சிவன் பக்தி

550 Posts • 2M views
ரவிசங்கர் ராஜா, ஆரணி
2K views 23 days ago AI indicator
காலை சிவசிந்தனை ===================== எந்த பிறவி எடுத்தால் என்ன? சிவபக்தியே முக்கியம் ============================ ஆதிசங்கரர் சிவானந்த லஹரி பாடல்=10 நரத்வம்....... தேன வபுஷா || மனிதப்பிறவியோ,தேவப் பிறவியோ,அல்லதுமலைகளிலும்,காடுகளிலும்அலைந்துதிரியும்மிருகங்கள்,கொசு,பசு,புழு,பறவைபோன்றஎந்தப் பிறவியாயினும் ஏற்படட்டும்.பரமேஸ்வரா எப்பொழுதும் உன்னுடைய திருவடித்தாமரைகளை விட்டுநீங்காமல்இருந்து தியானம் செய்து அந்தபேரானந்த வெள்ளத்தில் விளைய மகிழும் உள்ளம் மட்டும்வாய்க்குமானால், எத்தகையஉடலைப் படைத்தால்தான் என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது? அப்பர் பெருமான்தேவாரம் =========================== பாடல் எண்: 8 புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தரவேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கியிருந்தருள் செய்பாதிரிபுலியூர்ச் செழுநீர் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே- பொருள்; இந்தப் பூவுலகில் வழிபடுவோர் எல்லோரிடத்திலும் இரக்கம் கொண்டு கருணை புரியும் செம்மேனி அம்மானே! கங்கை நதியை செஞ்சடையில் வைத்து, திருப்பதிரிப் புலியூரில் இருந்து கொண்டு அருள் புரியும் பெம்மானே! நான் புழுவாகப் பிறந்தாலும் உன்னை மறவாதிருக்க வரம் தா என்று அப்பர் பெருமான் இறைஞ்சுகிறார். 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
59 likes
4 comments 26 shares
ரவிசங்கர் ராஜா, ஆரணி
1K views 23 days ago AI indicator
காலை சிவசிந்தனை ==================== பகவான் ருத்ரர் ஆயிரம் கண்களை உடைய பரமபுருஷர் என்று ஶ்ரீ அதர்வ வேதமும்,ஶ்ரீ வாயுமஹாபுராணமும் கூறுகின்றன. ஶ்ரீ அதர்வ வேதம்: 11.2.7.நாங்கள் வலிமையான வில்லாளியும்,நீலநிற கேஶசத்தை உடையவரும்,ஆயிரம் கண்களை உடையவரும்,அர்தகனை வதைத்தவருமான அந்த ருத்ரருக்கு எதிரானவர்களாக எப்போதும் ஆகாதிருப்போமாக. 11.2.17.நாம் நமது நாக்குகளால்(தவறான சொற்களைக் கூறி) பரந்த பார்வையை உடையவரும்,ஆயிரம் கண்களை உடையவரும்,பரந்த ஞானத்தை உடையவரும்,தனது அம்புகளை முன்னோக்கி வெகுதூரத்திற்கு எய்பவருமான ருத்ரரைக் கோபம் கொள்ளச் செய்யாதிருப்போமாக. "11.2.7.அஸ்த்ரா நீலஶிகண்டேன ஸஹஸ்ராக்ஷேண வாஜினா| ருத்ரேணார்தககாதினா தேன மா ஸமராமஹி|| 11.2.17.ஸஹஸ்ராக்ஷமதிபஶ்யம் புரஸ்தாத்ருத்ரமஸ்யன்தம் பஹுதா விபஶ்சிதம்| மோபாராம ஜிஹ்வயேயமானம்||" ஸ்ரீ வாயுமஹாபுராணம்: அத்யாயம்-97: மஹரிஷி ப்ருகு செய்த சிவஸ்துதியிலிருந்து, 97.167-168.ஆயிரம் கரங்களை உடையவரும்,நிர்மலமான ஆயிரம் கண்களை உடையவரும்,ஆயிரம் வயிறுகளை உடையவரும்,ஆயிரம் கால்களை உடையவரும் ஆன தமக்கு நமஸ்காரம்.ஆயிரம் தலைகளை உடையவரும்,பல வடிவங்களை உடையவரும்,படைப்பவரும்,பவரும்,விஶ்வரூபரும்,வெண்ணிறத்தவரும்,புருஷரும் ஆன தமக்கு நமஸ்காரம். "97.167.ஸஹஸ்ரபாஹவே சைவ ஸஹஸ்ராமலசக்ஷுஷே| ஸஹஸ்ரகுக்ஷயே சைவ ஸஹஸ்ரசரணாய ச|| 168.ஸஹஸ்ரஶிரஸே சைவ பஹுரூபாய வேதஸே| பவாய விஶ்வரூபாய ஶ்வேதாய புருஷாய ச||" 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #சிவன் பக்தி #தெய்வீக சிந்தனைகள்
27 likes
26 shares