TVK Balachandar V
ShareChat
click to see wallet page
@tvkpolurnorthjointsecretary
tvkpolurnorthjointsecretary
TVK Balachandar V
@tvkpolurnorthjointsecretary
எமை ஆளும் தளபதி எங்களை ஆள வா...🔥
வீரத்திற்கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர், "தென்னாட்டின் ஜான்சி ராணி", தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர், சமூக சேவகர், தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினமான இன்று, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினேன். சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர்! நீராதாரத்திற்காகப் போராடியவர், போராட்டக் களத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று அன்றே நிரூபித்தவர். தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் வழியில், தீய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க உறுதியேற்போம்!🙏 #Thalapathy vijay anna 🥰💚✨
Thalapathy vijay anna - @[(hu: மமாள் @[(hu: மமாள் - ShareChat
ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது, ஒரு தலைமுறையின் கல்வியைச் சிதைப்பதற்குச் சமம் தமிழகத்தில் உள்ள 182 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் கௌரவ விரிவுரையாளர்கள். அத்தகைய 8,000க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தீர்க்க முனையாமல், அவர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்திருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது என்பது, அந்த ஆசிரியர்களை மட்டும் பாதிப்பதல்ல; அது ஒரு தலைமுறையின் கல்வியையே சிதைப்பதற்குச் சமம் என்பதை இந்த அரசு உணர வேண்டும். கடந்த ஒரு வார காலமாகத் தமிழகம் முழுவதும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கௌரவ விரிவுரையாளர்கள், தற்போது சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் முன்னெடுத்து வரும் காத்திருப்புப் போராட்டம், அவர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தின் உச்சகட்டமாகும். வகுப்பறையில் நின்று பாடம் எடுக்க வேண்டிய அறிஞர்கள், இன்று தங்கள் உரிமைகளுக்காக அலுவலக வாசலில் அமர்ந்து போராடும் அவலநிலை தொடர்வது தமிழகத்திற்கே நேர்ந்த இழுக்காகும். நியாயமான உரிமைகளுக்காக ஒரு ஜனநாயக நாட்டில் ஆசிரியர்கள் வீதியில் தவம் கிடப்பது நிர்வாகத் தோல்வியின் அடையாளம். அரசு இன்று அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருப்பது அவர்களின் பிழைப்புவாத அரசியலையே காட்டுகிறது. கல்வித் துறையை மேம்படுத்துவதாகத் தம்பட்டம் அடிக்கும் இந்த அரசு, ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்? விளம்பர அரசியலை விடுத்து, களத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வகுப்பறையில் இருக்க வேண்டியவர்கள் வாசலில் நிற்கும் நிலை நீடித்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
கலரு.. கண்ணாடி..lyrical video tomorrow at 4:40pm🧨 #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
THE MASS IS BACK. THE ROAR RETURNS. Ghilli re-releasing from Feb 20.2026 Nostalgia. Goosebumps. Pure🧨💚 #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - .IRITHIII PRESENTS  SAKTHI SRI SURYA MOVIES | 44!- ور وو ILAVATHALAPATHV | VIJAY | IN THEATERS FEBRUARI 20 TH தில்ல DHARANL  VIDYASAGAR  S.GOPINATH  .IRITHIII PRESENTS  SAKTHI SRI SURYA MOVIES | 44!- ور وو ILAVATHALAPATHV | VIJAY | IN THEATERS FEBRUARI 20 TH தில்ல DHARANL  VIDYASAGAR  S.GOPINATH - ShareChat
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு, கிளிஞ்சல்மேடு கிராமங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்த அடாத செயல், அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுவித்து, அவர்களது படகுகளையும் மீட்டுத் தர ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 3ஆம் தேதி விடுவிக்கப்பட்ட பிறகும் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர், சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கே பரிதவித்து வருவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது. மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர், இலங்கை நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் வாடுகின்றனர். மீனவர்களுக்குத் தொடர்ந்து இதுபோல நிகழ்வதைத் தடுக்க, தமிழக அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாம் கடிதம் எழுதுவதே போதும் என்று தமிழக முதல்வர் எண்ணுகிறாரா? இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
பள்ளிக்கூடமா? போர்க்களமா? திருநெல்வேலி திம்மராஜபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தேர்தல் பணிக்காகத் தயார் செய்தபோது, அங்கிருந்து துப்பாக்கித் தோட்டா கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தோட்டா பழைய ரகத் துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடியது என வரும் தகவல்கள், தமிழகத்தில் ஆயுதப் புழக்கம் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒரு கல்வி நிறுவனத்தில் தோட்டா கண்டெடுக்கப்படுவது மாநிலப் பாதுகாப்பிற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். ஏற்கனவே தமிழகத்தின் பல கல்விக்கூடங்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் கூடாரமாக மாறிவரும் நிலையில், தற்போது 'தோட்டாக்கூடங்களாகவும்' மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. பழைய ரக ஆயுதங்கள் இன்னும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவை பள்ளிக் கட்டிடங்களில் கண்டெடுக்கப்படுவதும் உளவுத்துறையின் மெத்தனத்தையே பறைசாற்றுகிறது. மாணவர்கள் அச்சமின்றிப் பயில வேண்டிய இடத்தில், ஆயுதப் புழக்கம் இருப்பது தமிழகத்தின் வருங்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தன் ஆட்சியை 'சூப்பர்ஃபாஸ்ட் எஞ்சின்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் லட்சணத்தைப் பார்த்தால், மக்கள் இந்த ஆட்சியை 'சூப்பர்வேஸ்ட் எஞ்சின்' என்றுதான் அழைக்கின்றனர். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, குற்றவாளிகளை ஒடுக்குவதை விட்டுவிட்டு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சி, மக்களின் பாதுகாப்பை முற்றிலுமாக மறந்துவிட்டது. விளம்பர அரசியலை விடுத்து, பள்ளிக்கூடங்களிலும் மக்கள் நடமாடும் பகுதிகளிலும் ஆயுதப் புழக்கத்தைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
100 வருடமானாலும் எங்கோ ஒரு மூலையில் அந்த முதல் காதல் வந்து ஞாபகப்படுத்திக்கொண்டு தான் இருக்கும்... பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு. #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - Polimer POLIMER TV னாலும் எங்கோ ஒரு மூலையில் அந்த முதல் 100 வருடமா காதல் வந்து ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கும். SI6ur பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு 15 Feb 2026 | POLIER TV Polimer POLIMER TV னாலும் எங்கோ ஒரு மூலையில் அந்த முதல் 100 வருடமா காதல் வந்து ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கும். SI6ur பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு 15 Feb 2026 | POLIER TV - ShareChat
திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. 'மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும், இந்தக் குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு விருப்ப மனுவைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (14.02.2026) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பாலான கழகத் தோழர்களால் விருப்ப மனுவைச் சமர்ப்பிக்க முடியாமல் போனதாகத் தெரிவித்து வருகின்றனர். எனவே தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, வரும் 20ஆம் தேதி (20.02.2026) வரை கழகத் தோழர்கள் தங்களது விருப்ப மனுவைத் தலைமை நிலையச் செயலகத்தில் சமர்ப்பிக்கலாம். விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க அதுவே கடைசி நாள் ஆகும். கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம் #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
ஆட்சியில் இருப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்திய வெற்றித் தலைவர் அவர்களின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை... #Thalapathy vijay anna🥰
Thalapathy vijay anna - ShareChat
00:51