ஜபர்தஸ்தான பேச்சுகளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை!
"தூய அரசியல் மடிந்துவிட்டது": இது, அதிமுக MLA க்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்தது பற்றி அன்புமணி ராமதாஸ் பேசியது. அரசியலில் நேரத்திற்கு தகுந்த மாதிரி எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.
முன்பு, பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி கேட்டு கட்சித் தலைமை பேரம் பேசியதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. அந்த செய்திக்கு பாமக தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் வந்ததில்லை.
விசிக ஒரு முடத்தெங்கு ஆ. ராசா பேச்சு. தவெகவின் ஆட்சி திமுகவின் தயவால்தான் நடைபெறுகிறது என்றும், அது அவர்களின் சொந்த பலத்தால் அமைந்த அரசு அல்ல என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக ஏன் தவெகவிற்கு தயவு காட்ட வேண்டும்? இடைத் தேர்தல் வந்தால் இருப்பதும் போய்விடும் என்ற பயத்தினாலா?
துரை வைகோ, மதிமுக MLA க்கள் துரதிர்ஷ்டவசமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அதனால் தங்களால் தற்போதைய புதிய அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதாவது, வாய்ப்பு கிடைக்காத வரை எல்லோரும் யோக்கியர்கள்தான். பாவம், விஜய்யை ஆதரிப்பதற்கு முடியவில்லை என்ற தனது ஆதங்கத்தை துரைவைகோ வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார்.
பதவியை எதிர்பார்த்து தவெகவை ஆதரிக்கவில்லை என்று பேசிய வேலுமணி & கோ, பிறகு எதற்காக தவெகவை ஆதரித்தது? பின்னர் மறுபடியும் ஏன் EPS இடம் சரண்டர் ஆனது என்று தெரியவில்லை. (தாய்வீடு போகிறார்களாம்!)
ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீமான், தற்போது நாம் தமிழர் கட்சியினர் விஜய்யை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். இந்த மாற்றம் எதனால் விளைந்தது என்று தெரியவில்லை!
ஒரு கழுதையில் அப்பா சவாரி செய்ய, மகன் நடந்து செல்கிறான். அதைப்பார்த்த ஒருவன் அப்பாவிடம் "சிறுவனை நடக்கவிட்டு நீ சவாரி செய்யலாமா?" என்று கேட்கிறார். பிறகு அப்பா கீழே இறங்கிவிட்டு மகனை கழுதையில் ஏற்றுகிறார்.
வருவோர் போவோர் பேச்சைக் கேட்டு இருவரும் கழுதை மீது பயணம் செய்கிறார்கள். இதைப் பார்த்த ஜீவகாருண்யமிக்க மனிதன் "கழுதையை இம்சை செய்யலாமா?" என்று விமர்சனம் செய்தான். போதுமடா சாமி, என்று தகப்பனும் மகனும் கழுதையைச் சுமந்தால், ஊரே கைகொட்டி "முட்டாள்கள்" என்று சிரித்ததாம்.
யாரும் விமர்சனம் பண்ண முடியாத அளவுக்கு ஒரு முடிவினை விஜய்யால் மட்டுமல்ல யாராலும் எடுக்க முடியாது. விஜய் தனக்கு பெரும்பான்மை இல்லை, மறுதேர்தலில் மக்களைச் சந்திக்கிறேன் என்று முடிவு செய்தாலும் விமர்சனங்கள் வரவே செய்யும்.
பின்னே? அதிமுக MLA க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் வரப்போகும் இடைத்தேர்தலில் திராவிடக் கட்சிகள் போட்டியிடுமா என்றே தெரியவில்லை. இதில் பொதுத்தேர்தல் என்றால் கூண்டோடு கைலாசம் என்பது உறுதி. ஆனாலும், ஆளாளுக்கு பேசும் ஜபர்தஸ்தான பேச்சுக்களுக்கு மட்டும் குறை ஒன்றுமில்லை...
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
America Wants the World — But Does the World Need America Any Longer?
For America, it seems that one country is never enough. Its ambitions increasingly appear to extend across the entire globe. From oil-rich nations such as Canada, Mexico, and Venezuela to strategically important territories like Greenland, American influence seeks to reach far beyond its borders. Donald Trump's desire to bring the Panama Canal back under American control and Washington's long-standing interest in dominating key maritime chokepoints such as the Strait of Hormuz are examples of this larger vision.
In modern geopolitics, oil is not merely a source of energy; it is a source of power. Although the United States does not directly govern Iraq's oil fields or refineries, it exercises significant influence over Iraq's economy through financial and commercial mechanisms. Many observers believe that Washington seeks to establish similar leverage over Iran. The insistence that Middle Eastern oil be traded primarily in U.S. dollars is part of the same strategy.
America's interests do not stop there. It needs China's rare earth minerals, which are essential for advanced technology and defense industries. It benefits from India's vast pool of skilled yet relatively inexpensive labor. At the same time, countries such as India, Japan, South Korea, Ukraine, Australia, and many European and Middle Eastern nations represent major markets for American weapons manufacturers. The more unstable the world becomes, the more valuable these markets become.
Underlying all of this is a strategic calculation: control the world's energy resources and trade routes, and you gain enormous leverage over emerging powers such as China and India. It is a vision of global influence built on oil, finance, trade, and military strength.
Yet there is a reality that Washington may be underestimating. While America needs the world for its prosperity and influence, the world may not need America to the same extent. Nations are increasingly diversifying their trade, building regional alliances, and seeking alternatives to American dominance.
The rest of the world appears to be recognizing this shift. Whether America recognizes it remains an open question. Because still the USA is in denial mode.
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#Iran #Geopolitics #Israel #usa #MiddleEast #IranNews #ChinaNews #GlobalPolitics #WorldNews #PoliticalAnalysis #geostrategy #StraitOfHormuz #Hormuz #OilCrisis #EnergyCrisis #TradeRoutes #MaritimeSecurity #Russia #Putin #China #India
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
உரிமைத் தொகையைப் பெற்று எதை நாம் வாங்கினோம்?
மொபைல் ரீசார்ஜ்?
பிள்ளைகள் கல்விக் கட்டணம்?
சமையல் எரிவாயு?
வாகன எரிபொருள்?
மின் கட்டணம்?
ஜீவாதாரமான குடிநீர்?
இவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அரசு உதவித்தொகையோ அல்லது உரிமைத் (!) தொகையோ ஒரு முறை வருமா? மக்களின் வாழ்வாதாரங்களை இலவசங்கள் உயர்த்துமா? அது சம்பாத்தியத்தில்தான் உயர வேண்டும். அதற்கு வழிவகை செய்யவேண்டும். ஓட்டுப் போடுவதற்கு மக்கள் உயிருடன் இருக்கவேண்டும் என்று வாய்க்கரிசி போடுவதா அரசின் வேலை? சிந்தித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
உரிமைத்தொகை என்பது மக்கள் கேட்டதில்லை. அது கமலஹாசனின் ஐடியா. அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டது திமுக! மக்களிடம் ஓட்டுப்பெற நேரடியாக மக்கள் பணத்தையே வாரி இறைப்பது புது ஜனநாயக டெக்னிக். அதை பிற மாநிலங்களுக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது திமுக!
நாம் மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிரி இல்லை. "இலவச அரிசி" என்பது யாரும் எந்த சூழ்நிலையிலும் பசியால் வாடக்கூடாது என்பதற்கான உன்னதமான திட்டம். ஆனால், சமூக அவலங்களை திரைபோட்டு மூடுவதுதான் இலவசங்களின் நோக்கம் என்பதே இடிக்கிறது. இதுவரை ஆண்ட திராவிட அரசுகள் இன்று பதவியேற்ற தவெக அரசின் தலையின் மீது ஏற்றி வைத்திருக்கும் கடன் சுமை சாதாரணமானதில்லை.
2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி, தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக (ரூ.10,62,248 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மொத்த வருவாயில், முந்தைய கடன்களுக்கான வட்டியாக மட்டும் சுமார் 15% வரை செலவாகும். கடனை அடைப்பது தனிக்கதை!
ஒரு பக்கம் கடனை அடைக்க வேண்டும். அதுவரை ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவேண்டும். அத்துடன் இலவசங்களையும் தொடர வேண்டும். திமுகவின் பொருளாதார திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரே ஒரு உதாரணம் போதும். 2021 தேர்தலில், ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக வாக்குறுதி அளித்தது. உதயநிதி ஸ்டாலின் மேடைதோறும் என்ன பேசினார் தெரியுமா?
"மக்களே உங்களுடைய நகைகளை (பணத்தேவை உள்ளதோ இல்லையோ!) கூட்டுறவு வங்கியில் அடகுவைத்து (கூச்சப்படாமல்?) கடன் வாங்குங்கள். அந்த கடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும்." மக்கள் மீதுதான் அவருக்கு எவ்வளவு கரிசனம் பாருங்கள்! என்ன நடந்தது தெரியுமா? பலர் கூட்டுறவு அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு கவரிங் நகைகளை வைத்து பணம் வாங்கினார்கள்.
பிறகு? எப்படியும் தேர்தல் முடிந்து கடன் தள்ளுபடி செய்யப்படும். நகையை தேர்தலுக்குப்பின் திரும்பித் தரப்போவதால், அதை வங்கி அதிகாரிகள் உரசிப் பார்க்க வேண்டாமே?இப்படிப்பட்டவர் துணை முதல்வராகி நாட்டினை ஆண்டால் நாடு தாங்குமா? கூட்டுறவுச் சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் அது உதயநிதியின் நஷ்டமா, அல்லது நாட்டு மக்களின் நஷ்டமா? இது நமது சந்ததியினரின் தலையில் திமுக அரசு ஏற்றிய சுமை.
ஓட்டு கிடைத்தால் திமுக ஆட்சிக்கு வரலாம். ஒருவேளை அது கிடைக்காமல் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால்? நகைக் கடன்களை தள்ளுபடி செய்யச் சொல்லி அரசுக்கு எதிராகப் போராடலாமே! என்னே ஒரு ராஜதந்திரம்! இப்பேர்ப்பட்ட ஒரு கட்சியிடம் இருந்து தமிழகத்தின் தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் இல்லை; மக்களின், குறிப்பாக இளைஞர்களின் விழிப்புணர்ச்சியால் இது 2026 இல் நிகழ்ந்தது.
"பலரைச் சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது." என்பது அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழி ஆகும். இது மாறாத தத்துவம் என்பதால், தற்கால அரசியலில் இந்த சிந்தனை அப்படியே எதிரொலிக்கிறது.
கடன் ரத்து, இலவசங்கள், உதவித்தொகை ஆகியவை இருக்க வேண்டியதுதான், அது அரசின் வருவாய்க்குள் உள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்ற வருவாயை பெருக்குங்கள். மென்மேலும் கடன் வாங்குவது ஆபத்து. அதை ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்வது அவசியம். அரசு இந்த விஷச்சுழலில் இருந்து மாநிலத்தை விடுவிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சீண்டினாலும் தவெக அரசு இருக்கிற சிக்கலை அதிகமாக்கி விடக்கூடாது.
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#திமுக #தவெக #விஜய் #ஸ்டாலின் #உதயநிதி #அரசியல் #2026தேர்தல் #உரிமைத்தொகை #இலவசங்கள்
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
என்னது, போரை நிறுத்துறதா? அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் பாஸ்!
அமெரிக்காவால் ஒரு போரை சுலபமாக ஆரம்பித்து வைக்க முடியும். ஆனால் அதை முடித்து வைக்க முடியுமா என்றால் — வரலாறு சிரித்துக்கொண்டே “அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் பாஸ்!” என்று பதில் சொல்லும்.
ஒரு பக்கம் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போது கூச்சமே இல்லாமல் மறுபக்கம் ரகசியத் தாக்குதலையும் அது நடத்தும்! அது நம்பிக்கை துரோகம், அதை நம்பினால் நாசம். பிறகு போர் முடிந்த மாதிரிதான்!
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விசித்திரமானது. அதிரடியாக ஒரு போரை ஆரம்பிப்பதில் இருக்கும் அவசரம், அதை முடிப்பதில் இருக்காது. “சமாதானத்தை நிலைநாட்ட” அமெரிக்கா இறங்கும் போது, சம்பந்தப்பட்ட நாடுகள் “இதை விட போர் பரவாயில்லை!” என்ற மனநிலைக்கே வந்துவிடும்!
இப்போது ஈரான் பிரச்சினையிலும் அதே காட்சி. “சமாதானம் வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே, அதற்காக அமெரிக்கா ஈரானுக்குப் போடும் நிபந்தனைகள் ஒன்று, இரண்டு, மூன்று என நீண்டுகொண்டே போகிறது. இது கதவைத் திறக்க சாவி கேட்பது போல இல்லை; கதவை உடைத்துக்கொண்டே “பயப்பட வேண்டாம், அமைதி, அமைதி!” என்று சொல்வது போல இருக்கிறது.
அமெரிக்காவின் யோக ஜாதகமே அப்படி. போர் ஆரம்பிக்கும் போது ஹாலிவுட் ட்ரெய்லர் மாதிரி அமர்க்களமாக இருக்கும். ஆனால் முடியும் போது? “விட்டால் போதும்” என்று தலைதெறிக்கப் பின்வாங்கி ஓடிய வரலாறுதான் அதிகம். சமாதானம் என்பது போகாத ஊருக்கு வழி கேட்ட கதையாக முடியும்.
வியட்நாம் போர்:
கம்யூனிசத்தை தடுக்கச் சென்ற அமெரிக்கா, இறுதியில் தூதரகத்திலிருந்து அவசரம் அவசரமாக "ஆளைவிட்டால் போதும்" என ஹெலிகாப்டரில் வெளியேறியது. உலக அரசியலில் அது இன்னும் ஒரு அவமானச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. வியட்நாம் போர் அதிகாரப்பூர்வமாக 19 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 27 நாட்கள் நீடித்தது.
வளைகுடா (ஈராக்) போர்:
“மக்கள் காப்பாற்றப்படுவார்கள், ஜனநாயகம் மலரும்” என்று தொடங்கிய போர், பல ஆண்டுகள் குழப்பம், பயங்கரவாதம், அரசியல் சீர்கேடு ஆகியவற்றை விட்டுச் சென்றது.
செப்டம்பர் 22, 1980 இல் தொடங்கிய போர் ஆகஸ்ட் 20, 1988 இல் முடிந்தது.
ஆப்கானிஸ்தான் போர்:
இருபது ஆண்டுகள் போராடி, ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் செலவழித்து, இறுதியில் "சுபம்" என போர் முடிந்து அமெரிக்கா வெளியேறிய சுவடுகள் மறைவதற்குள் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். “Mission Accomplished” என்ற பதாகை வரலாற்றின் மிகப் பெரிய காமெடிகளில் ஒன்றாக மாறியது.
க்யூபா பிரச்னை:
இது நம்ம தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதையைப் போலத் தொடர்வது, அநுமார் வால் போல நீள்வது! க்யூபா கைவாக்கில் அருகிலேயே இருக்கும் ஒரு தீவு நாடு. ஆனால் பல தசாப்தங்களாக க்யூபாவை அமெரிக்காவினால் நினைத்தபடி ஒடுக்க முடியவில்லை. தடைகள், தடைச் சட்டங்கள், அரசியல் அழுத்தங்கள் — அனைத்தையும் பிரயோகித்துப் பார்த்தும், க்யூபா எதற்கும் மசியவில்லை.
இதற்கெல்லாம் மேலாக, “நடக்கிற போரை நான் நிறுத்திவிடுகிறேன் பார்!” என்று சொல்லிக்கொண்டு எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றும் திறமை அமெரிக்காவின் தனிச்சிறப்பு. உக்ரைன் போர் அதற்கொரு நல்ல உதாரணம். சமாதான பேச்சுகள் துவக்குமுன், மறைமுகமாக, முதலில் போருக்குத் தேவையான ஆயுதங்கள் பற்றிய பேச்சுக்கள் நடப்பது இங்கு வழக்கமானது.
அமெரிக்காவிற்கு நம்பிக்கை துரோகம் என்பது கைவந்த கலை! பத்தாக்குறைக்கு பவளக்கொடி என்பது போல, இப்போது அமெரிக்கா உலகின் பாதிக்கு மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தகப் போரிலும் இறங்கியுள்ளது. ரஷ்யா, சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன், கனடா — சுருக்கமாகச் சொன்னால், யாருடனாவது சண்டை இல்லாதிருந்தால் அதுதான் ஆச்சரியம், செய்தி!
பிறகு?
“MAGA — Make America Great Again” என்றால் சும்மாவா? டிரம்புக்கு உலக சமாதானத்திற்கான நோபல் பிரைஸ் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. பாவம் அவரும் வாய்விட்டுக் கேட்டுப் பார்த்துவிட்டார். அய்யோ பாவம், பிரைஸ் இன்னும் கிடைத்த பாடில்லை...
யோசித்துப் பார்த்தால், MAGA வாவது மண்ணாவது? சில நேரங்களில் “Make America Fight Again” என்பதுதான் அமெரிக்க அதிபர்களின் முழுநேர வேலை போல, என்று நினைக்கத் தோன்றும்.
- o O o -
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#Trump #USA #அமெரிக்கா #அரசியல் #Iran #ஈரான் #India #OilCrisis #EnergyCrisis
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
Superpowers aren't super anymore:
The brutal reality of modern warfare that Washington and Moscow didn't see coming.
The myth of the infallible superpower has been thoroughly dismantled on the modern battlefield. Whether it is the United States’ historical missteps or Russia’s ongoing campaign, the lesson for aspiring global powers is stark: military invasion is a pathway to attrition, not glory.
Russia’s large-scale war in Ukraine, which began on February 24, 2022, remains a conflict with no end in sight. According to the United Kingdom’s Government Communications Headquarters (GCHQ), nearly half a million Russian personnel have died. While independent media and volunteers have verified over 100,000 names, exact figures remain elusive. Because neither Moscow nor Kyiv regularly publishes verified casualty lists, these numbers rely heavily on signals intelligence, satellite imagery, and open-source tracking.
The devastation extends far beyond the frontline. Economically, Russia has seen over $300 billion in Central Bank assets frozen, with the daily cost of war estimated between $500 million and $1 billion. Economists project that without this conflict, the Russian economy would be 12% larger. Instead, hyper-focused weapons production has gutted civilian industries, triggering severe labor shortages, sudden import price spikes, and a domestic manpower crisis that threatens agricultural production and destabilizes inflation.
Meanwhile, Ukraine’s economy lies in shambles. National debt has surged past $204 billion, pushing the debt-to-GDP ratio near 100%. This ballooning deficit is exacerbated by a critical shift in Western aid: American financial support has largely ceased, shifting the primary funding burden to European partners and converting free grants into heavy loan-based packages, such as the G7's $50 billion loan initiative. The human toll is equally devastating, with Ukrainian military deaths estimated between 55,000 and 140,000, alongside roughly 15,850 civilian lives lost.
Ultimately, while wars are waged under the banner of protecting sovereignty and freedom, history consistently proves that neither the aggressor nor the aggrieved truly benefits. When peace talks and negotiations are forced at the point of a gun, the only guaranteed outcome is collective ruin.
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#Geopolitics #Russia #usa #Ukraine #GlobalPolitics #WorldNews #PoliticalAnalysis #geostrategy #Putin #Zelensky #Trump
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
ஆ. ராசா மறைமுகமாக யாரை எதிர்க்கிறார்?
ஆ. ராசா இன்று நேற்றல்ல, காலங்காமாகவே விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து மறைமுகமாக நகர்த்தப்பட்டு வரும் துருப்புச்சீட்டு என திமுகவின் உள்கட்சி விவகாரங்களை நன்கு அறிந்தவர்களால் கருதப்படுபவர். கலைஞர் காலத்தில் வலிமையாக இருந்த ஃபார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உடைந்ததில் அவருடைய கைங்கரியம் இருந்தது.
காங்கிரஸ் மற்றும் வலது கம்யூனிஸ்டு கட்சிகள்கூட கலைஞரின் கட்சி உடைப்பு ராஜதந்திர(!) நடவடிக்கைகளில் இருந்து தப்பவில்லை. அதிமுக, மதிமுக ஆகியவை பிற்சேர்க்கைகள். மேலும் திமுகதான் அவற்றிற்கு தாய்வீடு மாதிரி. அந்த கட்சிகளில் இருந்து வந்தவர்கள்தான் திமுகவில் இன்றுவரை செல்வாக்குடன் வலம் வருகிறார்கள்.
திருமாவளவனை எடுத்துக் கொண்டால், அவர் தலித் சமுதாயத்தைத் தாண்டி சிறுபான்மை மக்களின் தனிப்பெரும் தலைவராக வளர்ந்து வருவதை திமுக விரும்பவில்லை. அதே சமயம் நேற்றுவரை வேகமாக வளர்ந்து வந்த நாதக கட்சித் தலைவர் சீமானும் அதை விரும்பவில்லை. சீமானுக்கு திருமாவளவனை சீண்டுவதே வேலையாக இருந்தது.
அதே கால கட்டத்தில் ஆ. ராசா விசிகவை சாதிக்கட்சி என்று விமர்சனம் செய்ததும், அப்போதெல்லாம் சீமான் ஆ. ராசாவை படித்த அறிவாளி என்று புகழ்ந்ததும் பலருக்கு நினைவிருக்கலாம். ஆனால் இந்த கடந்தகால சூழ்நிலை வேறு, இன்றைய சூழ்நிலை வேறு.
முன்பு ஆ. ராசா
ஆ. ராசா தனிமையில் இருந்தபோது தலைமைக்கு எதிராக சிலரிடம் ரகசியமாகத் பேசியுள்ளார். அவர் 2G ஊழல் வழக்கில் கைதானபோது பேசிய அந்தப் பேச்சின் பதிவு இன்று இணைய தளங்களில் உலா வருகிறது. அதை சமன் செய்யும் நோக்குடன் தற்போது ஆ. ராசா, தவெகவின் அமைச்சரவையில் விசிக சேர்ந்ததைப் பற்றி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மேற்கண்ட செய்தியில் உண்மை இல்லை என இன்னொரு தரப்பு கூறுகிறது. அதாவது, திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஆ. ராசா தற்போது விசிகவை எதிர்த்துப் பேசியுள்ளார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அவர் முதலில் போட்ட இலக்கிய நயம் வாய்ந்த கவிதையை பின்னர் நீக்க வேண்டியிருந்தது தனிக்கதை!
ஆனால், விஷயம் தெரிந்த திமுகவினர் கூறுவது "அடேங்கப்பா" ரகம்! அதாவது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விசிகவை நிரந்தரமாக திமுகவிடமிருந்து பிரித்து விடுவதே ஆ. ராசாவின் திட்டம் எனப்படுகிறது. அதாவது, திமுகவின் தலித் முகமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஆ. ராசாவின் வியூகம் என்று சொல்லப்படுகிறது.
இப்போது சொல்லுங்கள், ஆ. ராசா மறைமுகமாக யாரை எதிர்க்கிறார்? எப்படிப் பார்த்தாலும், கட்சியில் யாரும் தன்னை உதாசீனப்படுத்திவிட முடியாத அளவிற்கு அவர் தன்னை பலப்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#விசிக #நாதக #அதிமுக #திமுக #தவெக #தமிழகஅரசியல் #கலைஞர் #திருமாவளவன் #சீமான் #ஆராசா
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
புதிய அரசுக்கு முக்கியமானதொரு சவால்: அதிகரித்து வரும் சென்னை நகரின் தீராத குடிநீர் பிரச்சினை
வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதி ஒன்றில் ஆழ்துளைக் கிணற்றுக்கு அதிக பட்சம் 200 அடி ஆழம் போட்டால் போதும், தண்ணீர் தேவைக்கு அதிகமாகவே தாரளமாகக் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அந்தப் பகுதியில் 200 படுக்கைகளுடன் ஒரு நவீன மருத்துவமனை, ஆயிரம் பேர் வேலை பார்க்கக்கூடிய சாஃட்வேர் பார்க், மற்றும் ஒரு கல்லூரி ஆகியவை வந்தன. நிலத்தின் விலை மற்றும் வீட்டுவாடகை விஷம் போல் ஏறின. ஏரியாவாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மக்களுடைய மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. ஒரு வருடத்திலேயே ஆழ்துளைக் கிணறுகள் மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் வறண்டு விட்டன. அதற்குக் காரணம், மருத்துவமனை, சாஃட்வேர் பார்க், கல்லூரி ஆகியவை 600 அடி முதல் 1000 அடி வரை 6.5 அங்குல விட்டம் கொண்ட ஆழ்துளைக் கிணறுகளை அமைத்ததுதான். அங்கு அதிக திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டு நீர் உறிஞ்சப்படுவதால் மக்கள் வாழும் குடியிருப்புகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
தாம்பரம், போரூர் மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆழத்தில் இருப்பதால், அங்கு சாதாரணமாகவே 400 முதல் 500 அடிகள் ஆழத்தில்தான் தண்ணீர் கிடைக்கும். சில இடங்களில் ஆழம் 1200 அடி வரை கூட செல்வது உண்டு. பெரிய நிறுவனங்களைப் போல சாதாரண மக்கள் பெரும் பொருட்செலவில் ஆழமான துளைகளைப் போட முடியாது என்பதால் மக்கள் கோடை காலங்களில் அன்றாட புழக்கத்துக்கும் நீரினை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
பொதுவாக தண்ணீர் பிரச்சினையை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்ப்பதற்கு மாறி மாறி ஆறு தசாப்தங்களாக தமிழகத்தை ஆண்டு வந்த கழக அரசுகள் சிரத்தையுடன் செயல்படாததால் நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மற்ற பெரு நகரங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு நெறிமுறைகளை அரசு வகுத்து, அவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்.
தெய்வாதீனமாக கடந்த சில வருடங்களில் நல்ல மழை பெய்து சென்னையை காப்பாற்றியது. ஒரூ வருடம் மழை தப்பிவிட்டால் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்புவது கடினம். போர்க்கால அடிப்படையில் ரயில்களிலும் விமானங்களிலு தண்ணீர் கொண்டுவர நேரலாம். இதுதான் இன்றைய எதார்த்தமான நிலை.
தோல் பதனிடுதல், ஜவுளித்துறை, மருந்து, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் தொழில் நுட்பம் / டேட்டா சென்டர்கள், பானங்கள் / பேக்கேஜுடு குடிநீர் ஆகிய நீரின் தேவை அதிகம் உள்ள தொழில்கள் பல்லேறு குடியிருப்பு பகுதிகளில் இருந்து அதிக தூரத்தில் துவங்கப் படவேண்டும் என்பதை லைசன்ஸ் கொடுக்கும்போதே உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ளவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டம் கட்டமாக (Phased manner) வெளியேற்ற வேண்டும்.
கடலோரப் பகுதிகளில் (ECR, OMR) மிக ஆழமாகத் துளையிடுவது கடல் நீர் உட்புகுவதற்கு (Saltwater Intrusion) வழிவகுக்கும் என்பதால், அங்கு ஆழத்தைக் குறைத்து மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதே சிறந்தது என வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
புதிய கட்டுமானங்களில் மழைநீர் சேகரிப்பு (Rain Water Harvesting) விதிமுறைகள் அமலில் உள்ளன. இருப்பினும் அனைத்து பழைய கட்டுமானங்களிலும் மழைநீர் சேகரிப்புக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு அதிக பட்ச ஆழம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
சூப்பர் எல்நினோ புண்ணியத்தில் ஏரிகள் வறண்டு (Day Zero) எனப்படும், நகராட்சிகளால் தண்ணீர் வழங்க முடியாமல் போகும் நாள் வரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். கோடைக் காலங்களில் பெரிய நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை தடுத்தால்தான் பொதுமக்கள் அந்தக் காலகட்டத்தை ஒருவழியாக சமாளித்து கரையேற முடியும்.
#சென்னை #குடிநீர்பிரச்சினை #விஜய் #நிலத்தடிநீர் #மழைநீர் சேகரிப்பு
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
உங்களுடைய மகிழ்ச்சியின் அளவு என்ன?
மனிதன் சுதந்திரமானவன். அவன் வாழ்வதற்காக தனது சுதந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுக்கிறான், சில சமயங்களில் விலை பேசுகிறான். மனிதனுடைய மகிழ்ச்சி அவனது சுதந்திரத்துடன் தொடர்புடையது.
- o O o -
ஒரு மனிதன் தனது சுதந்திரத்தை எப்போது விலை பேசுகிறான்?
"தேவைகள் அதிகமாகும்போது."
தேவைகள் ஏன் அதிகமாகின்றன?
"ஆசைகள் அதிகமாகும்போது தேவைகள் அதிகமாகின்றன. அவை இரட்டைப் பிறவிகள்."
ஆசை, தேவை, சுதந்திரம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவையா?
"இது ஒரு விஷச்சுழல். (Viscious Cycle)"
இதை மேலும் கொஞ்சம் விளக்க முடியுமா?
- o O o -
நீங்கள் ஏன் ஒரு வேலைக்கு போகிறீர்கள்?
"பணம் சம்பாதிப்பதற்காக."
பணத்தை ஏன் சம்பாதிக்க வேண்டும்?
"தேவைகளை பூர்த்தி செய்வதற்காக."
நீங்கள் இப்போது 9 To 5 வாழ்கையில் தள்ளப்பட்டதால் வாரம் 5 நாட்களில் உங்கள் சுதந்திரத்தை விலை பேசி ஒரு சுழலுக்குள் வந்து விட்டீர்கள்.
"அதுமட்டுமல்ல, அதற்காக 7 மணிக்கே எழுந்து தயாராகி பஸ் பிடித்து அலுவலகத்திற்கு ஓட வேண்டும்."
ஒன்றை இழந்துதான் ஒன்றை அடைகிறோம். பிறக்கும்போது இருந்த சுதந்திரம் ஒன்றுதான் நமது வாழ்க்கைக்கு மூலதனம். பணம் மட்டுமல்ல, அதிகாரம், ஆரோக்கியம், புகழ், மணவாழ்க்கை ஆகிய எல்லாவற்றுக்கும் தெரிந்தோ தெரியாமலோ சுதந்திரத்தை விலையாகக் கொடுக்கிறோம். ஒரு அரசியல்வாதிக்கும் நடிகனுக்கும் இது நன்கு புரியும்.
"ஆம். அவர்களால் சுதந்திரமாக நடமாடக்கூட முடிவதில்லை."
இந்த அடிப்படை தத்துவத்தை நீங்கள் அறியும்போது உங்களுடைய சுதந்திரம் விலைமதிப்பற்றது என்பதை உணர்கிறீர்கள். உங்களுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க நேரும்போது யோசிப்பீர்கள். ஏனென்றால், "உங்களுடைய சுதந்திரத்தின் அளவுதான் உங்கள் மகிழ்ச்சியின் அளவு" என்பது உங்களுக்குத் தெரியும்.
"ஆம், சுதந்திரம் என்றால் என்ன என்று புரிந்துவிட்டால் அது ஒரு புதிர் இல்லை!"
சுதந்திரம்தான் மகிழ்ச்சி என உணர்ந்த ஞானிகள் அதை விற்றுவிட்டு வேறொரு மகிழ்ச்சியை வாங்க ஓடுவதில்லை. நீங்கள் சுதந்திரமான மனநிலையில் வரைந்த ஓவியம் மிகவும் அழகாக இருக்கிறது.
"நன்றி!"
அதே சமயம், அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிக்கவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளும்போது உங்கள் எதிர்பார்ப்புகள் குறைகின்றன. அப்போது கவலைகள் தாமாகவே மறைகின்றன.
#மகிழ்ச்சி #மணவாழ்க்கை #சுதந்திரம் #கவலை #விஷச்சுழல் #VisciousCycle #தேவைகள் #ஆசைகள் #அதிகாரம் #ஆரோக்கியம் #புகழ்
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
Terminating the Presidency of Trump Before It Is Too Late
The sovereignty of a nation is not a commodity. It is not a bargaining chip. It is not an asset that can be negotiated away in pursuit of geopolitical ambitions, personal legacies, or political theatrics. In the emerging world order, respect for national sovereignty must remain the foundation of international stability.
Today, the world sees Donald Trump much as it sees a tree. The visible trunk and branches attract attention. But beneath the surface lies a vast root system extending far beyond what is immediately visible. In international politics, the most consequential developments often occur underground—through covert understandings, strategic calculations, economic interests, intelligence networks, and political alliances that are hidden from public view.
Technology may have advanced dramatically, but even the most sophisticated surveillance systems cannot fully uncover what is happening beneath the surface of global politics. This reality is particularly relevant in the ongoing confrontation involving Iran. The most significant developments may occur where Washington is least prepared to anticipate them.
The United States faces a challenge that cannot be solved by military power alone. Successful foreign policy requires trust, credibility, and cooperation. Yet America today finds itself in a difficult position. Friends are increasingly skeptical. Adversaries are openly resistant. Many nations are unwilling to provide wholehearted support for policies they perceive as being driven by narrow interests rather than broad international consensus.
The perception across much of the world is that Trump's closest and most influential foreign partner is Israeli Prime Minister Benjamin Netanyahu. Whether justified or not, many observers believe that Netanyahu's strategic priorities do not always align with America's long-term national interests. They may align with Trump's political calculations, but that is not necessarily the same thing.
This distinction matters because wars have consequences far beyond the battlefield.
Iran is not Iraq. It is not Libya. It is not Afghanistan. It is a large, resilient nation with significant regional influence and strategic depth. Any assumption that Iran can be easily subdued may prove dangerously mistaken. Under present circumstances, a decisive military victory appears highly uncertain without a dramatic escalation.
And that is where the danger lies.
If nuclear weapons were ever introduced into such a conflict—especially on grounds that fail to convince the international community—the consequences could be catastrophic. The world would enter uncharted territory. What begins as a regional war could rapidly transform into a global nuclear confrontation. The resulting devastation would not respect borders, alliances, or ideologies.
The victims would not be limited to one nation. The entire world would pay the price.
Even if America were to emerge militarily victorious from such a conflict, it could emerge strategically diminished. History repeatedly demonstrates that great powers often lose their supremacy not because they are defeated by enemies, but because they overextend themselves and exhaust the foundations of their own strength.
The United States achieved its position of global leadership through economic dynamism, institutional stability, scientific innovation, and alliances built over generations. These assets are far more valuable than military adventures. Once squandered, they cannot easily be rebuilt.
For this reason, the responsibility resting upon the shoulders of the American Congress and Senate is immense. Their constitutional duty is not merely to support a president but to safeguard the republic itself. If they conclude that presidential actions are creating unacceptable risks to national and global security, they possess both the authority and the obligation to act through the mechanisms provided by the Constitution.
This is not a question of partisanship. It is not a question of Republicans versus Democrats. It is a question of whether the institutions of American democracy are capable of restraining dangerous excesses before irreversible damage occurs.
No individual, regardless of office, wealth, or influence, is bigger than the nation he serves.
The United States does not revolve around Donald Trump. The world certainly does not. Every president is temporary. Every administration passes into history. What endures are the institutions, values, and responsibilities that transcend individual leaders.
The stakes today are extraordinarily high. The decisions made in Washington could shape the future of humanity for generations. Prudence, restraint, and constitutional accountability are not signs of weakness. They are the marks of genuine statesmanship.
If America wishes to preserve both its leadership and its legacy, it must remember a simple truth: the greatest power is not the power to start a war, but the wisdom to prevent one.
#Trump #WorldWar #USA
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
ஆவது போல் ஆகிக் கெடும்...
இதுவரை பெற்ற வெற்றி எல்லாம் ஒரு வெற்றி இல்லை, அடைந்த தோல்வியெல்லாம் ஒரு தோல்வி இல்லை. ஆனால் 2026 தேர்தலில், இன்று திமுக அடைந்த தோல்வி ஒரு மறக்க முடியாத, மற்றும் மாற்றவே முடியாத நிஜமான தோல்வியாக அமையும் என்பதே தேர்தலுக்குப் பிந்தைய தமிழக அரசியல் நிலவரம் தரும் செய்தி ஆகும். அதிமுகவைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை! Already written off even before the elections.
அதிமுக தோன்றிய பின்னர் திமுகவும் அதிமுகவும் பிரதான கட்சிகளாக தமிழக தேர்தல் களத்தில் மோதி வந்தன. காங்கிரஸ் அட்ரஸ் இல்லாமலே போனது. அப்போதெலாம் சில தேர்தல்களில் திமுக வரலாறு காணாத வெற்றியடைந்தது உண்டு. அதேபோல வரலாறு காணாத தோல்வியை அடைந்ததும் உண்டு.
உதாரணமாக, 2011 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக 28 எம்.எல்.ஏ.க்களைக் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அந்தத் தேர்தலில் திமுக வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், 2021இல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
திமுகவோ அல்லது அதிமுகவோ பெற்ற வரலாறு காணாத வெற்றியும் வெற்றியில்லை; தோல்வியும் தோல்வியில்லை. ஏனென்றால், அவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கூட்டணிக் கணக்குகள் மற்றும் இலவச வாக்குறுதிகள் போன்ற பல்வேறு சலசப்புகள் காரணமாக அடுத்த தேர்தல்களில் கணக்குகள் மாறும்போது வெற்றி தோல்வியும் நிலைமாறுகிறது.
இது வரை திராவிடக் கட்சிகளுக்குள் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தன. 2026 தேர்தல் வித்தியாசமானது. இது மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்திற்கு ஒப்பானது. இரு கழகங்களும் இந்தத் தேர்தலில் வாங்கியது மரண அடி! ஒருவகையில் EPS செய்த அலப்பறைகளும் இன்று திராவிடக் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனதற்கு ஒரு காரணம் என்று கூறலாம்.
மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. காங்கிரசினால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கம்யூனிஸ்டுகளின் அராஜகங்கள் எல்லை மீறின. மம்தா பானர்ஜி சரியான தருணத்தில் விசுவரூபம் எடுத்தபின் நிலைமை தலைகீழானது.
சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த மக்களும் மம்தாவை நம்பி ஆதரித்தனர். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. மம்தா கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தார். கம்யூனிஸ்டுகளின் அராஜகம், அடக்குமுறை மற்றும் வன்முறையை அனுபவித்த மக்கள் அதை மறக்கவில்லை; அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பே வழங்கவில்லை.
இலவசங்கள், உரிமைத்தொகை, உதவித்தொகை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவை ஓட்டுக்களுக்காக விரிக்கப்படும் வலைகள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கண்ட மேனிக்கு கடன்களை வாங்கி திமுக தலைவர்கள் "வள்ளல்" வேஷம் போட்டு "மஞ்சக்குளிச்சதும்" அவர்களுக்குத் தெரியும்.
2026 தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எத்தனை தொகுதிகளை வென்றது? சொல்வதற்கு நமக்கே கூச்சமாக உள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 (ஒரே ஒரு) தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
நாளை தமிழகத்தில் அதே நிலை திமுகவிற்கு ஏற்பட்டால் அதில் ஆச்சரியம் இல்லை. தேர்தலுக்கு முன்னால் திமுக தலைவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் ? "ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன?" என்ற கண்ணதாசனின் பாடல்தான் நினைவில் நிழலாடுகிறது. "ஆவது போல் ஆகிக் கெடும்" என்பது ஒரு திருக்குறளின் சுருக்கமான பழமொழி வடிவமாகும்.
குறள்:
"களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்"
பொருள்:
அறநெறிக்கு மாறாகத் திருட்டு அல்லது நேர்மையற்ற வழியில் சேர்க்கப்படும் செல்வம், பல மடங்கு பெருகி வளர்வது போல் தோன்றும். ஆனால், அது நிலைக்காமல் இறுதியில் அடியோடு அழிந்துவிடும்.
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴




