GCC) countries, with a substantial majority in Bahrain and large communities in Kuwait and Saudi Arabia's Eastern Province.
Both Bahrain and Kuwait have complex religious dynamics, with Shia communities often facing, or reporting, political and social marginalization by the Sunni-led governments. Shia citizens often face systemic limitations on religious practices and political marginalization, particularly in Saudi Arabia.
The primary difference between Shia and Sunni Muslims stems from a 7th-century dispute over succession to Prophet Muhammad. Both Sunni and Shia share the five pillars of Islam. They consist of the Shahada (faith), Salah (prayer), Zakat (charity), Sawm (fasting), and Hajj (pilgrimage). There are few minor differences relating to prayer rituals, jurisprudence, and inheritance between Sunni and Shia.
Sunni focuses on the Quran and Sunnah (teachings of Prophet Muhammad), often relying on consensus of scholars, and Shia believes in a "divinely appointed" Imam, who holds absolute authority to interpret religious texts.
While sharing core beliefs, modern divides are frequently exploited for political power, influence, and territory rather than solely deep-rooted theological differences, notably in conflicts involving Iran (mostly Shia) and Saudi Arabia (mostly Sunni).
Beware: Rumours are an integral part of wars!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
"Netanyahu is Amalek" - Rabbi Elhanan Beck
Amalek is a biblical nation depicted as an arch-enemy of ancient Israel, representing irrational, persistent, and unprovoked hostility toward the Israelites. In the Bible, they are known for attacking the weak and vulnerable after the exodus from Egypt. It's scary to say the least.
The Rabbi also claimed that if necessary, Israel would use nuclear weapons and that “no price is too high,” even suggesting they would kill millions to secure their goals. This remark equating a modern political leader with “Amalek,” a biblical symbol of irredeemable evil, is not just rhetoric. It reflects a mindset of limitless retaliation, where restraint is seen as weakness and annihilation becomes an acceptable objective. How apt is it in the scenario of Gaza and the Iran war!
Today’s conflicts are not fought in isolated deserts with swords and shields. They are fought with missiles, drones, and, most ominously, nuclear weapons. When leaders or influential voices invoke total-war analogies rooted in mythology, they risk framing contemporary conflicts in ways that eliminate the possibility of diplomacy altogether. Equally concerning is the role of global powers that align themselves with such uncompromising positions.
Supporting a war effort without clear logic, measurable objectives, or regard for long-term consequences undermines not only international stability but also the credibility of those who claim to uphold global order. Strategic alliances should be guided by rational interests and ethical considerations, not blind endorsement of destructive ambitions.
The suggestion that “no price is too high” is particularly alarming. History has repeatedly shown that when nations adopt such thinking, the consequences are catastrophic — not just for their enemies, but for themselves and the world at large. The 20th century stands as a grim reminder: total war does not produce total victory; it produces total devastation.
In the context of escalating tensions involving Iran, rhetoric fuels a cycle of fear and escalation. It transforms political disagreements into existential battles and paints entire populations as expendable. This is not a strategy — it is surrender to extremism.
What is needed now is not more rhetoric rooted in ancient enmities, but a renewed commitment to reason, restraint, and dialogue. Leaders must recognize that strength is not measured by the willingness to destroy, but by the ability to prevent destruction. Because in the end, when war abandons logic, it does not create winners. It only ensures that everyone loses.
* The interview with the Rabbi Elhanan Beck, published recently, was a part of the "UNAPOLOGETIC" series by the "Middle East Eye", which explores alternative perspectives on global affairs.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
When Power Celebrates Death: The Politics Behind Trump’s Jubilation...
“Good, I’m glad he’s dead!” The reported reaction of Donald Trump to the death of Robert Mueller, marked by words of satisfaction rather than restraint, raises serious questions about the evolving nature of political discourse in modern democracies. The celebration of Mueller’s death by Trump is deplorable, contemptible, uncivilized, and disgusting, considering his status as a head of a state.
Mueller, as the former head of the Federal Bureau of Investigation and the special counsel who investigated Russian interference in the 2016 election, became a symbolic figure in one of the most contentious political chapters in recent American history.
Trump and his supporters, allege that the investigation was framed. According to them it was not a legitimate inquiry but a politically motivated attack. Trump repeatedly called it a “witch hunt.” This unfounded allegations shaped his narrative in which Mueller was not a neutral investigator but an adversary.
Trump’s apparent jubilation, therefore, can be understood not as a spontaneous emotional reaction but more as the result of years of political conflict. In this narrative, Mueller represented institutional resistance, scrutiny, and the threat of legal consequences.
By celebrating his death publicly, Trump reinforces a message to those who challenge him, especially from within powerful institutions, that they are not just opponents but obstacles to be defeated. However, such rhetoric carries consequences far beyond personal rivalry.
When a political leader expresses contempt for a respected public office or its former holders, it risks eroding public trust in democratic institutions. The FBI, like many institutions, works on perceived neutrality and credibility. Undermining that perception for short-term political gain can have long-term implications, including skepticism toward the rule of law.
Moreover, the tone of such statements contributes to the normalization of incivility in political life. Leadership, particularly in a democracy, is expected to embody a degree of dignity and restraint, even in disagreement. Publicly celebrating the death of a perceived adversary crosses an ethical boundary.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
ஆயிரம் இருந்தும் அழிவு அழிவுதான்...
இஸ்ரேலின் பிரமிக்க வைக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் அணிவகுப்பு!
. Iron dome
. David sling
. Arrow
. Thaad
. Patriot
அத்தனையும் தூள் தூள் அல்லது செயல் இழப்பு. வீழ்த்தவே முடியாதது, எதிரிகளின் ஏவுகணைகளினால் துளைக்கவே முடியாதது என்று பெருமையாகப் பேசப்பட்ட வான்பாதுகாப்புக் கவசங்களால் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு தரமுடியவில்லை.
"ஆயிரம் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்" என்ற கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் ஆகிய அனைவரையும் பகைத்துக்கொண்ட அமெரிக்காவின் கையறு நிலையை இன்று உலகம் வேடிக்கை பார்க்கிறது. கேட்காமலேயே ஈரானுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து உளவுத் தகவல்கள் வந்த வண்ணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த நுட்பமான தகவல்களே ஈரானுடைய துல்லியமான தாக்குதல்களுக்கு ஆதாரம்.
இன்று, ஒரு வல்லரசான அமெரிக்காவினால் தனது ஒரே நட்பு நாடான இஸ்ரேலைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் அது அதிசயமில்லை. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதை அறியாமல் எண்ணெய்ப் பேராசையால் அவசரப்பட்டு, வெனிசுலா தந்த ஆணவத்தினால் ஆழமாகக் கால் வைத்த அமெரிக்கா இன்று அல்லோலப்பட்டு நிற்கிறது.
டிரம்ப் மற்றும் நேதன்யாகுவை இந்த நூற்றாண்டின் இணையற்ற இரட்டைக் கோமாளிகள் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. டிரம்ப் பேசாத பேச்சா?
Trump labelled India a "dead economy".
Trump has claimed that after he became President, PM Modi requested a meeting with him, saying “Sir, can I see you please?”
Trump has described Modi as "tough as hell" and a "killer".
டிரம்பின் இத்தகைய நாகரீகமற்ற பேச்சுக்கள் ராகுல் காந்தி போன்ற இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களின் பொறுப்பற்ற விமர்சனத்திற்கு வித்திட்டன. பிரிட்டன் பிரதமர், சவுதி இளவரசர் என டிரம்ப் யாரையும் விட்டுவைக்கவில்லை. அவருக்கு இது அறுவடை காலம்.
பின்னே? வினை விதைத்தவன் எதை அறுப்பான்?
போர் தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், "வல்லரசெல்லாம் வல்லரசில்லை" என்பதே ஈரான் போர் கற்றுத் தந்த பாடம். 'எல்லாம் மேலே இருப்பவன் (அமெரிக்கா) பார்த்துக் கொள்வான்' என்று இறுமாப்பில் இருந்த இஸ்ரேல் இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.
இன்னொரு மூலையில், டிரம்ப் "வெற்றி! வெற்றி!!" என்று வீர முழக்கமிடுகிறார். அடிச்சிக் கேட்டாலும் அவர் அதையேதான் சொல்வார், வேறே எதையும் சொல்ல மாட்டார். என்னடா இது அமெரிக்காவுக்கு வந்த சோதனை என நொந்துகொள்ள வேண்டியதுதான்.
போதும், போதும், இதுவே எதேஷ்டம்! நாளை போர் எப்படிப் போனாலும்...
இனிமேல்,
'ஈரான் ஜெயிப்பதற்கு எதுவும் இல்லை' என்றும் 'அமெரிக்கா தோற்பதற்கு எதுவுமில்லை'
என்றும் உலகம் தாராளமாக சொல்லிக்கொள்ளலாம்!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
ஏடாகூமான கேள்விக்கு எப்படி பதில் சொல்வது?
அது அப்படியென்ன ஏடாகூடமான கேள்வி என்று கடைசி பத்தியில் பார்க்கவும்!
கேள்வி என்பதற்கு பொருள் பலவாறாக இருந்தாலும், பொதுவாக அது வினா என்று அறியப்படுகிறது. தமிழ் இலக்கணப்படி வினாக்கள் அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என மொத்தம் ஆறு வகைப்படும்.
விளக்கம்:
அறிவினா: தன்னால் கேட்கப்படும் கேள்விக்கு ஒருவர் விடை அறிந்திருந்தும், அதைப் பிறர் அறிந்துள்ளனரா என்பதை தெரிந்துகொள்வதற்காகக் கேட்கப்படுவது அறிவினா ஆகும். உதாரணமாக, ஓர் ஆசிரியர் மாணவரிடம் கேட்பது அறிவினா எனப்படுகிறது.
அறியா வினா: அதே மாணவன் தனக்குத் தெரியாத ஒரூ விடயத்தைப் பற்றி ஆசிரியரிடம் கேட்பதை அறியா வினா எனலாம். அதேபோல, ரயில் நிலையம் எங்கே இருக்கிறது என்று தெரியாத ஒருவர் உங்களிடம் "ரயில் நிலையத்திற்கு எப்படிப் போகவேண்டும்?" என்று வினவினால் அது அறியா வினா.
ஐய வினா: இது ஒரு சந்தேகத்துடன் கேட்கப்படும் கேள்வி. உதாரணமாக, "அதோ வருகிறானே அவன் உனக்கு அண்ணனா அல்லது தம்பியா?" என ஒருவர் மற்றவரிடம் கேட்பதை ஐய வினா என்க. ஐயம் என்றால் சந்தேகம் என்பது பொருள்.
கொளல் வினா: ஒரு பொருளைத் ஒருவர் வாங்கிக்கொள்கிற நோக்கத்துடன் கேட்பது கொளல் வினா? "ஒரு டஜன் வாழைப்பழம் என்ன விலை?" என்பதை கொளல் வினா எனலாம்.
கொடை வினா: இது பிறருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும் பொருட்டு வினவப்படுவது. எடுத்துக்காட்டாக "உங்களுக்கு இந்தப் புத்தகம் வேண்டுமா?" என்று கேட்பதை கொடை வினா எனலாம்.
ஏவல் வினா: ஒரு செயலைச் செய்வதற்கு கட்டளையிடும் பொருட்டு கேட்கப்படும் கேள்வி இது. "குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருகிறாயா?" என்பதை ஏவல் வினா எனலாம். ஏவல் என்றால் கட்டளை அல்லது ஆணை என பொருள்படும். குற்றேவல் என்றால் எடுபிடி வேலைகள்.
இப்போது ஒரு ஐய வினா...
"ஈரான் போரில் அமெரிக்கா வென்று விட்டதாக டிரம்ப் சொல்வது உண்மையா?" என்று நீங்கள் ஏடாகூமாக ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு பதில் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும், முதலில் அது அறி வினாவா, அறியா வினாவா, ஐய வினாவா என்று எப்படிச் சொல்வது?
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
காகங்களின் கூட்டம்
ஒரு காகம் தனது கூட்டத்தை விட்டு விலகிவிட்டால், மீண்டும் அதற்குள் போக முடியாது. அப்படிப் போனால் மற்ற காகங்கள் அதைக் கொத்திக் கொத்தி கொன்று விடும் என்று சொல்லப்படுவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்று தெரியவில்லை. ஆனால், "A Murder of Crows" என்ற ஆங்கிலச் சொற்றொடரே காகங்கள் ஒன்று சேர்ந்து ஒரு காகத்தைத் தண்டிப்பதிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
மிருகங்கள் மட்டுமல்லாமல் மனித குலத்திலும் யூதர், ஆரியர், திராவிடர், சீனர், மங்கோலியர் போன்ற பல்வேறு இனங்கள் உள்ளன. அதே சமயத்தில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்களை மதம் இணைக்கிறது. பிரிவினைகளுக்காக இனவாதம் பேசும் மனிதகுலம் சகோதர மனப்பான்மையுடன் உதவுவதற்கும் ஒத்துழைப்தற்கும் இன ஒற்றுமை பற்றிப் பேசுவதில்லை.
இனமும் மதமும் மனிதனுக்கு பிறப்பிலேயே விழுந்த முத்திரைகள். இருப்பினும் இனம் என்பது ஆழமானது. இனத்திற்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு? உதாரணமாக, எல்லா ஜெயின்களும் மார்வாடிகள். ஆனால் எல்லா மார்வாடிகளும் ஜெயின்கள் இல்லை. அதே போல, எல்லா அராபியர்களும் முஸ்லிம்கள் என்றாலும் எல்லா முஸ்லிம்களும் அரேபியர்கள் இல்லை.
இஸ்லாம் என்று மதத்தை அடிப்படையாக வைத்து அரபு நாடுகளால் இஸ்ரேலை எதிர்த்து ஒன்று திரள முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன. அதற்கு இன ரீதியான பிரிவினை மட்டுமல்லாமல், சன்னி மற்றும் ஷியா பிரிவுகள், ஆட்சிமுறை, பொருளாதார நிலை போன்று பல்வேறு காரணிகள் உள்ளன. எண்ணெய் வளமிக்க நாடுகள் பொருளாதார பலத்துடன் விளங்குகின்றன. ஆனால், எல்லா நாடுகளிலும் எண்ணெய் வளம் இல்லை.
மத்திய கிழக்கில் சவுதி அரேபியா, UAE, ஓமன் போன்ற பல்வேறு நாடுகளில் மன்னராட்சியே நடைபெறுகிறது. மன்னராட்சி நடக்கிற நாடுகளில் மன்னர் அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுடையை செல்வத்திலும் பாதுகாப்பிலும்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தங்கள் இன்று கைகொடுக்கவில்லை. சவுதி அரேபியா பாகிஸ்தானுடன் போட்ட ஒப்பந்தம் வேஸ்ட்!
எண்ணெய் வளமற்ற ஏமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மனித வளத்தை பரஸ்பர நன்மைக்காக திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளவில்லை. தொலைநோக்குப் பார்வையுடன் இதைச் செய்யாதவர்கள் எப்படி பாலஸ்தீனத்திற்கு முழுமனதுடன் ஆதரவு அளிப்பார்கள்? எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளிடம் பொது எதிரியான இஸ்ரேலை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை.
தொடக்கத்தில் அரேபியாவில் வாழ்ந்து, தற்பொழுது மையக் கிழக்கு நாடுகளில் வாழும் மக்கள் அரேபிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். எகிப்து அரபு லீக்கில் உறுப்பினராக இருப்பதாலும், அரபு மொழி பேசப்படுவதாலும், மற்றும் கலாச்சார ரீதியாக ஒருங்கிணைந்திருப்பதாலும் அது ஒரு "அரபு நாடு" என்று கருதப்படுகிறது; கடந்த 1,400 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த அரபுமயமாக்கலால் இந்த நிலை பெருமளவில் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் பெரும்பாலான போர்களுக்கு இனவெறி காரணமாக இருக்கிறது. இன்று மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் போரிலும் நாடுகளிடையே நிலவும் பகைக்கு இனவெறியும் ஒரு காரணம் என்று கூறலாம். இனவெறி நிலவும் நாடுகளில் பரஸ்பர நம்பிக்கை இருப்பதில்லை. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள ஆட்சியாளர்களே இனவெறியைத் தூண்டி விடுவதும் உண்டு.
காக்கைக்கூட்டம் என்பது சமூக ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் கூர்மையான அறிவுத் திறனுக்குப் பெயர் பெற்ற காகங்களின் கூட்டமைப்பாகும். அவை ஆபத்து காலங்களில் ஒன்றிணைந்து செயல் படக்கூடியவை மற்றும் உணவு தேடுவதில் குழுவாகவே இயங்கும். அந்த உணர்வு மனிதர்களிடம் இல்லை.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
When the tail wags the tiger...
Alliances and strategies @ crossroads!
Speculation is like the flow of water.
Like water flows to the gaps in the earth, speculation fills the gaps created by secrets. Later, the same speculations transform into constraints in reaching out to a solution, because people have already started believing speculations as truth. Secrecy is not diplomacy.
Diplomacy is the art of dealing with people without upsetting or offending them in international relations. There's no room for lying in diplomacy. Coercion and undue pressure in any negotiation is undiplomatic in nature. No negotiation would be meaningful under such circumstances.
What we see today against the backdrop of the Iran war is the lack of diplomacy on the part of world leaders, especially Trump. When lies are told freely by the leaders, people view them as propaganda. Also, Trump threatens countries and their leaders, and his language is insulting.
Thanks to Trump, the various countries of the world which depend upon the USA won't cherish their relationships with the USA, and will be bidding for their times. It's worse in the case of the Iran war, where the tail, Israel, wags the tiger, the USA. However, it's the USA that's ridiculed for its undiplomatic actions on the world stage.
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
நிழல் அரசாங்கம்
நாடு இப்போது அரசியல் ரீதியாக முக்கியமானதொரு கால கட்டத்தில் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் பல நிழல் அரசாங்கங்கள் உருவெடுத்து வலிமை அடைந்து வருவதை நம்மால் காண முடிகிறது. அரசியலிலும் சமுதாயத்திலும் அவற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதை தேர்தல் நேரத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
ஒரு நிழல் அரசு கட்சியாகவோ, அமைப்பாகவோ அல்லது நிறுவனமாகவோ இருக்கலாம். அரசியல் கட்சியாக இருந்தால், நிழல் அரசின் கைப்பிடியில் கட்சி இருப்பதாக அர்த்தம். அது ஆட்சியை இழந்து எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்தாலும் அதன் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் அசைத்துப் பார்ப்பது அவ்வளவு சுலபமில்லை. அவர்களுடைய பிரச்சார பலம் பெரிது, உத்திகள் வெகு தந்திரமானவை.
நிழல் அரசுகள் ஓர் அரசாங்கத்தைப் போல வலிமையான
அடித்தளங்ளுடன் செயல்
படுகின்றன. மத்திய அரசு அதன் நிர்வாகத்தை சோதனையிட முயன்றாலும், அவற்றின் சட்ட விரோதமான செயல்களை ஒடுக்க முயன்றாலும் நிழல் அரசுகள், கீழ்க்கண்ட அம்சங்களுடன் அவற்றைச் சமாளிக்க தயாராக இருக்கின்றன.
- பணபலம்
- வலிமையான கட்டமைப்பு
- மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வாரிசுகள் அல்லது விசுவாசமான அதிகாரிகள்
- மேலிருந்து கீழ் வரை சிறப்பான கட்டுப்பாட்டுடன் கூடிய நடைமுறை
- நாளேடுகள், வார இதழ்கள் ஆகியவற்றின் பலம்
- தொலைக்காட்சி மற்றும் திரைதுறையில் ஆதிக்கம்
- அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு
- நெளிவு சுளிவுகள் தெரிந்த ஏஜெண்டுகள்
- நம்பகமான பினாமிகளின் நெட் ஒர்க்
- திறமையான சட்ட வல்லுனர்கள் குழு
- நேரடியாகவும் மறைமுகமாகவும் சாதி மதத் தலைவர்களுடன் நல்ல விதமான புரிதல் மற்றும் அந்த அமைப்புகளுடன் இணக்கமான உறவு
அரசின் நடவடிக்கைகளைப் பற்றிய தகவல்கள் அதிகாரிகள் மூலம் நிழல் அரசுகளுக்கு தடையின்றி கிடைக்கின்றன. அவற்றுக்கு, எந்த ஆட்சி நடந்தாலும் முக்கியமான தகவல்கள் மற்றும் காண்ட்ராக்டுகள் கிடைக்கிற வசதி உண்டு.
ஜனநாயக அரசியலில் இந்த பரிணாம வளர்ச்சி தவிர்க்க முடியாதது. நிழல் அரசுகளுக்கு நிழல் நிறுவனங்களும், நிழல் பாதுகாப்பு படைகளும் பக்க பலமாக இருக்கின்றன. இவற்றிடம் சக்தி வாய்ந்த, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, உயர் ரக உபகரணங்கள், சாதனங்கள், ஆயுதங்கள், மென்பொருள், தொலை தொடர்பு கருவிகள் ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது.
நிழல் அரசுகள் மாநில எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைந்து செயல் படும்போது அவர்களது வலிமை பல மடங்காகக உயர்கிறது. பல்வேறு நிகழ்வுகள், செய்திகள் மற்றும் சந்திப்புக்களை உன்னிப்பாக நோக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. இந்த நிழல் அரசுகள் எல்லாம் ஒரிரு வருடங்களில் உருவானவை அல்ல. இது பல வருடங்களுக்கும் மேலான கட்டுமானமாகும்.
நிழல் அரசுகள் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தி சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், அதன் வரவு செலவுகள் அரசின் வரவு செலவுகளுக்கு அப்பாற்பட்டவை. இதில் நாம் அரசியலைக் கலந்து யோசித்தால் குழப்பங்களே மிஞ்சும். கட்சிகளின் அரசியல் நிலைப் பாட்டிற்கும், சம்பந்தப்பட்ட நிழல் அரசுகளின் செயல்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. அதாவது, நிழல் அரசுகள் வணிக ரீதியானவை, ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டவை.
இன்னொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு மாநிலத்தில் நிழல் அரசுகள் ஒன்றுக்கு மேல் இருக்கலாம். அவற்றுக்குள் போட்டி இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று புரிதலுடன் செயல்படும். பல நிழல் அரசுகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன, புதிய நிழல் அரசுகள் காலப்போக்கில் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴




