
TVK Balachandar V
@tvkpolurnorthjointsecretary
எமை ஆளும் தளபதி எங்களை ஆள வா...🔥
திருச்சி காப்பக விவகாரம் - தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேடு!
திருச்சி மாவட்டம், அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 83 சிறுமிகள், அங்கு நடத்தப்பட்ட திடீர் ஆய்வுக்குப் பிறகு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
வசைபாடுதல், உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்கள், உணவு மறுப்பு எனப் பிஞ்சு உள்ளங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி நெஞ்சை ரணமாக்குகிறது. இது ஒரு நிறுவனத் தோல்வி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாகும்.
குழந்தைகள் நலக் குழுவால் (CWC). பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்படைக்கப்பட்ட சிறுமிகளுக்கு, அரசு நிதி பெறும் ஒரு நிறுவனத்திலேயே இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்திருப்பது மன்னிக்க முடியாதது. அரசின் மாதாந்திர மானியத்தைப் பெற்றுக்கொண்டு, அதே அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு இல்லத்தில் குழந்தைகளுக்கு மிரட்டலும், கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டது, தி.மு.க அரசு தன் பொறுப்பில் இருக்கும் குழந்தைகளைக் கூடக் காக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது.
அதிகாரிகள் ஒரு 'திடீர் ஆய்வு' நடத்திய பிறகுதான் இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அப்படியென்றால், இதற்கு முன்பாக அங்கு வழக்கமான ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டனவா? அல்லது வெறும் காகித அளவிலேயே ஆய்வுகள் முடிக்கப்பட்டனவா? என்ற கேள்வி எழுகிறது.
புகார்கள் தொடர்ச்சியாக வந்தும், நிலைமை முற்றிய பிறகே 83 சிறுமிகளும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு நிறுவனம், அராஜகத்தின் கூடாரமாக மாறியிருப்பதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததா?
சமூக நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாடு குறித்துப் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்யும் தி.மு.க அரசு. தரைமட்டத்தில் நிர்வாகத்தை எவ்வளவு மோசமாக வைத்திருக்கிறது என்பதற்கு திருச்சி சம்பவமே சாட்சி. திருச்சி போன்ற ஒரு முக்கிய நகரத்திலேயே அரசு நிதியுதவி பெறும் காப்பகத்தின் நிலை இதுவென்றால், தொலைதூரக் கிராமங்களில் உள்ள இல்லங்களின் நிலை என்னவாக இருக்கும்? அரசின் நலத்திட்ட முழக்கங்கள் வெறும் வெற்றுச் சொற்கள் என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது.
இத்தனை காலமாக அச்சத்திலும், பசியிலும் வாடிய அந்தச் சிறுமிகளுக்குப் பதில் சொல்லப்போவது யார்?அரசு வழங்கிய நிதி எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? முறைகேடுகள் நடந்துள்ளதா? இந்த அவல நிலை தொடரக் காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் காப்பக நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
ஒரு நாட்டின் எதிர்காலமான குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறும் எந்த அரசும், மக்கள் நல அரசு என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றது. இந்த விவகாரத்தில் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தவறு செய்தவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! இந்த கேவலமான திமுக அரசுக்கு தேர்தல் தினத்தன்று தகுந்த பாடம் கிடைக்க போவது உறுதி! #Thalapathy vijay anna
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்.. #Thalapathy vijay anna
வளைகுடா பிராந்தியத்தில் அமைதி நிலவவும், தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டும்
உலகப் பொருளாதாரத்தின் மிகமுக்கியமான மையப்புள்ளியாகத் திகழும் வளைகுடா நாடுகளில், அண்மைக்காலமாக நிலவி வரும் போர்ச் சூழலும், அரசியல் பதற்றங்களும் மிகுந்த கவலையை அளிக்கின்றன. ஒரு நாட்டின் அமைதி என்பது அந்த நாட்டின் எல்லைகளோடு முடிந்துவிடுவதில்லை; அது உலகளாவிய வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல், உலக அமைதிக்கு விடப்பட்ட சவாலாகவே உள்ளது.
வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான தமிழ் உறவுகள் தங்களின் உழைப்பைச் செலுத்தி வருகின்றனர். நம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் அந்நியச் செலாவணிப் பங்களிப்பு மிக முக்கியமானது. தற்போது நிலவும் போர் அச்சத்தால் அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் குடும்பத்தினர் தமிழகத்தில் மிகுந்த அச்சத்துடன் காத்துக் கிடக்கின்றனர். எனவே, அங்குள்ள இந்தியர்களின் உயிருக்கும் உடமைக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத வண்ணம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
யுத்தங்கள் எப்போதும் தீர்வைத் தருவதில்லை; அவை பேரழிவுகளையும் மனித அவலங்களையும் மட்டுமே மிச்சம் வைக்கின்றன. வரலாற்றுப் பிழைகளை ஆயுதங்களால் திருத்த முயல்வதை விடுத்து, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மற்றும் தூதரக ரீதியான அணுகுமுறைகள் மூலம் அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் முன்வர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு, வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஒருவேளை போர்ச் சூழல் தீவிரமடைந்தால், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரத் தேவையான அவசரக்காலத் திட்டங்களை (Emergency Evacuation Plan) இந்திய அரசு இப்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு உதவி மையங்களைத் திறந்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளைத் தங்குதடையின்றி வழங்க வேண்டும்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயரிய தத்துவத்தை மனதில் ஏந்துவோம். மனிதநேயம் காக்கப்படவும், வளைகுடா நாடுகளில் மீண்டும் அமைதிப் பூக்கள் மலரவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம். #Thalapathy vijay anna
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே பழங்குடியின பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் பிரதான சாலையிலேயே இத்தகைய கொடூரம் அரங்கேறியிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்குச் சான்றாகும்.
சாதாரண வீதிகள் முதல் மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்கள் வரை, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. இதற்குத் திறனற்ற திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே முதன்மைக் காரணமாகும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது இன்று பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
வீதிக்கு வீதி மதுபானக் கடைகளைத் திறந்து வைத்து, மக்களைப் போதைக்கு அடிமையாக்கி 'கல்லா' கட்டுவதிலேயே இந்த அரசு குறியாக இருக்கிறது. கட்டுக்கடங்காத மது விற்பனை, தங்குதடையின்றி கிடைக்கும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சீர்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டாலின் மாடல் அரசு திணறி வருகிறது.
காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சரோ, மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதை விட விளம்பரங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார். குற்றங்களைக் கண்காணிக்கவோ, உரிய நடவடிக்கை எடுக்கவோ நேரமின்றி நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது. திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கும், அதிகார மமதைக்கும் தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். #Thalapathy vijay anna
தமிழக வெற்றிக் கழகத்தின் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கான (01.03.2026) நிர்வாகக் கண்காணிப்பு மற்றும் செயற்பாட்டு வழிகாட்டுதல்! #Thalapathy vijay anna 💚🥰
ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனமான அத்துமீறல்! தமிழகமே தலைகுனியும் அவலம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு வயதுப் பிஞ்சுப் பாலகி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து, கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தக் கொடிய குற்றத்தைச் செய்த நபர், ஆளுங்கட்சியான திமுக-வின் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்த 'பெரியநாயகம்' என்பதுதான் மிகுந்த வேதனைக்குரியது. 'ஆளுங்கட்சிப் பின்னணி இருந்தால் எதையும் செய்யலாம், யாரைக் கொன்றாலும் தப்பித்துவிடலாம்' என்கிற மமதை கலந்த துணிச்சல் இத்தகைய கயவர்களுக்கு எப்படி வந்தது?
அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்களே இத்தகைய இழிவான, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் செத்துவிட்டதையே பறைசாற்றுகிறது.
திமுக தொடர்பில் இருந்தால் எதையும் செய்யலாமா? எத்தனையோ போராட்டங்கள், சட்டங்கள் வந்த பின்பும், ஒரு பச்சிளம் குழந்தையைச் சிதைக்க இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வருகிறது? இது வெறும் குற்றமல்ல; மனித இனத்திற்கே ஏற்பட்ட ஒரு தீராத கறை. இத்தகைய கொடூரம் நடந்திருப்பது, ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குச் சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எள்ளளவும் பயமில்லை என்பதையே அப்பட்டமாகக் காட்டுகிறது.
இந்த வழக்கை உடனடியாக விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து, எவ்வித அரசியல் சலுகையோ அல்லது காலதாமதமோ இன்றி, அந்தக் கயவனுக்கு உச்சபட்சத் தண்டனையை அரசு உறுதி செய்ய வேண்டும். #Thalapathy vijay anna
அன்று mgr
இன்று vijay 🙏
mgr vijayakanth &VIJAY Thalapathy Anna #Thalapathy vijay anna ✨⚡💚
That BGM. That entry. That fire.
Time to whistle again.
Theri returns to theatres on Feb 27.🧨💚 #Thalapathy vijay anna
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு:
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம் #Thalapathy vijay anna
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம் #Thalapathy vijay anna










