#⚡ஷேர்சாட் அப்டேட் #இதயம் பேசுகிறது !
சுத்தியல் ஒன்றுதான்
மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது.
ஒருநாள் சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து
அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன்.
பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை.
அவன் மீண்டும் அடித்தான்;
ஆனாலும் பூட்டு திறக்கவில்லை.
அப்போது அவன் மனைவி
“பூட்டை உடைக்காதீர்கள்;
சாவி கிடைத்து விட்டது” என்று
கத்திக்கொண்டே ஓடி வந்தாள்.
அவன் சாவியை வாங்கிப் பூட்டை
மிக எளிதாகத் திறந்து விட்டான்.
சாவியையும் சுத்தியலையும் அருகிலேயே வைத்து விட்டுப் போய்விட்டான்.
சுத்தியலுக்கோ மிக அவமானமாக இருந்தது.
“மிக வலிமையான நம்மால்
திறக்க முடியாத பூட்டை,
இந்தச் சிறிய சாவி திறந்து விட்டதே” என்று வருந்தியது.
சுத்தியல் சாவியிடம் பேச்சுக் கொடுத்தது.
“நான் உன்னைவிட மிகவும் #வலிமையானவன்;
ஆனால் நான் பூட்டைத் திறக்க மிகவும் கஷ்டப்படுகிறேன்.
நீ என்னைவிட மிகவும் #எளிமையானவன்;
ஆனால்
எளிதில் பூட்டைத் திறந்து விட்டாயே; என்ன காரணம்?” என்று
சுத்தியல் சாவியிடம் கேட்டது.
அதற்கு சாவி சொன்னது
“நீ என்னைவிட பலசாலிதான்.
ஆனால் நீ பூட்டை உடைக்க
அதன் தலையில் தட்டுகிறாய்.
அதனால்
அதுவும் தன் பலத்தைக் காட்டி
உன்னை எதிர்க்கிறது.
எனவே உனக்கு பூட்டைத் திறப்பது கடினமான வேலையாகிறது.”
“நான் பூட்டைத் திறக்க
அதன் இதயத்தைத் தொடுகிறேன். பூட்டும் என்னைப் புரிந்து கொண்டு திறந்து கொடுக்கின்றது;
எனவே என் வேலை எளிதாகின்றது.” என்று சாவி சொன்னது.
நாமும் மற்றவர் #மனம் என்னும்
பூட்டைத் திறக்க,
#அதிகாரம் என்னும்
சுத்தியல் கொண்டு அடிக்காமல்
#அன்பு என்னும் சாவியைப் பயன்படுத்தலாமே! 😊😊😊
#இதயம் பேசுகிறது சிந்தனை.*.( 19.04.2026.)
..................................................................
*மௌனம் ஒரு மகத்தான சக்தி!*
...........................................................
ஒரு பேச்சு சொல்லாத எத்தனையோ செய்திகளை, ஒரு மௌனம் சொல்லி விடும்.மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறார்கள்.
எப்போது பேசாமல் மௌனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது...
ஆனால் அதை விட, ,''எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்து இருப்பது மிக அவசியம்..
புத்தர், அரசனுக்கு மூத்த மகனாகப் பிறந்த அரசகுமாரன். மிகவும் அழகாக இருந்தார். உடற்கட்டுடன் இருந்தார். கண்கள் ஒளியுடன் பிரகாசித்தன.
ஆனாலும் அரசன் மிகவும் கலங்கிப் போனான்.
காரணம் வாய் எப்போதும் மௌனத்திலேயே இருந்தது.நாட்டில் உள்ள அத்தனை மருத்துவர்களும் முயன்று பார்த்துத் தோற்றுப் போனார்கள்.
என் மகனின் வாய்ப் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லையா? என்று அரசன் புலம்பித் தீர்த்தான்.
இறுதியில், இளவரசனைப் பேச வைப்பவர்களுக்குப் பரிசு என அறிவித்தான். நாட்கள் ஓடின,
யாராலும் அரசகுமாரனைப் பேச வைக்க முடியவில்லை. அரசன் ஏங்கித் தவித்தபடியே அவனது காலத்தைக் கடத்தினான்.
அரசகுமாரனுக்குத் தனிமை மிகவும் பிடிக்கும். அதுவும் காடுகளில் தன்னந்தனியே நடப்பது மிகவும் பிடிக்கும்.
வழக்கம்போல் அவன் காட்டில் தனியே அமர்ந்து வானத்தையும், பசுமையான மரங்களையும், அருவியின் துள்ளல் நடையையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.
அப்பொழுது வேட்டைக்காரர்கள் சிலர் மிருகங்களைத் தேடி ஒன்றும் கிடைக்காததால், வருத்தத்திலும்,, சோர்விலும் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது ஒரு ஜோடிக் குருவிகள் ‘கீச்…கீச்…’எனச் சப்தமெழுப்பியபடி மகிழ்ச்சியுடன் படபடவென அங்கும் இங்குமாகப் பறந்து விளையாடிக் கொண்டு இருந்தன. பார்த்தான் ஒரு வேடன், எய்தான் அம்பை! இரண்டு குருவிகளும் அம்படிபட்டுத் தரையில் விழுந்து துடித்தன.
இதைக் கண்ட புத்தர் ஓடோடிப் போய் அவற்றைத் தமது கைகளில் தூக்கினார், துடித்தன பறவைகள், இளகியது அரசகுமாரனின் மனம்.கண்களில் கண்ணீர்த் துளிகள். அந்தப் பறவைகளைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டார்..
அரசகுமாரன் பேசியதைக் கண்ட வேடர்களுக்கு ஒரே ஆனந்தம். ஓடிச் சென்று இந்தச் செய்தியை மன்னனிடம் கூறினர். மகிழ்ச்சியடைந்த மன்னன், அரசகுமாரன் வருகைக்காகக் காத்திருந்தான்.
வழக்கம் போல பேசியதற்கான அறிகுறியே சிறிதும் இல்லாமல் அரண்மனையினுள் நடந்து, தமது அறைக்கு விரைந்தார் அரசகுமாரன்.
மன்னனுக்கு வந்தது கோபம்! வேடர்கள் பொய் சொல்லி உள்ளார்கள் என்று கருதி, பொய் சொன்ன வேடர்களின் தலையைச் சீவி விடும்படிக் கட்டளை இட்டார்.
அவர்களோ மன்னனிடம் கதறி அழுதார்கள், அங்கு வந்த அரசகுமாரனைப் பார்த்து
நீங்கள் பேசியது உண்மை! இது நமக்கு மட்டும் தான் தெரியும்.நீங்கள் வாயைத் திறந்து ஒப்புக் கொண்டால் தான், எங்கள் தலை தப்பும், எங்கள் பிள்ளைகள் அனாதையாவது தடுக்கப்படும் என்று கூறி அழுதார்கள்.
அவர்கள், மீது கருணை கொண்ட அரசகுமாரன், ‘நீங்கள் ஏன் பேசினீர்கள்?’ என்று கேட்டுவிட்டு உள்ளே சென்றார்.
கதை சொல்லும் நீதியைப் பற்றி எதுவும் கூறத் தேவையில்லை, அது உணர்த்தும் நீதி உங்களுக்கே புரியும்...
*ஆம்.,நண்பர்களே..*
பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது. நம்மால் வாழ்க்கை முழுவதும் பேசாமல் இருக்க இயலாது.
ஆனால் தினமும், சிறிது நேரமாவது பேசாமல், மௌனமாக இருக்க முயற்சி செய்யலாம். அப்போது நமது மனம் மலரும் அதிசயத்தை உணரலாம்..
மௌன மொழி மூலம் நமது சக்தி பெருகும்..
குடும்பத்திலும் பணிபுரியும் இடத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
(உடுமலை சு.தண்டபாணி..)💐💐💐🙏🏻🌹🌹*
#இதயம் பேசுகிறது பயணக் கனவு
வாழ்வைத் தொலைத்துவிட்டு
சுடுமணலில் கரை ஒதுங்கிய படகு.🕊️
#இதயம் பேசுகிறது மகிழ்
பிரபஞ்சம் என்பது ஒரு மௌனமான ஓவியம், அதில் நம் ஒவ்வொரு எண்ணமும் கர்மா எனும் தூரிகையால் வரையப்படும் வண்ணங்கள்..
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
நாம் எதை உணர்வுகளாக இந்தப் பேரண்டத்தில் விதைக்கிறோமோ, அதையே காலச்சக்கரம் சுழன்று வரும்போது ஆச்சரியமான அனுபவங்களாக நம்மிடமே அறுவடைக்குத் தருகிறது என்பதுதான் வாழ்வின் நிதர்சனம்.
கர்மா என்பது ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத தண்டனை அல்ல, அது நீங்கள் செய்யும் செயல்களின் நேர்மையான எதிரொலி..
எப்போது உங்கள் உள்ளம் பிறருக்குத் தீங்கு நினைக்காத தூய்மையுடனும், பேராசை இல்லாத அமைதியுடனும் இருக்கிறதோ,
அப்போது பிரபஞ்சத்தின் ரகசியக் கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்பட்டு பேரானந்தத்தைப் பரிசாக வழங்குகின்றன.
கடந்த காலத்தின் கசப்புகளையோ எதிர்காலத்தின் கற்பனைப் பயங்களையோ சுமக்காமல்,
இந்த நொடியில் விழிப்புணர்வோடும் நற்பண்புகளோடும் உங்கள் கர்மாவைச் செதுக்கினால்,
நீங்கள் தேடி அலைந்த அந்தப் பிரபஞ்சப் பேரமைதி ஏற்கனவே உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு மௌன இசையாக ஒலித்துக் கொண்டிருப்பதை வியப்புடன் காண்பீர்கள்...
!
கனவுகளை நேசியுங்கள்.ஆனால் நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்.காரணம் உங்கள் நம்பிக்கையை பணம் ஒரு போதும் காப்பாற்றாது.
கோபம் உங்களை நேசிப்பவர்களை கூட வெறுக்க வைக்கும்.ஆனால் அன்பு உங்களை வெறுப்பவர்களைக் கூட நேசிக்க வைக்கும்:
.. செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்தாது உனது மகன் செய்த நம்பிக்கை துரோகம் பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை கால மாற்றத்தை ஏற்று
சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
தன்னை வெட்டும் கோடாரிக்கும்
நறுமணம் தரும் சந்தன மரம் போன்றவனே மாமனிதன்.ஆனால் தன் இனத்தை அழிக்க நினைக்கும் எவருக்கும் கருணை காட்டாமல் அழிப்பவனே எதார்த்தமனிதன்.அதர்மத்தை எதிர்த்து போராடுவதும் ஒரு வகை தர்மம் தான்: பரமாத்மா 🚩🌙
#ஶ்ரீமத்பகவத்கீதை
17. #சிரத்தாத்ரய_விபாக_யோகம்.
பாகம்_8
🙏 12. " பரதகுல சிரேஷ்டனே! பயனை விரும்பியோ, ஆடம்பரத்திற்காகவோ செய்யப்படுகிற ஆராதனையை ராட்சஸம் என்று அறிக."🙏
விளக்கம்: பரதகுலத்தில் உதித்தவர்களில் சிறந்தவனே! அர்ஜுனா! இறைவா! நானுனக்கு இதைத் தருகிறேன்! நீ எனக்கு இதைத் தா! என ஒரு வியாபாரியிடம் பேரம் பேசுவதைப் போல, இறைவனிடம் பேரம் பேசுவது நல்ல வழிபாடல்ல! அது இறைவனும் விரும்புவதில்லை.
தற்பெருமைக்காகவோ, தனது செல்வச் செழிப்பைக் காட்டவோ, சுயவிளம்பரத்திற்காகவோ, ஆடம்பரமான ஆராதனைகளைச் செய்வதும் தவறான வழிபாடாகும். வாழ்வில் நேர்மையாக நடந்துக்கொண்டு, இதயபூர்வமாக நாம் இறைவனுக்கு செலுத்தும் வழிபாடு இறைவன் விரும்புகிறான்.
காலமெல்லாம் பிறரை வஞ்சித்து வாழ்ந்து விட்டு பிறகு இறைவனுக்கு ஆடம்பரமான காணிக்கைகளை வழங்குவதால் இறைவன் மகிழ்வதில்லை; அதனால் அத்தகைய வழிபாட்டை சிறிதும் நேர்மையின்றி, மனசாட்சியுமின்றி செய்பவர்களுக்குப் பெரும் பாபமே பீடிக்கிறது.
தனது சுயநலத்திற்காகவோ(பயனை விரும்பி), பகட்டிற்காகவோ செய்யப்படுகிற வழிபாடுகளை இறைவன் விரும்புவதில்லை! அது இராட்சஸமான வழிபாடாகும்! என்கிறார் #ஶ்ரீகிருஷ்ண_பரமாத்மா.🙏
#ஶ்ரீகிருஷ்ணரே_சரணம் 🙏
_
#இதயம் பேசுகிறது மார்கழி !
அரங்கன் கேட்டான் “ கோதை , நீ என் மார்கழி மாதத்தை தேர்ந்தெடுத்தாய்?” என்று.
கோதை கூறினாள். “ மாதங்களில் நான் மார்கழி என்று கூறிவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இந்தக் கேள்வி ஏன்? அது மட்டும் அல்ல. உங்கள் நாமங்களில் கேசவன் என்ற நாமம் மார்கழி மாதத்திற்கு உரியது அல்லவா? அதில் என்ன விசேஷம் என்றால் ‘க’ என்றால் பிரம்மா, ‘ஈச’ என்றால் சிவன். நாராயணன் ஆகிய பரப்ரம்மத்தின் வசம் இருவரும் என்ற பொருள் ‘வ’ என்னும் சொல்லாகும். “
ஒன்றும் அறியாதவன் போல் “அப்படியா” என்ற அரங்கன், மேலும் மார்கழி தேவர்களின் விடியற்காலை அல்லவா? “ என்றான்.
“ அதுமட்டுமா. இந்த மாதம் ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் வித்தைக் கொண்டது. இந்த பல காரணங்களால் இந்த மாதம் புண்ணிய மாதமாகக்கருதப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் செய்யும் புண்ணிய காரியங்கள் நற்பயனை அளிக்கின்றன.” என்றாள் ஆண்டாள்.
அரங்கன் சிரித்து, “ நீ பூமாதேவி என்பதை நிரூபித்துவிட்டாய் . அதுசரி, மதி நிறைந்த நன்னாள் என்று கூறியுள்ளாயே, மாதம் பௌர்ணமி அல்லாத நாளில் பிறந்தால் இது சரிவராதே ?” என்றான்.
“நீ இதயத்தில், வரும் நாள் மதி நிறைந்த நாள் அல்லவா?”என்றாள் கோதை.
“ஆஹா, உன் வார்த்தைகள் எனக்கு என் பிரிய சகோதரியைக் குறித்து அபிராமி பட்டர் கூறியது நினைவுக்கு வருகிறது. அமாவாசை அன்று அவர் பௌர்ணமி இன்று எனக்கூற அவர் வார்த்தையை மெய்ப்பிக்க அவள் அருளால் முழு நிலா வந்ததே !” என்றான் அந்த மாயவன்.
“ ஆம் அவளும் பெரிய மாயக்காரி அல்லவா? உன் மறுபக்கம் தானே அவள்?” “ என்றாள் கோதை.
“இந்த மார்கழியில் எல்லா பெண்களையும் கூட்டிக்கொண்டு நீராடச் சென்றாய், “ என்ற அரங்கனை இடை மறித்து கோதை கூறினாள். “நீராடுவது என்பது உண்மையில் உன்னை அடைவது என்று பொருள்.”
“ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் மகளான நீ ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்களை அழைக்கக் காரணம்? , என்ற அரங்கனைப் பார்த்து கோதை,
“எங்கே பிறந்தால் என்ன ? நீ உள்ளத்தே இருக்கையில் நாங்கள் செல்வமுடையோர் , செல்வச் சிறுமீர். அப்சர ஸ்திரீகள் கோபியர்களாக மாறலாம், நாங்கள் மாறக்கூடாதா? “ என்றாள்.
“நீ கிருஷ்ணனானால் நாங்கள் எல்லோரும் கோபியர்தான் , “ என்று ஆண்டாள் சொன்னவுடன் அரங்கன் கிருஷ்ணனாக மாறிவிட்டான்.
கண்ணனாகக் கேட்டான், “ என் தந்தை நந்தகோபர் ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காத சாதுவானவர். அவரைப் போய் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறியது நியாயமா?”
ஆண்டாள் கூறினாள். சாதுப் பிராணியான பசுவும் தன் கன்றைக் காக்க புலியையும் எதிர்ப்பதில்லையா ? அது போல உனக்கு தீங்கு நினைப்பவரை எதிர்க்கும் திறன் கொண்டவரஅல்லவோ உன் தந்தை? “
“ஆனாலும் என் தாய் ஏரார்ந்தகண்ணி,அழகிய கண்ணை உடையவள் என்று சொன்னது சரிதான் என்ற கண்ணனிடம்,
”அந்த கண்ணுக்கு அழகு எப்படி வந்தது தெரியுமா? உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்ததனால்தான்.” என்ற கோதை , “இந்த வார்த்தை உன்னையும் நினைவுபடுத்தியது, ஏரார்ந்தகண்ணி என்றபோது உன் மார்பில் விளங்கும் வைஜயந்தி மாலை நினைவுக்கு வந்ததும் உன் அழகில் ஆழ்ந்துவிட்டேன். அதனால் உன்னை யசோதை இளம் சிங்கம்,கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று வர்ணிக்கத்தோன்றியது” என்றாள்.
கண்ணன் முறுவல் செய்து, “ முதலில் நந்தகோபன் குமரன் , பிறகு யசோதை இளம் சிங்கம், “ என்றவனிடம் ,’ ஆம் உன் தந்தையுடன் இருக்கும்போது தந்தைக்கடங்கின இளம் பிள்ளை. ஆனால் தாயிடம் ஒரு இளம் சிங்கம் போல் இருப்பாய். செல்லப்பிள்ளை அல்லவா? “
“ உன்னை கார்மேனிச் செங்கண் என்று ஏன் வர்ணித்தேன் தெரியுமா? அன்பர்களுக்கு கருணை என்ற மழையைப பொழிவதால். மழை மேகம் போன்று வண்ணம் கொண்டவன் நீ. பக்தர்களைக் கண்டு ஆனந்த மிகுதியால் உன் கண் செந்நிறம் கொண்டது.”
“ கதிர்மதியம் போல் முகத்தான் என்றது உன் கண்கள் பக்தர்களுக்கு தீங்கு இழைப்பவரை நோக்கும்போது கதிரவனைப் போல் தீவிழிக்கும் . பக்தரை நோக்கையில் மதியைப் போல் குளிர்ந்திருக்கும் அல்லவா?” என்றாள் ஆண்டாள்.
“ ஆனால் இடைச்சிறுவனைப்போல் நீ போட்ட வேஷம் எங்களுக்குத் தெரியாதென நினைத்தாயா? நீதான் நாராயணன் என்றறிவோம்,. அதனால்தான் ‘நாராயணனே நமக்கே பறை தருவான் ,’ என்றேன் “ என்ற கோதையைப் பார்த்து கண்ணன் ,
“கோதையே, இந்த உலகம்தான் ஆயர்பாடி. சுலப பக்தியால் என்னை அடையலாம் என்று ஒரு ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து வழி காட்டினாய். நீ காட்டிய பாதை ஒரு மார்க்க சீர்ஷம், தலையான பாதை. இதை மார்கசீர்ஷம் என்னும் இந்த மார்கழியில் கூறியது பொருத்தமே. “ என்றான்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !
🙏











