#இதயம் பேசுகிறது மார்கழி !
அரங்கன் கேட்டான் “ கோதை , நீ என் மார்கழி மாதத்தை தேர்ந்தெடுத்தாய்?” என்று.
கோதை கூறினாள். “ மாதங்களில் நான் மார்கழி என்று கூறிவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இந்தக் கேள்வி ஏன்? அது மட்டும் அல்ல. உங்கள் நாமங்களில் கேசவன் என்ற நாமம் மார்கழி மாதத்திற்கு உரியது அல்லவா? அதில் என்ன விசேஷம் என்றால் ‘க’ என்றால் பிரம்மா, ‘ஈச’ என்றால் சிவன். நாராயணன் ஆகிய பரப்ரம்மத்தின் வசம் இருவரும் என்ற பொருள் ‘வ’ என்னும் சொல்லாகும். “
ஒன்றும் அறியாதவன் போல் “அப்படியா” என்ற அரங்கன், மேலும் மார்கழி தேவர்களின் விடியற்காலை அல்லவா? “ என்றான்.
“ அதுமட்டுமா. இந்த மாதம் ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் வித்தைக் கொண்டது. இந்த பல காரணங்களால் இந்த மாதம் புண்ணிய மாதமாகக்கருதப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் செய்யும் புண்ணிய காரியங்கள் நற்பயனை அளிக்கின்றன.” என்றாள் ஆண்டாள்.
அரங்கன் சிரித்து, “ நீ பூமாதேவி என்பதை நிரூபித்துவிட்டாய் . அதுசரி, மதி நிறைந்த நன்னாள் என்று கூறியுள்ளாயே, மாதம் பௌர்ணமி அல்லாத நாளில் பிறந்தால் இது சரிவராதே ?” என்றான்.
“நீ இதயத்தில், வரும் நாள் மதி நிறைந்த நாள் அல்லவா?”என்றாள் கோதை.
“ஆஹா, உன் வார்த்தைகள் எனக்கு என் பிரிய சகோதரியைக் குறித்து அபிராமி பட்டர் கூறியது நினைவுக்கு வருகிறது. அமாவாசை அன்று அவர் பௌர்ணமி இன்று எனக்கூற அவர் வார்த்தையை மெய்ப்பிக்க அவள் அருளால் முழு நிலா வந்ததே !” என்றான் அந்த மாயவன்.
“ ஆம் அவளும் பெரிய மாயக்காரி அல்லவா? உன் மறுபக்கம் தானே அவள்?” “ என்றாள் கோதை.
“இந்த மார்கழியில் எல்லா பெண்களையும் கூட்டிக்கொண்டு நீராடச் சென்றாய், “ என்ற அரங்கனை இடை மறித்து கோதை கூறினாள். “நீராடுவது என்பது உண்மையில் உன்னை அடைவது என்று பொருள்.”
“ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் மகளான நீ ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்களை அழைக்கக் காரணம்? , என்ற அரங்கனைப் பார்த்து கோதை,
“எங்கே பிறந்தால் என்ன ? நீ உள்ளத்தே இருக்கையில் நாங்கள் செல்வமுடையோர் , செல்வச் சிறுமீர். அப்சர ஸ்திரீகள் கோபியர்களாக மாறலாம், நாங்கள் மாறக்கூடாதா? “ என்றாள்.
“நீ கிருஷ்ணனானால் நாங்கள் எல்லோரும் கோபியர்தான் , “ என்று ஆண்டாள் சொன்னவுடன் அரங்கன் கிருஷ்ணனாக மாறிவிட்டான்.
கண்ணனாகக் கேட்டான், “ என் தந்தை நந்தகோபர் ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காத சாதுவானவர். அவரைப் போய் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறியது நியாயமா?”
ஆண்டாள் கூறினாள். சாதுப் பிராணியான பசுவும் தன் கன்றைக் காக்க புலியையும் எதிர்ப்பதில்லையா ? அது போல உனக்கு தீங்கு நினைப்பவரை எதிர்க்கும் திறன் கொண்டவரஅல்லவோ உன் தந்தை? “
“ஆனாலும் என் தாய் ஏரார்ந்தகண்ணி,அழகிய கண்ணை உடையவள் என்று சொன்னது சரிதான் என்ற கண்ணனிடம்,
”அந்த கண்ணுக்கு அழகு எப்படி வந்தது தெரியுமா? உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்ததனால்தான்.” என்ற கோதை , “இந்த வார்த்தை உன்னையும் நினைவுபடுத்தியது, ஏரார்ந்தகண்ணி என்றபோது உன் மார்பில் விளங்கும் வைஜயந்தி மாலை நினைவுக்கு வந்ததும் உன் அழகில் ஆழ்ந்துவிட்டேன். அதனால் உன்னை யசோதை இளம் சிங்கம்,கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று வர்ணிக்கத்தோன்றியது” என்றாள்.
கண்ணன் முறுவல் செய்து, “ முதலில் நந்தகோபன் குமரன் , பிறகு யசோதை இளம் சிங்கம், “ என்றவனிடம் ,’ ஆம் உன் தந்தையுடன் இருக்கும்போது தந்தைக்கடங்கின இளம் பிள்ளை. ஆனால் தாயிடம் ஒரு இளம் சிங்கம் போல் இருப்பாய். செல்லப்பிள்ளை அல்லவா? “
“ உன்னை கார்மேனிச் செங்கண் என்று ஏன் வர்ணித்தேன் தெரியுமா? அன்பர்களுக்கு கருணை என்ற மழையைப பொழிவதால். மழை மேகம் போன்று வண்ணம் கொண்டவன் நீ. பக்தர்களைக் கண்டு ஆனந்த மிகுதியால் உன் கண் செந்நிறம் கொண்டது.”
“ கதிர்மதியம் போல் முகத்தான் என்றது உன் கண்கள் பக்தர்களுக்கு தீங்கு இழைப்பவரை நோக்கும்போது கதிரவனைப் போல் தீவிழிக்கும் . பக்தரை நோக்கையில் மதியைப் போல் குளிர்ந்திருக்கும் அல்லவா?” என்றாள் ஆண்டாள்.
“ ஆனால் இடைச்சிறுவனைப்போல் நீ போட்ட வேஷம் எங்களுக்குத் தெரியாதென நினைத்தாயா? நீதான் நாராயணன் என்றறிவோம்,. அதனால்தான் ‘நாராயணனே நமக்கே பறை தருவான் ,’ என்றேன் “ என்ற கோதையைப் பார்த்து கண்ணன் ,
“கோதையே, இந்த உலகம்தான் ஆயர்பாடி. சுலப பக்தியால் என்னை அடையலாம் என்று ஒரு ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து வழி காட்டினாய். நீ காட்டிய பாதை ஒரு மார்க்க சீர்ஷம், தலையான பாதை. இதை மார்கசீர்ஷம் என்னும் இந்த மார்கழியில் கூறியது பொருத்தமே. “ என்றான்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !
🙏
#இதயம் பேசுகிறது மகிழ்
வாழ்தலை முன்நிறுத்தும் எழுத்து !
என்னவான போதிலும்
இங்கின்றி எங்கு
தொலைந்த போதிலும்
வாழ்தலை தான் போதிக்கிறது
இயற்கை
ஒட்டியபடியே
புது இலைகளை துளிர்க்கின்றன
ஒடிந்த மரக்கிளைகள்
மௌனக்கூடுகளில் வாழ்ந்தாலும்
வண்ணங்களை சேமிக்கின்றன
பட்டாம்பூச்சிகள்
கண்ணுக்குத் தெரியாமல்
வாழ்ந்தாலும் கோட்டை கட்டுகின்றன
எறும்புகள்
தரை பிரிந்து வழி மறந்தாலும்
புது நிலத்தில் சிறகடிக்கின்றன
பறவைகள்
வடிவிழந்த நதியிலும் ஈரமுள்ளது
கடல் சேராத போதும் கட்டாயம் ஒரு மழை வருகிறது
தனித்த போதும்
மௌனம் நம்மீது திணிக்கப்பட்ட போதும்
நம் அடையாளங்கள் நம்மை காயப்படுத்தியபோதும்
நாமென்ற நிகழ்வு முடிந்துவிடுவதில்லை
ஒரு பாடலுடன் இசை தீர்ந்துவிடுவதில்லை
இன்றிலிருந்து மற்றுமொரு இன்று
அவ்வளவு தூரமொன்றுமில்லை
இயைந்துவிட்டால் இயற்கை
நம்மை நகர்த்திக்கொள்ளும்.
"துரோகம்"
கண்டவுடன்
இடத்தை விட்டு விலகு
"துவேஷம்" வளராது .....
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது ஏழு ஏழ் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இல்லாமல் போகும் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும்
உங்களைப் பற்றி நீங்களே தாழ்வாக நினைக்கும்போது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களைப் பற்றி எவரேனும் ஒருவர் உயர்வாக எண்ணிக்கொண்டு இருப்பார்.
உலகில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்கள் என்றோ அனைவராலும் வெறுக்கப்பட்டவர்கள் என்றோ எவருமே இல்லை.
மலர் இல்லாச் செடிகூட மகிழ்ச்சி தரும்.
🚩 பகவத்கீதை🚩
உண்மைகள் வாய் மூடி
அழும்போது தான்
பொய்கள் பற்கள் தெரிய
சிரித்து விட்டு செல்லும்...
உண்மையான அன்புக்கு
போலியான உறவும்... !!!
போலியான உறவிற்கு
உண்மையான உறவும்.. !!!
கிடைப்பதால் தான் "
அன்பு இன்றும் "யாரோ"
ஒருவரிடம் தோற்றுக்
கொண்டே இருக்கின்றது..
பற்பல பிறப்பு, இறப்புளுக்குப் பின், உண்மையான அறிவுடையவன், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை (இறைவனை) அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.
- 🚩பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.🚩
#ஶ்ரீமத்பகவத்கீதை 🙏
13.#க்ஷேத்ர_க்ஷேத்ரக்ஞ_விபாக_யோகம். பாகம்_12
🙏 15. " பொருள்களுக்குப் புறமும், உள்ளும் உள்ளது; அது அசையாதது, அசைவது; நுண்மையானது என்பதால் அறிவதற்கு அரிதானது; எட்டவும், கிட்டவும் இருப்பது அது". 🙏
விளக்கம் : முந்தைய ஸ்லோகங்களின் தொடர்ச்சியாகவே, இதிலும் பரப்பிரம்மத்தைப் பற்றியே அர்ஜுனனுக்கு விளக்குகிறார்! ஶ்ரீகிருஷ்ணர்.
கடலில் மிதக்கும் பனிக்கட்டியின் உள்ளும், புறமும் இருப்பதும் நீரே. அவ்வாறே பரமாத்மா எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
கடலின் மேல்புறம் அலைவீசி அசைந்தாலும், கீழ்புறம் அசையாதிருக்கிறது. அதைப்போல பரமாத்மாவும் குணங்களோடு பொருந்தி பிரகிருதியாக இயங்குகிறார். பனிக்கட்டி கரைந்தப் பின்னர், நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவ்வாறே சுத்த நிர்க்குண பிரம்மம் , பேரறிவு வடிவம் என்றாலும் மனப்பக்குவம் இல்லாத மானிடருக்கு அது தெரிவதில்லை.
தன் சொந்தப் பூமியில் தன் பாதத்திற்குக் கீழே பொன் இருப்பதை மானிடன் அறிய மாட்டான். அதைப்போல தனக்குள் பரமாத்மா இருப்பதை சாதாரண மனிதன் உணரமாட்டான்.
தன்னுள் இருக்கும் பரமாத்மாவை அறியாதவன், விண்ணுலகில் அவர் இருக்கிறார்! என்றும், மறுமையிலேயே அவரைப் பார்க்க முடியும்! என்றும் நினைக்கிறான். தனது #அந்தராத்மாவே_பரம்பொருள்! (#உள்ளுணர்வு) என அறிவுடையோர் உணர்வர்.
நமக்கு கிடைக்காத ஒன்றில் தான் நம் மொத்த சந்தோசமும் உள்ளது என்று நினைப்பது தான் மனித குணம்!
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன் திரும்ப வரும்போது தெரியும் நீ செய்த என்ன என்று தெரியும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
*********************
இறைவனிடம் தாளாதப் பக்தியுடன் இருப்போர், அனைத்தையும் விட, தனது ஆழ்மன உள்ளுணர்விற்கே முக்கியத்துவம் கொடுப்பர்! ஏனென்றால். அது இறைவனின் குரல்! என அறிவுடையோர் அறிவர்; இறைவன் தன்னை வழிநடத்துகிறார்! என உறுதியாக நம்புவர்.
எனவே #பரப்பிரம்மம் அனைத்து பொருள்களுக்கும் #உள்ளும், #புறமும் உள்ளது; அது அசையாதது! அசைவது! நுண்மையானது! தொலைவிலும், அதே நேரம் அருகிலேயும் உள்ளது!' என்று #அர்ஜுனனுக்குப்_போதிக்கிறார்! #ஶ்ரீகிருஷ்ணபரமாத்மா.🙏
#ஶ்ரீகிருஷ்ணா_சரணம் 🙏
.
#இதயம் பேசுகிறது தத்துவம்
வெகுதூரம்
நீ இருப்பினும்..
உன் முகம் தேடியே
அலையும் என் மனம்..
என் தீரா
தேடலும் நீ ...
என் தீரா
காதலும் நீயே..!
"எனக்கு சுகர் இல்லைன்னு சொல்லிட்டாங்க..."
"யார் சொன்னா.? டாக்டரா.? நர்ஸா.?"
"ரேஷன் கடையில...."
மெத்த படித்தவரையும் கைநாட்டாக மாற்றி விட்டது,
கைப்பேசி!!
#குறள்_1216
#கனவுநிலையுரைத்தல்
குறள்:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே
அவனுக்கு கோபிக்க
தினம் தினம் ஆயிரம் காரணங்கள் வந்து கொண்டே இருக்கலாம் எனக்கு அவனை
நேசிக்க ஒரே
ஒரு காரணம்
தான் இருக்கிறது காதல்..!!♥️
நான் சிரிப்பதை உன்னை விட
அதிகமாக ரசிப்பது வேறு யாருமில்லை
என்பது எனக்குத் தெரியும்,
ஆனால் அந்த புன்னகைக்கும்
நீதான் காரணம் என்பதை நினைவில் கொள்..
—











