TVK Balachandar V
ShareChat
click to see wallet page
@tvkpolurnorthjointsecretary
tvkpolurnorthjointsecretary
TVK Balachandar V
@tvkpolurnorthjointsecretary
எமை ஆளும் தளபதி எங்களை ஆள வா...🔥
ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனமான அத்துமீறல்! தமிழகமே தலைகுனியும் அவலம்! கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு வயதுப் பிஞ்சுப் பாலகி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து, கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடிய குற்றத்தைச் செய்த நபர், ஆளுங்கட்சியான திமுக-வின் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் பொறுப்பில் இருந்த 'பெரியநாயகம்' என்பதுதான் மிகுந்த வேதனைக்குரியது. 'ஆளுங்கட்சிப் பின்னணி இருந்தால் எதையும் செய்யலாம், யாரைக் கொன்றாலும் தப்பித்துவிடலாம்' என்கிற மமதை கலந்த துணிச்சல் இத்தகைய கயவர்களுக்கு எப்படி வந்தது? அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்களே இத்தகைய இழிவான, அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாகச் செத்துவிட்டதையே பறைசாற்றுகிறது. திமுக தொடர்பில் இருந்தால் எதையும் செய்யலாமா? எத்தனையோ போராட்டங்கள், சட்டங்கள் வந்த பின்பும், ஒரு பச்சிளம் குழந்தையைச் சிதைக்க இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வருகிறது? இது வெறும் குற்றமல்ல; மனித இனத்திற்கே ஏற்பட்ட ஒரு தீராத கறை. இத்தகைய கொடூரம் நடந்திருப்பது, ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்குச் சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் எள்ளளவும் பயமில்லை என்பதையே அப்பட்டமாகக் காட்டுகிறது. இந்த வழக்கை உடனடியாக விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து, எவ்வித அரசியல் சலுகையோ அல்லது காலதாமதமோ இன்றி, அந்தக் கயவனுக்கு உச்சபட்சத் தண்டனையை அரசு உறுதி செய்ய வேண்டும். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
அன்று mgr இன்று vijay 🙏 mgr vijayakanth &VIJAY Thalapathy Anna #Thalapathy vijay anna ✨⚡💚
Thalapathy vijay anna - ShareChat
00:58
That BGM. That entry. That fire. Time to whistle again. Theri returns to theatres on Feb 27.🧨💚 #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
01:12
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு: தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம் #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் 1ஆம் தேதி (01.03.2026) ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் முழுநாள் நிகழ்வாக நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட கழகத்தின் அடுத்த கட்டச் செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து, கழகத் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்தது போல, கலந்தாலோசிக்கப்பட உள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்கள், இணைக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்பில், அந்தந்த மாவட்டங்களைச் சார்ந்த தொகுதிகளில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற உள்ள இக்கூட்டங்களில் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் கழகச் செயல்வீரர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம் #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
THERI" returns to the big screen tomorrow A grand worldwide rerelease. Massive celebrations loading 🧨💚💥 #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
00:21
வீரத்திற்கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர், "தென்னாட்டின் ஜான்சி ராணி", தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர், சமூக சேவகர், தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினமான இன்று, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினேன். சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர்! நீராதாரத்திற்காகப் போராடியவர், போராட்டக் களத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று அன்றே நிரூபித்தவர். தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் வழியில், தீய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க உறுதியேற்போம்!🙏 #Thalapathy vijay anna 🥰💚✨
Thalapathy vijay anna - @[(hu: மமாள் @[(hu: மமாள் - ShareChat
ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது, ஒரு தலைமுறையின் கல்வியைச் சிதைப்பதற்குச் சமம் தமிழகத்தில் உள்ள 182 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் கௌரவ விரிவுரையாளர்கள். அத்தகைய 8,000க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தீர்க்க முனையாமல், அவர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்திருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது என்பது, அந்த ஆசிரியர்களை மட்டும் பாதிப்பதல்ல; அது ஒரு தலைமுறையின் கல்வியையே சிதைப்பதற்குச் சமம் என்பதை இந்த அரசு உணர வேண்டும். கடந்த ஒரு வார காலமாகத் தமிழகம் முழுவதும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கௌரவ விரிவுரையாளர்கள், தற்போது சென்னை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் முன்னெடுத்து வரும் காத்திருப்புப் போராட்டம், அவர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தின் உச்சகட்டமாகும். வகுப்பறையில் நின்று பாடம் எடுக்க வேண்டிய அறிஞர்கள், இன்று தங்கள் உரிமைகளுக்காக அலுவலக வாசலில் அமர்ந்து போராடும் அவலநிலை தொடர்வது தமிழகத்திற்கே நேர்ந்த இழுக்காகும். நியாயமான உரிமைகளுக்காக ஒரு ஜனநாயக நாட்டில் ஆசிரியர்கள் வீதியில் தவம் கிடப்பது நிர்வாகத் தோல்வியின் அடையாளம். அரசு இன்று அவர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருப்பது அவர்களின் பிழைப்புவாத அரசியலையே காட்டுகிறது. கல்வித் துறையை மேம்படுத்துவதாகத் தம்பட்டம் அடிக்கும் இந்த அரசு, ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்? விளம்பர அரசியலை விடுத்து, களத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வகுப்பறையில் இருக்க வேண்டியவர்கள் வாசலில் நிற்கும் நிலை நீடித்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
கலரு.. கண்ணாடி..lyrical video tomorrow at 4:40pm🧨 #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
THE MASS IS BACK. THE ROAR RETURNS. Ghilli re-releasing from Feb 20.2026 Nostalgia. Goosebumps. Pure🧨💚 #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - .IRITHIII PRESENTS  SAKTHI SRI SURYA MOVIES | 44!- ور وو ILAVATHALAPATHV | VIJAY | IN THEATERS FEBRUARI 20 TH தில்ல DHARANL  VIDYASAGAR  S.GOPINATH  .IRITHIII PRESENTS  SAKTHI SRI SURYA MOVIES | 44!- ور وو ILAVATHALAPATHV | VIJAY | IN THEATERS FEBRUARI 20 TH தில்ல DHARANL  VIDYASAGAR  S.GOPINATH - ShareChat