Law of the land Vs Law of the nation
Is there any difference?
Yes, there is a distinct difference in legal scope. Law of the land refers broadly to the supreme, fundamental rules of a nation — typically its Constitution — that apply equally to everyone within its borders. By contrast, the law of the nation can refer to the entire body of statutory legislation enacted by a government or, historically, to the public international rules governing relationships between sovereign states (often called the Law of Nations).
Scope & Supremacy: The law of the land represents the supreme Constitution (or fundamental common law). No ordinary legislation or act passed by a parliament can violate it.
Entire Statutory Body: The law of the nation typically encompasses the entire legal code of a country — including all criminal, civil, administrative, and local legislative acts.
International Context: Historically, the legal phrase "Law of Nations" (jus gentium) specifically singles out international law, regulating treaties, diplomacy, and maritime boundaries between different countries.
Hierarchy: The law of the land is superior; ordinary laws passed by a legislature must align with it. The law of the nation includes all these ordinary parliamentary acts and administrative rules.
Video courtesy: Kaboompics - Pexels
#🚹உளவியல் சிந்தனை
நேற்று - இன்று - நாளை: மாறாத மாற்றங்கள்
பெற்றோரின் வீடு எப்போதும் பிள்ளைகளுக்குச் சொந்த வீடுதான். ஆனால் பிள்ளைகள் பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும், படித்தவர்களாக இருந்தாலும், பாமரர்களாக இருந்தாலும், அவர்களுடைய வீடு எப்போதும் பெற்றோரின் வீடாக ஆகிவிடுவதில்லை.
இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் சுதந்திரம் என்பதே. பெற்றோர் வீட்டில் பிள்ளைகளுக்குச் சுதந்திரக் குறைவு இருப்பதில்லை. ஆனால் பிள்ளைகளின் வீட்டில் பெற்றோருக்கு அதே அளவிலான சுதந்திரம் இருப்பதில்லை; அல்லது இருந்தாலும், அது இருப்பதாக அவர்கள் உணர்வதில்லை.
அடுத்து உலகாயத தத்துவம். பெற்றோரின் பணம் எப்போதும் பிள்ளைகளுக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிள்ளைகளின் பணம் பெற்றோருக்குரியது என்று சொல்ல முடியாது. உலக நடைமுறையானது, "காலச்சக்கரம் எப்போதும் முன்னோக்கியே சுழலும்; பின்னொக்கி நகர்வதில்லை" என்ற விதியை ஒட்டியது.
அது, “மாவு தோசையாகலாம்; தோசை மாவாகுமா?” என்ற சினிமா வசனத்தைப் போன்றதே. இதுபோலத்தான் பெற்றோர்–பிள்ளை உறவும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் பல வாழ்வியல் சிக்கல்கள் தவிர்க்கப்படும். மனதில் தெளிவு பிறந்துவிட்டால், அதற்கேற்ப தேவையான மாற்றங்களும் தானாக உருவாகும்.
இன்றைய பிள்ளைகள்தான் நாளைய பெற்றோர்கள். “நேற்று – இன்று – நாளை” எப்போதும் ஒரே நேர்கோட்டில் பயணிக்காவிட்டாலும், அவற்றை இணைக்கும் அடிப்படை விதிகள் காலம் தோறும் மாறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதில் முரண்பாடு எதுவும் இல்லை!
#🚹உளவியல் சிந்தனை
"விசுவாசமா? வெற்றி வாய்ப்பா? தவெக என்ன முடிவெடுக்கும்?"
இடைத்தேர்தல் சீட் யாருக்கு?
அதிமுகவைச் சேர்ந்த 5 MLAக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இடைத்தேர்தலில் தவெக இவர்களை வேட்பாளர்களாக நிறுத்தவேண்டுமா அல்லது ஏற்கனவே தேர்தலில் தோற்ற தவெக வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா என்பதைப் பற்றிய குழப்பம் நிவுவதாகத் தெரிகிறது. தவெக தலைமை என்ன முடிவெடுத்தால் அது நியாயமாகவும் சரியாகவும் இருக்கும்?
இது ஒரு அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான முடிவு. "யார் அதிகம் தகுதியானவர்?" என்பதைக் காட்டிலும், "எந்த முடிவு கட்சியின் நீண்டகால வளர்ச்சிக்கு உதவும்?" என்பதே முக்கியம்.
தவெக தலைமைக்கு மூன்று வழிகள் உள்ளன:
1. ராஜினாமா செய்த 5 MLAக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்குவது
நன்மைகள்: மற்ற கட்சிகளில் இருக்கும் அதிருப்தி MLAக்களுக்கு நல்ல சிக்னலாக இருக்கும். "எங்களிடம் வந்தால் அரசியல் எதிர்காலம் உண்டு" என்ற நம்பிக்கை உருவாகும்.
இடைத்தேர்தலில் ஏற்கனவே வெற்றி பெற்ற முகங்கள் என்பதால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கலாம்.
பாதகங்கள்: தேர்தலில் தோற்று கட்சிக்காக உழைத்த பழைய தவெக நிர்வாகிகள் மனவருத்தம் அடையலாம். "வெளியிலிருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை" என்ற விமர்சனம் எழலாம்.
2. ஏற்கனவே போட்டியிட்டு தோற்ற தவெக வேட்பாளர்களுக்கே வாய்ப்பு வழங்குவது
நன்மைகள்: ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியுடன் இருந்தவர்களுக்கு நீதி கிடைக்கும். கட்சித் தொண்டர்களின் உற்சாகம் அதிகரிக்கும். "விசுவாசத்திற்கு மதிப்பு" என்ற செய்தி செல்லும்.
பாதகங்கள்: புதியதாக வந்த MLAக்கள் தங்களை வெறும் எண்ணிக்கை கூட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தியதாக நினைக்கலாம். எதிர்காலத்தில் மற்ற கட்சி தலைவர்கள் அல்லது MLAக்கள் இணைவதில் தயக்கம் காட்டலாம்.
3. கலப்பு முறை (நடைமுறையில் சிறந்த தீர்வு)
இதேதான் மிகவும் சமநிலையான முடிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்ய வேண்டும். அந்தத் தொகுதியில் முன்னர் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வலுவாக இருந்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம்.
புதிய MLA-வின் தனிப்பட்ட செல்வாக்கு அதிகமாக இருந்தால் அவரையே நிறுத்தலாம்.
ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடியாவிட்டாலும், அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கலாம்.
அரசியல் ரீதியாக நியாயமான அணுகுமுறை
விஜய் தலைமையிலான தவெக, "பதவி என்பது பரிசு அல்ல; மக்களிடம் வெற்றி பெறும் திறனை அடிப்படையாகக் கொண்ட பொறுப்பு" என்ற கொள்கையை அறிவித்தால் அது மிகவும் நியாயமானதாக இருக்கும்.
அதாவது: "முன்பு எங்கள் கட்சியில் இருந்தவரா, புதிதாக இணைந்தவரா என்பது அளவுகோல் அல்ல. அந்தத் தொகுதியில் மக்களிடம் வெற்றி பெறக்கூடியவர் யார் என்பதே அளவுகோல்."
இந்த அணுகுமுறை பழைய தொண்டர்களுக்கும் புதியவர்களுக்கும் ஒரே விதிமுறையை உருவாக்கும். கட்சி வளர்ச்சிக்கும், தேர்தல் வெற்றிக்கும், உள்கட்சி ஒற்றுமைக்கும் இதுவே மிகவும் சரியான முடிவாக இருக்கும்.
#Vijay #விஜய் #தவெக #TVK #ADMK #அதிமுக #இடைத்தேர்தல்
Please view "Comment" for #Ad link!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
என் அப்பன் குதிருக்குள் இல்லை!
போட்டாரே ஒரு போடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் "ஊழல் செய்த ஒருத்தரையும் விடமாட்டேன்" எனப் பேசியதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆதாரத்துடன் பேச வேண்டும் எனவும், இல்லையெனில் ஆதாரங்களை நிரூபிக்க முன்வர வேண்டும் எனவும் பதிலடி கொடுத்துள்ளார். The entire assembly session was breathtaking and mind blowing!
மடியில் கனமில்லையென்றால் "ஊழலை ஒழிக்க அரசுடன் ஒத்துழைப்போம்" என்று உதயநிதி ஒரு வரியில் முடித்திருக்கலாம் என்பது சில அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. சொல்வதற்கு எதுவும் இல்லையென்றால், "என் அப்பன் குதிருக்குள் இல்லை" என்று சொல்வதைவிட, பேசாமல் இருப்பதே உத்தமம். அதை விடுத்து, விஜய் பேச்சில் குற்றம் கண்டுபிடித்து, அதற்கு உதயநிதி தன்னிலை விளக்கம் கொடுத்ததுபோல இருந்தது. இது எதைக் காட்டுகிறது?
"(நாங்கள்) ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருக்கிறதா?" என்று அவர் கேட்டது போல் ஆகிறதே! ஊழல் செய்தவர்கள் ஆதாரத்துடன் செய்வார்களா? மேலும் 'லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குதும் குற்றம்' என்ற நிலையில், லஞ்சம் கொடுத்தவர்கள் அதை வெளியில் சொல்வார்களா? "விஞ்ஞான முறையில்" ஊழல் நடக்கும்போது அதை நிரூபிப்பது கடினம் என நினைக்கிறாரா?
உதாரணமாக, அந்நியன் பட வசனத்தை நினைவுபடுத்தும் வண்ணம் நிகழ்ந்த, ஓர் ஒழிவுமறைவற்ற துணிகரமான 'பாட்டிலுக்கு பத்து ரூபாய்' என்ற மாஸ் ஊழல் மாடல் ஊரறிந்த ரகசியம். அப்போதும், "ஆதாரம் இருக்கிறதா?" என்று கேட்கப்பட்டது! திமுகவின் பேர் மொத்தமாகக் கெட்டுப்போனது அதில்தான். அந்த வசூல் எங்கே சென்று சேர்கிறது என்று மக்களுக்குத் தெரியாதா?
இந்தப் பின்புலத்தில் சட்டசபையில் முன்னாள் துணை முதல்வர் பேசியதை ஒரு படி மேலே போய் பார்த்தால், "நாங்கள் ஊழல்கள்தான் செய்துள்ளோம். அதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?" என்று ஆணவத்துடன் கேட்டதாக மக்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்களா? யோசித்துப் பாருங்கள்...
ஏராளமான நடைமுறைச் சிக்கல்களையும் தாண்டித்தான் சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்து,
ஊழல் நிரூபிக்கப்படவேண்டும். அதற்குத்தான் மத்தியிலும் மாநிலத்திலும் பல துறைகள் செயல்படுகின்றன. 'ஆதாரம் உள்ளதா?' என்று விவகாரமாகக் கேட்டு, சம்பந்தப்பட்டவர்களை உசுப்பேற்றுவானேன்!
ஊருக்குத் தெரியாமல் ஊழல் புரிந்ததற்கு ஆதாரங்கள் இல்லாமலும், இருந்தும் நீதிமன்றங்களுக்குத் தெரியாமலும் கூடப் போகலாம்; ஆனால், மக்களுக்குத் தெரியாது என்று நீங்கள் மனப்பால் குடிக்கவேண்டாம். நேரம் சரியில்லையெற்றால் ஆதாரங்கள் நீதிமன்றங்களைத் தேடி, தானாகவே சென்று சேரும்.
எது எப்படியோ போகட்டும், இதுவரை ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நீங்கள் ஆரத்தழுவி அணைத்துக் கொண்டதைத் தவிர அவர்கள் மீது கட்சி ரீதியாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? ஏன், அவர்களை விட்டால் கட்சியில் நேர்மையும் திறமையும் உள்ள வேறு ஆட்களே இல்லையா?
#விஜய் #Vijay #உதயநிதி #ஜோசப்விஜய்
P.S.
If you haven't subscribed to our channel yet, please do so now! Our team works hard to bring you insightful content that drives awareness. Your support keeps us going — this is your channel!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
வலிமையான வார்த்தைகள்
சட்டசபையில் நேற்று முதல்வர் ஜோசப் விஜய் பேசிய வார்த்தைகள் தமிழகத்தின் மனசாட்சியையே உலுக்கிவிட்டது. "மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாகூட தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம். ஏற்கனவே தொட்டவர்களையும் விடமாட்டோம்." வரலாறு திரும்பட்டும். காமராஜரின் ஆட்சி விஜய் தலைமையில் மீண்டும் மலரட்டும்.
பொதுவாக ஊழல் செய்த முதல்வர்கள் அல்லது அமைச்சர்கள் "நாங்கள் அப்பழுக்கற்றவர்கள். ஊழல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று பேசியதே உச்சகட்டப் பேச்சாக இருந்தது வழக்கம். விஜய்யின் பேச்சு அவர் உறுதியைக் காட்டுவது மட்டுமல்லாமல், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், இதர அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை, எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்ட சவால்!
சக மனிதர்களைக் கசக்கிப் பிழிந்து காசுபணம் சேர்ப்பது அவமானம் என்று - இது, ஊழலுக்குப் பழகிவிட்ட பொதுமக்கள் மனதில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான ஆரம்பப்புள்ளி. ஆதாரம் கேட்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மறைமுகமாக மக்களுக்கு சொல்ல வருவது என்ன? "ஆம் ஊழல் செய்தோம்தான். அதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?" என்பதுதான்.
ஆதாரத்தை யார் கொடுப்பது? லஞ்சம் கொடுத்தவர்கள்தானே கொடுக்க வேண்டும்? அவர்கள் கொடுப்பார்களா? அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களே ஊழல்வாதிகளின் கவசம். இன்று 500 ரூபாய் கொடுத்து வேலையை முடித்துக்கொள்வது புத்திசாலித்தனம் என்று நாம் நினைக்கிறோம். ஏனென்றால், நாளை மீண்டும் வரவேண்டும் என்றால், மறுபடியும் லீவு, லஞ்ச், ஆட்டோ என்று போகும். என்ன செய்வது? இந்த நிலைக்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை இன்று உருவாகியுள்ளது.
மேலும், பாவம் பார்க்கும் மக்களுக்கு ஊழல் அதிகாரிகளை சிக்க வைப்பதற்கும் மனம் வருவதில்லை! பாவம், அவர்களும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்துத்தானே வேலைக்கு வந்துள்ளனர்? இது ஒரு விஷச்சுழல். திருடனாய்ப் பார்த்து திருந்தவேண்டும் அல்லது அவன் திருத்தப்பட வேண்டும். ஊழல் பேர்வழிகளை திருத்தும் வேலையில் தவெக அரசு இறங்கியுள்ளது. அது முழுவீச்சில் தொடரவேண்டும், தொடரட்டும்!
நிலைமை மாறி வந்தாலும், இலைமறை காயாக எங்கோ நிகழும் ஓரிரண்டு சம்பவங்களை வைத்து அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைந்தாலும், அதுவும்கூட சீர்கேடுகளை அகற்றுதற்கு உறுதுணையாகவே இருக்கும் என்று கூறலாம். அப்பேர்ப்பட்ட நியாயஸ்தர்களை மக்களும் புரிந்துகொள்வார்கள். மக்கள் தற்குறிகள் இல்லை; பொறுமை காத்து அரசுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
#விஜய் #ஜோசப்விஜய் #காமராஜர்
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
விரலில் வைத்த மை சாட்சியாக...
நடக்கிற நடப்புகளைப் பார்த்தால் விரலில் வைத்த மை அழிய ஆகும் காலம் அரசியலிலே "நீண்ட காலம்" என்றானது. "என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில்" என்ற வாலியின் பாடலில் "காதல்" என்ற வார்த்தைக்கு பதிலாக "அரசியல்" என்று போட்டுக் கொள்ளலாம்.
மேடைகளில் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கழுத்து நரம்புகள் புடைக்க பேசாத பேச்சில்லை. "உடனடியாக முதலமைச்சராக வேண்டும்" என்ற நோக்கில் சிலர் கட்சிகளைத் தொடங்குவதாக திருமாவளவன் விமர்சித்தார். மேலும், வாக்குகளைப் பிரிப்பதற்காகவே விஜய் களமிறக்கப்பட்டார் என்றும் பிரசாரத்தின் போது கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
இன்று விஜய்யின் அமைச்சரவையில் விசிக.
கரூர் மாநாட்டு உயிரிழப்பு விவகாரத்தில் விஜய் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததை 'பித்தலாட்டம்' என்றும், அவருக்கு அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்றும் வைகோ கடுமையாக விமர்சித்தார். இப்போது, தனிச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் விஜய் அமைச்சரவையில் இணைந்திருக்கலாமே என்று ஆதங்கப்படுகிறார்.
வைகோ இன்று, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக MLAக்களை ராஜினாமா செய்யவைத்து, பின்னர் இடைத்தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு, விஜய் தயவில் வென்றபின் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆசை வெட்கம் அறியாது என்பார்கள்!
நாம் யார் மீதும் குறை சொல்ல வரவில்லை. வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் மீது பூசப்பட்ட "கறை" இன்னும் மறையவில்லை. அதற்குள் காட்சிகள் மாறும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுகிற வசனங்கள் உடனே கற்பூரமாகக் காற்றில் கரைகின்றன.
தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியின் ஒற்றுமையானது "உடைக்க முடியாதது" என்றும், அது தேர்தலுக்காக மட்டுமே இல்லாமல், நாட்டின் எதிர்காலம், ஜனநாயகம் மற்றும் கொள்கை சார்ந்த இலக்குகளை நோக்கமாகக் கொண்டது என்றும் ஸ்டாலின் பேசினார். தேர்தல் தோல்வியில் கூட்டணி கட்சிகளின் சாயம் வெளுக்கிறது!
தமிழின் மீது ஆணையாக, தாய்நாட்டின் மீது ஆணையாக என்று பேசுவதெல்லாம் வேஸ்ட். "விரலில் வைத்த மை சாட்சியாக" என்று பேசக்கூட தமிழக அரசியல்வாதிகளுக்கு அருகதை இல்லை! வாக்குச்சாவடியில் கையில் வைத்த மை அழியும் காலத்திற்குள், நடக்கும் என்பது நடக்காது, நடக்காதென்பது நடப்பதுண்டு!
Please view "Comment" for #Ad link!
PS
Have you subscribed to our channel? If not, please subscribe now. This is your channel!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴



