Veena priya
ShareChat
click to see wallet page
@veena3251
veena3251
Veena priya
@veena3251
all r, selfish ,fake nd fraud
#இதயம் பேசுகிறது மகிழ் உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்கணும் என நினைக்கும் நாக்கு வெளியே தள்ளும் வார்த்தையில் நாகரீகம் பார்ப்பதில்லை வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள். நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள். நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள். முடிந்தளவு பிறருக்கு உதவுங்கள். ஆனால் யாரிடமும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். அன்றாடம் துாங்கும் முன் அரை நிமிடமாவது யோசியுங்கள். தவறை திருத்தும் வாய்ப்பு கிடைக்கும். இல்லாத ஒரு விஷயத்தைத் தேடி மனம் அலைபாயும் போது.. ஒரு பொய் சொல்லப்படும் போது.... அது அந்த ஒரு பொய்யை மட்டுமல்ல, இதுவரை சொல்லப்பட்ட அனைத்து உண்மைகளையும் சந்தேகத்தின் பார்வையில் நிறுத்தி விடும்!💯 கண்முன்னே தண்டனை தந்துவிட்டார் தெய்வம் உங்களிடம் ஒன்றை ஒன்று மட்டும் தான் கேட்டேன் அதற்காக இவ்வளவு பேச்சும் எதற்காக நீங்கள் உண்மையாக இருங்கள் இல்லாவிட்டால் பொய்யாக இருங்கள் இனி எனக்கு அதைப் பற்றி அவசியம் இல்லை உங்களால் வடித்த கண்ணீர் போதும் எதற்காக நான் மட்டும் உங்களை நினைத்து கண்ணீர் வடிக்க வேண்டும் நீங்க மற்றவர்களுடன் சந்தோஷமாக தானே இருக்கிறீர்கள் வாழ்க்கை நமக்கு எதையோ மறுத்துவிட்டது என்று தோன்றலாம்.. ஆனால் , ஒவ்வொரு மறுப்பிற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை காலம் உணர்த்தும். நாம் பிடித்துக் கொள்ள முயலும் சில விஷயங்கள் நமக்காக உருவாக்கப்படாதவையாக இருக்கலாம்.. அதனால் , அவை விலகிச் செல்கின்றன. அந்த நேரத்தில் அது இழப்பாகத் தோன்றினாலும், பின்னர் திரும்பிப் பார்க்கும்போது அது ஒரு பாதுகாப்பாகவும், ஒரு வழிகாட்டுதலாகவும் இருந்தது என்பதை புரிந்துகொள்வோம். இந்த பிரபஞ்சம் எப்போதும் நாம் கேட்பதையெல்லாம் உடனே தராது.. ஆனால் , நமது வளர்ச்சிக்கும், அனுபவத்திற்கும், உண்மையான நலனுக்கும் தேவையானவற்றை சரியான நேரத்தில் வழங்கும். ஆகவே இல்லாததை எண்ணி உன் மனதை சோர்வடைய விடாதே.. ஏனெனில் , உன் பார்வைக்கு மறைந்திருந்தாலும், உன் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் கவனித்து, உனக்கான பாதையை மெதுவாக அமைத்துக் கொண்டிருப்பது இந்த பிரபஞ்சமே ! சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் அகந்தையின் முடிவு: அரசன் நகுஷன் மலைப்பாம்பாக மாறிய கதை விருத்ராசுரனைக் கொன்றதன் காரணமாக, தேவேந்திரன் 'பிரம்மஹத்தி' (ஒரு அந்தணனைக் கொன்ற பாவம்) தோஷத்திற்கு ஆளான ஒரு காலம் வந்தது; அந்தப் பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடும் பொருட்டு, அவன் சுவர்க்கத்தை விட்டு நீங்கி ஓரிடத்தில் மறைந்து வாழ்ந்தான். இந்திரன் இல்லாததால், சுவர்க்கத்தின் சிம்மாசனம் காலியாகக் கிடந்தது; இதனால் பிரபஞ்சத்தின் சமநிலை குலையத் தொடங்கியது. இதன் விளைவாக, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, பூமியில் வாழ்ந்த அரசர்களிலேயே மிகவும் தர்மசீலனான நகுஷனைச் சுவர்க்கத்தின் அரசனாக (இந்திரனாக) நியமிக்கத் தீர்மானித்தனர். சுவர்க்கத்தின் அரசனாகப் பொறுப்பேற்றதும், நகுஷன் அளவற்ற சக்திகளையும், மரணமில்லாப் பெருவாழ்வையும், தேவலோகத்திற்குரிய எல்லையற்ற செல்வச் செழிப்பையும் பெற்றான். வாழ்க்கை நிம்மதியாக வாழ வேண்டும் எல்லாத்தையும் இலந்து விட கூடாது தொடக்கத்தில் அவன் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி நடத்தினான்; ஆனால் காலப்போக்கில், சுவர்க்கத்தில் நிறைந்திருந்த சிற்றின்ப சுகங்களும், வரம்பற்ற அதிகாரமும் அவனது சுய அறிவையும் நியாத்திறனையும் அரித்துவிட்டன. அவன் அகந்தையால் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டான். ஒரு நாள், இந்திரனின் மனைவியான இந்திராணி மீது அவனது பார்வை விழுந்தது. காமத்தால் மதிமயங்கிய நகுஷன், "நான் இப்போது சுவர்க்கத்தின் அரசனாக இருப்பதால், என் மனைவியாக வேண்டும்," என்று அறிவித்து ஒரு செய்தியை அனுப்பினான். இந்திராணி நகுஷனின் இந்தக் கோரிக்கையைக் கேட்டுப் பெரிதும் கலக்கமடைந்தாள்; அச்சத்தாலும் நடுங்கினாள். அவள் தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் (தேவகுருவிடம்) அடைக்கலம் புகுந்து உதவி கோரினாள். பிரகஸ்பதி இந்திராணியை தேற்றியதுடன், நகுஷனைச் சிக்கவைப்பதற்கான ஒரு தந்திரமான உபாயத்தையும் வகுத்துத் தந்தார். "நான் உங்கள் மனைவியாகச் சம்மதிக்கிறேன்," என்று இந்திராணி பதிலளித்தாள். "ஆனால் எனக்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு: இதுவரை எவரும் பயன்படுத்தாத, முற்றிலும் புதுமையான ஒரு வாகனத்தில் ஏறிக்கொண்டு நீங்கள் என்னிடம் வர வேண்டும். முனிவர்களும், பெரும் ஞானிகளும் சுமந்து வரும் ஒரு பல்லக்கில் (அமர்ந்தவாறு நீங்கள் என்னிடம் வர வேண்டும்." எத்தனை சாபத்தினால் எத்தனையோ பெரிய பெரிய கோடீஸ்வரர் இருந்து இடம் தெரியாமல் போய்விட்டார் அகந்தையாலும், காம இச்சையாலும் கண்கள் மறைக்கப்படவே, நகுஷன் அறம் எது, பாவம் எது என்ற பகுத்தறியும் திறனை முழுமையாக இழந்தான். அவன் 'சப்தரிஷிகள்' (அகத்தியர், பிருகு போன்ற பெரும் ஞானிகளை உள்ளடக்கிய ஏழு முனிவர்களின் குழு) மீது ஆணை பிறப்பித்து, அவர்களைத் தனது பல்லக்கைச் சுமக்கும் பணியில் ஈடுபடுத்தினான். பணத்துக்காக எதையும் செய்ய நினைப்பவர் வாழ்க்கை இல்லாமல் போகும் இருந்தும் இல்லாமல் இருக்க சமம் அந்த முனிவர்கள் உடல்வாகில் சிறியவர்களாக இருந்தனர். சச்சியைச் சென்றடைவதில் நகுஷனுக்கு இருந்த அவசரம் மிக அதிகமாக இருந்ததால், பல்லக்கில் அமர்ந்தபடியே அவன் முனிவர்களை நோக்கி, "வேகமாக நடங்கள்! இன்னும் வேகமாக நடங்கள்!" என்று மீண்டும் மீண்டும் விரட்டினான். எல்லாம் இருக்கும் அனுப்பவிக்க வாரிசு இல்லாமல் போகும் இதற்கு பலபேர் இட்ட சாபத்தினால் அழிந்து போன வரலாறு நிறைய இருக்கிறது அந்த அவசரத்தில், நகுஷன் தனது காலால் பெரும் முனிவரான அகத்தியரின் தலையில் உதைத்துவிட்டு, "சர்ப்ப! சர்ப்ப!" என்று ஆவேசமாகக் கத்தினான். (சமஸ்கிருத மொழியில், 'சர்ப்பம்' (Sarpa) என்ற சொல்லானது 'வேகமாக நகர்தல்' என்ற பொருளையும் குறிக்கிறது). நகுஷனின் இந்தத் துணிச்சலையும் அவமதிப்பையும் கண்டு அகத்திய முனிவர் கடும் சினமுற்றார். எத்தனை பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த நம்பிக்கை துரோகம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் ஏழு ஏழ் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் அவர் உடனடியாக நகுஷனை நோக்கி, "ஓ அகந்தை கொண்ட நகுஷனே! முனிவர்களின் தெய்வீக ஆன்மீக ஒளியை நீ அவமதித்ததுடன், அவர்களை எட்டி உதைக்கும் துணிச்சலையும் பெற்றிருக்கிறாய். நீ தேவலோகத்தின் அரசனாகத் திகழத் தகுதியற்றவன். இந்த நொடியே தேவலோகத்திலிருந்து கீழே விழுந்து, பூமியின் மீது ஒரு பிரம்மாண்டமான மலைப்பாம்பாக (சர்ப்பமாக) உருமாறக்கடவாய்!" என்று சபித்தார். அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு நல்லவர் போல் நடித்து வருகிறார் எல்லாத்தையும் தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது தக்க சமயத்தில் உனது ரத்தத்தை வைத்ததே உனக்காக தண்டனை தருவார் கடவுள் இந்தச் சாபத்தைப் பெற்றதும், நகுஷனின் அகந்தை முற்றிலுமாக நொறுங்கியது. அவன் முனிவர்களின் கால்களில் விழுந்து, தன்னை மன்னிக்குமாறு கெஞ்சத் தொடங்கினான். கருணை நிறைந்த அகத்திய முனிவர், அந்தச் சாபத்தை முழுமையாகத் திரும்பப் பெற இயலாவிட்டாலும், அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரு வழிமுறை (நிபந்தனை) இருப்பதாக விளக்கினார்: செய்த துரோகம் உனது வம்சம் வேர்ருடன் அழிக்கும் துவாபர யுகத்தில்அதே சந்திர வம்சத்தில் பிறந்த யுதிஷ்டிரர், நகுஷன் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில்களை அளிக்கும்போது—அவன் இந்தச் சர்ப்ப வடிவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, மீண்டும் தேவலோகத்திற்குத் திரும்ப இயலும் என்பதே அந்த நிபந்தனையாகும். செய்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, மகாபாரத காலத்தில்—பாண்டவர்கள் காட்டில் வனவாசம் மேற்கொண்டிருந்த வேளையில்—ஒரு பிரம்மாண்டமான மலைப்பாம்பு (நகுஷன்) பீமனைப் பிடித்துச் சிறைப்படுத்தியது. பீமனை மீட்க யுதிஷ்டிரர் அங்கு வந்தபோது, அந்த மலைப்பாம்பு தர்மம், அறிவு மற்றும் ஒரு பிராமணனின் உண்மையான பண்புகள் ஆகியவை குறித்துப் பல ஆழமான மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்டது. யுதிஷ்டிரர் அளித்த நீதிசார்ந்த மற்றும் நுண்ணறிவு மிக்க பதில்களில் திருப்தியடைந்த நகுஷன், தன் பாவங்களிலிருந்து விடுபட்டான்; அவன் தன் சர்ப்ப வடிவத்திலிருந்து விடுதலை பெற்று, தேவலோகத்தில் தனக்குரிய உயர்ந்த இடத்தைத் திரும்பப் பெற்றான் செய்த குற்றத்திற்கு பரிகாரம் இல்லை ஒரு தனிநபர் எவ்வளவுதான் வலிமை வாய்ந்தவராகவோ, செல்வச் செழிப்பு மிக்கவராகவோ அல்லது உயர்ந்த பதவியில் இருப்பவராகவோ திகழ்ந்தாலும், அவர்கள் தங்கள் ஞானத்தை இழந்து, அகந்தையால் கண்மூடித்தனமாகி, தங்கள் முன்னோர்களையோ அல்லது தங்களை விடப் பேரறிவு கொண்டவர்களையோ அவமதிப்பார்களேயானால், அவர்களின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை இக்கதை நமக்கு உணர்த்துகிறது. #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 18.#மோக்ஷ_ஸந்யாஸ_யோகம். பாகம்_29 🙏31. " பார்த்தா! தர்மத்தையும், அதர்மத்தையும் தகுந்தக் காரியத்தையும், தகாதக் காரியத்தையும் தாறுமாறாக எந்தப் பத்தி அறிகிறதோ, அது ராஜஸமானது"🙏 விளக்கம்: அசைகின்ற நீரில் நமது பிம்பம் தெளிவாகத் தெரிவதில்லை. நம் மனத்தில் ஒருவரின் மீது கசப்புணர்வை நிரப்பி வைத்திருந்தோமானால், அந்நபர் நாட்டிற்கு நல்லவற்றையே செய்தாலும் அது தீமையாகவே தெரியும். அதே நேரத்தில் நாட்டிற்குக் கெடுதல்களைச் செய்வோர் நமக்கு வேண்டியவர்களாக இருந்தால், அத் தீய மனிதர்களையும் நல்லவரென நினைக்கும் வஞ்சக மனிதரும் இப்புவியில் மண்ணுக்குப் பாரமாக வாழ்வதுண்டு. சூதாடுதலை நற்செயலென்று நினைத்து, தர்மராஜனை அதில் இணைத்துவிட்டான் இராட்சஸ புத்தியுடைய *துரியோதனன். மகாராணியான திரௌபதியை நிறைந்தச் சபை நடுவே அவமானப்படுத்தத் துரியோதனனைத் தூண்டினான் பொறாமயே உருவெடுத்தப் பாதகக் #கர்ணன் (இராஷஸப் பிறவி). இத்தகைய மனநிலையையே #இராட்சஸம் என்கிறார்! ஶ்ரீகிருஷ்ணர். தர்மம் எது? அதர்மம் எது? நாட்டிற்குத் தகுந்த நடவடிக்கை என்ன? தகாத நடவடிக்கை என்ன? என்பதைச் சரியாக உணராமலும், உணர்ந்தும் சயநலனுக்காக வஞ்சகமாகச் செயல்படும் நபர்களின் புத்தியே #இராட்சஸம். என்கிறார்! ஶ்ரீகிருஷ்ணர். ஒருவனுக்கு #ரஜோ_குணத்தில் உதித்தப் புத்தியிருந்தால், பெருமிதமான உழைப்பு இருக்கும்; ஆனால் அந்த உழைப்பில் நேர்மையைக் காண இயலாது. இரு நபர்கள் விவசாயமோ, வர்த்தகமோ செய்தால், அவர்களுள் ரஜோ குணமுடையவன் தனது ஆற்றலையும், அறிவையும் ஓயாது உபயோகப்படுத்துவான். ஆனால் அம்முயற்சி ஆக்கமான துறையில் இருக்காது. அயலான் சம்பாதித்தையும் தானே அபகரித்துக் கொள்ளவே *ரஜோ குணமுடையவன் முயற்சிப்பான். அல்லது பிறருக்கு நல்லதைச் செய்வதைப் போல காட்டிக்கொண்டு, மறைமுகமாக அவனை அழித்து, அதில் தான் சுகமாக வாழவே நினைப்பான். தன்னருகில் நிம்மதியாக வாழ அத்தகையவன் யாரையும் விட மாட்டான்; ஏதோவொரு வகையில் ரஜோ (இராட்சஸ இயல்பு) குணத்தான் பிறரைத் துன்புறுத்திக் கெண்டேயிருப்பான். மெய்யைப் பொய்யாக்குவதிலும், பொய்யை மெய்யாக்குவதிலும் #இராட்சஸ_புத்தியுடையோன் மிகத் திறமையானவன். நேர்மையாக நடந்துக் கொள்வோரையும் , வஞ்சகர்களாகப் பிறருக்குக் காட்டும் திறமையுள்ளவன்! இந்த #ரஜோ_குணத்தவன். இறை நம்பிக்கையைப் பற்றிய வாழ்வு அத்தகையவனுக்குக் கசப்பாக இருக்கும். நாட்டிற்கோ, பிறருக்கோ எந்த நல்லனவற்றையும் செய்யாமல், நல்லது செய்வோரையும் வஞ்சகர்களாகக் காட்டி, அனைத்து நற்செயல்களையும் கெடுத்து, அனைவரையும் துன்புறுத்துவான் #இராட்சஸ புத்தியுடையவன். #அர்ஜுனா! தர்மத்தையும், அதர்மத்தையும், தகுந்தச் செயலையும், தகாதச் செயலையும் தாறுமாறாகப் புரிந்து வைத்திருப்பவன் #ரஜோ குணத்தான்! என்கிறார் #ஶ்ரீகிருஷ்ணபரமாத்மா. #இராட்சஸ_புத்தியுடையோரின் செயல்களாக ஶ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனுக்குக் கூறுவதை ஆழ்ந்து சிந்தித்தால் அது, *இக்கால *அரசியலுக்கும் பொருந்தி வருவது வியப்பனதே. கண்ணா! மணிவண்ணா! உன் மகிமையே மகிமை.🙏🏻 #ஶ்ரீகிருஷ்ணபகவானே_சரணம். 🙏🏻 🙏
இதயம் பேசுகிறது - ShareChat
#இதயம் பேசுகிறது
இதயம் பேசுகிறது - ShareChat
00:14
#இதயம் பேசுகிறது
இதயம் பேசுகிறது - ShareChat
00:38
#இதயம் பேசுகிறது
இதயம் பேசுகிறது - ShareChat
00:10
#இதயம் பேசுகிறது
இதயம் பேசுகிறது - ShareChat
00:14
#இதயம் பேசுகிறது தத்துவம் உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட, உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறந்தது. #குறள்:118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும் உங்கள் வாழ்க்கைக்கான, நேரம் என்பது, உங்கள் உயிரோட்டத்தின், ஒரு பகுதியாகும், அதை மதிக்க, தெரிந்தவர்களுக்கு, மட்டுமே கொடுத்து, மகிழ்வது தான், வாழ்வின் உச்சகட்ட இன்பம். நம் கையில் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து எது வந்தாலும் எதிர்கொள்ளும் பக்குவம் வரும் போது வாழ்க்கை இனிதாகிறது... கடவுள் எல்லாருக்கும் எல்லாமும் கொடுப்பதில்லை, இருப்பதை வைத்து கொண்டு சந்தோஷபட மறந்த நாம தான் இழந்தவுடன் வருத்தப்படுகிறோம்.! 💐 மழைச் சாரலில் நினைத்தாலும் நிழல் நனைவதில்லை ஆனால் உன் நினைவுகளில் கரையுதடி இந்த இதயமும் இருளில் தொலைந்து போகுமடி என் நிழலும் ❣️ 😍😍🙏🙏 😍
இதயம் பேசுகிறது - ్హ தேடுவதற்கும் திட்டுவதற்கும் ஒரு பெண் இருக்கும் வரைதான் ஓர் ஆண் சரியாக இருப்பான் ్హ தேடுவதற்கும் திட்டுவதற்கும் ஒரு பெண் இருக்கும் வரைதான் ஓர் ஆண் சரியாக இருப்பான் - ShareChat
#இதயம் பேசுகிறது *ராதேக்ருஷ்ணா..!!* நீ எப்போதும் என் பொறுப்பில் இருக்கிறாய்...!! தைரியமாக செயல்படு..!! இறை சிந்தனையுடன் தைரியத்துடன் தெளிவான முடிவு எடுப்பவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்..!! நானே உன் தைரியம்..!! நானே உன் சிந்தனை..!! *ராதேக்ருஷ்ணா..!!* 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
இதயம் பேசுகிறது - ShareChat
#⚡ஷேர்சாட் அப்டேட் #இதயம் பேசுகிறது ! சுத்தியல் ஒன்றுதான் மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது. ஒருநாள் சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை. அவன் மீண்டும் அடித்தான்; ஆனாலும் பூட்டு திறக்கவில்லை. அப்போது அவன் மனைவி “பூட்டை உடைக்காதீர்கள்; சாவி கிடைத்து விட்டது” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள். அவன் சாவியை வாங்கிப் பூட்டை மிக எளிதாகத் திறந்து விட்டான். சாவியையும் சுத்தியலையும் அருகிலேயே வைத்து விட்டுப் போய்விட்டான். சுத்தியலுக்கோ மிக அவமானமாக இருந்தது. “மிக வலிமையான நம்மால் திறக்க முடியாத பூட்டை, இந்தச் சிறிய சாவி திறந்து விட்டதே” என்று வருந்தியது. சுத்தியல் சாவியிடம் பேச்சுக் கொடுத்தது. “நான் உன்னைவிட மிகவும் #வலிமையானவன்; ஆனால் நான் பூட்டைத் திறக்க மிகவும் கஷ்டப்படுகிறேன். நீ என்னைவிட மிகவும் #எளிமையானவன்; ஆனால் எளிதில் பூட்டைத் திறந்து விட்டாயே; என்ன காரணம்?” என்று சுத்தியல் சாவியிடம் கேட்டது. அதற்கு சாவி சொன்னது “நீ என்னைவிட பலசாலிதான். ஆனால் நீ பூட்டை உடைக்க அதன் தலையில் தட்டுகிறாய். அதனால் அதுவும் தன் பலத்தைக் காட்டி உன்னை எதிர்க்கிறது. எனவே உனக்கு பூட்டைத் திறப்பது கடினமான வேலையாகிறது.” “நான் பூட்டைத் திறக்க அதன் இதயத்தைத் தொடுகிறேன். பூட்டும் என்னைப் புரிந்து கொண்டு திறந்து கொடுக்கின்றது; எனவே என் வேலை எளிதாகின்றது.” என்று சாவி சொன்னது. நாமும் மற்றவர் #மனம் என்னும் பூட்டைத் திறக்க, #அதிகாரம் என்னும் சுத்தியல் கொண்டு அடிக்காமல் #அன்பு என்னும் சாவியைப் பயன்படுத்தலாமே! 😊😊😊
⚡ஷேர்சாட் அப்டேட் - எண்ணங்கள் அழகானால் Cstro Sivasurua எல்லாமே அழகாக மாறும் எண்ணங்கள் அழகானால் Cstro Sivasurua எல்லாமே அழகாக மாறும் - ShareChat
#இதயம் பேசுகிறது சிந்தனை.*.( 19.04.2026.) .................................................................. *மௌனம் ஒரு மகத்தான சக்தி!* ........................................................... ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ செய்திகளை, ஒரு மௌனம் சொல்லி விடும்.மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார்கள். எப்போது பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது... ஆனால் அதை விட, ,''எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்து இருப்பது மிக அவசியம்.. புத்தர், அரசனுக்கு மூத்த மகனாகப் பிறந்த அரசகுமாரன். மிகவும் அழகாக இருந்தார். உடற்கட்டுடன் இருந்தார். கண்கள் ஒளியுடன் பிரகாசித்தன. ஆனாலும் அரசன் மிகவும் கலங்கிப் போனான். காரணம் வாய் எப்போதும் மௌனத்திலேயே இருந்தது.நாட்டில் உள்ள அத்தனை மருத்துவர்களும் முயன்று பார்த்துத் தோற்றுப் போனார்கள். என் மகனின் வாய்ப் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லையா? என்று அரசன் புலம்பித் தீர்த்தான். இறுதியில், இளவரசனைப் பேச வைப்பவர்களுக்குப் பரிசு என அறிவித்தான். நாட்கள் ஓடின, யாராலும் அரசகுமாரனைப் பேச வைக்க முடியவில்லை. அரசன் ஏங்கித் தவித்தபடியே அவனது காலத்தைக் கடத்தினான். அரசகுமாரனுக்குத் தனிமை மிகவும் பிடிக்கும். அதுவும் காடுகளில் தன்னந்தனியே நடப்பது மிகவும் பிடிக்கும். வழக்கம்போல் அவன் காட்டில் தனியே அமர்ந்து வானத்தையும், பசுமையான மரங்களையும், அருவியின் துள்ளல் நடையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது வேட்டைக்காரர்கள் சிலர் மிருகங்களைத் தேடி ஒன்றும் கிடைக்காததால், வருத்தத்திலும்,, சோர்விலும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது ஒரு ஜோடிக் குருவிகள் ‘கீச்…கீச்…’எனச் சப்தமெழுப்பியபடி மகிழ்ச்சியுடன் படபடவென அங்கும் இங்குமாகப் பறந்து விளையாடிக் கொண்டு இருந்தன. பார்த்தான் ஒரு வேடன், எய்தான் அம்பை! இரண்டு குருவிகளும் அம்படிபட்டுத் தரையில் விழுந்து துடித்தன. இதைக் கண்ட புத்தர் ஓடோடிப் போய் அவற்றைத் தமது கைகளில் தூக்கினார், துடித்தன பறவைகள், இளகியது அரசகுமாரனின் மனம்.கண்களில் கண்ணீர்த் துளிகள். அந்தப் பறவைகளைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டார்.. அரசகுமாரன் பேசியதைக் கண்ட வேடர்களுக்கு ஒரே ஆனந்தம். ஓடிச் சென்று இந்தச் செய்தியை மன்னனிடம் கூறினர். மகிழ்ச்சியடைந்த மன்னன், அரசகுமாரன் வருகைக்காகக் காத்திருந்தான். வழக்கம் போல பேசியதற்கான அறிகுறியே சிறிதும் இல்லாமல் அரண்மனையினுள் நடந்து, தமது அறைக்கு விரைந்தார் அரசகுமாரன். மன்னனுக்கு வந்தது கோபம்! வேடர்கள் பொய் சொல்லி உள்ளார்கள் என்று கருதி, பொய் சொன்ன வேடர்களின் தலையைச் சீவி விடும்படிக் கட்டளை இட்டார். அவர்களோ மன்னனிடம் கதறி அழுதார்கள், அங்கு வந்த அரசகுமாரனைப் பார்த்து நீங்கள் பேசியது உண்மை! இது நமக்கு மட்டும் தான் தெரியும்.நீங்கள் வாயைத் திறந்து ஒப்புக் கொண்டால் தான், எங்கள் தலை தப்பும், எங்கள் பிள்ளைகள் அனாதையாவது தடுக்கப்படும் என்று கூறி அழுதார்கள். அவர்கள், மீது கருணை கொண்ட அரசகுமாரன், ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டுவிட்டு உள்ளே சென்றார். கதை சொல்லும் நீதியைப் பற்றி எதுவும் கூறத் தேவையில்லை, அது உணர்த்தும் நீதி உங்களுக்கே புரியும்... *ஆம்.,நண்பர்களே..* பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது. நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாமல் இருக்க இயலாது. ஆனால் தினமும், சிறிது நேரமாவது பேசாமல், மௌனமாக இருக்க முயற்சி செய்யலாம். அப்போது நமது மனம் மலரும் அதிசயத்தை உணரலாம்.. மௌன மொழி மூலம் நமது சக்தி பெருகும்.. குடும்பத்திலும் பணிபுரியும் இடத்திலும் மகிழ்ச்சி பொங்கும். (உடுமலை சு.தண்டபாணி..)💐💐💐🙏🏻🌹🌹*
இதயம் பேசுகிறது - மனதில் எண்ணுவதை நம் எந்தவித தயக்கமின்றி சொல்ல ல்லையென்றால் வேண்டும் 9 மௌனமாக இருப்பதே மிகவும் நல்லது.' மனதில் எண்ணுவதை நம் எந்தவித தயக்கமின்றி சொல்ல ல்லையென்றால் வேண்டும் 9 மௌனமாக இருப்பதே மிகவும் நல்லது.' - ShareChat
#இதயம் பேசுகிறது
இதயம் பேசுகிறது - ShareChat
00:30